நாடு முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டி காவிமயமாக்கி வரும் இந்து மதவெறி பாசிச கும்பல் சென்னைப் பல்கலைக்கழகத்தையும் காவிக்கூடாரமாக்கும் நோக்கத்துடன் சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணனை பொறுப்பாக்கி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் என்கிற பெயரில் ஒரு இருக்கையை உருவாக்கியுள்ளது. இது தனித்துறை அல்ல ஆனால் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் பெயரில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம் என்கிற பெயரில் பாஜக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அழைத்து வந்து அவ்வப்போது கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று 15.6.17 காலை 10.45 மணிக்கு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் சார்பில் ‘விவேகானந்தரின் உயர்கல்விக்கொள்கையும் அதன் நோக்கமும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கருத்தரங்கிற்கு வரலாற்றுத்துறை பேராசிரியரும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்தியாவுக்காக தமிழகத்தை பலியிடுவதில் தவறில்லை என்று பேசிய பா.ஜ.க எம்.பி இல.கணேசன் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் இந்த காவி கூட்டத்தோடு ஐக்கியமாகியிருந்தார்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தகவலே எங்களுக்கு அன்று காலை 8 மணிக்கு தான் தெரியும். தற்போது இன்டர்ன்ஷிப் நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்திற்கு வருவதில்லை எனவே குறுகிய காலத்திற்குள் இயன்ற மாணவர்களை அணிதிரட்டிக் கொண்டு கருத்தரங்கம் நடக்கவிருந்த பெரியார் அரங்கிற்குள் சென்று அமர்ந்தோம்.
நீதிபதி சந்துரு பேசும் போது இந்துக்கள் பசுவை உண்ணலாம் என்று விவேகானந்தர் கூறியதாக பலர் கூறுகின்றனர் அதற்கெல்லாம் ஆதாரமில்லை என்று கூறினார். விவேகானந்தர் கூறியது உண்மையா பொய்யா என்பது ஒருபுறமிருக்க சந்துரு காவி கும்பலோடு உட்கார்ந்துகொண்டு காவித்தனமாக பொய் பேசிக்கொண்டிருந்ததுதான் பிரச்சினை. மேலும் அவருடைய உரை முழுவதும் மாட்டுக்கறியை மாட்டுக்கறி என்றோ மாட்டிறைச்சி என்றோ கூறவில்லை பக்தாளை போல பசுக்கள்… பசுக்கள்… என்று மிகவும் மென்மையாகவே பேசிக்கொண்டிருந்தார்.
அடுத்து இல.கணேசன் பேச எழுந்ததுமே ‘வெளியேறு வெளியேறு காவி கும்பலே வெளியேறு’ என்று முழக்கமிடத் துவங்கினோம். நிகழ்ச்சி தடைபட்டது. காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து முழக்கமிட்டோம். அரங்கிற்குள் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்கள் இருப்பது அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. மாட்டுக்கறி உரிமை எல்லாம் உரிமை கிடையாது என்று ஒருவன் எங்களை மிரட்டும் விதமாக பேசினான். அதற்கடுத்து மாட்டுக்கறி எங்கள் உரிமை தடை போட மோடி யாரு என்று முழக்கமிட்டோம்.
அரங்கிற்குள் காவி கும்பலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருப்பது பல்கலைக்கழகம் முழுவதும் பரவியது. அரங்கிற்கு வெளியே வந்து முழக்கமிட்ட போது சுற்றிலும் நின்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். முன்பு மாட்டுக்கறி விருந்து நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் காவலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்துகொண்டு மாட்டிறைச்சியை கேட்டு வாங்கி உண்டார். நேற்றைய போராட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்து என்னப்பா போராட்டம் மட்டும் தானா பீஃப் இல்லையா என்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வலுவான முற்போக்கு இடதுசாரி மாணவர் சங்கங்கள் எதுவும் இல்லாத நிலையில் காவி பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல் கும்பல் செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர். இது போல தி.மு.க, சி.பி.எம், வி.சி.க போன்ற கட்சிகள் வந்து இங்கே கூட்டம் போட நிர்வாகம் அனுமதிக்குமா? காவி கும்பலை வளர்த்துவிட பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டே சிலர் வேலை செய்கின்றனர். நிர்வாகமும் அதை கண்டு கொள்ளாமல் துணைபோகிறது.
பார்ப்பன பாசிச கும்பல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மதவெறியை தூண்டிவிட்டு மாணவர்
இது பெரியார் பிறந்த மண் இங்கே காவி கும்பல் தலை தூக்கினாலே நசுக்கி எறிவோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (செ.ப)
APSC (MU)
செம…செம..செம..ல்ல .கலக்கி விட்டார்கள் தோழர்கள்.எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்தாலும் சரியான துணிச்சலோடு, பேசுபவர் நாட்டையே ஆளும் கட்சியின் மிக முக்கிய நபர் என்றாலும் “இது எங்கள் மண், பெரியார் பண்படுத்திய மண்” என்ற ஆழமான உணர்வோடு கண்ணியமும் நிதானமும் கொண்டு ஐ…யோ கலக்கிவிட்டார்கள் தோழர்கள்.செம..செம…செம…
காவிகளை விரட்ட தந்தை பெரியாரின் தடியை பயன் படுத்துங்கல் தோழர்கலே நம் தந்தை பெரியாரின் வாரிசு என்று நிறுபிப்போம்
என்னண்ணே.. மணியண்ணே … இன்னும் வரலயா நீயி?.
சீக்கிரம் வாண்ணே,,, நம்ம பூச்சிப்பாண்டியப் போட்டு மெட்ராஸ் யுனிவர்சிட்டில இந்த ஏ.பி.எஸ்.சி காரங்க செம்ம அடி அடிச்சிட்டாங்களாம்ண்ணே…
டேய்ய்ய் … மணிய்ண்ணே கைல அருவாளோட கெளம்பிட்டாரு … இன்னைக்கு எத்தன பேரு தல உருளப் போகுதோ??
Thamizan Kitta modaadey
…
Freedom of expression – In India, Indians cannot speak freely – only the terrorists and anti-nationals have freedom of speech.
So you are saying Ila. Ganashan a terrorist ?
இந்த செய்தியில நாம கவனிக்க வேண்டிய இன்னொரு கொடுமை…நீதிபதி என் கிற பெயரில் எத்தனை கருப்பு ஆடுகள் விலைபோன எருமைகள் இப்போது வெளியில் தெரியவருகிறது.ஏற்கனவே சதாசிவம் என்ற வெள்ளாடு(இனிஏன் கருப்பு ஆடு ?வெள்ளாடு என்ற பதத்தையே பயன்படுத்துவோம்)பதவி போன பின் வெளியே தெரிய ஆரம்பித்தது. வடக்கே ஒரு பன்னாடை ஆண் மயில் உடலுறவு கொள்ளாமல் பிள்ளை பெறும் என் கிறான்.இவனும் நீதிபதியாம். கூட்டுமனசாட்சியின் பெயரில் ஒருவனுக்கு மரணதன்டனை விதிக்கிறேன் என் கிறான் நீதிபதி.பின்ன என்ன மயித்துக்கு சட்டம் படிக்கிறான்.அரசியல் சாஸனம் என்ற ஒன்றை என்ன எளவுக்கு வைத்திருக்கிறான்.நாட்டின் புராதனமான ஒரு கட்டிடத்தை இடித்து தள்ளிவிட்டு இடித்த இடத்தை இடித்தவனுக்கே ரெண்டு பங்கு என் கிறான். இது சட்டமாடா? இந்த நாடு சட்டப்படி இயங்குகிறதாடா ? அதிகாரத்தில் உள்ள அனைத்து பயல்களும் காவியை உள்ளுக்குள் ஒளித்துக்கொண்டுதான் இருக்கிறான். அது எப்படியும் ஒருநாள் வெளிவந்துவிடுகிறது. இதுவரைக்கும் நாட்டின் ஜனாதிபதியாக அதுவும் காங்கிரஸ்காரனாக வேடமிட்டு இருந்த பிரணாப்முகர்ஜி தன் பூணூல் வெளித்தெரிய ஒருகொலைகாரன்(காஞ்சிஜெயேந்திரன்)காலில் கிடக்கிறான். 130 கோடி மக்களின் தன்மானமும் சுயமரியாதையும் வாழைஇலையின் பேண்டு வைப்பவனின் காலில் கிடந்து நசுங்குகிறது. கேவலம் கேவலம் கூடிய விரைவில் நல்ல முடிவு வரும்.
இதில் பியூட்டி “நீ..ஈஈஈதி” அரசர் சந்துருதான்..அண்ணன் ஐதாராபாத்தில் ரோகித் விமுலா மரணத்தை கண்டனம் செய்து பேசுவார். இங்கு அதே கொலைக்கும்பலுடன் ஒரே மேடையில் பேசுவார்….சூப்பர்ல…..
இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை அனைத்து துறைகளிலும் அமர்த்தி நாட்டையே பாசிச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர துடிக்கிறது பாசிச மோடி அரசு.
இதற்காக மிகப்பெரிய அளவில் பொய் பிரச்சாரங்களை செய்வது, வரலாற்றை பார்ப்பன பாசிசத்திற்கு ஏற்றாப்போல் மாற்றி அமைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் போட்டோஷாப் மோடி அரசு செய்து வருகின்றது.
தமிழிசை சவ்ந்தராஜன்,வானதி சீனிவாசன், பொன்.ராதகிருஷ்ன்,எஜ். ராஜா போன்ற தமிழகத்தில் விஷம கருத்துகளை பரப்பி மதகலவரத்தை தூண்டி பிஜேபிக்கு குறைந்தப் பட்ச செல்வாக்கையாவது உருவாக்க வேண்டும் ஏன்ற துடிக்கின்றன.
இதை முறியடிக்க மாணவர்கள்,இளைஞர்கள் ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து தமிழ்கத்தில் பாசிச பிஜேபி, ஆர்.எஸ.எஸ் க்கு ஏதிராக தொடர் போராட்டத்தை முன்னேடுக்க வேண்டு.
மாணவர்களின் துணிச்சலான போராட்டத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே இந்த காவி RSS-BJP கும்பல்களை விரட்டியடிக்க அணிசேர்வோம்.