privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாவேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது - லண்டன் வாழ்க்கை !

வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது – லண்டன் வாழ்க்கை !

-

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 முதல் 11:00 மணி வரை, ரமோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லண்டனின் வணிக இதயமான ஃபின்ஸ்பரி சதுக்கத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடத்தில் வேலை செய்கிறார். கடைசி ஊழியர் சுழற்கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியேறும் போது அவர் தமது சீருடையை அணிகிறார்.

மாதிரிப் படம்

பின்னர் அவர் சுத்தம் செய்யத் தொடங்குகிறார். ஐந்து மாடிகளை மற்றொரு பணியாளருடன் தூசுறிஞ்சியைக் (Vacuum Cleaner) கொண்டு எல்லா குப்பைகளையும் அகற்றுகிறார். மேலும், சமையலைறைகளில் பெரும்பாலும் அவர் வரும் நேரத்தில் அசுத்தமும் அருவருப்புமாக இருக்கும் தட்டுகள் கருவிகளை கழுவி உலர்த்துகிறார். அவருடைய வேலையை முடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கிறது.

கழிப்பறைகளை சுத்தம் செய்வது அவருக்கு விருப்பக்குறைவான வேலை என குறிப்பிடுகிறார். “மனிதக் கழிவுகளின் நாற்றத்தை விட வெளுப்பான்கள் (Bleach) நெடி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்” என்று 36 வயதான அவர் விளக்குகிறார். மதிய நேரத்தில் மற்றொரு சுத்தம் செய்யும் வேலையும் இருப்பதால், இது களைப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் ரமோனா காது கேட்பொறியில் (earphones) சல்சா இசையைக் கேட்பதன் மூலம் தனது மனநிலையை சமப்படுத்த முயல்கிறார். அவரைக் கடந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி செல்வோரின் விகாரமான வாழ்த்துக்களை தவிர, ரமோனா அரிதாகவே யாருடனும் பேசுகிறார். ஆனால் அவர் அதுபற்றி கவலைப்படவில்லை என்கிறார். “என் வாழ்க்கை இப்போது நன்றாக இல்லை, ஆனால் நான் லண்டனில் முதன்முதலாக வந்தபோது இருந்ததை விட மிகவும் நன்றாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இளஞ்சிவப்பு கன்னங்களையும் பொன்னிற பின்னப்பட்ட கூந்தலையும் கொண்ட மகிழ்ச்சியான பெண்ணான ரமோனா, சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடி லண்டனுக்கு வந்தார். அவர் தனது தாய்நாடான பொலிவியாவை விட்டு, 2006-ம் ஆண்டில் எவா மொராலஸ் அதிபராவதற்கு சிறிது முன்னர், நாட்டின் வறுமை விகிதம் 38.2 சதவீதமாக உயர்ந்திருந்த போது வெளியேறினார். அவர் தனது சகோதரி மற்றும் உறவினருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் குடியிருப்பைப் பகிர்ந்து கொண்டு, முறைசாரா அடிப்படையில் பல்வேறு அலுவலகங்களில் இரவில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்துவந்தார். அவர் சக லத்தீன் அமெரிக்கர்களிடமிருந்து வாய்மொழியாக வேலை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டார்.

“நான் முதலில் துவங்கிய போது சீருடைகள் இல்லை, ஒப்பந்தங்கள் இல்லை, எதுவுமே இல்லை” என ரொக்கப் பணமாக ஊதியம் பெற்றதையும் ரமோனா நினைவு கூர்கிறார். “  சில சமயங்களில், ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்தபின்  ஊதியம் எப்போது கொடுக்கப்படும் என்பதை அறிய நான் மேலாளரை அழைத்தபோது, அவர் ‘அப்படியானால் உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டிருக்கிறார்”. அவர் தனது கணவரைக் கூட இன்னும் சந்திக்கவில்லை. மேலும், ஆளரவமற்ற வேளையில் பணிபுரிவதால் அவர் எவருடனும் பேசாமல் நாட்கள் அல்லது வாரங்கள் கூட கடந்து போகும்.

லண்டனில் கண்ணுக்குத் தெரியாத மற்றும் பாதிப்படைய ஏதுவான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளில் ரமோனாவும் ஒருவர். அவரது பிரிட்டன் பயணம், அத்தொழிலிலுள்ள மற்ற அனைவரின் வகைமாதிரியாகும். அவர்கள் பெரும்பாலும் வறுமையிலிருந்து விடுபடும் வழியைத் தேடி சுற்றுலாப் பயணிகளாக பிரிட்டனுக்குள் நுழைகின்றனர். முதலில் முறைசாரா ஏற்பாடுகளில் சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர். அது அவர்களை பணிப்பாதுகாப்பற்ற மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்படும் நிலைக்குத் தள்ளுகிறது. ஆவணங்களின்றி புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான சட்ட ஆலோசனைக்கு சில வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்வது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

ஈக்வாடர் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்பானிய குடிமகனான தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின் இங்கிலாந்தில் குடியுரிமை பெற தகுதிபெற்றார், ரமோனா. ஆனால் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நுழையும் அந்த தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே இருக்கும். அல் ஜசீராவுடன் பேசிய சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் பலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தை கொள்கையின் அடிப்படையில் இங்கிலாந்திற்குள் நுழையும் உரிமையைப் பெறுவதற்காக மற்ற ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் சில ஆண்டுகள் வேலைசெய்து சில பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். இந்த பத்திரிக்கையாளர் பேசிய ஒன்பது சுத்தப்படுத்தும் தொழிலாளிகளும் இந்த நேர்காணலின் போது இங்கிலாந்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தனர்.

ஆங்கில வகுப்புகள்

ரமோனா எதிர்கொள்ளும் நிச்சயமற்ற ஆபத்தான நிலை குளோரியா(43) மற்றும் டெஸ்டெமோனா (47) ஆகிய கொலம்பிய சகோதரிகள் எதிர்கொள்வதை ஒத்திருக்கிறது. ஆனால் அவர்கள் லண்டனை வந்தடைந்த பாதை மிகவும் கடினமானது. 2001-ல் அவர்கள் ஸ்பெயினுக்கு தங்களை கடத்திக் கொண்டனர். அங்கு மூன்றாண்டுகள் முன்புவரை ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பழம் சேகரிப்பவர்களாகவும், வீட்டை சுத்தப்படுத்துபவர்களாகவும் வேலை செய்தனர்.

மாதிரிப்படம்

ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையைப் பெற்ற பின் லண்டனில் உள்ள மைத்துனர் ஒருவர் அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துள்ளார். அவர்கள் சிறிது காலத்திற்கு அவருடன் தங்கியிருந்து, வர்த்தக சுத்தப்படுத்துபவர்களாக பணியாற்றத் தொடங்கினர்.

“வாழ்க்கை கடினமானது,” குளோரியா ஸ்பானிய மொழியில் கூறுகிறார். “புனித பால் தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் எனது பணியிடத்திற்கு செல்ல பேருந்தைப் பிடிக்க தினமும் அதிகாலை 1 மணிக்கு எழுகிறேன். எனது தினசரி வேலை நேரங்கள் 2-லிருந்து 4 மணிக்குள் மற்றும்  5-லிருந்து 7 மணி வரை”.

“நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.” சொல்லிவிட்டு டெஸ்டெமோனா சிரிக்கிறார். இரு சகோதரிகளுக்கும் ஆங்கிலம் பேச தெரியவில்லை.

ஒரு பல்பொருள் அங்காடியில் மளிகை சாமான்களை வாங்கச் செல்வதுகூட மிகக்கடினமாக இருக்கிறது, ஏனென்றால் உதவி கேட்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று குளோரியா கூறுகிறார்.

2016, செப்டம்பரில் கொலம்பியாவின் காலி நகரில் இவர்களது மூத்த சகோதரி இறந்துவிட்டார். ஆனால் பணமின்மையால் இவர்களால் சவ அடக்கத்திற்கு செல்ல முடியவில்லை. மேலும், ஊருக்கு சென்றால் இங்கிலாந்திற்கு திரும்ப முடியாது என்ற அச்சமும் குளோரியாவுக்கு இருந்தது. பெரும்பாலான நேரம், எங்கு வேலை செய்யப்போகிறோம் என்பது முதல்நாள் வரை தெரியாது என்கின்றனர் சுத்தப்படுத்தும் தொழிலாளிகள்.

“நான் உண்மையாகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன், ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைத்த பிறகு, இறுதியாக 1,400 பவுண்டுகள் செலுத்தி (சுமார் 1,17,041 ரூபாய்) கட்டணம் செலுத்தி ஒரு மொழி மையத்தில் காலை வகுப்புகளுக்குச் சென்றேன்” என்று ராமோனா கூறுகிறார். அவர் படிப்பை முடிக்கத் தவறிய காரணத்தினால் தான் செலுத்திய கட்டணத்தை மிகச்சரியாக நினைவில் வைத்துள்ளார்.

“நான் ஒவ்வொரு பாடத்தோடும் தூங்கினேன். இரவில் 14 மணி நேரம் நான் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கவனம் செலுத்த கடினமாக இருந்தது.” அதன் பின் ரமோனாவின் முதலாளிகளில் ஒருவன் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஊதியமளிக்காத துன்பம் மிகுந்த காலம் வந்தது.

ஒப்பந்த நிறுவனத்திற்கு அழைத்த போது எந்த பதிலுமில்லை. இறுதியாக மேலாளரை பிடித்துக் கேட்ட போது, அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அவருக்கு சொல்லப்பட்டது.

“உன் ஒப்பந்தம் முடிந்துவிட்டது இனி அழைக்காதே என்று அவர் சொன்னார்” வருத்தத்துடன் சொல்கிறார் ரமோனா. அந்த நேரத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தினால் பொலிவியாவுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவரது சேமிப்பு ஒரு ஆபத்தான வீதத்தில் குறைந்து கொண்டிருந்தது. மேலும், பஸ் கட்டணங்களை சேமிப்பதற்காக ஒரு அலுவலகத்திலிருந்து  மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு மணிநேரமானாலும் கூட நடந்தே சென்றார். சட்ட உதவி பெறுவதையோ அல்லது பணியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அம்பலப்படுத்துவதையோ பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. “வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது” என்று அவர் கூறுகிறார்.

டெஸ்டெமோனாவும் குளோரியாவும் தங்களது வேலையை ஒரு பொறியாக (Trap) பார்க்கிறார்கள்.  “எங்களது வீட்டில் தொலைக்காட்சி இல்லை, இணையம் இல்லை. எங்களது ஓய்வு நேரத்தில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால், பூங்காவிற்கு சென்று வெளியே குளிரில் உணவருந்துவோம்” என்கிறார் டெஸ்டெமோனா.  “இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” கேட்கிறார்.

– தொடரும்

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம்: ஜான்சன்

  1. தொழில் முனைவோர் பற்றிய சிறப்பான பதிவு

    http://www.jeyamohan.in/98315#.WRXDy_krJpg

    அந்த பெண்மணி சோசியலிச உடோபியாவாக திகழும் தனது தாய்நாட்டிற்கு செல்வதை விட , முதலாளித்துவ நாட்டில் கடினமான தூய்மை பணியில் ஈடுபடுவது மேலானது என்று நினைப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?

    • Vinavu readers,please read this link to have a true picture of Bolivia-www.worldbank.org/en/results/2017/03/22/opportunities-poor-children-youth-bolivia.Remember this report is not a publicity stunt by Bolivian Govt but a factual report of the World Bank.After reading the report,analyse the statement of Raman,the disciple of Jayamohan,who says that Bolivia is socialist utopia.Do not be carried over by these “fakus”One can not just digest the supporting arguments of Jayamohan who says that whatever the spendthrift Mallya was doing with semi-nude girls(with funding from banks) is nothing but his marketing his liquor brands and airlines.There are standing proof of the great entrepreneurial quality of Mallya in the form of rusted airplanes in all airports in India.

      • அறிவுள்ளோர் சிந்திக்க

        சோசியலிசவியாதிகள் வெனிசூலாவில் பத்து வருடத்திற்கு முன்னர் , பாருங்கள் பாருங்கள் மருத்துவ சேவையை என்று முகர்ந்து கொண்டாடினார்கள். இப்பொழுது அந்த என்ன நடக்கிறது ?

        பொலிவியாவில் சூப்பர் சூப்பர் என்பார்கள் , ஒரு பத்து வருடம் கழித்து பார்த்தல் தான் அங்கே என்ன நடக்கிறது என்பது புரியம் .

        • Raman,

          // சூப்பர் சூப்பர் என்பார்கள்///

          சரி எது சூப்பர் என்று நீங்கள் தான் சொல்லுங்களேன்.

          அமெரிக்க முறையா? இங்கிலாந்து முறையா? எது ?

          https://www.vinavu.com/2013/12/07/sicko-michael-moore-documentary/

          (பி.கு: 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பின் இங்கிலாந்திலும் பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டு சுருக்கப்பட்டிருக்கிறது.

        • Raman,live in the present.POOCCHANDI KATTAADHEER.If those who advocate socialism are “diseases”,those who advocate capitalism are “devils”You cannot deny the fact that Bolivia follows people centric policies.

  2. காட்டியிருக்கும் பதிவிலிருந்து எனது புரிதல்

    @Raman
    ஜெயமோகனுக்கு காப்பிட்டலிசமும் தெரியவில்லை; கம்யூனிசமும் புரியவில்லை. தொழில்முனைதலைப்பற்றியும் அவருக்கு(தங்களுக்கும்தான்) சரியான புரிதலில்லை போலும்.

    புதிய கண்டுபிடிப்புக்களும், அதைச்சார்ந்த தொழில்கள் தொடங்குதலும், சில குறிப்பிட்ட தனிநபர்களாலும்(அதாவது தனியார்கள்) சாத்தியப்படுவது, அவர்கள் அந்த துறைகளுக்குள் நுழைவதற்கு முன்னரே சமுதாயத்தின் முதல்() ஏற்கனவே அளிக்கப்பட்டிருப்பதால்தான்.

    எந்த தொழில் முனைவோரால் உலகின் முதல் செயற்கைக்கோள், ஸ்புட்நிக், சோவியத் ரசியாவிலிருந்து ஏவப்பட்டது?

    சமுதாயம் எங்கெல்லாம் தன்னுடைய தேவைகளுக்காக முதலீடு செய்கிறதோ, அதைப்பின்தொடர்ந்து தன்னுடைய லாபவெறிவேட்டையைத் திருப்புவதற்குப் பெயர் தொழில்முனைதல்.

    கணினி மற்றும் வலைத்தள வியாபாரத்தில், தனியார்களால் தங்களுடைய லாபவேட்டையை வெற்றிகரமாக நடத்துவது எவ்வாறு சாத்தியமாயிற்று?

    படிக்க:
    What the Steve Jobs Movie Won’t Tell You About Apple’s Success
    http://ineteconomics.org/ideas-papers/blog/what-the-steve-jobs-movie-wont-tell-you-about-apples-success

    • //
      எந்த தொழில் முனைவோரால் உலகின் முதல் செயற்கைக்கோள், ஸ்புட்நிக், சோவியத் ரசியாவிலிருந்து ஏவப்பட்டது?
      //

      சிறையில் அடைக்கப்பட்ட விஞ்ஞானிகளால் சாத்தியம் ஆயிற்று . 🙂

      அது சரி அதே சமுதாய பங்களிப்பை கொண்டு அவர்களால் நிலவில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை ?

      மக்களின் பயண முன்னேற்றத்தை முன்னெடுத்து ஒரு சிறப்பான
      போக்குவரத்து விமானம் தயாரிக்க முடியவில்லை ?

      கணினியோ , செல்போனோ கொண்டு வந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை ?

      அதை விடுங்கள் , சிறப்பான விவசாய டேகினாலஜி கொண்டு உணவு உற்பத்தி அதிகம் செய்து உலகின் பசி ஆற்றவில்லை ?
      நட்பு நாடான இந்தியாவிற்கு கூட உதவி முடியவில்லை ?

      தொழில் முனைவோரால் முன்னெடுக்கப்பட்டது உலகம்.

      இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் , உங்களை போன்ற அரைகுறையாக கம்யூனிசத்தை புரிந்து கொண்டவர்களை பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறார் .

      கட்டுரை தெள்ள தெளிவாக இருக்கிறது . புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்கு நம் இடது சாரி கல்வி திட்டத்தால் மழுங்க அடுக்கப்பட்டு இருக்கிறது.

      • @Raman

        // KKN ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் கூட இல்லையா?//

        காட்டியிருந்த லிங்க்கில் இருந்த கட்டுரையைப்படிக்காமலேயே ஜல்லியடிக்கக் கூடாது. ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமில்லை, கணினி மற்றும் வலைத்தள வியாபாரிகள், அதாவது தொழில் முனைவோர்கள், எப்படி தங்களுடைய கைவண்ணத்தைக்காட்டுகிறார்கள் என்பதற்கு அக்கட்டுரையில் மிக சரியான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

        அக்காகி அவர்கள் கேட்டதையே நானும் கேட்கிறேன் :

        ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்தார் என்பதை முதலில் நீங்கள் இங்கே சொல்லுங்கள். அப்புறமா உங்களை நீங்களே மெச்சிக்கலாம்…..

        //புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்கு நம் இடது சாரி கல்வி திட்டத்தால் மழுங்க அடுக்கப்பட்டு இருக்கிறது.//

        1947க்கு முன்னால் இந்தியாவில் இருந்த பொதுக்கல்வி முறை வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்க கற்றுக்கொடுக்க. அதுக்குப்பின்னால வந்த பொதுக்கல்வி முறை உள்ளூர் கொள்ளைக்காரனுகளுக்கு கூஜா தூக்க கற்றுக்கொடுக்க. இதுல எங்கேயிருக்கு இடது சாரி கல்வி திட்டம். எப்பிடி இந்தமாதிரி பச்சையா புளுகுறீங்க?

    • KKN ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ளும் திறன் கூட இல்லையா ?

      இந்தியாவின் பூச்சிய கன்டுபிடிப்பை சிலர் இப்படி எழுதி இருப்பார்கள்.

      ௧. இட மதிப்பு முறை பாபிலோனியர்களுடையது
      ௨ ஆல்பபெட் முறை கிரேக்கர்களுடையது
      ௩. தசம் எண் முறை எகிப்தியர்களுடையது

      இது ஒரு பெரிய கண்டுபிடிப்பா ?

      இப்படி பேசுபவர்களுக்கு ஐக்யூ மிகவும் குறைவாக இருக்கும் . அவர்களால் கண்டுபிடிப்பின் கனத்தை புரிந்து கொள்ள முடியாது .

      தட்டை பூமி சதீஸ் போன்றவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது

      • // தட்டை பூமி சதீஸ் போன்றவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது //

        Mr Raman you better behave within your limits.

        • தனியார் ஆங்கில கல்வியின் பிராண்ட் அம்பாசிடரே…

          உங்களை சீண்டுவதை விட எனக்கு வேறு வேலைகள் இருப்பதால் , உங்களை முன்னுதாரணம் காட்டுவதை இனி தவிர்க்கிறேன் .

          கடைசியாக ஒரு சிறுகதை :

          அறிஞர் கண்களுக்கு மட்டும் தெரியும் அழகான ஆடையை கொடுத்தானாம் ஒரு மந்திரவாதி. அதை அணிந்து(?!) சென்ற மன்னரை பார்த்து சிரித்தனராம் சிறுவர்கள் . அட ஊர்ல எல்லோரும் முட்டாள்கள் என்று வியாந்தாராம் அவர். நம்ம மந்திரவாதியிடம் அறிவு பெற்றால் இவர்களும் இந்த அழகான ஆடையை பார்க்கலாமே ,நம்மை தவிர ஊரில் யாருக்கும் அறிவு இல்லை என்று அங்கிலாயித்தாராம் மன்னர்.

          • Thanks for your advice. Better you follow your advice. I know who I’m and what I’m. Mind your business. If you are intelligent keep it with you. Don’t try to fool others by repeating ‘1+1=2’

          • You are allowed to express your opinion

            Unless and otherwise someone else comments on your opinion, you should not voluntarily invite them just because you are busy with ‘no work’

            Better your follow your advice. I believe I need not to repeat these words again to you

      • ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்தார் என்பதை முதலில் நீங்கள் இங்கே சொல்லுங்கள். அப்புறமா உங்களை நீங்களே மெச்சிக்கலாம்…..

        சுயமோகனை அதிகம் படிக்கறீங்கன்னும், அது ஒரு தொத்து வியாதின்னும் புரியுது!

  3. பார்பணர்கள் எதற்கு கோமாதா உண்ணும் அமெரிக்க ஐரோப்பிய நாட்டை நோக்கி ஓடுகின்றாரோ அதே காரணம்தான்.

    வேலை வாய்ப்பு தரும் இந்தியை தாய்மொழியாக கொண்ட வட இந்தியன் , இந்தி பேசாத தமிழ‌கத்தில் வந்து குறைந்த கூலிக்கு எந்த வேலையும் செய்கிறானோ அதே காரணம்தான்.

    செயமோகன் தேவபாசையான சமஸ்கிருதத்தில் எழுதாமல் சீச மாசையில் எழுதி பிழைப்பை நடத்துகிறாரோ அதே காரணம்தான்.

    • உணர்ச்சி பிழம்பே !

      ஆகவே சோசியலிச கம்மியோனிஸ நாட்டில் ஓசி சாப்பாடு சாப்பிடுவதை விட உழைத்து சாப்பிட வேண்டும் என்கின்ற அடிப்படை தன்மான உணர்ச்சி தான் காரணம் என்கிறீரா ?

      நீங்கள் சுட்டி காட்டி உள்ள உழைப்பாளிகள் அனைவரையும் இன்னும் அதிக மதிப்பதோடு பார்க்கிறேன் . நன்றி

        • அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் பிச்சை காரர் இருக்க்கிறார் , ஏழை பெண்மணி மேலாடை இன்றி பிச்சை எடுக்கிறார் . அமெரிக்காவில் மருத்துவம் இல்லை .

          அப்படி இப்படி கூப்பாடு போடுவார்கள். அமெரிக்காவிலும் ஏழைகள் உண்டு.

          ஆனால் அவர்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டியது இல்லை . தொழில்கள் அவர்களை சுற்றி நிறையா இருக்கின்றன . ஓரிரு வருடத்தில் வேலை வாங்கிவிட வாய்ப்பு உள்ளது .

          வாட்டஸ் அப் கொண்டுவந்தவர் இப்படி உணவு ஸ்டாம்ப் மூலம் உதவி பெற்றவர் தான் . அனால் அவர் தன அறிவை தொழிலாக மாற்றும் கட்டமைப்பு முதலீட்டுத்வம் தருகின்றது.

          இப்பொழுது வெனிசூலா க்யூபா போன்ற நாடுகளை பார்த்தால் , உணவு உதவி பெறுபவர் காலம் முழுதும் அரசாங்கத்திடம் நம்பி கொண்டேதான் இருக்க முடியும். தனியார் தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு , அரசாங்க அதிகாரிகளின் கருணை இருந்தால்தான் வேலை வாங்க முடியும்.

          சோசியலிச குட்டைக்குள் விழுந்துவிட்டால் அப்புறம் மீண்டுவர முடியாது. இதனால் தான் சூரியன் போன்ற அரைகுறை ஒப்பீட்டாளர்களுக்கு வெனிசொல்லவில் “சிறப்பு மஞ்சள் நீராட்டுவிழா” நடைபெறுகிறது 🙂

          இந்த பனங்காட்டு நரிகள், நாட்டை கெடுத்துவிட்டு , புத்தர்கள் ஆட்சி செய்திருந்தால் நான் நினைத்தபடி அனைவருக்கும் வேலை கிடைத்து இருக்கும் , இந்த லீடர் கெட்டவன் என்று கூறிவிட்டு அமெரிக்காவிற்கு விமானம் ஏறி போய்விடுவார்கள்.

          • If survivors with food coupons in USA can get jobs within one or two years,how come Trump got votes by promising jobs to locals at the cost of migrants?If jobs are plenty,why Trump restricts entry to migrant laborers?Raman,Are you reading newspapers?In 2016,your great govt has provided jobs only to 1.35 lakhs as against 1 crore jobs promised every year.You are having a cushy job and blindly supporting capitalism which wants to throw the Labour Acts in dustbin and recruit only contract labour.For your information,contract laborers will not have leave,PF,ESI and other benefits.The govt wants to provide contract laborers under its Make in India scheme.Formal sector in India enjoyed all facilities (that is also alms from the govt)to the tune of 57 lakh crores in the past two decades and gave employment opportunities to 20 lakh youth only.ONNU SUYA BUDDHI IRUKKANUM ILLAI YENDRAAL SOL BUDDHIYAAVADHU IRUKKANUM.You don’t read anything other than capitalist propaganda.

Leave a Reply to sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க