privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !

மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !

-

லைப்பே முகம் சுளிக்கும்படி இருக்கிறதே என்று கருதுகிறீர்களா? இதைத்தான் பண்பாடு, பக்தி என்று தமிழர்களின் தலையில் கட்டத்துடிக்கிறது தி இந்து தமிழ் பத்திரிக்கை.

“லட்சுமியின் முழு சாந்நித்தியம் உள்ள இடம் பசுவின் உடல் என்பது ஐதீகம்! காலையில் எழுந்தவுடன் பசுவின் பின்பாகத்தை தரிசிப்பது, லட்சுமியைத் தரிசிப்பதற்குச் சமம். இந்த தரிசனத்தால் நம் பாவங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை!” (தமிழ் தி இந்து, 15-01-2018, ‘லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கணுமா? பசுக்களை வணங்குங்க!’).

தமிழ் தி இந்துவின் மாட்டுப் பொங்கல் செய்தி இது! உழைப்பைப் போற்றும் தைத்திருநாளையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் இந்துமயமாக்குவதற்கும் தங்களின் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கும் பார்ப்பனிய பக்தர்கள் எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

பார்ப்பனியத்தின் இறுக்கமான பிடியில் இருக்கும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கலாச்சாரம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் தின்று போட்ட எச்சியிலையில் உருளுவதும், முடியைத் தின்பதும் இன்றளவும் நடைபெற்று வருகிறது. அங்கே அதுதான்  ஓர் இந்துவிற்கு அனுமதிக்கப்பட்ட பண்பாடு!

இப்பொழுதோ ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!

தமிழ்நாடு தப்பிப்போய்விட்டது என்பதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திகளும் எச்ச ராஜாக்களும் இராம கோபாலான்களும் மட்டும் வன்மத்துடன் திரிவதில்லை! மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவும் புரோகிராம்டாகத்தான் இருக்கிறார் என்பதை அன்றாடம் வரும் செய்திகளில் இருந்து மறந்துவிடக்கூடாது!

தமிழ் தி இந்துவின் மூத்த – இளம் பத்திரிக்கையாளர்களும், கட்டுரையாளர்களும் மக்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற பார்ப்பனிய பிற்போக்குத்தனங்களை இதழியல் என்று எந்த தார்மீக அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் தர வேண்டும்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்ட விவசாயிகள் இன்றைக்கு நிர்க்கதியாக இருக்கிறார்கள். காவிரியில் தண்ணீரை மறுத்து விவசாயிகளை வஞ்சித்த பா.ஜ.க கும்பல் தமிழர்கள் மீது நடத்தியது அரசியல் தாக்குதல் என்றால், பார்ப்பனிய தி இந்து தமிழ் பத்திரிக்கை நம் மீது நடத்துவது பண்பாட்டுத் தாக்குதல்!

சென்ற பொங்கலின் போது மாட்டுக் கொம்பை வைத்து நாம் டெல்லிக்கட்டு நடத்திக் கொண்டிருந்தோம். அசந்த நேரத்தில் பார்ப்பனியக் கூட்டம் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்! இப்பொழுதும் மாடு தான்! அவர்கள் சொல்வதுதான் பண்பாடு என்கிறார்கள்! இதற்கெதிராக விழிப்புடன் இருப்பது மட்டுமல்ல! மக்களின் சுயமரியாதைக்குச் சவால்விடும் பண்பாட்டின் பெயரிலான இதுபோன்ற பார்ப்பனிய அசிங்கங்களை அப்புறப்படுத்துவது உடனடி அவசியமாகும்!

மேலும் படிக்க:
லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கணுமா? பசுக்களை வணங்குங்க!