பேரிடர்களை சகித்துக் கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். பேரிடர்களின் துயரங்களுக்கு இயற்கையை காரணமாக்கிவிட்டு எளிதாகத் தப்பிச் சென்றுவிட முடியும் என்று மத்திய – மாநில அரசுகள் கருதுகின்றன.

சுனாமி அலை தாக்கியது 2004-ம் ஆண்டில். ஒக்கி புயல் 2017-ம் ஆண்டில். இரண்டிலும் மீனவர்களை காக்க வேண்டிய கடலோரக் காவல் படையும், கப்பற் படையும் கடமையைக் கை கழுவிவிட்டன.

சென்னையில் காற்று வீசுமா, மும்பையில் கிரிக்கெட் மேட்ச் மழை இடையூறின்றி நடக்குமா? – இவைதான் வானியல் ஆய்வு மையத்தின் கவலைகள்! ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் குறித்த அக்கறை அவர்களது இதயத்திலும் இல்லை, தொழில் நுட்பத்திலும் இல்லை.

சுனாமியின்போது கடலில் தத்தளித்த மக்களைக் காப்பாற்றியவர்கள் மீனவர்கள். ஒக்கி புயலில் கடலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. மீனவர்களை மீனவர்களேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. விமானத்திலிருந்தும் ஹெலிகாப்டரிலிருந்தும் பாதுகாப்பாக தண்ணீர் திட்டுகளைப் பார்வையிடுகிறார்கள் அமைச்சர்கள். அவர்களின் கார் கதவைத் திறந்து விடுவதற்கும், பிரியாணி விருந்து ஏற்பாடுகளை செய்வதற்கும் மெனக்கெடும் அதிகார வர்க்கம் மக்களை கைவிடுகின்றது.

2015 பெருமழையின் போது கடலூருக்கு வந்த தன்னார்வலர்களின் குழு ஒன்று “நீரில் மூழ்கிய குடிசைகளை பார்க்க முடியவில்லையே, எப்படி சேதத்தை நம்புவது” என்றார்கள். இதுதான் நகர்ப்புறத்து மனிதாபிமானம். வெள்ளம் வடிந்த பிறகும், ஒக்கி புயல் கடந்த பிறகும்தான், வாழ்க்கை அதல பாதாளத்தில் இருக்கிறது என்பதைக் கூட அறிய முடியாத கண்ணியவான்கள் அவர்கள்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்ட திட்டமிடுகிறது இந்திய அரசு. இனயம் அல்லது கோவளம் துறைமுகம், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மட்டுமே இனி கடற்கரையில் இருக்க வேண்டியவை என்பதால் மீனவர்களை துரத்துகிறது அரசு.

ஆழ்கடல் ஏற்கெனவே பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அவற்றுடன் போட்டி போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை ஒக்கி புயலுக்கு காவு கொடுத்திருக்கிறது அரசு.

மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இதனை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

பேரிடர் : புயலா – அரசா ? – புதிய கலாச்சாரம் ஜனவரி 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள்!
  • செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் பாசிச ஜெயா அரசின் குற்றம்!
  • கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
  • சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா?
  • எது வீரம்? யார் வீரர்கள்?
  • தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு!
  • வெயிலில் மரணம் : ஏ.சி அறையில் எச்சரிக்கை!
  • காஷ்மீர் வெள்ளம் : ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி!
  • பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம்!
  • தானே புயல் பேரழிவு : தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
  • மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு!
  • வெள்ளத்தில் தமிழகம் : நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம்!
  • நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க