privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

-

னிதாவின் மரணம், “ஏழைகளின் பால் அக்கறை கொண்ட மருத்துவர்கள் இனி தமிழகத்திற்கு கிடைப்பார்களா” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்தும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் போர்க்குணமிக்க முறையில் ஒரு மாத அளவில் தமிழக மாணவர்கள் போராடினார்கள்.

நீட் தேர்வு என்பது ஏதோ ஒரு சில மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைப்பது தொடர்பான பிரச்சினை அல்ல. வருங்காலத்தில் அரசு மருத்துவமனை என ஒன்று இருக்குமா, அப்படி இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இருப்பார்களா, இலவச மருத்துவம் என்பது பெயரளவுக்காவது இருக்குமா என்பது பற்றிய பிரச்சினைதான் நீட் தேர்வு.

தமிழகத்தில் உள்ள அளவு அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதேபோல, ஏராளமான குறைபாடுகள் இருந்தாலும்,  தமிழகத்தில் இருக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. நீட் தேர்வு தொடர்ந்தால், தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற பணக்கார வீட்டுப்பிள்ளைகளும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் படித்து முடித்து விட்டு அமெரிக்காவுக்கும், டெல்லிக்கும், மும்பைக்கும் பறந்து விடுவார்கள். அரியலூரிலும் பெரம்பலூரிலும் வேலை பார்க்க மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

மற்ற அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப் படுவதைப்போல, அரசு மருத்துவமனைகளும் தனியார் மயமாக்க முனைந்திருக்கிறது மோடி அரசு இது கற்பனை அல்ல, அரசு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளை, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு 30 ஆண்டு குத்தகைக்கு விடவேண்டும் என்று மோடி உருவாக்கிய நிதி ஆயோக் அமைப்பு அறிவித்திருக்கிறது. கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம். “தகுதி, திறமை, அதற்காகத்தான் நீட் தேர்வு” என்பதெல்லாம் மோடி அரசின் பம்மாத்து, பித்தலாட்டம்.

மருத்துவப் படிப்பிலிருந்து ஏழை அனிதாக்களை துரத்துவது என்பது தொடக்கம். நோய் நொடி என்றால் அரசு மருத்துவமனையை நம்பியிருக்கும், பணவசதியில்லாத ஏழைக் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்குள் நுழையவிடாமல் துரத்துவது என்பதுதான் இதன் முடிவு. அனிதாவின் மரணம் என்பது, டெங்கு, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல் என்று விதவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு, இலவச மருத்துவம் கிடைக்காமல் மடியப்போகும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்துக்கு ஒரு முன்னோட்டம்.

அனிதாவின் மரணம் என்பது நமக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்பதை விளக்குகின்றன, இந்நூலின் கட்டுரைகள்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !
  • நீட் தேர்வு : அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !
  • நீட் தேர்வு : ஒரு சொந்த அனுபவம்
  • நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
  • பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
  • நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
  • அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
  • அனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம் !
  • நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் தனியார் மருத்துவமனைகள்
  • நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார்  !
  • எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்
  • கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
  • மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள்
  • நீட் தேர்வு போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?
  • நீட் தேர்வு நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
  • மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
  • நீதிமன்ற அவமதிப்பு: பணிய மாட்டோம்! கூண்டிலேறத் தயார்!!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

20.00Read more

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க