privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் !

கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !

-

பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

டந்த 2017 மார்ச் மாதம் குஜராத் அரசு தனது மாநிலத்தின் ’விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதே போல, பசுப்பாதுகாப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ள சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங், பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ஒரு படி மேலே போய் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், பசுவுக்கு அவமரியாதை செய்பவனின் கைகளை உடைப்பேன் என கூவியுள்ளார்.

பசு வதையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு சட்டரீதியாகவும், தாத்ரி, அல்வார் சம்பவங்கள் போன்று சட்டவிரோதமாகவும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், மாட்டுக்கறி மற்றும் தோலுறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளை மட்டும் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இந்நடவடிக்கைகள் பசுக்களை வளர்க்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்குத் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளைப் பொறுத்தவரையில், பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுக் கன்றுகளையும் வளர்ப்பது என்பது தற்போதைய சூழலில் வாய்ப்பில்லாத ஒன்றாகும். ஆகவே விவசாயிகள் பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுகளையும், அடிமாட்டிற்கு விற்றுவிட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு மீண்டும் பசுக்களை வாங்கி வளர்க்கும் போது மட்டும் தான் இத்தொழிலில் சிறிதாவது வருமானம் பெற முடியும். ஆனால், தற்போதைய கடும் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் எருதுக் கன்றுகளையும், பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும் விற்பனை செய்வது சிக்கலாகி இருக்கிறது.  இதனால் அவர்களுக்கு புதிய மாடுகளை வாங்கி வளர்ப்பதில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை – சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங்

இதன் தாக்கத்தால், பால் உற்பத்திக்கு பசுக்களை வாங்குவதை விட எருமைகளை வாங்கினால், பால் கறப்பதை நிறுத்திய பிறகும் அவற்றை அடிமாட்டிற்கு விற்க முடியும் என்பதாலேயே பசுக்களைத் தவிர்த்து எருமைகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் விவசாயிகள்.  இதன் காரணமாக எருமைகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 100 கிலோவிற்கு சுமார் 10,000 ரூபாய் முதல் 11,000 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த எருமை மாடுகளின் விலை 13,000 முதல் 14000 வரை விலையேற்றம் அடைந்தது. பசுக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின் படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்திரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்படுகின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவிற்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால் இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அஸ்ஸாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கின்றது.  இந்தக் கணக்கெடுப்பு மிகத் தெளிவாக ஒரு விசயத்தை உணர்த்துகிறது. அதாவது மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால் பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துத்துவ வார்த்தைகளில் சொல்லுவதானால், விவசாயிகளிடமிருந்து ’லெட்சுமி’யைப் பிடுங்கி விட்டு அவர்களது கைகளில்  ’எமனைக்’ கொடுத்திருக்கிறது.

இது போக, பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. உதாரணமாகக் கடந்த  2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின் படி,  ’ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவடைந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது, இச்சரிவிற்குக் காரணம், இப்பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திய பின்னர் இவற்றால் பலனில்லை என்பதால், விவசாயிகள் இப்பசுக்களை வளர்ப்பதற்கே விரும்புவதில்லை என்பதேயாகும்.

கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மராட்டிய அரசு, பசுக்கள் மற்றும் காளைகள் வெட்டப்படுவதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும் முழுமையான தடை விதித்த பிறகு இம்மாநிலத்தில் மாடு வெட்டும் தொழிலைச் செய்து வரும் குரேசி சமூகத்தினர், மாட்டு வியாபாரிகள், தோல் உரிப்புத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பசு மற்றும் காளைகளுக்கான சந்தை மற்றும் தோல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மாட்டுக் கறி மற்றும் மாட்டுத் தோல் சார்ந்த தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார்  ரூ. 1,14,338 கோடி (17.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிற்கு மாட்டுத் தோல் மற்றும் அது சார்ந்த வியாபாரங்கள் நடக்கின்றன. பாஜக கும்பலின் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையால் இத்தொழில்களிலும் அது சார்ந்த தேசிய வருவாயிலும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

சங்கப் பரிவாரக் கும்பலான விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின் படியே மஹாராஸ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே. இப்படி கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை. இந்நிலை தொடருமானால், பசுக்களையும் காளைகளையும் இனி உயிரியல் கண்காட்சிகளிலும், சரணாலயங்களிலும் தான் காண முடியும் !!

மேலும் படிக்க:
The Beef Ban Effect: Stray Cattle, Broken Markets and Boom Time for Buffaloes

  1. இந்த கட்டுரை எழுப்பும் அடிப்டையான கேள்விகளுக்கு பதில் அளிக்க “இத்துத்துவா விசிலடிச்சான் குஞ்சுகள்” மணிகண்டன், சதீஷ் போன்றவர்கள் வரமாட்டார்கள்…

    • // சதிஷ்கள் // இதில் ஏன் என் பெயரை இழுக்கிறீர்கள்

      உண்மையிலேயே நீங்கள் எல்லாம் எந்த கருவியின் துணை கொண்டு ஒருவனுக்கு முத்திரை குத்துகிறீர்கள் என்று தெரியவில்லை

      இது போன்ற வெறுப்பு அரசியலை முன்னெடுத்தால் மக்களை சென்று அடைய முடியாது.

      உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் ‘மக்களின் நம்பிக்கையை பெற்று’ ஆட்சிக்கு வாருங்கள். எப்படி இருந்தால் இந்த சமுதாயம் நன்மை பெறுமோ அதை செய்யுங்கள்

      இன்னுமும் இது மக்களாட்சி தான். யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம்

      மாற்று கருத்து என்பது ‘எந்த விஷயத்தை’ எடுத்து கொண்டாலும் இருக்கவே செய்யும். அந்த கருத்தில் ‘நியாயம்’ இருந்தால் அதை ஏற்று கொள்ளவும் வேண்டும்

      உங்களுக்கு மாற்று கருத்து என்பதே பிடிக்கவில்லை போலும். ???

        • எல்லாரும் அரசியல் செய்ய ஒரு (அல்லது) பல விஷயங்கள் தேவைப்படுகிறது

          மொழி, மதம், இனம், தண்ணீர், உணவு என்று எதையுமே அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை

          தனிப்பட்ட முறையில் யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் வரையறுக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம் தான்

          ஆனால் இரண்டு விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு பிடிக்கறதா, இல்லையா என்பது வேறு விஷயம்

          (a) பசு இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது (அல்லது) பொதுவாக மக்களால் வணங்கப்படுகிறது
          (b) இறைச்சி உணவை விட ‘பச்சை காய்கறியில்’ சத்து அதிகமாக உள்ளது என்று ‘விஞ்ஞானம் சொல்வதாக’ சொல்கின்றனர். இதை ‘நீயா – நானா’ விவாத நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்டு சொன்னார்

          இந்த காலகட்டத்தில் ‘இறைச்சியை’ முழுவதுமாகவே தவிர்ப்பது நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.

          ஒரு காலத்தில் நான் ‘கோழி இறைச்சியை’ உண்பவனாக இருந்தேன். ஆனால் இப்போது 95% வரை இறைச்சி உணவை தவிர்த்து விட்டேன்

          நன்றி

          • நல்லது சதீஷ்,

            நீங்கள் மாட்டை சாப்பிடுவதோ அல்லது மாடு சாப்பிடும் புல்லை சாப்பிடுவதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.உங்களது தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கும் பிரச்சினை இல்லை. எடுத்துக்காட்டாக பசு இந்து மதத்திற்கே புனிதம் என்று கூறுவதும் கூட உங்களது தனிப்பட்ட கருத்து தான்.

            அப்புறம் உங்கள் மதத்தின் கருத்துக்களை அடுத்த மதத்தவருக்கு திணிப்பது கொலை செய்வது எப்படி ஜனநாயகமாகும்? நீயா நானாவில் விவாதிப்பவர்கள் எல்லாம் என்ன பெரிய அறிவாளிகளா?

            மொட்டையாக கூறாமல் பசு எந்த இந்துக்களால் வழிபடபடுகிறது? எப்படி அது அனைத்து இந்துக்களின் புனிதமாக இருக்கிறது என்று அறுதியிட்டு கூறினால் நலமாக இருக்கும்

            இறைச்சி உணவை விட காய்கறியில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்று எந்த அறிவியல் கூறுகிறது? என்று கூறினால் நல்லது. ஒரு காயில் இருக்கும் சத்துக்கள் அப்படியே இன்னொரு காயில் கூடத்தான் இருக்காது அதனால் அது சத்து குறைவானது என்று கூற முடியுமா?

            • // அப்புறம் உங்கள் மதத்தின் கருத்துக்களை அடுத்த மதத்தவருக்கு திணிப்பது கொலை செய்வது எப்படி ஜனநாயகமாகும்? நீயா நானாவில் விவாதிப்பவர்கள் எல்லாம் என்ன பெரிய அறிவாளிகளா? //

              நீயா நானாவில் விவாதம் செய்பவர்கள் அறிவாளிகள் என்று நான் எங்கு சொல்லி உள்ளேன். அந்த கருத்தை சொன்னவர் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை படித்து தெரிந்து / தெளிந்து இருக்கலாம்.

              அவர் அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லவா?. நாம் அதை பற்றி படித்தால் நமக்கும் ஒரு சில விஷயங்கள் தெரியலாம் அல்லவா

              // மொட்டையாக கூறாமல் பசு எந்த இந்துக்களால் வழிபடபடுகிறது? எப்படி அது அனைத்து இந்துக்களின் புனிதமாக இருக்கிறது என்று அறுதியிட்டு கூறினால் நலமாக இருக்கும் //

              உங்களுக்கு தெரிந்து ஒன்று தான். எல்லோரும் வீடு கட்டி முடித்த பின்னர், குடிபுகுவதற்கு முன் ‘கோ’ பூஜை செய்து விட்டு தானே குடி போகின்றனர்

              இதை தவிர ‘கோ’விற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஜோதிடத்தில் எளிய பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. இதை போன்று இன்னும் நிறைய விஷயங்களை சொல்லலாம்

              // இறைச்சி உணவை விட காய்கறியில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்று எந்த அறிவியல் கூறுகிறது? என்று கூறினால் நல்லது. ஒரு காயில் இருக்கும் சத்துக்கள் அப்படியே இன்னொரு காயில் கூடத்தான் இருக்காது அதனால் அது சத்து குறைவானது என்று கூற முடியுமா? //

              நீயா நானாவில் அவர் சொன்னதை என்னால் முடிந்தவரை பொருள் மாறாமல் சொல்கிறேன்

              பசு, கோழி போன்றவை ஒரு உணவை உண்டு அதன் மூலமாக கிடைக்கும் புரதச்சத்து குறைவாகிறது. அதற்க்கு பதில் நேரடியாக ‘பச்சை காய்கறிகளை’ உண்பதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கிறது என்று சொன்னார்.

              இந்த விஷயம் தெரியும் முன் அவர் ‘அசைவம் சாப்பிட்டு வந்ததாகவும்’ பின்பு ‘சைவைத்திற்கு’ மாறியதாகவும் குறிப்பிட்டார்

              hostarல் ‘நீயா நானா veg vs non veg’ என்று தேடி பாருங்கள். விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளதா என்று எனக்கு தெரியாது.

              • // அப்புறம் உங்கள் மதத்தின் கருத்துக்களை அடுத்த மதத்தவருக்கு திணிப்பது கொலை செய்வது எப்படி ஜனநாயகமாகும்? //

                பாஜக மோசமான கட்சி. Ok. நல்ல அரசியல் கட்சி எது இந்தியாவில் ?

                • சதீஷ்….,கேட்ட கேள்விக்கு பதில் கூற துப்பு இல்லையா உங்களுக்கு?

                  அப்புறம் உங்கள் மதத்தின் கருத்துக்களை அடுத்த மதத்தவருக்கு திணிப்பது கொலை செய்வது எப்படி ஜனநாயகமாகும்?

                  • // சதீஷ்….,கேட்ட கேள்விக்கு பதில் கூற துப்பு இல்லையா உங்களுக்கு? //

                    பாஜக மோசமான கட்சி – இந்த எளிமையான பதிலை புரிந்து கொள்ள உங்களுக்கு துப்பு இல்லையா. வேறு என்ன பதில் வேண்டும் உங்களுக்கு ?

                    இன்று இரவு உறங்கினால் நாளை கண் விழிப்போம் என்பதாய் ஒரு நம்பிக்கை தான். நம்பிக்கையை வைத்து அரசியல் செய்வது வேண்டுமானால் தவறாக இருக்கலாம.

                    எல்லோர்க்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதை யாராலும் உடைக்க முடியாது

                    • நீ மாட்டு முத்திரத்தை கூட நம்பிக்கையுடன் நல்லது என்று குடிப்பாய் அதற்காக மற்றவர்களும் குடிக்க வேண்டுமா ? //எல்லோர்க்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதை யாராலும் உடைக்க முடியாது//

                    • நான் மாட்டு முத்திரத்தை குடிப்பதை நீங்கள் பார்த்தீர்களா ? அப்படி இருந்தால் அந்த ஆதாரத்தை வெளியிடவும். ப்ளீஸ்

                    • இந்த கட்டுரையின் விவாதத்தில் மத நம்பிக்கை என்ற பெயரில் நீர் மாட்டின் மூத்திரத்தை தானே குடித்துகொண்டு உள்ளாய்

                  • // அப்புறம் உங்கள் மதத்தின் கருத்துக்களை அடுத்த மதத்தவருக்கு திணிப்பது கொலை செய்வது எப்படி ஜனநாயகமாகும்? //

                    மாலத்தீவில், கியூபாவில் என்னென்ன தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அடக்குமுறை எங்கே இருந்தாலும் அது அடக்குமுறை தான்

                    • மாலத் தீவிலும் , கியூபாவிலும் அடி பசு மாட்டுக்கறி சாபிடறான் ! அப்ப அந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் நீ எதுக்கு மாட்டு இறைச்சியை தடை செய்கின்றாய்?

                  • // சதீஷ்….,கேட்ட கேள்விக்கு பதில் கூற துப்பு இல்லையா உங்களுக்கு? //

                    அதெல்லாம் சரி. நீங்கள் என்னிடம் கோபப்பட்டு என்ன சாதிக்க போகிறீர்கள்; ??இந்தியாவை இன்னும் பிஜேபி தான் குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது ஆள போகிறது. என்னிடம் கோபபட்டு அதை குறைக்க முடியுமா என்ன ?? இப்போதும் சொல்கிறேன் சிந்தித்து செயல்படுங்கள்.

                    • சதீஷ்@@@@

                      ஹிந்து பண்பாடு கலாசாரம் என்று பேசும் பிஜேபி ஆட்சியில் தானே பெண்பிள்ளைகளின் துப்பட்டாவை கூட அவிழ்த்து எரியும் ,பெண்களின் உள்ளாடைகளை கலையும் நிலையை நீட் தேர்வின் போது செயல்படுத்திக்கொண்டு இருந்தது….! பிஜேபி காரன் அவன் வீட்டு பிள்ளைகளை அம்மணமாக கூட எங்கவேண்டுமானாலும் அனுப்பிக்கட்டும்….. எதுக்கு எங்க வீட்டு பிள்ளைகளை மானபங்க படுத்துற தூ நாகரிகம் கேட்ட நாயிகளா…? இத்தகைய பிஜேபியின் வக்கிர மனநிலையை கேள்வி கேட்க கூட முன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா சதீஷ்?

                      சதீஷ் என்ற உலக மகா அறிவாளி என்ன சொல்ல வர….? இன்னும் இருக்கும் மூன்று ஆண்டுகளில் பிஜேபி பசு வர்கத்தைமுமுமையாக அழிக்கும் …., இறைச்சி சாப்பிடும் மனிதர்களையும் அழிக்கும் என்று தானே? இதுக்கு தான் பிஜேபியை ஆட்சியில் மக்கள் உட்கார வைத்தார்களா?

                    • // சதீஷ் என்ற உலக மகா அறிவாளி என்ன சொல்ல வர….? // நான் உலகமகா அறிவாளியா என்று எனக்கு தெரியாது. குறைந்தபட்சம் நீங்கள் ஒருவராவது என்னை ‘அறிவாளி’ என்று ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். நன்றி

                      // இன்னும் இருக்கும் மூன்று ஆண்டுகளில் பிஜேபி பசு வர்கத்தைமுமுமையாக அழிக்கும் …., இறைச்சி சாப்பிடும் மனிதர்களையும் அழிக்கும் என்று தானே? இதுக்கு தான் பிஜேபியை ஆட்சியில் மக்கள் உட்கார வைத்தார்களா? //

                      இதற்கான பதிலை நான் 1.1 சொல்லி விட்டேன். மீண்டும் பதிய தேவை இல்ல

              • அய்யா சதிஸ்,

                காய்கறிகள் சாப்பிடுவதற்கு மாற்றாகவா இறைச்சி சாபிடுகிறார்கள் மக்கள்? உங்கள் அறிவு புல்லரிக்கிறது. இறைச்சியோ காய்கறிகளோ அதிலுள்ள சத்து என்பது அதில் உள்ள ப்ரோட்டின்,பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கால்சியம் உள்ளிட்டவைகளின் அளவைப் பொருத்து தான் அமையும். ஒரு உணவில் கால்சியம் அதிகம் இருக்கும். ஒரு உணவில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது காய்கறி மற்றும் இறைச்சி இரண்டிற்கும் பொருந்தும். இரண்டுக்கும் இந்த வரையறை பொதுவானது.

                எடுத்துக்காட்டாக

                100 கிராம் பாலில் கலோரியின் அளவு : 42. இதிலும் பரோட்டின், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட் என உள்ளன.

                100 கிராம் மாட்டுக்கரியில் கலோரியின் அளவு : 250. இதில் ப்ரோட்டின், பொட்டாசியம், கொழுப்பு,கார்போஹைட்ரேட் மக்னிசியம் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

                100 கிராம் காய்கறிகளில்(Green Beans) கலோரியின் அளவு : 31. இதிலும் பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட் என உள்ளன.

                இது ஒவ்வொரு இறைச்சி வகைகளுக்கும் காய்கறிகளுக்கும் பொருந்தும். இதை கீழ்வருமாறு கூட நாம் புரிந்து கொள்ளலாம்,

                காய்கறி->மாடு->இறைச்சி -> கலோரி ->மனிதன்
                காய்கறி->மாடு->பால்-> கலோரி ->மனிதன்
                காய்கறி -> கலோரி ->மனிதன்

                எனவே புரத சத்து என்பது காய்கறிகளில் மட்டுமே கிடைக்கிறது என்றும் இது தெரியாமல் அந்த காய்கறிகளை உண்ட மாடுகளை உண்பதால் ஒன்னும் கிடைக்காது என்பது ஒரு டுபாக்கூரு வாதம். இதை நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு விஞ்ஞானி எடுத்து விட்டதை நீங்களும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்களே. அவரை விட சிறந்த அறிவீர் சிறந்த வருத்துவர்கள் அறிவியலாளர்கள் கூறுவதை கேட்க முயற்சி செய்யுங்கள்.

                உண்மையை சொல்வதானால் காய்கல்றிகளில் கிடைக்கும் புரதச் சத்தை விட பால், முட்டை, மாட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சி உணவுகளில் அதிகம் புரதம் உள்ளது என்பது அறிவியல்.

                உம்முடைய முட்டாள்தனமான மத நம்பிக்கைகளால் அருமையான சத்தான மாட்டுக்கறியை தீண்டத்தகாத உணவாக ஆக்கிவிடாதீர்கள்.

                • அருமையான விளக்கம்! ஆனால் உண்மையாகவே தூங்குபவர்களைத்தானே எழுப்ப முடியும்? விதண்டாவாதத்திற்கு உண்மை விளக்கங்கள் எப்படி புரியும்? அதிலும் பக்தர்களுக்கும் எத்தர்களுக்கும்?

                • // எனவே புரத சத்து என்பது காய்கறிகளில் மட்டுமே கிடைக்கிறது என்றும் இது தெரியாமல் அந்த காய்கறிகளை உண்ட மாடுகளை உண்பதால் ஒன்னும் கிடைக்காது என்பது ஒரு டுபாக்கூரு வாதம். //

                  இதை போன்று நானும் எங்கும் சொல்லவில்லை. நீயா நானா விவாதத்தில் சொன்னவரும் சொல்லவில்லை . ஏன் இட்டுக்கட்டி பேசுகிறீர்கள் ? வேண்டுமானால் கண்ணை திறந்து வைத்து கொண்டு நான் முன் சொன்ன பதிலை பாருங்கள்

                  இது தான் அவர் சொன்னது – ‘பசு, கோழி போன்றவை ஒரு உணவை உண்டு அதன் மூலமாக கிடைக்கும் புரதச்சத்து குறைவாகிறது’ – புரதச்சத்து குறைவாகிறது என்று சொன்னாரே தவிர புரத சத்து இல்லை என்றெல்லாம் யாருமே சொல்லவில்லை

                  // உண்மையை சொல்வதானால் காய்கல்றிகளில் கிடைக்கும் புரதச் சத்தை விட பால், முட்டை, மாட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சி உணவுகளில் அதிகம் புரதம் உள்ளது என்பது அறிவியல். //

                  இதை நான் ஒரு முறைக்கு பல முறை தேடிவிட்டேன். mixed results தான் வருகிறது

                  // உம்முடைய முட்டாள்தனமான மத நம்பிக்கைகளால் அருமையான சத்தான மாட்டுக்கறியை தீண்டத்தகாத உணவாக ஆக்கிவிடாதீர்கள். //

                  நான் மாட்டு இறைச்சி சாப்பிட கூடாது என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா ? அப்படி இருந்தால் அந்த textஐ பதியவும். நீங்களாகவே உங்கள் விருப்படி நான் ‘அதை சொன்னேன்’, ‘இதை சொன்னேன்’ என்று சொன்னால் எப்படி ?

                  பகுத்தறிவாதியான நீங்களே இப்படி ‘நான் சொல்லாததையெல்லாம்’ பேசினால் என்னை போன்ற ‘சாதா அறிவுள்ளவர்கள்’ எப்படி பேசுவார்கள்?

                  • சதிஸ்,

                    நான் கூறியதை இணையத்தில் தேடி mixed ரிசல்ட் வருகிறது என்று கூறும் தாங்கள் அந்த நீயா நானா பெருமகனார் கூறிய விடயத்தையும் தேடி இருந்தால் நீங்கள் நடுநிலையாளர் என்று கருத இடமுண்டு.

                    “பசு, கோழி போன்றவை ஒரு உணவை உண்டு அதன் மூலமாக கிடைக்கும் புரதச்சத்து குறைவாகிறது” என்று அவர் கூறினால் நீங்கள் செய்திருக்க வேண்டியது புரதம் என்றால் என்ன அது எவ்விதம் வுருவாகிறது என்பதை தேடித் படித்திருக்க வேண்டும். மாறாக அதையே ஒரு ஆதாரமாக இங்கே வாதிடுவது உங்களது நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

                    இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள் மனித உடலால் நேரடியாக பயன்படுத்தக் கூடியது. எனவே உடலுழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இறைச்சியில் கிடைக்கும் புரதத்தை தாரளமாக சேர்க்க வேண்டும். அதனால் தான் இறைச்சியை முழுமையான புரத சத்து உள்ள உணவு என்று கூறுகின்றனர்.

                    தாவரங்களில் உள்ள புரததிற்கும் இராசியில் உள்ள புறத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இன்றியமையாத அமினோ அமிலங்கள் இறைச்சியில் மிகுந்து உள்ளன. கலோரி அடிப்படையில் எடுத்துக் கொண்டால் தாவர ப்ரோட்டினை இறைச்சியில் கிடைக்கும் புரதத்துடன் ஒப்பிடவே முடியாது.

                    ஆகவே எது நமது உடலுக்கு நல்லது என்பதை வேண்டுமென்றால் பரிசீலிக்கலாம். அதுவும் ஒவ்வுறு தனி நபருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொருவருடைய வேலை முறைக்கும் தகுந்தவாறு தானே இருக்க முடியுமே ஒழிய முற்றிலும் “பரிசுத்தமான சர்வ சக்தியும் வழங்கும் பரிபூரணமான” ஒரே உணவு என்று எதுவும் இருக்க முடியாது.

                    எனவே அவர்கள் கூறினார்கள் இவர்கள் கூறினார்கள் என்று கூறாமல் தாங்களே சுயமாக யோசித்து படித்து பார்க்கவும்.

                    • // நான் கூறியதை இணையத்தில் தேடி mixed ரிசல்ட் வருகிறது என்று கூறும் தாங்கள் அந்த நீயா நானா பெருமகனார் கூறிய விடயத்தையும் தேடி இருந்தால் நீங்கள் நடுநிலையாளர் என்று கருத இடமுண்டு. //

                      நீங்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது. வார்த்தைகள் மாறுவதால் தான் விவாதம் திசை மாறுகிறது

                      நீங்கள் சொன்னதற்காக நான் தேடவில்லை. எப்போது நான் கோழி இறைச்சி குறைக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்போது தேடியது. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ‘browsing history’ upload செய்கிறேன்

                      // “பசு, கோழி போன்றவை ஒரு உணவை உண்டு அதன் மூலமாக கிடைக்கும் புரதச்சத்து குறைவாகிறது” என்று அவர் கூறினால் நீங்கள் செய்திருக்க வேண்டியது புரதம் என்றால் என்ன அது எவ்விதம் வுருவாகிறது என்பதை தேடித் படித்திருக்க வேண்டும். மாறாக அதையே ஒரு ஆதாரமாக இங்கே வாதிடுவது உங்களது நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. //

                      நான் சொன்னது என்னவென்றால் ‘அவர் சொன்னதில் உண்மை இருக்கலாம் அல்லவா’ என்று தான். நீங்கள் வேண்டுமானால் மீண்டும் என் பதிவை பார்க்கவும். அதை நான் ஆதாரமாக சொல்லவில்லை. அது ஒரு மாற்று கருத்து. அவ்வளவு தான்

                      // எனவே அவர்கள் கூறினார்கள் இவர்கள் கூறினார்கள் என்று கூறாமல் தாங்களே சுயமாக யோசித்து படித்து பார்க்கவும். //

                      இதை செய்வதில் எனக்கு எந்த எந்த சிக்கலும் இல்லை. அனால் மாற்று கருத்தில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை ‘பகுத்தறிவாதிகள்’ ஏற்று கொள்ள வேண்டும்.

                      நான் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நான் சொன்னதை அவர்களும் ஆராய்ந்து பின் சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளவேண்டும். எதையுமே பார்க்காமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியாமல் எதிர்வாதம் செய்பவர்களும் உண்டு.

                      நன்றி

                    • அப்படி என்றால் செல்வம் அவர்கள் அவர் பின்னுட்டத்தில் கூறும் விசயத்தை ஏற்கிண்றீரா இல்லையா?

                      //நான் சொன்னது என்னவென்றால் ‘அவர் சொன்னதில் உண்மை இருக்கலாம் அல்லவா’ என்று தான். நீங்கள் வேண்டுமானால் மீண்டும் என் பதிவை பார்க்கவும். அதை நான் ஆதாரமாக சொல்லவில்லை. அது ஒரு மாற்று கருத்து. அவ்வளவு தான் ///

          • அறிவின் வெளிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் தான் வெளிப்படும் .., இந்த கட்டுரையில் வேலை செய்யாது என்றால் எப்படி சதீஷ்?

            உனக்கு பசு புனிதமாக தெரிகின்றது என்றால் “யாராவது விலங்குகளை கடவுளாக பார்பார்களா?” என்று சிந்திக்க முடியாமல் உன் அறிவை இந்துதுவாவிடம் அடமானம் வைத்து விட்டீரோ?

            • // அறிவின் வெளிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் தான் வெளிப்படும் .., இந்த கட்டுரையில் வேலை செய்யாது என்றால் எப்படி சதீஷ்? // என் அறிவு எனக்கு தெரிந்த வரை சரியாக தான் வேலை செய்கிறது

              // உனக்கு பசு புனிதமாக தெரிகின்றது என்றால் “யாராவது விலங்குகளை கடவுளாக பார்பார்களா?” என்று சிந்திக்க முடியாமல் //

              நம்மூரில் ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள். ஆயுதம் என்ன கடவுளா ? அதை ஏன் கொண்டாட வேண்டும் ? அந்த ஆயுதம் இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை வண்டி ஓடாது. ஆகவே அதையும் வருடத்தில் ஒரு நாளாவது மதிக்கிறான்.

              இன்றும் ஆப்ரிக்கா நாடுகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் ‘நெருப்பை’ வழிபடுகிறார்கள். அங்கே ப்ராம்மணர்களும் இல்லை, இமானும் இல்லை, fatherம இல்லை. ஆனாலும் அவர்கள் ‘அந்த சாய்ந்த’ நேரத்தில் ‘பெரிய பள்ளத்தை தோண்டி, அதில் நெருப்பை மூட்டி’ வலம் வருகிறார்கள்.

              நெருப்பு என்ன கடவுளா? அவர்களுக்கு இதை யார் சொல்லி கொடுத்தார்கள். ‘ நம்பிக்கை என்பது எல்லோர் இடத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கவே செய்கிறது.

              // உன் அறிவை இந்துதுவாவிடம் அடமானம் வைத்து விட்டீரோ? // ஐயா இது பொது தளம். பதிவுகளும், கருத்துக்களும் உங்கள் எண்ணப்படியே இருக்க முடியாது

              பகுத்தறிவாதம் என்பது உண்மை. ஆனால் நம்மில் யாருமே ‘பகுத்தறிவாதி’ கிடையாது.

              • சதீஸ்…, உமது அறிவு உனக்கு தெரிந்தவரையில் சரியாக தான் வேலை செய்கிறது என்பது முரண்பாடாக உள்ள வாதம் …அவிங்க அத கும்பிடுகிராங்க…, இவிங்க இத கும்புடுகிராங்க என்று நீர் சப்பைகட்டு கட்டும் போதே நீயும் பசுவை குபிடுவதை முட்டாள் தனமாக ஏற்கின்றாய்! அப்ப உன் அறிவு மூட தனமாக தானே வேலை செய்கிறது? ஸசரி மறுபடியும் யோசித்து சொல்லு….எதுக்கு மாட்டு இறைச்சி உண்ணும் விசயத்தில் வேறுபாடு கொண்டு நீரும் உம் ஹிந்துதுவாகளும் மனிதர்களை கொள்கின்றீர்கள்? மாட்டை கொன்றால் பாவம் மனிதனை கொன்றால் புனிதமா? புத்த மதம் இந்தியாவில் பரவும் வரையில் பசுக்களை வெட்டி எரியும் நெய்யில் போட்டு ,யாகம் செய்து, வதக்கி உண்ட ஆரிய பார்பன இனம் இன்று பசுக்களின் மீது காட்டும் பரிவுக்கு காரணம் என்னவென்று சதிஷ் காரணம் கூற முடியுமா?

                • // அவிங்க அத கும்பிடுகிராங்க…, இவிங்க இத கும்புடுகிராங்க என்று நீர் சப்பைகட்டு கட்டும் போதே நீயும் பசுவை குபிடுவதை முட்டாள் தனமாக ஏற்கின்றாய்! அப்ப உன் அறிவு மூட தனமாக தானே வேலை செய்கிறது? //

                  இயற்கையையும், இயற்கையின் படைப்புகளையும் மதிப்பது எப்படி மூடத்தனமாகும்? ‘இயற்க்கை அன்னை’ என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் ? இப்படி சொன்னதால் நம் முன்னோர்கள் முட்டாள்களா ? ‘இயற்க்கை அன்னை’ என்றால் இயற்க்கை என்ன பெண்ணா ?

                  இந்து மதத்தில் பஞ்ச பூதங்களும் வழிபாட்டுக்கு உரியவை தான். அவற்றின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் நமக்கு எளிதாக புரியவைத்து உள்ளனர். அவ்வளவு தான். இதில் முட்டாள்தனம் என்றெல்லாம் எதுவும் இல்லை

                  ஏன் பாம்பை கூட கும்பிடுகிறார்கள் ? ‘பசுவை’ (அல்லது) ‘பாம்பை’ கும்பிடுவது உங்கள் பார்வையில் மூடத்தனம் என்றால் அது உங்கள் கருத்து.

                  நம் முன்னோர்கள் இயற்க்கையையும், இயற்கையின் படைப்புகளையும் பாதுகாத்து வைத்ததால் தான் நாம் அதை எல்லாம் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்

                  பாப்போம் பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் சந்ததியினருக்கு என்ன விட்டு வைத்து போக போகிறார்கள் என்று ? இப்படி இயற்கையை எள்ளளவும் மதிக்காததன் காரணத்தால் தான் இன்று தண்ணீர் பிரச்சனையை தலை விரித்து ஆடுகிறது .

                  இவ்வளவு பேசும் நீங்கள் விஞ்ஞானத்தையும் சேர்த்து கேள்வி கேளுங்களேன் ? — ஆனால் இதை இப்போதைக்கு விட்டு விடுவோம்

                  // மாட்டை கொன்றால் பாவம் மனிதனை கொன்றால் புனிதமா? // இதை புனிதம் (அல்லது) சரி என்று நான் எங்கு சொல்லி உள்ளேன். அப்படியே அவை nadandhaalum மனிதர்களை கொள்பவர்களுக்கு தான் சட்டம் இருக்கிறதே கவனித்துக்கொள்ள

                  // புத்த மதம் இந்தியாவில் பரவும் வரையில் பசுக்களை வெட்டி எரியும் நெய்யில் போட்டு ,யாகம் செய்து, வதக்கி உண்ட ஆரிய பார்பன இனம் இன்று பசுக்களின் மீது காட்டும் பரிவுக்கு காரணம் என்னவென்று சதிஷ் காரணம் கூற முடியுமா? //

                  இந்த மேட்டர் எனக்கு தெரியாது. அதனால் கருத்து இல்லை

                  • இயற்கையை வழிபடுவதும் பசுவை வழிபடுவதும் எப்படி ஒன்றாகும்? தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை கூட இயற்கையை வணங்கி வியசாயத்துகு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தானே? உண்மை அப்படி இருக்க அப்படி இருக்க அடிமாடுகளை அந்த விவசாயிகள் என்ன செய்யவேண்டும் என்றாவது உன்னால் கூற முடிகிறதா? சும்மா வினவில் கதை அளப்பதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை…

              • சரி இந்த கட்டுரை கூறும் விசயத்துக்கு வருவோம்…..ஹ்ந்துத்துவா பசங்க எப்பவுமே முட்டா பசங்களா தான் இருப்பீங்களா? அடிமாடுகளாகும் பசு மாடுகளை விற்பனை செய்வது தான் விவசாய பொருளாதாரத்தின் மறு சுழற்சிக்கு அடிபடை என்பதை உம்மால் ஏற்றக முடிகிறதா இல்லையா? அப்படி விற்பனைக்கு செல்லாதா அடிபசுமாடுகளின் வர்க்கமே இந்தியாவில் அழியும் என்ற உண்மையாவது உமக்கு புரிகிறதா இல்லையா? அப்படி அனுமதிக்க படாதா நிலையில் அத்தகைய பசுக்களை விவசாயிகள் புறம் தள்ளிவிட்டு எருமைகளை தான் வாங்கி பயன் படுத்துவார்கள் என்பதாவது உம் பேரறிவுக்கு புரிகிறதா இல்லையா?

                2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின் படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்திரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்படுகின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவிற்கும் குறைவாகவே உள்ளது.

                அப்படி என்றால் பசுக்களை மியுசியத்தில் அல்லது ஜூவில் வைத்து தான் அடுத்த இன்னும் 100ஆண்டுகள் கழித்து பார்க்கபோகிரோமா? ஹ்ந்துத்துவா பசங்க எப்பவுமே முட்டா பசங்களா தான் இருப்பீங்களா?

                • // ஹ்ந்துத்துவா பசங்க எப்பவுமே முட்டா பசங்களா தான் இருப்பீங்களா? //

                  இது உங்கள் கருத்து. முதலில் இந்த மாட்டு இரைச்சி பிரச்சனை என்பது குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களை தவிர வேறு எங்கும் இது இருப்பது போல் தெரியவில்லை. குறிப்பாக தென் இந்தியாவில் எனக்கு தெரிந்த வரை இது ஒரு பிரச்சனையே கிடையாது

                  உங்கள் கருத்துப்படி பார்த்தால் ‘வட இந்தியாவில்’ உள்ள ஒரு சில மாநிலங்களில் இதை போன்ற வேலைகளை செய்யும் ‘ஒரு சில நபர்களுக்கு’ மட்டுமே பொருந்த வேண்டும். என் பொதுமைப்படுத்தி பேசுகிறீர்கள் ?

                  **********

                  இயறக்கையின் சுழற்சியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதை அந்த அந்த அரசாங்கங்கள் ஏதேனும் தவறு செய்து இருந்தால் அதை மாற்றி ஆக வேண்டும்

                  மாடுகள் எப்படி இருந்தால் இன பெருக்கம் அடையுமோ அதை தான் செய்ய வேண்டும். இதில் மாற்று கருத்து எனக்கு இல்லை

                  • இந்துத்துவா பசங்க முட்டா பசங்க என்பதனை உன்னுடைய பின்னுட்டம் முலம் மீண்டும் நிருபிகின்றாய்….மாட்டின் பெயரால் மனிதர்களை கொல்லும் உத்திர பிரதேசமும் , ஹரியானாவும் இந்தியாவில் தானே இருக்கு?

                    அடிமாடுகளை விற்பனை செய்ய அனுமதித்தால் மட்டுமே விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட்டு மாடுகள் இனபெருக்கம் அடையும் என்ற எளிய உண்மைகூட உனக்கு தெரியவில்லையா சதீஷ்?

                    • செந்தில் நீங்கள் பேசுவது எப்படி இருக்கிறது தெரியும்மா உங்கள் அப்பா அம்மா உங்களை வளர்த்து ஆளாக்கி இன்று முதுமை அடைந்து விட்டார்கள், இனி அவர்களால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை, அதனால் உங்கள் அப்பா அம்மாவை கொலையா செய்கிறீர்கள், அவர்களின் கடைசி காலம் வரையில் அவர்களை காப்பாற்றுகிறீர்கள். பசுவும் அது போல் தான் அது ஆரோக்கியமாக இருக்கும் போது உங்களுக்கு பால் (சாணி மூலம் இயற்கை உரம்) பல நன்மைகள் உங்களுக்கு செய்கிறது, அது வயதான பிறகு அந்த பசுவினால் எந்த பலனும் இல்லை அதை கொலை செய்து சாப்பிட்டால் என்ன தவறு என்கிறீர்கள் ? என்னை பொறுத்தவரையில் இது சரியல்ல, மனிதாபிமான செயலும் அல்ல.

                      எனக்கு தெரிந்து பசுவை பராமரிக்க முடியவில்லை என்றால் அதை கோவிலுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

                      நீங்கள் பசு மாட்டை வளர்த்து இருக்கிறீர்களா என்று எனக்கு தெரியாது, இன்றும் கிராமங்களில் பசு மாட்டை குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறார்கள், பசுவை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

                    • மணிகண்டன்….., இதே எடுத்துகாட்டை ஆடு கோழிகளுக்கு பயன்படுத்த முடியுமா அறிவாளி மணி! உணவு சங்கிலியில் மனிதனுக்கு மனிதன் இறை கிடையாது… ஆனால் ஆடு மாடு கோழி பன்றி ஆகியவை மனிதனுக்கு இறை என்ற எளிய அறிவியல் உண்மை கூட உனக்கு தெரியவில்லையே! மாட்டுக்கு காதல் கடிதாசி எழுதும் நீர் மாட்டின் தோல் கொண்டு செய்யபடும் பைகள், பெல்ட்டுகள், காலணிகளை பயன்படுத்தாமலா இருகிங்க? இங்கு நீர் என்றால் நீர் மட்டும் கிடையாது… உன் சகல பாடிகலான rss பிஜேபி ஆட்களும் தான்…!

                      அடிமாடு பசுகளை விற்கவும் முடியாமல் பராமரிக்கவும் முடியாமல் தவிக்கும் விவசாயியின் தவிப்பு உங்களுக்கு எங்கே தெரிய போகிறது?

                      //எனக்கு தெரிந்து பசுவை பராமரிக்க முடியவில்லை என்றால் அதை கோவிலுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.///

                    • மணி …, பசுவின் இளங் கன்றை தீ யில் இட்டு வதக்கி உண்ட வேத காலத்து பார்பனர்கள் அப்போது தன்னிலை மறந்து சோமபானம் அறுதி பாடிய சுலோகண்களை உனக்கு தெரியாவிட்டால் உமது தாய் தந்தையர்களை அணுகி கேட்டு பாரும்! அருமையாக கூறுவார்கள்… ஆனால் இங்கு விவாத பொரும் அடிமாடுகளை உன்ப்தனை பற்றி தானே தவிர பார்பனர்கள் உண்ட இளம் பசுகளை பற்றி அல்லவே!

                    • Dear Mani,
                      you have tried to extend the yardstick used for aged cow to parents. why did you stop there. Please extend the same to paddy and other crops. None of the crop shall die naturally after their single life cycle(germination-seed production) as assumed by lot of people. Grow up and get life

              • புலி வாலை பிடித்தநாயர் கதை தெரியுமே! அதனால் விதண்டாவாதம் செய்தே தீருவேன் என்று கிளம்பியிருக்கும் ‘சதீஸ்’ கதை புதிதுதல்ல; எத்தனை இந்துமத வாதிகளை பார்த்திருக்கிறோம்! இப்படி ஒருவர் இருப்பதே செந்தில்குமாரனுக்கும், செல்வத்திற்கும் சிறப்பு!

                • // விதண்டாவாதம் செய்தே தீருவேன் என்று கிளம்பியிருக்கும் ‘சதீஸ்’ கதை புதிதுதல்ல // நான் நடைமுறையில் இருப்பதை சொன்னேன். நான் சொன்ன அனைத்துமே தவறா ? நீங்கள் தான் பகுத்தறிவாதிகள் ஆயிற்றே ? நான் சொன்ன அனைத்துமே தவறு என்று சொல்லுங்கள் பார்ப்போம்

          • சதீஸ்! ஏனிந்த புது குழப்பம்?
            //”தனிப்பட்ட முறையில் யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் வரையறுக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம் தான்”//

            அடுத்த வரியிலேயே ஏன் பல்டி?

            //பசு இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது (அல்லது) பொதுவாக மக்களால் வணங்கப்படுகிறது//

            தாரளமாக வணங்கிகொள்ளுங்கள்! ( பெண்களையும் புனிதமாக கருதும் லட்சணம் போல? ) அடுத்தவர் சுதந்திரத்தில் எதற்கு தலையிடுகிறீர்கள்?

            “சூத்திரன் தவம் செய்வதால், எனது மகன் இறந்து போனான்” என்ற பார்ப்பனன் கதை போலல்லவா இருக்கிறது! முட்டாள் ராமனும் உடனே ஆராயமலும், விசாரிக்காமலும் அந்த சூத்திரன் தலையை வெட்டினானாம்! அதற்குத்தானா அந்த ராமனுக்கு அயோத்தியில் கோவில்?

            னன்றாயிருக்கு இந்த பார்பன பசப்பல்கள்!

            • // தாரளமாக வணங்கிகொள்ளுங்கள்! ( பெண்களையும் புனிதமாக கருதும் லட்சணம் போல? ) அடுத்தவர் சுதந்திரத்தில் எதற்கு தலையிடுகிறீர்கள்? //

              எனக்கு தெரிந்து ‘மகாராஷ்டிரா’ மாநிலத்தை தவிர அனைத்து ‘மாநிலங்களிலும்’ பசு இறைச்சி தடை செய்யப்படவில்லை. ஆனால் ‘மகாராஷ்டிரா’ மாநில’ மக்கள் அதை ஏற்று கொண்டார்களா என்று எனக்கு தெரியாது ?

          • //(1) பசு இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது (அல்லது) பொதுவாக மக்களால் வணங்கப்படுகிறது.//
            எப்போதில் இருந்து பசு புனிதம் ஆனது? வரலாற்றுரீதியாக விளக்கவும். வேத கால பிராமணர்களூம் , இராமனும் மாமிச உண்ணிகள்தான். சான்று தருகிறேன்.
            https://en.wikipedia.org/wiki/History_of_Brahmin_diet

            http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm

            suraaghaTasahasreNa maamsabhuutodanena cha |
            yakshye tvaam prayataa devi puriim punarupaagataa || 2-52-89

            89. devii= “Oh, goddess! Upaagata= After reaching; puriim= the city (Ayodhya); punaH= again; yakshhye= I shall worship (you); suraaghata sahasreNa= with thousand pots of spirituous liquor; maamsa bhuutodanena cha = and jellied meat with cooked rice; prayataa= well-prepared for the solemn rite.”

            “Oh, goddess! After reaching back the city of Ayodhya, I shall worship you with thousand pots of spirituous liquor and jellied meat with cooked rice well prepared for the solemn rite.”

            //(2) இறைச்சி உணவை விட ‘பச்சை காய்கறியில்’ சத்து அதிகமாக உள்ளது என்று ‘விஞ்ஞானம் சொல்வதாக’ சொல்கின்றனர். இதை ‘நீயா – நானா’ விவாத நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்டு சொன்னார்.//

            provide evidence.

            (3)இந்த காலகட்டத்தில் ‘இறைச்சியை’ முழுவதுமாகவே தவிர்ப்பது நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.
            யார்? எப்போது?

            • நானும் , செல்வம் அவர்களும் விவாதத்தை நீங்கள் பார்த்தாலே போதும்

              சிவனும் கறி உண்ட வரலாறு உண்டு. நானும் கறி உண்பவன் தான்

              // யார்? எப்போது? // – என் தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகத்த்தானே சொல்லி உள்ளேன்

      • //இன்னுமும் இது மக்களாட்சி தான். யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம்//

        How do you justify this?

        • அது உண்மை தானே. இல்லையென்றால் ‘AAP’ டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாதே.

          இங்கே நம்மூரில் தேர்தலில் அதிக பண புழக்கம் இருப்பதால் மக்களாட்சியின் மீது நம்பிக்கை குறைந்து விட்டது என்பது உண்மை தான். இவ்வளவு பணப்புழக்கம் இருக்கும் நம்மூர் மக்களே ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை’ தோற்கடித்தவர்கள்தானே

          மக்கள் என்றால் நாம் தானே. நான் வாக்களிக்க பணம் வாங்க மாட்டேன் என்று நம்மில் சுயகட்டுப்பாடு இல்லாத வரை 100% மக்களாட்சி இருக்காது என்பது உண்மை தான் அதற்காக மக்களாட்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது

    • // “இத்துத்துவா விசிலடிச்சான் குஞ்சுகள்” // பொது வெளியில் சற்று நாகரீகமாக உரையாடுங்கள். இது போன்ற வாசகங்களை பயன்படுத்தி நம்மை நாமே ஏன் தாழ்த்தி கொள்ள வேண்டும் ?

      வருவோர், போவோரை எல்லாம் திட்டி கொண்டு இருந்தால் எதுவும் மாறாது. சிந்தித்தது செயல்பட்டால் மக்கள் உங்கள் வசம். இல்லை என்றால் கடைசி வரைக்கும் *** குறிக்கோள் நிறைவேறாது

  2. விவசாய பொருளாதாரத்துக்கு அடிபடையே அடிமாடுகளை மாடுகளை விற்பனை செய்வது தான் என்ற உண்மையை இந்த “இத்துத்துவா விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு” எத்துனை முறை கூறினாலும் மூளையில் உரைக்காது ! காரணம் அவர்களின் மனதில் கட்டமைக்கபட்டு உள்ள பார்பன-பசு-புனிதம் என்ற கருத்தாக்கமே!

  3. புத்த மதம் இந்தியாவில் பரவும் வரையில் பசுக்களை வெட்டி எரியும் நெய்யில் போட்டு ,யாகம் செய்து, வதக்கி உண்ட ஆரிய பார்பன இனம் இன்று பசுக்களின் மீது காட்டும் பரிவுக்கு காரணம் என்னவென்று இந்த மணிகண்டன்கள், சதிஷ்கள் கூற முடியுமா?

  4. உனது மத நம்பிக்கை என்பது இஸ்லாமிய / கிறிஸ்தவ எதிர்ப்பு. உனது வழிபாடு என்பது அவர்ைளுக்கு செய்யும் சைடுதல். உனது பண்டிகை என்பது அவர்ைளின் மரணம். நயவஞ்ெைம் என்பது உனது ததெப்பற்று. முடிவில் உன் சபயர்…..?

    • இனபெருக்க தகுதியுள்ள மாடுகளை ,பால் கொடுக்கும் மாடுகளை யாரும் உணவுக்காக இறைச்சியாக பயன்படுத்துவது இல்லை. விவசாயிகளிடம் உள்ள “அடிமாடுகளை” என்ன செய்யலாம் ? நீங்கள் அவற்றை வாங்கி பராமரித்து விவசாயிகளுக்கு அடுத்த அடுத்த மாடுகளை வாங்க உதவி செய்ய முடியுமா? அடிமாடுகளை வேறு என்ன செய்யலாம் ?

      • // விவசாயிகளிடம் உள்ள “அடிமாடுகளை” என்ன செய்யலாம் ? நீங்கள் அவற்றை வாங்கி பராமரித்து விவசாயிகளுக்கு அடுத்த அடுத்த மாடுகளை வாங்க உதவி செய்ய முடியுமா? அடிமாடுகளை வேறு என்ன செய்யலாம் ? //
        இதற்கும் ஒருவர் தந்தி டிவி ‘ஆயுத எழுத்து’ நிகழ்ச்சியில் ஒரு சில கருத்துக்களை முன் வைத்தார். அவர் என்ன சொன்னார் என்பதை மீண்டும் ‘archiveல்’ இருந்து தேடி தான் எடுக்க வேண்டும்

        • சதிஸ்,

          எதற்கு நீயா நானா விவாதத்திற்கு செல்ல வேண்டும்? அல்லாது அவர் கூறியது தான் உங்களது கருத்து என்றால் அந்த கருத்தையாவது தெளிவாக விண்டுரைக்க வேண்டும் இந்த சபையில். அதை விட்டு விட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிக் கொண்டிருக்காதிர்கள்.

          அடிமாடுகளை என்ன செய்யலாம் என்பதற்கு உங்களது சொந்த கருத்தின் அடிப்படையில் பதில் சொல்லலாமே.

          உண்மையில் அந்த அடிமாடுகளை விவசாயிகள் ஏன் விற்கிறார்கள் என்ற நோக்கிலாவது விவாதிக்கலாம்.

          அல்லது அவர்கள் ஏன் இந்துக்களின் புனித மாதாவை விலைக்கு வாங்குகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.

          உழைக்கும் பெண்கள் தினத்தில் வெளிவந்த வினவு பெண்கள் தினக் கட்டுரையொன்றில் ஒரு உழைக்கும் பெண் கூறிய “வெச்சா புள்ளையார் வழிச்சா சாணி” என்பது தான் நம்பிக்கையின் அளவுகோள்.

        • சதீஷ் உன்னிடம் கேள்விகேட்டால் தந்தி டிவியை சுட்டி காட்டினால் எப்படி? அப்ப உனக்கு இந்த கேள்வியை பற்றி எந்த ஒரு பதிலும் தெரியவில்லை என்று தானே பொருளாகிறது? அப்ப என்னத்துக்காக இங்க விவாதத்தில் பங்கு எடுகின்றாய்?

          // விவசாயிகளிடம் உள்ள “அடிமாடுகளை” என்ன செய்யலாம் ?………………….//

  5. // சதீஷ் உன்னிடம் கேள்விகேட்டால் தந்தி டிவியை சுட்டி காட்டினால் எப்படி? //

    ஏன் நீங்கள் எல்லோரும் ஆதாரம் இங்கே இருக்கிறது, இந்த லிங்கை பாருங்கள் என்று சொல்லுவதே இல்லையா ?

    // அப்ப உனக்கு இந்த கேள்வியை பற்றி எந்த ஒரு பதிலும் தெரியவில்லை என்று தானே பொருளாகிறது? அப்ப என்னத்துக்காக இங்க விவாதத்தில் பங்கு எடுகின்றாய்? //

    முதலில் முகம் தெரியாதவர்களுடன் பேசும் பொது ‘ஒருமையை’ தவிர்க்கவும்.

    // அப்ப உனக்கு இந்த கேள்வியை // – அடிப்படை நாகரீகம் கூட உங்களுக்கு உங்கள் பள்ளியில் யாரும் கற்று தரவில்லையா ? நான் யாரையாவது, எங்கேயாவது ஒருமையில் பேசி இருக்கிறேனா ?

    விவாதம் என்பதே நமக்கு தெரிந்தவற்றை சொல்லி, தெரியாதவற்றை தெரிந்து கொள்வது தான். உங்களுக்கு ஒத்த கருத்துள்ள உள்ளவர்களை பிடிக்கும் என்றால் ‘வினவு அட்மினிடம்’ சொல்லி என் comments நீக்க சொல்லுங்கள் அல்லது என்னை ப்ளாக் செய்ய சொல்லுங்கள். யார் வேண்டாம் என்று தடுத்தது ?

    // எதுக்கு எங்க வீட்டு பிள்ளைகளை மானபங்க படுத்துற தூ நாகரிகம் கேட்ட நாயிகளா…? //

    வினவின் அடிப்படை விதிகள் —> “””எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும்”””

    நாகரீகமற்றவர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை

    • உன்னை போன்ற ஹிந்துத்துவா வெறியர்களை விளிற்க பன்மை எல்லாம் அவசியமே இல்லை….மாட்டின் பெயரால் மனிதர்களை கொன்றால் அவர்களை தண்டிக்க சட்டம் இருக்கு என்று நீ கூறும் போதே உன்னுடைய வக்கிர புத்தி அல்லவா வெளிவருகிறது….தந்தி டிவியில் என்ன சொன்னாங்க என்பது கூட தெரியாமல் பேசுவது முட்டாள் தனம் இல்லையா சதீஷ்?

      • மாட்டின் பெயரால் மனிதர்களை கொலை செய்வதை யாருமே ஏற்கவில்லை, என்னை பொறுத்தவரையில் இது போன்ற செயல்கள் அரிதிலும் அரிதான ஒன்றாகவே பார்க்கிறேன். 130
        கோடி மக்கள் வாழும் நாட்டில் விரல் விட்டு என்ன கூடிய அளவே இந்த மாதிரியான செயல்கள் நடந்து இருக்கிறது, அதற்காக ஒட்டு மொத்தமாக ஹிந்துக்கள் எல்லோரும் மோசம் RSS மோசம் பிஜேபி மோசம் என்று சொல்வதை ஏற்க முடியாது.

        மேலும் உங்களை போன்ற ஆட்கள் வேண்டும் என்றே ஹிந்துக்கள் மனம் புண்பட வேண்டும் என்ற நோக்கில் மாட்டு கரி பிரியாணி போட்ட செயலை என்ன என்று சொல்வது ? மாட்டின் பெயரால் மனிதனை கொன்றவர்கள் காட்டு மிராண்டிகள் என்றால் வேண்டும் என்றே பசு மாட்டை கொன்று பிரியாணி போட்ட நீங்கள் யார் ? கம்யூனிஸ்ட்களா (மனிதாபினம் அற்றவர்களா)

        • லூசு மாதிரி உளறுவதில் சதீஷ்சை விட உச்சத்தில் உள்ளீர்கள் மணிகண்டன்…. மாட்டு கரி பிரியாணி தமிழ் நாட்டில் எல்லா ஊரிலும் கிடைக்க கம்யூனிஸ்ட்கள் சாப்பிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அடிமாடுகளை மட்டும் தான் இறைச்சிக்கு உண்ண வேண்டும் என்று சட்டம் தமிழ் நாட்டில் இருபதாவது உங்களுக்கு தெரியுமா? வேலை திறன் உள்ள , இனபெருகத்துக்கு தகுத்த மாடுகளை அடித்து உண்ண நாங்கள் என்ன பசுவை நெய்யில் வதக்கி உண்ணும் அந்த காலத்து பார்பனர்கள் அல்லவே?!

  6. இஸ்லாமியர்கள் பன்றி கறியை சாப்பிட கூடாது என்பதற்கு பல காரங்களை குரானில் சொல்லியிருக்கிறார்கள், அதை இஸ்லாமியர்களும் ஆரோக்கியம் என்ற அடிப்படையில் ஏற்கிறார்கள், உங்களை போன்றவர்களும் இஸ்லாமியர் மனம் புண்பட கூடாது என்பதற்காக பொதுவெளியில் பன்றி கரி பிரியாணி எல்லாம் நீங்கள் போடுவது இல்லை.

    ஹிந்துக்களை பொறுத்தவரையில் பசு புனிதமானது, பசுவின் தலை, கால், உடல் என்று ஒவ்வொரு இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை, அதன் அடிப்படையில் கோ பூஜை செய்கிறார்கள். கடவுள் இல்லை என்று உங்களை போன்ற ஆட்களுக்கு இது மூட நம்பிக்கையாகவே இருந்து விட்டு போகட்டும் அது இங்கே பிரச்சனையில்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள பசுவை புனிதமாக கருத கூடியவர்கள் மனதை புண்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

    • பசுவாக இருதால் என்ன பன்னியாக இருந்தால் என்ன? வளர்ப்பு பன்றியின் , அடிமாட்டின் இறைசசியை உண்ண தமிழ் நாடு அரசின் சட்டம் அனுமதிக்கும் போது உன்னுடைய எதிர்புகள் எல்லாம் உதிர்ந்த ரோமத்துக்கு தானே சமம்! சென்னையில் பீப் பிரியாணி, கிரேவி கிடைக்காத ஏரியா ஏதாவது உண்டா மணி?

    • நண்பர் இந்துத்வ கொள்கையாளர் மணிகண்டன் அவர்களே,
      அனைத்து மதங்களூமே மனித விரோத இயக்கங்களே. ஆனாலும் விமர்சிக்கும் போது என்ன சொல்லி இருக்கிறதோ அதை சுட்டி மட்டுமே விமர்சிக்க வேண்டும்.
      பன்றி இறைச்சி பற்றி குரானில் 4 இடங்கள்ல் கூறப்பட்டு உள்ளது. அதுவும் என்ன சொல்லி இருக்கிறது என்றால் சாப்பிடாதே. ஒருவேளை உணவுக்கு வையின்றி உண்டு விட்டால் ம்ன்னிப்பு கிடைக்கும். படியுங்கள்.
      1)தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
      ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:173
      2) (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; ….ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
      ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை) 5:3
      (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)” தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளை புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
      ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்) 6:145

      நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும், ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
      ஸூரத்துந் நஹ்ல் (தேனி) 16:115
      இதே போல் பசு மாமிசம் சாப்பிடக் கூடாது என்று உரைக்கும் இந்து வேத நூல்களை சுட்டவும்.

      கொஞ்சமாவது புத்தகம் படித்தால் இந்துத்வனாக இருக்க மாட்டடீர் .பி.கு நான் பன்றி கரியும் (பேக்கன்) விரும்பி உண்பேன் ஹி ஹி

  7. டு மணி அண்ட் சதீஷ் : என்ன அம்பிகளா மாட்டு சூப்பு குடிக்கலாமா?!

    வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.

    வேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம். வேத காலத்திலேயே மருத்துவத்தை உலகிற்கு சொன்னவர் என்று சுஸ்ருதரை குறித்து பெருமை அடித்துக் கொள்ளும் இந்துத்வா கும்பல் அவரின் நூல்களை படிக்கவில்லை என்பது தான் உண்மை என்று இதிலிருந்து தெரிகிறது.

    பசுவின் புனிதம்
    ஆசிரியர் : டி.என்.ஜா
    வெளியீடு : பாரதி புத்தகாலயம்

  8. டு மணி அண்ட் சதீஷ் : என்ன அம்பிகளா மாட்டின் மென்மையான பாகத்தை வதக்கி உண்ணலாமா?

    கேள்வி : பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?

    பதில் : வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

    வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

    –பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

  9. டு மணி அண்ட் சதீஷ் : என்ன அம்பிகளா மாட்டின் இறைசியுடன் நாயின் இறைச்சியையும் உண்ட ஆட்கள் தானே உங்கள் மூதாதையர்கள்?

    கேள்வி:

    நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?

    பதில்:

    வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

    ‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    -–பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

  10. கோமாதா குலம் காக்க களமாடும் பக்தாள்களின் கடுப்பான கவனத்திற்க்கு,

    வயதான மாடுகளை வெட்டக்கூடாது ,அதை இந்துக்கள் புனிதமாக கருதி வணங்குவதால் அதனை யாரும் அறுத்து உண்ண கூடாது என விரும்புகிறீர்கள்.

    [இந்த இடத்தில் ”இந்துக்கள்” என்று அவாள் சொல்வது பார்ப்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்களைத்தான்.பெரும்பான்மையாக உள்ள மற்ற சாதிகளை சேர்ந்த இந்துக்கள் ஒன்று மாட்டுக்கறி உண்பவர்களாக உள்ளனர் அல்லது மாட்டுக்கறி உண்ணாத ஆனால் மாடு வளர்த்து அடிமாட்டுக்கு விற்பவர்களாக உள்ளனர்.ஆகவே பெரும்பானமை இந்து மக்கள் பசுவதை தடையை ஆதரிக்கிறார்கள் என்பதே மோசடி.]

    நீங்கள் ஒன்றும் பொது வாக்கெடுப்பு நடத்தி இதுதான் மக்களின் விருப்பம் என கண்டறிந்ததில்லை.ஆனாலும் பசுவதை தடைதான் இந்து மக்களின் விருப்பம் என ஏமாற்றி வருகிறீர்கள்.

    சரி நல்லது..உங்களின் விருப்பப்படி பசுவதை தடையை நாடெங்கும் அமுல்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.அது காரிய சாத்தியமானதா என்று பார்க்க வேண்டும்.விவசாயிகள் உற்பத்தி பயன் இல்லாத கிழட்டு மாடுகளை அடிமாட்டுக்கு விற்கிறார்கள்.பசுவதை தடையை அமுல்படுத்துவதாக இருந்தால் அந்த மாடுகளை அப்படி சட்டம் போடும் அரசோ,அல்லது மாட்டை மாதா என சொல்லும் பக்தாஸ் நீங்களோ வாங்கி கோசாலை அமைத்து பராமரிக்க வேண்டும்.விவசாயியே பராமரிக்க வேண்டும் என சொல்வது அயோக்கியத்தனம்.நீ கும்பிடும் காரணத்துக்காக அவனை செலவு செய்ய உனக்கு உரிமையில்லை.நீதான் கும்பிடுறே,அதுனால வெட்டாதேன்னு நீதா உத்தரவு போடுற.அப்ப நீங்கதானே கிழட்டு மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏத்துக்கணும்.

    இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை ஆறரை கோடி.இதில் எருமை மாடுகள் சேராது.

    ஆதாரம்.http://dahd.nic.in/sites/default/files/Livestock%20%205.pdf
    பக்கம்.33.

    மாடுகளின் சராசரி வயது 10-ஆண்டுகள்.ஒரு அடிமாட்டின் விலை 8-ஆயிரம்.ஆகவே ஆண்டுக்கு 65-லட்சம் மாடுகளை 5,200-கோடி செலவில் வாங்க வேண்டியிருக்கும்.இத்தனை லட்சம் மாடுகளையும் பராமரிக்க நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு நூறு ரூபாயாவது செலவாகும்.அந்த வகையில் 23725-கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கு செலவிட வேண்டியிருக்கும்.ஆக மாட்டை வெட்டக்கூடாதுன்னு சொன்னால் ஆண்டுக்கு 28,925-கோடி ரூபாய்களை அவற்றை காப்பாத்த வெட்டியா செலவு பண்ண வேண்டியிருக்கும்

    இது கிறுக்குத்தனமா புத்திசாலித்தனமா ,

    .நீங்க மாட்டு மூத்திரம் குடிக்க மக்கள் வரிப்பணம் இப்படி பாழாகணுமா

    பதில் சொல்லுங்க பக்தாஸ்.

    • ஐயா திப்பு ….., அடிமாடுகளை என்ன செய்யலாம் என்ற இந்த கேள்வியை தான் ஆரம்பத்தில் இருந்தே கேட்டுக்கொண்டு உள்ளேன்…. ஆனால் இவர்கள் ஆம் சதீஷ் மற்றும் மணிகண்டன்கள் பதில் அளிக்காமல் விலகி ஓடுவதிலேயே முனைப்பாக உள்ளார்கள்….!

      • ஆமா செந்தில் ,பாத்துட்டுதான் இருக்கேன்.தர்ம அடிதானே.நாமளும் ரெண்டு போடுவோம்னுதான் வந்தேன்.

        பக்தாள் ரெம்ப கோவப்படுறா பாருங்கோ.சனநாயக நாடுன்னால ஏதோ சட்டப்படி பன்னிருக்காளாம்.

        இருக்காதா பின்னே.மன்னர் காலம்னா அவாள்ட்ட சொல்லி மாறுகால் மாறுகை வாங்கியிருப்பா.அந்த வருத்தம் இருக்கும்தானே.

  11. பகுத்தறிவாதிகளின் உண்மை முகம்,

    1) இந்த கட்டுரை எழுப்பும் அடிப்டையான கேள்விகளுக்கு பதில் அளிக்க “இத்துத்துவா விசிலடிச்சான் குஞ்சுகள்” மணிகண்டன், “சதீஷ்” போன்றவர்கள் வரமாட்டார்கள்…

    2) நீ “மாட்டு முத்திரத்தை” கூட நம்பிக்கையுடன் நல்லது என்று குடிப்பாய் அதற்காக மற்றவர்களும் குடிக்க வேண்டுமா ?

    3) இந்த கட்டுரையின் விவாதத்தில் மத நம்பிக்கை என்ற பெயரில் நீர் மாட்டின் மூத்திரத்தை தானே குடித்துகொண்டு உள்ளாய்

    4) எதுக்கு எங்க வீட்டு பிள்ளைகளை மானபங்க படுத்துற “தூ நாகரிகம் கேட்ட நாயிகளா…?”

    5) உன்னை போன்ற “ஹிந்துத்துவா வெறியர்களை” விளிற்க “பன்மை எல்லாம் அவசியமே இல்லை”. – நான் வெறியன் என்பதை அவர் எப்படி ‘இண்டெர்நெட்லேயே’ கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை

    6) டு மணி அண்ட் சதீஷ் : “என்ன அம்பிகளா” மாட்டு சூப்பு குடிக்கலாமா?! – மறைமுகமாக ‘ஜாதியை’ பயன்படுத்தி உள்ளார்

    7) டு மணி அண்ட் சதீஷ் : “என்ன அம்பிகளா” மாட்டின் மென்மையான பாகத்தை வதக்கி உண்ணலாமா? – மீண்டும் மறைமுகமாக ‘ஜாதியை’ பயன்படுத்தி உள்ளார்

    8) டு மணி அண்ட் சதீஷ் : “என்ன அம்பிகளா” மாட்டின் இறைசியுடன் நாயின் இறைச்சியையும் உண்ட ஆட்கள் தானே உங்கள் மூதாதையர்கள்? – மீண்டும் மறைமுகமாக ‘ஜாதியை’ பயன்படுத்தி உள்ளார்

    நன்றி

  12. பகுத்தறிவாதி(களின்) முந்தைய பதிவு

    கி.செந்தில்குமரன் March 30, 2017 at 10:53 pm Permalink 4.1.1.2.1.1
    @@@ சதீஷ் : சாதி, மதம், இனம், மொழி, நிறம் கடந்தவர்கள் தான் கம்யுனிஸ்டுகள்

    • நண்பர் குமார்,
      இணையத்தில் இதுத்வ ஆதரவு கருத்தாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

      1. பார்ப்பன மேன்மை சாதி வெறியர்கள். இவர்களுக்கு வேதம்,புராணை ஆகியவற்றில் என்ன இருக்கிறது , எல்லாம் ஏமாற்று வேலை என்பதை அறிந்ந்து இருந்தாலும், தங்களின் மேலாதிக்கத்தை பல்லாயிரம் ஆண்டு தக்க வைத்தவை+வைபவை என்ற அடிப்படையில் இந்து மதத்தை(அதவாது வற்ணாசிரம் மனு தர்மர்) பாதுகாக்க விரும்புபவர்கள்.

      2.ஈனையத்தில் கூலி வாங்கிக் கொண்டு எதையும் ஆதரித்து கருத்து இடுவோர். வெட்டி ஒட்டுவதுதான் வேலை. வடுகன் இராமசாமி நாயக்கர், த்மிழை காட்டு மிராண்டி பாசை என்றால் போன்ற கொடுக்கப்பட்ட சரக்கு மட்டுமே திரும்ப திரும்ப ஒட்டுவார்கள். விவாதம் தொடர்பாக எதுவ்ய்ம் இருக்காது.

      3. அப்பாவி சூத்திதர்கள் : இந்து மத என ஒன்று உண்டு,புனிதமானது எனவும், தாங்கள் இந்துக்கள் என நம்புபவர்கள்..எதுவும் தெரியாது என்றாலும் பிறந்த மதம் என்பது தங்கள் அடையாளம் ஆகவே அது இல்லாமல் போனால் சுயத்தை இஅந்து விடுவோம் என எதையாவது உளறுபவர்கள்.எதையும் படிக்கவோ தெரிந்து கொள்ளவோ விருப்பம் அற்றவர்கள்.பரிதாபத்துக்கு உரியவர்கள்.

      இபோஒது குமார் அவர்களை ப்ரிவு 1 என சில தோஅர்களை வரையறை செய்து ஊள்ளனர். அது இல்லை எனில் வேறு என்ன என அவரே விளக்கட்டும்.

  13. பதில் அளிக்க துப்பு இல்லாமல் காபி பேஸ்டு போடுவதில் என்ன பயன் சதீஷ்!? இன்று கூட உத்திர பிரதேசத்தில் அடிமாட்டுக்கு விற்கபட்ட எருமையை கொன்று உணவுக்கு பயன்படுத்தியதற்காக ஒருவர் கொல்லபட்டதாக செய்தி வந்து உள்ளது…..மாட்டின் பெயரால் மனிதனை கொல்லும் இந்த இதுதுவா கேடுகெட்ட ஜென்மங்களை திட்ட எனக்கு வார்த்தைகள் போதவில்லை என்றே ஆணித்தரமாக நம்புகிறேன்….. ஆமாம் இன்னும் திட்டி இருக்கவேண்டும் நான்…. சதீஷ் முடிந்தால் என்னுடைய பின்னுட்டங்கள் 9,10 மற்றும் 11 க்கு பதில் அளிக்கவும்……

    • திரு செந்தில்குமரன் அவர்களே

      இங்கே நீங்கள் யாரையும் பதில் அளிக்க கட்டாயப்படுத்த முடியாது.

      வேண்டுமென்றே நான் ‘காவி வெறியன்’ என்றும் நான் ‘என்ன இனத்தை சேர்ந்தவன்’ என்று தெரியாமலே ‘அம்பி’ என்று மறைமுகமாக ஜாதியை பயன்படுத்தி வசை மாரி பொழிந்து உள்ளீர்கள்.

      உங்களிடம் நான் ‘காவி வெறியன் ‘ என்பதற்கும் ‘அம்பி’ என்று சொல்லுகிற ‘ஜாதியை’ சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம்’ இருக்கிறதா ?

      இப்படி எந்த ‘ஆதாரமும் இல்லாமல்’ என்னை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக விமர்சம் செய்து உள்ளீர்கள்

      உங்களிடம் நாகரீகம் எடுபடாது என்பது எனக்கு தெரியும்

      இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் ‘ஜனநாயக முறைப்படி’ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து இருக்கிறேன். மேற்படி விவரங்களுக்கு ‘வினவு அட்மினை’ அணுகவும்

      ஒரு வேலை நடவடிக்கை தாமதமாகுமானால் ‘ஜனநாயக முறைப்படி’ அடுத்து என்ன செய்ய முடியுமோ ‘அதை செய்வேன்’. இனி எவரும் பொது தளத்தில் ‘ஜாதியை’ பயன்படுத்த கூடாது

      நன்றி

      • மாட்டின் பெயரால் மனிதர்களை கொன்று குவிக்கும் வெறியர்களை அத்தகைய வெறியர்களை ஆதரிக்கும் உம்மை வேறு என்னவென்று அழைப்பது? அம்பி என்றும் பார்பனன் என்றும் பாப்பானின் அடிவருடி என்றும் தானே அழைக்க முடியும்?

        //ஒரு வேலை நடவடிக்கை தாமதமாகுமானால் ‘ஜனநாயக முறைப்படி’ அடுத்து என்ன செய்ய முடியுமோ ‘அதை செய்வேன்’. இனி எவரும் பொது தளத்தில் ‘ஜாதியை’ பயன்படுத்த கூடாது//

        • மாட்டிற்காக நடக்கும் கொலைகள் எல்லாம் விறல் விட்டு என்னும் அளவிற்கு தான் நடந்து இருக்கிறது *********** இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் ?

          • உனக்கு தான் பத்து விரல் இருக்கே அதில் ஒன்றை…….வெட்டிகொல்கின்றாயா மணிகண்டன்? என்ன ஒன்பது விரல் தான் மிஞ்சும் ! ஒன்பதுக்கு மேல் உன்னால் விரல்விட்டு என்ன முடியாது…..அதனால் என்ன உன்னால் சமாளிக்க முடியாதா என்ன? சமுகத்துக்கு அதனால் என்ன கேடு வந்துவிடபோகிறது ? ஒன்றும் இல்லையே!

            //மாட்டிற்காக நடக்கும் கொலைகள் எல்லாம் விறல் விட்டு என்னும் அளவிற்கு தான் நடந்து இருக்கிறது *********** இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் ?//

    • உங்கள் எண்ணப்படி வருவோர், போவோர் எல்லாரையும் திட்ட உங்களுக்கு அனுமதி அளித்தது யார் ? நீங்கள் சட்டத்திற்கு மேலேவா (அல்லது) எனக்கு முதலாளியா ?

      பதிவை போடும் முன், ‘நான் காவி வெறியன்’ என்பதற்கு எனக்கு எதிரான சட்ட ரீதியான ஆதாரங்கள் வைத்து உள்ளீர்களா ? எப்படி இன்ன ‘ஜாதியை’ சேர்ந்தவன் என்று தெரியாமலே சொல்லமுடியும்? சட்ட ரீதியான ஆதார எங்கே ?

      மாட்டை வெட்ட கூடாது (அல்லது) மாட்டு கறியை சாப்பிட கூடாது என்றே எங்கே நான் சொல்லி உள்ளேன் ? அதை பதியவும்

      மாற்று கருத்து உள்ளவர்களை வசை மாரி பொழிய உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் ? மாற்று கருத்து உள்ளவர்கள் உங்களின் அடிமைகள் அல்ல, உங்கள் விருப்படி ‘விவாதத்திற்கு’ அவர்களை உள்ளே இழுத்து வசை மாரி பொழிய

      உங்களை போன்றவர்களை ஜனநாயக ரீதியாக அணுகுவதே சரியானது. இனி இதில் மாற்றமில்லை

      நன்றி

      • மாட்டின் பெயரால் மனிதர்களை கொன்றால் அதனை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கு என்று கூவும் உனக்கு வேறு என்ன மாதிரியான பதிலை அளிக்க முடியும் அம்பி சதீஷ்? மனிதனை கொல்வதனை தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கும் போது அதே சட்டத்தின் மூலம் உன்னை நான் அம்பி என்று அழைகின்றேன் அல்லவா அதற்கும் படிகாரம் தேடு…. ஓடு ஓடு ……

        //அப்படியே அவை nadandhaalum மனிதர்களை கொள்பவர்களுக்கு தான் சட்டம் இருக்கிறதே கவனித்துக்கொள்ள //

        //உங்களை போன்றவர்களை ஜனநாயக ரீதியாக அணுகுவதே சரியானது. இனி இதில் மாற்றமில்லை//

  14. // தே சட்டத்தின் மூலம் உன்னை நான் அம்பி என்று அழைகின்றேன் அல்லவா அதற்கும் படிகாரம் தேடு…. ஓடு ஓடு …… //

    பகுத்தறிவாதிகளே எந்த சட்டப்படி ஒருவனை ‘ஜாதியை; சொல்லி அழைக்க முடியும் ? ஜாதி அவன் பெயரில் பின்னல் இருந்தால் அவன் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவன் என்று பெயரோடு சேர்த்து அழைக்கலாம்

    ஒருவன் என்ன இனத்தை சேர்ந்தவன் என்று தெரியாமலே என்னை ‘அம்பி’ என்று அழைக்கிறார். அதுவும் ‘சட்டப்படி’ அழைக்கிறாராம். ம்ம்ம்ம்

    நான் வேறு இனத்தை சேர்ந்தவன் என்று என் ஜாதி சான்றிதழை இங்கே upload செய்தால் எந்த சட்டப்படி இவரை தண்டிக்கலாம் ???

    • உமது சாதி இங்கு ஒரு பொருட்டே அல்ல சதீஷ்…. இந்த மாடு விசயத்தில் உன் மனப்பன்மை எதனை நோக்கியுள்ளது என்று நீ முதலில் சிந்தனை செய்…. உன் சாதியை மாற்றி கூறியதற்காக IPCயில் எந்த பிரிவிலும் தண்டனை இல்லை… வேண்டுமானால் முயன்று பார்….! மான நட்ட வழக்கு தொடர்ந்து முயன்று பார்….!

      • // உமது சாதி இங்கு ஒரு பொருட்டே அல்ல சதீஷ்…. இந்த மாடு விசயத்தில் உன் மனப்பன்மை எதனை நோக்கியுள்ளது என்று நீ முதலில் சிந்தனை செய்…. //

        அதை தான் முதலில் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறேன்

        மாட்டை வெட்ட கூடாது (அல்லது) மாட்டு கறியை சாப்பிட கூடாது என்றே எங்கே நான் சொல்லி உள்ளேன் ? அதை பதியவும் முதலில். விவாதித்தற்கு உள்ளே இழுத்து விட்டு என்னை ஏன் சிந்திக்க சொல்கிறீர்கள் ??

        // உன் சாதியை மாற்றி கூறியதற்காக IPCயில் எந்த பிரிவிலும் தண்டனை இல்லை… வேண்டுமானால் முயன்று பார்….! மான நட்ட வழக்கு தொடர்ந்து முயன்று பார்….!//

        நீங்கள் மாற்றி கூறவில்லை. இந்த சாதி தான் என்று ‘வேறொரு இனத்தின்’ அடையாளமாக ஆணித்தரகமாக கூறியுள்ளீர்கள். சட்டம் தன கடமையை செய்யும். நீங்கள் எனக்கு அறிவுறுத்த தேவை இல்லை

        • வினவு பொதுவெளியில் உன் தனிபட்ட கருத்தாக மாடு மாமிசம் உன்ன கூடாது என்ற கருத்தை எப்படி எடுத்துகொள்வது?ஒருபக்கம் அந்த ஹிந்துவா வெறியர்கள் நேரடியாக மாட்டு மாமிசம் உண்ணும் என்னை போன்றவர்களைதாக்கி கொல்கின்றார்கள்… நீ வாழபழதில் ஊசி ஏற்றுவது போல அந்த ஹிந்துத்துவா வெறியர்களின் கருத்தை வினவில் வைக்கின்றாய்….

          அம்பி, பார்பன அடிவருடி,,, ஹிந்துவா வெறியர்களின் இணைய தள மொண்ணை ஆகிய அனைத்து பட்ட பெயர்களுமே உமக்கு சாலப்பொருந்து…. எனவே உன்னால் முடிந்ததை பார்….

          • // அம்பி, பார்பன அடிவருடி,,, ஹிந்துவா வெறியர்களின் இணைய தள மொண்ணை ஆகிய அனைத்து பட்ட பெயர்களுமே உமக்கு சாலப்பொருந்து…. எனவே உன்னால் முடிந்ததை பார்…. //

            இதை எல்லாம் நீங்கள் வெறும் ‘வாய் சொல் வீரரிடம் போய’ சொல்லுங்கள். இனி விவாதம் தேவை இல்லை. உங்கள் சட்டம் விரைவில் சந்திக்கும். இது வினாவிற்கு எப்போதோ தெரியும்

  15. // மாட்டின் பெயரால் மனிதர்களை கொன்றால் அதனை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கு என்று கூவும் உனக்கு வேறு என்ன மாதிரியான பதிலை அளிக்க முடியும் அம்பி சதீஷ்? //

    நீங்கள் எப்படி செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள் ? இந்தியாவில் தண்டனை சட்ட ரீதியாக தான் தரப்பட வேண்டும்

    • ஒருவேளை நீ மத சிறுபான்மையினராக இருந்து(முஸ்லிம்) அல்லது ஒடுக்கபடும் தலித் பிரிவை சேர்ந்தவராக இருந்து இந்த விசயத்தை சிந்தனை செய்து பார்…. உன்னுடைய உணவு பழக்கவழக்துக்காக உன்னை யார்வேண்டுமானாலும் கொல்லட்டும்……., கொன்றவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும் என்று கூருவியா? மண்டையில் மசாலா இருந்தால் பதில் கூறு ஹிந்து வெறி பாரபனர்களின் அடிவருடியாக செயல்படும் சதீஷ் !

  16. // கொன்றவர்களை சட்டம் பார்த்துக்கொள்ளும் என்று கூருவியா? மண்டையில் மசாலா இருந்தால் பதில் கூறு ஹிந்து வெறி பாரபனர்களின் அடிவருடியாக செயல்படும் சதீஷ் ! //

    நீங்கள் தான் மண்டையில் மசாலா இல்லாமல் பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

    அதை தான் நான் உங்களிடம் கேட்கிறேன், என்ன செய்ய வேண்டும் என்று. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை

    அதையே திருப்பி என்னிடம் கேள்வி கேட்பீர்களா ? நீங்கள் சொல்லுங்கள் அவர்களை ‘என்ன செய்யலாம்’ என்றும் சொல்லுங்கள் அதை ‘எப்படி செய்யவேண்டும்’ என்றும் சொல்லுங்கள் ?

    // பதில் கூறு ஹிந்து வெறி பாரபனர்களின் அடிவருடியாக செயல்படும் சதீஷ் ! // முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

    முதலில் ‘அம்பி’ என்றீர்கள். அதில் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது ‘அடிவருடிய’. நன்றாக இருக்கிறது தங்கள் வாதம்

    • மாட்டின் பெயரால் ஹிந்துவா வெறியர்கள் அரசியல் ரீதியாக எதிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசும் உன் உணர்வு மிகவும் கொடுரமானது என்பது இங்கு இப்பொது நிருபணம் ஆகிறது….தண்டிக்கப்பட வேண்டும் என்பதா இங்கு விவாதப்பொருள்? இந்த ஹிந்துவா வெறியர்களை நேரடியாகவே ஆதரிக்கும் உன் சிந்தனை கண்டிக்கத்தகுந்து …. அம்பி என்றாலும் பார்பன அடிவருடி என்றாலும் ஹிந்துவா*****தான் பொருள் ஆகிறது….எ அந்தனை தானே நீ செய்து கொண்டு உள்ளாய் !

      • // மாட்டின் பெயரால் ஹிந்துவா வெறியர்கள் அரசியல் ரீதியாக எதிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசும் உன் உணர்வு மிகவும் கொடுரமானது என்பது இங்கு இப்பொது நிருபணம் ஆகிறது //

        மொழி, மதம், இனம், தண்ணீர், உணவு என்று எதையுமே அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை — > இதற்க்கு பெயர் என்ன சார் ?

        • பொதுவாக பேசினால் எப்படி சதீஷ்? நீ உண்ணும் தயிர் சாதத்தையும் புளியோதரையையுமா நாங்கள் பறிகின்றோம் ? இல்லையே! நான் உண்ணும் மாட்டு இறைசியில் வில்லங்கம் செய்ய நீ யார்? உனக்கு என்ன அருகதை இருக்கிறது? நீ யார் எனக்கு அதனை தின்னவேண்டாம் என்று அறிவுரை கூற…..(உன்னுடைய தனிபட்ட கருத்துக்கு தான் இந்த பதில்)

  17. இனி விவாதம் தேவை இல்லை என்று தெளிவாக கூறி விட்டேன். எனக்கு எதிராக சட்ட ரீதியான ஆதாரங்கள் உங்களிடம் எதுவும் இல்லை. மாட்டு கறியை உன்ன கூடாது என்று நான் விவாதம் முழுக்க எங்கும் சொல்லவும் இல்லை. எதுவாயினும் சட்ட ரீதியாகவே பேசுவோம்

Leave a Reply to sathish பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க