privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

-

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 3

கேட்ஸ் ஃபவுண்டேஷன்உதவியா? நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக உலகப் பெரும்பணக்காரர்கள் நடத்தும் மனிதத் தன்மையற்ற நிறவெறிப்படுகொலையா?

பில் மெலிண்டா கேட்ஸ் ஜோடி மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து நடத்தும் அனைத்து மானுடவிரோத மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பின்னாலும் வெறும் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டிருகிறது.  ஆனால் ஃபிலந்த்ரோபி (Philanthropy) என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் நடத்தும் வெறியாட்டம் வணிக இலாபங்களைத் தாண்டிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிடை மலையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.
4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.

தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் இறுதி இலக்கான ”உலக பேரரசை ஆளம் தகுதி யாருக்கு?” என்பது தான் 2017 ஜனவரியில் சுவிட்சர்லாண்ட் டாவோஸில் உலக பொருளாதார நிறுவனத்தின் நிகழ்ச்சிநிரல்.  உலகெங்கும் ஊழல்மயப்பட்ட, ஆளத்தகுதியிழந்த, எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள அரசியல் நிறுவனங்களின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பறைசாற்றும் டாவோஸ் பணக்காரர்கள், மாற்றுத் தலைமையை முன்வைக்கிறார்கள்.  ஏன் மாற்றுத் தலைமை தேவை? யார் அந்த மாற்று?

உலகின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு போவதாக குறைபடும் உலக மீப்பெரு பணக்காரர்கள், இதனால் ஏற்படப் போகும் காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.  காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு காரணமான நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என TED மாநாட்டில் 2010-ல் பில்கேட்ஸ் கூறுகிறார்.  இதற்கு அவர் கண்டுபிடித்த வாய்ப்பாடு CO2 =P * S * E * C.  P என்றால் மக்கட்த் தொகை.

2010-இல் 700 கோடியாக இருந்தது 2050-இல் 900 கோடியாகும் என கணக்கிடுகிறார். S என்றால் ஒரு நபருக்கான சேவைகள். அதாவது உணவு, நீர், காற்று, இருப்பிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், இணையம் போன்றவை அனைத்தும். E என்றால் ஒருசேவைக்கு தேவைப்படும் ஆற்றல்/ மின்சாரம்.  C என்றால் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கரியமில வாயு.  பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டுமென்றால் சேவைகளையோ, மின்சாரத்தையோ குறைப்பதன் வழி செய்ய முடியாது.  ஏனென்றால் நான்காவது தொழிற்புரட்சியை  உலக மீப்பெரு பணக்காரர்கள் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்கள். நான்காவது தொழிற்புரட்சியின் அடிப்படையே மின்சாரம் தான். செயற்கை நுண்ணறிவு (AI); ஐஓடி (IoT) எனப்படும் டிஜிட்டல் உலகம்-பருப்பொருள் உலகம்- உயிரியல் உலகம் ஆகியவற்றின் இணையம்; டிசைனர் பீயிங்ஸ் (Designer beings) எனப்படும் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்கிருமிகள்; 3டி பிரிண்டிங்; ரோபோர்டிக்ஸ் ஆகியவை தான் நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியமான கூறுகள். இவற்றை மின்சாரமில்லாமல் நிறைவேற்ற முடியாது.

கூடவே 4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை. அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் கொண்டுவரப்பட்டால் உழைக்க மனிதர்கள் தேவையில்லை.  இயந்திரங்களே உற்பத்தியை பார்த்துக் கொள்ளும். இதில் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டும் தான் ஆப்பு என நடுத்தர வர்க்கம் நினைக்கலாம். ஏனென்றால் இரண்டாவது தொழிற்புரட்சி என முதலாளித்துவ உலகம் கொண்டாடும் 1910-இல் உற்பத்தியில் கன்வேயர் பெல்ட் புகுத்திய கார் தொழிற்சாலைகள், கூடவே ஊட்டி வளர்க்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தையும் உருவாக்கியது. அதைப் போலன்றி 4 –வது தொழிற்புரட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும், முதலாளிகளின் ஒரு பகுதியனரை மட்டுமன்றி, டாக்டர், வக்கீல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஐடி தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என அனைவரின் வேலைகளையும் பறித்து ஏதிலியாக்குமென நான்காவது தொழிற்புரட்சியின் தந்தை கிளாஸ் ஷ்வாப் எச்ச்சரிக்கிறார்.

காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P
காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P

உலகின் வெறும் 5% பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு. ஏதிலிகளாக மாறப்போகும் மிச்ச 95% பேருக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்க 4-வது தொழிற்புரட்சியின் சிற்பிகள் தயாராக இல்லை.  மாற்றாக எதை முன்வைக்கிறார்கள் தெரியுமா? அடிப்படை வருமானம் (Basic Income) எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டம்.  வேலையிழந்தவர்கள் புரட்சி செய்ய வாய்ப்பிருகிறதல்லவா? அதைத் தடுப்பதற்குத் தான் ஆதார் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு.  ஆனால் அது போதாது. இங்கு தான் பில் கேட்சின் சூத்திரத்திற்கு வேலை.

பருவநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குமான உறவில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து மட்டுமல்ல, ஏகபோகங்களின் மீப்பெரு வளர்ச்சியை தொடங்கி வைத்திருக்கும் 4-வது தொழிற்புரட்சியின் முக்கிய சவாலான வேலையற்ற 95% உலக மக்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்கான உத்தியும் ஒளிந்துள்ளது.   உலக மக்கட்தொகையைக் 10-15% ஆகக் குறைக்க சிறந்த வழி தடுப்பூசிகள், இனப்பெருக்கக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்கிறார் பில்கேட்ஸ்.  மூன்று வழியில் இதை செய்ய முடியும்.

(அ) எயிட்ஸ், எபோலா போன்ற சிதைவு நோய்க்கிருமிகளை ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களிலும் பரவச் செய்வது; (ஆ) கருத்தரிப்பு தடுப்பூசிகளை மூன்றாமுலக நாடுகளின் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைபெறும் வயதையெட்டும் ஒவ்வொரு மனிதனையும் மலடாக்குவது; (இ) டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பெரும் பரவலாக தொற்றும் நோய்க்கிருமிகளை வெடித்துப் பரவ செய்வது போன்ற முறைகள் வழி உலகின் மக்கட்த் தொகையை வெறும் 10-15 % ஆகக் குறைக்கலாம்.  இது மாபெரும் நிறவெறிப் படுகொலையல்லவா?

இத்திட்டத்தை நம் நாட்டு அரசையே செய்ய வைக்க முடியுமா? ஆம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கவி வாக்ஸின் அலையன்ஸ்.  இதில் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலகவங்கி, ஐஎம்எஃப், மற்றும் ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் ஆகியவை கேட்ஸ் ஜோடியின் தலைமையில் செயல்படுகின்றன. நமது அரசு இவர்களின் கைப்பாவை. ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்ட நகர்விற்காக, நான்காவது தொழிற்புரட்சியின் சிற்பிகள், கவி வாக்ஸின் அலையன்ஸ் போலவே ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் உள்ள நாடுகளை கட்டுப்படுத்த அரசு-தனியார் கூட்டு என்ற போர்வையில் ஆட்சிக் கூட்டணிகளை (governance alliance) உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசையும் தனது கைப்பாவையாக்கி தனது போர்தந்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இதே கேட்ஸ் ஜோடி தலைமையில் இயங்கும் பெட்டர் தான் காஷ் அலயன்ஸ் (better than cash alliance) எனும் கூட்டணியின் பங்களிப்பு பத்திரிகைகளில் அம்பலப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.  இவர்களைத் தான் இன்று அரசியல் மாற்றாக இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கூட்டணிகளெல்லாம் வெறும் தரகர்கள் தான். இவர்கள் பின்னாலிருந்து ஆட்டுவிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில உலகப் பெரும் பணக்காரர்களும், ஒட்டுமொத்த உலகையும் தனியே கபளீகரம் செய்யத்துடிக்கும் அவர்களின் பேராசை பிடித்த போர்தந்திரத் திட்டங்களும் தான்.

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும். 2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.   தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இதனால் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகமாக ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது போல இதுவரை சந்தைப்படுத்தப்படாத தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியில் hCG போன்ற கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன்கள் கலக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.  ஏனென்றால் கென்யாவிலும் இந்தியாவிலும் உலகின் பல்வேறு ஏழை நாடுகளிலும் கேட்ஸ்-கவி கும்பல் இதற்குமுன் இழைத்திருக்கும் மானுட விரோத மனிதத் தன்மையற்ற குற்றங்களின் அனுபவங்கள் நம் முன்னே நிற்கின்றன.

01-03-2017 அன்று பெற்றோரின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசியைப் போடப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காலடியில் போட்டு நசுக்கி, 15 வயதிற்குள்ளான பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக ஒரு மீப்பெரு குற்றத்தை செய்யும் இதே அரசு, நெடுவாசலுக்கு ஆதரவாகப் போராடச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்று தான் வரவேண்டும் என்ற வினோத சட்டத்தைக் கூறி போலீசை வைத்து விரட்டியடிக்கிறது.  பாங்க் வாசல், வாடி வாசல், நெடுவாசல், பள்ளிவாசல் எனத் தனித்தனியான போராட்டங்கள் தீர்வைத் தராது. தமிழினத்தை அழிக்கத் துடிக்கும் இக்குற்றக்கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்காவிட்டால் நம் தமிழினமே அழிந்து போகும் அபாயம் தொலைதூரத்திலில்லை.

– முற்றும்.

கட்டுரை ஆக்கம்: ஆழிமதி

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1
நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

  1. வினவு இதனை பற்றி அடுத்த பாகத்தில் எழுதும் என்பதால் நான் என்னுடைய பின்னுட்டத்தில் இதனை விரிவாக எழுதாமல் இருந்தேன். விரிவாக எழுதியமைக்கு மிக்க நன்றி.. மற்றும் ஒரு விஷயம் வினவு கட்டுரையில் விடுபட்டு உள்ளது. பாத் தன்னார்வ அமைப்புக்கும் பில் பவுண்டேசனுக்கும் , மற்றும் பில் கேட்ஸ் கணிசமான ஷர்களை வாங்கிவைத்து உள்ள Merck & Co. நிறுவனத்துக்கும் உள்ள தொடர்புகளை பற்றி ஒரு பாகம் கட்டுரையாக எழுதலாமே வினவு… Merck & Co. மருத்துவ நிறுவனத்தின் தடுப்பூசிகள் தான் உலகம் முழுவதும் பில் பவுண்டேசனின் விளம்பரம் மூலம் விற்பனையாகின்றது என்ற உண்மையை விரிவாக எழுதலாமே வினவு!

    //தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்//

  2. இந்த கட்டுரை சுட்டும் விசயங்கள் ஒருவேளை படிப்பவர்களுக்கு அதிகபடியானதாக கூட தெரியலாம்… ஏன் வினவின் கற்பனையாக கூட தெரியலாம். ஆனால் இதில் குரிபிடப்ட்டு உள்ள விசயங்கள் எத்துணையும் உண்மை… இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து கியூபாவை போல சீனாவை போல பிற நாட்டு மக்களையும் விடுவிக்க வேண்டிய கடமை அந்த அந்த நாட்டு கம்யுனிஸ்டுகலுக்கு உள்ளதனை யாருமே மறுக்க முடியாது. தேர்தல் முலமாகவோ அல்லது தேர்தலுக்கு அப்பாற்பட்டே ஆட்சி அதிகாரத்தை உலக அளவில் கம்யுனிஸ்டுகள் கைப்பற்றுவதன் மூலமே மானுடத்துக்கான விடியல் சாத்தியம் ஆகும்…

    (சீனாவும் , கியூபாவும் இந்த தடுப்பூசி விசயத்தில் எந்த அளவுக்கு மிகவும் எச்சரிக்கையாக தன் நாட்டு மக்களின் நலன்களை பேணிகாத்துகொண்டு இருகின்றன என்பதனை என்னுடைய பின்னுட்டத்தில் (கட்டுரை பாகம் 2 ) விளக்கி இருந்தேன்…)

  3. வினவு, இதுவென்ன முற்றும் போடவேண்டிய கட்டுரையா? இன்னும் இன்னும் பல்வேறு விசயங்களை இந்த தடுப்பூசிகள் விசயத்தில் மக்களிடம் நாம் அம்பலபடுத்த வேண்டியுள்ளது…. பாத் ,பில் போவுண்டடன், அந்த அந்த நாடுகளில் உள்ள அரசுடன் இவர்கள் செய்து கொண்டு உள்ள ஒப்பந்தங்கள் என்று நாம் தினம் தினம் உன்னிப்பாக கவனிக்கவேண்டியுள்ளது… அந்த விசயங்களை தினம் தினம் நாம் மக்களுடன் கொண்டு சேர்க்கவேண்டியுள்ளது… மக்களின் நலனை கருதி “””…..தொடரும்…..”””” என்று இறுதியில் மாற்றுங்கள்!

  4. மனித குலத்துக்கு எதிரான பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் :
    ——————————————————————-

    இந்த கட்டுரையின் பின் இணைப்பாக மேலும் சில விசயங்களையும் கூறவிரும்புகிறேன். நாம் வாங்கும் ஒவ்வொரு மைக்ரோசாப்ட் கணினி மென்பொருட்கள் மூலமாகவும் நாசகார Merck & Co என்ற மருத்துவ நிறுவனத்தின் மருந்து பொருட்களின் விற்பனையையும் நாம் ஆதரிக்கின்றோம். உலக அளவில் கணினி மென்பொருள் விற்பனையை கட்டுப்படுதிக்கொண்டு (monopoly) இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பொது மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விசயத்திலும் புறவாசல் வழியாக நுழைந்து உள்ளது.

    அது எப்படி சாத்தியம் ஆயிற்று? 2009 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நான் மும்பே குறிப்பிட்டு உள்ள Merck & Co ( the world’s largest maker of vaccines) என்ற மருத்துவ நிறுவனத்திடம் இருந்து ஒரு உயர் கணினி மென்பொருள் தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கியுள்ளது. அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இயுகனிஸ் நோய் தடுப்பு மருந்துகளை ( eugenics vaccines) உற்பத்தி செய்யமுடியும். இந்த நோய் தடுப்பு மருந்துகளின் நோக்கமே ஒரு குறிப்பிட்ட நாட்டின் இனத்தின் மக்கள் தொகையை இந்த நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும்… பில் கேட்ஸ் வெளிப்படையாக ஒத்துக்கொண்ட கருத்து என்னவென்றால் இந்த நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக உலக மக்கள் தொகையை 10% முதல் 15%வரையில் குறைக்கமுடியும் என்பது தான்.

    இந்த தொழில் நுட்பம் எப்படி பட்டது என்றால் இவை மனித மரபணுக்களை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும் மருந்துகளை (gene-targeting vaccine) செய்யும் திறமைகளை தன்னகத்தே கொண்டது. மரபணுக்களின் மீது செயல்பட்டும் இந்த தொழில்நுட்பம் மரபணுக்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன என்றும் செல்களில் நிகழும் வளர்ச்சிதைமாற்றத்தையும்( metabolites) ஆய்வு செய்யும் திறன் படைத்தது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மேலும் மரபணுக்கள் எப்படி வளர்ச்சிதைமாற்றத்தின் மூலம் புரோடின்களை உற்பத்தி செய்கின்றன (gene expression process) என்பதனையும் ஆராய முடியும்.

    இந்த மனித குல நாசகர தொழில் நுட்பத்துக்கு Merck & Co நிறுவனம் உள்ளீடுகளை (bio informatics input data) வழங்க ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளது. இந்த விசயத்தில் Merck & Co ஆய்வு நிறுவனத்தின் துணை தலைவர் ருபர்ட் வெஸ்லியின் வாக்குமூலம் என்னவென்றால் “இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி மருந்து தயாரிப்பிலும் ஈடுபடும்” என்பதாகும். மேலும் அவர் கூறும் விஷத்தை (ஆம் விசயம் அல்ல விஷம் தான் ) அவர் கூறும் விசயத்தில் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது என்னவென்றால் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மரபணுக்கள் மீது செயல்படும் பயோஇன்போர்மடிக்ஸ்- உயிர் தகவலியல் சார்ந்த (Bioinformatics) மருந்து கண்டுபிடிப்புகளை உற்பத்திகளை செய்யமுடியும் என்பது தான். பயோஇன்போர்மடிக்ஸ் என்பது மரபணுக்களின் தகவல்களை கணினியில் சேமித்து வைத்து ஆராயும் அறிவியல் துறை ஆகும். அப்படி பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்க போகும் மருந்துக்கள் மரபணுக்கள் மீது ஆளுமை செய்யும் மருந்துகளாகத்தானே இருக்க முடியும்? (gene-targeting drugs and vaccines”)

    இந்த தகவல்கள் அடிப்டையில் இப்பொது பில் கேட்ஸ் கொடுத்து உள்ள வெளிப்படையான வாக்குமூலத்தை ஆய்வு செய்தால் கிடைக்கும் விடை என்னவாக இருக்கும் என்று பார்க்கலாமா? உலக மக்கள் தொகையை இந்த தடுப்பூசி மருந்துகள் மூலம் 10% முதல் 15% வரையில் குறைக்கமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றார். மனித குலத்தின் பரம்பரை நோய்களான சக்கரை வியாதி, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மரபணு அளவில் மருந்துகளை கண்டுபிடித்து தயாரிக்க கிடைத்த அறிவியலை பில் கேட்ஸ் மனித குலத்த்தின் மக்கள் தொகையை குறைக்க தடுப்பூசிகளில் பயன்படுத்த முனைகின்றார் என்பதே எனக்கு விடையாக கிடைகின்றது.

    Ref:
    http://www.naturalnews.com/034848_Microsoft_Merck_eugenics.html

  5. பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் : (con….)
    ——————————————————————————–
    மேலே குறிப்பிட்ட விசயங்கள் TED conference பேச்சின் போது பில்கேட்ஸ் ஒப்புகொண்ட நிகழ்ச்சி நிரளுடன் மிகவும் பொருந்திப் போகின்றன.. அந்த உரையாடலின் போது அவர் கூறிய விசயம் என்னவென்றால் இந்த மருந்துகள், தடுப்பூசிகள் மூலமாக உலக மக்கள் தொகையை 10% முதல் 15% வரையில் குறைக்கமுடியும் என்பதாகும்… அது எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? ஆம் உங்களால் நினைத்துப்பார்க்க இயலாத நாசகார சதிகள் மூலமாக இது சாத்தியம் ஆகும் என்கின்றார் பில் கேட்ஸ்… நீங்கள் எளிய இதயம் உடையவர் என்றால் இந்த பின்னுட்டத்தை படிப்பதனை இத்துடன் நிறுத்திக்கொண்டு தயவு செய்து வெளியேறுங்கள் என்று கோருகின்றேன்… ஆம் அத்தகைய கொடுரமான சதி திட்டம் அவருடையது. 10% முதல் 15% வரையில் மக்கள் தொகையை குறைக்கவேண்டும் என்றால் வேறு என்னவழி? மக்களை கொன்று குவிப்பதனை தவிர வேறு என்ன வழி இருக்கிறது.. 70 கோடி முதல் 105 கோடி வரையிலான உலக மக்களை கொன்று குவிக்க பில்கேட்ஸ் அந்த TED conference உரையாடலின் போது வழிகளை விவரிகின்றார்… அதனை பற்றிய செய்திகள் இந்த வினவு கட்டுரையில் இடம் பெற்று உள்ளதால் அதனை பற்றி இங்கு எழுத தேவை இல்லை என்று நினைகின்றேன்.

    மற்றும் ஒரு கொடுர முறைகளை பயன்படுத்தி உலக மக்கள் தொகையை குறைக்க பில் கேட்ஸ் திட்டங்களை தீட்டி அதற்கு பண உதவியும் செய்து கொண்டு உள்ளார். மனித விந்தனுகளில் உள்ள உயிரணுக்களை கொன்று மனிதர்களை நிரந்தர மலடாக அவர் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் முயற்சிக்கின்றார்.. அந்த தொழில் நுட்பத்துக்கான ஆராய்ச்சி நிதி உதவிகளை University of North Carolina (UNC) என்ற அமெரிக்க பல்கலைகழக்த்துக்கு அவரின் Bill & Melinda Gates Foundation மூலமாக வழங்கிக்கொண்டு உள்ளார் பில் கேட்ஸ்.

    அந்த பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் எலிகள் மீது செலுத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட்ஒலிகள் அவற்றின் விந்து எண்ணிக்கை மற்றும் விந்து ஒருங்கினைப்பையும் (sperm counts and sperm integrity) கணிசமான அளவுக்கு குறைத்து அவற்றை மலட்டு தன்மையுடைய நிலைக்கு மாறியுள்ளன.. ஆனால் அந்த ஆய்வின் அறிக்கைகள் கூறும் விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வு மலட்டு தன்மையை பற்றியது அல்ல ஆனால் கருத்தடை பற்றியது மட்டுமே என்று சப்பைக்கட்டு கட்டுகின்றது…. இந்த ஆய்வை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்…. மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!

    கேட்ஸ் அறக்கட்டளை 78 வெவ்வேறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் $100,000 அளவுக்கு நிதி உதவியை “உலக சுகாதார திட்ட பெரும் சவால்கள்” (“Grand Challenges in Global Health Program.” ) என்ற நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் வழங்கிக்கொண்டு உள்ளது. இதில் பத்து ஆய்வுகள் மனிதர்களை மலடாகும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன…டைம் நாளிதழின் செய்தியின் அடிபடையில் பேசுவோம் என்றால் இவற்றில் ஒரு ஆய்வு ஒரு மாத்திரியில்(pill) மனிதர்களை எப்படி காய்யடிப்பது என்பது பற்றியது ஆகும்.. (ஒரு மத்திரையில் மனிதர்களின் விந்து வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை எப்படி நிரந்தரமாக தடுப்பது பற்றியது ஆகும்….) மற்றும் ஒரு ஆய்வு விந்தணுக்கள் கருமுட்டையை சென்று அடையாமல் தடுக்க வேதிப் பொருட்களை கண்டுபிடிப்பது பற்றியது ஆகும்….

  6. பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் : (con….)

    பில் கேட்சின் மக்கள் தொகை குறைப்பு திட்டம் (agenda of human depopulation) எதனை போன்று உள்ளது என்றால் இனவெறியுடன் தன் அதிகாரத்தால் மக்களை கொன்று குவித்த அடோல்ப் ஹிட்லர் (Adolf Hitler) மற்றும் அமெரிக்க Food and Drug Administrationவின் உயர் அதிகாரிகளின் திட்டங்களை போன்று தான் உள்ளது. மக்களை முட்டாள் ஆக்குங்கள் , எளிய மக்களை கொள்ளுங்கள் , அதிகாரத்தில் உள்ளவர்களை மட்டுமே வாழ விடுங்கள் என்ற அவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் தான் பில் கேட்சின் மக்கள் தொகை குறைப்பு திட்டமும் உள்ளாந்த,ரகசிய நோக்கத்துடன் இன்று செயல்பாட்டில் உள்ளது. மனிதர்களை கொன்று ஒழித்துவிட்டால் உலகம் பசுமையாகிவிடும் என்ற நோக்கத்துடன் பில் கேட்ஸ் சுயபிரதியெடுப்பு, மரபணு இலக்கு உயிரியல் ஆயுதங்களை (self-replicating, gene-targeted bioweapon) இன்று உற்பத்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் தன்னுடைய பில் பவுண்டேசன் மூலமாக பாத் என்ற தன்னார்வ அமைப்புக்கு நிதி உதவி அளித்து Merck & Co நிறுவனத்தின் மருந்துகளை உலகளாவிய நிலையில் விற்பனை செய்வதன் மூலம் நடை முறை படுத்திகொண்டு உள்ளார்…

    பில் கேட்ஸ் பவுன்ட்டேன்சனிடம் இருந்து நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தக லாபம் அடையும் எந்த ஒரு மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளுமே(Merck & Co நிறுவன தயாரிப்புகள் போன்று) இன்று சந்தேகத்துக்கு உரியவை தான். எந்த நோய் தடுப்பு மருந்தில் என்ன வேதிப்பொருள் மனித விந்துவில் உள்ள உயிர் அணுக்களை கொன்று ஒழிக்கவும் , மனித மரபணுக்களை சிதைக்கவும் நமக்கே தெரியாமல் பயன் படுத்தப்படுகின்றதோ !( எந்த புற்றில் என்ன பாம்பு இருக்குமோ?) மேலும் மனிதர்களின் செல்களில் உள்ள செக்ஸ் குரோமோசோம்களில் (பெண்XX மற்றும் ஆண்XY) கூட இவர்கள் இங்களது சித்து வேலையை காட்டலாம் அல்லவா?

    மனித குலத்தை அழிக்க இவர்கள் எந்த எந்த வழிமுறைகளை பயன்படுத்துகின்றார்கள் என்றும் பார்கலாம்.. ஒரு மருந்தோ அல்லது ஒரு நோய் தடுப்பு மருந்தோ விரைவில் பல கோடி மக்களை குறுகிய காலத்தில் அழிக்கும் என்றால் அது மக்களின் எதிர்ப்பின் காரணமாக மருந்து வணிக சந்தையில் இருந்து உடனடியாக விலக்கிக்கொள்ளபடும் அல்லவா? எனவே இந்த பில் கேட்ஸ் கும்பல் கீழ்கண்ட வேறு மூன்று மாற்று வழிமுறைகளை கையாண்டு மக்களிடம் பேரழிவை உருவாக முயல்கின்றது…

    [1] நமது கவனத்துக்கு வராமல் மனிதர்களை பத்து முதல் முப்பது ஆண்டுகளுக்குள் உடல் பாகங்களை சிதைத்து மெல்ல மெல்ல கொல்லும் நோய்களை (degenerative diseases) தடுப்பூசிகள் மூலம் பரப்புதல். (They might kill people slowly in a way that’s unnoticeable, taking effect over perhaps 10 – 30 years by accelerating degenerative diseases.)

    [2] தடுப்பூசிகள் மூலம் மனிதர்களிடம் மலட்டு தன்மையை உருவாகி அதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைத்து மக்கள் தொகையை குறைத்தல்…(They might reduce fertility and therefore dramatically lower birth rates around the world, thereby reducing the world population over successive generations.)

    [3] இறப்பு விகிதத்தை தோற்று நோய்கள் மூலம் அதிகப்டுத்துதல்…தடுப்பூசிகள் மூலம் சக்தி வாய்ந்த ஃப்ளு வைரஸ்களை பரப்புதல். உயிரியல் ஆயுதமாக (bioweapon) செயல்படும் இந்த தடுப்பூசிகள் மனித உடலில் எதிர்ப்பு சக்தியை குறைத்து தொற்று நோய்கள் பரவ இடம் அளிக்கும்..(They might increase the death rate from a future pandemic. Theoretically, widespread vaccination efforts could be followed by a deliberate release of a highly virulent flu strain with a high fatality rate. This “bioweapon” approach could kill millions of people whose immune systems have been weakened by previous vaccine injections.)

    Ref:
    http://www.naturalnews.com/029911_vaccines_Bill_Gates.html

    • https://youtu.be/JaF-fq2Zn7I

      இந்த விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது நீங்கள் பில் கேட்ஸ் பேசிய ஒரு பகுதியை மட்டும் வைத்து கொண்டு அவரை பற்றி தவறாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், மேலே நான் கொடுத்து இருக்கும் youtube லிங்கை பார்க்கவும் பில் கேட்ஸ் சரியாகவே பேசியிருக்கிறார் மக்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர்களுக்கு பிறகும் குழந்தைகளும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழும் அதனால் மக்கள் மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே அவர் சொல்ல வரும் கருத்து.

      நம் நாட்டில் இதற்கு சிறந்த உதாரணம் கேரளா, அந்த மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது நின்றே விட்டது, ஒரு தம்பதிக்கு 1.8 குழந்தைகள் தான் பிறக்கிறது ஆனால் பீகார் உத்தரபிரதேஷ் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி எப்படி இருக்கிறது பாருங்கள், இன்றும் கூட மிக வேகமாக மக்கள் தொகை அந்த மாநிலங்களில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. கேரளவிற்கும் பிஹாருக்கும் என்ன வித்தியாசம் ?

      பில் கேட்ஸ் சொல்ல வருவது பிஹரை கேரளாவை போல் மாற்ற வேண்டும் என்பது தான் மக்களை மலடாக்க வேண்டும் என்பது அல்ல

  7. வினவுக்கும் மற்றும் திரு. செந்தில்குமரன் போன்ற அறிவு ஜீவிகளுக்கும் கூற விழைவது,

    முதலில் இணையத்தில் இருக்கும் பிதற்றல்களை செய்தி என பதிவதை நிறுத்தவும். aids பரப்பை தடுக்க condom உதவாது என பேசும் கத்தோலிக்க மருத்தவ அமைப்பில் ஒரு மருத்துவர் சொன்னதை வைத்து, அதை செய்தி என பதிவு செய்து, அதற்க்கு எந்த அடிப்படை ஆதாரம், ஆய்வு இல்லாமல் கண் காது, மூக்கு வைத்து உலகை அழிக்க என்னமோ சதி என்பதெல்லாம் பேசுவது, அப்பட்டமான பிதற்றல்.

    gene targetting, bioinformatics என்றெல்லாம் ரெண்டு வார்த்தையை போட்டு விட்டு, ஒரு மிக சிறந்த ஆய்வு அறிவியலை இப்படி பிதற்றுவது கவலை தருகிறது. இன்று புற்றுநோய் மருந்து என ஒரு விஷயம் கண்டுபிடிக்க இருக்கும் மிக, மிக அடிப்படை சிக்கல் இந்த gene targetting சம்பந்தமானது. எல்லா நோய்க்கும் அருமருந்து, புற்று நோயை குணமாக்க வல்லது என்று கூவி, கூவி விற்கும் எல்லா ஏமாற்று பேர்வழியும் மறைக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எல்லா புற்றுநோயும் ஒன்று அல்ல. எல்லா புற்றுநோய்க்கும் ஒரு மருந்து இல்லாமைக்கும் காரணம் புற்றுநோய் என்பது மரபணு மாற்றத்தால் வருவது. உடம்பில் இது தினமும் நிகழ்வது தான். இன்று உலகில் உயிரினினங்கள் இருக்க காரணம் மரபணு மாற்றம் தான். போன தலைமுறை போல அச்சு பிழறாமல் அடுத்த தலைமுறை இருந்தால் உயிரனங்கள் பல்கி பெருக முடியாது.

    சேரி இதுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு செல் அடுத்த தலைமுறை என பிரியும் போது சில பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி பிழையுள்ள செல் கட்டுக்கு அடங்காமல், பல பிழைகள் அடைந்து, நம் நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி பல்கி, பெருகி வருவதே புற்றுநோய் ஆரம்பம். இதனால் தான் அதற்க்கு ஒரு மருந்து, ஒரு mechanism of treatment என்பது இல்லை. ஒரே மனிதரின் உடலில் இரு வேறு இடங்களில் இருக்கும் புற்றுநோய் கட்டி வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்கலாம். இரு வேறு மனிதர் ஒரே வித புற்றுநோய் கொண்டிருந்தாலும் அவர்களின் புற்றுநோய் செல்களின் தன்மைகள் வெவ்வேறு. ஒரு பாக்டீரியா போல ஒரே கிருமி இந்த நோய்களை உருவாக்குவது இல்லை. அதே போல புற்றுநோய் உருவாக காரணங்களும் பல்வேறு. உதாரணமாக HPV எனும் வைரஸ் பெண்களின் கர்பப்பை வாய் புற்றுநோய் உருவாவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதை தடுக்க நம்மிடம் அதற்க்கு தடுப்பூசி உண்டு. இதே போல பல நோய்கள் (hepatitis b, c போன்றவை)புற்றுநோய் உருவாக்கும். இவைகளை தடுப்பூசி கொண்டு ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால் புற்றுநோய்க்கு நூறு சதவிதம் பாதுகாப்பான மருத்துவம் வேண்டும் என்றால் அதற்க்கு gene targetting தான் மிக சிறந்த வழி. நம் செல் மாறுவதை, பிழைகள் பெறுவதை தடுக்க முடியாது. ஆனால் அந்த பிழையை கண்டுபிடித்து, சரி செய்வது சாத்தியம். இதற்கே இந்த gene targettting, bio informatics ஆய்வு.

    அடுத்து, ஆண் குடும்ப கட்டுப்பாடு ஆய்வை எல்லாம் உலகை மலட்டு தன்மை ஆக்க செய்யும் ஆய்வு என்பது கேலி கூத்து. பெண்களுக்கு அறுவை சிகிச்சை, implants, morning after pill என குடும்ப கட்டுப்பாடு விசயத்தில் உதவ பல உள்ளன. ஆண்களுக்கு condom தவிர தற்காலிக குடும்ப கட்டுப்பாடு என எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை (vasectomoy) நிரந்தரனமானது. நம்ம ஊர்ல அரிசி, காசு குடுத்து பண்ண அதே அறுவை சிகிச்சை தான். எல்லா இடத்திலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே பெண்களுக்கு இருப்பது போலவே ஆண்களுக்கும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு சேவை இருப்பது நல்லதே. அதற்கான ஆய்வு பல வழிகளில் நடைபெற்று வருகிறது.அதை எல்லாம் கொண்டு போய் என்னமோ மூன்றாம் உலகை அழிக்க நடக்கும் சதி என Natural News போன்ற conspiracy தளங்கள் எழுதுகின்றன. அதை மேல்நாட்டின் மீது இருக்கும் காழ்புணர்ச்சியின் காரணமாக நாம் உண்மை என நம்பி எழுதினால், நமக்கு அறிவு எப்படி?

    இணையத்தில் இருப்பதால் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் நம் confirmation bias நம்மை அறிவிலி ஆக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். Natural news போன்ற தளங்கள் எல்லாம் வெறும் குப்பை. அதை நம்பி, அதை செய்தி , உலக சதி என எழுதுவது அறிவுக்கு உகந்த காரியம் அல்ல.இந்த கட்டுரையில் இருக்கும் அப்பட்டமான selection bias மற்றும் quote mining, எந்த அடிப்படையும் இல்லாமல் வதந்கிகளை செய்தி என எழுதுவது போன்றவை வினவில் அதிகரித்து வருகிறது. இதை தயவு செய்து கொஞ்சம் கவனத்துடன் பார்த்து இப்போதே திருத்திக்கொள்ள வினவை வேண்டுகிறேன்.

    • இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டபடும் விசயத்துக்கும் , எனது பின்னுட்டங்களுக்கும் தொடர்பற்ற வியசங்க்களை பேசிக்கொண்டு எங்களை குறை கூறுகின்றீர்கள்சிந்தனை செய்…!. gene targeting medicine, bioinformatics ஆகிய அறிவியல் துறைகள் எல்லாம் மனிதர்களின் மரபணு தொடர்பான நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்க உதவும் என்ற விசயத்தை என்னுடைய பின்னுட்டத்தில் நான் விளக்கியுள்ளேன். ஆனால் பில் கேட்ஸ் அந்த அறிவியல் துரைகளை நாசகரமாக மானுட குலத்தை அழிக்க பயன்படுத்துகின்றார் என்ற உண்மையை அவரின் வாக்கு மூலத்தில் இருந்தும் (TED conference speeach) அவர் இன்று நிதி உதவி செய்து கொண்டு உள்ள ஆய்வுகளின் அடிபடையிலும் விளக்கி இருந்தேன்… அவற்றை பற்றிய எந்த விதமான மாற்றுக்கருத்துகளையும் கொடுக்க இயலாத சிந்தனை செய் அவர்கள் பில் கேட்ஸ் பவுண்டேசனின் பிரதிநிதி போன்றே பேசிக்கொண்டு உள்ளார். உங்களால் முடிந்தால் இந்த கட்டுரையில் உள்ள விசயங்களையும் என்னுடைய பின்னுட்ட கருத்துகளையும் ஆதாரபூர்வமாக ,தர்க்க ரீதியாக தவறு என்று நிருபியுங்கள் ஐயா!

    • சிந்தனை செய் அவர்களே , இந்த கட்டுரையை மற்றும் ,எனது பின்னுட்டத்தை பொறுத்தவரையில் பில் கேட்ஸ் மீது வைக்கபடும் மைய்ய குற்றசாட்டே மரபணு நோய்களான கண்பார்வை கோளாறு , சக்கரை நோய்கள் போன்றவற்றுக்கு மருந்துகள் தயாரிக்க bioinformatics (உயிரிதகவலியல்) மூலம் மனித மரபணுக்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் gene targeting medicine (மரபணுகளை நோக்கிய மருந்துகளை செய்யதல்) என்ற விசயத்தை பில் கேட்ஸ் அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி மக்கள் தொகையை குறைக்க தடுப்பூசிகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளார் என்பதாகும். அந்த குற்றசாட்டுக்கு பதில் அளிக்க இயலாத நீங்கள் வினவையும் என்னையும் லாஜிக் மற்றும் எந்த அடிபடை ஆதாரமும் இல்லாமல் குற்றம் காண்கின்றீர்கள்!

      • இந்த மாதிரி காமெடி பண்றதுக்கு முன்னாடி முதல்ல நீங்க ஆதாரத்தை வைங்க சார். உங்கள் பதிவை முதலில் அலசுவோம். அதில் உங்கள் கூற்றுகளை கொஞ்சம் பார்போம். எனக்கு கொஞ்சம் அறிவு கம்மி, எனவே சில கேள்விகள் கொஞ்சம் அடிபடையாக இருக்கும். தயவு செய்து விளக்கவும்.

        //உலக அளவில் கணினி மென்பொருள் விற்பனையை கட்டுப்படுதிக்கொண்டு (monopoly) இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பொது மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விசயத்திலும் புறவாசல் வழியாக நுழைந்து உள்ளது. அது எப்படி சாத்தியம் ஆயிற்று? 2009 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நான் மும்பே குறிப்பிட்டு உள்ள Merck & Co ( the world’s largest maker of vaccines) என்ற மருத்துவ நிறுவனத்திடம் இருந்து ஒரு உயர் கணினி மென்பொருள் தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கியுள்ளது//

        ஆகா மென்பொருள் வாங்கி இருக்கிறதா? அதை கொண்டு eugenics மருந்துகள் செய்ய முடியுமா? அப்படி என்ன எல்லாம் வல்ல மென்பொருள் அது? Rosetta Biosoftware எனும் கிளை நிறுவனத்தின் மென்பொருளின் சில பகுதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி உள்ளது (Source: http://old.seattletimes.com/html/microsoft/2009288622_rosetta020.html). அந்த மென்பொருளை தன்னுடைய Amalga Life Sciences எனப்படும் மென்பொருளில் ஒரு பகுதியாக இணைத்துள்ளது. மூல கரு பிடித்தாகி விட்டது. இப்போது நிரூபிக்க வேண்டியது எல்லாம் இந்த Amalga மென்பொருள் நீங்கள் கூறி உள்ளது போல,

        //அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இயுகனிஸ் நோய் தடுப்பு மருந்துகளை ( eugenics vaccines) உற்பத்தி செய்யமுடியும்//

        அந்த மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா என்பது தான். சரி இந்த மென்பொருள் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதை கொஞ்சம் இணையத்தில் பார்ப்போம். விக்கிப்பீடியா பக்கத்தின் முதல் வரி:

        Microsoft Amalga Unified Intelligence System (formerly known as Azyxxi) was a unified health enterprise platform designed to retrieve and display patient information from many sources, including scanned documents, electrocardiograms, X-rays, MRI scans and other medical imaging procedures, lab results, dictated reports of surgery, as well as patient demographics and contact information.

        (https://en.wikipedia.org/wiki/Microsoft_Amalga)

        ஆகா. ஒரு நபரின் அனைத்து மருத்துவ விசயத்தையும் சேமித்து, வேண்டும்போது தர வல்ல என்ன ஒரு நாசக்கார மென்பொருள்!!! databaseஇல் தட்டி கொண்டு இல்லாமல் மருத்துவ பணியை சுலபமாக்கும் மென்பொருள், கண்டிப்பாக eugenics மருந்துகளை தயாரிக்க வல்லது தான். இது இப்போதும் பில் கேட்ஸ் கையில் இருப்பது என்ன பெரிய ஆபத்து! சரி அந்த மென்பொருளுக்கு என்ன ஆனது? அதே விக்கிபீடியா பக்கத்தில் இருப்பது.

        As of February 2013, Microsoft Amalga was part of a number of health-related products spun-off into a joint-venture with GE Healthcare called Caradigm.[1] Shortly thereafter, Caradigm announced the “Caradigm Intelligence Platform” as the new brand for Microsoft Amalga,[7] ending the use of the name. In early 2016, it was reported that Microsoft had sold its stake in Caradigm to GE.[2]

        அடடா. சரி போகட்டும். அவர் வேண்டியதை செய்திருப்பார். எனவே அதை விற்று விட்டார் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. மருத்துவ பதிவேடுகள் கையாளும் மென்பொருள் நீங்கள் கூறியது போல எவ்வாறு eugenics மருந்துகளை உருவாக்க வல்லது என விளக்க முடியுமா திரு.செந்தில்குமரன்? அதை கொண்டு எத்தனை மருந்துகள் உருவாக்க பட்டு உள்ளன. அவை எங்கெல்லாம் பயன்படுத்த பட்டு உள்ளன போன்ற ஏதேனும் லாஜிக் உதைக்காத, அடிப்படை ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?

        அடுத்து, உலக மக்கள் தொகையில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் மக்களை குறைக்க வேண்டும் என கூறி இருப்பதாக இருக்கும் காணொளி. அதை அடிபடையாக கொண்டு தான் மற்ற எல்லா விசயமும் உங்கள் பதிவில் உள்ளது. சரி அந்த காணொளியில் அவர் கூறியதை வார்த்தை மாறாமல் பார்ப்போமா?

        //The world today has 6.8 billion people. That’s heading up to about nine billion. Now if we do a really great job on new vaccines, health care, reproductive health services, we could lower that by perhaps 10 or 15 percent.//

        அதாவது சிறந்த மருத்துவ வசதி, குடும்ப கட்டுப்பாடு சேவை மற்றும் கல்வி போன்றவற்றின் துணை கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க முடியும் என்கிறார். இதை தானே நாமும் சிவப்பு முக்கோணம், நாம் இருவர், நமக்கு இருவர் என முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்தோம்? இங்க செஞ்சா தேச நலன். அதையே பில் கேட்ஸ் மிக வரிய நாடுகளில் செய்ய வேண்டும் என சொன்னால் அவர் மக்களை கொன்று குவிக்க திட்டம்? வறுமையை ஒழிக்க முதற்படி பெண்கல்வி, குடும்ப கட்டுப்பாடு என்பது மிக தெளிவாக உள்ள விஷயம். இதை பில் கேட்ஸ் சொன்னால் அதெப்படி அவர் மக்களை கொள்ள திட்டம் போடுகிறார் என்பதாகும்? இதில் உள்ள லாஜிக் விளக்கவும்.

        அடுத்து, Grand Challenges in Global Health Program எனும் initiative மூலமாக மனிதர்களை மலடாக ஆக்கும் ஆய்வு எனும் உங்கள் பதிவு. மிக எளிதாக கேட்கிறேன் சார். ஒரு கடைகோடி கிராமத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்வது? சுத்தமான, கிருமி இல்லாத, தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாத இடத்தில தானே அறுவை சிகிச்சை செய்ய முடியும்? இன்றைய நிலையில் இருக்கும் கருத்தடை முறைகள் ஏற்கனவே மேல ஏன் பதிவில் உள்ளன. இதில் அறுவை சிகிச்சை இல்லாமல் இருக்கும் வழி முறை இரண்டே இரண்டு. பெண்களுக்கு morning after pill, ஆண்களுக்கு condom. எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் உலகெங்கும் ஆய்வுகள் நடை பெற்று தான் வருகின்றன. இதில் பல பல்கலைகழகம், அரசாங்கம், தனியார் ஆய்வுகளும் அடக்கம். இதில் பில் கேட்ஸ் ஏதோ பத்து ஆய்வுக்கு $100,000 கொடுத்து உள்ளார். அதுவும் மக்களை அழிக்கும் முயற்சி என்பது என்ன லாஜிக்? அப்போ அரசாங்கம் அதே ஆய்வுக்கு பணம் கொடுத்தது? மக்கள் பல்கலைகழகம் கொடுத்த பணம் எல்லாம்?

        இதே முயற்சியில் இது வரை 2035 grants அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 24 மட்டுமே குடும்ப கட்டுப்பாடு ஆய்வுக்கு அளிக்கப்பட்டது (http://grandchallenges.org/#/list?challenge=Contraceptive%20Technologies). மொத்த க்ராண்டில் ஒரு சதவீதம் கூட இல்லை. இதே முயற்சியில் மற்ற எந்த துறைகளில் எத்தனை கிராண்ட் என பார்போமே.

        குழந்தை மற்றும் கருத்தரிப்பில் மூளை வளர்ச்சி ஆபத்துகள் பற்றிய ஆய்வு – 41
        (http://grandchallenges.org/#/list?challenge=Brain%20Function~2FGestational%20Age)

        நோய் கண்டறியும் முறைகள் பற்றிய ஆய்வுகள் – 40
        (http://grandchallenges.org/#/list?challenge=Diagnostics)

        கைப்பேசி பயன்பாடுகள் – 24
        (http://grandchallenges.org/#/list?challenge=Cell%20Phone%20Applications)

        நோய் எதிர்ப்பு – 36
        (http://grandchallenges.org/#/list?challenge=Drug%20Resistance)

        உலக சுகாதார தீர்வுகள் – 79
        (http://grandchallenges.org/#/list?challenge=Drug%20Resistance )

        புறக்கணிக்க பட்ட வெப்பமண்டல நோய்கள் – 40
        (http://grandchallenges.org/#/list?challenge=Neglected%20Tropical%20Diseases)

        தொற்று நோய்கள் – 126
        (http://grandchallenges.org/#/list?challenge=Infectious%20Diseases)

        இதை போல பல தரப்பட்ட பல பிரச்சனைகளுக்கு grants அளிக்கும் அமைப்பு, குடும்ப கட்டுபாட்டில் அளித்ததற்கும் என்ன ஆச்சர்யம்? உலக மக்களை கொன்று குவிப்பது தான் நோக்கம் என்றால் குடும்ப கட்டுபாட்டை விட பல மடங்கு grants அதே மக்களுக்கு நேரடியாக பயன்படும் மருத்துவ, சுகாதார, உணவு மற்றும் ஊட்டசத்து முயற்சிகளில் தரப்பட்டது ஏன்? இடிக்கிதே சார். கொஞ்சம் ஆதார பூர்வமாக விளக்க முடியுமா?

        பி.கு: இந்த natural news எனப்படும் தளம் குப்பை என நான் முன்பே கூறி இருந்தேன். ஏன் தெரியமா? இது பொய் செய்திகள், conspiracy theory, கட்டுக்கதை போன்றவற்றை பதிவு செய்து மக்களிடம் பயமுறுத்தி “இதில் இருந்து பாதுகாப்பு வேண்டுமா? எங்கள் இந்த தயாரிப்பை வாங்குங்கள்” என கூவி விற்கும் மோசடி இணையத்தளம். அவர்கள் தளத்தின் மேலே இருக்கும் Store என்னும் இணைப்பை சொடுக்கு பார்க்கவும். Health Ranger store எனப்படும் அவர்கள் கடைக்கு செல்லும். அதில் உள்ள தயாரிப்புகள், அவற்றின் கூற்றுகள் ஆகியவற்றை பார்க்கவும். கண்ணாடி இல்லாமல் பார்க்க இந்த pinhole glasses, கதிவீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ள மாத்திரைகள்,ஹிமாலய கல் உப்பு என கன ஜோராக வியாபாரம் பறக்கும். இப்படி பொய் புளுகி, மக்களை ஏமாற்றி லாபம் அடிக்கும் ஒரு snake oil salesman fraud சொன்னதை தான் உண்மை என நம்பி நீங்கலும், வினவும் எழுதி தள்ளி இருகிறீர்கள். மீண்டும் கூறுகிறேன். confirmation bias இல்லாமல் ஆதாரம் கொண்டு மட்டும் விசயங்களை பார்க்கவும். Source of a news is as important as the source itself.

        • [2] சிந்தனை செய் அவர்களே ,
          அடுத்த விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனமும், merck மருத்துவ நிறுவனமும் ஒன்றுடன் ஒன்று வர்த்தக தொடர்புடையவை என்ற நிலையில் மனித மக்கள் தொகையை குறைகின்றேன் என்ற பெயரில் மனித குலத்தை அழிக்க இந்த eugenics vaccines களை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பலவேறு செயல்களை மூன்றாம் உலக நாடுகளில் – ஏழை நாடுகளில் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்… இந்தியாவில் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?

          பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியின் மூலம் இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இதில் மக்களின் மீது ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் GSK பர்மாவின் Cervarix என்ற மருந்தும், Merck நிறுவனத்தின் Gardasil மற்றும் Gardasil 9 ஆகிய மருந்துகள் ஆகும். இந்த மருந்துகளை Drugs Controller of India இந்தியாவில் அனுமதி (license) அளிப்பதற்கு முன்பே ICMR- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் PATH உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு (MoU) இந்திய மக்களுக்கு அதுவும் பழங்குடி மக்கள் மீது இந்த மருந்துகளை செலுத்தி சோதனை செய்து உள்ளது. 2009-10 ஆண்டுகளில் இந்தியாவில் Drugs Controller of India வால் அங்கிக்ரிக்கப்படாத இந்த மருந்துகளை இந்திய மக்களின் மீது செலுத்தி சோதிப்பது என்பது கிரிமினல் குற்றம் என்று தெரிந்தும் அன்றைய காங்கிரஸ் அரசு இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இந்த கொடும் செயலை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று இன்றைய பிஜேபி அரசும் கிரிமினல் குற்றத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தவிர்த்து வேறு ஏதாவது நிறுவனம் இத்தகைய வல்லாண்மை பெற்று உலக ஏழை நாடுகளை சிதைக்க முடியுமா?

          • உங்களின் இந்த கூற்று தான் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு. அதற்க்கு ஆதாரமாக நீங்கள் சொல்வது தான் கீழே உள்ளது.

            // மனித மக்கள் தொகையை குறைகின்றேன் என்ற பெயரில் மனித குலத்தை அழிக்க இந்த eugenics vaccines களை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பலவேறு செயல்களை மூன்றாம் உலக நாடுகளில் – ஏழை நாடுகளில் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்… இந்தியாவில் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா//

            நீங்கள் கூறிய உதாரணத்தை மட்டும் எடுத்து கொள்வோம். முதலில் இந்த தடுப்பு மருந்து புதிய மருந்து அல்ல. UK, USA, Australia, Germany, canada உள்ளிட்ட பல நாடுகளில் வழங்கப்படும் கட்டாய தடுப்பூசி தான். இதில் சில சமயம் ஆண்களும் அடக்கம். ஆனால் பெண்களுக்கு இந்த கிருமி Cervical கான்செர் உருவாக்கும் என்பதால் 9 முதல் 25 வயது உள்ள பெண்களுக்கு கட்டாயம் என பரிந்துரைக்க படுகிறது. இந்தியாவில் எல்லா மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி கிடைக்கும். என்ன அரசாங்கம் இலவசமாக போடும் திட்டத்தில் இது கிடையாது. அவ்வளவே. சரி அதனால் என்ன? அதான் அரசாங்கம் கட்டாயம் இல்லைன்னு சொல்லிடுச்சே, பின்ன ஏன் இத தரணும்? இந்தயாவில் மட்டும் ஆண்டுக்கு இந்த நோய்க்கு பலியாகும் எண்ணிக்கை 75,000. உலகில் இந்த நோய் பதிப்பில் இறப்பவரின் மூன்றில் ஒரு பங்கு இது. இது இறக்கும் தொகை மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

            பழங்குடி மக்கள் மீது சோதனை எல்லாம் இல்லை இது. முப்பதாயிரம் பெண்களுக்கு தரப்பட்ட இந்த தடுப்பூசி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இதை தரும் போது பின்பற்ற பட வேண்டிய முறைகள் சரியாக பின்பற்ற படவில்லை என்பதே. இதில் ஏழு பெண்கள் இறந்தன என்பதை இது போன்ற தடுப்பூசி எதிர்ப்பு அமைப்புகள் அவர்கள் இறப்புக்கு காரணம் இந்த தடுப்பூசி என்கிறது. இதை ஆய்வு செய்த microbiologist சொல்வது:

            Five were evidently unrelated to the vaccine: One girl drowned in a quarry; another died from a snake bite; two committed suicide by ingesting pesticides; and one died from complications of malaria. The causes of death for the other two girls were less certain: one possibly from pyrexia, or high fever, and a second from a suspected cerebral hemorrhage. Government investigators concluded that pyrexia was “very unlikely” to be related to the vaccine, and likewise they considered a link between stroke and the vaccine as “unlikely.” ICMR’s director general, microbiologist Vishwa Mohan Katoch, categorically rejects a connection: “Based on the enquiry, it is certain that causality of the seven deaths was not at all related to the HPV vaccine,” he insists. Other experts say that in the absence of autopsies, it is impossible to pinpoint the actual cause of death.

            இதையும் விடாமல் இந்த தடுப்பூசி போட்ட வலி தாங்காமல் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என பகுற்றச்சாட்டு கூட்டம் இருக்கிறது. நீங்கள் கூறியது போல இது eugenics vaccine என்றால் எண்ணிக்கை உதைக்குதே சார். ஆண்டுக்கு நம்ம நாட்டில் 132,000 புதிய நோயாளிகள், அதில் 75,000 மரணம். கிட்ட தட்ட பாதி. உலக மக்கள் தொகையை கொல்லனும்னா எதுவுமே செய்யாமல் விட்டாலே போதுமே? ஒரு வேலை இந்த ஏழு இறப்புமே இந்த தடுப்பூசி காரணம் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. பாதிக்கு பாதி இறப்பு எங்கே, 0.023 சதவிகித இறப்பு எங்கே? கணக்கே தெரியாம மக்கள் இறப்பை குறைக்கும் வழியை வைத்து மக்கள் தொகையை குறைக்க முயல்கிறார். பாவம் அவர் அறிவு அவளோ தான்.

            நீங்க குடுத்த உதாரணத்தில் அதிக பட்சம் norms not followed என ஒத்துகொள்ள முடியுமே தவிர, மக்களை கொன்று குவிக்கும் திட்டம் என்றெல்லாம் கூற சுண்டைக்காய் அளவுக்கு கூட ஆதாரம் இல்லை. norms பின்பற்ற படவில்லை என நிரூபணம் ஆனால் தாராளமாக என்ன தண்டனை சரியோ அதை வழங்கலாம். ஆனால் ஏழு மரணத்துக்கும் காரணம் இந்த தடுப்பூசி எனும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஒதுக்கி வைக்கவும். இப்போதைக்கு அதற்க்கு ஆதாரம் ஒரு சிலரின் கூவல் மட்டுமே. அவர்கள் சொல்வது மட்டும் ஆதாரம் என போதும் என்றால் அப்புறம் அறிவியல், நீதிமன்றம், உண்மை அறியும் முறைகள் எல்லாம் எதற்கு? We can just go back to worshiping Zeus and conducting festivals for the Rain gods.

            Sources:

            http://www.sciencemag.org/news/2013/09/indian-parliament-comes-down-hard-cervical-cancer-trial

            https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3385284/

            • இங்கு நான் குறிப்பிட்டு உள்ள முக்கியமான விசயம் என்னவென்றால் Drugs Controller of India வால் அங்கிகரிக்கப்படாத நிலையிலேயே அந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது தான். மேலும் அந்த தடுப்பூசியை அன்றைய காங்கிரஸ் அரசு அனுமதிக்க அதனை இன்று நீதி மன்றத்தில் பிஜேபி அரசும் “தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை” என்று கூறி குற்றவாளிகளை விடுவித்து உள்ளது. அது எப்படி இறையாண்மை உள்ள இந்திய நாட்டில் அதன் Drugs Controller of India வின் அனுமதி இன்றி பில் பவுண்டேசன் அந்த தடுப்பூசிகளை ஆந்திராவிலும் , குஜராத்திலும் உள்ள பழங்குடி இன சிறுமிகள் மீது செலுத்துவது சாத்தியம் ஆயிற்று? இந்த கிரிமினல் குற்றத்தில் இருந்து அவர்கள் தப்புவதும் எப்படி சாத்தியம் ஆயிற்று?

                • தாராளமாக சார். முதலில் நீங்கள் சொல்லி இருப்பது:

                  //Drugs Controller of India வால் அங்கிகரிக்கப்படாத நிலையிலேயே அந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது தான்.//

                  இது தவறான தகவல். நடத்தப்பட்டது Phase 5 முயற்சி. Phase 3இல் மருந்து approval or rejection முடிந்து விடும். எனவே இது நீங்கள் கூறியது போல மக்களை சோதனை எலிகளாக எல்லாம் இல்லை. பிறகு, இந்த மருந்துகள் ஏற்கனவே அங்கீகரிக்க பட்டவை. தனியார் மருத்துவமனைகளில் கிடைத்து வந்தவை. ஆனால் காஸ்ட்லி. இந்தியாவில் அவற்றை தயாரிக்க அல்லது மார்க்கெட்டிங் செய்ய license 2008 வரை இல்லை. அவ்வளவே. Marketing or manufacturing licence வேறு, approval வேறு.இம்போர்ட் செய்து, distribute செய்யலாம். advertisment, மார்க்கெட்டிங் எதுவும் செய்ய கூடாது. அவ்வளவே.

                  இந்த ஆய்வு எந்த முறை இந்த தடுப்பூசி தர சிறந்த முறை, இரண்டு டோஸ் போதுமா அல்லது மற்ற எல்லா நாடுகளில் உள்ளது போல மூன்று டோஸ் வேண்டுமா எனும் கேள்விகளுக்கே பதில் தேடியது. மருந்தகளை approve செய்யலாமா எனப்படும் ஆய்வுகள் இல்லை இவை. ஏற்கனவே அனுமதிக்க பட்ட மருந்துகள் பரவலாக சேர எது சிறந்த வழி என ஆராயும் முயற்சி.

                  //The two HPV vaccination projects were approved by all required agencies. One is for
                  operational feasibility of school-based and community-based vaccination, in Khammam district (Andhra Pradesh, Gardasil) and Vadodara (Gujarat, Cervarix), conducted by the State Governments in collaboration with Indian Council of Medical Research (ICMR) and PATH (a US based not-forprofit non-governmental organization). No biological outcome is measured; hence it is not a clinical trial. The second is a multi-centric clinical trial to
                  investigate immunogenic efficacy of 2 doses (6 months apart) compared to conventional 3 doses (at 0-2-6 months) of Gardasil. If successful, it will lead to 33% cost-reduction. //

                  எல்லா அரசாங்க நிறுவனங்கள், மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகே முயற்சி நடந்துள்ளது. இதை விசாரித்த பாராளுமன்ற நியமித்த மூவர் கமிட்டி கூட, இந்த இறப்புகளுக்கும், தடுபூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே தெரிவிக்கிறது.

                  //After reviewing all seven deaths (five deaths from AP in the Gardasil group and two deaths in Gujarat from Cervarix group), it has been observed that there is no common pattern to the deaths that would suggest they were caused by the vaccine. In cases where there was an autopsy, death certificate, or medical records, the cause of death could be explained by factors other than the vaccine. The background death rates among girls 10-14 years of age in both Barodara and Khammam districts did not show any increase rate. In fact in Badodara district the death rate has significantly decreased in 2009 compared to the past years //

                  அவர்கள் இந்த study இரண்டே இரண்டு சிறு குறைகள் தவிர மற்றபடி மிக சிறப்பான ஆய்வு என தான் கூறுகின்றனர்.

                  //Comments on study protocol:

                  The study has been designed very well except for the following shortcomings:

                  1. The primary end point of the study was to find out number of girls having serious and
                  non serious adverse events following vaccination through routine UIP system. In this
                  regard first of all routine system of reporting should have been verified in both the
                  districts before designing the study. There is no dairy card based information record for
                  assessing minor or major AEFI in the study protocol which seems unusual with such a
                  large observational study.

                  2. There should have been some mechanism of insurance cover for the treatment of the
                  vaccinated girls irrespective of their illness for a designated period of time. PATH has
                  mentioned that there is an insurance cover for the organization but none was done for
                  the girls in the study group.//

                  இந்த விசயத்தில் பல குறைகள் இருக்க தான் செய்கிறது. மறுக்க வில்லை. உதாரணமாக மேலே உள்ளது போல post study monitoring இல்லை, approval process கொஞ்சம் அவசர கதியில் தான் நடந்து உள்ளது, சுமார் 3000 பெண்கள் hostel warden அனுமதி மட்டுமே பெற பட்டு உள்ளது, பெற்றோரின் அனுமதி இல்லை. இவை எல்லாம் நடந்தவை தான். ஆனால் இது என்னமோ இந்திய மக்களை குறி வைத்து, அவர்களை சோதனை எலிகளாக, மேல் நாடுகளில் approve செய்ய படாத மருந்துகளை சோதனை செய்ய பயன்படுத்தியது போல பில்ட் அப் எல்லாம் வேண்டாம். மிஞ்சி மிஞ்சி போனால், negligence அண்ட் lack of following guidelines என தான் சொல்ல முடியும். இது கிரிமினல் குற்றம் எல்லாம் இல்லை.

                  sources:

                  http://icmr.nic.in/final/HPV%20PATH%20final%20report.pdf

                  http://www.who.int/biologicals/Clinical_guidelines_27_January_2016.pdf

                  https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3385284/

                  http://www.indianpediatrics.net/aug2010/724.pdf

                  https://en.wikipedia.org/wiki/HPV_vaccines

                  http://www.thehindu.com/news/national/government-warns-path/article3817639.ece

                  • இந்த மருந்துகள் Drugs Controller of India வால் அங்கிகரிகபடுவதக்கு முன்பே அந்த பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது என்பதனை என்னுடைய குற்றசாட்டாக வைத்து உள்ளேன்… manufacturing licence மற்றும் approval இரண்டையுமே அவர்கள் Drugs Controller of India விடம் இருந்து இந்த தடுப்பூசிக்கு அன்று பெற்று இருக்கவில்லை.. என்பது தான் பிரதான குற்றசாட்டு. அடுத்ததாக இந்த பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய உரிய அனுமதியையும் அவர்கள் பெறவில்லை என்பது அடுத்த குற்ற சாட்டு….

                • உங்கள் கேள்விக்கு அமைதி காக்காமல், மழுப்பாமல் ஆதாரங்கள், அரசாங்க அறிக்கை, ஆய்வு கட்டுரைகள் கொண்டு பதில் அளிதாகி விட்டது. நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எப்போதோ? நீங்கள் கேள்வி கேட்க, நான் பதில் சொல்ல, நீங்கள் மீண்டும் moving the goal எனவே போய் கொண்டு இருக்கிறதே சார்.

            • @ சிந்தனை செய்
              //ஒரு வேளை இந்த ஏழு இறப்புமே இந்த தடுப்பூசி காரணம் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. பாதிக்கு பாதி இறப்பு எங்கே, 0.023 சதவிகித இறப்பு எங்கே?////இப்போதைக்கு அதற்க்கு ஆதாரம் ஒரு சிலரின் கூவல் மட்டுமே. அவர்கள் சொல்வது மட்டும் ஆதாரம் என போதும் என்றால் அப்புறம் அறிவியல், நீதிமன்றம், உண்மை அறியும் முறைகள் எல்லாம் எதற்கு? We can just go back to worshiping Zeus and conducting festivals for the Rain gods.// இது போன்றதொரு ஸ்டேட்மெண்ட்டுக்கு ஒரு சான்று . ஐஐடியில் 2012-இல் ஆதிக்க சாதி பேராசிரியர்களின் சித்திரவதை தாங்காமல் தொடர்ச்சியாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அது பெரிய போராட்டத்திற்கு இட்டு சென்ற போது, அன்றைய டீன் “3 out of 5000 is numerically negligible” என்று கூறினார். இது போன்ற தங்கள் கருத்துக்கள் மக்களின் உயிரை நீங்கள் கிள்ளுக்கீரை அளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கான உதாரணங்கள். நீங்கள் ஒரு அறிவியலாளரா? எது அறிவியல்? எது நீதி? சட்டங்கள் கொள்கைகள் யாருக்கானவை? எதெற்கெடுத்தாலும் அறிவியல்தளங்களையே சைட் செய்யும் உங்களுக்கு ஆராய்ச்சி என்றால் என்னவென்று தெரியுமா? அதை நடத்த வேண்டுமென்றால் எவென்வன் காலில் விழ வேண்டுமென்று தெரியுமா?

              உலகம் முழுவதும் நடக்கும் உயிர்தொழிற்நுட்ப ஆய்வுகளில் 95% வீதத்திற்கு மேல் நிதியுதவி அளிப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமெ தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த ஆய்வுகள் யாருக்கான்வை என்ரு தெரியுமா? இந்த ஆய்வுகளின் அறிவுசார் சொத்துடமைக்கு என்ன நேர்கிறது என்று தெரியுமா? நிதி மூலதனத்தை விட அதிகமான இலாபம் கொழிக்கும் துறையாக அறிவுசார் சொத்துடமை மாறியுள்ள நிலையில் அறிவை ‘அறிவுப் பொருளாதாரம்’ (knowledge economy) என்றும் மனிதனை ‘மனித மூலதனம்’ (human capital) எனவும் reduce செய்யும் குரூரமான இலாபவெறியர்களுக்கு சொம்படிக்கும் நீங்கள், இவர்களுக்கு ஆதரவாக எந்த வித அறிவியல் கண்ணோட்டமோ, மனிதநேயமோ இன்றி இம்மானுட விரோத கும்பலின் குற்றங்களை மறைப்பதற்காகவே அவர்களால் நடத்தப்படும் ஜேனல்களின் அவர்களின் பிரதிநிதிகளால் எழுதப்பட்ட்ட கட்டுரைகளை மட்டும் உதவியாக வைத்து அதையே அறிவியல் என்று வாதிடும் உங்களிடம் என்ன விதமான மனசாட்சி அல்லது உளவியல் செயல்படுகிறது என்பதை விளக்க முடியுமா?

              ‘எனக்கு சமூகம் முக்கியமில்லை; அறிவியல் என்று கூறி எதைக் கழிந்து வைத்தாலும் அதை எல்லாம் அமிர்தமென்பேன்; அதை இயக்கும் மானுட விரோத சக்திகளை விமர்சிக்காமல் விமர்சிப்பவர்களைப் பார்த்து போலி அறிவியல்வாதி எனக்குற்றம் சாட்டுவது மட்டும் தான் எனது வரம்புக்குட்பட்டது என்றால்’, உங்களைப் போன்றவர்களிடம் வெறும் லிங்கை மட்டும் வைத்துப் பேசினால் விளங்காது. ஏனென்றால் நீங்கள் ஞயாயப்படுத்த வேண்டும் என்று முடிவு பண்ணிக் கொண்டு விவாதத்துக்கு வருகிறீர்களே தவிர, ஞயாயம் எது என்ற தேடலிலிருந்து விவாதிக்க வரவில்லை. பார்ப்பான் கூட பார்ப்பனியத்தை ஞாயப்படுத்த சாதி அமைப்பு முறையை ஞாயப்படுத்த ஆதாரங்களை வைத்துள்ளான். உடனே அந்த ஆதாரத்தை வைத்து பார்ப்பனியத்தை, சாதிய அமைப்பு முறையை சரி என வாதிடுவீர்களோ?

              கட்டுரையில் தெளிவாகவே icmr, dcii மற்றும் கவி வாக்சின் அலையன்ஸ் போன்றவர்களின் போர்குற்றங்களுக்கு இணையான குற்றங்களை அம்பலப்படுத்தியும் அதற்கான ஆதாரங்களை பாராளுமன்றக் கமிற்றி வெளியிட்டும் கூட, ’பாதிக்கு பாதி செத்தார்களா என்ன? 0.023 சதவிகித இறப்பு எங்கே?’ எனக் கேட்டு அதற்கு கூட்டுக் குற்றவாளிகளான ஐசிஎம்ஆர் அறிக்கையையே ஆதாரமாகக் கொடுக்கும் உங்களின் ஆய்வு நேர்மை புல்லரிக்க வைக்கிறது. அறிவியலை வெறும் கடவுள் நம்பிக்கையைப் போல தரம்குறைக்கும் உங்களுக்கு medical ethics என்று ஒன்றுள்ளது பற்றி குறைந்த பட்ச அறிவாவது உண்டா? ethical clearance certificate ஐ ஆய் துடைப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் ஆய்வாளர்கள், இவர்களின் புரவலர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பத்திரிகைகள், அறிவுஜீவிகள் போன்ற எண்ணிலடங்கா மானுட விரோத சக்திகளின் வலைபின்னல் தான் இன்றைய ஆய்வுலகம் என்பது ஒரு பாமரனுக்குக் கூட விளங்கும் போது, அரைகுறையாக விஷயங்களைப் புரிந்து கொண்டு அறிவியலை வெறும் கடவுளாக்கி வழிபடும் உங்களைப் பார்க்க உண்மையிலேயே சற்றுப் பரிதாபமாகக் கூட இருக்கிறது. நான்காவது தொழிற்புரட்சியின் நாயகர்கள் தயாரித்து வைத்திருக்கும் டிஸ்டோபியாவில் சைக்கிள் மிதிக்கும் வேலை உங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

        • [1]சிந்தனை செய் அவர்களே !, மைக்ரோசாப்ட் நிறுவனம் Rosetta Biosoftware என்ற மென்பொருளை தனது Microsoft Amalga Life Sciences platform உடன் இணைக்கும் போது அது பெரும் புதிய அம்சங்களை அழகாக நீங்கள் வினவு வாசகர்களிடம் இருந்து மறைக்கும் மர்மம் என்ன ? மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறும் வாக்குமூலம் என்ன சொல்கிறது என்று அவர்கள் வார்த்தைகளிலேயே பார்க்கலாமா?

          மரபணு, ஜீனோமெடிக், metabolomic மற்றும் proteomics தகவல்களை இந்த Rosetta Biosoftware மென்பொருள் மூலம் நிர்வகிக்கும் திறமையை மைக்ரோசாப்ட் பெறுவார்கள் என்பதாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்திகளே அந்த மென்பொருள் மூலம் மனித மரபணுக்கள் உடன் இந்த மென்பொருள் உறவாட முடியும் என்ற நிலையில் அதனை நீங்கள் சாதாரண hospital management system அளவுக்கு சிறுமை படுத்தி பேசுவது ஏன்?

          Microsoft Corp. on June 1, 2009 announced that it has signed an agreement with Merck & Co. Inc. to acquire certain assets of Rosetta Biosoftware, a business unit of Rosetta Inpharmatics LLC, a wholly owned subsidiary of Merck & Co. Inc. The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics data management software into the Microsoft Amalga Life Sciences platform for enhanced translational research capabilities. In addition, Microsoft will establish a strategic relationship with Merck to enhance the Amalga Life Sciences platform to meet emerging pharmaceutical research needs.

          //அடடா. சரி போகட்டும். அவர் வேண்டியதை செய்திருப்பார். எனவே அதை விற்று விட்டார் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. மருத்துவ பதிவேடுகள் கையாளும் மென்பொருள் நீங்கள் கூறியது போல எவ்வாறு eugenics மருந்துகளை உருவாக்க வல்லது என விளக்க முடியுமா திரு.செந்தில்குமரன்?//

          • திரு. செந்தில்குமரன்,

            எந்த செய்தியையும் நான் மறைக்கவில்லை. நீங்கள் தான் முதலில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தர வேண்டும்.

            genomic, metabolic and proteomics data management incorporation செய்ய முடியும் என்று தான் கூறப்பட்டு உள்ளது. gene எடிட்டிங், metabolism changes என்றெல்லாம் எங்கும் இல்லை. CT ஸ்கேன், ரத்த சோதனை, எக்ஸ் ரே, MRI போன்ற பரிசோதனை ரிப்போர்ட் போல, இந்த மாதிரி சோதனை அறிக்கைகளும் இப்போது இந்த மென்பொருளால் கையாள முடியும் என்பது தானே இங்கு புரிகிறது?

            இந்த மென்பொருளை வாங்கி இணைத்த உடன் எப்படி ஒரு record keeping software, நீங்கள் கூறும் எல்லாதையும் செய்யும் திறன் பெற்று விட்டது என்று முதலில் நீங்கள் ஆதாரம் கொண்டு நிரூபிக்கவும். அதற்கு பிறகு அடுத்த படிக்கு செல்வோம்.

            • சிந்தனை செய் அவர்களே, மீண்டும் பாதி உண்மையை உங்களின் புத்திசாலி தனத்தை கொண்டு மறைத்துவிட்டு உங்கள் அறிவை மைக்ரோசாப்ட்க்கு குத்தகைக்கு கொடுத்து உள்ளீர்கள்! தங்களின் மேலான கவனத்திற்கு….. “data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்… மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தியை மீண்டும் கவனத்துடன் படியுங்கள் நண்பரே….

              // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

              மீண்டும் அந்த மென்பொருளை hospital management software அளவுக்கு சிறுமை படுத்தியுள்ளீர்கள்!

        • [3] சிந்தனை செய் அவர்களே ,

          உலக மக்கள் தொகையை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையில் குறைக்க முடியும் என்று கூறும் பில் கேட்ஸ் அவர்களை நீங்கள் தான் ஆதரிகிண்றீர்கள்! 700 கோடி மக்கள் தொகையை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என்றால் 70 முதல் 105 கோடிகள் வரையில் குறைக்கவேண்டும்? அது எப்படி new vaccines, health care, reproductive health services மூலம் சாத்தியமாகும் என்று விளக்குங்கள்…! குறிப்பாக new vaccines மூலம் அது எப்படி சாத்தியம் ஆகும் என்று விளக்குங்கள்…

          இன்றைய நிலையில் உலகின் பிறப்பு இறப்பு விகிதம் என்னவென்றால்….
          Birth Rate : 131.4 million births per year
          Death Rate: 55.13 million people death per year

          உலக மக்கள் தொகையை உங்கள் பில் கேட்ஸ் கூறுவது போன்று குறைக்கவேண்டும் என்றால் என்ன செய்யப்போகின்றீர்கள்! ? மக்களை கொன்று இறப்பு விகிதத்தை அதிகரிக்கப்போகின்றீர்களா? அல்லது ஏழை நாடுகளில் மக்களை உங்கள் தடுப்பூசி மருந்துகள் மூலம் மக்களை நிரந்தர மலடாகப் போகின்றீர்களா? அதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைக்கபோகின்றீர்களா? எப்படி என்று விளக்கலாமே நீங்கள் ! இறப்பை விட பிறப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது… என்ற நிலையில் 70 முதல் 105 கோடி மக்களை (10% to 15%) உலகில் இருந்து நீக்க உங்கள் பில் கேட்ஸ் என்ன திட்டங்களை வைத்து உள்ளார் என்று விளக்குங்கள் !

          • [5] சிந்தனை செய் அவர்களே ,

            உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் எல்லாம்(குடும்ப கட்டுபாடு திட்டத்தை தவிர்த்து) மக்கள் தொகையை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர பில் கேட்ஸ் கூறுவது போன்று மக்கள் தொகையை 15% அளவுக்கு குறைக்க எப்படி முடியும்? குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, ஆனால் மக்கள் தொகை பொருக்கத்தை கட்டுக்குள் தான் வைத்து இருக்கும்! உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் மற்றும் தடுப்பூசிகள் மக்கள் இறப்பு விகிதத்தை குறைக்க தானே செய்யும்? அப்படி எனில் மக்கள் தொகை அதிகரிக்க தானே செய்யும்? ஆனால் இவற்றின் மூலம் மக்கள் தொகையை குறைக்க முடியும் என்று பில் கேட்ஸ் கூறுவதின் கொலை வெறி( தொழில் நுட்ப ) உள்நோக்கத்தை நான் விளக்கியுள்ளேன். அதனை நீங்கள் ஏற்காவிட்டால் பில் அவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

            • Sources தர மறந்து விட்டேன். அவை இங்கே:

              https://web.archive.org/web/20091221114019/http://www.searo.who.int/LinkFiles/Family_Planning_Fact_Sheets_india.pdf

              https://scholarspace.manoa.hawaii.edu/bitstream/10125/3471/1/NFHSsubjrpt002.pdf

              http://serendip.brynmawr.edu/local/scisoc/environment/seniorsem03/Overpopulation_in_India.pdf

              From Population Control to Reproductive Health: Malthusian Arithmetic by Mohan Rao. Published by Sage Publications. இந்த நூலில் ராவ் மார்சிய கண்ண்நோடத்தில் இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு முயற்சி பற்றி பார்க்கிறார். அதில் இருந்து ஒரு வாகியம் மட்டும்: “Issues of health have not received the central attention they ought to have. Not only has the health of the population not been of central concern, but also the vision of health has been severely diminished by a sort of technological hubris. The result is that the entire public health
              infrastructure, neglected, starved of funds, almost dysfunctional, has been suborned for family planning” (p 14-15)

              அதாவது குடும்ப கட்டுப்பாடு மட்டும் போதாது, உடல் நலம் பற்றிய நோக்கமும் வேண்டும் என்கிறார். இது பெரும்பாலும் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும்,acedemic circle களில் படிக்க வேண்டிய ஒரு நூல் என பரிந்துரைக்கபட்டு உள்ளது.

              • சிந்தனை செய் அவர்களே, என்னுடைய கேள்வி என்ன? ஆனால் நீங்கள் எதனை பற்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள்? மீண்டும் யோசித்து பதில் அளியுங்கள்….. உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் எல்லாம்(குடும்ப கட்டுபாடு திட்டத்தை தவிர்த்து) மக்கள் தொகையை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர பில் கேட்ஸ் கூறுவது போன்று மக்கள் தொகையை 15% அளவுக்கு குறைக்க எப்படி முடியும்? குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, ஆனால் மக்கள் தொகை பொருக்கத்தை கட்டுக்குள் தான் வைத்து இருக்கும்! உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் மற்றும் தடுப்பூசிகள் மக்கள் இறப்பு விகிதத்தை குறைக்க தானே செய்யும்? அப்படி எனில் மக்கள் தொகை அதிகரிக்க தானே செய்யும்?

                • //குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, //

                  என்ன ஒரு கண்டுபிடிப்பு!!! தற்போதய மக்கள் தொகையை குறைக்காது. சரி தான். பிறப்பு விகிதத்தை குறைப்பது தானே இங்க நோக்கமே. முதலில் பில் கேட்ஸ் மக்கள் தொகையை 15% குறைக்க வேண்டும் என்று கூறுகிறார் என்னும் பிதற்றலை நிறுத்தவும். மீண்டும் வேண்டுமானால் quote செய்கிறேன்:

                  //The world today has 6.8 billion people. That’s heading up to about nine billion. Now if we do a really great job on new vaccines, health care, reproductive health services, we could lower that by perhaps 10 or 15 percent.//

                  அதாவது ஆறு புள்ளி ஐந்து பில்லியன் என்பது ஒன்பது பில்லியன் என ஆக போகும் கணக்கில், உள்ள 2.2 பில்லியன் எண்ணிகையில் 15% குறைக்க முடியும் என்கிறார். பெருக இருக்கும் மக்கள் தொகையை தான் குறைக்க முடியும் என்று சொல்கிறாரே தவிர இருக்கும் மக்கள் தொகையை அல்ல. தயவு செய்து இந்த misinterpretation செய்வதை நிறுத்தவும். என்னை தான் நம்ப வேண்டும் என்பது இல்லை. ஆங்கிலம் தெரிந்த எவரிடமும் இதற்க்கு அர்த்தம் என்ன நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

                  • உங்களிடம் தனிபட்ட விதத்தில் பில் கேட்ஸ் அவர்கள் 9-6.2= 2.2 பில்லியனில் (220 கோடிகளில்) பத்து முதல் பதினைந்து சதவிதம் மக்கள் தொகையை குறைக்கமுடியும் என்று கூறினார் என்றால் எனக்கு மகிழ்ச்சி தான்!

                    ஆனால் பாருங்கள் 2.2 பில்லியன் என்று எங்கே அந்த TED conferenceல் கூறினார் என்று விளக்கவும்…

                    • பக்கத்துல விவேகானந்தா எதாவது இருந்தா போய் அர்த்தம் கேட்டுட்டு வாங்க. உங்களுக்கு வசதியா வாக்கியம் மேலயே இருக்கு.

                      இன்னும் இல்லாவிட்டால் grammar பாடம் தருகிறேன். ஒரு வாக்கியத்தை subject எது என்பதை முதலில் பார்க்கவும்.

                      We had three people in our group. We added two more. One of them is John.

                      இதில் ஜான் இரண்டாவதாக வந்த இருவரில் ஒருவர் என்பது தெளிவாக தெரிகிறது. இதே தான் பில் கேட்ஸ் சொன்ன வாக்கியமும். நீங்கள் எதிர்பார்க்கும் அர்த்தம் வர வேண்டும் என்றால் வேறு மாதிரி சொல்லி இருக்க வேண்டும்.

                      E.G:

                      The world today has 6.8 billion people. Thats heading upto 9 billion. Now if we do a great job, we can reduce the original population by 15%.

                      முதலில் கூறி உள்ள எண்ணிகையை பற்றி பேச போகிறேன் என்னும் போது subject திரும்பவும் மாற வேண்டும். ஏனென்றால் heading upto 9 billion என்ன சொன்ன போது, subject of his speech மாறி விட்டது. அந்த ஏறும் எண்ணிக்கை தான் அடுத்த வாக்கியத்தின் subject. இதை தனியாக விளக்க வேண்டியது எல்லாம் இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு போதுமானது.

                    • விவேகானதாவில் சரியாக படியுங்கள் சிந்தனை செய் சாமி! We added two more! க்கும் Thats heading upto 9 billion. என்பதுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதாவது புரிகின்றதா? முடிந்தால் பில் அவர்களின் வாக்கியத்தை அப்பிடியே நேரடியாக மொழி பெயர்க்க முயற்சிக்கவும்….உங்களிடம் அவர் தனிபட்ட முறையில் கூறியதனை தவிர்த்து அவர் பொதுவாக அனைவரிடமும் கூறும் விசயத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துகொள்ளவும்!

                      “”இன்று உலகம் 6.8 பில்லியன் மக்களை கொண்டு உள்ளது. அது 9 பில்லியன் அளவுக்கு செல்லக்கூடும். இப்போது நாம் புதிய தடுப்பு மருந்து, சுகாதார, இனப்பெருக்க சுகாதார சேவைகள் மீது ஒரு நல்ல வேலை செய்தால், நாம் ஒருவேளை 10 அல்லது 15 சதவீதம் அதனை குறைக்க முடியும்.””” இது தான் அவர் கூறிய விஷயம்….

                      இதில் எங்கு 2.2 பில்லியனில் பத்து முதல் பதினைந்து சதவிதம் என்று அவர் கூறுகின்றார் அறிவு முற்றிய நண்பரே?

          • //உலக மக்கள் தொகையை உங்கள் பில் கேட்ஸ் கூறுவது போன்று குறைக்கவேண்டும் என்றால் என்ன செய்யப்போகின்றீர்கள்! ? //

            முதலில் உங்கள் பிதற்றல்களை நிறுத்துங்கள். எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு என்று கிடையாது. மக்கள் தொகை பெருக நிறைய காரணங்கள் உண்டு. சரியான மருத்துவ வசதி இல்லாததால் குழந்தைகள் நலமாக இருக்குமா என தெரியாததால், வறுமை குறைய வேலைக்கு போக வேண்டும், ஆண் வாரிசு வேண்டும் என பல காரணங்களால் பல குழந்தைகள் பெறுவது எங்கும் நடப்பதே. இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை கொஞ்சம் புரட்டி பார்க்கவும். நாம் இருவர், நமக்கு இருவர் என்பதை மட்டுமே சொல்ல வில்லை. பெண்கள் நாட்டின் கண்கள், எனவும் தானே வந்தது? பெரியாரும் இதை தானே ஆதரித்தார்? அவர் என்ன குடும்ப கட்டுப்பாடு மட்டும் போதும் என சொன்னாரா? இல்லை பெண் கல்வி முக்கியம், அவசியம் என சொன்னாரா? குடும்ப கட்டுப்பாடு முதல் படி. பிறகு பெண்களுக்கு சுய சார்பு, கல்வியறிவு போன்றவை அத்துடன் தேவை. இது எல்லாம் இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு எப்போது, என்ன ஆகும் எனும் அச்சம் இருந்து கொண்டே இருந்தால் பிறப்பு விகிதம் ஏறிக்கொண்டே தான் போகும்.

            நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து பெண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு பற்றி தெரியும். ஆனால் தங்களுக்கு வேண்டிய வழிமுறைகள் கிடைக்காமல் சுமார் 76% பெண்கள் உள்ளனர். இது கிடைக்க வேண்டும். ஆனால் இன்றும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு, அறுவை சிகிச்சை இல்லாமல் வேண்டும் என்றால் morning after pill தான். வேறு ஏதும் இல்லை. எனவே எளிய, எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியும், non-invasive குடும்ப கட்டுப்பாடு முறைகள் அவசியம்.

            சரி இதில் தடுப்பூசி, மருத்துவ சேவைக்கு என்ன வேலை? ஏதோ nefarious intent என்று நீங்கள் கூறலாம். முதலில் இரு வேறு சம்பந்தமில்லாத நோக்கத்துக்கு ஒரே pipeline பயன்படுத்தலாம். எளிதாக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். என்ன தான் நாம குடும்ப கட்டுப்பாடு அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தாலும், அதை எப்படி உபயோகிப்பது, ஏன் உபயோகிக்க வேண்டும், ஏன் இரண்டு குழந்தையுடன் நிறுத்து கொள்வது நல்லது, வறுமையில் இருக்கும் மக்களுக்கு எப்படி வருமானம் பெறுவது, அவர்கள் வாழ்கை தரத்தை உயர்த்துவது, குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசாய தேவைகள் கிடைக்க செய்வது, தடுக்க கூடிய நோய்கள் மூலமாக அடுத்த தலைமுறை பாதிப்பு அடையாமல் இருப்பது, போன்ற அனைத்தும் செய்ய வேண்டும். இந்தியாவில் இதுவரை இருந்த முறை vertical approach. அதாவது குடும்ப கட்டுப்பாடு பற்றி மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது. இந்த முறை முதல் கட்டத்துக்கு ஒத்துவரும். ஆனால் நீண்ட கால தீர்வு அல்ல. பல காரணங்களால் பல குழந்தைகள் பெற்று கொள்வார்கள் என்றால், அதற்க்கு பல முகப்பட்ட தீர்வு தேவை.

            Population control எனும் வழிமுறை ஒத்து வராது. Reproductive health மீது focus வேண்டும். இது வரை எண்ணிக்கை குறைத்தல் மீது நம் குடும்ப கட்டுப்பாடு முறை அக்கறை செலுத்தி வந்தது. இப்போது இந்த குறைந்த எண்ணிகையை, சிறந்த மக்களை உருவாக்குவதில் முயற்சி வேண்டும். அதவாது நாம் பிறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைத்தாலும், நோய்கள் மூலம் பாதிப்பு, அதிக குழந்தை இருந்தால் குடும்பத்துக்கு நல்லது, குழந்தை தொழிலாளர், பெண் கல்வி போன்றவை இல்லாமல் ஜனத்தொகை குறையாது. இதில் மருத்துவ நலம் எவ்வளவு முக்கியம் என நான் விளக்க வேண்டியது இல்லை. எனவே தடுக்க கூடிய நோய்களுக்கு தடுப்பூசி இருக்கும் போது அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக இருக்கும். We can reduce the number of children being born. But we need to focus on improving the quality of their life too. போலியோ, அம்மை, மலேரியா, காலரா மற்றும் தொற்று நோய்கள் மூலம் இறந்த குழந்தைகள் விகிதம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அதில் தடுப்பூசி பங்கு எவ்வளவு முக்கியம் என்பது உலகம் அறிந்த விஷயம். என் அப்பா, தாத்தா தலைமுறையில் போலியோ தொற்று சாதாரணம். இன்று போலியோ இந்தியாவில் ஒழிக்க பட்டு விட்டது. எந்த குழந்தையும் காலம் முழுக்க கால் சூம்பி, பாதி உடல் பாதித்து இருக்க வேண்டியது இல்லை. இதற்க்கு தான் தடுப்பூசிகள் தேவை. Quality of life முன்னேற்றுவதில் அவற்றுக்கு பெரும் பங்கு உண்டு.

            • சிந்தனை செய் அவர்களே, ஆமாம் இந்த வினவு கட்டுரையோ அல்லது நானோ தடுப்பூசிகளை முற்றிலுமாக புறகணித்து குறை கூறியதாக ஏன் நினைகிண்றீகள்? அங்கே அப்படி பட்ட செய்திகள் வந்து உள்ளன…? பிசச்ச்னைக்குரிய தடுப்பூசிகளை தானே ஆதாரதுடன் அம்பல படுத்தி யுள்ளோம்! குறிப்பாக பில் பவுண்டேசன் மற்றும் merck நிறுவன வர்த்தக நலன்களுடன் வெளிவந்து உள்ள தடுப்பூசிகளை தானே ஆதாரதுடன் அம்பல படுத்தி யுள்ளோம்!

              உங்களின் நீண்டநெடிய விளக்கத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பயன் படும் என்ற சங்கதியும் , குழந்தைகளின் இறப்பை தடுக்க தடுப்பூசிகளும் பயன்படும் என்ற விஷயம் தான்முன் நிற்கின்றதே தவிர பில் கேட்சின் வாக்குமுலம் படி மக்கள் தொகையை எப்படி 70 கோடி முதல் 105 கோடி குறைக்க போகின்றீர்கள் என்ற விசயத்துக்கு எந்த விளக்கமும் இல்லை….

              • நீங்க ஒரு ஆணியும் புடுங்கல. உண்மையை திரித்து கன ஜோராக clickbait எழுதுகிறீர்கள். அவ்வளவு தான். உங்க முதல் accusationகு நான் கேட்ட கேள்வியே பதில் இல்லாம நிக்குது. இதுல என்னத்த நிரூபிசீங்க?

                மீண்டும் வேண்டுமானால் கேட்கிறேன். ஒரு record keeping மென்பொருள், மற்ற அனைத்து மருத்துவ அறிக்கையை போல genomics data கையாளும் வசதி பெற வேறு ஒரு நிறுவனத்தின் மென்பொருளின் சில பகுதிகள் வாங்கி இணைக்க பட்டன. அதனால் அது எப்படி eugenics vaccine உருவாக்கும் திறன் பெற்றது? குறைந்த பட்சம் அந்த மென்பொருளால் இதை செய்ய முடியும் என்பதற்கு ஒரு வீடியோ டெமோ அல்லது screenshot இருக்கிறதா? இல்லாவிட்டால் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எப்படி அதை உண்மை என கூறுகிறீர்கள்?

                • இதற்கான பதிலை தான் முன்பே கூறியுள்ளேனே! படிக்கவில்லையா? சிந்தனை செய் அவர்களே, மீண்டும் பாதி உண்மையை உங்களின் புத்திசாலி தனத்தை கொண்டு மறைத்துவிட்டு உங்கள் அறிவை மைக்ரோசாப்ட்க்கு குத்தகைக்கு கொடுத்து உள்ளீர்கள்! தங்களின் மேலான கவனத்திற்கு….. “data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்… மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தியை மீண்டும் கவனத்துடன் படியுங்கள் நண்பரே….

                  // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

                  மீண்டும் அந்த மென்பொருளை hospital management software அளவுக்கு சிறுமை படுத்தியுள்ளீர்கள்!

                  • அய்யா அறிவு ஜீவி,

                    //data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்//

                    மென்பொருள் பற்றி தெரியா விட்டால் பேசாமல் இருந்து விடுங்கள். Data management software என்பது பல தர பட்ட dataவை ஒரு இடத்தில (database, cloud, etc.) வைத்து, பின்பு அதை வேண்டும் போது காட்ட வல்லது. அவ்வளோ தான். திரும்பவும் என்னை நம்ப வேண்டாம், இணையதிலயே பாருங்கள். இல்லாவிட்டால் data management செய்யும் யாரையாவது கேளுங்கள்.

                    //Data management software (DMS) is software that takes in data and converts various kinds of data into a single storage container, or aggregates diverse data into a consistent resource, such as a database. //

                    உதாரணமாக ஒரு excel ஷீட் அல்லது database, வினவுக்கு ஒரு நாளைக்கு எந்த தேசத்தில் இருந்து எவ்வளவு ஹிட்ஸ் வருகிறது எனும் data வைத்து கொள்ள முடியும். அந்த மென்பொருள் ஒரு தேசத்தில் இருந்து அதிக ஹிட் வரும் படி எல்லாம் செய்ய முடியாது. அதே போல தான் ஒரு மெடிக்கல் data management மென்பொருளும். உதாரணமாக ஒரு கால் x-ray சேமித்து வைத்து, தேவை படும்போது டிஸ்ப்ளே செய்ய முடியுமே தவிர அதை கொண்டு புது கால் எல்லாம் அந்த மென்பொருளால் உருவாக்க முடியாது.

                    திரும்பவும் கேட்கிறேன். நீங்கள் கூறியது எல்லாம் அந்த மென்பொருளால் செய்ய முடியும் என நிரூபிக்கவும். ஒரு காணொளி, demo அல்லது screenshot ஒண்ணு கூட இல்லை. data management மென்பொருள் என்னமோ எல்லாம் வல்ல சக்தி கொண்டது மாதிரி பேசினால் மட்டும் அதற்க்கு அந்த சக்தி வந்து விடாது.

                    அப்புறம், நான் ஒண்ணும் சிறுமை படுத்தி எல்லாம் பேசவில்லை. அந்த மென்பொருளை பற்றி குறைந்த பட்சம் விக்கிபீடியா பக்கத்தை பார்த்து இருந்தாலே இது தெரிந்து இருக்கும்.

                    //Microsoft Amalga Unified Intelligence System (formerly known as Azyxxi) was a unified health enterprise platform designed to retrieve and display patient information from many sources, including scanned documents, electrocardiograms, X-rays, MRI scans and other medical imaging procedures, lab results, dictated reports of surgery, as well as patient demographics and contact information//

                    இது hospital management software தான் சார். இன்னும் சொல்ல போனால் இது patient record management software. நீங்க தான் இல்லாததை கற்பனை பண்ணி குழப்பிகறீங்க.

                    sources:

                    https://en.wikipedia.org/wiki/Microsoft_Amalga

                    https://www.techopedia.com/definition/11363/data-management-software-dms

                    • ஐயா அறிவு முற்றிய ஜீவியே…, ஆற அமர உங்கள் ஆசனத்தில் அமர்ந்து சிந்தியுங்கள்! எந்த Data management software ஆக இருந்தாலும் அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… சும்மா வினவின் இணைய தகவல் கிடங்கை (வெப்சர்வர்ஸ்பெஸ்) உங்கள் கிறுக்கல்கள் மூலமாக குப்பையாக மாற்ற முனையாதிர்கள்….ஒருவேலை இது நீங்கள் கூறுவது போன்று hospital management software ஆக இருந்தாலும் கூட அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… ஆனால் அது அப்படி பட்ட எளிய மென்பொருள் அல்ல என்பது மைக்ரோசாப்ட் நியூஸ் முலம் புலனாகின்றது…
                      // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

        • [4] சிந்தனை செய் அவர்களே, உங்களுக்கு கருத்தடை சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மக்களை மலடாக Grand Challenges in Global Health Program மூலமாக பத்து ஆய்வுகளை கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி அளித்து செய்து கொண்டு உள்ளதமைக்கும் இடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகின்றேன்.. கருத்தடை சாதனங்கள் பொதுவில் தற்காலிகமானவை… ஆனால் கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவியுடன் University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகள் மனிதர்களை நிரந்தரமாக மலடாக்கும் நோக்கம் கொண்டவை… என்னுடைய பின்னுட்டம் 5 ல் இதனை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன்… மனிதர்களை நிரந்தரமாக மலாடாகும் ஆய்வுகளுக்கு மைக்ரோசாப்ட் பவுன்டேசன் நிதி உதவிகளை கொடுப்பதன் நோக்கத்தை நீங்கள் தான் விளக்கவேண்டும் விரிவாக …!

          • // உங்களுக்கு கருத்தடை சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மக்களை மலடாக Grand Challenges in Global Health Program மூலமாக பத்து ஆய்வுகளை கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி அளித்து செய்து கொண்டு உள்ளதமைக்கும் இடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகின்றேன்.//

            நீங்கள் தான் விளக்குங்களேன். அந்த UNC ஆய்வாளர் கூறி இருப்பது என்ன என பார்த்து விடுவோமே:

            //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

            அதாவது, நிரந்தர மலட்டு தன்மை அல்ல. தற்காலிகம். பருப்பு வேகல செந்தில்குமரன். அவருடைய அராய்ச்சி கட்டுரையும் இதே தான் சொல்கிறது. அதுவும் கீழே உங்கள் பார்வைக்கு உள்ளது. இது தற்காலிகம் தான் என ஆய்வாளரே கூறுகிறார். ஆய்வு செய்யும் அவருக்கு என்ன தெரியும் பாவம். இந்த ஆய்வு எப்படி நீங்கள் கூறியது போல

            //கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவியுடன் University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகள் மனிதர்களை நிரந்தரமாக மலடாக்கும் நோக்கம் கொண்டவை//

            என தான் நிரூபியுங்களேன். பிறகு கருத்தடை சாதனங்கள் பொதுவில் தற்காலிகம் என பிதற்றல்… சார் இன்று வரை condom தவிர்த்து ஆண்களுக்கு இருக்கும் ஒரே கருத்தடை முறை vasectomy. அது நிரந்தரம். குறைந்த பட்சம் விக்கிபீடியா பக்கம் பார்த்து இருக்கலாம். அதன் முதல் வரி:

            //Vasectomy is a surgical procedure for male sterilization or permanent contraception//

            பெண்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் வேண்டும் என்றால் இருப்பது இரண்டு முறைகள் தான். Birth control pills or morning after pill மற்றும் female condoms. திரும்பவும் சொல்றேன். கொறஞ்ச பட்சம் விக்கிபீடியா பக்கத்த படிச்சுட்டு வந்து பேசுங்க (உங்களுக்கு கஷ்டம் வைக்காம அதுவும் sourcesல இருக்கு). வடை நூல் நூலா வருது. மொதல்ல நீங்க உங்க logic jumpsகு விளக்கம் சொல்லுங்க. உங்கள் பதிவில் இருப்பது:

            // மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!//

            எப்படி சார் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு ஆய்வுக்கு நிதி அளித்தது, அவர் மக்களை மலடாக்கும் முயற்சி தான் என ஆணி தரமாக பேசுறீங்க? இந்த ஆய்வை கொண்டு மக்களை நிரந்தர மலடாக்க முடியும் என ஏதேனும் ஆய்வு முடிவுகள் உள்ளதா? இல்லை அந்த ஆய்வாளர் “எங்களுக்கு தற்காலிகம் பத்தாது. எங்கள் நோக்கம் நிரந்தரம்” என்று சொல்லி இருக்கிறாரா? இல்லையே. இந்த ஆய்வு கேட்ஸ் அமைப்பு நிதி அளித்தால் நிரந்தர மலட்டு தன்மை ஆய்வு தான் என நீங்கள் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் கூறுகிறீர்கள். பத்து முதல் பதினைந்து சதவீதம் குறைக்க முடியும் என கூறிய ஒரே வரி தான் அடிப்படை என்றால் மீண்டும் முதல் கேள்விக்கு செல்கிறோம். இந்த ஆய்வு தற்காலிகம் என்றே ஆய்வாளர், ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது நிரந்தரம் என்று எந்த அடிபடையும், ஆய்வும் இல்லாமல் எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?

            நீங்கள் செய்வதற்கு பெயர் circular reasoning. செந்தில் வாழைபழ காமெடி மாதிரி. இது தற்காலிகம் அல்ல, நிரந்தரம்? அதற்க்கு ஆதாரம்? பில் கேட்ஸ் கூறிய ஒரு வாக்கியம். சரி அவர் நிரந்தர மலட்டு தன்மை செய்ய முயல்கிறார் என்பதற்கு ஆதாரம்? இதோ இந்த ஆய்வுக்கு காசு கொடுத்து இருக்கிறார்! ஆனால் இது தற்காலிகம் என்று தானே அறிவியல் சொல்கிறது? இல்லை இது நிரந்தரம். ஆதாரம்? அவர் சொன்ன ஒரு வாக்கியம். அறிவியல் ஆய்வறிக்கை, ஆராய்ச்சி கட்டுரைலாம் எதுவும் இல்லை. நல்ல அறிவியல் approach சார்.

            Sources:

            https://rbej.biomedcentral.com/articles/10.1186/1477-7827-10-7

            http://www.med.unc.edu/www/newsarchive/2010/may/unc-researchers-receive-100-000-grand-challenges-exploration-grant-to-develop-male-contraceptive

            https://en.wikipedia.org/wiki/Birth_control

            https://en.wikipedia.org/wiki/Vasectomy

            • சிந்தனை செய் அவர்களே,University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்…. மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!

              • திரு. செந்தில்குமரன், நான் கூறியதற்கு ஆதாரமாக அவர் பேட்டியே கொடுத்து உள்ளேன். மீண்டும் வேண்டுமானால் இங்கே:

                //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

                அவர் இந்த ஆய்வின் மூலம் என்ன செய்ய முயல்கிறார் என தெளிவாகவே சொல்லி விட்டார். இனிமேல் நீங்கள் தான் உங்களின் கீழ் உள்ள கூற்றுக்கு, ஆதாரம் தர வேண்டும்.

                //University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்….//

                அடுத்து, மொதல்ல ஆய்வை ஒழுங்கா படிச்சு தொலைங்க. எலிகளில் அதிக பட்சம் இரண்டு வாரம் வரை மட்டுமே இது தாக்கு பிடிகிறது. நீங்கள் சொன்ன மாதிரி ஆறு மாசம் எல்லாம் இல்லை.

                //In conclusion, our results demonstrate that a short exposure to therapeutic ultrasound is an effective method for depleting testes of spermatogenic cells and reducing epididymal sperm reserves within two weeks of treatment. //

                நான் சொன்னதற்கு ஆதார பூர்வமாக quote மற்றும் ஆய்வு அறிக்கை கொடுத்து இருக்கிறேன் சார். உங்கள் சைடு ஆதாரம் எப்ப? எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துகோங்க. ஆனா தயவு செய்து அடுத்த பதிவில் ஆதாரம் சமர்பிக்க வேண்டுகிறேன். உங்க natural news குப்பை இல்லை. Reputed அண்ட் verifiable sources தரவும். இந்த குப்பை எப்போதோ debunk செய்யப்பட்டு விட்டது. அதற்க்கு மேல திரு. பொன்னம்பலம் மற்றும் திரு.கிருஷ் தரவுகள் தந்து உள்ளனர். அதையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

                • இந்த ஆய்வில் தலைமை ஏற்ற Dr. James Tsuruta அவர்களின் வாக்குமுலம் நீங்கள் கூறுவதற்கு எதிராக உள்ளதே நண்பரே!

                  During the sessions, the testes were placed in a cup of saline to provide conduction between the ultrasound transducer and skin. The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return. But they knew it was effective: microscopic examination showed dramatic changes after just two weeks. Normally, testes are full of many layers of cells developing into sperm, but now the tubes of the testes were almost empty. “Sperm production is very robust; this ensures the survival of a species. It’s really difficult to find a way to turn off the production of sperm, but ultrasound seems to do the trick,” Dr. Tsuruta continues. “There is something special about heating with ultrasound – it caused 10 times lower sperm counts than just applying heat.”

                  See this…. “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.””

                  https://srxawordonhealth.com/tag/dr-james-tsuruta/

                  • Dr. James Tsuruta அவர்களின் வாக்குமுலத்தை மிக சரியாகத்தான் மொழி பெயர்ப்பு செய்து உள்ளேன்…
                    “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.””

                    “University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்”

                    • இதை தான் உண்மையை திரிப்பது என்று சொல்கிறேன். ஆய்வு முடிவு inconclusive என்றால் அதை தானே கூற வேண்டும். பிறகு எப்படி மலட்டு தன்மை தான் என கூற முடியும். இது தற்காலிக மருத்துவ முறையாக தான் பார்க்கிறோம் என Dr. Tsuruta கூறி உள்ள போது, எந்த ஆதாரம் இல்லாமல், நீங்கள் உண்மையை திரிப்பது ஏன் சார்?

                      அப்புறம் நீங்க லிங்க் செய்த கட்டுரையிலயே இந்த செய்தி இருக்கிறது.

                      //The method worked well – so well that he continued using it for nearly 12 years.
                      But Dr. Jenks knew that being a pioneer, there might be surprises. In 2010 he discontinued the heating, wondering how his system was doing. By two months later the sperm numbers seemed to be climbing back up, and he thought he was regaining fertility as in the 2-year studies.//

                      அறிவியல் ஆய்வு முடிவை உள்ளது உள்ள படி தானே பேச வேண்டும். ஒரு ஆய்வாளர் சொல்லவே இல்லாத முடிவை, அவர் எங்கள் ஆய்வின் நோக்கம் இதற்க்கு நேர் எதிரானது என கூறும் போதும் நீங்கள் புடிச்ச முயலுக்கு மூணு கால் என நிற்பது ஏனோ?

                      மீண்டும் கேட்கிறேன். இது நிரந்தரம், இதை நிரந்தர மலட்டு தன்மை உருவாக்க தான் முயல்கிறோம் என அந்த ஆய்வோ, அல்லது ஆய்வாளரோ எங்கேனும் கூறி இருக்கிறாரா? இல்லை பில் கேட்ஸ் பணம் அளித்த போது இதை நிரந்தரம் ஆக்குங்கள் என கூறி இருக்கிறாரா? ஏதேனும் ஆதாரம் தரவும்.

                      கடைசியாக, பில் கேட்ஸ் அளித்த இந்த நிதி ஆய்வின் மிக சிறிய பங்கு எண்ணும் விஷயம் தரவில் இருந்தும், அதை பற்றி மூச்சு விடாதது ஏனோ?

                      //Tsuruta notes that the initial idea to re-examine the effects of ultrasound on sperm production came from another private foundation. “The financial support of the Parsemus Foundation was instrumental in forming a team to study ultrasound’s effect on the testis. Our pilot studies would not have been possible without the support of Elaine Lissner (Parsemus), David Sokal (Family Health International), Michael Streicker (Integrated Laboratory Systems) and Michael O’Rand (UNC-CH)//

                      இப்படி ஆய்வில் ஒரு மிக சிறிய பங்கு தான் பில் கேட்ஸ் வழங்கிய நிதி என்னும் உண்மையை மறைத்த காரணம் என்ன சார்? இந்த ஆய்வு பில் கேட்ஸ் இல்லாவிட்டாலும் நடந்து இருக்கும் என இருக்கும் போது என்னமோ உலகை அழிக்க திட்டத்தின் ஒரு பகுதி என புருடா விடுவது ஏனோ?

                      Source:

                      http://www.med.unc.edu/www/newsarchive/2010/may/unc-researchers-receive-100-000-grand-challenges-exploration-grant-to-develop-male-contraceptive

                    • சிந்தனை செய்…, சரியான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் தேவையில்லாத பதில் மொக்கைகளை வினவில் எழுதிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே…! கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்பதனை மலட்டுதன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று மொழி பெயர்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா? மலட்டு தன்மை வந்தமையால் தானே கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.!

            • இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறை தற்காலிகம் என்று அந்த ஆய்வின் தலைவர் ஆய்வுகள் மூலம் நிருபிக்காத வரையில் அது எப்படி தற்காலிக கருத்தடை முறை என்று நீங்கள் அறுதியிட்டு கூறுகின்றீர்கள் நண்பரே? Dr James Tsuruta said : “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times” அப்புறம் எப்படி நீங்கள் இந்த முறையை தற்காலிகம் என்று கூறுகின்றீர்கள்?

              //இது தற்காலிகம் என்று தானே அறிவியல் சொல்கிறது? //

  8. Completely agreed with “சிந்தனை செய்” comments, I have respect on vinavu for its unflinching political criticisms but vinavu’s articles on vaccination, scientific medicines are baseless conspiracy theories. Too sad vinavu’s has fallen for it, it makes me critically examine you political articles too.!

  9. https://www.nytimes.com/2016/06/14/world/what-in-the-world/chinas-call-to-young-men-your-nation-needs-your-sperm.html

    சென்ற வருடம் சீனா அரசு ஒரு விளம்பரம் கொடுத்தார்கள், சீன இளைஞர்கள் விந்து தானம் செய்ய வேண்டும் என்று, அதற்காக 1000 டாலர் பணம் ஐபோன் என்று சமூகவலைதளத்தில் சலுகைகளை அறிவித்தார்கள் இதை பார்த்து வந்த இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் தரமற்ற விந்து மற்றும் நோய் இருந்ததால் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

    இத்தனைக்கும் விந்து தானமும் ரத்த தனமும் ஒன்றே என்று வேறு சீன அரசு விளம்பரம் செய்து இருக்கிறது.

    என் கேள்வி எல்லாம் சீன அரசு பில் கேட்ஸ் எல்லாம் உள்ளே விடவில்லை என்று சொல்லிக்கொள்கிறீர்கள் பிறகு எப்படி சீன இளைஞர்கள் மலடாக மாறினார்கள் அதற்கு காரணம் என்ன என்பதை வெளிப்படையாக வினவால் பேச முடியும்மா ?

  10. @சிந்தனை செய், உங்களின் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை!? வரவேற்கிறேன். ஆனால் கட்டுரையின் மைய விவாதப் பொருளான ’நான்காவது தொழிற்புரட்சி’ பற்றி தொடாமலே நீங்கள் அள்ளி வீசும் அறிவியல் சிந்தனைகள் ஒரு விதத்தில் உங்களின் பாமரத்தனத்தை பறைசாற்றுகிறது. இது போன்ற அறிவியல் சிந்தனைகளை இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன்.
    1. கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது சிபிஎம் கட்சியின் நிலைபாடு – அணுவுலை அறிவியல் பூர்வமானது. இதை எதிர்ப்பவர்கள் அறிவியலுக்கு – அறிவுக்கு எதிரானவர்கள். நாமும் அணுவுலை அறிவியலின் கொடை என்பதை ஒன்றும் மறுக்கவில்லை. ஆனால் சோத்துக்கு இலாட்டரி அடிக்கும் இந்தியாவில் முக்குக்கு முக்கு வைக்கப்படும் அணுவுலைகள், மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதோடன்றி நாட்டை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக்குகிறது என்பதால் தான் நாம் அதை எதிர்க்கிறோம். இது இந்த (போலிக்) கம்யூனிச விஞ்ஞானிகளுக்குத் தெரியாததல்ல. ஆனால் உலகமயகாலகட்டத்தில் குட்டிமுதலாளித்துவக் கட்சியாக சீரழிந்துள்ள சிபிஎம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
    2. மீத்தேன் எடுப்பதற்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருந்த போது ஒ,என்,ஜி,சி நிறுவனத்திற்கு ஆதரவாக சி,ஐ,டி,யு. மற்றும் எ,ஐ,டி,யு,சி கூட்டுக்குழுவினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கீழ்வேளூர் முன்னாள் எம்,எல்,ஏ மாலி, நாகை முன்னாள் எம்,எல்,ஏ மாரிமுத்து. நாகை முன்னாள் எம்,பி செல்வராஜ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். அங்கு பேசிய முன்னாள் எம்,எல்,ஏ மாலியோ, ‘’35 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒ,என்,சி,சி நிறுவனத்தில் கச்சா என்னை மட்டுமே எடுக்கப்படுகிறது, இதை வேண்டுமென்றே அம்பாணி, அதானி குடும்பங்களிடம் கையூட்டு வாங்கிகொண்டு மீத்தேன் ,ஷேல் கேஸ் எடுப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசி முடித்தார். பிறகு பேசிய மாரிமுத்துவோ, என்னை துரப்பன பணிகளை தடுத்ததன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதாப நிலைக்கு போயிருக்கின்றனர். பணிகளை முடக்குபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஒரே போடாக போட்டு முடித்தார். இறுதியாக பேசிய முன்னாள் எம்,பி செல்வராஜோ, ஒ,என்,ஜி,சி என்கிற பொதுத்துறை நிறுவனம் 35 ஆண்டுகளாக தங்களது துரப்பண பணிகளை செய்துவருகிறது எங்கும் நிலத்தடி நீர் குறைந்ததாக தெரியல, மீத்தேனை எதிர்ப்பவர்கள் விளைநிலங்களை தோண்டி ரால் குட்டைகள் அமைத்திருக்கின்றார்களே அவர்களை ஏன் எதிர்க்கவில்லை. இரால் குட்டைகளால் நிலத்தடி நீர் உப்பாக மாறிவருவது அவர்களுக்கு தெரியாதா? மீத்தேன் எதிர்ப்பாளர்கள் என்கிற பெயரில் ரிலையன்ஸ் போன்ற தனியார் கார்பரேட் கம்பனிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல் படுகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்று பேசி முடித்துவைத்தார் (http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=175016).
    இது போல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். டாஸ்மாக்கை எதிர்த்தால் தனிமனிதனுக்கு குடிக்க சுதந்திரமில்லையா எனக் கேட்பது; கல்வித்துறையில் உடாசிட்டி, கான் அக்காடமி, எடெக்ஸ் போன்ற ஏகபோக நிறுவனங்கள் மீப்பெரு இணையவழி திறந்தவெளி படிப்புகள் (MOOCs) மூலம் கல்வித்துறையே அடித்து நொறுக்கி கபளீகரம் செய்ய வருகிறது எனக் கூறினால், உடனே MOOCs கல்வித்துறைக்கான ஒரு வரப்பிரசாதம் என சொம்படிப்பது; நியூட்டிரினோவை ஆதரித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழி பிரசாரம்; ஆதார் வழங்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துவது… என சிபிஎம் பாணி அறிவியல் இயக்கங்களையும், செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
    இப்போது தங்களின் தடுப்பூசி குறித்த அறிவியல்(!??!) சிந்தனைகளுக்கு வருவோம்.
    முதலில் யதார்த்தம் எப்படி உள்ளது என்பதை பற்றி நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. ஏதோ, நாட்டில் சோஷலிச ஆட்சி நடப்பது போலவும், இந்த அரசு மக்களின் நலனுக்காக இராப்பகலாக சிந்தித்து செயல்படுவது போலவும் கருதிக் கொண்டு அறிவியலை?! விவாதிக்கிறீர்கள். ஆனால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலையையோ அல்லது அது ஏகாதிபத்தியங்களின், பன்னாட்டு நிறுவங்களின், தேசங்கடந்த தொழிற்கழகங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளதையோ பார்க்க மறுக்கிறீர்கள். இதற்கு காரணம் அரசியலற்ற அறிவியல் பார்வை தான்.
    நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் மண்ணும் மக்களும் எவ்வாறு சோதனை சாலை எலிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதற்கு, ஃபிலிப்பைன்ஸில் கோல்டன் ரைஸ் எனப்படும் மரபீனி மாற்றம் செய்யப்பட அரசியின் ஃபீல்ட் ட்ரயல் ஒரு மிகச் சிறந்த உதாரணம். க்ரீன் பீஸ் இதை எதிர்த்த போது நோபல் பரிசு பெற்ற 110 விஞ்ஞானிகள், ரிக் ரோட்ரிக் என்ற ஏகாதிபத்திய கைக்கூலியின் தலைமையில் உலகத்தின் அரசாங்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட கோல்டன் ரைஸை எதிர்ப்பவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சாகும் ஆப்ரிக்க ஆசியக் குழந்தைகளுக்கு எதிரானவர்கள் என்றும் அதனால் இவ்வெதிர்ப்பாளர்களை இரும்புக் கரத்தால் ஒடுக்க வேண்டுமென்றும் அறைகூவியிருந்தனர். கார்கில், மான்சாண்டோ, பேயர் போன்ற தேசாங்கடந்த ஏகபோக நிறுவங்களிடம் ஆய்விற்கு பரிசில் பெற்ற இவ்விஞ்ஞானிகளின் conflict of interest என்ன எனக் கேட்டு உலகம் முழுவதுமுள்ள அறிவுஜீவிகளால் இவர்கள் கண்டனத்துக்குள்ளாயினர். இது போல இந்திய குழந்தை நல மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள்க் கூட்டத்தில் டிசம்பர் மாதம் நடந்த அடிதடியும் சில உண்மைகளை வெளிக் கொணர்ந்தது. வருடாந்தர தடுப்பூசி காலண்டரில் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளான சில குழந்தை நல மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் ’வாக்சின் ஆஃப் குட் குவாலிட்டி’ சான்றிதழ் பெறாத தடுப்பூசிகளை திணித்தனர். இதை எதிர்த்துக் கேட்ட விபின் வசிஷ்டா என்ற குழந்தை நல மருத்துவரை பச்சையாக உதைத்தனர். அவர் கேட்டதெல்லாம் இவர்களின் conflict of interest தான்.
    நான்காவது தொழிற்புரட்சியின் ஆரம்ப கட்டமான இன்று நானோ மற்றும் உயிர் தொழில்நுட்பத்தின் exponential ஆன வளர்ச்சி மற்றும் அறிவியல் உலகத்தில் அறிவுசார் சொத்துக்களின் மீது ஏற்பட்டுள்ள ஏகபோகத்தால், ஐஐடி பேராசிரியர்களால் கூட ஒரு மருந்தையோ அறிவியல் தொழில்நுட்பத்தையோ cross verify செய்யக் கூட முடியாத சூழல் தான் நிலவுகிறது. ஒரு ஆர்கானிக் மாலிக்கூலை சும்மா பார்த்தால் சாதாரணமானதாகத் தான் தெரியும். ஆனால் அது உடலில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை பற்றிய அறிவு, ஒரு குறுகிய வட்டத்திற்குள் – அதைப் பற்றி குறிப்பிட்ட ஆய்வுகளை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் போது என்பதால் அறிவியல் விளக்கங்கள் மட்டுமே விஷயங்களைத் தெளிவுபடுத்தாது. ஏனென்றால் ஹிட்லர் கூட புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு நிறைய செலவிட்டார். concentration camp கள் கூட அறிவியல் ஆய்வுக்கூடங்களாகத் தான் செயல்பட்டன. அதனால் அறிவியல் தொழிற்நுட்பமானால் கூட அது யாரால், யாருடைய நலனுக்காக உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு வர்க்கக் கண்ணோட்டம் தேவை. அதற்கு வெறுமனே சிந்தனை செய்தால் மட்டும் போதாது.. கூடவே வினவவும் வேண்டும்.. வினை செய்யவும் வேண்டும்.. அது தான் அறிவியல் ஆய்வுமுறை..

    • அறிவியல் ஆய்வு முறை பற்றிய உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியதை நானும் ஒத்து கொள்கிறேன். அறிவியல் ஒரு கருவி மட்டுமே. உங்களிடம் சில கேள்விகள் எனக்கு உள்ளன. பதில் அளிக்க முடியுமா?

      1. கோல்டன் ரைஸ் field trialகு ஆதரவாக பேசிய ஆய்வாளர் மீது நீங்கள் வைக்கும் அதே குற்றச்சாட்டு எதிர் தரப்பின் மீது ஏன் வைக்கவில்லை? GMO எதிர்பால் பணம் பார்க்கும் கும்பல் GMO எதிர்க்கும் போது அங்கு conflict of interest இல்லையா? உதாரணமாக GMO எதிர்ப்பு கும்பல் பணம் தந்து, GMO கெடுதல் எனப்படும் ஆய்வு அறிக்கை அல்லது அதற்க்கு வாதாடும் ஆய்வாளர் conflict of interest இல்லையா? இல்லை இது அறிவியல் பூர்வமான எதிர்ப்பு என்றால் அதற்க்கு supporting research எங்கே? ஒரு ஆய்வு, அதன் முடிவுகள் பற்றி பேசும்போது அந்த ஆய்வு, அதன் data, analysis method மீது தானே முதல் கவனம் இருக்க வேண்டும்? ஒரு முடிவுக்கு வேண்டி ஆய்வுகள் செய்தால் அல்லது methodology, data ஆகியவற்றை fudge செய்திருந்தால் அதை மிக, மிக எளிதாக நிரூபிக்க முடியுமே? முதலில் அதில் இருந்து தானே தொடங்கவேண்டும்? funding அல்லது ஆய்வு யார் செய்தால் என்ன? ஆய்வு, ஆய்வு முறை, data, ஆய்வு முடிவுகள் சரியாக இருந்தால் ஒத்து கொள்ளத்தானே வேண்டும்? இல்லை creationist கூறுவது போல, “இவன் evolutionஇல் PHD பெற்றவன், எனவே evolution பற்றி இவன் செய்யும் ஆய்வுகளை ஒத்து கொள்ள முடியாது” என கூறுகிறீர்களா?

      2. இன்று உலகில் மிக பண பலம் பெற்றவை எண்ணை நிறுவங்கள். அவற்றால் கூட புவி வெப்பமயமாதல் என்னும் அறிவியல் உண்மையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை, ஆய்வுகளை பொய் என நிரூபிக்கவும் முடியவில்லை. இதே நிலை தான் முன்பு புகையிலை நிறுவனங்களுக்கும். அப்படி இருக்க, ஒரு organic உணவு விற்கும் நிறுவனமான Whole Foods விட revenue கம்மியாக இருக்கும் மொன்சாண்டோ நிறுவனத்தை இப்படி அறிவியல் அடக்கும் சக்தி உள்ளதாக சித்தரிப்பது சரியா? (மொன்சாண்டோ Sales/Revenue 13.5 பில்லியன், whole foods 15.72 பில்லியன் டாலர்கள். organic சந்தையின் மதிப்பு அமெரிக்காவில் மட்டும் 65.8 பில்லியன் டாலர்கள்). இதையே தடுப்பூசி விசயத்துக்கும் பொருத்தி பார்போமே. உலகின் மொத்த மருத்துவ சந்தை மதிப்பு 1072 பில்லியன் டாலர்கள். இது top 3 எண்ணை நிறுவங்களின் கூட்டு வருமானத்தை விட கம்மி (sinopec – 433.3, ஷெல் – 385.6, Exxonmobil – 364.8 பில்லியன் டாலர்கள் முறையே).

      ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் வேறு, அரசியல் வேறு. தடுப்பூசி யார் கொடுத்தாலும், யாருக்கு போட்டாலும் ஒரே செயல்பாடு தான். நோக்கங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால், நோக்கம் சரி இல்லை எனவே அறிவியலை, தடுப்பூசியை நம்ப மாட்டேன் என்பது சரியான வாதம் அல்ல. உங்களுக்கு இருப்பது அரசியல், சமூக பொருளாதார குறைகள். அதற்க்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கம்யூனிஸ்ட் ஆராய்ச்சி செய்தாலும், பன்னாட்டு நிறுவனம் ஆராய்ச்சி செய்தாலும் அறிவியல் ஒன்று தான். இல்லை அறிவியல் என்பது அரசியல் சம்பந்த பட்டே இருக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு Lysenkoism தான் வரும். அதை விட கேடு வேறு இருக்க முடியாது. அறிவியலை பற்றி பேசும் போது, எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் வேண்டாம். அறிவியல் மட்டும் பேசுவோம். வர்த்தகம், நோக்கம் போன்றவற்றால் அறிவியல் தவறு என கூறினால் மட்டும் போதாது. அதை அறிவியல் முறை படி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் conspiracy குப்பையில் தான் அது இருக்கும். You are literally using the same argument used by global warming deniers, flat earthers and moon landing deniers. அறிவியல் பற்றிய பயன்பாடு, பயன்படுத்துபவர் பொருத்து மாறுபடலாம். ஆனால் ஆதாரம் இல்லாமல் அறிவியல் தவறு என சொல்லவேண்டாம்.

      அரசியலை, வர்த்தகத்தை பற்றி பேச வினவுங்கள். ஆனால் சிந்தனை செய்ய அறிவியல் வழிமுறை தான் வேண்டும். உங்களுக்கு பிரச்சனை அறிவு சார் தொழில்நுட்பத்தின் ஏக போகம் என்றால் அதற்க்கு அறிவியல் பாவம் என்ன செய்யும்? சட்டத்தை மாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு, இது காப்புரிமை பெற்றது எனவே இதை அறிவியல் என ஒத்துகொள்ள மாட்டேன் என்று சொல்ல போகிறீர்களா? பிறகு நீங்கள் கூறியது போல cross verify செய்ய முடியாத சுழல் என்பது எல்லாம் சும்மா கட்டு கதை. copyright சட்டமே பல இடங்களில் அனுமதி இல்லாமல் கண்டுபிடிப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. கல்வி, ஆய்வு, criticism, scholarship, news reporting போன்றவை Fair Use அடியில் அடக்கம். நீங்கள் தாராளமாக இந்த செயல்களுக்கு copyrighted material பயன்படுத்தலாம்.

      sources:

      http://www.marketwatch.com/investing/stock/mon/financials

      http://www.marketwatch.com/investing/stock/wfm/financials

      https://www.statista.com/topics/1764/global-pharmaceutical-industry/

      https://www.statista.com/statistics/272710/top-10-oil-and-gas-companies-worldwide-based-on-revenue/

      https://en.wikipedia.org/wiki/Lysenkoism

      http://guides.lib.umich.edu/copyrightbasics/faq

  11. @சிந்தனை செய்
    // நீங்கள் கூறியதை நானும் ஒத்து கொள்கிறேன். அறிவியல் ஒரு கருவி மட்டுமே// என முதல் பாராவில் கூறி விட்டு //ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் வேறு, அரசியல் வேறு// என அடுத்த பாராவில் பல்டி அடிக்கிறீர்களே.. இதிலுள்ள முரண்பாடு உங்களுக்கே உறுத்தவில்லையா? கட்டுரை வைக்கும் வாதம், பின்னூட்டம் ஆகியவற்றின் content க்கு உள்ளேயே செல்லாமல் விவாதத்தை கொண்டுபோகிறீர்கள். மான்சோண்டோவின் மானுட விரோத நடவடிக்கைகளை விவரித்தால் ஹோல்ஃபுட்ஸின் பங்குச்சந்தை நிலவர புள்ளிவிவரங்களை அடுக்குவது; மரபீனி விதைகளால் இயற்கையை, மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்தை அழிக்கத்துடிக்கும் ஏகாதிபத்திய அரசியலைப் பேசினால் க்ரீன் பீஸ் என் ஜி ஓ பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி என சப்பைக் கட்டு கட்டுவது; ஜெ-சசி கும்பலின் மக்கள் விரோத சமூக விரோத நடவடிக்கைகளை விமர்சித்தால் கருணாநிதி யோக்கியமா என்பது; ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பலின் இந்துத்துவவெறி ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை விமர்சித்தால் காங்கிரஸ் யோக்கியமா என்பது போன்ற பாணியிலான விவாதம் ’’தடுக்கில் பாயச்சொன்னால் கோலத்தில் பாய்வது” போலுள்ளது.

    நேற்று திருவான்மியூர் அரசு பள்ளிக் கூடத்தில் பதினைந்து பேர் கொண்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியரையோ, ஆசிரியர்களையோ மதிக்காமல் வகுப்பிற்குள் புகுந்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். பெற்றோர்கள் கேட்டால் பதில் சொல்ல முடியாது எனக் கூறித் தடுத்த வகுப்பாசிரியர்களிடம் ”அரசாங்கத்தின் ஸ்டாண்டிங் ஆர்டர் உள்ளதால் நீங்கள் தடுக்க முடியாது. பெற்றோர்கள் வந்து கேட்டால் திருவான்மியூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்லுங்கள் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம்” என தெனாவட்டாக கூறிவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் ஊசியைக் குத்திவிட்டு சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுக்க இதே பாணியில் அடாவடியாக குழந்தைகளின் மேல் – சொல்லப் போனால் தமிழினத்தின் மேல் பார்ப்பன பாசிச ஏகாதிபத்திய கைக்கூலி அதிமுக அரசு மீப்பெரு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 50% மக்கள் கூட தடுப்பூசி போட முன்வராத நிலையில் விஜய பாஸ்கர் பெற்றோர்களின் சம்மதமின்றி தடுப்பூசி போடுவோம் எனத் தெனாவட்டாக அறிவித்த மறுநாளே கையில் ஊசியுடன் சந்தையில் கூட கிடைக்காத ஒரு மருந்தை பிஞ்சு குழந்தைகளின் உடலுக்குள் குத்தி இறக்குகின்றனர். இந்த அடாவடியை இதுவரை ஒரு மீடியா ரிப்போர்ட் பண்ணவில்லை. அறிவியலை விடுங்கள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுத் தான் ஆக வேண்டும் என்று எந்த சட்டம் சொல்கிறது? பெற்றோரின் சம்மதமின்றி குழந்தைகளின் மீது கைவைக்க இவர்கள் யார் உரிமை கொடுத்தது? எந்த சட்டத்தின் அடிப்படையில் இதை செய்கிறார்கள்? ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே கடத்தி சென்று 75 நாட்கள் மர்மமாக மறைத்து வைத்திருந்ததற்கு முழுக்க துணை புரிந்து பாதுகாப்புக் கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வாயிலிருந்து வருவதெல்லாம் சட்டமாகுமா? ஆராய்ச்சியாளனை விடுங்கள், ஒரு சாதாரண கூலித்தொழிலாளியைக் கேளுங்கள் – அரசு இயந்திரத்தின் இத்தகைய அடாவடி நடவடிக்கைகளே இத் தடுப்பூசித் திட்டத்தின் பின்னாலுள்ள நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகக் கூறுவார்.

    // உங்களுக்கு பிரச்சனை அறிவு சார் தொழில்நுட்பத்தின் ஏக போகம் என்றால் அதற்கு அறிவியல் பாவம் என்ன செய்யும்? சட்டத்தை மாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு, இது காப்புரிமை பெற்றது எனவே இதை அறிவியல் என ஒத்துகொள்ள மாட்டேன் என்று சொல்ல போகிறீர்களா?// பிரச்சனை அறிவியலென்று கூறியது போன்ற விவாதம் வர்க்கப் பார்வையற்ற அரசியலற்ற உங்களின் கண்ணோட்டத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. திரும்பவும் சொல்கிறேன், ஏதோ, நாட்டில் சோஷலிச ஆட்சி நடப்பது போலவும், இந்த அரசு மக்களின் நலனுக்காக இராப்பகலாக சிந்தித்து செயல்படுவது போலவும் கருதிக் கொண்டு அறிவியலை?! விவாதிக்கிறீர்கள். சட்டத்தை யார் மற்றுவது? விஜயபாஸ்கரா? மோடியா? நீங்களா? நானா?
    // உங்களுக்கு இருப்பது அரசியல், சமூக பொருளாதார குறைகள்// தெரிகிறதல்லவா? அதைப் பற்றி விவாதிப்பதை விடுத்து தூய அறிவியல் வாதம் பேசுகிறீர்கள்? இது ”கலையை கலையாகப் பார்க்க வேண்டும்” எனும் கருத்தை ஒத்தது. ”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள். அது போன்றது தான் உங்கள் அறிவியல் பார்வையும். ஆனால் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பது போல அறிவியலும் தொழிற்நுட்பவும் கூட கண்டிப்பாக மக்களுக்கானது தான். ஆனால் நான்காவது தொழிற்புரட்சியின் தளகர்த்தர்களான உலக பொருளாதார நிறுவனத்தின் உறுப்பினர்கள் மானுட சமூகத்தின், இயற்கையின் இயல்பையே அழித்துவிட்டு சோதனை சாலைகளில் உருவாக்கப்படும் தாவரங்கள், நுண்ணுயிரிகள், இயந்திர மனிதர்களைக் கொண்டும், அடுத்த தலைமுறை ஜீன் எடிட் செய்யப்பட்ட டிசைனர் பீயிங்சைக் கொண்டும் உலகை காலநிலை மாற்றத்திலிருந்து உய்விக்கலாம் என திட்டம் போடுகின்றனர். அது யாருக்கான உலகமாக இருக்கும்? அத்தகையதொரு உலகத்தில் சிந்தனை செய்பவனுக்கு வேலை இருக்குமா? இதைத் தான் கட்டுரை விவாதிக்கிறது.

    இப்பொழுது புரிந்திருக்கும் என்று கருதுகிறேன் அறிவியல் ஒரு கருவி மட்டுமே என்றும், அரசியல் வேறு அறிவியல் வேறு அல்ல என்றும், அரசியல்-சமூக பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்தால் தான் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் மட்டும் தான் அறிவியலும் தொழிற்நுட்பமும் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், இம்மண்ணுலகிலேயே அவர்களுக்கான சொர்க்கத்தை படைக்கவும் உதவும். மாறாக ஏகபோகங்களின் இலாபவெறியின் கீழ் மனிதனும், தாவரங்களும், நுண்ணுயிரிகளும் ஏன் ஒட்டு மொத்த இயற்கையும் தன் இயல்பை இழந்து வெறும் பிண்டங்களாக reduce ஆகும் அபாயம் உள்ளது. இதை முறியடிக்க அறிவியல் கண்ணோட்டத்தோடு அரசியல் கண்ணோட்டமும் வர்க்கக் கண்ணோட்டமும் தேவை.. அறிவியல் ரீதியாக சிந்தனை செய்யும்போது இக்கண்ணோட்டங்களையும் கூடவே வளர்த்துக் கொண்டீர்களென்றால் மட்டும் தான் நீங்கள் விரும்புவது போல //சட்டத்தை மாற்ற// முடியும்; //அரசியல்-சமூக பொருளாதார குறைகளை நிவர்த்தி//செய்ய முடியும்.

  12. //மான்சோண்டோவின் மானுட விரோத நடவடிக்கைகளை விவரித்தால் ஹோல்ஃபுட்ஸின் பங்குச்சந்தை நிலவர புள்ளிவிவரங்களை அடுக்குவது; மரபீனி விதைகளால் இயற்கையை, மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்தை அழிக்கத்துடிக்கும் ஏகாதிபத்திய அரசியலைப் பேசினால் க்ரீன் பீஸ் என் ஜி ஓ பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி என சப்பைக் கட்டு கட்டுவது;//

    நல்லா ஓட்டுறீங்க மா. மரபீனி விதைகள் மொன்சாண்டோ செய்வதால் விவசாயத்தை அழிக்கும் என நீங்கள் பேசினால், நான் பேசுவது மரபீனி விதைகளின் அறிவியல் மட்டுமே. அவற்றின் நன்மை, shortcomings மட்டுமே. உங்க ஏகாதிபத்திய அரசியலுக்கே நான் வரவில்லை. மரபீனி விதைகள் அரசாங்கங்கள், தேசிய ஆய்வு மையங்கள், பல்கலைகழங்கள் கூட உருவாக்குகின்றன. நான் பேசுவது மரபீனி விதைகள் பற்றி மட்டுமே. நீங்கள் மொன்சாண்டோ அதிக விலை வைக்கிறது, விவசாயத்தை அழிக்க முயல்கிறது என context வைக்கலாம். எனக்கு துளி பிரச்சனை இல்லை. ஆனால் மொன்சாண்டோ உருவாக்குவதால் மரபீனி விதைகளே தவறு என பேசினால் தான் உள்ள வருவேன். மொன்சாண்டோ எனும் நிறுவனத்தின் மீது உள்ள வெறுப்பு, விமர்சனத்தை மரபீனி விதைகள் எனும் அறிவியலின் மீது வைப்பது தவறு. இதை சுட்டி காட்டவே கிரீன் பீஸ் ஒரு உதாரணமாக தந்தேன். மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால் Monsanto’s business practices should not and does not affect the science behind GMO crops. whole foods வருமான கணக்கு கொடுத்ததும் இதன் ஒரு அங்கமே. ஒரு supermarket அளவுக்கே வருமானம் இருக்கும் நிறுவனம் அறிவியலை விலை கொடுத்து வாங்கி விட்டது எனும் கூற்று எவ்வளவு அபத்தம் என காட்டவே அது. அதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த எண்ணை நிறுவனங்களால் அரசியல்வாதிகளை
    விலைக்கு வாங்க முடிகிறது, செய்தி நிறுவனங்களை, அரசியல் கட்சிகள், எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடிகிறது. ஆனால் புவி வெப்பமயமாவது இந்த எண்ணை மற்றும் கரி பயன்பட்டால் தான் என கூறும் அறிவியலை விலைக்கு வாங்க முடியவில்லை. அறிவியல் நிதர்சனம் இப்படி இருக்க, மொன்சாண்டோ விஞ்ஞானிகளை விலைக்கு வாங்கி விட்டதாக நீங்கள் கூறி இருப்பது உண்மைக்கு எவ்வளவு மாறானது என காட்டவே அந்த பாயிண்ட்.

    கட்டாய தடுப்பூசி பற்றிய உங்கள் கருத்து மிக சரி. அதில் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை. அரசாங்கம் கட்டாய படுத்த கூடாது. அடாவடி செய்ய கூடாது. இதில் எந்த மாற்று கருதும்எ இல்லை. என் வழிமுறை வேறாக இருந்து இருக்கும். அறிவியலை எடுத்துக்கூறிபயத்தை போக்கி தடுப்பூசி பற்றிய awareness உருவாக்குவதில் தான் என் முயற்சி இருக்கும்.

    ஆனால் இந்த அடாவடி காரணமாக தடுப்பூசி பற்றி சந்தேகம் எழுப்புவது தவறு. தடுப்பூசி, அதன் efficacy, அவசியம் பற்றி பேசுவது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் குடுசைய கொளுத்தினான் என்பதற்காக நெருப்பே மக்களை ஒடுக்கும் கருவி என ஆகி விடாது. நெருப்பு ஒரு கருவி. கொல்லன் கையில் அது ஆக்கும், சாதி வெறியன் அதை ஊரை எரிக்க பயன்படுத்துவான். “சாதி வெறியால் ஊரை கொளுத்திவிட்டான். எனவே நெருப்பு பற்றி பேசும் போது அரசியல் கண்ணோட்டம் தேவை” என்பது சரியா? செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது.

    திரும்பவும் சொல்கிறேன்.அறிவியலை பற்றி பேசும்போது அறிவியல் மட்டும் பேசினால் போதும். அதன் மூலம் வரும் impacts பற்றி பேசும் பொது அரசியல், பொருளாதாரம், எல்லாம் உள்ளே வரலாம். அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும். அந்த அறிவியலை பயன்படுத்தி, அதனால் வரும் impacts மாறுபடும். அது அறிவியலின் பிரச்சனை அல்ல. உபயோகிப்பவரின் பிரச்சனை. நீங்கள் விரும்பும் மாற்றங்கள் செய்ய அரசியல், சமூக மாற்றங்கள் போதுமானது. அரசியலுக்கு ஏற்ற மாதிரி அறிவியல் மாற வேண்டும் என்றால் பிறகு Lysenkoism நினைவு இருக்கிறதா? அந்த மாதிரி ஆப்பு தான் விழும்.

    • //செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது.திரும்பவும் சொல்கிறேன்.அறிவியலை பற்றி பேசும்போது அறிவியல் மட்டும் பேசினால் போதும். அதன் மூலம் வரும் impacts பற்றி பேசும் பொது அரசியல், பொருளாதாரம், எல்லாம் உள்ளே வரலாம். அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்.செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது// கருவியில்லாத செய்கையா? வினவு அறிவியல் கட்டுரை எனக் கூறி வெளியிட்டது போல திரும்பத் திரும்ப விவாதிக்கிறீர்களே? திரும்பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் – கட்டுரை விவாதிக்கும் நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்கே நீங்கள் வரமறுக்கிறீர்கள். லைசன்கோயிசம் பற்றி பேசும் நீங்கள் உலக பெரும்பணக்காரர்களின் ஃபிலந்திரோஃபிசம் பற்றி வாய் துறக்க மறுக்கிறீர்களே? வரலாற்றை இதற்கு முன்னும் பின்னும் சற்று தள்ளிப் பாருங்கள். //அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்// என்ற உங்களின் பாமரத்தனத்தனத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அறிவியலின் வரலாறு என்பதை விட வரலாற்றில் அறிவியல் என்பது தான் சரியான பார்வையாக இருக்கும். ஏனென்றால் மத்தியகாலத்தில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கிருஸ்தவ திருச்சபை ஆதிக்கத்தின் கீழ் இதே அறிவியலின் நிலை என்னவாக இருந்தது? புரூனோவை எரித்துக் கொன்றது நீங்கள் சொன்ன தூய அறிவியல் ’நெருப்பு’த் தானே? சாகும் வரையிலும் திருச்சபைக்கு பயந்து தனது கண்டுபிடிப்புகளை வெளியிட பயந்த கலிலியோவின் வரலாறு மறந்து போனதா? டார்வினின் புல்டாக் என அறியப்பட்ட ஹக்ஸ்லி மட்டும் இல்லையென்றால், திருசபையின் முந்தானைக்குளிருந்து பரிணாமக் கொள்கையை தான் மீட்டிருக்க முடியுமா? இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் வேண்டும்? தூய அறிவியல்வாதிகள் நிரம்பிவழியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் 1925 இல் கூட பரிணாமக் கொள்கையை வகுப்பில் கற்பித்தற்காக ஸ்கோபஸ் எனும் ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதே? மனிதனைப் போலவே அறிவியலும் கூட நிம்மதியாக மூச்சுவிட வேண்டுமென்றால் அது சார்ந்திருக்கும் அரசியல் பொருளாதார கட்டமைப்பு தான் தீர்மானிக்கும். நிலப்பிரபுத்துவக் காலத்திலும் முதலாளித்துவ காலகட்டத்திலும், சோஷலிச காலகட்டத்திலும் அறிவியல் சுத்த சுயம்புவாக இருக்கும் என வாதிடுவதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய அறியாமையே காரணம். ஒரு சமூகத்தில் அறிவியலின் நிலைகூட அதன் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பால் தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே கட்டுரையின் மைய விவாதப் பொருளான நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்குள் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

      • //அறிவியலின் வரலாறு என்பதை விட வரலாற்றில் அறிவியல் என்பது தான் சரியான பார்வையாக இருக்கும். ஏனென்றால் மத்தியகாலத்தில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கிருஸ்தவ திருச்சபை ஆதிக்கத்தின் கீழ் இதே அறிவியலின் நிலை என்னவாக இருந்தது?//

        திருசபைக்கு பயந்ததால் அறிவியல் உண்மை மாறிவிட்டதா? ப்ருனோ, காலிலியோ அறிவியலுக்கு எதிராக பேசினார்கள் என குற்றம் சாட்ட பட்டனரா அல்லது கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த பட்டதா? ப்ருனோ மீது சுமத்த பட்ட குற்றச்சாட்டுகள் கீழே:

        Luigi Firpo lists these charges made against Bruno by the Roman Inquisition:[31]

        holding opinions contrary to the Catholic faith and speaking against it and its ministers;
        holding opinions contrary to the Catholic faith about the Trinity, divinity of Christ, and Incarnation;
        holding opinions contrary to the Catholic faith pertaining to Jesus as Christ;
        holding opinions contrary to the Catholic faith regarding the virginity of Mary, mother of Jesus;
        holding opinions contrary to the Catholic faith about both Transubstantiation and Mass;
        claiming the existence of a plurality of worlds and their eternity;
        believing in metempsychosis and in the transmigration of the human soul into brutes;
        dealing in magics and divination.

        அடுத்து காலிலியோ.

        The sentence of the Inquisition was delivered on 22 June. It was in three essential parts:

        Galileo was found “vehemently suspect of heresy”, namely of having held the opinions that the Sun lies motionless at the centre of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to “abjure, curse and detest” those opinions.[84]
        He was sentenced to formal imprisonment at the pleasure of the Inquisition.[85] On the following day this was commuted to house arrest, which he remained under for the rest of his life.
        His offending Dialogue was banned; and in an action not announced at the trial, publication of any of his works was forbidden, including any he might write in the future.

        இதில் அறிவியல் எங்குமே வரவில்லையே? இரண்டிலும் helio centric மாடல் கதோலிக்க மத நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பது தானே குற்றச்சாட்டு? அரசியல் பண்ணுபவர்கள் அறிவியலை துணைக்கு அழைக்கலாம். ஆனால் அறிவியல் என்ன கூறுகிறது என பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் காலிலியோவின் ஒரு சில கண்டுபிடிப்புகள் ஏற்க படவில்லை என்பது சரி. ஆனால் சாகும் வரை திருசபைக்கு பயந்து கண்டுபிடிப்புகளை வெளியிடவில்லை என்பது எல்லாம் கப்சா. அவர் tides பற்றி விளக்குவதற்கே Copernican மாடல் தான் பயன்படுத்தினார். அவர் வெளியிட்ட Dialogue Concerning the Two Chief World Systems எனும் நூல் கூட Geo-centric மாடல், அவற்றில் உள்ள பிரச்சனைகள், ஏன் அது சரி இல்லை என்பது பற்றி தான் பேசுகிறது.

        ஹக்ஸ்லி எல்லாம் பேசும் நீங்கள்,

        //மனிதனைப் போலவே அறிவியலும் கூட நிம்மதியாக மூச்சுவிட வேண்டுமென்றால் அது சார்ந்திருக்கும் அரசியல் பொருளாதார கட்டமைப்பு தான் தீர்மானிக்கும்.//

        என கூறுவது ஏன்? திருசபை எதிர்த்ததால் பரிணாம கொள்கை தவறு என்று அறிவியல் கூறியதா? இல்லை காலிலியோ அறிவியல் முடிவுகள் தவறு என கூறியதா? அறிவியல் கூறியது மதத்துக்கு ஒத்து வரவில்லை என மத அமைப்புகள் முயற்சி செய்தது என்னவோ சரி தான். ஹக்ஸ்லி இல்லாவிட்டால் இன்னொருவர். காலிலியோ இல்லாவிட்டால் kepler. அறிவியல் உண்மைகள் ஒரு அமைப்பை சார்ந்து உருவாகாது. இங்கு நாம் பேசிய காலிலியோ கூட keplerஇன் Laws of motionஐ ஏற்கவில்லை. ஆனால் அது அறிவியல் முறையால் சரி பார்க்க பட்ட பிறகு, அவை அறிவியலில் நிதர்சனமாக இன்று வரை இருக்கிறது, என்றும் இருக்கும்.

        நீங்கள் சொன்ன எல்லா உதாரணமும் சமூகம் அல்லது மதம், அரசியல் கட்டமைப்புகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்துக்காக அறிவியல் உண்மையை புறம்தள்ள அல்லது திரிக்க முயன்று தோல்வி கண்டன என்பதற்கு உதாரணங்கள். எனவே நான் //அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்// என கூறியது சரி தானே? இதில் பாமர தனம் என்ன?

        நான்காவது தொழிற்புரட்சியில் வேலை இழக்கும் மக்களை கொள்ள அறிவியல், முக்கியமாக தடுப்பூசி பயன்படுத்த விழைகிறார் என்பதே இங்க மைய குற்றச்சாட்டு. நீங்கள் இதை பேச வேண்டும் என்றால் முதலில் அந்த தடுப்பூசிகள் நீங்கள் கூறும் செயல்களை செய்ய வல்லவை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். சும்மா assumption அல்லது இப்படி இதால் முடியும், எனவே அதற்க்கு தான் இதை பயன்படுத்துகிறார்கள் எனும் வேற்று குற்றச்சாட்டு எல்லாம் செல்லாது. தடுப்பூசியால் மக்களை கொள்ள முயற்சி என்கிறீர்களா. முதலில் அந்த தடுப்பூசியால் மக்களை கொள்ள முடியும் என நிரூபிக்க வேண்டும். பிறகு அரசியல், motivation லாம் வரலாம். இங்க அஸ்திவாரமே இல்லையே. பின்ன எங்கே அடுத்த கட்டத்துக்கு செல்வது?

        உதாரணமாக, //தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும்// என வினவு சொல்லும்போது அந்த தடுப்பூசி அதை செய்ய வல்ல திறன் படைத்து என அறிவியல் ஆதாரம் வைக்க வேண்டும். சும்மா ஏதோ கான்ஸ்பிரசி தளத்தில் எவனோ கெளப்பி விட்ட வதந்தி எல்லாம் ஆதாரம் இல்லை. உதாரணமாக இந்த Hcg hormone கலப்படம் என்று குற்றம் சாட்டும் கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு, அவர்கள் அந்த சோதனையை கூட ஒழுங்காக செய்யவில்லை, சோதனை முடிவுகளையும் வெளியிடவில்லை. இதை முதலில் இவர்கள் வெளியிடவில்லை. statement முதலில் வந்தது காதொலிக்க மத குருமார் அமைப்பில் இருந்து. இந்த technique கூட புதுசு இல்லை. இதை பற்றி நீண்ட விளக்கம் எழுத நேரம் இல்லை. எனவே இதை முழுதாக அலசும் கட்டுரை உங்கள் பார்வைக்கு:

        http://www.snopes.com/medical/disease/tetanus.asp

        நீங்கள் நான்காவது தொழில்புரட்சி பற்றி பேசுவது எல்லாம் சரிதான். முதலில் வைக்கும் குற்றச்சாட்டு i.e. தடுப்பூசியால் மக்களை கொள்ளும் முயற்சி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். பிறகு தொழில்புரட்சி பற்றி பேசலாம்.

      • //நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்குள் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//

        நான்காவது தொழிற்புரட்சி என்பது மக்களுக்கு எதிரான சதித்திட்டம் என்பது தான் கட்டுரையின் மையப் பொருள். Automation தொழில்நுட்பம், Bio, Nano Technology, மரபணு சார் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவையா? அல்லது அவை தொழிற்படுத்தப்படும், நடைமுறைப்படுத்தப்படுவது மக்களுக்கு எதிராக உள்ளதா?

        நடைமுறைப்படுத்தப்படுவது தான் மக்களுக்கு எதிராக உள்ளது எனில் தொழிற்புரட்சியின் அவசியத்தை வழியுறுத்தும் அதேவேளை, அது எப்படி மக்கள் விரோதிகளின் பிடியில் உள்ளது என்பதாக தானே கட்டுரை சென்றிருக்க வேண்டும்.

        கட்டுரை எழுதப்படும் போது எதிர், மாற்று கருத்துக்களையும் படித்து அவற்றுக்கு Counter arguments வுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே Natural News போன்ற தளங்களை மட்டும் ஆதாரமாக கொண்டால், முன்முடிவுடன் biased ஆக எழுதியதாக தான் படிப்பவர்கள் சொல்வார்கள்.

        Article is Shocking but not Convincing!

  13. மேலே பதில் கூற இடம் இல்லை. எனவே பதில் இங்க செந்தில்குமரன்.

    //சிந்தனை செய்…, சரியான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் தேவையில்லாத பதில் மொக்கைகளை வினவில் எழுதிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே…! கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்பதனை மலட்டுதன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று மொழி பெயர்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா? மலட்டு தன்மை வந்தமையால் தானே கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.!//

    உங்களுக்கு இரண்டு வேறு வார்த்தைகளால் வந்த குழப்பம் அது. மலட்டு தன்மை என்பது infertility or impotency. கருத்தடை என்பது contraceptive. இரண்டிலும் குழந்தை பிறக்காது என்பது சரி தான். இரண்டிலும் குழந்தை பிறக்காது என்பது சரி தான். ஆனால் ஒன்றுக்கு வைத்தியம், மருத்துவம் உண்டு. மலட்டு தன்மையை சரி செய்ய மிகவும் கடினம். குழந்தை பிறக்க வாய்ப்புகள் மிக, மிக குறைவு. கிட்ட தட்ட பூஜியம். ஆனால் கருத்தடையில் இருப்பவர் குழந்தை பெற வேண்டும் என்றால் கருத்தடை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் போதும். இன்னும் சொல்ல போனால் கருத்தடை நூறு சதவீதம் வெற்றி பெறாது. கருதடையில் இருக்கும் போது கூட கரு தரிக்க வாய்புகள் உண்டு.

    இதனால் தான் திரும்ப, திரும்ப கீழே இருப்பதை quote செய்கிறேன். அவர் சொல்வதை பாருங்கள். contraceptive என்கிறாரே தவிர Inferitility or impotency என சொல்லவில்லை. அவர் permanent male contraceptive என கூறி இருந்தால் கூட நீங்கள் சொல்வதை ஏதோ ஒரு possibility இருப்பதாக கொள்ளலாம். அவரோ தெளிவாக reversible male contraceptive என்கிறார். மலட்டு தன்மைக்கு exact opposite அது.

    //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

    • சிந்தனை செய்..,In his text Dr Dr. James Tsuruta used the word “fertility” ! not about “contraceptive”! He have a doubt about the returning of “fertility” ! So it is your confusion about the translation! Not mine!

      what is the meaning of his statement ” “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.”?

      Rethink about the words he used in his text “when, or whether ””fertility””’ would return”

      • திரும்பவும் கேட்கறேன். மொதல்ல ஆய்வு அறிக்கைய படிசீங்களா, இல்லையா? அவர் ஆய்வை பற்றி அவர் பேசுவது எல்லாம் contraceptive, sperm count பற்றி தான். fertility பற்றி அவர் பேச காரணம், fahim எனப்படும் ஆய்வாளர் முன்பு வெளியிட்ட ஒரு ஆய்வு. அதை அடிப்படயாக கொண்டு தான் இவர் இந்த ஆய்வு முயற்சியை தொடங்கினார்.

        //Background

        Studies published in the 1970s by Mostafa S. Fahim and colleagues showed that a short treatment with ultrasound caused the depletion of germ cells and infertility. The goal of the current study was to determine if a commercially available therapeutic ultrasound generator and transducer could be used as the basis for a male contraceptive.//

        இவர் ஆய்வின் நோக்கம் contraceptive தான். அதை தெளிவாகவே கூறி இருக்கிறார். ஏற்கனவே fahim என்னும் ஆய்வாளர் வெளியிட்ட ஆய்வு fertility குறைந்ததாக சொல்கிறது. அதனால் எங்கள் ஆய்வில் ultrasound தொழில்நுட்பம் கருத்தடை முறையாக பயன்படுத்த முடியுமா என பார்பதே எங்கள் நோக்கம் என்கிறார். இவரின் நோக்கம் loss of fertility என்று எங்குமே சொல்லவில்லை என்பதை காண்க. fahim ஆய்வு தான் loss of fertility பற்றி. அந்த ஆய்வை பற்றி பேசும்போது தான் அது உள்ளே வருகிறது.

        சரி இவரின் ஆய்வு முடிவுகள் என்ன என்று பார்த்தல் பின்வருவதை சொல்கிறார்:

        //Our results clearly show that therapeutic ultrasound treatment depleted developing germ cells from the testis and subsequently decreased the size of sperm reserves in the epididymis when rats were treated with two consecutive ultrasound treatments separated by two days [Table 4 Figure 6]. This differs from reports in the 1970s by Fahim et al. [3, 4], which reported that a single treatment of 1 MHz ultrasound was sufficient to induce a contraceptive effect of approximately six months duration. //

        முந்தைய fahim ஆய்வுகள் ஆறு மாதத்துக்கு கருத்தடை செய்ய வல்லது , loss of fertility இருக்கிறது என சொன்ன போதும், எங்கள் ஆய்வு முடிவுகள் அதற்க்கு மாறுபட்டு இருக்கின்றன. sperm count, sperm reserves குறைகிறது.ஆனால் fertility இல் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை. குழந்தைகள் பிறக்கின்றன என்கிறார்.

        //Thus, we anticipate that decreasing sperm count sufficiently to cause infertility in rats would also cause infertility in men. However, sperm counts or concentrations that would represent infertility in men could allow rats to retain their fertility. Our second pilot study showed that the absence of motile sperm at the end of a mating trial did not rule out the ability to sire pups. //

        அதாவது அவரின் ஆய்வுகள் sperm count குறைவதாக காட்டினாலும், குழந்தை பிறக்கும் திறனில் குறிபிடத்தக்க பாதிப்பு இல்லை என காட்டுகிறது. மேலும் அவர் கூறுவது:

        //Future studies will determine if our ultrasound treatment parameters result in a reversible loss of fertility as previously reported by Fahim. The treatment that was most effective at reducing epididymal sperm count (3 MHz, 2.2 W/cm2, two 15-minute treatments separated by two days with coupling medium temperature maintained at 37°C) represents an upper limit for applying ultrasound to the testes since thermal bio-effects were noted in some treated tubules. Results from Study 2 showed that relatively small changes in treatment conditions caused statistically significant changes in sperm count when assessed two weeks after treatment. Longer-term studies will be required to determine if those treatment conditions cause a progressive loss of spermatogenic cells that ultimately results in the depletion of epididymal sperm reserves. A major goal of our future studies will be to determine the “minimum effective dose” of ultrasound that induces a reversible loss of fertility.

        In conclusion, our results demonstrate that a short exposure to therapeutic ultrasound is an effective method for depleting testes of spermatogenic cells and reducing epididymal sperm reserves within two weeks of treatment. //

        அவரின் ஆய்வு sperm count குறைப்பதில் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் fahim ஆய்வு முடிவில் கூறி உள்ளது போல, reversible loss of fertility எங்கள் ultrasound treatment மூலம் அடைய முடியுமா என்பதை கணிக்க மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார். இப்போதைக்கு எங்கள் முயற்சி sperm count குறைக்கிறது, ஆனால் fertility குறையவில்லை. எலிகளில் குழந்தைகள் பிறக்கின்றன என்று தான் ஆய்வு அறிக்கையில் கூறுகிறார்.

        article நீங்கள் quote செய்வதை கூறி இருப்பது என்னமோ சரி தான். ஆனால் அவர் ஆய்வு அறிக்கை அதை கூறவில்லை. அவரின் ஆய்வு முடிவு sperm count குறைப்பதில் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த lowest sperm count வந்தாலும் எலிகள் குழந்தை பெரும் தன்மையை இழக்கவில்லை என்று தான் கூறுகிறது.

        //Results
        We found that 3 MHz ultrasound delivered with 2.2 Watt per square cm power for fifteen minutes was necessary to deplete spermatocytes and spermatids from the testis and that this treatment significantly reduced epididymal sperm reserves. 3 MHz ultrasound treatment reduced total epididymal sperm count 10-fold lower than the wet-heat control and decreased motile sperm counts 1,000-fold lower than wet-heat alone. The current treatment regimen provided nominally more energy to the treatment chamber than Fahim’s originally reported conditions of 1 MHz ultrasound delivered at 1 Watt per square cm for ten minutes. However, the true spatial average intensity, effective radiating area and power output of the transducers used by Fahim were not reported, making a direct comparison impossible. We found that germ cell depletion was most uniform and effective when we rotated the therapeutic transducer to mitigate non-uniformity of the beam field. The lowest sperm count was achieved when the coupling medium (3% saline) was held at 37 degrees C and two consecutive 15-minute treatments of 3 MHz ultrasound at 2.2 Watt per square cm were separated by 2 days.

        Conclusions
        The non-invasive nature of ultrasound and its efficacy in reducing sperm count make therapeutic ultrasound a promising candidate for a male contraceptive. However, further studies must be conducted to confirm its efficacy in providing a contraceptive effect, to test the result of repeated use, to verify that the contraceptive effect is reversible and to demonstrate that there are no detrimental, long-term effects from using ultrasound as a method of male contraception.//

        இதில் அவர் எங்குமே எங்கள் ஆய்வில் loss of fertility fahim சொன்னது போல வந்தது என என்று கூறவில்லை என்பதை காண்க. sperm count குறைபதால் இது ஒரு வேலை, கருதடையாக பயன்படலாம் என்று தான் கூறி இருக்கிறார். ஆனால் sperm count அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு குறைந்தாலும் குழந்தை பிறக்கும் திறன் இருப்பதை rule out செய்ய முடியாது, இதை கருதடையாக உருவாக்க மேலும் ஆய்வு தேவை என்கிறார்.

        Dr. James Tsuruta அவருடைய ஆய்வு contraceptive பற்றி தான். அதை தான் அவரது ஆய்வு அறிக்கையில் பேசுகிறார். article பண்ண குழப்பம் fertility பற்றி. அவர் பேசுவது sperm count, motil sperm, depletion of sperm reserves மற்றும் contraceptive பற்றி தான். article குழப்பத்தில் misquote செய்ததற்கு அவர் என்ன செய்வார் பாவம். ஏதோ blogஇல் உள்ள பதிவை படிக்காமல், ஆய்வு அறிக்கையை படியுங்கள் என்று இதற்க்கு தான் சொன்னேன். குழப்பம் இருவர் மொழிமற்றதிலும் அல்ல. நீங்கள் article quote செய்து பேசுகிறீர்கள். நான் ஆய்வு அறிக்கையை வைத்து பேசுகிறேன். article தவறாக எழுதியதால் வந்த குழப்பம் அது.

        Sources:

        Therapeutic ultrasound as a potential male contraceptive: power, frequency and temperature required to deplete rat testes of meiotic cells and epididymides of sperm determined using a commercially available system – https://rbej.biomedcentral.com/articles/10.1186/1477-7827-10-7

        https://srxawordonhealth.com/2012/02/03/sound-waves-to-the-scrotum-subdue-sperm/

    • ஏனுங்க அறிவாளி சிந்தனை செய்.., மலட்டு தன்மைக்கு infertility தான் சரியான தமிழ் பதம் என்றால் அந்த ஆய்வாளர் கூறுவது படி “when, or whether, fertility would return” என்பதற்கு என்னங்க அர்த்தம்? மலட்டுத்தன்மையில் இருந்து கருவுறும் நிலைக்கு மீண்டு வரமுடியுமா எப்ப வரும் என்பது தெரியவில்லை என்பது தானே பொருள்?
      குறிப்பு
      Fertility X infertility

      • //மலட்டுத்தன்மையில் இருந்து கருவுறும் நிலைக்கு மீண்டு வர///

        கருத்தடை நிலையிலிருந்து கருவுறும் நிலைக்கு மீண்டு வர – என்றும் சொல்லலாமே கூடாதா?

        கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கென்யா டெட்டனஸ் தடுப்பூசியில் கண்டறிந்த hCG ஹார்மோனின் அளவானது கருத்தடை ஏற்படுத்தும் அளவை விட மிக மிகக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

        மேலும், hCG ஹார்மோன் முறையிலான கருத்தடை நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானது.

        மாற்று கருத்துக்களையும் படித்துவிட்டு விவாதிக்கலாமே?

        https://sciencebasedmedicine.org/fear-mongering-about-vaccines-as-racist-population-control-in-kenya/

        கேட்ஸ் பவுண்டேசன், பாத் (PATH) போன்றவை மக்கள் நலனில் கொண்ட அக்கறையால் தான் தடுப்பூசி திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று நான் கூற வரவில்லை, கூறவில்லை.

        தடுப்பூசிகளைப் போடுவதற்கு பின்னால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாப நோக்கம், மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது, நெறிமுறைகளைப் பின்பற்றாதது, இன்ன பிற பிரச்சினைகள் இருக்கின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. இது அறிவியல் (கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம்) எந்த நோக்கத்திற்காக யாருடைய நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதுடன் தொடர்புடையது.

        அதே வேளை இன்றைய ஏகாதிபத்திய சூழலில் எந்த நோக்கத்திற்காக, யாருடைய நலனுக்காக அடிப்படை அறிவியல் ஆய்வுகளே கூட செய்யப்படுகின்றன என்பதும் பிரச்சினைக்குரிய விசயம் தான்.

        ஏகாதிபத்திய, Monopoly சூழல் நிலவுவதால், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும், ஆய்வுகளும், எப்போதும் மக்களுக்கு பயன்படப்போவதில்லை என்பதுடன் மக்கள் விரோத சதிதிட்டமுடையதாகவும் உள்ளது என்று அவற்றை புறந்தள்ளலாமா?

        எனக்கு Conspiracy Theory-க்கும், மார்க்சிய கண்ணோட்டத்திற்கும் குழப்பம் உள்ளது.

        • @ ராம்சங்கர்

          1.அவர்களின் அறிக்கையில் கருவுருநிலை திரும்புமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள்…அவர்களின் ஆய்வுகள்(UV கதிர் ஆய்வுகள் )விந்தனுகளை செயலிழக்க செய்வதால் அந்த செயலிழந்த நிலையை என்னவென்று தமிழில் கூறுவீர்கள் நண்பரே? அதற்கு பெயர் தானே மலட்டுத்தன்னமை! அப்படி என்றால் மலட்டு தன்மையில் இருந்து கருவுருநிலை திரும்புமா என்று வேண்டுமானால் சரியான முறையில் எழுதலாம்…

          2.அடுத்ததாக தடுப்பூசிகளில் hCG ஹார்மோண்களுக்கு என்ன வேலை? தாயின் கர்ப்பபையில் உள்ள சிசுக்கள் கர்ப்ப சிதைவு அடையாமல் இருக்க தான் இந்த hCG ஹார்மோண்களை ஊசிகள் மூலம் செலுத்துவார்கள்… குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் hCG ஹார்மோண்களுக்கு என்ன வேலை?

          • விந்தணுக்கள் செயலிக்க செய்து இருந்தால் கூட loss of fertility or reversible loss of fertility என்று பேசலாம். ஆனால் மேல விளக்கி உள்ளது போல அவரது ஆய்வு sperm count reduction, contraceptive பற்றி. எனவே மலட்டு தன்மை என்பது தவறு. இது விந்தணு குறைப்பு, விந்தணு செயலிழக்க செய்வது அல்ல. இதில் கருவுறும் தன்மை கூட அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை.

            hCG hormone பற்றிய செய்தி வதந்தி என நிரூபிக்க பட்டு விட்டது. அதை விளக்க நேரமில்லை. எனவே அதற்க்கு லிங்குகள்:

            http://www.snopes.com/medical/disease/tetanus.asp/

            https://sciencebasedmedicine.org/fear-mongering-about-vaccines-as-racist-population-control-in-kenya/

        • இறையாண்மை உள்ள இந்தியா போன்ற எந்த நாடும் தன் குழந்தைகளுக்கு என்ன என்ன தடுப்பூசிகளை கண்டிப்பாக அளிக்கவேணும் ,அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று முடிவு செய்துகொள்ள முடியும். அப்படி பட்ட முடிவுகளை இந்தியா எடுப்பதில் பில் பவுண்டேசனுக்கும் ,பாத் போன்ற தன்னார்வ அமைப்பும் எதற்காக குறுக்கே வருகின்றன. நான் எழுப்புவது மார்சியம் சார்ந்து அல்ல… தேசியவாதம் சார்ந்த கேள்வி இது! இந்திய தேசியத்தில் இந்த முடிவை கூட எடுக்க இயலாத அளவுக்காக இந்திய அரசு சுயசார்பு இன்றி செயல்பட்டுக்கொண்டு உள்ளது.? பதில் அளியுங்கள் நண்பரே!

    • இன்னும் கூட இந்த விசயத்தில் உங்களுக்கு என்னால் விளக்க முடியும் அரிவாமனை (அந்த அளவுக்கு பிளேடு போடுறிங்க) சிந்தனை செய்!

      மலைட்டுதன்மை (Infertility) என்றால் விந்தனுகளில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கையான குறைபாட்டுகள்….
      ஆண்மைகுறைவு (Impotency) என்றால் ஆண் குறியில் ஏற்படும் விறைப்பு தன்மையில் ஏற்படும் குறைபாடுகள்…

      இப்ப தெளிவாக கூறுங்கள் நண்பரே அவர்கள் செய்த ஆய்வுகள் விந்தனுகளை செயலற்றதாக மாற்றும் என்னும் நிலையில் அந்த ஆய்வுகளின் நோக்கும் மலட்டுதன்மையை உருவாக்கும் நிலையை நோக்கியா அல்லது ஆண்மை குறைவை பற்றியதா என்று நீங்களே கூறுங்கள் நண்பரே!

      • தலை எழுத்து. பெண்களுக்கு கருத்தடை வேண்டும் என்றால் கரு தரிப்பதற்கு தடை செய்து விட்டால் போதும்.அதற்க்க பல வழிகள் உண்டு. விந்து உள்ளே வராமல் தடுப்பது, கர்பப்பைக்கு விந்து வந்து சேராமல் தடுப்பது, ovulation ஆகாமல் தடுப்பது, போல பல வழிகளால்ற்க்கு பெண்கள் கருத்தடை வேலை செய்ய முடியும். இதற்க்கு முறையே spermicide/female condoms, uterus rings, implants/birth control pills என பல வழிகள் உண்டு. ஆண்களுக்கு கருத்தடைக்கு விந்துகள் அதன் பணியை செய்ய விடாமல் தடுப்பது தான் ஒரே வழி. ஏன் என்றால் ஆண்களின் பங்கு அவ்வளவே. condom மூலமாக விந்து உள்ளே செல்வதை தடுக்கலாம், அல்லது வசெக்டோமி செய்து விந்து பையில் இருந்து விந்து வருவதை தடுக்கலாம். அல்லது இங்கு உள்ள ஆய்வு போல விந்துகளின் வீரியம் குறைய செய்யலாம். fertility குறையாமல், condom அல்லது vasectomy இல்லாமல் எப்படி ஆண்களுக்கு கருத்தடை செய்யமுடியும்?

        மீண்டும் கூறுகிறேன். அவர் ஆய்வு முடிவுகள் inconclusive என்றால், inconclusive என்று தானே கூற வேண்டும்? இந்த முறையால் கருத்தடை செய்ய முடியும் என்பது நிரூபனம் அந்த ஆய்வில் செய்ய பட்டு விட்டது. அடுத்த கட்ட ஆய்வில் அவர்கள் என்ன செய்ய முயல்கிறார்கள் என்பதை மேலே கொடுத்தும் ஆகி விட்டது. ஆனால் இது நிரந்தர மலட்டு தன்மை அடைய வைக்கும் முயற்சி தான் என்பதாக அந்த ஆய்வும் சரி, ஆய்வாளர்களும் சரி எங்கும் கூறவில்லை. நீங்கள் கூறியுள்ளது கீழே:

        //மனித விந்தனுகளில் உள்ள உயிரணுக்களை கொன்று மனிதர்களை நிரந்தர மலடாக அவர் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் முயற்சிக்கின்றார்.. அந்த தொழில் நுட்பத்துக்கான ஆராய்ச்சி நிதி உதவிகளை University of North Carolina (UNC) என்ற அமெரிக்க பல்கலைகழக்த்துக்கு அவரின் Bill & Melinda Gates Foundation மூலமாக வழங்கிக்கொண்டு உள்ளார் பில் கேட்ஸ்.//

        நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிது. இந்த ultrasound ஆய்வு ஆய்வாளர் கூறி உள்ளது போல தற்காலிக கருத்தடை முயற்சி அல்ல, நிரந்தர மலடாக்கும் முயற்சி என அவரோ, அவரது ஆய்வு அணியோ எங்கேனும் கூறி உள்ளதை காட்ட வேண்டியது. அவ்வளவு தான். முதலில் இதை செய்யுங்கள். அப்போது தான் உங்கள் கூற்றுக்கு அடிப்படை ஆதாரம் இருக்கும்.

        • சிந்தனை செய்…, என்னுடைய பின்னுட்டத்தில் அந்த ஆய்வின் அடிப்டையில் எற்படும் மலட்டுத்தன்மை நிரந்தரமானது என்றா கூறுகின்றேன்? இல்லேயே! அவர்கள் என்ன கூறியுள்ளார்களோ அதனை தானே மொழிபெயர்த்து இருகின்றேன். ! இதனை புரிந்து கொள்ள உங்களுக்கு இத்தனை நாட்கள் ஆயிற்றா அறிவாளி சிந்தனை செய்? மீண்டும் என்னுடைய மொழி பெயர்ப்பை படியுங்கள் நண்பரே!

          //சிந்தனை செய்…, சரியான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் தேவையில்லாத பதில் மொக்கைகளை வினவில் எழுதிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே…! கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்பதனை மலட்டுதன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று மொழி பெயர்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா? மலட்டு தன்மை வந்தமையால் தானே கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.!//

          அந்த ஆய்வின் மூலம் ஆண்களின் விந்தணுக்களை செயலிழக்க செய்கின்றார்கள்…. என்றால் என்ன அர்த்தம்? ஆண்களை மலடாக்குகின்றார்கள்(Infertility) என்று தானே அர்த்தம்? இதற்கு பெயர்தான் contraceptive(கருத்தடை) முறை என்றால் முதலில் நீங்கள் இந்த முறைக்கு பில் கேட்ஸ்சின் நண்பரான நீங்கள் உங்களை உட்படுத்துங்கள் நண்பரே!
          மேலும் “மலட்டு தன்மையை சரி செய்ய மிகவும் கடினம். குழந்தை பிறக்க வாய்ப்புகள் மிக, மிக குறைவு. கிட்ட தட்ட பூஜியம்.” என்று நீங்கள் வேறு கூறியுள்ளீர்கள்! எனவே பார்த்து கவனமாக நடந்துக்கொள்ளுங்கள் நண்பரே!

          • ஏன்பா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே?

            //fertility குறையாமல், condom அல்லது vasectomy இல்லாமல் எப்படி ஆண்களுக்கு கருத்தடை செய்யமுடியும்?//

            இதற்க்கு பதில் கூறவும். நீங்கள் மொழி பெயர்த்ததில் பிரச்சனை இருந்ததாக நான் கூறவில்லையே! இதை நிரந்தர மலட்டுத்தன்மை உருவாக்கும் கருவியாக முயல்வதாக நீங்கள் கூறி உள்ளதை பற்றி தானே என் வாதம் எல்லாம் இருந்தது? இந்த வரி பற்றி தானே நான் பேசியது எல்லாம்:

            //மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?//

            இதன் அடிப்படை ஆதாரம் என்ன? இது தற்காலிக கருத்தடை சாதனமாக உருவாக்குவது தான் ஆய்வின் நோக்கம் என ஆய்வாளர் கூறி உள்ளார். அவர் ஆய்வு அறிக்கையும் இதையே தான் கூறி உள்ளது. எனவே ஆண்களுக்கு தற்காலிக கருத்தடை சாதனமாக உருவாக்குவதில் தான் ஆரம்பத்தில் இருந்தே இது தான் இந்த ஆய்வின் நோக்கம். இது முழுக்க, முழுக்க பில் கேட்ஸ் பணம் கொடுத்து நடத்திய ஆய்வும் அல்ல. கொடுக்கப்பட்ட $100,0௦௦ மொத்த ஆய்வு நிதியில் ஒரு சிறு பங்கு. ஏற்கனவே பல இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டது. இந்த நிதி வந்த பிறகு இதை ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை சாதனமாக உருவாக்குவதாக அல்லது உருவாக்க போவதாக எங்கும் ஆய்வாளர் கூறவில்லை.

            2010இல் இந்த கிராண்ட் அளிக்கப்பட்ட பிறகு ஒரே ஒரு ஆய்வு கட்டுரை(மேல ஏற்கனவே குறிபிட்டது) மட்டுமே 2012இல் இதை பற்றி வந்து இருக்கிறது. அவ்வளவே. 2012க்கு பிறகு அவர் ஐந்து ஆய்வு கட்டுரை வெளியிட்டு உள்ளார். இதில் ஒன்று எவ்வாறு ஒரு species எலிகள் male fertility பற்றி ஆய்வு செய்ய மற்றதை விட உகந்தது என்பது. அவரின் மீதி நான்கு ஆய்வுகள்,குறிப்பிட்ட கான்செர் திசுக்களை எவ்வாறு ultrasound மூலம் கண்காணிக்க முடியும், ultrasonic water bath, molecular imaging using ultrasound மற்றும் CONTRAST-ENHANCED ULTRASOUND IN THE DISTAL LIMB OF SIX HORSES.

            இப்போது இந்த ஆய்வு தொடர்வதாக எந்த அறிகுறியும் இல்லை. Possibility was studied by the avenue was discarded. ஆய்வுக்கு காசு குடுத்து 2010இல். ஆய்வு அறிக்கை வெளி வந்தது 2012இல். பிறகு இந்த ஆய்வு தொடர்வதாக தெரியவில்லை. பிறகு எந்த அடிப்படையில் நீங்கள் உங்கள் குற்றச்சாட்டு வைகிறீர்கள்?

            Sources:

            https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=Tsuruta+JK%5Bauthor%5D

            • ஆய்வார்கள் கூறித்தான் இதனை தெரிந்து கொள்ளவேண்டுமா? இந்த ஆய்வே ஆண்களின் விந்தனுகளை செயலிழக்க செய்யும் நோக்கம் கொண்டது என்ற நிலையில் அது அவர்களை மலட்டுத்தன்மையை நோக்கி தான் அழைத்து ச்செல்லும் என்ற நிலையில் நீங்கள் வேண்டுமானால் எலிகளுக்கு பதிலாக உண்மை மாதிரியாக இருந்து அந்த ஆய்வை தொடருங்கள்…..! பில் கேட்ஸ் அதற்கும் நிதி ஆதரவு அளிப்பார்…! இவ்வளவு நாட்கள் அந்த ஆய்வு கர்பத்தடையை பற்றியதுஎன்று சாதித்து வந்த நீங்கள் ஒரு படி இறங்கி வந்து அதற்கு பில் இவ்வளவு தானே நிதி அளித்து உள்ளார் என்று மங்கலம் பாடுகின்றீர்கள்! fertility குறையாமல், condom அல்லது vasectomy இல்லாமல் எப்படி ஆண்களுக்கு கருத்தடை செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்பும் நீங்கள் தான் இந்த கேள்விக்கு என்ன மயிருக்கு அப்படி மனிதர்களை காய் அடிக்க செய்ய வேண்டும் என்று பதில் அளிக்கவேண்டும்! உங்கள் கேள்வியே மானம் கேட்ட கேள்வியாக இருக்கிறதே நண்பரே! மனிதர்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மலடாக்கும் செயல்முறைக்கு ஆதரவளிக்கும் இந்த செயலுக்கு கூட அறிவியலின் பெயரில் உங்களை போன்றவர்கள் ஆதரவளிப்பது மிகவும் கொடுரமானதாகும்! இன்னும் கூட உங்களை போன்ற வக்கிரமானவர்கள் சிந்திபீர்கள் ! மனிதனுக்கு விரைகொட்டைகள் எதற்கு என்று ! அவற்றை நீங்கிவிட்டால் என்ன வென்று கூட நீங்களும் பில் கூட்டமும் சிந்தீப்பீர்கள்! அவற்றையும் பின்னுட்டத்தில் வினவும் வெளியீடும் அதற்கும் நான் பதில் அளிக்கவேனுமா என்ன?

              • சரி சார். உங்களிடம் ஆண்களுக்கு தற்காலிக கருத்தடை செய்ய இப்போது இருக்கும் முறைகள் தவிர மாற்று வழி கண்டுபிடிக்க சொல்கிறார்கள். இப்போது இருப்பவை condoms மற்றும் vasectomy.

                எந்த வழியில் விந்தணு எண்ணிக்கை அல்லது வீரியம் பாதிக்காமல், அறுவை சிகிச்சை இல்லாமல் அதை செய்ய முடியும்? இதற்க்கு மட்டும் பதில் கூறவும்.

                //fertility குறையாமல், condom அல்லது vasectomy இல்லாமல் எப்படி ஆண்களுக்கு கருத்தடை செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்பும் நீங்கள் தான் இந்த கேள்விக்கு என்ன மயிருக்கு அப்படி மனிதர்களை காய் அடிக்க செய்ய வேண்டும் என்று பதில் அளிக்கவேண்டும்! உங்கள் கேள்வியே மானம் கேட்ட கேள்வியாக இருக்கிறதே நண்பரே! மனிதர்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மலடாக்கும் செயல்முறைக்கு ஆதரவளிக்கும் இந்த செயலுக்கு கூட அறிவியலின் பெயரில் உங்களை போன்றவர்கள் ஆதரவளிப்பது மிகவும் கொடுரமானதாகும்//

                சுய நினைவோடுதான் இந்த கேள்வி கேடீர்களா? மக்களை மலடாக்குவது தவிர வேற எந்த காரணமும் ஆண்களின் தற்காலிக கருத்தடை ஆய்வுக்கு இல்லை என்கிறீர்களா? ஆண்களுக்கு தற்காலிக கருத்தடை என்பது குடும்ப கட்டுப்பாடு முயற்சியில் என்ன பங்கு வகிக்கிறது என்பது புரியவில்லையா? இல்லை புரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்க வில்லையா? ஆண்களை எதுவும் செய்ய கூடாது, இப்போது இருப்பது போல பெண்களுக்கு மட்டும் option இருந்தால் போதும் என்பது உங்கள் நிலைபாடா? இல்லை குடும்ப கட்டுப்பாடே வேண்டாம் என்பது உங்கள் நிலைபாடா? குடும்ப கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றால் உங்கள் பார்வையில் பிரச்சனை இல்லாத குடும்ப கட்டுப்பாடு முறை என்ன? அது தற்காலிகமாக செய்ய கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.

                குழந்தை பிறப்பை தற்காலிகமாக தடுக்க பெண்களுக்கு அறுவை சிகிச்சை கூட செய்யலாம். ஆனால் தற்காலிகமாக விந்தணு வீரியம் இழக்க கூட ஆய்வு கூடாதா? என்ன மயுருக்கு அப்படி மனிதர்களை காய் அடிக்க வேண்டும் என்று கேட்கிரீகளே, பெண்களுக்கு இருப்பது போலவே தற்காலிக கருத்தடை செய்யும் technology என்ன மயுருக்கு ஆண்களுக்கு இருக்க கூடாது? ஆண்களுக்கு வேறு தற்காலிக கருத்தடை வேண்டும் என்பதற்கு காரணம் நீங்கள் சொல்வது தவிர எதுவுமே இல்லையா? ஒரு வேலை நானோ, அல்லது என் partner latex allergy இருக்கலாம், என் மனைவியால் birth control pill எடுக்க முடியாத நிலைமைக்கு இருக்கலாம், condom உபயோகிக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். மக்களை மலடாக்குவது மட்டும் தான் ஒரே நோக்கம் என கூறினால், எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

                • விந்தனுகளை செயலிழக்க செய்வது என்பது மனிதனை மலைடாகுவது தான் என்ற அடிப்படை கூட அறியாமல் பேசிக்கொண்டு உள்ளீர்கள்! மீண்டும் கருவுரு நிலைக்கு மனிதனின் நிலை திரும்புமா இல்லையா என்ற விஷயம் இந்த ஆய்வில் கேள்விக்குறியாக உள்ளபோது இதனை பெண்களின் கருதடை முறைகளுடன் ஒப்பீடு செய்கின்றீர்கள்! உங்கள் அறிவு மெச்ச தகுந்தது… பெண்களுக்கான கருத்தடை முறைகளை மீண்டும் தேவை படும் போது கருஉரு நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்ற அடிப்படை உண்மை கூட உங்களுக்கு தெரியவில்லையே நண்பா! ஆனால் இந்த ஆய்வின் அடிப்படையில் மனிதனின் கருஉரு நிலை திரும்புமா என்பது அவர்களின் வார்த்தைகளின் அடிப்படையிலேயே நிச்ச்சயம் இல்லாதது…. அப்படி இருக்க என்ன மயித்துக்கு மனிதனை மலடாக்க வேண்டும் நண்பா?

                  //what is the meaning of his statement ” “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.”?//

                  • //மீண்டும் கருவுரு நிலைக்கு மனிதனின் நிலை திரும்புமா இல்லையா என்ற விஷயம் இந்த ஆய்வில் கேள்விக்குறியாக உள்ளபோது இதனை பெண்களின் கருதடை முறைகளுடன் ஒப்பீடு செய்கின்றீர்கள்!//

                    திரும்பவும் கேட்கிறேன். முதலில் ஆய்வு அறிக்கையை படித்தீர்களா, இல்லையா? இல்லை நான் எழுதியதையாவது படித்தீர்களா?

                    அவர்கள் ஆய்வில் எதிர்பார்த்த அளவுக்கு sperm count, குறைந்த போதும் கருத்தரிக்கும் தன்மை போகவில்லை என்று தெளிவாகவே கூறி இருக்கிறார்கள்.

                    //Our results clearly show that therapeutic ultrasound treatment depleted developing germ cells from the testis and subsequently decreased the size of sperm reserves in the epididymis when rats were treated with two consecutive ultrasound treatments separated by two days [Table 4 Figure 6].

                    Thus, we anticipate that decreasing sperm count sufficiently to cause infertility in rats would also cause infertility in men. However, sperm counts or concentrations that would represent infertility in men could allow rats to retain their fertility. Our second pilot study showed that the absence of motile sperm at the end of a mating trial did not rule out the ability to sire pups. //

                    அதாவது அவர்கள் எதிர்பார்ப்பது போல low sperm count, absence of motile sperm இருந்தாலும் கருத்தரிக்கும் தன்மை இருப்பதை மறுக்க முடியவில்லை என்கிறார். எனவே தான் இது promising candidate என்பதுடன் நிறுத்திகொண்டார்கள். செய்தது article இல் இருக்கிறது. ஆனால் அது misquote என ஏற்கனவே விளக்கி விட்டேன்.

                    //Conclusions
                    The non-invasive nature of ultrasound and its efficacy in reducing sperm count make therapeutic ultrasound a promising candidate for a male contraceptive. However, further studies must be conducted to confirm its efficacy in providing a contraceptive effect, to test the result of repeated use, to verify that the contraceptive effect is reversible and to demonstrate that there are no detrimental, long-term effects from using ultrasound as a method of male contraception.//

                    தயவு செய்தி ஆய்வு அறிக்கையில் என்ன இருக்கிறது என பாருங்கள் அய்யா. உங்கள் when or whether fertility would return என்பது article எழுதியவன் சொன்னது. அதை ஏன் எழுதினான் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆய்வில் அதை கூறவில்லை என்பதற்கு மேலே அவர்களின் ஆய்வு முடிவுகள் quote செய்து உள்ளேன். fertility முதலில் பாதிப்பு இல்லை என்னும் போது when or whether fertility would return என உங்கள் article ஏன் சொல்கிறது என்பதற்கு நீங்கள் விளக்கம் தாருங்கள்.

                    • அறிவாலியே நான் குறிப்பிட்ட அந்த ஆர்டிகளை எழுதியதே அந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் (Dr Dr. James Tsuruta)தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் வினவில் வந்து நீர் பிதற்றிகொண்டு உள்ளீர்கள் ஐயா!

                      https://srxawordonhealth.com/tag/dr-james-tsuruta/

                      // when or whether fertility would return என்பது article எழுதியவன் சொன்னது//

                • லூசு தனமாக உளறிக்கொண்டு இருகின்றீர்கள் சிந்தனை செய் ! பெண்களின் கருமுட்டையை செயலிழக்க செய்யும் கருத்தடை முறைகள் ஏதாவது நடைமுறையில் இருகின்றனவா என்ன? அப்படி பட்ட கருத்தடை முறைகள் ஒருவேளை நடைமுறையில் இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்! பெண்களுக்கான கருத்தடை சிகிச்சையில் என்ன செய்கின்றார்கள் என்பது தெரிந்துமே நீங்கள் உளறிக்கொண்டு இருபது ஏன்? அதற்கு இணையான ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முறைகளிலும் என்ன செய்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்… இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்…..
                  உங்களின் அறிவு படி ஆண்களை அவர்களின் விந்தனுகளை செயலிழக்க செய்வதன் மூலம் மலைடாகியாயிர்று! அடுத்து பெண்களின் கற்பபையில் என்ன செய்து அவர்களையும் மலைடாகுவதாக உத்தேசம்? கற்ப பையை நீக்க போகின்றீர்களா? அல்லது கரு முட்டைகள் மேச்சுரட்டி அடைவதனை வேறு ஏதாவது முறையில் தடை செய்துவிட்டு சதிராட்டம் ஆட போகின்றீர்களா? உங்களின் நசகர சிந்தனை மனித குலத்துக்கே எதிரானது என்பதனை உணரும் நேரம் வராமலா போகும் !

  14. அய்யா விஞ்ஞானி,

    //ஐயா அறிவு முற்றிய ஜீவியே…, ஆற அமர உங்கள் ஆசனத்தில் அமர்ந்து சிந்தியுங்கள்! எந்த Data management software ஆக இருந்தாலும் அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… சும்மா வினவின் இணைய தகவல் கிடங்கை (வெப்சர்வர்ஸ்பெஸ்) உங்கள் கிறுக்கல்கள் மூலமாக குப்பையாக மாற்ற முனையாதிர்கள்….ஒருவேலை இது நீங்கள் கூறுவது போன்று hospital management software ஆக இருந்தாலும் கூட அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… ஆனால் அது அப்படி பட்ட எளிய மென்பொருள் அல்ல என்பது மைக்ரோசாப்ட் நியூஸ் முலம் புலனாகின்றது…//

    நீங்கள் என்ன தான் அழித்தாலும், எடிட் செய்தாலும் அது database இல் தான் இருக்கும். அத வெச்சு வேற எதுவும் பண்ண முடியாது. மேலயே சொன்ன மாதிரி, x-ray replace வேணா பண்ண முடியும். அத வெச்சு இருக்கற கால மென்பொருளால ஓடைக்க அல்லது மாற்ற முடியாது. இன்னும் எளிதா சொல்லணும்னா databaseல தற்போதய அட்ரஸ் மாற்றலாம். ஆனா நீங்க மாற்றும் அட்ரஸ் கு ஒரு மனிதரை குடி போகும் படி செய்ய முடியாது. அதுனால தான் அது data management software மட்டுமே. தெளிவா data management software ன்னு எல்லாரும் சொல்றாங்க. நீங்க மட்டும் தான் இது முடியும், அது முடியும் ன்னு சொல்லிடு இருக்கீங்க.

    நான் ரொம்ப அதிகமா எல்லாம் கேக்கல சார். நீங்க சொன்னதை ஒரு சின்ன demo செஞ்சு காடுங்க. அந்த மென்பொருளால் நீங்கள் சொன்ன விசயத்தை செய்ய முடியும் என நிரூபணம் செய்யவும். நான் எல்லாத்தையும் பொத்திட்டு, சென்னை மவுண்ட் ரோடு நடுவுல உங்க கால்ல விழுந்து “நான் சொன்னது தப்புன்னு “மன்னிப்பு கேக்கவும் சரி. இல்லை நீங்க என்ன சொன்னாலும் கேட்க தயார். உங்களால முடியலையா. நீங்க ஒண்ணே ஒண்ணு செஞ்சா போதும். இனிமேல் provable, verifiable factual evidence கொண்டு மட்டுமே எனது பார்வைகள் கட்டமைக்க முயற்சி செய்யவும் என்பது மட்டுமே என் கோரிக்கையாக இருக்கும்.

    • மைக்ரோசாப்ட் நியுஸ் கூறும் விசயத்தை கூட ஏற்க்க மாட்டேன் என்றால் எப்படி அறிவாளி சிந்தனை செய் அவர்களே!?
      இதுவரைக்கும் மாற்றமுடியாது, அழிக்கமுடியாது என்று வெட்டி வாதம் செய்து கொண்டு இருந்தவர் இப்ப தான் அதுவும் மூன்று நாட்கள் கழித்து அழிக்க முடியும் மற்றும் மாற்ற முடியும் என்று ஏற்றுகொள்கிண்றீகள்… நன்றி அப்படியே அடுத்ததாக இந்த மனித குல நாசகர தொழில் நுட்பத்துக்கு Merck & Co நிறுவனம் உள்ளீடுகளை (bio informatics input data) வழங்க ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளது. இந்த விசயத்தில் Merck & Co ஆய்வு நிறுவனத்தின் துணை தலைவர் ருபர்ட் வெஸ்லியின் வாக்குமூலம் என்னவென்றால் “இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி மருந்து தயாரிப்பிலும் ஈடுபடும்” என்பதாகும். மேலும் அவர் கூறும் விஷத்தை அவர் கூறும் விசயத்தில் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது என்னவென்றால் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மரபணுக்கள் மீது செயல்படும் பயோஇன்போர்மடிக்ஸ்- உயிர் தகவலியல் சார்ந்த (Bioinformatics) மருந்து கண்டுபிடிப்புகளை உற்பத்திகளை செய்யமுடியும் என்பது தான். பயோஇன்போர்மடிக்ஸ் என்பது மரபணுக்களின் தகவல்களை கணினியில் சேமித்து வைத்து ஆராயும் அறிவியல் துறை ஆகும். அப்படி பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்க போகும் மருந்துக்கள் மரபணுக்கள் மீது ஆளுமை செய்யும் மருந்துகளாகத்தானே இருக்க முடியும்? (gene-targeting drugs and vaccines”)

      ஆதாரம் :
      “This agreement establishes a stable and sustainable platform for the Rosetta Biosoftware technology. In addition, we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development,” said Rupert Vessey, vice president, Merck Research Laboratories. “This is part of our previously announced strategy designed to improve the effectiveness and efficiency of our Basic Research operations to ensure long-term pipeline productivity.”

      Read more at https://news.microsoft.com/2009/06/01/microsoft-signs-agreement-with-merck-co-inc-to-acquire-assets-of-rosetta-biosoftware-strengthening-position-in-life-sciences-industry/#ftgAI4ljM4PveOIs.99

      • இந்த காமெடி தான் வேணாம். ஆதியில் இருந்தே அது data management software என்பது தானே நான் கூறி உள்ளது? record update செய்ய முடியாவிட்டால் அந்த data management மென்பொருளால் என்ன பயன்? திரும்பவும் சொல்றேன். மொதல்ல நீங்க சொல்வது எல்லாம் அந்த மென்பொருளால் செய்ய முடியும் என நிரூபிக்கவும். உதாரணமாக கீழே உள்ள காணொளியில் எவ்வாறு Amalga மருத்துவ records கையாளுகிறது, அதை கொண்டு என்ன செய்கிறார்கள் என மருத்துவர் மற்றும் மருத்துவமனை administrators பேசுகின்றனர். நீங்கள் கூறியது போல செய்யும் திறன் எல்லாம் இந்த மென்பொருளுக்கு உண்டு என நீங்கள் முதலில் நிரூபிக்கவும். பிறகு அடுத்த படிக்கு செல்வோம்.

        • சிந்தனை செய் அவர்களே , நீங்க பண்ணுவது காமடி கூட இல்லை அறிவாளி நண்பரே! அறிவுக்கு எதிரான விஷயம்…. Yes முட்டாள் தனமான விசயம்! அவர்களே கூறும் விசயம் கூடவா உங்கள் அறிவுக்கு புலப்படவில்லை? என்ன கொடுமை சாமி இது?

          Rosetta Biosoftware + Amalga Life Sciences இவைகள் இரண்டும் ஒன்றினையும் போது அந்த புதிய மென்பொருள் பெரும் சிறப்பம்சங்களை அவர்களே வாக்குமூலமாக கீழ் கண்டவாறு கொடுத்து உள்ளார்களே!

          “”we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development””

          இந்த செய்தியை நான் உங்களுக்கு மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இருந்து தானே கொடுக்கின்றேன்… அப்புறம் என்ன வாக்குவாதம் ! உங்கள் விவாதம் கண்மூதனமாக உள்ளது நண்பரே!

          Read this Microsoft News completely…

          “This agreement establishes a stable and sustainable platform for the Rosetta Biosoftware technology. In addition, we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development,” said Rupert Vessey, vice president, Merck Research Laboratories. “This is part of our previously announced strategy designed to improve the effectiveness and efficiency of our Basic Research operations to ensure long-term pipeline productivity.”

    • இந்த ஒப்பந்தம் அதாங்க Rosetta Biosoftware தொடர்பாக போட்டுக்கிட இரு நிறுவனங்களுமே மருந்துகள் செய்யும் விசயத்தில் அவர்களின் செயல் திறனை கீழ்கண்டவாறு ஏற்றுக்கொண்ட பின்பும் நீங்கள் வினவில் வந்து மொக்கை போடுவது ஏன் ?

      “This agreement establishes a stable and sustainable platform for the Rosetta Biosoftware technology. In addition, we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development,” said Rupert Vessey, vice president, Merck Research Laboratories. “This is part of our previously announced strategy designed to improve the effectiveness and efficiency of our Basic Research operations to ensure long-term pipeline productivity.”

      இதுக்கு பின்பும் மவுண்ட் ரோட்டில் எல்லாம் நீங்கள் யார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் வினவில் மொக்கை போடாமல் இருந்தாலே அது வினவு வாசகர்களுக்கு நன்மை பயக்கும்….!

      • அது எப்படி நீங்க எப்பவுமே முழு article படிக்க மாட்டேன்னு இருக்குறீங்க? நீங்க குடுத்த அதே தரவில் உள்ளதை பார்க்கவும்:

        //Introduced in April 2009, Microsoft Amalga Life Sciences is a new software platform designed to transform health and life sciences research data into the critical knowledge needed for the discovery of new treatments. The platform helps organizations across the life sciences spectrum accelerate research and discovery efforts by automating the management and analysis of massive, heterogeneous research data. This gives scientists and researchers the opportunity to redesign, manage and control research processes to increase productivity, reduce errors and improve decision-making.//

        இங்கயும் data management தான் பேசுறாங்க. dataவை சுலபமாக கையாள முடிவதால் அதில் காலம் உட்காந்து தட்டி கொண்டு இராமல் ஆய்வில் அதிக நேரம் மற்றும் முயற்சி செய்ய முடிகிறது. இதில் நீங்கள் கீழே கூறியது போல செய்யும் திறன் எவ்வாறு வருகிறது என்று நீங்கள் தான் முதலில் நிரூபிக்க வேண்டும்.

        //2009 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நான் மும்பே குறிப்பிட்டு உள்ள Merck & Co ( the world’s largest maker of vaccines) என்ற மருத்துவ நிறுவனத்திடம் இருந்து ஒரு உயர் கணினி மென்பொருள் தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கியுள்ளது. அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இயுகனிஸ் நோய் தடுப்பு மருந்துகளை ( eugenics vaccines) உற்பத்தி செய்யமுடியும்.//

        • அறிவு கொழுந்து சிந்தனை செய் அவர்களே ,

          கீழ் உள்ள மைக்ரோசாப்ட் நியூஸ் விசயத்துக்கு தமிழ் மொழி பெயர்ப்பு என்னவென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…

          “”we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development””

          Bioinformatics- drug discovery development-> இவைகள் எல்லாம் எதனை நோக்கியது என்று உங்களுக்கு புரியவில்லையா? gene targeting சம்பந்தமானதுஎன்று கூட புரியவில்லையா நண்பரே! புரியாவிட்டால் மீண்டும் நீங்கள் Bioinformatics பற்றிய அடிப்படைகளையும் அதன் பயன்பாடுகளையும்(ஒரு பயன்பாடு drug discovery) மீண்டும் படித்து பின்பு வினவுக்கு வந்து விவாதியுங்கள் நண்பரே !

          • bioinformatics, drug discovery and development எல்லாம் சரி தான் சார். drug discovery and developementஇல் data crunching, data analysis, போன்றவை பெரும் பங்கு என்பதை நீங்கள் மறப்பது ஏனோ? ஆய்வில், மருந்து கண்டுபிடிப்பில் data management முக்கியத்துவம் பற்றி பேசும் ஒரு ஆய்வு அறிக்கையில் இருந்து:

            //Drug discovery is a highly complex process requiring scientists from wide-ranging disciplines to work together in a well-coordinated and streamlined fashion. While the process can be compartmentalized into well-defined functional domains, the success of the entire enterprise rests on the ability to exchange data conveniently between these domains, and integrate it in meaningful ways to support the design, execution and interpretation of experiments aimed at optimizing the efficacy and safety of new drugs. This, in turn, requires information management systems that can support many different types of scientific technologies generating data of imposing complexity, diversity and volume.//

            பிறகு bioinformatics என்பது biological data புரிந்துகொள்ள, analyze செய்ய மென்பொருள் மற்றும் methods உருவாக்கும் field. இது தான் bioinformatics அடிப்படை. விக்கிபீடியா பக்கம் பார்த்து இருந்தாலே இது தெரிந்து இருக்கும். நீங்க தேவை இல்லாம இல்லாத எல்லாம் இருக்குனு கட்டி ஓட்றீங்க. நீங்கள் மொதல்ல அடிப்படை படிங்க சார். அப்புறம் தான் அடுத்தவன் படிச்சானா, இல்லையான்னு தெரியும்.

            //Bioinformatics Listeni/ˌbaɪ.oʊˌɪnfərˈmætɪks/ is an interdisciplinary field that develops methods and software tools for understanding biological data. As an interdisciplinary field of science, bioinformatics combines computer science, statistics, mathematics, and engineering to analyze and interpret biological data. Bioinformatics has been used for in silico analyses of biological queries using mathematical and statistical techniques.//

            இங்கயும் நீங்க சொல்ற மாதிரி gene targetting லாம் வரலியே சார். உயிரியல் சம்பந்த பட்ட அனைத்து மென்பொருள், methodologies பற்றிய படிப்பு களம் bioinformatics என்று தானே சொல்கிறது? ஒரு மென்பொருள் நிறுவனம், பல துறைகளில் மென்பொருள் தயாரிப்பதில் என்ன பெரிய ஆச்சர்யம்?

            இல்லை இதால் மீண்டும் gene targetting செய்ய முடியும், eugenics vaccine உருவாக்க முடியும் என்று நீங்கள் கூறினால் மீண்டும் சொல்கிறேன். நிரூபிக்கவும். இதை செய்வதற்கு தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மென்பொருளை வாங்கியது என்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. முதலில் அதை தாருங்கள். சும்மா claims மட்டும் போதாது.

            Sources:

            An integrated data management framework for drug discovery–from data capturing to decision support. = https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22571793

            Data management in clinical research: An overview -https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3326906/

            Searching Electronic Health Records for Temporal Patterns in Patient Histories: A Case Study with Microsoft Amalga – https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2655947/

            Achieving and Sustaining Automated Health Data Linkages for Learning Systems: Barriers and Solutions – https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25848606

            https://en.wikipedia.org/wiki/Bioinformatics

            • சிந்தனை செய்! பலுன் வெடித்து விட்டதா? முதலில் Gene targeting என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்…..

              Gene targeting is a genetic technique that uses homologous recombination to change an endogenous gene. The method can be used to delete a gene, remove exons, add a gene, and introduce point mutations.

              அடுத்து இந்த தொழில்நுட்பம் bioinformatics ன் பல பயன்பாடுகளில் ஒன்று எனவும் தெரிந்து கொள்ளுங்கள்!

              https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4676132/

              அதற்கு அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அத்தகைய திறமையை இந்த புதிய மென்பொருள் முலம்பெற்று உள்ளது என்பதனையும் அவர்களின் செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

              • திரும்ப, திரும்ப ஒரே கேள்வி கேக்க வேண்டியதா இருக்கு. அந்த ஆய்வை முதலில் நீங்கள் படித்தீர்களா? அவர்கள் ஆய்வின் abstract படித்தாலே gene targetting செய்யப்படவில்லை என்பது தெரிகிறது

                // In order to make easier the identification of specific target genes, bioinformatics tools have been set-up. They provide the possibility to analyze a particular sequence located at the 5’ end of miRNA, called “seed region”, in order to predict the most probable genes potentially interacting with it. Although complementarity remains the main feature, the tools take into account other important characteristics such as site accessibility, sequence conservation, multiple binding sites [11]. Bioinformatics tools have greatly improved methods for detection of miRNA targets, due to their ability in quickly processing huge datasets.//

                bioinformatics tool மிக பெரிய dataset விரைவாக process செய்ய பயன்படுதபடுகிறதாக தான் இங்கும் கூறப்பட்டுள்ளது. bioinformatics எங்கு, எதற்கு பயன்படுத்தினார்கள் என்பதும் தெளிவாகவே இருக்கிறது.

                //In this paper, we moved forward in order to obtain a list of potential genes, all together related to a small group of significantly altered miRNAs in HCC. So, we started to predict putative target genes by making use of relatively different bioinformatics algorithms [14–18]. Secondly, we conducted enrichment annotation analysis to identify functional clusters which could be related to those target genes. Finally, we built up networks to visualize the possible circuits and pathways where the selected miRNAs could be involved, providing a resource for further functional studies on HCC pathogenesis.//

                முதலில் நான்கு bioinformatics algorithm கொண்டு interaction prediction. microrna.org, Targetscan.org, PITA and Rna-22 என்ற நான்கு database இல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு miRNA தந்து target list பெறப்பட்டது. பிறகு அது genemania எனப்படும் மென்பொருளில் தரப்பட்டு gene interaction network பெறப்பட்டு, பின்பு அது ஆய்வு மற்றும் real world data கொண்டு fine tune செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தான் இங்க பண்ணி இருக்காங்க. இந்த மாடல் மற்றும் workflow கொண்டு பெறப்பட்ட இந்த gene interaction network, ஆய்வகத்தில் HCC புற்றுநோய் செல்லில் உருவாக்கி அது வளரும்ப வரை காத்திராமல், எளிதே interaction பற்றி பார்க்க ஒரு alternative கணிணி model என பயன்படுதல்லாம் என்று முடிகின்றனர்.

                // In this work we combined biomolecular results, based on an in vivo model, with in silico analysis. We created a workflow able to connect miRNAs, found to be dysregulated in chemically-induced hepatocarcinogenesis, to respective putative targets; then we generated a wide protein interaction network involving other proteins physically interacting with them. The workflow was validated by evaluating and confirming the expression levels of one among the microRNAs’ predicted targets (ANKG) in the animal model here described. In conclusion, the experimental procedure could be used and employed for further researches on HCC initiation, development and progression.//

                இதிலும் huge dataset processing என தான் bioinformatics algorithm வருகிறது. modelling செய்ய கூட அவர்கள் வேறு ஒரு மென்பொருளை தான் பயன்படுத்தி உள்ளனர். இது அனைத்தும் open source என்பதையும் கவனத்தில் கொள்க. நீங்க குடுத்த ஆய்வு தான். இதிலும் bioinformatics எதற்கு பயன்படுத்த பட்டு இருக்கிறது என்று பார்த்தால் huge dataset processing பயன்பாடு பற்றி தான் இருக்கிறது. gene targetting, அதாவது, //a genetic technique that uses homologous recombination to change an endogenous gene. The method can be used to delete a gene, remove exons, add a gene, and introduce point mutations.// எங்குமே இல்லையே! gene interaction டாகுமென்ட் செய்கிறார்கள். அதுவும் அனைவரும் பயன்படுத்த கூடிய, open source மென்பொருள் கொண்டு. இந்த மென்பொருள்களும் கீழே லிங்க் செய்து உள்ளேன். நீங்களே verify செய்து கொள்ளலாம்.

                https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4676132/

                http://www.microrna.org/microrna/getMirnaForm.do

                http://www.targetscan.org/vert_71/

                http://www.mybiosoftware.com/pita-6-microrna-prediction-tool.html

                https://en.wikipedia.org/wiki/RNA22

                https://cm.jefferson.edu/rna22/Interactive/

                நீங்க தான் bio informatics மென்பொருள் கொண்டு gene targetting செய்ய முடியும் என கூறுகிறீர்கள். ஆய்வு கட்டுரை தெளிவாக huge dataset processing என கூறிவிட்டது. வேறு ஏதேனும் இருக்கிறதா, உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக?

                • நீங்க என்னதான் பக்கம் பக்கமாக மொக்கை அடித்தாலும் மைக்ரோசாப்ட் நியுஸ் கூறுவது படி அவர்கள் bioinformatics தொழில் நுட்பத்தையும் அதன் அடிப்படையில் gean based drug discovery மற்றும் gean based druge develeopment ஆகிய தகுதிகளையும் பெற்று உளார்கள் என்பது அவர்களின் வார்த்தைகளில் இருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும்!

                  மைக்ரோசாப்ட்நியூஸ் says….

                  “”we look forward to collaborating with Microsoft to develop new bioinformatic solutions to enable and expedite drug discovery and development””

                  //நீங்க தான் bio informatics மென்பொருள் கொண்டு gene targetting செய்ய முடியும் என கூறுகிறீர்கள். ஆய்வு கட்டுரை தெளிவாக huge dataset processing என கூறிவிட்டது. வேறு ஏதேனும் இருக்கிறதா, உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக?//

                  • சார்? முதலில் நீங்கள் தெளிவாக படித்தீர்களா?

                    //gean based drug discovery மற்றும் gean based druge develeopment ஆகிய தகுதிகளையும் பெற்று உளார்கள் என்பது அவர்களின் வார்த்தைகளில் இருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும்!//

                    இதற்க்கு ஆதாரம் எங்கே சார்? அவர்கள் சொல்வது new bioinformatic solutions to enable and expedite drug discovery and development என்பது தானே? இதில் drug discovery என்பதை gene based drug discovery என நீங்கள் ஏன் மாற்றுகிறீர்கள்? முதலில் bioinformatics என்றால் அது genetic research and therapy என்னும் குழப்பதை நிறுத்தவும். bioinformatics in drug discovery எதற்கு என்பதை நம் இருவர் பார்வையும் ஒத்தி வைத்து விட்டு, ஒரு neutral source மூலம் பார்போமே.

                    //Drug discovery and development informatics

                    Pharmainformatics

                    The multidisciplinary informatics needs of the pharmaceutical industry (HTS High Throughput Screening data, Computational Chemistry, Combinatorial Chemistry, ADME Informatics, Cheminformatics, Toxicology, Metabolic Modeling, Bioinformatics in Drug Discovery and Metabolism etc. information access and communication between various departments like the development and discovery. Yahoo Groups Pharmainformatics

                    Pharmaceutical bioinformatics

                    Bioinformatics and structure- aided drug design are really part of the same continuum. Bioinformatics offers a means to get to a structure through sequence; while structure- aided drug design offers a means to get to a drug through structure. We plan to combine innovative computational techniques with biochemical and structural expertise to bring bioinformatics and structure- aided drug design even closer together. In particular, we intend to blend computational chemistry with computational biology to create software that will aid protein chemists in understanding, evaluating and predicting the structure, function and activity of medically and industrially important proteins. My laboratory is currently involved in three “bioinformatics” projects. These include: (1) the development of novel methods to identify remote sequence/ structure relationships; (2) the creation of a compact, relational database with advanced bioinformatics functionality; and (3) the development of novel methods for predicting and evaluating protein secondary and tertiary structure. David Wishart, Wishart Pharmaceutical Research Group, Univ. of Alberta, Canada//

                    இந்த பக்கத்தில் bioinformatics எனப்படும் சொல்லுக்கு பல definition அளித்து உள்ளனர். அதையும் பார்போம்.

                    //What is Bioinformatics? Many definitions, difficult to reach agreement on.

                    The field of science in which biology, computer science, and information technology merge into a single discipline. The ultimate goal of the field is to enable the discovery of new biological insights as well as to create a global perspective from which unifying principles in biology can be discerned. There are three important sub- disciplines within bioinformatics: the development of new algorithms and statistics with which to assess relationships among members of large data sets; the analysis and interpretation of various types of data including nucleotide and amino acid sequences, protein domains, and protein structures; and the development and implementation of tools that enable efficient access and management of different types of information. “Education” NCBI, 2003 http://www.ncbi.nlm.nih.gov/Education/index.html

                    The definition of bioinformatics is not universally agreed upon. Generally speaking, we define it as the creation and development of advanced information and computational technologies for problems in biology, most commonly molecular biology (but increasingly in other areas of biology). As such, it deals with methods for storing, retrieving and analyzing biological data, such as nucleic acid (DNA/ RNA) and protein sequences, structures, functions, pathways and genetic interactions. Some people construe bioinformatics more narrowly, and include only those issues dealing with the management of genome project sequencing data. Others construe bioinformatics more broadly and include all areas of computational biology, including population modeling and numerical simulations. Russ Altman “What is bioinformatics?” Stanford Univ. 2002 http://smi-web.stanford.edu/people/altman/bioinformatics.html

                    Roughly, bioinformatics describes any use of computers to handle biological information. In practice the definition used by most people is narrower; bioinformatics to them is a synonym for “computational molecular biology” – the use of computers to characterise the molecular components of living things. Damian Counsell, bioinformatics.org FAQ http://bioinformatics.org/faq/#whatIsBioinformatics

                    Conceptualizing biology in terms of molecules (in the sense of physical- chemistry) and then applying “informatics” techniques (derived from disciplines such as applied math, CS [computer science] and statistics to understand and organize the information associated with these molecules on a large- scale. Mark Gerstein “What is Bioinformatics?” MB&B 474b3, 2001
                    http://bioinfo.mbb.yale.edu/what-is-it.html

                    Research, development, or application of computational tools and approaches for expanding the use of biological, medical, behavioral or health data, including those to acquire, store, organize, archive, analyze, or visualize such data. NIH, BISTIC Biomedical Information Science and Technology Initiative, 2005 http://www.bisti.nih.gov/ //

                    இது எல்லாவாற்றிலும் tools and algorithms for analyzing large sets of data, analysis and interpretation of various sets of data, development and implementation of tools that enable efficient access and management of different types of information, storing, retrieving and analyzing biological data என data handling பற்றி தானே பேசுகிறார்கள்?

                    இதில் நீங்கள் கூறுவது போல gene targetting, gene based medicine, genetic drugs என எங்குமே இல்லையே? எல்லாமே biological data handling and management பற்றி தான் பேசுகின்றன. பிறகு எப்படி bioinformatics மென்பொருள் கொண்டு gene targetting செய்ய முடியும் என ஒத்து கொள்ள முடியும்? ஒரு வேலை data managment கொண்டு நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய முடியும் என்றால், அது எவ்வாறு செய்ய முடியும்? அதிக கஷ்டம் இல்லா விட்டால் விளக்க முடியுமா?

                    • அறிவு கொழுந்தே bioinformatics தீர்வுகளின் மூலம் சித்தமருத்துவ மருந்துகளா செய்வார்கள்? அல்லது மரபணு தொடர்பான மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்வார்களா?

                      Drug discovery என்றாலே அது மரபணு குறித்த மருத்து கண்டுபிடிப்புகள் (gean based drug discovery)என்ற விசயம் இந்த bioinformatics துறையை இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தெரியும் என்ற நிலையில் உங்கள் மொக்கைகள் வினவு தளத்தை குப்பையாக்குகின்றனவே நண்பா! மேலும் gean based drug development என்ற நிலையும் Drug discovery க்கு அடுத்த நிலைதானே! மூளையை செலுத்தி கீழ் உள்ள மைக்ரோசாப்ட் நியூஸ் செய்தியை மீண்டும் படிக்கவும்! “”new bioinformatic solutions to enable and expedite drug discovery and development””” “புதிய bioinformatics தீர்வுகளின் மூலம் துரிதப்படுத்தி செயல்படுத்தி மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உருவாக்குதல்”

  15. வினவு,

    Conspiracy Theory-க்கும் மார்க்சிய கண்ணோட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை தயவுசெய்து விளக்குங்களேன். ஒரே குழப்பமாக இருக்கிறது.

    இந்தக் கட்டுரையை ஆதரித்து வாதிடுபவர்களின் வாதங்களை ஏற்றுக்கொள்ளாமல் விடவும் முடியவில்லை. அதேசமயம் சிந்தனை செய் வாதிடுவது முற்றிலும் தவறு என்றும் விட முடியவில்லை.

  16. செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

    https://www.vinavu.com/2010/07/08/synthetica/

    //ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

    சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல; ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.///

    //புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.///

    //உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

    இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.//

  17. @ சிந்தனை செய் ,ராம்சங்கர்,ஆழிமதி and Vinavu Readers,

    இந்த விவாதத்தில் ஆண்களின் விந்தனுகளை செயலிழக்க செய்வதற்கான ஆய்வுகளை மைக்ரோசாப்ட் நிதி உதவியுடன் செய்கின்றார்கள் என்ற விசயத்தை எதிர்க்கும் நிலையில் அதனை பெண்ணுரிமையுடன் இணைத்து பேசிக்கொண்டு உள்ளார் சிந்தனை செய் அவர்கள்…. ஆணைகளுக்கும் சரி பெண்களுக்கும் சரி கருத்தடை முறைகளாக (sterilization methods for male and female) இருகின்றன. அந்த இருவருக்குமான கருத்தடை முறைகளில் பெண்ணின் கருமுட்டைகளோ அல்லது ஆணின் விந்தனுக்களோ சேதம் அடைவது இல்லை…. ஆனால் இவர் ஆதரிக்கும் UV கதிர்கள் முறையில் ஆணின் விந்தணுக்கள் சேதம் அடைகின்றன… அப்படி எனில் இந்த முறை கருத்தடை முறையா அல்லது மலடாக்கும் முறையா? இந்த கேள்வியை வினவு வாசகர்களிடமே பொதுவில் வைக்க விரும்புகிறேன்…

    மேலும் இன்று பயன்பாட்டில் உள்ள கருத்தடை முறைகளை கீழ்கண்டவாறு வகைமை படுத்தலாம் :

    Sterilisation works by stopping the egg and the sperm meeting.

    In female sterilisation (tubal occlusion) this is done by cutting, sealing or
    blocking the fallopian tubes which carry an egg from the ovary to the uterus (womb).

    In male sterilisation this is done by cutting and sealing or tying the vas deferens (the tube that carries sperm from the testicles to the penis). This is called vasectomy.

    இந்த இருமுறைகளும் ஆண் மற்றும் பெண் என்ற பாலின சமநிலையை தானே உருவாக்கி யுள்ளது! அப்படி இருக்க UV கதிர்கள் மூலமாக ஆணின் விந்தணுக்களை செயலிழக்க செய்யும் முறையை இவர் (சிந்தனை செய்) ஏன் ஆதரித்துக்கொண்டு உள்ளார் என்ற கேள்விக்கான விடை அவரின் கண்மூடிதன்மான அறிவியல் மீதான நல்லது கெட்டது என்ற நிலையை கடந்த பக்தியை தான் அப்பட்டமாக காட்டுகின்றது.

    • //அந்த இருவருக்குமான கருத்தடை முறைகளில் பெண்ணின் கருமுட்டைகளோ அல்லது ஆணின் விந்தனுக்களோ சேதம் அடைவது இல்லை//

      தயவு செய்து விஷயம் தெரியலனா குறைந்த பட்சம் விக்கிபீடியா பக்கத்தையாவது படிங்க சார். இப்படி உக்காந்து தவறான செய்தி அளித்துக்கொண்டு இருக்காதீர்கள். பெண்களுக்கு கருத்தடை முறையாக tubal occlusion மட்டும் தான் இருக்கிறது என நினைத்து கொண்டு இருகிறீர்களா? பெண்களுக்கு இருக்கும் கருத்தடை முறைகளை ஆறு வகை படுத்தலாம். அவை முறையே:

      Hormonal, Barrier, Intrauterine devices, Sterilization, Behavioral, Emergency and Dual Protection.

      இதிலும் pills, implants, patches, vaginal and uteral rings, condoms, copper implants என பல வகை உண்டு. hormonal methods ovulation நடப்பதை தடை செய்து விடும். நீங்க கேட்ட கருமுட்டை சேதம் விட, கருமுட்டை உருவாவதை தடை செய்து விடுகிறது. இதில் birth control pills, morning after pills, implants, patches என பல உண்டு (இந்த மருந்துகள் மேல்நாடுகளில் பெண்களுக்கு அடிப்படை மருத்துவவசதியில் i.e. basic healthcareஇல் அடக்கம்) . கருமுட்டை இல்லாததால் அங்கு fertilize செய்ய எதுவும் இல்லை. copper IUD விந்தணுக்களை அழித்து விடும் i.e. spermicide. vaginal ரிங் போன்றவை விந்தணு உள்ளே நுழையாமல் தடுத்து விடும். they act as physical barrier. இதில் இந்த எல்லா முறைகளும் vaginal implants, uterus implants, patches and oral என பல இடங்களில் உபயோகிக்கும் விதத்திலும் உள்ளன. பல வித mechanism, பல வித இடங்களில் பயன்படுத்தும் flexibility.

      பெண்களுக்கு இத்தனை easy to use, long term, low impact and reversible birth control முறைகள் உள்ளன. ஆண்களுக்கு இருப்பது குழாயை வெட்டி விடுவது தான். நிரந்தர முறை…. இதில் சமநிலையை எங்கே அய்யா கண்டீர்?

      Sources:

      https://en.wikipedia.org/wiki/Birth_control

      • ஆணுக்கும் பெண்ணுக்கும் Sterilisation கருதடை முறை சமநிலையை கொடுகிறது என்பதனை புரிந்துக்கொள்ள உங்களுக்கு இன்னும் நேரம் போதவில்லையா நண்பா? female sterilization (tubal occlusion) முறைக்கு இணையாக male sterilization (vasectomy.) இருப்பதனை நீங்கள் புரிந்துகொள்ள இன்னும் எத்துனை நாட்கள் ஆகுமோ? பெண்ணின் கருமுட்டையோ, அல்லது ஆணின் விந்தணுக்களோ UVகதிர் ஆய்வு போன்றுவேறு எந்த கருத்தடை முறையிலும் உற்பத்தி நிலையில் செயலிழக்க செய்யபடுவது இல்லையே! அப்புறம் எப்படி உங்கள் வாதம் சரியானதாகும்?

        • //பெண்ணின் கருமுட்டையோ, அல்லது ஆணின் விந்தணுக்களோ UVகதிர் ஆய்வு போன்றுவேறு எந்த கருத்தடை முறையிலும் உற்பத்தி நிலையில் செயலிழக்க செய்யபடுவது இல்லையே!//

          அய்யா, தெளிவா படிச்சிட்டு தான் பேசறீங்களா? birth control pills, morning after pills, patches போன்றவை கருமுட்டையை உற்பத்தி செய்ய விடாமல் செய்கிறது. நீங்கள் கேட்ட உற்பத்தி நிலையில் செயல் இழக்க செய்யும் கருத்தடை முறைகள் இவை.

          ஆண்களுக்கு sperm count குறைக்க முடிவது போல பெண்களுக்கு செய்ய முடியாது. காரணம் அங்கு வருவதே ஒரே ஒரு கருமுட்டை தான். எனவே தான் பெண்களுக்கு இருக்கும் பல தற்காலிக கருத்தடை மருந்துகளில் சில கருமுட்டையை வர விடாமல் தடுப்பவை.

          கடைசியாக நீங்கள் பேசும் tubal occlusion, vasectomy ஆகிய இரண்டும் செய்து விட்டால் பிறகு திரும்ப கருத்தரிக்கும் தன்மையை கொண்டு வர முடியாது. They are permanent. ஆண்களுக்கு பெண்களுக்கு இருப்பது போல reversible, safe and temporary கருத்தடை வேண்டும் என்பது என் வாதம். புது mechanism, முறைகள் கூட வேண்டாம். பெண்களுக்கு இருக்கும் முறைகள் செய்வதை இங்கு replicate செய்தால் கூட போதும். இது தவறான கருத்து என்று நீங்கள் நினைத்தால் ஏன் என்று விளக்கவும்.

          • Tubal ligation is permanent birth control. Although it may be reversed by another operation, only about 50% to 80% of women are able to become pregnant after having their fallopian tubes reattached.

            http://www.hopkinsmedicine.org/healthlibrary/test_procedures/gynecology/tubal_ligation_135,27/

            சுனாமி பேரழிவின் போது தங்களின் குழந்தைகளை இழந்த தாய்கள் கருத்தடை செய்து இருந்த போதும் மீண்டும் குழந்தை பெரும் நிலையை அறுவை சிகிச்சை மூலம் அடைந்தார்கள் என்று படித்த நினைவு

            //They are permanent. //

            • சார் குடுத்த லிங்க்ல அதுக்கு முன்னாடி வரி பாத்தீங்களா? இந்த selective quoting, context twisting தான வேண்டாம்கறது. முழு வரியும் தான் போடுங்களேன்.

              //Tubal ligation is permanent birth control. Although it may be reversed by another operation, only about 50% to 80% of women are able to become pregnant after having their fallopian tubes reattached. This surgery doesn’t prevent sexually transmitted disease. You will still need to practice safe sex.//

              முதல் வரி என்ன?

                • அதுக்கு நீங்க தான் சார் பதில் சொல்லணும்…tubal occlusion மற்றும் vasectomy permanent என்பதை உங்கள் தரவுகள் சொல்லி விட்டன. reversible செய்ய முடிந்தாலும் அவை ஏன் permanent, மற்ற முறைகள் ஏன் temporary என்னும் கேள்விக்கு நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.

                  • ஒரு செயலின் தாக்கம் நிரந்தரம்(permanent) என்றால் அதில் திரும்ப பழைய நிலையை அடைதல்(reversible) என்பது எப்படி சாத்தியம் ஆகும் என்று நீங்கள் தான் விளக்கவேண்டும்!

                    • தாக்கத்தை 100% reverse செய்ய முடியும், எந்த பிரச்சனையும் இல்லாமல் என்றால் தான் அது temporary. நீங்க வெட்டிய குழாயை மீண்டும் ஓட்ட வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அது 100% திரும்பவும் கருத்தரிக்கும் தன்மையை கொண்டுவரும் என்பது உத்தரவாதம் கிடையாது. குழாயை வெட்டி விட்டால் 100% கருத்தரிக்க முடியாது. ஆனால் மீண்டும் கருத்தரிக்க முடியும் என்பதும் கேள்விக்குறி. எனவே தான் அது permanent.

                      மற்ற முறைகள், i.e. birth control pills, patches, IUD போன்றவை கருத்தரிக்கும் தன்மையை மீண்டும் கொண்டு வருவதில் பிரச்சனை ஏதும் இல்லை. அவற்றை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் போதும். எனவே தான் அது temporary.

                  • Sterilisation கருதடை முறையில் வெட்டிய குழாய்களை மீண்டும் இணைத்து கருத்தரிப்பை அடைவது 100% சாத்தியம் இல்லாத போது இந்த அல்ட்ரா சவுண்டு கருதடை முறையில் கருதரிப்பு மீண்டும் சாத்தியம் என்று இன்னும் அந்த ஆய்வு தலைவரால் நிருபணம் செய்யபட்டவில்லையே! அப்புறம் எப்படி நீங்கள் அல்ட்ரா சவுண்டு கருதடை முறையை தற்காலிகம் என்று அறுதியிட்டு கூறுகின்றீர்கள் !

            • இதுலயும் அதே முதல் வரி… முடியல சாமி.

              //A vasectomy is considered a permanent method of birth control. Vasectomy reversal (vasovasostomy) reconnects the tubes (vas deferens) that were cut during a vasectomy.

              Vasectomy reversal is usually an outpatient procedure (without an overnight stay in the hospital). Spinal or general anesthesia is commonly used to ensure that you stay completely still during the surgery.

              The chances of vasectomy reversal success depend on how much time has passed between the vasectomy and the reversal. Over time, additional blockages can form, and some men develop antibodies to their own sperm.

              The surgery is more complicated and takes more time when blockage between the vas deferens and the epididymis camera.gif requires correction (vasoepididymostomy).//

              இதுலயும் permanent…. ஏன் இந்த underhanded வேலை எல்லாம். முழுசா quote பண்ணுங்க சார்.

                • reversal impossibleன்னு யாருமே சொல்லல சார்.அது செய்து விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் தன்மையை 100% கொண்டு வர முடியுமா என்பது தான் பிரச்சனையே. வெட்டி விட்டால் 100% கருத்தரிக்க முடியாது. ஆனால் reverse செய்தாலும் 100% மீண்டும் கருத்தரிக்கும் திறன் வந்து விடும் என்பது இல்லை. அதனால் தான் temporary முறைகள், அறுவைசிகிச்சை இல்லாத முறைகள் வேண்டும்.

                  • Vasectomy முறையில் reversal சாத்தியம் என்று நிருபிக்கப்பட்டு உள்ளது! இதில் reversal எந்த அளவுக்கு சாத்தியம் என்று சதவீத அளவில் தான் உங்களால் பேச முடிகின்றது! ஆனால் அல்ட்ரா சவுண்டு முறையில் இன்னும் reversal சாத்தியம் தானா என்று நிருபிக்கபடவில்லை… மேலும் அந்த முறை பாதுகாப்பானது தானா என்று கூட ருபிக்கப்படவில்லை….. ஆனாலும் நீங்கள் அல்ட்ரா சவுண்டு கருதடை முறையை கண்ணை மூடிகொண்டு ஆதரித்துக்கொண்டு உள்ளீர்கள் ! Dr James Tsuruta said : “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times”

          • birth control pills, morning after pills, patches releases hormones. Hormones are chemicals made in our bodies. They control how different parts of our bodies work. The hormones in the patch are the same hormones as in the birth control pill — estrogen and progestin. The hormones in the birth control patch work by

            Keeping eggs from leaving the ovaries. Pregnancy cannot happen if there is no egg to join with the sperm.

            Making cervical mucus thicker. This keeps sperm from getting to the eggs.

            நீங்கள் கூறுவது போன்று எல்லாம் கருமுட்டையை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பது இல்லை…. வினவில் தவறான அறிவியல் தகவல்களுடன் உளறிக்கொண்டு இருக்காதீர்கள் நண்பரே!

            //birth control pills, morning after pills, patches போன்றவை கருமுட்டையை உற்பத்தி செய்ய விடாமல் செய்கிறது.//

            • அய்யா, நான் என்ன சொல்கிறேன் என்பது புரிகிறதா அல்லது புரியாத மாதிரி நடிப்பா? பெண்களுக்கு ஒரு மாத்திரை முழுங்கினால் அல்லது ஒரு patch வைத்தால் போதும். கருத்தடை செய்ய முடியும். இவை மிக பாதுகாப்பான, எளிய, easily reversible வழிமுறைகள். உக்காந்து falopian tube வெட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சைக்கே வேலை இல்லை. நீங்க tubal occlusion-vasectomy சமத்துவம் ன்னு ஏன் இதுல நுழைகரீங்க? பெண்களுக்கு இருப்பது போல ஆண்களுக்கும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு முறைகள் வேண்டும் என்பது தானே நான் ஆதியில் இருந்தே பேசி வருவது? என்னுடைய முதல் commentஇல் இருந்தே இது தான சார் சொல்கிறேன்…. இதில் என்ன குழப்பம் உங்களுக்கு? என்னுடைய முதல் பதிவில் (Comment 7) இருந்து நான் இதை பற்றி கூறியது:

              //அடுத்து, ஆண் குடும்ப கட்டுப்பாடு ஆய்வை எல்லாம் உலகை மலட்டு தன்மை ஆக்க செய்யும் ஆய்வு என்பது கேலி கூத்து. பெண்களுக்கு அறுவை சிகிச்சை, implants, morning after pill என குடும்ப கட்டுப்பாடு விசயத்தில் உதவ பல உள்ளன. ஆண்களுக்கு condom தவிர தற்காலிக குடும்ப கட்டுப்பாடு என எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை (vasectomoy) நிரந்தரனமானது. நம்ம ஊர்ல அரிசி, காசு குடுத்து பண்ண அதே அறுவை சிகிச்சை தான். எல்லா இடத்திலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே பெண்களுக்கு இருப்பது போலவே ஆண்களுக்கும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு சேவை இருப்பது நல்லதே.//

              பெண்களுக்கு இருக்கும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு முறைகள் போல ஆண்களுக்கும் வேண்டும். இது தானே நான் ஆதியில் இருந்து கூறி வருவது. இல்லை அதெல்லாம் வேண்டாம், vasectomy போதும் என்கிறீர்களா?

              tubal occlusion, vasectomy பற்றி மட்டுமே ஏன் சமநிலை என்று பேசுகிறீர்கள்? tubal occlusion பண்ண முடியாவிட்டால் பெண்களுக்கு எத்தனையோ மேற்கூறிய கருத்தடை முறைகள் உள்ளனவே. இங்கு விவாதம் ஆண்/பெண் தற்காலிக கருத்தடை முறைகள் பற்றியது தானே? ஏன் ஒன்றுடன் நிறுத்திவிட்டீர்கள்? பெண்களுக்கு இருக்கும் birth control pills, morning after pills, IUD, patch, vaginal ring போன்ற முறைகளில் ஆண்களுக்கு சமத்துவம் என்ன என்பதையும் கூறி விடுங்களேன்.

              உங்களுக்கு பிரச்சனை தற்காலிகம் என்றால் என்ன என்பதில் உள்ள குழப்பம் என நினைக்கிறன். பெண்களின் temporary birth control முறைகள் எதுவும் நீங்கள் அறுவை சிகிச்சை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கருத்தடைக்கு ஒரு அறுவைசிகிச்சை, அதை reverse செய்ய ஒன்று, அதிலும் மீண்டும் கருத்தரிக்கும் திறன் வருவதற்கு 100% உத்தரவாதம் இல்லை போன்ற பிரச்சனைகள் எதுவுமே இல்லை. இப்போதைக்கு குழந்தை வேண்டாமா? இந்த மாத்திரை முழுங்கினால் அல்லது patch வைத்தால் போதும். முடிவை மாற்றி கொண்டாகி விட்டதா? இன்னொரு குழந்தை வேண்டுமா? மாத்திரை அல்லது patch நிறுத்தினால் போதும். IUD வைக்க வேண்டும் என்றால் கூட மயக்க மருந்து எல்லாம் தேவை இல்லை. ஒரு வலி மாத்திரை கொடுத்து விட்டு வைத்துவிடலாம். வெளியே எடுக்க கூட ஒரு forceps போதும். இது போன்ற எளிய, பாதுகாப்பான, உடனே reverse செய்ய கூடிய, மீண்டும் குழந்தை வேண்டும் என்றால் 100% assurance கொண்ட குடும்ப கட்டுப்பாடு முறைகள் ஆண்களுக்கு வேண்டும். அதற்கான ஆய்வுகள் தேவை இல்லாமல் demonize செய்யபடுகிறது என்பது தான் இங்க வாதமே. இதில் tubal occlusion, vasectomy எக்கேடு கெட்டா என்ன?

              • ஆண்களுக்கு தற்காலிக கருத்தடை முறைகள் இல்லை என்பதற்காக நீங்கள் வீறுகொண்டு பேசிய பேச்சுகளை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன்..பெண்களுக்கான அறுவை சிகிச்சை கருத்தடை முறையை UVகதிர் முறை விந்தணு மலாடாக்கும் முறையுடன் ஒப்பிட்டு உளறி வைத்தது நீங்கள் தானே ஐயா? பெண்களுக்கான அறுவை சிகிச்சை கருத்தடை முறையை ஆண்களுக்கான கருதடை அறுவை சிகிச்சை முறையுடன் நீங்கள் ஒப்பீடு செய்து இருந்தால் உங்களை பாராட்டலாம்…. ஆனால் நீங்கள் ! நீங்கள் ஆண்களை மலடாக்க UVகதிர் முறையை ஆதரிக்க மட்டுமே “பெண்களுக்கு இருப்பது போலவே தற்காலிக கருத்தடை செய்யும் technology என்ன மயுருக்கு ஆண்களுக்கு இருக்க கூடாது?” என்று உளறிக்கொண்டு உள்ளீர்கள்! மற்றபடி உங்கள் ஆண்-பெண் சமநிலை வாதம் நிலையானது அல்லவே!

                //குழந்தை பிறப்பை தற்காலிகமாக தடுக்க பெண்களுக்கு அறுவை சிகிச்சை கூட செய்யலாம். ஆனால் தற்காலிகமாக விந்தணு வீரியம் இழக்க கூட ஆய்வு கூடாதா? என்ன மயுருக்கு அப்படி மனிதர்களை காய் அடிக்க வேண்டும் என்று கேட்கிரீகளே, பெண்களுக்கு இருப்பது போலவே தற்காலிக கருத்தடை செய்யும் technology என்ன மயுருக்கு ஆண்களுக்கு இருக்க கூடாது? ஆண்களுக்கு வேறு தற்காலிக கருத்தடை வேண்டும் என்பதற்கு காரணம் நீங்கள் சொல்வது தவிர எதுவுமே இல்லையா?//

                • இருவரும் மற்றவர் பேசியதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம் என தோன்றுகிறது. எனவே எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு படி, படியாக செல்லுவோம்.

                  உங்கள் அடிப்படை குற்றச்சாட்டு இந்த ultrasound ஆய்வு மனிதனை மலடாக்கும் என்பது. இதற்க்கு நீங்கள் ஆதாரமாக வைப்பது கீழே உள்ள வரி:

                  //what is the meaning of his statement ” “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.”?//

                  இதை நீங்கள் https://srxawordonhealth.com/tag/dr-james-tsuruta/ எனும் தரவில் இருந்து quote செய்து உள்ளீர்கள். இது வரை சரியா?

                  • UV-கதிர் மூலம் மனிதனை மலடாக்கும் கருத்தடை முறையை ஆதரித்துக்கொண்டு இருக்கும் சிந்தனை செய்யாத நண்பரே! இதையும் படியுங்கள் ஐயா!

                    Dr Allan Pacey, senior lecturer in andrology at the University of Sheffield, said: “It’s a nice idea, but a lot more work is needed.”

                    He said that it was likely that there would be recovery of sperm production, but the “sperm might be damaged and any baby might be damaged” when sperm production resumed.

                    http://www.bbc.com/news/health-16756381

                    தமிழில் மொழி பெயர்க்கவா நண்பரே? விந்து உற்பத்தி மீண்டும் நடந்தாலும்….., மீண்டும் விந்தணுக்கள் உருவாகும் போது விந்தணுக்கள் சேதம் அடையலாம் அப்புறம் அதன் மூலம் உருவாகும் குழந்தையும் சேதம் அடையலாம்!

                    • திரும்ப திரும்ப selective quoting…. முழுசாதான் quote பண்ணுங்களேன்.

                      //The team needs to ensure that the ultrasound produces a reversible effect, contraception not sterilisation, as well as investigate whether there would be cumulative damage from repeated doses.

                      Dr Allan Pacey, senior lecturer in andrology at the University of Sheffield, said: “It’s a nice idea, but a lot more work is needed.”

                      He said that it was likely that there would be recovery of sperm production, but the “sperm might be damaged and any baby might be damaged” when sperm production resumed.

                      “The last thing we want is a lingering damage to sperm,” he said.//

                      மிக தெளிவாக அவர்கள் sterlize இல்லை, contraception தான் ஆய்வின் நோக்கம் என கூறி உள்ளனர். விந்தணு பாதிப்பு இருக்க கூடாது என்று மிக தெளிவாகவே கூறி உள்ளனர். ஒரு வேலை சேதம் அடையலாம். அது நடக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு மூலம் தானே அய்யா உறுதிபடுத்த முடியும்?

                      பாதிப்பு இருக்கிறது, இது நீங்கள் கூறியது போல நிரந்தர மலட்டுத்தன்மை தான் என எங்கேனும் கூறி இருக்கிறார்களா? உங்கள் வாதமே இந்த ஆய்வு மனிதனை மலடாக்கும் ஆய்வு என்பது தானே? அது தான் ஆய்வின் நோக்கம், ஆய்வாளர் கூறியது போல தற்காலிக கருத்தடை அல்ல என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தர முடியுமா?

                      உங்கள் ஆதாரம் ஒரு வேலை பாதிப்பு இருக்கலாம் என்பது தான் என்றால், அதில் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் அதே அளவு வாய்ப்பு இருக்கிறது என்பதை தாங்கள் கருத்தில் கொள்ளவும். இப்படி நடக்கலாம், அப்படி இருக்கலாம் என்ற speculation அடிப்படையில் எதையும் இது தான் என்று எப்படி உத்தரவாதமாக கூற முடியும்?

                      இல்லை, உங்கள் வேறு ஆதாரம் மேலே உள்ள //when or whether fertility would return// என்னும் quote என்றால், அதுவும் ஆய்வாளர் கூறியது இல்லை என்பதை கருத்தில் கொள்க. sperm production மீண்டும் வரலாம் என்று Dr Allan Pacey மேலே உள்ள BBC பதிவில் கூறி உள்ளார் என்பதையும் பார்க்கவும்.

                      உங்களுக்கு இந்த ஆய்வு மீது reservations இருக்கலாம். ஆனால் ஒரு claim அல்லது குற்றச்சாட்டு வைக்கும் போது, அதற்க்கு concrete evidence வேண்டும் அல்லவா? reservations கொண்டு தேவை இல்லாத குற்றச்சாட்டு வேண்டாமே. இன்னும் நீண்ட கால ஆய்வு முடிவுகள் தேவையா, அவை தேவை என்பதுடன் மட்டும் நிறுத்திக்கொள்வோம். இல்லை இந்த ஆய்வின் நோக்கம் நிரந்தர மலட்டுத்தன்மை என நீங்கள் மீண்டும் claim செய்தால், அது தான் அவர்களின் நோக்கம் என்று நிரூபிக்கும் burden of proof உங்களிடத்தில் இருக்கிறது. ஆய்வாளர் எங்கள் நோக்கம் தற்காலிக கருத்தடை தான் என பல இடங்களில் தெளிவாக கூறி உள்ளனர்.

                    • சிந்தனை செய்…, இந்த ultrasound கருத்தடை முறையில் விந்து உற்பத்தி மீண்டும் நடந்தாலும்….., மீண்டும் விந்தணுக்கள் உருவாகும் போது விந்தணுக்கள் சேதம் அடையலாம் அப்புறம் அதன் மூலம் உருவாகும் குழந்தையும் சேதம் அடையலாம்! என்ற விசயத்தை முதலில் மனதில் நிறுத்திவிட்டு பேசுங்கள் சாமி!

                    • சிந்தனை செய் கீழ் உள்ள வாதத்தை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்…!

                      He said that it was likely that there would be recovery of sperm production, but the “sperm might be damaged and any baby might be damaged” when sperm production resumed.

                      மீண்டும் விந்தணுக்கள் உருவாகும் போது விந்தணுக்கள் சேதம் அடையலாம் அப்புறம் அதன் மூலம் உருவாகும் குழந்தையும் சேதம் அடையலாம்!

                      இதன் விளைவுகளை பற்றி சிந்தனை செய்தீரா நீங்கள்?

  18. //அறிவாலியே நான் குறிப்பிட்ட அந்த ஆர்டிகளை எழுதியதே அந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் (Dr Dr. James Tsuruta)தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் வினவில் வந்து நீர் பிதற்றிகொண்டு உள்ளீர்கள் ஐயா!

    https://srxawordonhealth.com/tag/dr-james-tsuruta/

    // when or whether fertility would return என்பது article எழுதியவன் சொன்னது////

    செந்தில்குமரன், article அவர் பேருக்கு tag செய்யப்பட்டு இருக்கிறது அவ்வளவே. அதை எழுதியது அவர் இல்லை.

    Posted in Condoms, Contraception, SRxA, Word on Health
    Tagged contraceptive, Dr. Chris Jenks, Dr. James Tsuruta, gonads, modified underwear, sperm, sperm counts, testes, testicles, ultrasound, University of North Carolina-Chapel Hill

    உங்கள் லிங்கை மீண்டும் பாருங்கள். tag Dr. James Tsuruta என இருக்கிறது. author அவர் இல்லை. tag, author குழப்பத்தில் நீங்கள் குழம்புகிறீர்கள். இதில் அடிப்படை உண்மை தெரியாமல் உளறுகிறேன் என என் மீது வேறு…. ஏன் சார்? அந்த blog about பக்கத்தை பார்த்தாலும் இது தெரியும்.

    //About
    Word on Health is the blog of Strategic Pharmaceutical Advisors (SRxA). SRxA is a leading global healthcare strategy and communications company, providing strategic and tactical support to the Pharmaceutical industry, Medical Societies, Patient Groups, Physicians and the Government.//

  19. //அறிவு கொழுந்தே bioinformatics தீர்வுகளின் மூலம் சித்தமருத்துவ மருந்துகளா செய்வார்கள்? அல்லது மரபணு தொடர்பான மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்வார்களா?

    Drug discovery என்றாலே அது மரபணு குறித்த மருத்து கண்டுபிடிப்புகள் (gean based drug discovery)என்ற விசயம் இந்த bioinformatics துறையை இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தெரியும் என்ற நிலையில் உங்கள் மொக்கைகள் வினவு தளத்தை குப்பையாக்குகின்றனவே நண்பா! மேலும் gean based drug development என்ற நிலையும் Drug discovery க்கு அடுத்த நிலைதானே! மூளையை செலுத்தி கீழ் உள்ள மைக்ரோசாப்ட் நியூஸ் செய்தியை மீண்டும் படிக்கவும்! “”new bioinformatic solutions to enable and expedite drug discovery and development””” “புதிய bioinformatics தீர்வுகளின் மூலம் துரிதப்படுத்தி செயல்படுத்தி மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உருவாக்குதல்”//

    அய்யா சாமி, drug discovery என்றாலே மரபணு குறித்த மருந்து கண்டுபிடிப்புகளா? அப்போ antibiotic, painkillers, antivirals, anaesthesia போன்றவை எல்லாம் எந்த மரபணு மாற்றம் செய்யும் மருந்துகள்? நீங்க மொதல்ல மொக்க போடுவதை நிறுத்துங்கள். bioinformatics பற்றி சொல்லி தரும் course இணையத்தில் நிறையவே இருக்கின்றன. போய் நீங்களே படியுங்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய முடியுமா என்று… வேண்டுமென்றால் நானே கீழே லிங்கும் தருகிறேன். முழுக்க free தான். குறைந்த பட்சம் intro வாவது பாருங்கள். பல குழப்பங்கள் தீரும்.

    https://www.youtube.com/watch?v=xODTm4a6nsM – University of Maryland

    https://www.coursera.org/learn/bioinformatics – University of California, San Diego

    https://www.youtube.com/watch?v=liNblw4x50E – UC Davis

    Bioinformatics in Computer-Aided Drug Design by Dr. Richard Casey – http://www.b-eye-network.com/view/852

    முதல் வீடியோ வெறும் மூன்று நிமிடங்கள் தான். அதை மட்டுமாவது பாருங்கள். தெளிவாக bioinformatics பற்றி மிக சுருக்கமாக பேசுகிறார். bioinformatics என்றால் மரபணு மட்டும் என்று ஏன் குழப்பம்?

  20. இந்த கேள்வி வினவுக்கு.

    மேலே உள்ள விவாதங்கள், ஆதாரங்கள் கொண்டு இந்த கட்டுரைகளில் திருந்தங்கள் பதிப்பிக்கப்படுமா? இதில் உள்ள தவறான, conspiracy கருத்துக்கள் இவை என திருந்தங்கள் செய்யப்பட்டு, அறிவியல் உண்மைக்கு மாறான தடுப்பூசி மூலம் ஆடிசம் (பகுதி ஒன்று), தடுப்பூசி மூலம் கருத்தடை, நிறவெறி படுகொலை குற்றச்சாட்டுகள் (பகுதி இரண்டு) போன்ற திரிபுகள் நீக்க படுமா? இல்லை வினவு அறிவியல் உண்மையை விட conspiracy theoryக்கு அதிக மதிப்பு தர போகிறதா? பதிலுக்கு காத்திருக்கிறேன்.

      • என் உளறல்களுக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி திரு. செந்தில்குமரன். மீண்டும் உங்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பேசுவோம். அது வரை, மேலே என் 17.1.1.1 பதிலில் இருக்கும் குறிப்பை நேரம் இருந்தால் படிக்கவும். உங்களுடன் பேசியதில் பல புது விசயங்களை கற்று கொள்ள முடிந்தது. அதற்க்கு மிக்க நன்றி.

    • திரு. சிந்தனைசெய்,

      இது குறித்த உங்கள் கருத்து என்ன:

      https://www.vinavu.com/2017/03/03/social-analysis-of-rubella-vaccine-part-3/#comment-497935

      //உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

      இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.//
      – செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? – கட்டுரையில் இருந்து.

      • திரு. ராம்சங்கர்,

        முதல் பத்தியில் இருக்கும் முக்கிய கருத்து, என்னை பொறுத்தவரை தவறு. அறிவியல்ஆய்வுகள் உலகின் அனைத்து இடங்களிலும் நடந்து தான் வருகின்றன. உண்மையை சொல்லப்போனால் உயிரியல், biomedical, genetic research போன்ற பல துறைகளின் ஆய்வுகளில் ஒரு பெரிய பங்கு அமெரிக்காவில் நடத்தினாலும், அதில் ஏகபோகம் என்பது கொஞ்சம் stretching the imagination. genetics எனும் துறையை மட்டும் ஒரு test case ஆக எடுத்து கொள்வோம். கீழே உள்ள ஆய்வறிக்கை சொல்வதை கொஞ்சம் பாருங்களேன்:

        //Conclusion
        Aggregate spending on genomics research from 34 funding sources averaged around $2.9 billion in 2003 – 2006. The United States spent more than any other country on genomics research, corresponding to 35% of the overall worldwide public funding (compared to 49% US share of public health research funding for all purposes). When adjusted to genomics funding intensity, however, the United States dropped below Ireland, the United Kingdom, and Canada, as measured both by genomics research expenditure per capita and per Gross Domestic Product.//

        வினவு சொல்வதை போல அமெரிக்கா அதிக பங்கு வகித்தாலும், ஏகபோகம் என்னும் அளவுக்கு இல்லை. capita, GDP இரண்டையும் கணக்கில் எடுத்தால் அது பின்தங்கி தான் இருக்கிறது.

        அறிவியல் செல்லும் திசையை funding ஓரளவுக்கு தீர்மானிகிறது என்பது சரி. எதுக்கு காசு கொடுகிறானோ அதற்க்கு தானே ஆய்வு செய்ய முடியும். ஆனால்ஆக்கபூர்வ பயன்பாட்டு சாதியத்தையும் அதுவே தீர்மானிகிறது என்பது சும்மா உடான்ஸ். பல அறிவியல் வளர்ச்சி இது போல சில இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். ஆனால் அவை செல்லும் திசையை தீர்மானிப்பவை பயன்படுத்துபவர் மட்டுமே. இணையம் அமெரிக்க இராணுவ துறையில் உருகாவக்க பட்டது தான். எனவே அது செல்லும் திசையை, ஆக்கபூர்வமான பயன்பாட்டு சாத்தியத்தையும் அவர்களா தீர்மானித்தார்கள்? big data என்பது Large Hadron Collider ஆய்வில் வரும் dataவை process செய்ய உருவாக்க பட்டது தான். அதற்காக big data எங்கு பயன்படுதல்லாம், எங்கு செல்கிறது, எவ்வாறு வளர்கிறது என்பது அவர்கள் கையிலா இருக்கிறது?

        இதில் இன்னொரு விஷயம். இது போல பேசும்போது பல இடங்களில் public funded universities, அமெரிக்க அல்லது மேலை நாடுகள் தவிர மற்ற அரசாங்க நிறுவனங்கள் செய்யும் ஆய்வுகள், கூட்டு முயற்சிகள், போன்றவை முற்றிலும் புறக்கணிக்க படுகிறது. என்னமோ இந்த துறைகளில் எல்லா ஆய்வும் அவர்கள் செய்வது, அதன் பயன்பாட்டை அவர்கள் தங்கள் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது போன்ற பிம்பம் மிக தவறு. உதாரணமாக CGIAR மேற்கத்திய நாடான பிரான்சில் தான் தலைமையிடம் கொண்டு இருக்கிறது. அதன் விவசாய, genetics ஆய்வுகள் எவ்வளவோ நன்மை பயந்து உள்ளன. ஆனால் அதெல்லாம் genetics ஆய்வு, அதன் பற்றிய narrative என பேசும்போது சில blogs, websites, news media போன்றவை மூச்சு கூட விடாது.

        அடுத்து, உச்சகட்ட காமெடி, இது தான்….

        //இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்//

        இது climate change deniers, flat earthers, anti-vaxxers போன்ற conspiracy கும்பல்கள் வைக்கும் வாதம். நீங்கள் லாஜிக் படியே யோசிச்சு பாருங்க சார். இன்று புவி வெப்பமயமாதல் நமக்கு அறிவியல் ஆய்வு மூலம் தெரியும். அந்த ஆய்வை நடத்துவதும், publish செய்வதும் விஞ்ஞானிகள் தான். Pharma, Monsanto போன்ற நிறுவனகள் எல்லாம் எண்ணை, நிலக்கரி நிறுவனங்கள் பணத்திற்கு கிட்ட கூட நிக்க முடியாது. அப்போ, pharma, biotech நிறுவனங்கள் விஞ்ஞானிகளை விலைக்கு வாங்க முடியும் என்றால், அதை விட பல மடங்கு விலை கொடுக்க எண்ணை நிறுவங்களால் முடியும். எனவே அவை விஞ்ஞானிகளை விலைக்கு வாங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதன் அவர்களை கூலி அடிமைகள் என தெளிவாக சொல்லிவிட்டோமே! அப்போ புகையிலை, cigarette புற்றுநோய் உண்டாக்கும், புவி வெப்பமயமாதல் போன்ற அறிவியல் எல்லாம் பொய் என எடுத்துகொள்ளலாம். இதான் இந்த வாதத்தின் பிரச்சனை.

        அறிவு நாணயமற்றவர்கள் என குற்றம்சாட்டி விட்டால் என்ன வேண்டுமானாலும் புறம் பேசலாம். ஏன்னா அவன் கெட்டவன்னு சொல்லியாச்சே! பிறகு அந்த கூற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள். தனக்கு வேண்டும் agendaக்கு அதை fit செய்து கொள்ளலாம். Global warming denier என்றால் விஞ்ஞானிகள் அறிவு நாணயம் அற்றவர்கள், Renewable industry கைக்கூலி; Flat earther என்றால் விஞ்ஞானிகள் அறிவு நாணயம் அற்றவர்கள், big globe கைக்கூலி; chemtrails என்றால் விஞ்ஞானிகள் அறிவு நாணயம் அற்றவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலி; 9/11, Sandy hook conspiracy என்றால் விஞ்ஞானிகள் அறிவு நாணயம் அற்றவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலி; Antivaxxer என்றால் விஞ்ஞானிகள் அறிவு நாணயம் அற்றவர்கள், Big Pharma கைக்கூலி. எல்லாம் ஒரே argument. வேண்டிய இடத்துக்கு செட் செய்துகொள்ளல்லாம். கடவுள் மாதிரி, வேண்டிய இடத்தில, வேண்டிய வடிவத்துல கூப்பிட்டு கொள்ளலாம். ஆதாரம் மட்டும் கேக்க கூடாது. ஏனா அங்க ஒண்ணும் இருக்காது. லாஜிக் பாக்கவும் கூடாது. அப்போ தான் இது ஒத்து வரும்.

        Sources:

        http://bmcgenomics.biomedcentral.com/articles/10.1186/1471-2164-9-472

        https://en.wikipedia.org/wiki/CGIAR

  21. மூட நம்பிக்கைகளை முன்னிறுத்தி வாதம் செய்வது எப்படி பட்ட பைத்தியகார தனமோ அது போன்றே அறிவியல்-தொழில் நுட்ப நாசகார கண்டுபிடிப்புகளை பற்றிய எத்தகைய சிந்தனையும் இல்லாமல் அதனை மனித குலத்தின் மீது பாய்ச்சுவதும் ஆகும்… இங்கு விவாதத்தில் UV கதிர்கள் மூலம் மனிதனை மலடாக்கும் ஆய்வுகளை அவைகள் பெண்களுக்கு உள்ள தற்காலிக கருத்தடை முறைகளுடன் ஈடு செய்து சிந்தனை செய் அவர்கள் வாதாடுகின்றார்….! UV கதிர்கள் மனிதர்களுக்கு மிக பாரிய தீங்குகளை விளைவிக்கும் என்பது பள்ளிகூட மாணவர்களுக்கு கூட தெரியும் என்ற நிலையில் அதனை பற்றிய எத்தகைய சிந்தனையும் இன்றி அதற்கு (UVகதிர் ஆய்வுக்கு) ஆதரவாக பேசிக்கொண்டு உள்ளார் சிந்தனை செய் அவர்கள்! குறிப்பாக கூறுவது என்றால் தோல் புற்றுநோய்க்கு UV கதிர்கள் காரணமாக உள்ளன என்ற உண்மையை இங்கு எடுத்துவைக்க நான் கடமைபட்டு உள்ளேன்…! Moreover Overexposure of male to lead compounds is known to decrease the sexual drive and reduce the ability to produce healthy sperm. Sperm effects include malformed sperm (teratospermia), decreased number (hypospermia) and decreased motility (asthenospermia). Fumes from other low-melting point metals, such as cadmium, silver, tin and zinc, have not been implicated in causing infertility.

    மனிதனை மலடாக்கும் ஆய்வுகளுக்கு UVகதிர் ஆய்வுகளுக்கு ஒருபக்கம் பில் கேட்ஸ் நிதி ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்க மறுபக்கம் சிந்தனை செய் போன்றவர்கள் அத்தகைய மானுட குலத்துக்கு எதிரான கயவர்களுக்கு கொள்கை பரப்பு செயலாளராக சிறப்பான பணியை ஆற்றிக்கொண்டு உள்ளார்…

    • //UV கதிர்கள் மூலம் மனிதனை மலடாக்கும் ஆய்வுகளை அவைகள் பெண்களுக்கு உள்ள தற்காலிக கருத்தடை முறைகளுடன் ஈடு செய்து சிந்தனை செய் அவர்கள் வாதாடுகின்றார்//

      உண்மையை திரிக்க வேண்டாம் செந்தில்குமரன். அது தற்காலிக கருத்தடை முறை ஆய்வு என்பது என் வாதம் அல்ல. அந்த ஆய்வை செய்த ஆய்வாளர் கூறி இருப்பது.

      //Lead researcher Dr James Tsuruta said: “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times.”

      The team needs to ensure that the ultrasound produces a reversible effect, contraception not sterilisation, as well as investigate whether there would be cumulative damage from repeated doses.//

      தற்காலிக கருத்தடை, நிரந்தர மலட்டுத்தன்மை அல்ல ஆய்வின் நோக்கம். நீங்கள் கொடுத்த BBC தரவில் ஆய்வாளர் Dr. James Tsuruta கூறி இருப்பது.

      • ஐயா சாமி இவ்வளவு நாட்களாக பெண்களுக்கு இருபது போன்று ஆண்களுக்கும் தற்காலிக கருத்தடை முறை தேவை அல்லவா என்று வாதாடியது யார்? எதற்காக இந்த வாதத்தை முன் வைத்தீர்கள்? Dr James Tsuruta அவர்களின் ultrasound ஆய்வுகளை ஆதரித்த தருணத்தில் தானே இந்த கீழ்கண்ட வீர வசனங்களை பேசினீர்கள் !

        “”””அதாவது, நிரந்தர மலட்டு தன்மை அல்ல. தற்காலிகம். பருப்பு வேகல செந்தில்குமரன். அவருடைய அராய்ச்சி கட்டுரையும் இதே தான் சொல்கிறது. அதுவும் கீழே உங்கள் பார்வைக்கு உள்ளது. இது தற்காலிகம் தான் என ஆய்வாளரே கூறுகிறார். ஆய்வு செய்யும் அவருக்கு என்ன தெரியும் பாவம். இந்த ஆய்வு எப்படி நீங்கள் கூறியது போல”””

        இப்ப நீங்க கூறுவது என்னவென்றால்…..
        “””உண்மையை திரிக்க வேண்டாம் செந்தில்குமரன். அது தற்காலிக கருத்தடை முறை ஆய்வு என்பது என் வாதம் அல்ல. அந்த ஆய்வை செய்த ஆய்வாளர் கூறி இருப்பது.””

        என்ன உளறிகிட்டு இருக்கீங்க சாமி! அது நிரந்தர கருத்தடை பற்றிய ஆய்வு என்று நான் கூறுகின்றேன்…. ஆனால் நீங்கள் சமயத்துக்கு தகுந்தால் போல் நிரந்தரம் இல்லை இல்லை தற்காலிகம் என்று பிதற்றிகொண்டு உள்ளீர்கள்! உங்கள் பின்னுட்டங்களை மீண்டும் படித்துவிட்டு வந்து தெளிவாக பேசவும்

        • நான் தெளிவாதான் இருக்கேன். இன்னும் நீங்கள் Tsuruta அவர்களின் ஆய்வு நோக்கம் நிரந்தர மலட்டுத்தன்மை என்பதை நிரூபனம் செய்யவில்லை. அவர் ஆய்வின் நோக்கம் கருத்தடை என்று அவரே பல முறை கூறி விட்டார். உங்கள் ஆதாரம் எல்லாம் எவரோ எழுதிய கட்டுரை, ஒரு வேலை இது இருக்கலாம் என கூறப்பட்ட வாக்கியம் என தான் இருக்கிறது. ஆய்வாளரோ, ஆய்வரிக்கயோ இது ஆண்களுக்கு நிரந்தர மலட்டுத்தன்மை உருவாக்குவது தான் ஆய்வின் நோக்கம் என கூறி உள்ளதாக நிரூபிக்கவும். பிறகு உங்கள் பேச்சுக்கு வருவோம்.

          • இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை தற்காலிகம் என்றால் எத்தனை நாட்களுக்கு அது நீடிக்கும் நண்பரே? இதனை அந்த ஆய்வின் அடிப்படையில் விளக்கவேண்டியது உங்களின் கடமை தானே? ஆனால் இன்னும் நீங்கள் அதனை பற்றி பேசவில்லை! ஆனால் நான் Dr James Tsuruta அவர்களின் வார்த்தைகளில் இருந்து கூறுவது என்னவென்றால்

            Lead researcher Dr James Tsuruta said: “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times.”

            உண்மை இப்படி இருக்க நீங்கள் எப்படி இதனை தற்காலிக கருத்தடை முறை என்று அறுதியிட்டு கூருகிண்றீகள்?

            • //இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை தற்காலிகம் என்றால் எத்தனை நாட்களுக்கு அது நீடிக்கும் நண்பரே? //

              சார், அதுக்கு தான ஆய்வே… முதலில் எதிர்பார்த்த முடிவு i.e. கருத்தடை வருகிறதா என சோதனை. அதற்க்கு இந்த ஆய்வு. அதுக்கு அப்புறம் தான், அது எவ்வளவு நாள், எவ்வளவு தர வேண்டும், ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா என ஆய்வு நடத்தப்படும். முதலில் வேலை செய்கிறதா, இல்லையா என்றே தெரியாமல் எப்படி ஒரு மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்?

              உதாரணமாக ஒரு antibiotic ஆய்வு என வைத்து கொள்வோம். முதலில் அது வேலை செய்கிறதா என பார்க்க வேண்டும். பிறகு அது சிறிய dosage தந்தால் வேலை செய்கிறது என தெரிய வேண்டும். பிறகு தான் மற்றது எல்லாம். படிகள் தெளிவாக இருக்கிறது. முதலில் மருந்து. இங்கு அது ultrasound. நோக்கம், தற்காலிக கருத்தடை முறை. அதற்க்கு முதல் படி? கருத்தடை உருவாகிறதா என சோதனை செய்ய வேண்டும். பிறகு dosage. அதாவது எந்த frequency, எவ்வளவு wattage போன்ற பல variable ஆராய்ந்து இது minimum என தெரிவது. இது வரை ஆய்வு வந்து இருக்கிறது. இதற்க்கு பிறகு தான் இவ்வளவு நாட்கள் கருத்தடை வேண்டும் என்றால் என்ன regimen வேண்டும், அதன் பக்க விளைவுகள் என்னும் ஆய்வு.

              உங்க பாயிண்ட் என்ன? இந்த முறை தற்காலிகம் என்றால் எவ்வளவு நாள் நீடிக்கும்? அதுக்கான ஆய்வு முதலில் நடக்கட்டும் சார். அதன் முடிவுகள் வரட்டும். பிறகு அந்த முடிவுகள் சரியா, இல்லை தவறா என பேசலாம். இப்போதைக்கு தெரிந்தது எல்லாம் tsuruta கூறிய regimen (3 MHz, 2.2 watt) பயன்படுத்தினால் எலிகளில் sperm count குறைகிறது. ஆனால் நாய்களில் இதே regimen எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. நீங்க குடுத்த ஆய்வுல இருக்கும் group b நாய்களின் regimen கொஞ்சம் பார்க்கவும்.

              //Our results demonstrated that US at group A parameters (1MHz over the entire
              testes) leads to irreversible testis damage, while 3MHz in the dorso-cranial area of the testis is ineffective on dog fertility//

              group b நாய்களுக்கு அதே 3 MHz ultrasound தரப்பட்ட போது எந்த பாதிப்போ, மாற்றமோ இல்லை. இதில் உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம். அதே கட்டுரையில் தரப்பட்டு உள்ள table பாருங்கள். இரண்டும் ஒரே வகை ultrasound தான். ஆனால் எலிகளில் குறைகிறது, நாய்களில் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு வேளை வேறு ஏதேனும் variable மாற்றினால் எப்படி இருக்கும்? உதாரணத்துக்கு காலம், treatment area? தெரியாது. அதற்க்கு ஆய்வு வேண்டும்.

              நீங்கள் ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை தான் என எதன் அடிப்படையில் அறுதியிட்டு கூறுகிறீர்கள்? ஒரே frequency ultrasound தான். இரு வேறு விலங்குகளில் இரு வேறு முடிவுகள். நாய்களில் பாதிப்பே இல்லை. இது இப்படி இருக்க, ultrasound என்றாலே கருத்தடை என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்? இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா?

              Source:

              http://www.newmalecontraception.org/images/LEOCI_Poster_2011.pdf

          • இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறை தற்காலிகம் என்று அந்த ஆய்வின் தலைவர் Dr James Tsuruta அறுதியிட்டு கூறாத வரையில் அதனை நிரந்தர கருத்தடை முறை என்று தான் நாம் கணக்கில் எடுத்துகொள்ளமுடியும் ! அவரேஅந்த ஆய்வின் அடிபடையில் “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times” என்று தானே கூறுகின்றார்!

          • நீங்கள் கூறுவது போன்று Dr James Tsuruta அவர்கள் எங்கே இந்த கருத்தடை முறையை தற்காலிகம் என்று கூறுகின்றார் ?

            //“””உண்மையை திரிக்க வேண்டாம் செந்தில்குமரன். அது தற்காலிக கருத்தடை முறை ஆய்வு என்பது என் வாதம் அல்ல. அந்த ஆய்வை செய்த ஆய்வாளர் கூறி இருப்பது.””//

            அவரின் கூற்றின் படி எவ்வளவு நாட்களுக்கு இந்த கருத்தடை நீடிக்கும் மீண்டும் மீண்டும் இத்தனை செய்துகொள்வது பாதுகாபதுதானா என்பதனை பற்றிய தொடர் ஆய்வுகள் தேவை படுகின்றது என்று தானே கூறுகின்றார் ! (Dr James Tsuruta said : “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times”) அப்புறம் எப்படி நீங்கள் இந்த முறையை தற்காலிகம் என்று கூறுகின்றீர்கள்?

          • மன்னிக்கவும் சிந்தனைசெய்! உங்களுக்கு பதில் அளிக்க தவறியமைக்காக என்னை மன்னிக்கவும்! Tsuruta அவர்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் அந்த கட்டுரையாளர் அந்த விவரத்தை எழுதியுள்ளார்… ஆய்வின் முடிவையும் , கட்டுரையாளரின் கருத்தையும் ஒப்பீடு செய்து பாருங்களேன்!

    • கமெண்ட் முழுதாக பதிபதர்க்கு முன்பு தவறாக submit கிளிக் செய்து விட்டேன். இரண்டாம் பகுதி இங்கே. இரண்டையும் ஒன்றாக கொள்ளவும்.

      //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta.//

      இந்த ஆய்வின் தலைப்பும் தற்காலிக கருத்தடை என்பதை நினைவில் கொள்க.

      //The University of North Carolina at Chapel Hill has received a $100,000 Grand Challenges Explorations grant from the Bill & Melinda Gates Foundation. The grant will support an innovative global health research project conducted by James Tsuruta, PhD, and Paul Dayton, PhD, titled “Ultrasound as a long-term, reversible contraceptive.”//

      //UV கதிர்கள் மனிதர்களுக்கு மிக பாரிய தீங்குகளை விளைவிக்கும் என்பது பள்ளிகூட மாணவர்களுக்கு கூட தெரியும் என்ற நிலையில் அதனை பற்றிய எத்தகைய சிந்தனையும் இன்றி அதற்கு (UVகதிர் ஆய்வுக்கு) ஆதரவாக பேசிக்கொண்டு உள்ளார் சிந்தனை செய் அவர்கள்! குறிப்பாக கூறுவது என்றால் தோல் புற்றுநோய்க்கு UV கதிர்கள் காரணமாக உள்ளன என்ற உண்மையை இங்கு எடுத்துவைக்க நான் கடமைபட்டு உள்ளேன்…! //

      இதில் ஏன் Ultraviolet வந்தது? இது ultraviolet அதாவது புறஊதா கதிர் கொண்டு செய்யும் ஆய்வு அல்லவே அய்யா. இது ultrasound, ஒலி கதிர். புற ஊதா கதிர்கள் தான் UV, அவை ஒளி கதிர்கள். இரண்டும் வேறு, வேறு. ஒலிக்கும், ஒளிக்கும் குழப்பம் ஏன்?

      Sources:

      http://www.bbc.com/news/health-16756381

      http://www.med.unc.edu/www/newsarchive/2010/may/unc-researchers-receive-100-000-grand-challenges-exploration-grant-to-develop-male-contraceptive

      https://en.wikipedia.org/wiki/Ultrasound

      https://en.wikipedia.org/wiki/Ultraviolet

      • UVகதிர்களுக்கும், ultrasoundக்கும் உள்ள வேறுபாடுகளை பாடம் வேறு எடுக்க ஆரம்பித்து விட்டீரா சாமி! முதலில் UVகதிர்களை கருத்தடைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றிய ஆய்வகள் நடந்துகொண்டு இருப்பதாவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? அத்தகைய ஆய்வுகளை கண்ணை மூடிகொண்டு ஆதரிக்கும் உலக மகா அரிவாளி உங்களை தவிர வேறு யாராக இருக்கமுடியும்?

        • நான் கண்ணை மூடி ஆதரிகிறேனா? இது எப்போ? நாம UV கதிர் கருத்தடை ஆய்வை, அதன்
          ஆய்வறிக்கையை்க எப்போ பேசினோம்? UV கதிர் கருத்தடை பற்றிய ஆய்வை காட்டுங்கள், பிறகு நான் அந்த ஆய்வுக்கு வக்காலத்து வாங்கியதை காட்டுங்கள். அதற்க்கு பிறகு உங்கள் குற்றச்சாட்டுக்கு வரலாம்.

          • இதுவரையில் நடக்கும் இந்த விவாதத்தில் உங்கள் ஆதரவு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது கண்மூடித்த்னமாக தானே உள்ளது நண்பரே! அறிவியல் கண்டுபிடிப்பு என்றவுடன் அதனை அதன் குறைகளை கூட ஆயாமல் ஆதரிப்பது யார்? நீங்கள் தானே? அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறையில் ஏற்படப்போகும் பாரிய குறைபாடுகளை கூட முட்டாள் தனமாக விபத்துகளுடனும் , லாட்டரி சீட்டுகளுடனும் ஒப்பீடு செய்து ஆதரித்தது நீங்கள் தானே நண்பரே?

            • கேட்டது மிக எளிதான கேள்வி.

              //UV கதிர் கருத்தடை பற்றிய ஆய்வை காட்டுங்கள், பிறகு நான் அந்த ஆய்வுக்கு வக்காலத்து வாங்கியதை காட்டுங்கள். அதற்க்கு பிறகு உங்கள் குற்றச்சாட்டுக்கு வரலாம்.//

              பதில் கிடைக்குமா?

              • அல்ட்ரா சவுண்டு முறையில் ஏற்படும் நிரந்த கருத்தடையை கண்களை மூடிகொண்டு ஆதரிக்கும் நீங்கள் தான் UVகருத்தடை முறையை ஆதரிகின்றீரா இல்லையா என்று நேரடியாக பதில் அளிக்கவேண்டும். உங்கள் மீதான் என்னுடைய குற்றசாட்டு அறிவியல்-தொழில் நுட்ப நாசகார கண்டுபிடிப்புகளை பற்றிய எத்தகைய பகுத்தறிவு சிந்தனையும் இல்லாமல் அதனை மனித குலத்தின் மீது நீங்கள் பாய்ச்ச முயலுகின்றீர்கள் என்பது தான்.! அத்தகைய நாசகார ஆய்வுகளில் இரண்டு தானே UVகருத்தடை ஆய்வுகளும், US UVகருத்தடை ஆய்வுகளும்!@#$%

                • அதுக்கு தான் சாமி நான் கேட்கிறேன். நான் எப்போது uv கருத்தடை முறையை ஆதரித்து பேசினேன். எங்கே பேசினேன். மொதல்ல நான் ஆதரிச்சத காடுங்க. அப்புறம் என்ன கேள்வி வேண்டுமானாலும் வரலாம்.

                  இதெல்லாம் விட முதல் படி, uv கருத்தடை என ஆய்வு நடக்கிறது என முதலில் காட்டுங்கள். பிறகு அதை பற்றிய என் கருத்துக்கு வருவோம்.

                  • ஒன்று நீங்கள் uv முறை கருத்தடை ஆய்வை ஆதரிகின்ரீரா இல்லையா என்று ஆம் இல்லை என்ற முறையில் பதில் அளியுங்கள்! அல்லது இந்த விவாதத்தின் இறுதிவரைக்கும் பொறுமையுடன் என் விளக்கத்துக்காக காத்து இருங்கள் நண்பரே!

                    • சார் முதலில் uv கருத்தடை ஆய்வு இருக்கிறது என்று காட்டுங்கள். பிறகு அதை பற்றிய என் பார்வைக்கு வரலாம். First you have to prove something exists, only then can we discuss about it.

                      உங்கள் பாஷையில் சொல்லணும் என்றால், முதலில் கடவுள் இருக்கிறது என்று காட்டுங்கள். பிறகு அதன் குணங்கள் பற்றி பேசலாம். இல்லாத ஒண்ணு நல்லவனா, கெட்டவனா அப்படின்னு கேட்டா என்ன சொல்ல முடியும்?

  22. //சிந்தனை செய்…, இந்த ultrasound கருத்தடை முறையில் விந்து உற்பத்தி மீண்டும் நடந்தாலும்….., மீண்டும் விந்தணுக்கள் உருவாகும் போது விந்தணுக்கள் சேதம் அடையலாம் அப்புறம் அதன் மூலம் உருவாகும் குழந்தையும் சேதம் அடையலாம்! என்ற விசயத்தை முதலில் மனதில் நிறுத்திவிட்டு பேசுங்கள் சாமி!//

    சார் அடையாலாம் தான். அடையும் இல்ல. ரெண்டுக்கும் உலக மகா வித்யாசம் இருக்கு.

    நீங்கள் வண்டில போகும்போது விபத்து நடக்கலாம். நாளைக்கே நான் ஒரு freak flood வந்து போய்டலாம். எனக்கு lotteryல பல கோடி விழலாம். எல்லாம் லாம் தான். அத வச்சு ஒண்ணும் பண்ண முடியாது.

    • மீண்டும் comment முழுவதாக பதிவதற்கு முன்பு submit அழுத்தி விட்டேன். மன்னிக்கவும்.

      எல்லாம் லாம் தான் சார். ஒரு ஆய்வு, அதிலும் மருத்துவ ஆய்வு என்று வரும் போது பல ஆயிரம், ஏன் பல லட்சம் லாம் (இப்படி நடக்கலாம், அப்படி நடக்கலாம்) என வரும். இந்த மாதிரி வராத ஆய்வே கிடையாது. விண்வெளி ஆய்வு தொடங்கி, புவியிவல், evolution ஏன் வேதியல் வரை பல லாம் வந்து தான் தீரும். ஆனால் அது எல்லாம் அதில் நடக்கும் என அர்த்தம் அல்ல. இது போல பல reservations கவனத்தில் கொண்டு, எந்த பாதிப்பும் இல்லை என எல்லாம் ஆராய்ச்சியில் நிரூபித்தால் தான் அதை மருந்தாக அங்கீகரிக்க முடியும். சும்மா ஏதோ ஒரு மருத்துவரின் reservation எல்லாம் ஆதாரம் அல்ல.

      நீங்கள் கூறியது போல எல்லாம் அடையலாம் தான். ஆனால் அடையும் என்று நிரூபித்தால் ஒழிய அங்கே பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த பாதிப்பு வரலாம் என அடிப்படையில் இதை எதிர்ப்பதும், ஒரு வேலை நரகம் இருக்கலாம் என பயத்தில் கடவுளை நம்புவதும் ஒன்று. ரெண்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. பயத்தின் பேரில் எடுத்த முடிவுகள்.

    • காமடி செய்கின்றீர்கள் சிந்தனை அற்ற நண்பரே! இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறையில் ஏற்படப்போகும் தவறான விளைவுகளை லாட்டரி சீட்டு மற்றும் விபத்துகளுடன் தொடர்பு படுத்தி காமடி செய்கின்றீர்கள் நண்பரே! நடக்கும் மொத்த பயணத்தில் விபத்துகளின் சதவீதம் என்ன? லாட்டரி சீட்டுகளில் வெற்றி பெரும் சீட்டுகளின் சதவீதம் என்ன? மிக மிக சொற்பமானது தானே? அதனை எப்படி மனிதனுக்கு ஏற்படும் விளைவுகளுடன் ஒப்புமை செய்கின்றீர்கள்!? மனிதனும் லாட்டரி சீட்டுகளும் ஒப்பீடு செய்வது சரியானதா என்று மீண்டும் சிந்தனை செய்யலாமே நீங்கள்! பிழையற்ற கருத்தடை முறை என்றால் மட்டுமே அது யாராக இருந்தாலும் அதனை ஆதரிக்கலாம் ! இதற்கு சிந்தனை செய் அவர்களும் விதிவிளக்கு அல்லவே!

      • உங்களுக்கு நான் எழுதியதை புரிந்து கொள்வதில் அவ்வளோ என்ன கஷ்டம் என புரியவில்லை. ஒரு வேலை என் தமிழ் சரியில்லையோ என்னமோ. தொடர்ச்சியாக தவறாகவே புரிந்து கொண்டு உள்ளீர்கள்.

        நாளைக்கு உங்களுக்கு விபத்து நேருமா, நேராதா என உங்களால் அறுதி இட்டு சொல்ல முடிமா? இல்லை இந்த லாட்டிரி சீட்டு பரிசு விழுமா, விழாதா என உங்களால் கூற முடியுமா? கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? அதே போல தான், இந்த ultrasound முறையில் எத்தனையோ variables உண்டு. frequency, exposed area, exposure time, repetitions, interval between repetitions, exposure time, என ஆயிரத்தெட்டு variable உண்டு.

        இந்த எல்லா variable எவ்வளவு மாற்றினாலும் சரி, இந்த ultrasound முறை பயன்படுத்தினாலே கண்டிப்பாக நிரந்தர மலட்டுத்தன்மை தான் என்கிறீர்களா?

        • என்னங்க சிந்தனை செய்! மீண்டும் மீண்டும் உளறிகிட்டு உள்ளீர்கள்! லாட்டரி சீட்டில் பரிசு அதனை வாங்குபவரில் லட்ச்சத்தில் ஒருவருக்கு விழும் என்றால் இந்த கருத்தடை முறையில் பாதிப்பு அனைத்து மனிதர்களுக்குமே ஏற்படும் என்ற சிறிய கணக்கு கூடவா உங்களுக்கு தெரியவில்லை?

        • இந்த US-அட்ரா சவுண்டு கருத்தடை ஆய்வுகளுக்கான மாறிகளை (variable) இதுவரையில் மாற்றி மாற்றி போட்டு சோதனை செய்ததில் இதுவரையில் நிரந்தர கருத்தடை என்பது மட்டுமே நிருபணம் ஆகியுள்ளது. அதுவும் irreversible damage – நிரந்தர மலட்டுத்தன்மை !

        • இந்த விசயத்தில் இன்னும் கூட தெளிவாக விரிவாக விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆய்வுக்கான மாறிகளை (variable) இதுவரையில் மாற்றி மாற்றி போட்டு சோதனை செய்ததில் இதுவரையில் நிரந்தர கருத்தடை என்பது மட்டுமே சாத்தியம் என்று ஒரு மாறியில் (variable) நிருபணம் ஆகியுள்ளது. மற்றைய மாறிகள்(variables) எதுவும் தற்காலிக கருத்தடையை நிருபிக்கவில்லை. எனவே இந்த ஆய்வின் பயனுள்ள மாறி ( effective variable) இந்த ஆய்வை நிரந்தர கருத்தடைக்கான (ஆம் நிரந்தர மலட்டுதன்மைக்கான ) முடிவுகளையே அளித்து உள்ளன… ஆகவே நீங்கள் உங்கள் கருத்தையும் மாற்றிகொள்ள வேண்டியுள்ளது அல்லவா?

          //இந்த எல்லா variable எவ்வளவு மாற்றினாலும் சரி, இந்த ultrasound முறை பயன்படுத்தினாலே கண்டிப்பாக நிரந்தர மலட்டுத்தன்மை தான் என்கிறீர்களா?//

      • இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால், இந்த முறை பயன்படுத்தினாலே தவறான விளைவுகள் வரும் என்பது உங்கள் வாதமா? உங்களின்கூற்று படி பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது. ஒரு வேலை நான் தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். அதாவது ultrasound முறை என்றாலே தவறான விளைவுகள் தான், அதில் safety limit, பிழையற்ற முறை வர வாய்ப்பே இல்லை என்பது உங்கள் கூற்றா?

        • சிந்தனை செய்! இதனை தானே ஆரம்பத்தில் இருந்து உங்களின் மீதான குற்றசாட்டாக வைத்துகொண்டு உள்ளேன்..! புரிந்துக்கொள்ள இத்தனை நாட்களா? மூட நம்பிக்கைகளை மத நம்பிக்கைகளை முன்னிறுத்தி அறிவியலுக்கு எதிராக வாதம் செய்வது எப்படி பட்ட பைத்தியகார தனமோ அது போன்றே அறிவியல்-தொழில் நுட்ப நாசகார கண்டுபிடிப்புகளை பற்றிய எத்தகைய சிந்தனையும் இல்லாமல் அதனை மனித குலத்தின் மீது பாய்ச்சுவதும் ஆகும்…

          • அதாவது ultrasound பயன்படுத்தினாலே கண்டிப்பாக பாதிப்புகள் வரும் என்கிறீர்கள். அது என்ன frequency, என்ன wattage, எந்த area exposure, எவ்வளவு நேரம், எத்தனை நாளைக்கு ஒரு முறை என்பதெல்லாம் பிரச்சனையே இல்லை. ultrasound testes மீது செலுத்தினாலே கண்டிப்பாக நிரந்தர மலட்டுத்தன்மை தான் என்கிறீர்கள். இது தான் உங்கள் கருத்தா அல்லது ஏதேனும் நான் தவறாக சொல்கிறேனா?

            • சிந்தனை செய்…, இந்த US-அட்ரா சண்டு கருத்தடை ஆய்வுகளில் இதுவரையில் என்ன நிருபணம் ஆகியுள்ளது என்பதனை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா? விந்தகத்தில் இந்த US-ஆய்வுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன… அதனால் விந்தகம் செய்லிழகிறது…. விந்தணு உற்பத்தி சைபர் என்ற நிலையை அடைகிறது…. அதனால் இந்த முறை உயிரனங்களுக்கு நிரந்தர மலட்டு தன்மையை உருவாக்குகின்றன அல்லவா? நிலைமை அப்படி இருக்க இன்னுமா இந்த US-அட்ரா சண்டு கருத்தடை ஆய்வுகளை நீங்கள் கண்மூடி தனமாக ஆதரித்துக்கொண்டு உள்ளீர்கள்…?

            • ஏன் இந்த US-அட்ரா சண்டு முறையை நான் ஆதரிக்கவில்லை என்பதனை முன்பே விளக்கிவிட்டேன்… நீங்கள் தான் கண்டும் காணாமலும் செல்கின்றீர்கள்! மீண்டும் கூறுகின்றேன்.இது வரையில் பயன்பாட்டில் உள்ள ஆண்களுக்கான எந்த கருத்தடை முறையும் விந்தணுக்களை உருவாக்கும் விந்தகத்தில் எந்த சேதத்தையும் உருவாகவில்லை.. ஆனால் இந்த ஆய்வு முறைகளில் இதுவரையில் நிருபணம் ஆனவரையில் எலிகளுக்கு விந்தகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது… அடுத்து நாய்களுக்கு விந்தகம் நிரந்தரமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே விந்தகத்தின் மீது நடத்தபடும் எந்த ஆய்வும் கருத்தடை ஆய்வாகவே இருக்க முடியாது… அது மாட்டுக்கு காயடிக்கும் முறையை போன்றதே !

              • //எனவே விந்தகத்தின் மீது நடத்தபடும் எந்த ஆய்வும் கருத்தடை ஆய்வாகவே இருக்க முடியாது//

                சூப்பர் சார். உங்களின் மைய கருத்து இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த ஒரு பாயிண்ட் மட்டும் எடுத்து கொள்வோம்.

                நம் இருவருக்கும் பெண்களுக்கு இருப்பது போலவே ஆண்களுக்கும் தற்காலிக கருத்தடை முறைகள் வேண்டும் என்பது. நமக்கு ஒப்பிட்டு பார்க்க பெண்களின் கருத்தடை முறைகள் தான் என்பதால், வாக்கியத்தை பெண்களுக்கு பொருத்தி பார்போம். ஆண்களுக்கு விந்து என்றால், பெண்களுக்கு கருமுட்டை (Egg). ஆண்களுக்கு விந்தகம் என்றால் பெண்களுக்கு கருப்பை (ovaries). இதில் உங்களுக்கு எதுவும் மாற்றுகருத்து இல்லை தானே?

                உங்கள் கூற்று படி, விந்தகத்தின் மீது நடத்தப்படும் எந்த ஆய்வும் கருத்தடை ஆய்வாக இருக்கவே முடியாது. விந்தகத்தின் சமமான பணி பெண்களில் கருப்பை செய்கிறது. எனவே, பெண்களுக்கு உங்கள் மைய கருத்தை பொருத்தினால், கருப்பை மீது செய்யும் எந்த ஆய்வும் கருத்தடை ஆய்வாக இருக்கவே முடியாது. இது உங்கள் வாக்கியத்தின் சரியான application தானா? இல்லை ஏதேனும் மாற்று உண்டா?

                • விந்தகமாக இருந்தாலும் சரி , கருப்பை (ovaries) ஆக இருந்தாலும் சரி அவற்றின் மீது நிரந்தர/தற்காலிக மலட்டு தன்மையை ஏற்படுத்தும் எந்த ஆய்வையும் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் செயல் படுத்தபடும் கருத்தடை முறைகளையும் நாம் ஏற்க முடியாது!

                  • அப்படியா சார்? அப்போ கருப்பை தற்காலிகமாக வேலை செய்யாமல் இருக்கும் முறைகள் பெண்களுக்கு உள்ளனவே. அவை பற்றிய உங்கள் கருத்து? birth control pills, morning after pills, patches எல்லாமே கருப்பை மீது செயல்பட்டு, கருப்பை கருமுட்டை உற்பத்தி செய்யாமல் தடுப்பவை தான். பல ஆண்டுகளாக ஆய்வு ஆய்வு செய்து, அது ஏற்கப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது. அவற்றை ஏற்க முடியாதா?

                    • அறிவியல் ரீதியான விவாதத்தில் கூட பொய்யை டன் கணக்கில் கொட்டி போசுகிண்றீர்கள் சிந்தனை செய்! birth control pills, morning after pills, patches ஆகியவை எப்படி வேலை செய்கின்றது என்ற விசயத்தை முன்பே கூறிவிட்டேன். மீண்டும் வேண்டுமானால் கூறுகின்றேன். கவனமாக படிக்கவும்! இந்த patches களில் estrogen and progestin ஆகிய ஹார்மோன்கள் உள்ளன. இந்த முறையில் கருமுட்டை உற்பத்தி செய்யபடுவது எல்லாம் நீங்கள் கூறுவது போன்று தடை செய்யப்படுவது இல்லை. கருப்பைகளை (ovaries) விட்டு கரு முட்டைகள் வெளிவராமல் தான் இந்த patches தடுகின்றனவே தவிர நீங்கள் பொய்யாக கூறுவது போன்று கருமுட்டை உற்பத்தியை தடை செய்வது இல்லை. எனவே கருப்பைகள் (ovaries) எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.

                      //birth control pills, morning after pills, patches எல்லாமே கருப்பை மீது செயல்பட்டு, கருப்பை கருமுட்டை உற்பத்தி செய்யாமல் தடுப்பவை தான்.//

                    • சிந்தனை செய் அவர்களே ! இந்த விசயத்தில் இன்னும் கூட விளக்கமாக பேச முடியும்! birth control pills, morning after pills, patches ஆகியவை கருவகம் (ovary) மற்றும் கருவகத்தையும் (ovary) கருப்பையையும் (uterus) இணைக்கும்
                      கருமுட்டைக் குழாய்கள் (fallopian tubes) மீதும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை…! ஏன் கருப்பை (uterus) மீது கூட எந்த தவறான விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. இந்த patches-களிலும் birth control pillsகளிலும் உள்ளவை estrogen and progestin ஆகிய ஹார்மோன்கள் மட்டுமே! இவைகள் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தோம் என்றால் இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை வாயில் ( cervical) சுரக்கும் திரவத்தை அடர்த்தியாக மாறுகின்றது. இது விந்தணுக்களை கருமுட்டையை அடையவிடாமல் தடுகின்றது. அவ்வளவு தான் விஷயம் ! இந்த முறையில் ஆண்களின் விந்தணுக்களை உருவாக்கும் விந்தகத்துக்கு இணையான பெண்களின் கருவகம் (ovary) மீது எந்த பாதிப்புகளையும் ஏற்படுவது இல்லை… ஆனால் US கருத்தடை முறையில் ஆண்களின் விந்தகம் பாதிப்பு அடைவதால் மட்டுமே விந்தனுகளின் எண்ணிக்கை குறைகின்றது.

  23. இந்த project status கேட்டு UNC forum ஒன்றில் பதிவு செய்திருந்தேன். அதில் ஒருவர் பகிர்ந்த தகவல். இந்த project funding 2013இல் நிறுத்தப்பட்டு விட்டது. இது மட்டும் அல்ல, அனைத்து ஆண் குடும்ப கட்டுப்பாடு பற்றிய ஆய்வுக்கும் Grand challenges grants நிறுத்தப்பட்டு விட்டது. திரு. Tsuruta மற்றும் அவரின் கூட்டு ஆய்வாளர் இந்த project பற்றி ஒரு open போர்டல் வைத்து உள்ளனர். அதில் இதை பற்றிய அவர் பதிவு:

    Final update about the Grand Challenges Explorations grant

    posted Jan 16, 2013, 1:31 PM by James Tsuruta

    Project update (2013-01-16): The Bill and Melinda Gates Foundation has reviewed our Phase II application to continue this project. The Foundation has decided to focus their funding on “female-controlled” methods of contraception and will not continue to fund male contraception research projects. We thank the Grand Challenges Explorations grant program and the Parsemus Foundation for their funding which enabled us to publish a manuscript in Reproductive Biology and Endocrinology that is considered “highly accessed” and presents many of our findings.

    We hope to secure funding from other sources to continue research into the utility of therapeutic ultrasound as a contraceptive.

    Thanks for visiting the site and for all your expressions of support for this line of research!

    Sincerely,

    James Tsuruta, Ph.D.
    Assistant Professor of Pediatrics
    The Laboratories for Reproductive Biology
    University of North Carolina at Chapel Hill

    இது முன்னாடியே கிடைத்து இருந்தால் இவ்வளவு speculation, இருக்கலாம் பிரச்சனை எல்லாம் தேவை இல்லை.

    Source:

    http://www.ultrasoundformen.org/project-updates

    • இந்த அல்ட்ரா சவுண்டு கருதடை ஆய்வின் முடிவு என்ன கூறுகின்றது என்று பார்கலாமா நண்பரே ?

      Conclusions :
      The non-invasive nature of ultrasound and its efficacy in reducing sperm count make therapeutic ultrasound a promising candidate for a male contraceptive. However, further studies must be conducted to confirm its efficacy in providing a contraceptive effect, to test the result of repeated use, to verify that the contraceptive effect is reversible and to demonstrate that there are no detrimental, long-term effects from using ultrasound as a method of male contraception.

      இன்னும் கீழ் கண்ட மூன்று விசயங்கள் இந்த முடிவில் அறுதியிட்டு நிருபிக்கபட வில்லையே !

      # இது திறன்வாய்ந்த கருத்தடை முறைதானா? (efficacy in providing a contraceptive effect)

      # கருத்தடை மீண்டும் கருஉரு நிலைக்கு திரும்புமா (contraceptive effect is reversible)

      #மீண்டும் மீண்டும் இந்த முறையை பயன் படுத்தலாமா?( repeated use)

      இவைகள் அனைத்தும் இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்க நீங்க தான் இந்த முறையை தற்காலிக கருத்தடை முறை என்று தொடர்ந்து தவறான தகவலை அளித்துக்கொண்டு உள்ளீர்கள்!

      • இவை அத்தனையும் கேள்வி குறியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரி. அப்போது அதை தற்காலிக கருத்தடை என நான் தவறான தகவல் அளித்து உள்ளேன் என குற்றமும் சாட்டுகிறீர்கள். நான் கூறியது வேண்டாம். இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர், தங்கள் ஆய்வின் நோக்கம் என்ன என தெளிவாக கூறி உள்ளார். அதை சிறிது quote செய்ய முடியுமா?

        அதில் அவர், ஆய்வின் நோக்கம் மனிதர்களில்தற்காலிக கருத்தடை என்று கூறி இருக்கிறாரா அல்லது நிரந்தர கருத்தடை என்று கூறி இருக்கிறாரா? இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் விடை அளிக்க முடியுமா? ஒரே ஒரு வார்த்தை பதில் தான் செந்தில்குமரன். ஆய்வாளர் சொல்வது தங்கள் ஆய்வின் நோக்கம் தற்காலிக கருத்தடை என்பதா அல்லது நிரந்தர மலட்டுத்தன்மை என்பதா?

        • சிந்தனை செய்! அவரின் ஆய்வின் நோக்கம் என்னவாகவேண்டுமானாலும் இருகட்டுமே ஆனால் அவரால் இந்த கருத்தடை முறையை தற்காலிக கருத்தடை முறை என்று நிருபிக்க முடியவில்லை அல்லவா. அதனை தானே இந்த ஆய்வின் முடிவின் அடிபடையில் விளக்கி நான் பேசுகின்றேன்! புரிதலில் பிர்ச்ச்சை ஏதும் இருபதாக எனக்கு தோன்றவில்லை… உங்களுக்கு இருபது இந்த ஆய்வின் முடிவை ஏற்பதில் உள்ள மனத்தடை தான்…!

          • சார், ஆய்வு அறிக்கையை படித்தீர்களா? அந்த ஆய்வில் என்ன சோதனை செய்ய முயன்றார்கள் என்பதை பார்க்க வேண்டுகிறேன்.

            //Methods

            Sprague-Dawley rats were anesthetized and their testes were treated with 1 MHz or 3 MHz ultrasound while varying power, duration and temperature of treatment.//

            இது எந்த variable எவ்வளவு இருந்தால் கருத்தடை முறை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது என்று பார்க்க நடத்தப்பட்ட ஆய்வு. அவர்கள் ஆய்வின் முடிவில் இது போன்ற variable comparison செய்து கீழ்கண்ட பரிந்துரை செய்கிறார்கள்.

            //Results

            We found that 3 MHz ultrasound delivered with 2.2 Watt per square cm power for fifteen minutes was necessary to deplete spermatocytes and spermatids from the testis and that this treatment significantly reduced epididymal sperm reserves. //

            குறைந்த பட்சம் எலிகளில் மனிதர்க்கு சமமாக கருத்தடை வர மேல்கண்ட power per square cm, இவ்வளவு நேரத்துக்கு, இந்த frequency கொண்ட அலையை கொண்டு தரவேண்டும் என்பது அவர்கள் ஆய்வின் முடிவு. மொதல்ல procedure என்ன என தெரிய வேண்டும். அதற்க்கு அப்புறம் தானே நீங்கள் கேட்டது எல்லாம் ஆராய முடியும்? என்ன மருந்து என்று தெரியும். minimum dosage எவ்வளவு என்று தெரியாமல் எப்படி அதன் பக்க விளைவுகளை ஆராய முடியும்? இந்த ஆய்வின் நோக்கம் minimum dosage establish செய்வது. இதை வைத்து மேலும் ஆய்வுகள் கொண்டு தான் treatment regimen உருவாக்க முடியும்.

            அதுக்குள்ள இதில் இது தற்காலிகம் என நிரூபிக்க படவில்லை என குற்றச்சாட்டு… அப்ப ஆய்வ முடிக்க விடுங்க சார். அவர்கள் இது தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen தரட்டும். அதற்க்கு பிறகு அது தற்காலிகம், நிரந்தரம் என நீங்கள் வாருங்கள். இப்போதைக்கு இது முதல் கட்டத்தை கூட முழுதாக முடிக்கவில்லை. இந்த சிகிச்சை வேண்டிய result தருவது போல தெரிகிறது. இதற்க்கு அப்புறம் குறைந்த பட்சம் பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆய்வு பாக்கி இருக்கிறது.

            இதில் ஆய்வின் நோக்கம் என்னவாக இருந்தால் என்ன என்று கேட்கிறீர்கள். ஆய்வின் நோக்கத்தை பொருத்து தானே அதன் end product என்ன என்று தெரியும்? ஆய்வின் நோக்கம் புது anti malarial control in mosquitoes என்றால் ஏன் மலேரியாவை தடுக்க கொசுக்கு மருந்து தரும் ஆய்வு என கேட்பீர்களா? ஆய்வின் நோக்கம் இது என தெளிவாக கூறும்போது, இல்லை என்று மறுத்து பேசும் நீங்கள் தான் இந்த ஆய்வின் நோக்கம் ஆய்வாளர் கூறுவது இல்லை என நிரூபிக்க வேண்டும்.

            கடைசியாக ஒரு வார்த்தை. இந்த ஆய்வில் இது தற்காலிகம் என நிரூபிக்க படவில்லை என கூறி இருகிறீர்கள். இது minimum treatment establish செய்யப்பட்ட ஆய்வு என்பதை ஒதுக்கி வைத்து விடுவோம். உங்கள் குற்றச்சாட்டும் நிரூபிக்க படவில்லையே? பிறகு எந்த அடிபடையில் இந்த ஆய்வின் நோக்கம் நிரந்தரம் என்று வாதிடுகிறீர்கள்?

            Source:

            https://rbej.biomedcentral.com/articles/10.1186/1477-7827-10-7

            • சிந்தனை செய்.., அறிவியலில் நிருபணம் செய்யப்ட்டவைகள் மட்டுமே உண்மையாக ஏற்றுகொள்ள இயலும் அல்லவா? அப்படி என்றால் இந்த US-அட்ரா சண்டு கருத்தடை ஆய்வுகளில் இதுவரையில் என்ன நிருபணம் ஆகியுள்ளது என்பதனை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா? விந்தகத்தில் இந்த US-ஆய்வுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன… அதனால் விந்தகம் செய்லிழகிறது…. விந்தணு உற்பத்தி சைபர் என்ற நிலையை அடைகிறது…. அதனால் இந்த முறை உயிரனங்களுக்கு நிரந்தர மலட்டு தன்மையை உருவாக்குகின்றன அல்லவா? நிலைமை அப்படி இருக்க இன்னுமா இந்த US-அட்ரா சண்டு கருத்தடை ஆய்வுகளை நீங்கள் கண்மூடி தனமாக ஆதரித்துக்கொண்டு உள்ளீர்கள்…?

              • சார், உங்கள் கேள்வி இது:

                //இந்த முறை உயிரனங்களுக்கு நிரந்தர மலட்டு தன்மையை உருவாக்குகின்றன அல்லவா? நிலைமை அப்படி இருக்க இன்னுமா இந்த US-அட்ரா சண்டு கருத்தடை ஆய்வுகளை நீங்கள் கண்மூடி தனமாக ஆதரித்துக்கொண்டு உள்ளீர்கள்…?//

                இதற்க்கு நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். இந்த ultrasound முறை கருத்தடைக்கு பயன்படுத்தினால் எப்போதுமே கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுகிறதா? ultrasound பயன்படுத்தினாலும் விந்தணுக்கோ, விந்து பைக்கோ பாதிப்பே இல்லை என்று ஆய்வு ஏதேனும் இருக்கிறதா?

                • என்ன பேசிக்கொண்டு உள்ளீர்கள் சிந்தனை செய்! இந்த முறையில் விந்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமலா விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகின்றது? அல்ரா சவுண்டு கருத்தடை முறையில் விந்தனகத்துக்கு அல்ரா சவுண்டு கதிர்களை செலுத்துகின்றார்களா? அல்லது வேறு எங்காவது செலுத்துகின்றார்களா? யோசனை செய்ய சிந்தனை செய் மறந்தது ஏன் ?

                  • விந்தணு சேரும் இடம், விந்து செல் மரணம் என்றாலும் விந்து எண்ணிக்கை குறையும் சார். இதற்க்கு விந்தணு உற்பத்தியே பாதிகணும் என்று இல்லை. எண்ணிகையை குறைக்க பல வழி உண்டு. பாதிப்பு மட்டுமே வழி இல்லை.

                    • இத்தாலிய ஆய்வார்களின் நாய்கள் மீதான கருத்தடை ஆய்வு முடிய்வுகள் என்ன கூறுகின்றன? US சிகிச்சைக்கு பின் நாய்களுக்கு நிரந்தர மலட்டு தன்மை ஏற்படுகின்றது என்று தானே? நிரந்தர மலட்டு தன்மை என்றால் விந்து உற்பத்தி செய்ய இயலாமல் பாதிக்கப்படுவது விந்தகம் தானே?

                    • சில குறிப்பிட்ட முறைகள் US சிகிச்சை கொடுக்கபட்டு அதன் பின் அந்த சிகிச்சை நிருத்தப்பட்ட பின் நாய்களுக்கு நிரந்தர கருத்தடை ஏற்படுகிறது எனில் நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள் சிந்தனை செய்? நிரந்தரமாக நாய்கள் மலடாகப்டுகிரது அவற்றுக்கு விந்தணு உற்பத்தி ஆவது இல்லை என்ற முடிவை தவிர வேறு எந்த முடிவுக்கு நாம் வரமுடியும்? அப்படி நிரந்தரமான மலட்டுத்தன்மையை அடையும் நாய்களின் விந்தகம் பாதிக்கப்படாமல் வேறு என்ன பாதிக்கபடும் என்று நீங்கள் கூற வருகின்றீர்கள்?

            • இந்த ஆய்வை நான் ஒன்றும் நிதி உதவி செய்து ஊக்கம் அளிக்கவில்லையே! அந்தனை ஆதரிக்கும் நீங்களும் ,பில் அவர்களும் தானே இந்த ஆய்வை தற்காலி கருத்தடை க்கான ஆய்வு என்று நிருபிக்க நிதி உதவி அளித்து உதவ வேண்டும்… இந்த சாசகர ஆய்வையே எதிறக்கும் நான் எண்ணத்துக்கான நிதிஉதவி அளித்து உதவவேண்டும்? ஆனால் நான் பேசுவது என்னவென்றால் இந்த அல்டா சவுண்டு கருத்தடை ஆய்வுகள் நிரந்தர கருத்தடையை வெற்றிகரமாக நிருபித்து உள்ளன என்பது தான். இத்தாலிய ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் இந்த சவுண்டு கருத்தடை ஆய்வை நிரந்தர மலட்டுதன்மைக்கான ஆய்வாக தான் நிருபணம் செய்து உள்ளன.. !

              //அதுக்குள்ள இதில் இது தற்காலிகம் என நிரூபிக்க படவில்லை என குற்றச்சாட்டு… அப்ப ஆய்வ முடிக்க விடுங்க சார். அவர்கள் இது தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen தரட்டும். அதற்க்கு பிறகு அது தற்காலிகம், நிரந்தரம் என நீங்கள் வாருங்கள்.//

              • சார், அதே இத்தாலிய ஆய்வாளர் 3 MHz ultrasound எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை எனவும் நிரூபித்து உள்ளனர். அதை ஏன் ஒதுக்கி தள்ளுகிறீர்கள்? இந்த 3 MHz தானே Tsuruta அவர்களின் ஆய்வில் மிக promising என்கிறார்?

                நிரந்தர பாதிப்பை வெற்றிகரமாக நிரூபித்து உள்ளது என்கிறீர்கள். சரி. அந்த ஆய்வு இந்த அளவுக்கு, இந்த இடங்களில், இவ்வளவு நேரத்துக்கு ultrasound தந்தால் நிரந்தர பாதிப்பு என்று சொல்கிறதா, அல்லது ultrasound என்றாலே நிரந்த பாதிப்பு என்கிறதா? ஒரு எடுத்துகாட்டு பேசுனா, இவ்வளவு உப்பு , இந்த நேரத்துக்குள்ள சாப்டா செத்துடுவாங்க என்று சொல்கிறதா, அல்லது உப்பு சாப்டாலே செத்துடுவாங்க என்று சொல்கிறதா?

                இரண்டுக்கும் மிக, மிக பெரிய வித்யாசம் உள்ளது சார். இதில் எதை ஆய்வு சொல்கிறது. உப்பு என்றாலே மரணம் என்றா அல்லது இவ்வளவு உப்பு, இவ்வளவு நேரத்துக்குள் என்றால் மரணம் என்றா? கொஞ்சம் இதில் எதை ஆய்வு கூறுகிறது என்று சொல்ல முடியுமா?

                • இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை நிரந்த முறை என்று இத்தாலிய ஆய்வாளர்களால் நிருமானம் செய்யபட்டு உள்ளது. அந்த ஆய்வுக்கு நிதி உதவி அளித்த Parsemus Foundation அந்த ஆய்வின் இறுதியில் அளிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் படி என்ன கூறியுள்ளது என்றும் முப்பே பார்த்துவிட்டோம். (இது மனிதர்களுக்கு எப்போது பயன்படும் என்றால் அவர்களுக்குமேலும் குழந்தைகள் தேவை படாத போது மட்டுமே! ஏன் என்றால் இந்த முறையில் பல் வேறு கேள்விகள் விடையின்றி நிற்கின்றன… எவ்வளவு நாட்களுக்கு இந்த கருத்தடையின் விளைவுகள் நீடிக்கும் , எப்போது கருதரிப்பு நிலை திரும்பும் போன்ற பல கேள்விகள் இன்னும் விடைகானப்ப்டாமல் நிற்கின்றன… )

                  ஆய்வின் முடிவுகளும் அந்த முடிவின் அடிபடையில் கொடுக்கபடும் வழிகாட்டு நெறிமுறைகளும் அந்த முறையை நிரந்தர கருத்தடைக்கு மட்டுமே பயன் படுத்தலாம் என்று கூற நீங்கள் அறிவுக்கு புறம்பாகவும் ஆய்வு முடிவுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளீர்கள்!

                • இத்தாலிய ஆய்வாளர்கள் நாய்கள் மீது நடத்திய ஆய்வில் (3 MHz ultrasound) செலுத்தபட்டது. அதே நேரத்தில் Tsuruta அவர்களின் ஆய்வில் எலிகள் மீது (3 MHz ultrasound) செலுத்தப்பட்டது. என்ற விசயத்தை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்… இந்த இருஆய்வுகளின் முடிவுகளும் மனிதர்களுக்கு இந்த US கருத்தடை முறையை தற்காலிக கருத்தடை முறையாக பயன் படுத்தலாம் என்று வழிகாட்டவில்லை. நாம் அந்த இரு ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விசயத்தை முன்பே விவாதித்து விட்டோம். உங்களுக்கு மீண்டும் அந்த இரு ஆய்வுகளின் முடிவுகளையும் இங்கே பதிவு செய்கின்றேன்…..

                  Tsuruta அவர்களின் ஆய்வின் முடிவு :
                  —————————————–
                  Conclusions :

                  The non-invasive nature of ultrasound and its efficacy in reducing sperm count make therapeutic ultrasound a promising candidate for a male contraceptive. However, further studies must be conducted to confirm its efficacy in providing a contraceptive effect, to test the result of repeated use, to verify that the contraceptive effect is reversible and to demonstrate that there are no detrimental, long-term effects from using ultrasound as a method of male contraception.
                  இன்னும் கீழ் கண்ட மூன்று விசயங்கள் இந்த முடிவில் அறுதியிட்டு நிருபிக்கபட வில்லையே !
                  # இது திறன்வாய்ந்த கருத்தடை முறைதானா? (efficacy in providing a contraceptive effect)
                  # கருத்தடை மீண்டும் கருஉரு நிலைக்கு திரும்புமா (contraceptive effect is reversible)
                  #மீண்டும் மீண்டும் இந்த முறையை பயன் படுத்தலாமா?( repeated use)

                  இத்தாலிய ஆய்வாளர்களின் ஆய்வின் முடிவு :
                  ———————————————-
                  இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறையை சிந்தனை செய் போன்ற மனிதர்கள் காண்டம்களுக்கு இணையான தற்காலிக கருத்தடை முறையாகவோ அல்லது அவர்களின் இணைகளுக்கு இணையான கருத்தடை முறையாகவோ பயன்படுத்த நினைக்கலாம்! ஆனால் உண்மை என்ன வென்றால் இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை சிறிய விலங்குகளுக்கு குறைந்த நேரங்கள் அளிக்கபடும் போது அது நிரந்தர கருத்தடையை உருவாகுகின்றது … இது மனிதர்களுக்கு எப்போது பயன்படும் என்றால் அவர்களுக்குமேலும் குழந்தைகள் தேவை படாத போது மட்டுமே! ஏன் என்றால் இந்த முறையில் பல் வேறு கேள்விகள் விடையின்றி நிற்கின்றன… எவ்வளவு நாட்களுக்கு இந்த கருத்தடையின் விளைவுகள் நீடிக்கும் , எப்போது கருதரிப்பு நிலை திரும்பும் போன்ற பல கேள்விகள் இன்னும் விடைகானப்ப்டாமல் நிற்கின்றன…

                  //சார், அதே இத்தாலிய ஆய்வாளர் 3 MHz ultrasound எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை எனவும் நிரூபித்து உள்ளனர். அதை ஏன் ஒதுக்கி தள்ளுகிறீர்கள்? இந்த 3 MHz தானே Tsuruta அவர்களின் ஆய்வில் மிக promising என்கிறார்? //

        • மொக்கை அடிக்காமல் அந்த ஆய்வின் முடிவு என்ன கூறுகின்றது என்று என்னுடைய பின்னுட்டம் 23.1ல் கொடுத்து உள்ளேன். அதன் அடிப்டையில் பேசுவீர்கள் என்றால் விவாதம் பயன் உள்ளதாக இருக்கும்!

          • //Conclusions :
            The non-invasive nature of ultrasound and its efficacy in reducing sperm count make therapeutic ultrasound a promising candidate for a male contraceptive. However, further studies must be conducted to confirm its efficacy in providing a contraceptive effect, to test the result of repeated use, to verify that the contraceptive effect is reversible and to demonstrate that there are no detrimental, long-term effects from using ultrasound as a method of male contraception.//

            இது தான் நீங்கள் 23.1 இல் ஆய்வு முடிவு கொடுத்தது. இதன் அடிப்படியில் தானே பேசி வருகிறோம். இதில் முதல் வரியில் எதனால் ultrasound promising candidate என சொல்கிறார்கள் செந்தில்குமரன்? விந்தகம் பாதிப்பா அல்லது விந்தணு எண்ணிக்கை குறைவா? பாதிப்பு ஏற்படுவதால் இது கண்டிப்பாக காயடிக்கும் முயற்சி தான் என்பது உங்கள் வாதம். ஆனால் ஆய்வாளர் விந்தணு எண்ணிக்கை குறைதல் என்பதை தானே பேசுகிறார்? அதிலும் எண்ணிக்கை குறைந்தால் போதும், இது கண்டிப்பாக தற்காலிக கருத்தடை என்கிறாரா? அல்லது இது கண்டிப்பாக reversible ஆக இருக்க வேண்டும், எந்த பாதிப்பும் இருக்க கூடாது என தெளிவாக கூறுகிறார். காயடிப்பது தான் நோக்கம் என்றால் இதை பற்றி எல்லாம் அவர்கள் பேச வேண்டிய, ஏன் consider செய்ய வேண்டிய அவசியம் என்ன?

  24. நண்பர் சிந்தனை செய் !, இந்த விவாதத்துக்கு முடிவுரையாக கீழ் கண்ட செய்தியை உங்களுக்கு அளிக்க விரும்புகின்றேன்.!

    An Italian team (Leoci et al.) recently compared different methods in dogs and found that a regimen of three applications of ultrasound at 1 MHz, and 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours was effective as permanent sterilization.

    http://www.newmalecontraception.org/ultrasound/

    உங்களுக்கு ஒரு ஒரே ஒரு வேண்டுகோள்! மேல் உள்ள இந்த ஆங்கில வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்த்து தரமுடியுமா?

    • @@@@சிந்தனை செய் :

      அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறை மனிதனை முற்றிலும் மலடாக்கும் என்பதற்கு ஆதாரமாக கீழ் உள்ள ஆய்வு கட்டுரையை படிக்குமாறு சிந்தனை செய் அவர்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்…!

      To support my view of “permanent sterilization using ultrasound method” i would like to inform the vinavu readers though the following research result :

      http://www.newmalecontraception.org/images/LEOCI_Poster_2011.pdf

      The conclusion of this research says…. : After the Ultra Sound treatment, a zero sperm count was noticed in group A dogs (p சரி செய்ய இயலாத அளவுக்கு விந்தகத்தின் சேதம் ஏற்படுகிறது! அப்படி என்றால் அது நிரந்தர மலட்டுதன்மை தானே சிந்தனைசெய்?
      .

    • சரியான பின்னுட்டம்:

      @@@@சிந்தனை செய் :

      அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறை மனிதனை முற்றிலும் மலடாக்கும் என்பதற்கு ஆதாரமாக கீழ் உள்ள ஆய்வு கட்டுரையை படிக்குமாறு சிந்தனை செய் அவர்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்…!

      To support my view of “permanent sterilization using ultrasound method” i would like to inform the vinavu readers though the following research result :

      http://www.newmalecontraception.org/images/LEOCI_Poster_2011.pdf

      SUMMARY AND CONCLUSION :

      After the UltraSound treatment, a zero sperm count was noticed in group A dogs (pசரி செய்ய இயலாத அளவுக்கு விந்தகத்தின் சேதம் ஏற்படுகிறது! அப்படி என்றால் அது நிரந்தர மலட்டுதன்மை தானே சிந்தனைசெய்?

      • எனக்கும் கமெண்ட் பாதியில் கட் ஆகிறது.

        இந்த முறை கண்டிப்பா மனிதனை மலடாக்குமா? என்ன சார் சொல்றீங்க?

        //After the US treatment, a zero sperm count was noticed in group A, and no variation in B group. These changes were confirmed by the histologic exam. Our results demonstrated that US at group A parameters (1MHz over the entire testes) leads to irreversible testis damage, while 3MHz in the dorso-cranial area of the testis is ineffective on dog fertility.

        இல்லையே. ஆய்வாளர் இரு வேறு குரூப், இரு வேறு சிகிச்சை, இரு வேறு முடிவுகள் என கொடுத்து உள்ளாரே? ஒன்றில் முழுதாக sperm count குறைந்த போதிலும், இன்னொரு குரூப் எந்த மாற்றமும் காண்பிக்கவில்லை என தெளிவாக உள்ளதே.

        ஒரு வேலை இந்த ஆய்வு அவர்கள் கூறியது போல எது கருத்தடைக்கு சிறந்த முறை என ஆய்வு செய்ய இருக்கலாமோ?

        //Standard treatment regimens have not been established, therefore, research needs to identify optimal conditions including the least number of applications necessary, the shortest time interval among applications, the best testis area to direct US treatment, optimal frequency and power, and so forth.//

        எது கருத்தடை, எது நிரந்தர பாதிப்பு, என்ன பக்க விளைவுகள் என்பதை ஆராய ஆய்வுகள் தேவை தானே? எது safe limit, எது சிறந்த சிகிச்சை முறை என ஆராய்வதையும் குற்றம் சொல்கிறீர்கள். என்ன தான் பண்ணும்? தண்ணி அதிகமா குடிச்சா கூடத்தான் water logging ஆகி இறந்து போவோம். அதுக்காக தண்ணி குடிப்தே பிரச்சனையா? எல்லாத்துக்கும் safety limit, safe dosage என இருக்கு சார். அத மொதல்ல ஆராய விடுங்க. அப்புறம் உங்க பிரச்சனைய பாப்போம்.

        • பொறுமை வேண்டும் சிந்தனை செய்! அந்த ஆய்வின் முடிவை கூட உங்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லையா?

          “”After the US treatment, a zero sperm count was noticed in group A, and no variation in B group. These changes were confirmed by the histologic exam. Our results demonstrated that US at group A parameters (1MHz over the entire testes) leads to irreversible testis damage, while 3MHz in the dorso-cranial area of the testis is ineffective on dog fertility.”” இந்த ஆய்வு முடிவை புரிந்து கொள்வதில் உங்களுக்கு உள்ள மனத்தடைகளை நீக்க முயலுகின்றேன்!

          இந்த ஆய்வின் முடிவின் படி group A நாய்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை ஜீரோவாக மாறுகின்றது… மேலும் irreversible testis damage ஏற்படுகின்றது. irreversible testis damage என்றால் என்ன நண்பரே? சரி செய்ய இயலாத அளவுக்கு விந்தகத்தின் சேதம் ஏற்படுகிறது! அப்படி என்றால் அது நிரந்தர மலட்டுதன்மை தானே சிந்தனைசெய்? அந்த ஆய்வில் group B நாய்கள் ineffective on dog fertility நிலையை அடைகின்றன… ineffective on dog fertility என்றால் என்னவென்று யோசியுங்கள் நண்பரே! கருத்தரிக்க இயலாத நிலை என்று பொருளாகின்றது….

          • சார், நீங்கள் தேவை இல்லாமல் குழம்புகிறீர்கள்.

            //After the US treatment, a zero sperm count was noticed in group A, and no variation in B group. These changes were confirmed by the histologic exam. Our results demonstrated that US at group A parameters (1MHz over the entire testes) leads to irreversible testis damage, while 3MHz in the dorso-cranial area of the testis is ineffective on dog fertility.//

            இதற்க்கு நீங்கள் நினைப்பது அர்த்தம் அல்ல. முதல் வாக்கியத்தை பாருங்கள், zero sperm count in group A and no variation in B group. அதாவது B group நாய்களின் sperm count எந்த மாறுதலும் இல்லை. அவர்களின் ஆய்வு படி group A நாய்களுக்கு கொடுத்த வைத்தியம் (முழு testes, 1 MHz) irreversible damage. ஆனால் இரண்டாம் சிகிச்சை முறை, அதாவது group B நாய்களுக்கு கொடுத்த சிகிச்சை முறை (3MHz in the dorso-cranial area of the testis) நாய்களின் கருத்தரிக்கும் தன்மை, sperm count ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. அதாவது இந்த சிகிச்சை கொடுபதற்க்கு முன்பு என்ன sperm count, என்ன fertility இருந்ததோ, அதே தான் சிகிச்சைக்கு பிறகும் இருக்கிறது.

            நீங்கள் சொல்வது போல group A நிரந்தர மலட்டுத்தன்மை தான். ஆனால் group B சிகிச்சை எந்த விளைவும் இல்லை. இரண்டாவது ineffective treatment. வைரஸ் நோய்க்கு antibiotics கொடுப்பது மாதிரி.

            • சிந்தனை செய் ! சரி ஒரு வாதத்த்துக்கு உங்கள் கருத்தையே ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்… முதல் குழு நாய்களின் கருத்தரிக்கும் திறன் முற்றிலும் அழிக்க்ப்டுகிறது அல்லவா? மேலும் அது விந்தகத்தில் ஏற்படுத்துகின்ற iirreversible damage தானே? அப்படி என்றால் இந்த முறை நிரந்தர மலட்டுத்தன்மைக்கான ஆய்வாக நிருபணம் ஆகின்றது தானே? இரண்டாம் குழு நாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறுகின்றீர்கள் ! நன்றி ! அப்படி என்றால் இந்த முறையில் தற்காலிக கருத்தடை என்பது சாத்தியம் ஆகவில்லையே! தற்காலிக கருத்தடை என்பது இந்த USஅட்ரா சண்டு ஆய்வுகளில் இன்னும் நிருபணம் செய்யபடவில்லையே நண்பா!

              • ultrasound ஆய்வுகளில் இது தற்காலிக கருத்தடை என்று நிரூபனம் ஆகவில்லை என்கிறீர்கள். எல்லா variable, எல்லா scenario ஆய்வு செய்யப்பட்டு விட்டதா? இல்லை இப்போது தான் limits establish செய்து இருக்கிறார்களா?

                உங்கள் லாஜிக் வேறு ஒரு மருந்துக்கு பொருத்தி பார்போம். ஒரு antimalarial என எடுத்து கொள்வோம். அளவுக்கு அதிகமாக போனால் இருக்கும் மனித செல்லை அழிக்கிறது, கம்மியான அளவு என்றால் வேலை செய்யவில்லை என ஆய்வு கூறுகிறது. அப்படி என்றால் இந்த முறையில் மலேரியா மட்டும் கொள்வது சாத்தியம் ஆகவில்லையே! இந்த மருந்து கண்டிப்பாக antimalarial ஆக இருக்காது என அடித்து கூற முடியுமா? இல்லை அனைத்து variables, scenarios ஆராய்ந்த பிறகே அதை கூற முடியுமா? முதலில் dosage, safety limit எல்லாம் ஆய்வு establish செய்யட்டும். பிறகு உங்கள் குற்றச்சாட்டை அதன் மேல் வையுங்கள். மொத்த ultrasound என்றாலே வில்லன் மாதிரி சித்தரிப்பது சரியல்ல.

    • சிந்தனை செய்! இந்த ஆய்வின் முடிவை நான் தமிழில் மொழி பெயர்க்க கோரியிருந்தேன் அல்லவா? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? சரி நானே மொழி பெயர்கின்றேன்.

      Eng : An Italian team (Leoci et al.) recently compared different methods in dogs and found that a regimen of three applications of ultrasound at 1 MHz, and 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours was effective as permanent sterilization.

      தமிழ் : “effective as permanent sterilization”-> “நிரந்தர கருத்தடையை ஒத்த ஆற்றல் வாய்ந்த” என்று பொருளாகின்றது அல்லவா? இந்த ஆய்வு முடிவை கூட தற்காலிகமான கருத்தடையை என்று தான் உங்கள் மொழியில் மொழி பெயர்பீரோ?

      • உங்கள் கூற்றின் மூலம் நீங்க என்ன சொல்ல வரீங்க? 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours நிரந்தர கருத்தடை நாய்களில் உருவாக்குகிறது. எனவே ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை தான் என்கிறீர்களா?

        • யப்பா யப்பப்பா இப்பவாவது புரிந்துக்கொண்டீர்களே சிந்தனை செய்! இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வுகளின் முடிவுகள் இதுவரையில் அந்த முறை நிரந்தர கருத்தடைக்கு மட்டுமே உதவும் என்று நிருபித்து உள்ளது. நிரந்தர கருத்தடை என்று கூட கூறக்கூடாது… உண்மையை கூறுவது என்றால் விந்தகம் இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வில் பாதிப்புக்கு உள்ளாவதால் இதனை நிரந்தர மலட்டுத்தன்மை நோக்கிய ஆய்வாகவே நாம் கருதமுடியும்… மனிதனை மொத்தமாக மாட்டுக்கு அடிப்பது போன்று காயடிக்கும் முறை தான் இது என்று இப்போதாவது புரிந்துகொண்டீரே! இதுவரையில் இந்த முறையில் தற்காலிக கருத்தடை நிருபிக்கபட வில்லை என்பது தான் உங்களுக்கு எதிரான விசயமாக உள்ளது நண்பரே!

          • மிக்க நன்றி சார். இப்போது இதே லாஜிக் வேறு ஒரு விசயத்துக்கு பொருத்தி பார்போம்.

            உங்கள் கூற்று படி 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours நிரந்தர கருத்தடை நாய்களில் உருவாக்குகிறது. எனவே ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை.

            இதை ஒளி கதிருக்கு பொருத்தி பார்போம். புறஊதா கதிர்களும், ஊதா நிறங்களை தரும் கதிர்களும் மின்காந்த அலைகளின் ஒரு பகுதியே. frequency மட்டும் வேறு. மேல உள்ள 1 MHz, 3 MHz இரண்டும் வேறு frequency என இருந்த போதிலும் இரண்டும் ஒலி கதிர்கள். நமக்கு புறஊதா கதிர்கள் புற்றுநோய் உண்டாக்க வல்லது என தெரியும். எனவே, மின்காந்த அலைகள் என்றாலே அவை புற்றுநோய் உண்டாக்கும். அது என்ன frequency, மற்ற parameters எல்லாம் கவலை இல்லை. புறஊதா கதிர்கள் புற்றுநோய் உண்டாக்க வல்லது. எனவே அதனை பகுதியாக கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் அனைத்துமே புற்றுநோய் உண்டாக வல்லவை.

            உங்கள் லாஜிக் ஒளி கதிர்களுக்கு பொருத்தினால் இப்படி வருகிறது. இதை பற்றி தங்கள் கருத்து என்ன? இது சரியா அல்லது தவறா?

            • சிந்தனை செய்!

              இது எனது கூற்று அல்ல…. இது இத்தாலிய ஆய்வாளர்களால் நிருபிக்கபட்ட பரிசோதனை முடிவு… இதனை ஏற்காமல் மொக்கை போடுவதும் அதனை ஏற்பதும் உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்துக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் சிந்தனை செய்!

              //உங்கள் கூற்று படி 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours நிரந்தர கருத்தடை நாய்களில் உருவாக்குகிறது. எனவே ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை.//

            • சிந்தனை செய் ! கிழ் உள்ள வாக்கியத்தை //எனவே ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை.// என்னுடைய கூற்றாகவோ அல்லது ஆய்வாளர்களின் கூற்றாகவோ நீங்கள் எடுத்துகொள்ள தேவையில்லை… ஏன் என்றால் இது உங்களின் கூற்று….ஆய்வுக்கான பல மாறிகளில் (variables) ஒரு மாறிதொகுப்பாகிய 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours என்கின்ற பரமீட்டரஸ் இந்த ஆய்வை நிரந்தர கருத்தடையாக நிருபணம் செய்கிறது. இது மட்டுமே இத்தாலிய ஆய்வாரளர்களால் நிருபணம் செய்யபட்டு உள்ளது என்பதனை கருத்தில் கொண்டு சிந்தியுங்கள்! நிருபணம் செய்யபடாத எதனை பற்றியும் யுகத்தின் அடிப்படையில் பேசுவதால் என்ன பயன் ?

              //எனவே ultrasound என்றாலே நிரந்தர கருத்தடை.//

  25. சிந்தனை செய் அவர்களே….., இந்த அல்டா சவுன்ட் கருத்தடை ஆய்வுகளுக்கு நிதி உதவி அளித்த Parsemus Foundation ஆய்வின் இறுதியில் அளிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் என்னவென்று பார்கலாமா?

    It might be something men (சிந்தனை செய்கள் போன்றவர்கள்!###) would want to use as a supplement to condoms or as a supplement to their partner’s contraceptive. However, knowing that even fairly short-term use in smaller animals can lead to permanent infertility,@@@ it is probably best only for men who want no more children, given that there are so many questions about both how long the action lasts and how well fertility returns, and that changes in regimen can make a big difference in effect.

    Note :
    ### it is my comment!
    @@@ மொழி பெயர்ப்பு குழந்தைகளே இனி தேவை இல்லை என்று முடிவு செய்தவர்களுக்கு சிறந்த கருத்தடை முறை இந்த அல்ரா சவுன்ட் கருத்தடை முறை!(அப்படி என்றால் இது நிரந்தரமா? அல்ல்லது தற்காலிகமா?)

    சிந்தனை செய் அவர்களே….., தொடரலாமா விவாதத்தை!

    • தாராளமாக சார். நம் விவாதம் மனிதர்களில் ultrasound பற்றியது என்பதால், அதை பற்றி அவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என பார்த்து விடுவோமே!

      //EFFECTIVE CONTRACEPTION IN HUMANS REMAINS ELUSIVE

      It is now clear that under the right conditions, ultrasound works in dogs and rats (and has some effect in monkeys). However, the trick for getting long-lasting effect in large adult monkeys, and humans, has yet to be found. In fact, in late 2013 a first man decided to try ultrasound. He started with a very high personal sperm count, it is true, but it is discouraging that he found the effect of ultrasound wearing off within a few months, despite completing at least 10 treatments of 20-30 minutes on a Monday-Wednesday-Friday schedule. His results were as follows:

      SPERM EVALUATION Pre-treatment During treatment Right after treatment After treatment
      11/25/13 12/16/13 1/7/14 2/21/14
      Total Sperm
      Concentration 62,000,000 42,400,000 33,400,000 49,400,000
      % Motility 50 10 20 30
      % Normal Morphology 55 30 20 30
      Total Sperm Count 124,000,000 63,600,000 66,800,000 98,800,000
      Germinal cells 0-1 0-1 0-1 4-6
      WBC 0-1 0-1 0-1 6-8
      Pinhead ringtail 0-1 0-1 0 0-1
      Forward progression 0-1 0-1 0 0-1

      ஒன்றரை மாதங்கள், வாரம் மூன்று நாட்கள் இருபது முதல் முப்பது நிமிடங்கள் என சிகிச்சை எடுத்தும் சிகிச்சையின் போது பாதியாய் குறைந்த விந்தணு, சிகிச்சை முடிந்த ஒன்றரை மாதங்களில் 50% ஏறி விட்டது. இவர்கள் எதிர்பார்ப்பது ஒரு சிகிச்சை தந்தால் குறைந்த பட்சம் ஆறு மாதம் அந்த கருத்தடை தாக்குபிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டால், இரண்டு மாதம் கூட தாக்கு பிடிக்கவில்லை. எனவேதான் இதை discouraging என்கின்றனர்.

      மேலும் எலிகள், நாய்களில் கூட சரியான conditions இருந்தால் மட்டுமே ultrasound கருதடையாக வேலை செய்கிறது. குரங்குகளில் இன்னும் குறைவு. வயது வந்த குரங்குகள், மனிதர்களில் இப்போ வரைக்கும் எப்படி கொண்டுவருவது என தெரியவில்லை என்கின்றனர்.

      //It is now clear that under the right conditions, ultrasound works in dogs and rats (and has some effect in monkeys). However, the trick for getting long-lasting effect in large adult monkeys, and humans, has yet to be found.//

      சரி, இந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கொண்டு என்ன முடிவுக்கு வந்து உள்ளனர் எனவும் கூறுகின்றனர்.

      //Based on the results of these studies, though, we think ultrasound has the most potential as a nonsurgical sterilization alternative for animals, but only a supplemental contraceptive for men, rather than the 6-month contraceptive originally imagined (since with short-term use, one gets into tricky issues of how long it takes to wear off, whether there might be poor-quality sperm during the bounce-back period that are still capable of fertilizing and causing an abnormal offspring, and whether and how reliably fertility would bounce back after repeated use). It might be something men would want to use as a supplement to condoms or as a supplement to their partner’s contraceptive.
      //

      தற்காலிக கருத்தடை என்றால் ஆறு மாதம் குறைந்தபட்சம் வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் ரெண்டு மாதம் கூட இல்லை. short term use என்று வந்தால் நிறைய சிக்கல்கள் உள்ளன. அவை தெளிவாக இல்லை. எனவே இதை ஆண்கள் உபயோகபடுத்த நினைத்தாலும், இதை மட்டும் தனியே கருதடையாக பயன்படுத்த இப்போதைய நிலையில் இயலாது (மேற்கூறிய இன்னும் ஆய்வு செய்ய படாத சிக்கல்களின் காரணமாக). இதை கருதடையாக பயன்படுத்தினாலும் condom அல்லது மனைவியும் கருத்தடை பயன்படுத்த வேண்டும்.

      இத்தனை சிக்கல்கள், பதில் அளிக்கபடாத கேள்விகள் இருப்பதால், கீழ்கண்டதை அவர்கள் கூறுகிறார்கள்:

      // it is probably best only for men who want no more children, given that there are so many questions about both how long the action lasts and how well fertility returns, and that changes in regimen can make a big difference in effect.//

      இதில் மிக, மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்:

      1. It is now clear that under the right conditions, ultrasound works in dogs and rats (and has some effect in monkeys). However, the trick for getting long-lasting effect in large adult monkeys, and humans, has yet to be found.

      2. //there are so many questions about both how long the action lasts and how well fertility returns, and that changes in regimen can make a big difference in effect.//

      சரியான conditions இருந்தால் மட்டுமே எலி மற்றும் நாய்களில் இது வேலை செய்கிறது, அதாவது கருத்தடை செய்கிறது என்று சொல்லி இருப்பதை காண்க. ultrasound எப்போதும் வேலை செய்வதில்லை, அதாவது ultrasound என்றாலே பாதிப்பு தான் என்னும் கூற்று தவறு.

      இரண்டாவதாக வயது வந்த குரங்குகள் மற்றும் மனிதர்களில் எப்படி இந்த கருத்தடை கொண்டு வருவது என்பது தெரியவில்லை என்றும் சொல்லி இருகின்றனர். எலிகளில், நாய்களில் வேலை செய்தாலும் மனிதர்களில் வேலை செய்யும் என எந்த உத்தரவாதம் இல்லை. விலங்குகளில் பாதிப்பு ஏற்படுத்தும் பல விஷயங்கள் மனிதனை பாதிபதில்லை. அட நம்ம நெருங்கிய சொந்தம், குரங்குகளில் கூட கண்டிப்பாக வேலை செய்யும் என முறை இல்லை. பிறகு எப்படி மனிதனில் கண்டிப்பாக எப்போதும் நிரந்தர மலட்டுத்தன்மை என கூற முடியும்?

      ultrasound promising but wont be practical anytime soon என தான் தோன்றுகிறது. ஆனால் மத்தபடி ultrasound என்றாலே பாதிப்பு, நிரந்தர மலட்டுத்தன்மை என்பதெல்லாம் எங்கும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு மனித ஆய்வும், சிகிச்சை நிறுத்தினால் ஒன்றரை மாதத்தில் சிகிச்சை செய்த பலன் எதுவும் இல்லை என்று சொல்கிறது. பிறகு எங்கே நிரந்தர மலட்டுத்தன்மை எல்லாம்?

      • சிந்தனை செய் ! நீங்கள் மீண்டும் நீண்ட ஒரு மொக்கையை வினவு வாசகர்களுக்கு அளித்து உள்ளீர்கள்! விஷயம் என்ன வென்றால் இந்த ஆய்வுகளை நடத்த நிதி உதவி அளித்த Parsemus Foundation அந்த ஆய்வின் இறுதியில் அளிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நான் பேசிக்கொண்டு உள்ளேன்! அதற்கு பதில் கூறாமல் விலகி செல்கின்றீர்கள்! ஏன் ? ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் Parsemus Foundation அளித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நான் வேண்டுமானால் தமிழில் மொழி பெயர்த்து தரட்டுமா?

        மொழி பெயர்ப்பு :
        இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறையை சிந்தனை செய் போன்ற மனிதர்கள் காண்டம்களுக்கு இணையான தற்காலிக கருத்தடை முறையாகவோ அல்லது அவர்களின் இணைகளுக்கு இணையான கருத்தடை முறையாகவோ பயன்படுத்த நினைக்கலாம்! ஆனால் உண்மை என்ன வென்றால் இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை சிறிய விலங்குகளுக்கு குறைந்த நேரங்கள் அளிக்கபடும் போது அது நிரந்தர கருத்தடையை உருவாகுகின்றது … இது மனிதர்களுக்கு எப்போது பயன்படும் என்றால் அவர்களுக்குமேலும் குழந்தைகள் தேவை படாத போது மட்டுமே! ஏன் என்றால் இந்த முறையில் பல் வேறு கேள்விகள் விடையின்றி நிற்கின்றன… எவ்வளவு நாட்களுக்கு இந்த கருத்தடையின் விளைவுகள் நீடிக்கும் , எப்போது கருதரிப்பு நிலை திரும்பும் போன்ற பல கேள்விகள் இன்னும் விடைகானப்ப்டாமல் நிற்கின்றன…

        ஆனாலும் நீங்கள் இதனைதற்காலிக கருத்தடை முறையாக பயன் படுத்தலாம் என்று அறிவுக்கு புறம்பாக முட்டாள் தனமாக சஞ்சை காந்தி போன்று அதிகார வெறி ஏறிய மன நிலையில் பேசிக்கொண்டு உள்ளீர்கள்!

        • ஏன் இவ்வளவு பிரச்சனை உங்களுக்கு? இரண்டு பாயிண்ட் சார்:

          1. It is now clear that under the right conditions, ultrasound works in dogs and rats (and has some effect in monkeys). However, the trick for getting long-lasting effect in large adult monkeys, and humans, has yet to be found.

          2. it is probably best only for men who want no more children, given that there are so many questions about both how long the action lasts and how well fertility returns, and that changes in regimen can make a big difference in effect.

          மனிதர்களில் சரியான முறை இன்னும் தெளிவாக தெரியவில்லை. நிறைய கேள்விகள் உள்ளன, எனவே இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்தவர்கள் மட்டும் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்கின்றனர்.

          இத்தனை கேள்விகள் இருக்கும் போது, மனிதர்களில் சரியான வழிமுறை இன்னும் establish செய்ய படாத போது, அவர்கள் சொல்வது சரி தானே? ஒரு மருந்த பக்க விளைவு பற்றிய ஆய்வு, நீண்ட கால பயன்பாடு பற்றிய ஆய்வு, treatment regimen கூட தெரியாமல் பரிந்துரைத்தால் தான் நீங்கள்க சொன்னது மாதிரி நாசவேலை. நீங்கள் ultrasound என்றாலே கெடுதல் என பேசுவது தான் தவறு. ஏற்கனவே மேல உள்ள என் 23.1.1.1.1 பதிவில் தெளிவாக கூறி விட்டேன்:

          //அப்ப ஆய்வ முடிக்க விடுங்க சார். அவர்கள் இது தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen தரட்டும். அதற்க்கு பிறகு அது தற்காலிகம், நிரந்தரம் என நீங்கள் வாருங்கள். இப்போதைக்கு இது முதல் கட்டத்தை கூட முழுதாக முடிக்கவில்லை. இந்த சிகிச்சை வேண்டிய result தருவது போல தெரிகிறது. இதற்க்கு அப்புறம் குறைந்த பட்சம் பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆய்வு பாக்கி இருக்கிறது.//

          இப்போ உடனே ultrasound கருத்தடை என்று நான் கண்டிப்பாக வாதிடவில்லை. ultrasound என்றாலே நிரந்தர மலட்டுத்தன்மை என்று நீங்கள் தான் கூறி கொண்டு இருகிறீர்கள். என்னுடைய வாதங்கள் மிக எளிது:

          1. ultrasound என்றாலே கண்டிப்பாக நிரந்தர கருத்தடை என்பது மிக தவறு. பயன்படுத்தப்படும் variable பொருத்து விளைவு மாறும். நாய், எலிகளில் கூட எந்த பாதிப்பும் இருக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒரு குறிப்பிட்ட regimen பற்றி மட்டுமே விவாதிக்க முடியும். ஒரு regimen முடிவை கொண்டு ultrasound என்றாலே கண்டிப்பாக இது தான் விளைவு என கூறுவது தவறு.

          2. இன்னும் மனிதர்களில் எதிர்பார்ப்பது போல தற்காலிக கருத்தடை (குறைந்த பட்சம் ஆறு மாதம் தாங்கும் அளவுக்கு) செய்யும் முறை தெரியவில்லை. எனவே இதை மனிதர் பயன்பாட்டுக்கு இப்போதைக்கு பரிந்துரைக்க இயலாது. விளைவுகள் தெரியாமல் இருப்பதால், இப்போதைக்கு விளைவுகள் பற்றி கவலை பட தேவை இல்லாத, அதாவது, இனிமேல் கண்டிப்பாக குழந்தை தேவை இல்லை என முடிவெடுத்த நபர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே இப்போதைக்கு இதை பரிந்துரைக்க முடியும்.

          3. ultrasound கருத்தடை இப்போதைக்கு ஒரு ஆய்வு கூறு மட்டுமே. வேலை செய்யலாம், செய்யாமலும் போகலாம். அதற்க்கு தான் ஆய்வுகள் தேவை. ultrasound ஒரு வேலை தற்காலிக கருத்தடை முறையாக feasibility இல்லாமல் போகலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. ஆய்வில் promising avenues என நினைக்கும் பல, எத்தனையோ காரணங்களால் பயன்பாட்டுக்கு வராமல் போய் இருக்கின்றன. அதில் ultrasound கருத்தடையும் சேர்ந்து விடும். அவ்வளவு தான்.

          4. ஆண்களின் விந்தகம் மீது ஆய்வு செய்தாலே அது காய் அடிக்கும் நோக்கம் என்பது அல்ல. பெண்களின் கருப்பை மீது ஆய்வு செய்யாமல், தற்காலிகமாக கருப்பை வேலை செய்யாமல் தடுக்கும் birth control pills, morning after pills போன்றவை கண்டிப்பாக பயன்பாட்டுக்கு வந்து இருக்க முடியாது. பெண்கள் கருத்தடைக்கு அவர்களின் கருப்பை, கர்பப்பை, fallopian tubes, vagina என பல வேறு இடங்களில் வேலை செய்யும் கருத்தடை முறைகள் உள்ளன. அவை அந்த பகுதிகளை ஆய்வு செய்யாமல் வந்து இருக்க முடியாது. அதே போல தான், ஆண்களின் தற்காலிக கருத்தடை பற்றிய ஆய்வு என்றால் விந்தகம், விந்து சேரும் பை, விந்து குழாய் என பல இடங்களில் வேலை செய்யும் முறைகள் பற்றிய ஆய்வு நடக்கும். இதை ஏதோ கண்டிப்பாக கேட்ட எண்ணம் கொண்ட ஆய்வு என முடிவு கட்டுதல் தவறு.

          5. vasectomy இருக்கும்போது ஏன் மீண்டும் கருத்தடை ஆய்வு என்று கேட்கலாம். குழாயை வெட்டி விட்டால் பிறகு ஓட்ட வைப்பது எப்போதும் 100% சாத்தியம் அல்ல. பெண்களுக்கு கருத்தடை வேண்டும் என்றால் ஒரு மாத்திரை முழுங்கினால் அல்லது ஒரு IUD வைத்தால் போதும். அறுவை சிகிச்சை செய்து குழாயை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற எளிதான முறைகள் ஆண்களுக்கும் வருவது நல்லதே.

          • அந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வின் முடிவுகளின் அடிப்டையில் நான் பேசிக்கொண்டு உள்ளேன். ஆனால் நீங்கள்! யுகங்கள் அடிப்படையில் பேசிக்கொண்டு உள்ளீர்கள். நிருபிக்கப்டாத எந்த அறிவியல் தொழில் நுட்ப கண்டு பிடிப்பும் பயன்பாட்டுக்கு வராது, வரக்கூடாது என்ற எளிய உண்மையை உங்களுக்கு கூற ஆசைபடுகின்றேன். ஆனால் நீங்கள்!
            1.ஆம் ஆய்வின் ஒரு மாறியில்( variable ) இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வின் முடிவுள் நாயகளுக்கு இந்த முறை நிரந்தர மலட்டு தன்மையை ஏற்படுத்துகின்றது என்பது நிருபணம் ஆகியுள்ளது. அந்த நிருபிக்கபட்ட ஆய்வை புறம் தள்ள உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.? பிற மாரிகளில் இந்த ஆய்வுகள் எந்த பலனையும் அளிக்கவில்லை.அப்படி இருக்க இபோதைக்கு இந்த முறையை நிரந்தர கருத்தடை முறை என்று மட்டுமே அழைக்க முடியும்.

            ௨. எப்போது மீண்டும் கரு உரு நிலை திரும்பும்? உண்மையில் கரு உரு நிலை திரும்புமா ? என்று அறிய இயலாததால் தானே இந்த முறையை இனி குழந்தைகள் தேவை இல்லை என்று முடிவு செயுதவ்ர்கள் மட்டும் பயன் படுத்தலாம் என்று பரிந்துரை செய்து உள்ளார்கள்!
            3. இந்த ஆய்வுகள் அனைத்தும் நிறுத்தபட்டு விட்டன என்ற விசயம் உங்களுக்கு தெரியாதா நண்பரே?
            4.மீண்டும் அறிவியலுக்கு எதிராக பொய்யாக பேசுகின்றீர்கள் நீங்கள். கற்பபையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆய்வுகள் எதுவும் இதுவரையில் நடத்தப்படவில்லை. birth control pills, morning after pills, patches ஆகியவை எப்படி வேலை செய்கின்றது என்ற விசயத்தை முன்பே கூறிவிட்டேன். மீண்டும் வேண்டுமானால் கூறுகின்றேன். கவனமாக படிக்கவும்! இந்த patches களில் estrogen and progestin ஆகிய ஹார்மோன்கள் உள்ளன. இந்த முறையில் கருமுட்டை உற்பத்தி செய்யபடுவது எல்லாம் நீங்கள் கூறுவது போன்று தடை செய்யப்படுவது இல்லை. கருப்பைகளை (ovaries) விட்டு கரு முட்டைகள் வெளிவராமல் தான் இந்த patches தடுகின்றனவே தவிர நீங்கள் பொய்யாக கூறுவது போன்று கருமுட்டை உற்பத்தியை தடை செய்வது இல்லை. எனவே கருப்பைகள் (ovaries) எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.
            5. இந்த அல்ரா சவுண்டு முறை தற்காலிக கருத்தடை முறை என்று இன்னும் நிருபணம் செய்யபடவில்லை… ஆனால் ஒருஆய்வின் ஒரு மாறியில் இது நிரந்தர மலட்டுத்தன்மையை ஏற்படுத்துக்கின்றது என்று நிருபணம் ஆகியுள்ளது எனவே நிருபிக்கப்டாதா உங்கள் யுகத்தின் அடிப்டையில் பேசிக்கொண்டு இருபது முட்டாள் தனம் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

            //இப்போ உடனே ultrasound கருத்தடை என்று நான் கண்டிப்பாக வாதிடவில்லை. ultrasound என்றாலே நிரந்தர மலட்டுத்தன்மை என்று நீங்கள் தான் கூறி கொண்டு இருகிறீர்கள். என்னுடைய வாதங்கள் மிக எளிது://

            • //1.ஆம் ஆய்வின் ஒரு மாறியில்( variable ) இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வின் முடிவுள் நாயகளுக்கு இந்த முறை நிரந்தர மலட்டு தன்மையை ஏற்படுத்துகின்றது என்பது நிருபணம் ஆகியுள்ளது. அந்த நிருபிக்கபட்ட ஆய்வை புறம் தள்ள உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.? பிற மாரிகளில் இந்த ஆய்வுகள் எந்த பலனையும் அளிக்கவில்லை.அப்படி இருக்க இபோதைக்கு இந்த முறையை நிரந்தர கருத்தடை முறை என்று மட்டுமே அழைக்க முடியும்.//

              இது தான் சார் பிரச்சனையே. நீங்கள் அந்த குறிப்பிட்ட மாறிலி மட்டும் நிரந்தர கருத்தடை என்று பேசினால் பிரச்சினையே இல்லை. நீங்கள் ஒரே ஒரு set of variables வைத்து கொண்டு ஒட்டு மொத்தமாக ultrasound என்றாலே நிரந்தரம் என்பது தான் தவறு. limit establish செய்யப்படவில்லை என்றால் அத்துடன் நிறுத்திக்கொள்வோம். மீண்டும் சொல்கிறேன். அவர்கள் ஆய்வு செய்து தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen தரட்டும். பிறகு அதன் மீது உங்கள் குற்றச்சாட்டு வையுங்கள். அதற்க்கு முன் ultrasound ஆய்வு என்றாலே மனித குலத்தின் விரோதி என சித்தரிப்பது தவறு. Let them explore the possibility and not jump to conclusions or vilify research.

              //கற்பபையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆய்வுகள் எதுவும் இதுவரையில் நடத்தப்படவில்லை. birth control pills, morning after pills, patches ஆகியவை எப்படி வேலை செய்கின்றது என்ற விசயத்தை முன்பே கூறிவிட்டேன்//

              நீங்கள் முன்பே கூறியது எல்லாம் சரி தான். ஆனால் இந்த முறைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் அவற்றை பற்றி ஆய்வு செய்து இருப்பார்கள் அல்லவா? அப்போது கருப்பையில் இந்த hormones என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது, நீண்ட கால பயன்பாட்டின் பாதிப்புகள் என்ன, இது reversibleஆ என்பது போன்ற ஆய்வுகள் நடத்தாமலா இருந்து இருப்பார்கள்? அதை விடுங்கள் எடுத்த உடனே இது தான் dosage என தெரிந்து தொன்று தொட்டு hormone birth control பயன்பாட்டில் இருக்கிறதா? இல்லை இதுவும் ஒரு காலத்தில் promising candidate என இருந்து, பின்பு ஆய்வில் எல்லா பாதிப்பு, எல்லா விளைவு எல்லாம் ஆய்வு செய்து பிறகு பயன்பாட்டுக்கு வந்ததா?

              • சிந்தனை செய் ! கருத்தடைக்கு ultrasound ஆய்வு என்றாலே மனித குலத்தின் விரோதி என்று உறுதியாக கூற காரணத்தையும் தெளிவாகவே கூறியுள்ளேன் ! படித்தும் புரியாதது போல நடிக்கின்றீர்கள் நண்பரே! இந்த ultrasound ஆய்வு விந்தகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய விவாததத்தை இத்துடன் இணைத்துப்பாருங்கள். இந்த ஆய்வு மனித குலத்துக்கு எதிரானது என்று உங்களுக்கு விளங்கும்.

                அடுத்ததாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாது எனில் ஒரு குறிப்பிட்ட மாறியில் இந்த ஆய்வு நிரந்தர மலட்டுதன்மையை நாய்களுக்கு உருவாகுகிறது என்பது நிருபிக்கப்பட்டு உள்ளது. பிற மாறிகளில் முடிவுகள் எந்த விளைவையும் உருவாகாத நிலையில் நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? கருத்தடைக்கு ultrasound ஆய்வு 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours என்ற மாறி தொகுப்பில் நிரந்தர மலட்டு தன்மையை உருவாகுகிறது என்று கூறுவதில்உங்களுக்கு என்ன பிரச்சனை நண்பரே?

                அந்த birth control pills, morning after pills, patches கள் கருவகத்தில் ( ovary) எந்த பாதிபையும் ஏற்படுத்தவில்லை என்று நிருபணம் ஆகியுள்ள நிலையில் யுகத்தின் அடிபடையிலான உங்கள் வாதம் வெட்டியானது. முதலில் ஒன்றை உறுதியாக புரிந்து கொள்ளுங்கள். இவைகள் எந்த பாதிபையும் கருவகத்தில் ( ovary) ஏற்படுத்துவது இல்லைஇல்லை இல்லை……..ஆனால் அதே நேரத்தில்அல்ட்ரா சவுண்டு ஆய்வுகள் மனிதனின் விந்தகத்தில் பாதிப்புகளை உருவாகுகிறது.

  26. வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் தெரு நாய்களின் இன பெருக்கத்தை கட்டுபடுத்த பயன்படுத்த வேண்டிய இந்த அல்டா சவுன்ட் கருத்தடை முறையை மனிதர்களின் மீது பாய்ச்ச முயாலும் சிந்தனை செய் அவர்களின் மனநிலையை /சிந்தனை போக்கை /வக்கிர எண்ணத்தை வன்மையாக கண்டிகின்றேன்… சிந்தனை செய் அவர்களின் செயல் பாசிச மக்கள் விரோத இந்திராவின் அரசின் நெருக்கடி நிலை காலகட்டத்தில் அவரின் (அரசியல் அடியாள் )மகன் சஞ்சை காந்தி டெல்லியில் பெண்களின் மீது மனித உரிமைகளுக்கு எதிராக செலுத்திய வலுகட்டாய கருத்தடை ஆப்ரேசங்களுக்கு இணையான செயலாக தான் இதனை பார்கின்றேன்.

    • நான் எப்போ சார் இவ்வளவு கேட்டவன் ஆனேன்? ultrasound தற்காலிக கருதடையாக இருக்க possibility உண்டு என ஆய்வை வைத்து பேசியதர்க்க்கு நான் மனித உரிமைகள் அழிக்கும் அளவுக்கு பேசுவது ஏன்? தற்காலிக கருதடையாக வேலை செய்யும் என ஐயமற நிரூபிக்க பட்டால் அது பயன்பாட்டுக்கு வந்துவிட்டு போகட்டுமே. அதை பயன்படுதுவீர்களோ, இல்லையோ அது உங்கள் விருப்பம். எவருக்கும் கட்டாயாமாக எதுவும் புடுங்க வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நிரூபிக்க பட்ட பிறகும் ultrasound வேண்டாமா? பயன்படுத்தாதீங்க. உங்களுக்கு எது வேணுமோ அதை பயன்படுத்திட்டு போங்க.

      அடுத்து, இது என்ன statement?

      //வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் தெரு நாய்களின் இன பெருக்கத்தை கட்டுபடுத்த பயன்படுத்த வேண்டிய இந்த அல்டா சவுன்ட் கருத்தடை முறையை மனிதர்களின் மீது பாய்ச்ச முயாலும் சிந்தனை செய் அவர்களின் மனநிலையை /சிந்தனை போக்கை /வக்கிர எண்ணத்தை வன்மையாக கண்டிகின்றேன்//

      தடுப்பூசி, blood transfusion, antibiotics எல்லாம் என்ன நாய்க்கு ஒரு விதத்துல, மனுசனுக்க ஒரு விதத்துல வேலை செய்யுதா? நாய்க்கு வேற blood group ரத்தம் கொடுத்தா அது என்ன பிரச்சனை இல்லாம இருக்குமா? மனிதனாக இருந்தாலும் சரி, நாயாக இருந்தாலும் சரி, முறை ஒன்று தான். ரெண்டும் blood group பாத்து, மேட்ச் ஆகும் ரத்தம் தான் தர முடியும். நாய்க்கு பயன்படுத்தும் முறை என்பதால் அதை மனிதர் மீது பாய்ச்சுவது உங்கள் சொல்படி //மனநிலையை /சிந்தனை போக்கை /வக்கிர எண்ணத்தை//. அப்போ உங்களுக்கு வேண்டியவங்க ரத்தம் தேவை என்றால் group பார்த்து ரத்தம் தருவது நாய்க்கு செய்யும் முறை, அதை மனிதனுக்கு செய்வதை வன்மையாக கண்டிகிறேன்னு பேசுவீங்களா? இல்லை group பார்த்து, மேட்ச் ஆகும் ரத்தம் தருவீர்களா?

      நாமும் விலங்குகள் தான் சார். இரண்டு கால் பாலூட்டிகள். பல விலங்குகளுடன் பல விசயங்களில் ஒத்து போய் தான் தீருவோம். அதற்காக அவற்றுக்கு பயன்படுத்தும் முறைகள் மனிதனுக்கு பயன்படுத்துவது வக்கிரம் என்பது எந்த வித லாஜிக்?

      • சிந்தனை செய்…,அல்ரா சவுண்டு ஆய்வுகள் எல்லாம் முடிந்து அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் இந்த கருத்தடை முறையை விலங்குகளுக்கு தான் நிரந்தர கருத்தடை முறையாக பொருந்தும் என்று விளக்கிய பின்னும் இன்னும் நீங்கள் மனிதனுக்கு இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை தற்காலிக கருத்தடையாக பயன்படும் என்று அறிவுக்கு புறம்பாக முட்டாள் தனமாக பேசுகின்றீர்கள் என்றால் உங்கள் பேச்சு உரிமைக்கு நான் தடை போட இயலாது சிந்தனை செய்.! நான் தெளிவாகவே தான் பேசியதாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் நாய்களுக்கு தான் இந்த இந்த நிரந்தர கருத்தடை முறையை பயன்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளேன். இன்று தமிழ் நாட்டில் தெரு நாய்களை எல்லாம் கொல்லாமல் அவற்றை நிரந்தர கருத்தடை செய்கிறார்கள் அல்லவா ? அதற்கு இந்த அல்ரா சவுண்டு முறையை பயன்படுத்தலாம் என்று பரிந்த்துரை செய்து உள்ளேன்! ஆனால் நீங்கள்…..! மீண்டும் மொக்கையை ஆரம்பித்து விட்டீர்கள்! இந்த நிரந்தர கருத்தடை முறையை ஆதரிக்கும் உங்களுக்கும் டெல்லி பெண்கள் மீது கட்டாய கருத்தடையை தன் அதிகாரத்தின் மூலம் செயல் படுத்திய இந்திராவின் அடியாள் சஞ்சைகாந்திக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் தான் விளக்கவேண்டும்!

        • சார், நீங்கள் கூறியது:

          //வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் தெரு நாய்களின் இன பெருக்கத்தை கட்டுபடுத்த பயன்படுத்த வேண்டிய இந்த அல்டா சவுன்ட் கருத்தடை முறையை மனிதர்களின் மீது பாய்ச்ச முயாலும் சிந்தனை செய் அவர்களின் மனநிலையை /சிந்தனை போக்கை /வக்கிர எண்ணத்தை வன்மையாக கண்டிகின்றேன்//

          நான் கேட்டது:

          //தடுப்பூசி, blood transfusion, antibiotics எல்லாம் என்ன நாய்க்கு ஒரு விதத்துல, மனுசனுக்க ஒரு விதத்துல வேலை செய்யுதா? நாய்க்கு வேற blood group ரத்தம் கொடுத்தா அது என்ன பிரச்சனை இல்லாம இருக்குமா? //

          உங்கள் கூற்று சரியே. இப்போதைக்கு நாய், மற்றும் எலிகளில் தான் இது வேலை செய்கிறது. அதுவும் நிரந்தரமாக. எனவே அது எப்போதுமே நிரந்தர கருத்தடை தான் என்பது என்ன லாஜிக்? மனிதனில் செய்த ஆய்வு முடிவு அதன் table போட்டு குடுத்து இருக்காங்களே? அது ஏன் தெரிய மாட்டேங்குது? சிகிச்சை வாரத்துக்கு மூணு நாள் செய்தாலும் ஒன்றரை மாதத்தில் efficacy போய் விட்டது என தெளிவாக data காண்பிக்கிறது. பிறகு நீங்கள் ஏன் இன்னமும் ultrasound என்றாலே நிரந்தரம் என பேசுகிறீர்கள்?

          ultrasound கொடுக்கும் முறை, இடம், frequency என பல variable பொருத்து அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கூட இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. பிறகு எப்படி ultrasound என்றாலே மனிதர்களில் நிரந்தரம் என்பது சரி? குறிப்பிட்ட regimen பற்றி தானே பேச முடியும்? ultrasound என முழு field மீது குற்றச்சாட்டு வைப்பது ஏன்?

          • மீண்டும் ஆய்வின் முடிவுகளுக்கு எதிராக பேசிக்கொண்டு உள்ளீர்கள்! இந்த அல்டா சவுன்ட் கருத்தடை ஆய்வுகளுக்கு நிதி உதவி அளித்த Parsemus Foundation ஆய்வின் இறுதியில் அளிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்டையில் பேசினீர்கள் என்றால் அது மட்டுமே அறிவியல் அடிப்டையான விவாதமாக இருக்கமுடியும்.

      • நீங்கள் என்ன புடுங்கிக்கொண்டு இருகின்றீர்கள் சிந்தனை செய்!

        இன்று பள்ளிகளில் செலுத்தப்படும் தடுப்புசிகள் ஒன்றும் கட்டாயமானவை
        அல்லவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்.பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில்,சம்மதத்தின் அடிப்டையில் தான் அந்த தடுப்பூசிகள் போடப்படவேண்டும் என்பதும் உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்… ஆனால் உண்மை நிலவரம் என்ன? தமிழ் நாட்டின் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை கட்டாயமாக தானே மாணவர்களுக்கு தனது அதிகாரத்தின் மூலம் செலுத்திக்கொண்டு உள்ளார்! அதற்கு எதிராக என்ன புடுங்கிக்கொண்டு உள்ளீர்கள் நீங்கள் ! வினவு இனைய தளமாவது அந்த கட்டாய தடுப்பூசிக்காக கட்டுரை எழுதிக்கொண்டு உள்ளது.. ஆனால் நீங்கள்!

        //அதை பயன்படுதுவீர்களோ, இல்லையோ அது உங்கள் விருப்பம். எவருக்கும் கட்டாயாமாக எதுவும் புடுங்க வேண்டாம்.//

      • சிந்தனை செய் ! குமுதம் ஆறு வித்தியாச படங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து மனிதனுக்கும் ,நாய்க்கும் உள்ள வேறு பாடுகளை பற்றி அறிவின்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள்! உங்கள் பார்வையில் வைரஸ் கிருமிகளை பரப்பும் நாய்களும் மனிதர்களும் ஒன்றா ? அந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை நாய்களுக்கு ஆய்வின் ஒரு மாறிதொகுப்பாகிய 1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours என்கின்ற பரமீட்டரஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அல்லவா? எனவே வைரஸ் கிருமிகளை பரப்பும் தெரு நாய்களுக்கு இந்த அல்ரா சவுண்டு கருத்தடை முறை நிரந்தர கருத்தடை முறையாக பயன் படும் எந்தனை புரிந்து கொள்ள இயலாமல் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி மொக்கையாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்!

        மேலும் இந்த குறிப்பிட்ட இத்தாலிய அல்ரா சவுண்டு ஆய்வின் முடிவுகள் இந்த குறிப்பிட்ட மாறியில் (variable) (1 MHz ultrasound, 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours) நாய்களுக்கு மட்டுமே நிரந்தர கருதடையாக பயன்படும் என்று நிருபணம் செய்து உள்ள நிலையில் இந்த முறையை எப்படி மனிதனுக்கு பயன் படுத்த முடியும் என்று சிந்தித்து பதில் அளிக்கவும் நண்பரே!

        //நாமும் விலங்குகள் தான் சார். இரண்டு கால் பாலூட்டிகள். பல விலங்குகளுடன் பல விசயங்களில் ஒத்து போய் தான் தீருவோம். அதற்காக அவற்றுக்கு பயன்படுத்தும் முறைகள் மனிதனுக்கு பயன்படுத்துவது வக்கிரம் என்பது எந்த வித லாஜிக்?//

        • //உங்கள் பார்வையில் வைரஸ் கிருமிகளை பரப்பும் நாய்களும் மனிதர்களும் ஒன்றா ?//

          Way to miss the point….நான் சொன்னது என்ன.

          //தடுப்பூசி, blood transfusion, antibiotics எல்லாம் என்ன நாய்க்கு ஒரு விதத்துல, மனுசனுக்க ஒரு விதத்துல வேலை செய்யுதா? நாய்க்கு வேற blood group ரத்தம் கொடுத்தா அது என்ன பிரச்சனை இல்லாம இருக்குமா?//

          ஒரு சில biological functions மனிதன், நாய் என எல்லாம் வேறுபாடு பார்பது இல்லை. பல விலங்கினகளுக்கு அவை பொது என எடுத்துக்காட்டாக நான் தடுப்பூசி, blood transfusion, antibiotic என நான் கூறுகிறேன். அதை நீங்கள் வைரஸ் கிருமிகளை பரப்பும் நாய்களும் மனிதர்களும் ஒன்று என எடுத்து கொள்வது ஏனோ? திரும்பவும் கேட்கிறேன் சார். நாய் என்பதால் அதற்க்கு blood transfusion போது blood group பார்க்க மாட்டார்களா? இல்லை நாய்களுக்கு blood group பார்பதால் அவற்றை மனிதனுக்கு பார்த்து ரத்தம் கொடுப்பது வக்கிரம் என்று ஆகுமா?

          • சிந்தனை செய் !வெறி நாய்களுக்கு அந்த ஆய்வை பயன்படுத்து அவற்றை நிரந்தர மலட்டு தன்மை உடையவைகளாக மாற்றலாம் ஆனால் மனிதனுக்கு இந்த முறையை பயன்படுத்த கூடாது என்ற என்னுடைய கருத்தை புரிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு வாதத்துக்கு உங்கள் எதிர் கருத்தை ஏற்றால் கூட அந்த உங்கள் கருத்தின் அடிப்டையில் உங்கள் மைய்ய கருத்தான “இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வு முறையில் மனிதனுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படவில்லை” என்ற கருத்து அடிபட்டு போகிறது என்பதனை பற்றி யோசித்தீரா? என்ன கூற வருகிறேன் என்று புரிக்கிறதா? இத்தாலிய அல்ட்ரா சவுண்டு ஆய்வுகள் நாய்களுக்கு நிரந்த மலட்டு தன்மையை உருவாகுகிறது என்று நிருபணம் செய்து உள்ளது அல்லவா? எனவே அந்த ஆய்வின் முடிவுகளை மனிதனுக்கும் பொருந்தும் அல்லவா?

            • //வெறி நாய்களுக்கு அந்த ஆய்வை பயன்படுத்து அவற்றை நிரந்தர மலட்டு தன்மை உடையவைகளாக மாற்றலாம் ஆனால் மனிதனுக்கு இந்த முறையை பயன்படுத்த கூடாது என்ற என்னுடைய கருத்தை புரிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?//

              அது தான் ஏன் என கேட்கிறேன்? ultrasound பயன்படுத்தினாலே நிரந்தர பாதிப்பு தான், அது என்ன variable set ஆக இருந்தாலும் சரி என்பது நிரூபிக்க பட்டு விட்டதா? இல்லையே. பிறகு எதன் அடிப்படையில் ultrasound மூலம் தற்காலிக கருத்தடை சாத்தியமா என்று ஆய்வு கூட செய்யகூடாது என்கிறீர்கள்? இப்போது இருக்கும் நிலையில் ultrasound தற்காலிக கருதடையாக பயன்படுத்த முடியாது என்பது சரி தான். இப்போதே ultrasound பயன்படுத்தியே தீர வேண்டும் என்றும் யாரும் கூறவில்லை. ஆனால் அது முடியுமா என ஆய்வு கூட செய்ய கூடாது என்கிறீர்களா?

              //இத்தாலிய அல்ட்ரா சவுண்டு ஆய்வுகள் நாய்களுக்கு நிரந்த மலட்டு தன்மையை உருவாகுகிறது என்று நிருபணம் செய்து உள்ளது அல்லவா? எனவே அந்த ஆய்வின் முடிவுகளை மனிதனுக்கும் பொருந்தும் அல்லவா?//

              இது தவறு. விலங்குகளுக்கு பொருந்தும் எல்லாம் மனிதனுக்கும் அப்படியே பொருந்த வேண்டும் என்று அவசியம் இல்லை. உதாரணமாக சாக்லேட் நமக்கு ஒரு treat. ஆனால் நாய்களுக்கு சாக்லேட் விஷம். animal trials வெற்றிகரமாக நடந்தாலும் அது clinical trials தாண்டும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இன்னும் சொல்ல போனால் animal trials முடிந்து clinical trials செல்லும் மருந்துகளில் வெறும் 8% மட்டுமே பயன்பாட்டுக்கு வருகின்றன. விலங்குகளில் ஒரு விளைவு வருகிறது என்பதாலே அது கண்டிப்பாக மனிதனிலும் அப்படியே வரும் என்பது தவறு.

              இதற்க்கு தான் ஆய்வு முடிந்து தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen தரட்டும். பிறகு அதன் மீது உங்கள் குற்றச்சாட்டு வைக்கலாம் என்று திரும்ப திரும்ப சொல்கிறேன். இன்னும் விலங்கிலே கூட regimen நமக்கு தெரியவில்லையே சார். அதற்குள் எப்படி ultra sound என்றாலே கெடுதல் என பேச முடியும்?

              Source:

              http://www.the-scientist.com/?articles.view/articleNo/23003/title/More-compounds-failing-Phase-I/

      • சிந்தனை செய், நாய்கள் மீது நடத்தபட்ட இந்த அல்ரா சவுண்டு கருத்தடை ஆய்வுகள் நாய்களுக்கு நிரந்தர கருத்தடையை ஏற்படுத்துகின்ற என்ற நிலையில் அப்படி பட்ட ஆய்வு முடிவுகளை மனிதர்கள் மீதும் செயல்படுத்தி மனிதர்களையும் நிரந்தர கருத்தடையுள்ள (நிரந்தற மலைட்டுத்தன்மை உள்ள) மனிதர்களாக மாற்றுவது தான் உங்கள் எண்ணம் என்றால் உங்களுக்கும் சஞ்சைகாந்திக்கும் வக்கிர மன நிலையில் என்ன வித்தியாசம் ?

        Ref : An Italian team (Leoci et al.) recently compared different methods in dogs and found that a regimen of three applications of ultrasound at 1 MHz, and 1.5 W/cm2, lasting 5 minutes with an interval of 48 hours was effective as permanent sterilization.

        //நாமும் விலங்குகள் தான் சார். இரண்டு கால் பாலூட்டிகள். பல விலங்குகளுடன் பல விசயங்களில் ஒத்து போய் தான் தீருவோம். அதற்காக அவற்றுக்கு பயன்படுத்தும் முறைகள் மனிதனுக்கு பயன்படுத்துவது வக்கிரம் என்பது எந்த வித லாஜிக்?//

        • //சிந்தனை செய், நாய்கள் மீது நடத்தபட்ட இந்த அல்ரா சவுண்டு கருத்தடை ஆய்வுகள் நாய்களுக்கு நிரந்தர கருத்தடையை ஏற்படுத்துகின்ற என்ற நிலையில் அப்படி பட்ட ஆய்வு முடிவுகளை மனிதர்கள் மீதும் செயல்படுத்தி மனிதர்களையும் நிரந்தர கருத்தடையுள்ள (நிரந்தற மலைட்டுத்தன்மை உள்ள) மனிதர்களாக மாற்றுவது தான் உங்கள் எண்ணம் என்றால் உங்களுக்கும் சஞ்சைகாந்திக்கும் வக்கிர மன நிலையில் என்ன வித்தியாசம் ?//

          ஒரு இடத்தில நான் இவ்வாறு கூறியதை நிரூபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

          • நாய்களுக்கு நிருபணம் செய்யபட்ட இந்த அல்ட்ரா சவுண்டு முறையை மனிதர்கள் மீதும் பாய்ச்ச முயலும் உங்களை வேறு எப்படி புரிந்து கொள்வது சிந்தனை செய்?”

            • முதன்முதலில் blood transfusion நிரூபணம் செய்யப்பட்டதும் நாய்களில் தான். எனவே blood transfusion முறையை மனிதன் மீது பாய்ச்சியவனை என்ன என்று புரிந்து கொள்வீர்களோ அப்படியே என்னையும் புரிந்து கொள்ளவும்.

              //1628 English physician William Harvey discovers the circulation of blood. Shortly afterward, the earliest known blood transfusion is attempted.

              1665 The first recorded successful blood transfusion occurs in England: Physician Richard Lower keeps dogs alive by transfusion of blood from other dogs.

              1818 James Blundell performs the first successful blood transfusion of human blood to treat postpartum hemorrhage.//

              Source:

              https://bloodcenterblog.stanford.edu/blood-donation/a-brief-history-of-blood-transfusion-through-the-years/

              பிறகு இன்னும் கேள்வி நிற்கிறது. நான் மனிதர்களை நிரந்தர மலட்டுத்தன்மை உள்ள மனிதர்களாக மாற்றுவது தான் என் எண்ணம் என்று கூறி உள்ளதை நிரூபிக்கவும். உங்கள் கூற்று வேண்டுமானால் மீண்டும் quote செய்கிறேன். அதை நான் கூறி உள்ளதாக காண்பிக்கவும்.

              //சிந்தனை செய், நாய்கள் மீது நடத்தபட்ட இந்த அல்ரா சவுண்டு கருத்தடை ஆய்வுகள் நாய்களுக்கு நிரந்தர கருத்தடையை ஏற்படுத்துகின்ற என்ற நிலையில் அப்படி பட்ட ஆய்வு முடிவுகளை மனிதர்கள் மீதும் செயல்படுத்தி மனிதர்களையும் நிரந்தர கருத்தடையுள்ள (நிரந்தற மலைட்டுத்தன்மை உள்ள) மனிதர்களாக மாற்றுவது தான் உங்கள் எண்ணம் என்றால் உங்களுக்கும் சஞ்சைகாந்திக்கும் வக்கிர மன நிலையில் என்ன வித்தியாசம் //

  27. @@@@சிந்தனைசெய் மற்றும் இராமன் :

    இந்த விவாதத்தை பொறுத்தவரையில் சிந்தனை செய் அவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான பார்வையில் (அந்த கண்டுபிடிப்புகள் மக்கள் நலனுகானவைகளா அல்லது எதிராவைகளா ) உள்ள குறைபாடுகளை நீக்குவது என்பது உடனடியான சாத்தியம் அல்ல என்றாலும் நீண்டகால நோக்கில் இந்த விவாதமும் நான் வைக்கின்ற கருத்துகள் அவருக்கு மக்கள் நலனை நோக்கிய உணர்வு பூர்வமான , அரசியலை உள்ளடக்கிய அறிவு பூர்வமான சிந்தனையை உருவாக்கி தரும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். உதாரணத்துக்கு இராமனுக்கு தமிழ் நாட்டின் தொன்மங்கள் மீது ஏற்பட்டுள்ள புதிய பார்வை அத்தகைய நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்துகிறது. ஒரு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களின் தொன்மங்கள் பற்றிய விவாதத்தில் தமிழ் மக்களையும் அவர்களின் பழமையையும் புரதான பண்பாட்டு சிறப்புகளையும் எள்ளி நகையாடிகொண்டு இருந்த இராமன் இன்று கீழடி தமிழ் மக்கள் தொல்லியல் ஆய்வுகள் பற்றிய கட்டுரை விவாதத்தில் மனமாற்றத்துடன் பேசுகின்றார்! (Very good article. If central govt cant sponsor, state govt should sponsor and continue ……..) அத்தகைய மன மாற்றத்தை சிந்தனை செய் அவர்களும் தன் சொந்த அனுபவங்கள் அடிபடையிலும், அறிவு பூர்வமான மக்கள் நல சிந்தனைகள் அடிபடையிலும் விரைவில் அடைய வாழ்த்துகள்!

  28. //சில குறிப்பிட்ட முறைகள் US சிகிச்சை கொடுக்கபட்டு அதன் பின் அந்த சிகிச்சை நிருத்தப்பட்ட பின் நாய்களுக்கு நிரந்தர கருத்தடை ஏற்படுகிறது எனில் நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள் சிந்தனை செய்? //

    அந்த சிகிச்சை sterlization என்பது சரி தான். ஆனால் அதை வைத்து ultrasound என்றாலே என்னமோ கெடுதல் என்று முடிவு கட்டமாட்டேன். அப்படி கட்டுவதும் தவறு. ஏற்கனவே சொன்னது போல Its the dose that makes the poison. அளவுக்கு அதிகமாக போனால் தண்ணீர் கூட உயிரை பறிக்கும்.

    • இந்த அல்ட்ரா சவுண்டு ஆய்வுகள் மனிதனின் விந்தகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய சிந்தனை உங்களுக்கு இல்லாததால் தான் உங்களை நான்மக்கள் விரோத இந்திராவின் அடியாள் சஞ்சை காந்தியுடன் ஒப்பிடவேண்டி இருந்தது !

      • சார், இன்னும் ஏன் மக்கள் விரோதி என சித்தரிப்பது? அதான் தெளிவாக சொல்கிறேனே. முதலில் ஆய்வு முடியட்டும். தற்காலிக கருத்தடை என்று ஒரு regimen வரட்டும். பிறகு அதன் மீது உங்கள் குற்றச்சாட்டு வையுங்கள்.

        இன்னும் அந்த regimen வராத பட்சத்தில் இப்போதே ultrasound மக்களுக்கு பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று எங்காவது நான் சொல்லி இருக்கிறேனா? சொல்வது எல்லாம் ஏதோ ஒரு variable செட் முடிவுகளை, அதுவும் விலங்குகளின் முடிவை வைத்து கொண்டு ultrasound என்றாலே மனித குலத்தின் விரோதி என்பது போல பேச வேண்டாம் என்பது தான். இதை சொல்வதற்கு ஏன் என்னை அவ்வளவு கெட்டவனாக பார்க்க வேண்டும்?

  29. //சிந்தனை செய் அவர்களே ! இந்த விசயத்தில் இன்னும் கூட விளக்கமாக பேச முடியும்! birth control pills, morning after pills, patches ஆகியவை கருவகம் (ovary) மற்றும் கருவகத்தையும் (ovary) கருப்பையையும் (uterus) இணைக்கும்
    கருமுட்டைக் குழாய்கள் (fallopian tubes) மீதும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை…! ஏன் கருப்பை (uterus) மீது கூட எந்த தவறான விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை.//

    மன்னிக்க வேண்டும் சார். hormonal முறைகள் வேறு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. விக்கிப்பீடியா சொல்வது:

    //The estrogen and progestogen in combined hormonal contraceptives have other effects on the reproductive system,

    Slowing tubal motility and ova transport, which may interfere with fertilization.

    Endometrial atrophy and alteration of metalloproteinase content, which may impede sperm motility and viability, or theoretically inhibit implantation.

    Endometrial edema, which may affect implantation.//

    இதில் முதல் விளைவு fallopian tubes மீது ஏற்படுவது, மூன்றாவது கர்பப்பை(uterus) மீது.

    உங்களுடைய இந்த கூற்றுக்கு என் கேள்வி இன்னும் பதில் தர படவில்லை செந்தில்குமரன்.

    //விந்தகமாக இருந்தாலும் சரி , கருப்பை (ovaries) ஆக இருந்தாலும் சரி அவற்றின் மீது நிரந்தர/தற்காலிக மலட்டு தன்மையை ஏற்படுத்தும் எந்த ஆய்வையும் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் செயல் படுத்தபடும் கருத்தடை முறைகளையும் நாம் ஏற்க முடியாது!//

    கருப்பை மீது நிரந்தர/தற்காலிக மலட்டு தன்மையை ஏற்படுத்தும் எந்த ஆய்வையும் அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் செயல் படுத்தபடும் கருத்தடை முறைகளையும் நாம் ஏற்க முடியாது என்கிறீர்கள். சரி, அப்போ birth control pills, hormonal கருத்தடை முறைகள் எல்லாம் எவ்வாறு வேலை செய்கிறது என தெரிய கண்டிப்பாக கருப்பை மீது ஆய்வு நடத்தி இருப்பார்களே சார். இந்த கருத்தடை முறைகளும் அவற்றின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் செயல்படுத்த படுகின்றன. எனவே இவற்றை ஏற்று கொள்ள வேண்டாமா?

    • சிந்தனை செய் !கீழ் உள்ள விக்கி பொட்டக விவரத்தை உங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து பேசிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே!

      The estrogen and progestogen in combined hormonal contraceptives have other effects on the reproductive system, but these have not been shown to contribute to their contraceptive efficacy..

      • Slowing tubal motility and ova transport, which may interfere with fertilization.
      • Endometrial atrophy and alteration of metalloproteinase content, which may impede sperm motility and viability, or theoretically inhibit implantation.
      • Endometrial edema, which may affect implantation.

      Insufficient evidence exists on whether changes in the endometrium could actually prevent implantation. The primary mechanisms of action are so effective that the possibility of fertilization during combined hormonal contraceptive use is very small. Since pregnancy occurs despite endometrial changes when the primary mechanisms of action fail, endometrial changes are unlikely to play a significant role, if any, in the observed effectiveness of combined hormonal contraceptives.

      விந்தகத்துக்கு இணையான பெண்களின் கருவகத்தில் ( ovary) என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறுங்கள் பார்கலாம்! இந்த birth control pills எந்த பாதிபையும் பெண்களின் கருவகத்தில் ( ovary) ஏற்படுத்தவில்லை என்ற நிலையில் உங்களின் யுகங்களின் அடிப்டையில் பேச வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லையே!

      • இதுவும் விக்கிபீடியா பக்கத்திலே இருக்கிறது சார். கொஞ்சம் anatomy எல்லாம் போக வேண்டும். எனவே சுருக்கமாக கீழே தருகிறேன். sources கொண்டு நீங்கள் மேலும் பார்த்து கொள்ளலாம்.

        //Mechanism of action

        Combined oral contraceptive pills were developed to prevent ovulation by suppressing the release of gonadotropins. Combined hormonal contraceptives, including COCPs, inhibit follicular development and prevent ovulation as a primary mechanism of action//

        இதில் inhibit follicular development தான் கருவகத்தில் நடப்பது. Ovarian follicle என்பது இன்னும் முதிர்ச்சி அடையாத கருமுட்டை (oocyte) கொண்டு இருப்பது. இது முதிர்ச்சி அடைந்தால் தான் கருமுட்டை வெளியிடப்படும். விந்தகம் விந்து செல் உற்பத்தி செய்வது மாதிரி. ஆண்களில் பல ஆயிரம், பெண்களில் ஒன்றே ஒன்று. அவளோ தான். இந்த follicle maturity ஆவதை தடுத்து தான் hormonal methods வேலை செய்கின்றன. ஆண்களில் இதற்க்கு சமானம்(equivalent) சொல்ல வேண்டும் என்றால் விந்து செல் உருவாவதை தடுப்பது. ஆண்களில் spermatogonia என்னும் முதிர்ச்சி அடையாத செல், seminiferous tubules என்னும் இடத்தில விந்தாக மாறும். பெண்களில் oocyte கருமுட்டையாக ovarion follicleஇல் மாறுகிறது. கருப்பை வேலை செய்யாவிட்டால் என்ன நடக்குமோ அதே தான் hormonal methods எடுத்து கொள்ளும் போதும் நடக்கிறது.

        அடுத்து விக்கி பெட்டகத்தை நான் தவறாக quote செய்வதாக உங்களுக்கு தோன்றி இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் கூறியது:

        //birth control pills, morning after pills, patches ஆகியவை கருவகம் (ovary) மற்றும் கருவகத்தையும் (ovary) கருப்பையையும் (uterus) இணைக்கும் கருமுட்டைக் குழாய்கள் (fallopian tubes) மீதும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை…! ஏன் கருப்பை (uterus) மீது கூட எந்த தவறான விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை.//

        எனவே தான் fallopian tubes, uterus மீது என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பது பேசும் பாயிண்ட் மட்டும் quote செய்தேன். நீங்கள் பேசியது fallopian tubes, uterus மீது எந்த விளைவையும் ஏற்படுத்துவது இல்லை என்பதை தானே. எனவே அந்த மாற்றங்கள் என்ன என்பதுடன் நிறுத்திக்கொண்டேன். இதில் வேறு எதுவும் குதர்க்க நோக்கம் எல்லாம் எதுவும் இல்லை.

        Sources:

        https://en.wikipedia.org/wiki/Combined_oral_contraceptive_pill#Mechanism_of_action

        https://www.verywell.com/follicle-female-reproductive-system-1960072

        https://en.wikipedia.org/wiki/Oocyte

        https://www.reference.com/science/sperm-made-4928a95bd0dc8b6d#

Leave a Reply to சிந்தனை செய் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க