ஒரு தொழிற்சாலையில் வைத்து உற்பத்தி செய்ய இயலாத பொருள் தண்ணீர். அது நமக்கு மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளுக்கும் சொந்தமானது. அதனை தனியார் லாபத்துக்காகவோ அல்லது கேளிக்கை களியாட்டங்களுக்காகவோ வீணாக்கவது கூடாது. தற்போதுள்ள வறட்சிக்கும் குடிநீர் பஞ்சத்துக்கும் முதன்மையான காரணம் தனியார்மயம்தான். அந்த தனியார்மயத்துக்கு முடிவு கட்டாமல் வறட்சிக்கு விடிவில்லை. தண்ணீர் தாகத்துக்கே அன்றி லாபத்திற்கில்லை என்பதை உணர்த்தும் பாடல்.
பாடலை பாருங்கள், பகிருங்கள்.
ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா காலிகளின் சொற்களும் யதார்த்தங்களும்.
கங்கை யமுனா இந்தியாவின் புனித நதிகள் ஆனால் இரண்டு ஆறுகளும் உலகின் மிக மோசமாக மாசுபட்ட நதிகள்.
பெண்கள் தெய்வங்கள் ஆனால் உலக அளவில் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. பள்ளியில் படிக்கும் இந்து பெண் குழந்தைகளுக்கு நாப்கின் கூட இல்லாத அவல நிலை தான் இங்கே.
கோமாதா இந்துக்களின் தாய். கோமூத்திரமும் சாணியும் புற்று நோயை கூட குணபடுத்தும் ஆற்றல் மிக்கவை. ஆனால் நல்ல சத்தான கோமாதாவின் இறைச்சியையும் பாலையும் வெள்ளைக்காரனுக்கு.
பாருங்க வெள்ளக்காரன் சராசரியா 80 வயசுக்கு மேல வாழுறான். மூத்திரத்தையும் சாணியையும் முளின்கிட்டு நம்மாளுங்க 60 வசயுலேயே வைகுண்டமும் கைலாசமும் போயிடறாங்க.
இசைக்கருவியில் நமது பாரம்பரியமில்லை!!
வழக்கமான கோவனின் பாடல்இல்லை!!
இடையில் அம்மா வைத்தொட்டால் கையை வெட்டுடா என்பதற்கு மூதேவியின் படம் எதற்கு??
கிரிமினல் படத்தை நீக்கு!!
தீர்க்கமான , நுணுக்கமான இசை,கருத்துக்கள் தெளிவு…
மிக அருமையாக வந்துள்ள பாடல் …
பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் …வாழ்த்துக்கள் கோவன்
தண்ணீர் விநியோகம் அரசாங்கத்தின் கையில் தானே இருக்கிறது . அப்புறம் என்ன புலம்பல் ?
சரிவர திட்டம் இடாத அரசாங்கத்தின் குறைகளால் ஏற்படும் அசைவுகரியத்தை தனியார் துறை தீர்க்கிறது .தனியார் துறை லாபத்திற்கு தான் செய்ய முடியும் .
இந்த தனியார் துறையையும் ஒழித்துவிட்டு, திட்டமிடாத அரசாங்கமும் அமைந்தால் என்னவாகும் ?
சரியான உதாரணம் புதிய ஜனநாயக சோசியலிச வெனிசூலாதான் . சாவேஸ் வீட்டை கொழுத்த முதல் ஆளாக இந்த கோவன் தான் ஓடுவார்!
திட்டமிடும் தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று பிரசாரம் செய்யுங்கள் .
இருக்கும் விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை பட்டியல் இடுங்கள் .
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள சந்தித்து புதிய திட்டம் என்ன என்று கூறுங்கள் .
இதை எல்லாம் விட்டு விட்டு , மக்களின் அன்றாட வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும், வேலை வாய்ப்பை உருவாக்கும் தனியார் கம்பெனிகளை ஏன் திட்டுகிறீர்கள் .