privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

-

சோடாபுட்டி ஜீயர் புராணம் – டீசர்

இப்படியாக…
சடகோப சோடாபாட்டில் ஜீயர்
டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர்

கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ
எதுக்கு கெடு வச்சார்?
அதைச் சொல்லுங்கோ

அன்புச்செல்வன் வட்டிக்கு கெடு வப்பேர்
ஐடி யிலே ரிலீஸ் டேட்டுக்கு கெடு வப்பாள்

ஐயர்வாள் எதுக்கு கெடு வச்சார்
அதச்சொல்லுங்கோ

அவர் ஐயர்வாள் இல்லடா ஜீயர்வாள்
ஐ க்கும் ஜிக்கும் வித்தியாசம் தெரியாத அபிஷ்டு

நேக்கு எல்லாம் ஜிலேபி மாதிரிதான் தெரியரது
நீங்க ஜீயர்னா என்னன்னு சொல்லுங்கோ

ஆடு மேய்க்கிறவன் ஆயர்
டீ ஆத்தறவன் நாயர்
இடுப்புக்கு கீழே போடறது லோயர்
லோயர்ல இருக்கிற கோமணத்தை குச்சியில கட்றவர் ஜீயர்

 

ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்…….. விரைவில்…………
பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

  1. ஹஹா தோழர்களின் பட்டையும் கேள்விக்குறியுமே தனியொரு கதை சொல்கிறது.
    அருமை.

  2. மதுரை கோவில் தீ விபத்தை எந்தசாமியும் தடுக்கல
    நம்ம ஃபயர் சர்வீஸ் ஆசாமிகள் தான் தடுத்திருப்பாங்க போல
    தன் கோவிலில் நெருப்பு பட்டு எரிஞ்ஜா
    தமிழ்நாட்டு அரசியலை மாத்துவன்னு சொன்ன என்ன அர்த்தம் சார்
    இத ஜீயர் கிட்ட நீங்க சொல்லி மீனாச்சி அம்மாவுக்கு எடுத்து செல்லுங்க,
    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    நன்றி
    கந்தசாமி

    • டி ஆத்தரவன் நாயர் என்றால் உனக்கு ஏன் அப்படி சூர் என்று கோபம் வரனும்?

      • கோபம் எல்லாம் இல்லை. ஒரு தொழிலை ஒரு சாதியினர் மட்டுமே செய்வது போல் வருவதால் தான் கேட்டேன்.

  3. வினவு…

    நீங்க ஜீயரை கண்டித்து இந்த டீஸரை வெளியிடுவது மகிழ்ச்சி தான். ஆனால், நீங்களும் உங்கள் ஆஸ்தான பாடகரான கோவனும் வரம்பு மீறி பேசுவது சரியல்ல. அந்த டீசரில் “இந்த கொலைகார பாவிங்க கோவில்ல வச்சு ஆண்டாளை என்ன பண்ணிருப்பாங்க” என்று பேசுவது, “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” என்பது போல வரும் வார்த்தைகள் அனைத்தும் அநாகரீகத்தின் உச்சம். ஒன்று, இதற்கான வரலாற்று பூர்வ ஆதாரம் இருந்தால் அதனை அளித்து விட்டு பிறகு பேசவும், இப்படி யுகமாகவெல்லாம் அடித்து விட வேண்டாம். பக்திக்காக இல்லை என்றாலும், தமிழுக்காக நாம் கோதை நாச்சியாரின் பாதம் பணிந்து தான் ஆக வேண்டும்.

    ஹச்.ராஜா மீதோ , ஜீயர் மீதோ இருக்கும் கோபத்தை இப்படி ஆண்டாளை அவதூறு பேசி தீர்த்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி…

    • //…இதற்கான வரலாற்று பூர்வ ஆதாரம் இருந்தால்..//

      வரலற்றுக்கெல்லாம் ஏன் மெனக்கெட சகோதரி? அண்மைய ‘வரலாற்று’ ஆதாரங்களே இந்த உருப்படிகள் எப்படிப்பட்டவை என்பதை ஊடகங்களில் பறைசாற்றியதே?
      கொலைகாரபாவிங்க என்றது – ஒரு குரூப்ச ங்கரராமனை சாவடித்தது, ‘என்னடா’ பண்ணினிங்க என்றது இன்னொரு பய ரஞ்சிதாவை கொஞ்சியது. ஆக தோழர் கோவன் உண்மையை பச்சையாக கேட்டதில் என்ன அநாகரிகம்? அநாகரிக வார்த்தை ஏதும் அவர் பயன்படுத்த வில்லையே? பேச கூசும் இவர்களின் செயலை சமூக ‘சங்கடம்’ கருதி உரத்து கேட்க துணிந்த தோழர்களை பாராட்டவே வேண்டும்.

      இந்தளவு ஊடகவெளிச்சம் உள்ள காலத்திலேயே இப்பிடி செய்றாங்களே?? ஒரு ஊர் செய்தி அடுத்த ஊருக்கு தெரியாத காலத்தில் என்ன ஆட்டம் போட்டிருப்பனுங்க??

    • தன் காம கழிவிரக்கத்தை வெளிபடுத்த அன்றைய தேவதாசி குல பெண்ணான தமிழ் கோதை நாச்சியாருக்கு தமிழ் உதவி உள்ளது என்ற உணமையை ஏற்காமல் அப்புறம் எப்படி கோதையாரின் தமிழை மெச்சி புகழ்ந்து அவருக்கு நாம் தலைவணங்க முடியும்?

      //தமிழுக்காக நாம் கோதை நாச்சியாரின் பாதம் பணிந்து தான் ஆக வேண்டும். //

  4. சகோதரி ரெபேக்கா அவர்களே ஆண்டாள் “பக்தியோடு” கரை புரளும் பாடல்களை கேட்டுள்ளிர்களா?மரியாதை என்பது அப்போது புரியும் உங்களுக்கு..ராமன் விநாயகர் ஆண்டாள் இவர்கள் எல்லாம் உங்களுக்குதான் கடவுள்.எச்சி.ராஜா ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பலுக்கு அவை யாவும் கலவரம் புரியும் “மாடல்கள்”.புரிந்துகொள்ள முயலுங்கள் ரத்த வெறி பிடித்த காவீகளைப் போல ஆண்டாள்களும் ஆபத்தானவைகளே..

    • முழு வீடியோவும் வெளியாகி விட்டது. இப்போது ரெபெக்கா அவர்களுக்கு வரலாற்று பூர்வ ஆதாரம் தேவையான அளவு கிடைத்திருக்கும். இப்போது ஆண்டாளை பற்றி தோழர்கள் கேட்டது சரிதானே?

      • இல்லையே … இப்போதும் கோவன் உருப்படியாக எந்த ஆதாரமும் அளிக்கவில்லை, அதே வியூகத்தின் அடிப்படையிலான உளறல்கள் மட்டும் தான் விஞ்சி நிற்கின்றன. ஆண்டாள் தேவதாசியாக இருந்தாள் என்பதற்கு என்ன வரலாற்று சான்றுகள் உள்ளன. ஏதேனும் கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் உள்ளனவா குறைந்த பட்சம் இலக்கியங்கள் எதிலாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இருந்தால் கூறவும்.

        • ஆண்டாள் தேவதாசி என்பதற்கு ஆதாரம் தானே இந்தாங்க….! தேவதாசியை தவிர அத்துனை காம கழிவிரக்கத்துடன் எழுத அன்றைய நூற்றாண்டில் வேறு எந்த பெண்ணுக்கு உரிமை இருந்தது சொல்லுங்க பார்கலாம்? பதில் வராது என்று தெரியும்…. இருந்தாலும் கேட்போம்…. கேட்டு வைப்போம்!

          அடுத்து தமிழக வரலாற்றில் சுஜாதா என்ற பெண் எழுத்தாளரை தேடுவீர்கள் என்றால் ஏமாந்து போவிர்கள்… ஆண் சுஜாதா அவரின் எழுத்துகளை படித்து விட்டு இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண் எழுதாளர் ஆபாசமாக எழுத்னாரா என்ற கேள்வி வரும் எனில் அது முட்டாள் தனமானதாக தானே இருக்கும்? இப்ப ஆண்டாள் விசயத்தில் இதே அளவுகோலை கொண்டு ஆண்டால் யார் என்று தேடுங்க….! ஒரு பெண் தான் எட்டாம் நூற்றாண்டில் தன் பாலியல் உணர்வுகளை வெளிபடுத்தி எழுதினார் என்று அதே போன்ற ஒரு சில எழுத்துகளையாவது நாம் ஆதாரத்துக்கு முன் வைக்க வேண்டும் அல்லவா? ஆனால் ஒன்று கூட இல்லையே! ஏன் ? ஆண்டாள் மட்டும் அப்படி தனி சிறப்புடன் எழுதியிருக்க காரணம் என்ன? ஆண்டாளுக்குள் ஒளிந்து ஒருக்கும் அந்த ரங்கராஜன் யார் என்று தேடினால் விடைகிடைக்கும்…யார் அந்த ஆழ்வார்? ஏன் பெண் பெயரில் எழுதினார்.?

          அது சரி….. தேவதாசி என்ற ஒரு இனத்தையே உருவாக்கிய ஹிந்துத்துவா வெண்ணைகளுக்கு ஆண்டாள் மட்டும் தேவதாசியாக இருபது ஏன் குத்துது? குடையுது?து………….!

        • என்ன கேட்டிங்க மேரி? இலக்கியத்தில் இருந்து ஆண்டாள் தேவதாசி என்பதற்கு ஆதாரமா?இதோ பிடிங்க நீங்க கேட்கும் ஆதாரத்தை….

          எட்டாம் நூற்றாண்டில் பெண்களுக்கு அன்றைய இந்து மதத்தில் பாலியல் உணர்வை வெளிப்படுத்தும் உரிமை இருந்ததா? கண்டிப்பாக இல்லை…

          ஆனால் தேவதாசிகளுக்கு ? ஆம் இருந்தது…..! தேவதாசி ஆண்டாளின் வாயில் இருந்து அவ்வுரிமை வெளிபட காண்போம்:

          அந்த பாடல் வரிகள் இங்கே :

          முத்தன்ன வெண் முறுவல்
          செவ்வாயும் முலையும்
          அழகழிந்தேன் நான்
          புணர்வதோர் ஆசையினால்
          என் கொங்கை கிளர்ந்தது

          அவரைப் பிராயம் தொடங்கி
          ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
          துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
          தொழுதேன்…

          சாயுடைவயிறும் என் தடமுலையும்
          திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
          தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
          பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
          புணர்வதோர் ஆசையினால்
          கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
          ஆவியை ஆகுலம் செய்யும்…
          என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
          பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

          -ஆண்டாள்

          குறிப்பு: இந்த பாட்டுக்கு தெளிவுரை, விளக்க உரை,பத உரை…. வேண்டுமானால் திருவில்ல்லிபுத்தூர் ஜீயரை தொடார்பு கொள்ளலாம்…..

          • ஆண்டாள் தேவதாசி என்பதற்கு இலக்கிய ஆதாரம் கேட்டாங்க…..கொடுத்து இருக்கேன்…. இத வெளியிடுவதில் என்னங்க அப்படி ஒரு பிரச்சனை வினாவுக்கு?

  5. பாவம் ரெபெக்காவுக்கு “உண்மை சுட்டுருச்சு” போலிருக்கு..அநாகாரிகம் எது என்பதை புரந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்..

  6. செலக்டிவ் நினைவு மறதியா ரெபேக்கா மேரிக்கு ?

    வினவு மட்டுமா இந்த தேவதாசி ஆண்டாள் விசயத்தில் கருத்தை தெரிவித்து உள்ளது ? இல்லையே!

    ஆண்டாளை விமர்சித்த ,தேவதாசி என்று முத்திரை குத்திய எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை… ரெபெக்கா மேரிகள் கண்டிக்கவில்லையே !

    ஆதார குறிப்பு :

    1.“நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ….” என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா

    2.ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    3.ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி…

    4.வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி..

  7. மீண்டும் இங்கு அனைவரும் ஆண்டாளை வியூகத்தின் அடிப்படையில் தான் புழுதி வாரி தூற்றுகிறீர்களே தவிர, ஒரு வலுவான ஆதாரம் என்று எதனையும் யாரும் அளிக்கவில்லை.அதனை விட கொடூரமான விடயம் என்னவென்றால் இந்த ஆண்டாள் பிரச்னை தொடங்கிய நாள் முதலே, முற்போக்குகள் கூறும் ஒரே விடயம், கோதையால் இவ்வாறு பாலியல் சொற்களை அமைத்து தைரியமாக பாட முடிகிறதென்றால், நிச்சயம் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அறிவற்ற முடிவிற்கு வருவது தான். ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.

    ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், அவள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. அவள் பாடியவை அனைத்தும் நாயக-நாயகி பாவனையில் அமைந்த செய்யுள்கள். இது பக்தியின் ஒரு நிலை. இறைவனை தன் நாயகனாக நினைக்கும் உச்சகட்ட உணர்வு நிலை. இதனை பல ஆண்பால் புலவர்களும் வெளிப்படுத்தி உள்ளனர். அதற்காக நாம் அவர்களை எல்லாம் ஓரின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்கள் என்று கூறி விட முடியாது. அதே போன்று தான், ஆண்டாளின் பாடல்களும்.

    “சாயுடைவயிறும் என் தடமுலையும்
    திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
    தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
    புணர்வதோர் ஆசையினால்
    கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
    ஆவியை ஆகுலம் செய்யும்…
    என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
    பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ”

    ஆண்டாளின் மேற்படியான பாடலை வைத்து தான் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்று பல முற்போக்குகள் முடிவிற்கு வருகிறார்கள். சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள். சிருங்காரம் என்பது ஒரு வகையாகப் கவிநயம்.அதற்கென்று ஒரு கவித்துவ அழகு இருக்கிறது. ஆனால், இதனை ஒரு பெண் பாடி இருக்கின்றாள் என்றால், இந்த அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட பாட இவளுக்கு தைரியம் இருக்கிறது என்றால், நிச்சயம் இவள் பிஞ்சிலேயே பழுத்த தே*****வாகத் தான் இருக்க வேண்டும் என்பதை தான் பெரியாரிஸ்டுகள் தொடங்கி கோவன் வரை இங்குள்ளவர்கள் நீட்டி முழக்கி பேச வருவதெல்லாம்.

    கவிநயம் அல்லது கவி அழகு இவைகள் இன்னதென்று தெரியாதவர்கள் தான், இந்த அளவு நாத்தழும்பேற மன வக்கிரத்துடன் பேச முடியும். பக்தியில் ஆண் பெண் என்கிற பாலின பேதமெல்லாம் கிடையவே கிடையாது. யாருக்கு என்ன பாவனை பிடிக்கிறதோ அதன் அடிப்படையில் வழிபடலாம், பாடல்கள் இயற்றலாம். இவள் பெண், ஆகவே இப்படி தான் கவி புனைய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதெலாம் அற்பத்தனத்தின், ஆணாதிக்க பொறுக்கி தனத்தின் உச்சம். அதனை தான் கோவன் தலைமையிலான ம.க.இ.க கலைகுழு செய்து கொண்டிருக்கிறது. அதிலும், கோதை நாச்சியாரின் பாடல்களை, நித்தியானந்தா என்னும் பொறுக்கியுடன் ஒப்பிடுவதிலேயே இவர்களின் நோக்கமும் தரமும் நன்றாக தெரிகிறது. அன்று பெரியாருக்கு கிடைத்தது கண்ணகி என்கிற எங்கள் தமிழன்னை, இன்று ம.க.இ.கவிற்கு ஆண்டாள் என்கிற எங்களின் தமிழ் மகள்.

    ஒன்று மட்டும் நிச்சயம், ஹெச்.ராஜாவாகட்டும், ஆர்..எஸ்.எஸ் இந்துத்துவ பார்ப்பன சக்திகளாட்டும், கம்யுனிஸ்டுகளாகட்டும் அவரவர்கள் தங்களுடைய அரசியலில் காலூன்றுவதற்காக ஆண்டாளை தங்களுக்கு கிடைத்த பகடைக்காயாக நன்கு பயன்டுத்துகிறார்கள். இன்னும் உங்களின் அரசியலை இங்கு கடை விரிக்க இன்னும் எவ்வளவு தான் ஆண்டாளை துச்சாதனம் செய்வீர்களோ…!!!!!!! செய்யுங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்.

    • ஹச்.ராஜா பாணியிலேயே ஆண்டாள் கைய புடிச்சிஇழுத்துட்டாக என்று பெனாத்தல் வாதம் செய்வது போன்ற மடமை வேறு ஏதுமில்லை ரெமேக்கா. ஆண்டாள் சர்ச்சையில் ஆண்டாளை பற்றி விவாதிக்கவே கூடாது, அவர் வாழ்ந்த அன்றைய சமுக நிலையே பற்றி யோசிக்கவே கூடாது என்றால் அங்கேயே உங்க கருத்துக்கள் அழுகிப்போய் முடை நாற்றமடிக்கின்றனவே! என்ன செய்யலாம்?

      ஆண்டாளை பற்றி பேசவே கூடாது என்றால் அதுவும் அவர் எழுதிய பாடலின் அடிப்டையில் பேசவே கூடாது என்றால் அது என்ன மாதிரியான பாசிச தன்னமையுடைய வாதம், கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று உங்களால் சிந்திக்கவே முடியாது… ஏன் என்றால் கருத்தளவில் அசிங்கமாக பேசிய ஹச் ராஜா வேற நீங்க வேற கிடையவே கிடையாது…

      காம கழிவிரக்கம் கமழும் அந்த பாடலை எழுதியது தேவதாசி ஆண்டாள் இல்லை என்றால் வேறு யாராக அவர் இருக்க முடியும் என்று விளக்கவேண்டியது இனி யார் கடமை? ஆண்டாளை தூக்கிபிடித்து ஹிந்துத்துவா பஜனை பாடிகிட்டு இருக்கும் உங்களை போன்றவர்களின் கடமை தானே? எட்டாம் நூற்றாண்டின் தேவரடியார் சமுகத்தை பற்றி வரலாற்றின் ஊடாக காட்ட்சி படுத்தும் போது அதற்கு குறுக்கே விழுந்து மறிக்கும் உங்க செயல் ஹச் ராஜாவின் செயலை போன்றது தானே? என்ன நான் இலக்கியம் ஊடாக ஆண்டாளை தேவதாசி என்று நிருபிக்கும் போது உங்களுக்கு வரும் கோபம் என்னை அறிவற்ற முடிவை நோக்கி செல்வதாக கூற வைகின்றது… அதே நேரத்தில் ஹச் ராஜாவின் வார்த்தைகள் வைரமுத்துவின் அம்மாவை திட்டுவதன் மூலம் எதிரோளிகிறது… ஆனாலும் உங்கள் இருவருக்குமான கோபம் பொதுவானது தானே? ஆண்டாளை பற்றி ஏன் பேசுகிறாய் என்ற கோபம் தானே அது?

      //கோதையால் இவ்வாறு பாலியல் சொற்களை அமைத்து தைரியமாக பாட முடிகிறதென்றால், நிச்சயம் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அறிவற்ற முடிவிற்கு வருவது தான். ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.//

    • இதனையே தான் என்னுடைய வாதமாக வைக்கின்றேன்… அவர்கள் ஆய்வு செய்யாமலேயே ஆண்டாளை பற்றி கூறிய கருத்துகளான “ஆண்டாள் கற்பனை” (ராஜாஜி) மற்றும் “ஆண்டாள் போன்று என்னையும் கூத்தியாலாக எதுக்க” (சுஜாத்தா)என்ற வாதங்களை எல்லாம் மெய்மறந்து ஏற்ர்க்கும் ஹிந்துதுவாகள் குறிப்பாக ரெபெக்கா மேரிகள் மற்றும் அவற்றை எல்லாம் கண்டும் கணாமலும் சென்ற வைணவர்கள் வைரமுத்து விடயத்தில் மட்டும் ஆன்மிக ஆண்மையுடன் சீறி பாய்வது ஏன் ? எங்கிருந்து இந்த ஆன்மிக ஆண்மை வைணவர்களுக்கு வந்ததது….? வைரமுத்து வைணவர் அல்ல்லாதவர் என்பதால் தானே. ? வைரமுத்து சூத்திரன் என்பதால் தானே?

      இந்த சாதிய,சனாதன, மனு விசயங்களை எல்லாம் ஆண்டாளின் பிரச்னை ஊடாக அம்பல படுத்தும் தேவை முர்போக்குக்லாகிய எங்களுக்குஇருக்கு ! ரேபக்கவுக்கு இல்லை என்றால் அதில் ஏதும் ஆச்சிரியம் இல்லை…. ஏன் என்றால் ரெபெக்காவின் வாழ்வியல் முறை பார்பனியம் சார்ந்து, ஹிந்துத்துவா சார்ந்து இருக்கலாம் !@

      //ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.//

    • ரெபெக்கா, பாவனை என்று எதனை சொல்லவருகிண்றீகள் என்றால் அஆண்டாளின் “ரோல் பிளே” விளையாட்டை தானே? கண்டிப்பாக நானும் அதனை ஏற்கின்றேன். மனதில் காட்சிப்படுத்திகொள்ளாதா ஒரு செயலை எழுத்தில் யாருமே வடிக்க முடியாது அல்லவா? அப்படி பட்ட நிலையில் ஆண்டாள் காமத்தை பற்றி சிந்திக்காமல் அந்த காம பாடல்களை எப்படி எழுதியிருக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக , மனத்தத்துவம் சார்ந்து நீங்க தான் விளக்கம் கொடுக்க வேண்டும்…

      பட்டரின் அபிராமி அந்தாதியை கண்டிப்பாக பக்தியின் பரவசநிலை என்று தீர்மானமாக கூறலாம்… தாய்மையுடன் அவர் ஒருங்கிணையும் நிலை என்று கூட தீர்மானமாக சொல்லல்லாம்… ஆனால் ஆண்டாளின் பாடல்களை…. குறிப்பாக கீழ் உள்ள வரிகளை எப்படி எடுத்தது கொள்வது?

      புணர்வதோர் ஆசையினால்
      என் கொங்கை கிளர்ந்தது

      அவரைப் பிராயம் தொடங்கி
      ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
      துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
      தொழுதேன்…

      //ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், அவள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. அவள் பாடியவை அனைத்தும் நாயக-நாயகி பாவனையில் அமைந்த செய்யுள்கள். இது பக்தியின் ஒரு நிலை. இறைவனை தன் நாயகனாக நினைக்கும் உச்சகட்ட உணர்வு நிலை. //

    • ரெமேக்கா அவர்களே, சதிர் ஆடும் தேவரடியார்கள் சிருங்கார கவி நடையில் பாடல்களை பாடாலாமல் வேறு என்ன நடையில் பாடல்களை பாடுவார்கள் , மன்னனையும் மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள் என்று சிந்திக்க உங்களுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் எது? நீங்சொல்லும் அதே கருத்தை தான் நானும் கொண்டு இருக்கேன்… ஆமாங்க தேவரடியார் ஆண்டாள் அவர்கள் சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள் என்கின்றேன்….!

      வேணும் என்றால் இந்த விசயத்தை நம்ம அம்மா அல்லது நம்ம மூதாதை கொள்ளுபாட்டி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் கலை பின்னணியில் இருந்து தெரிந்து கொண்டு வந்து விவாதிக்லாமே நீங்க!

      //ஆண்டாளின் மேற்படியான பாடலை வைத்து தான் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்று பல முற்போக்குகள் முடிவிற்கு வருகிறார்கள். சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள். //

    • ரெபெக்கா , ஆண்டாளின் பரவச நிலைகளை எல்லாம் தாண்டி யோசித்தோம் என்றால் மிக முக்கியமான ஒரு கேள்வி எழுகின்றது. ஆண்டாள் எத்தகைய சமுக நிலையில் திருவில்லிபுத்தூரில் இருந்தார்? அங்கிருந்த அவர் என்ன சமுக அங்கிகாரத்துடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்? அவர் அன்றைய வைணவ சமுகத்தால் என்னவாக ஏற்க்க்பட்டார்? ஒன்று அவர் குடும்ப பெண்ணாக இருந்து இருந்தால் அவருக்கு “சிருங்கார ரசனையில்” அதாங்க காம ரசனையில் பாடல் எழுத எல்லாம் அறிவு எப்படி வந்து இருக்கும்?மேலும் கோவிலுக்குள் புழங்கிய பெண் ஆண்டாள் தேவதாசியாக , நாட்டிய மங்கையாக, சிருங்கார கவியாக இல்லாமல் வேறு என்னவாக அவர் அங்கிகரிக்க்பட்டார் என்று நீங்க தான் மீண்டும் முதலில் இருந்து விளக்கனும்…

      இங்கே அறிவை மட்டும் பயன் படுத்துங்க ரெபெக்கா…. அதனுடாகவிவாதம் செய்யுங்க! ஆண்டாளின் அறிவிழந்த பாவனைகள்-ரோல் பிளே முறைகள் எல்லாம் இங்கே விவாதத்துக்கு உதவாது….!

      //இன்னும் உங்களின் அரசியலை இங்கு கடை விரிக்க இன்னும் எவ்வளவு தான் ஆண்டாளை துச்சாதனம் செய்வீர்களோ…!!!!!!! செய்யுங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்.//

    • மிக தெளிவான நேர்த்தியான பதிவு . ஒரு பெண் கவிஞரை ஏளனமாக சித்தரிப்பது ஆணாதிக்க உணர்வை காட்டுகிறது . காமத்துபால் எழுதிய வள்ளுவரை ஏளனமாக எழுதிவிடுவார்களா ?

      அடுத்து ஆண்டாள் காலத்தில் ஒரு பெண் கல்வி கற்று கவிதையும் பாடி இருக்கிறாள் என்பதே மிக பெரிய விஷயம்.

      ஆணாதிக்க வெறியை உணர்ந்த அவ்வை இளமை துறந்து முதுமை ஏற்றாள் என்பது வரலாறு.

      ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் , சீதையை நெருப்பில் குளிப்பாட்டியது இப்படி இவர்கள் பின்னாளில் புரளி பேசுவார்கள் என்று ஊர் வாயை அடைக்க , அந்த கதாபாத்திரத்தின் மேன்மையை விளக்க கதாசிரியர் மெனக்கெட வேண்டி இருந்தது .

      • ராமன் உங்க புராணத்தை அதுவும் வெக்கமற்ற வார்த்தைகள் மூலம் தொடங்கிட்டீரா? ஆண்டாள் காலத்தில் ஒரு பெண் சிருங்கார கவிநடயில் எழுதுறாங்க என்றால் அதுவும் குடும்ப பெண்கள் கல்வி கற்க சாத்தியம் இல்லாத காலகட்டத்தில் ஒரு ஆண்டாள் என்ற பெண் சிருங்கார கவிநடயில் பாடல் எழுதுறாங்க என்றால் அந்த பாடல் அரசனையும் ஆண்டிகளையும் மகிழ்விக்கும் சதிராட்டம் சார்த்தகாக இல்லாமல் வேறு எதுக்கு என்று உங்க மூளையை போட்டு கசக்கி பதில் சொல்லுங்க பார்கலாம்…!

        அடுத்து அவ்வையை எதுக்கு ஐயா இங்க கொண்டுவந்து நிறுத்தி வெக்கமே இல்லாமல் பேசிகிட்டு இருக்கீங்க? அவ்வை என்ன ஆண்டாளை போல சிரிங்கார நடையில் ஆபாச பாடல்களையா எழுதிகிட்டு இருந்தாங்க?

      • திருவள்ளுவரின் இல்லறவாழ்வில் அறிவுரையாக மிளிரும் இன்பத்துப்பால் குரல்களை காம ரசம் ஊற்றேடுக்கும் ஆண்டாளின் சிருங்கார தெரு ஆபாசத்துடன் ராமனை தவிர வேறு யாரும் ஒப்புமை செய்யமாட்டார்கள்… இவரின் இந்த கேவலமான புத்தி பார்பனியத்தின் இயல்பான திமிரில் இருந்து வெளிபடும் ஒன்றே ! ஆச்சிரியம் ஏதுமில்லை….

  8. பெரியாரிஸ்டுகள் தான் சதிரை காமரசம் நிறைந்த ஆடல் பாடலாக
    பார்கின்றார்கள் என்ற உங்க கருத்து மொக்கை தனமானது…உண்மை என்னவென்றால் நீங்க சொன்ன ஆண்டாளின் சிருங்கார கவிநடை உண்மையிலேயே காமரசம் வாய்ந்த காமத்தை பொது வெளியில் தூண்டும் தன்மை கொண்டது… அந்த சதிர் என்ற கலை தேவரடியார்கள் கைய்களில் இருந்து பார்பனர்கள் கைகளுக்கு வரும்போது (கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில்)அதில் இருந்த சிருங்கார கவிநடை (பாலியல் ஆபாசத்தை தூண்டும் கவி நடை) நீக்கபட்டு “புனிதப்ட்டுதபட்டது”. அதனுடாக சதிர் என்ற பொதுவெளி காம களியாட்ட கலை சமுக அளவில் தரம் உயர்த்தப்ட்டது. வேணும் என்றால் இது தொடர்பக நடிகை சொர்ணமாலா அவர்களின் அவர் மெட்ராஸ் பலகலை கழகத்தில் சமர்பித்த PHd ஆய்வுகட்டுரையை தேடிப்படித்து விட்டு வந்து மேலும் நீங்க விவாதிக்கலாமே நீங்க!

    பெரியாரிஸ்டுகள் மீது எல்லாம் மொக்கையாக “ஹ்ந்துட்டுவா சமுகத்தின்” குற்றங்களை சுமத்திவிட்டு நீங்க தப்ப முடியாது ரெபெக்கா…!

    //இந்த அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட பாட இவளுக்கு தைரியம் இருக்கிறது என்றால், நிச்சயம் இவள் பிஞ்சிலேயே பழுத்த தே*****வாகத் தான் இருக்க வேண்டும் என்பதை தான் பெரியாரிஸ்டுகள் தொடங்கி கோவன் வரை இங்குள்ளவர்கள் நீட்டி முழக்கி பேச வருவதெல்லாம். //

  9. ஒன்றை கூறி விடுகிறேன், இங்கு மறுமொழியில் நான் என்னுடைய கருத்துக்களை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறேனே ஒழிய, குறிப்பாக யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் அளித்து கொண்டிருக்கவில்லை என்பதை ஒரு சிலர் நினைவில் கொள்ளவும். அதிலும் நான் கேள்விகளை முன் வைக்க வேண்டுமென்றால், வினவிடம் மட்டும் தான் வைப்பேனே தவிர வேறு எவரிடமும் அல்ல. சிலர் தங்களை நோக்கி நான் கருத்து பதிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு பொதுவாக என் கருத்துக்களை கூறி கொண்டிருக்கிறேன் அவ்வளவே ….

    • இதைவிட மொக்கையாக கூறி பின்வாஙக முடியாது.விட்டு விடுங்கள்,மாணவன் குமார்

    • பதில் அளிக்காமல் இருப்பது உங்கள் உரிமை சகோதரி. ஆனால் இதை நாம் புரிந்து கொள்வது சம்பந்த பட்ட பிரச்சினையில் விமர்சனத்துக்கு அப்பற்பட்ட ‘புனிதம்’ கண்டவனுக்கும் பதில் கூற முடியாது என காட்டி நழுவும் எஸ்கேபிசம் எனவே. மதஅடிப்படை வாதிகளிடம் உள்ள ஒரு பண்பு.

      • சின்னா…….

        நான் சொல்ல வருவது உங்கள் புரியவில்லை என்றால், அதற்க்கு நான் பொறுப்பாளி அல்ல. நான் பதில் கூறாமல் ஓடி விடுவேன் என்று கூறவில்லை. வருவோர், போவோருக்கெல்லாம் என்னால் பதில் கூறி கொண்டிருக்க முடியாது. தராதரம் பார்த்து தான் பதில் அளிக்கபடும். நான் கூற வருவதில், உங்கள் கேள்விக்கான பதிலும் அடங்கிவிடும் அவ்வளவே… புரிகிறதா..

        • தராதரம் என்று என்ன எதிர்பார்க்கிறீர்கள்? குமார் தீட்சை பெற்றிருக்கணுமா??
          குமாருடன் வேறு பதிவுகளில் கடுமையாக முரண்பட்டாலும், இங்கு சரியாகவே கேட்கிறார். அவர் ஆதாரமாக போட்ட பலான பாடலுக்கு ‘சிருங்காரம்’ என விளக்கினாலும் அந்த ‘சிருங்காரம்’ எப்படி ஒரு சிறு பெண்னின் மனதில் தோன்றும்?? அதற்கு விளக்கம் முடிந்தால் கொடுக்கவும், மணிகண்டன் ‘காதல் மார்க்கம்’ என எதோ கீழே பதிலளித்துள்ளார். அதை போல் பதில் அளிக்க முயற்சிக்கவும். அதற்கு குமார் பதில் அளிப்பார் தானே! அதை விடுத்து ‘தராதரம், வருவோர் போவோர் என மேட்டிமைதனம் பேசுவது சரியல்ல.

          உங்கள் பதில் 16 இல் அதற்கு தகுந்த விளக்கம் இல்லை, வெறுமனே கோதை நாச்சியாரை வச்சு செய்கிறோம் எனவே எண்ணுகிறீர், உண்மையில் அந்த அப்பாவி பெண்ணுக்க்கு என்ன நடந்தது என்பது பற்றி தான் எமது கவலை.

          • அந்த பாடலை வெளியிடுவது கூட எனது விருப்பம் அல்ல சின்னா… வினவுக்கும் விருப்பம் இல்லாததால் தான் ஒரு நாள் முழுக்க அந்த பின்னுட்டத்தையே அவங்களும் வெளியிடவில்லை… அதே நேரத்தில் இலக்கியத்தில் இருந்து ஆதாரம் கேட்க்கும் போது நாம “தோமே” என்று ஒன்னும் தெரியாத ஜென்மமாக நிக்ககூட்டாது அல்லவா? அதுக்கு தான் ஆண்டாளின் பாடலை அதனை இலக்கிய கேட்டவருக்கே கொடுத்து இருக்கேன்…கூடவே ஒரு கேள்வியையும் எழுப்பி இருதேன்… ஆண்டாள் தேவதாசி இல்லை என்றால் அறிவியல் அல்லது மனத்தத்துவ ரீதியாக அப்படி பாடல் எழுதுவது ஆண்டாளுக்கு எப்படி சாத்தியம் ஆயிற்று என்று! அதுக்கு நேரடியான பதில் தான் வராமல் தாராதரம் மயிறு மட்டை… என்று பதில் வருது இந்த பெண்மணியிடம் இருந்து…!

            பொது வெளியில் தாரதரம் பார்க்கும் மனிதர்கள் என்னத்துக்கு வினவில் வந்து நோட்டனும்? தன் கருத்துரிமையை மூடிகிட்டு போவலாம் இல்ல? இவிங்க தராதரம் பற்றி பேசுவது எதுக்கு இணை என்றால் ஆடத்தெரியாத தேவரடியார் மேடை கோணல் என்று சொல்வது போலதானே இருக்கு!

    • ரெபெக்கா மேரி, நான் பதில் அளிப்பது கூட வினவு வாசகர்களுக்காக தானே தவிர உங்களுக்காக அல்ல…!நான் வினவு வாசகர்களுக்கு உங்கள் கேள்விகள் ஊடாக பதில் அளிக்கும் தருணத்தில் அம்பலப்ட்டு நிற்பது நீங்கள் அல்ல… ஆனால் உங்களின் மொக்கையான கருத்துகள் மட்டுமே… ! ஆமாம் அப்போது உங்கள் கருத்துகள் வலுவிழந்து நிற்கும்!

  10. மாணவன் குமார் உங்கள் வாதம் தவறு சங்க காலத்தில் பல தமிழ் பெண் புலவர்கள் இருந்து இருக்கிறார்கள், ஔவையார், அஞ்சில் அஞ்சியார், வெள்ளி வீதியார் என்று எத்தனையோ பெண் புலவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் அவர்களில் பலர் அகநானுறு பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். அகநானுறு பாடல்கள் தலைவன் தலைவியை பற்றியது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

    இந்த அகநானுறில் காதலை பற்றி காமத்தை பற்றி எழுதிய அத்தனை பெண் புலவர்களையும் நீங்கள் இப்படி அவதூறாக பேச முடியும்மா ?

    பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொன்ன பெரியாரை பின்பற்றும் வினவு கூட்டங்களுக்கு, கண்ணனை தவிர வேறு யாரையும் நேசிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆண்டாளின் கற்பு காதல் உங்களுக்கு கலாச்சார அதிர்ச்சியாக தான் இருக்கும்.

    ஆண்டாளின் காலத்திலும் பல பெண்கள் நன்றாக படித்து இருக்கிறார்கள் அவர்கள் எழுதிய கவிதைகளும் ஆதாரமாக நமக்கு இருக்கிறது.

    ஆண்டாள் ஹிந்து மதத்தை சேர்ந்தவள் கண்ணனை நேசித்தாள் கண்ணனையே திருமணம் செய்ய விரும்பினால், அவளின் விருப்பம் நிறைவேறியது என்பது தான் உங்களுக்கான பிரச்சனை.

    • அகநானுறு பாடல்களை சங்க காலத்தில் எழுதிய எந்தப்பால் புலவரும் தொல்காப்பிய நெறிமுறைகளை அடிபடையாக கொண்டு தான் எழுதினார்களே தவிர ஆண்டாளை போன்று ஆபாசமாக அடுத்தவள் புருஷன் மீது (கண்ணன் மீது )காமத்தை உமிழ்ந்தது காமத்தில் உருகி எல்லாம் எழுதவில்லை என்ற எளிய உண்மையை உமக்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அப்ப்படி எழுத தமிழ் இலக்கண விதிகளை தன்னகத்தே கொண்டு இருந்த தொல்காப்பியமோ அல்லது நன்நூலோ இடம் தரவில்லை என்ற உண்மை கூட ராமனை போன்று உமக்கும் தெரியவில்லையே!

      “அஸ்க்கு புஸ்கு” என்று சினிமா பாட்டு மாதிரி எழுதப்பட்ட ஆண்டாளின் ஆபாச குப்பைகளை கூட தமிழின் சிறந்த படைப்புகளாக கொண்டாடவேண்டும் என்றால் அது உம்மை போன்ற மொரட்டு பக்தர்களால் மட்டுமே சாத்தியம்….. என்னமோ போ மணிகண்டா…!

      • மாணவன் குமார் ஹி ஹி ஹி உங்களுக்கு அகநானுறு பாடல்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது.

        கம்ப ராமாயணம் எல்லாம் படித்து பாருங்கள்.

        • மணிகண்டன்…அட கருமத்த….., அகநானுறு பற்றி பேசிகிட்டே அதில் உள்ள காமத்தை விளக்குகின்றேன் என்று சொல்லிக்கிட்டு நீங்க அப்படியே கம்ப ராமயணத்துக்கு கொரங்கு மாதிரி தாவினால் எப்படி மணிகண்டன்? கம்ப ராமாயணத்தை எப்ப அகநாநுர்று பாடல்களுடன் சேர்த்தார்கள்? முதிரிச்சி உங்களுக்கு! ஆண்டாளின் மொரட்டு பக்தராக இருந்தவர் இப்ப மொள்ளமாரி விமர்சகராக மாறிட்டிங்க…. நல்லா வருவிங்க மணிகண்டன்!

          ஆண்டாளின் சிருங்கார ரசம் கமழும் பாடல்கள் எல்லாம் தேவதாசிகளின் சதிராட்டத்துக்கு உரியவை தானே தவிர தமிழுக்கானவை அல்ல…

          • ஐயோ பாவம் இலக்கிய அறிவு துளி கூட இல்லாமல் இருக்கியே குமார்.

            கம்ப ராமாயணத்தில் காமம் பல இடங்களில் அதிகமாக இருக்கும் ஆனால் கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பனை பற்றி நாம் பேசுவது இல்லை (காரணம் கம்பன் ஒரு ஆண்), அதேபோல் பல அகநானுறு பாடல்களிலும் தலைவன் தலைவியின் காதல் ஊடல் காமம் பற்றி இருக்கும் ஆனால் அது பற்றியும் நாம் பேச மாட்டோம்…

            ஆனால் ஆண்டாளை பற்றி மட்டும் கண்டபடி பேசுவோம் காரணம் அவள் ஒரு பெண், ஹிந்து மதத்தை சேர்ந்தவர், இது உங்களின் ஆணாதிக்கத்தின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.

            • காம ரசம் வழியும் கம்ப ராமாயணத்துக்கு பெரியாரும் அவர் சார்ந்த கட்சியினரும் எழுதியுள்ள விமர்சனங்களை தம்பி மணிகண்டன் படித்தது இல்ல போல…படிக்கவில்லை என்றால் நாம என்ன செய்ய? ஆமாம் பெரியார் ஆண்டாள் பெண் என்பதால் ஆண்டாளின் காசம்ரசம் சிந்தும் சிருங்காரங்க்களை விமர்சிக்காமல் விட்டுவிட்டு சென்றது தவறு தான்… அவர் விட்ட வேலையை நாமே தொடருவோம் மணி….!

              அகநானுறு பாடல்களில் காமம் பற்றி இருக்கு என்றால் அதனை சுட்டிகாட்டவேண்டியது உமதுவேலை தானே மணி! அதுக்கு நானா சாட்சியை அழைத்த்து கொண்டு வந்து பேசமுடியும்…சோம்பேறி ம்நிக்ன்டன்….!

              • குமார்: இலக்கிய அறிவே இல்லாமல் இந்த விவகாரம் பற்றி நீங்கள் பேச வந்ததே தவறு. கம்பன் காளிதாசன் அகநானுறு போன்ற இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு பிறகு ஆண்டாளை பற்றி பேச வாருங்கள்.

                என்னை பொறுத்தவரையில் கண்ணன் மீதான ஆண்டாளின் காதல் மிக புனிதமானது. அவரின் காதலை பற்றி பேச (அல்லது புரிந்துகொள்ள) நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு தகுதியே இல்லை.

                ***********உங்களால் ஆண்டாளின் புனிதமான காதல் ஏற்க முடியமால் அவதூறு பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை

                • ஏதாவது பதில் சொல்லியே ஆகணும் ,உளறியே ஆகணும் என்ற நிலையில் நீங்க பேசிகிட்டு இருபது புரியுது மணி…!

                  அகநானுரில் இருந்து ஆபாச பாடலுக்கு ஒரு உதாரணம் காண்பிக்கலாமே நீங்க துப்பு இருந்தால் என்று கேள்விகேட்டதுக்கா இப்படி மணி?

                  இப்ப மேட்டரு ஆண்டாலு பற்றியது… ஆனா நீங்க படிக்க சொல்வது கம்ப ராமாயணத்தை பத்தி…! இயற்பியல் தேர்வுக்கு வேதியல் படிச்சிகிட்டு போய் தேர்வில் கோட்டைவிட்ட அந்த வெடிவேலு நீங்க தானா மணி! ஹ ஹா…..! மேலும் கம்ப ராமாயணத்தின் காம-களியாட்ட நிகழ்வு பாடல்கள் தான் மக்கள் முன் பெரியாரால் முன்பே அம்பலபபடுத்தப்பட்டு நிக்குதே…! மீண்டும் காம ராமாயணத்துக்கு போய் அதனை விமர்சிக்க வேண்டிய தேவை எங்கே வந்தது?

                  பிசிறு அடிக்க நீங்க என்ன்னத்தை பேசினாலும் உண்மை என்ன்வென்றால் ஆண்டாள் பாடிய அந்த பாடல் தேவதாசிகள் அரசனையும் பிறரையும் மகிழ்விக்கதேவரடியார்கள் நாட்டியம் ஆட்டும் போது பாடப்படும் சிருங்கார சரம் சொட்டும் நடையில் தானே இருக்கு! சதிராட்டத்துக்கு ஏற்ற பாடலாக தானே இருக்கு! நான் என்ன செய்ய?

                  • உங்களை போன்றவர்களுக்கு இலக்கிய அறிவும் இல்லை வரலாற்று அறிவும் இல்லை ஆனாலும் நானும் ரவுடி தான் கணக்கில் பேச வந்து விடுகிறீர்கள்.

                    நான் காளிதாசரை படிக்க சொன்னதற்கு காரணம் மேகதூதம், அதில் அவர் தேவரடியாரை பற்றி விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

                    அதேபோல் தேவரடியாருக்கும் ராஜதாசிக்கும் வித்தியாசம் தெரிந்துகொண்டு பேசுங்கள். சும்மா ஏதாச்சும் உளறி கொட்ட வேண்டாம்.

                    மேலும் தேவரடியார் என்பது பெண்களை மட்டும் குறிப்பது அல்ல, தேவரடியாராக ஆண்களும் இருந்து இருக்கிறார்கள். தேவரடியாருடன் மற்றவர்கள் பேசுவதோ அல்லது தொடுவதோ குற்றமாக கருத்தப்பட்டது.

                    தேவரடியார் முறை தவறாக போனதற்கும் இந்தியாவின் மீது நடந்த இஸ்லாமிய படையெடுப்பிற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

                    பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் உங்களை போன்ற வினவு கூட்டங்களின் ஆணாதிக்க வக்கிர மனநிலை மாற வேண்டும்.

                    • மணிகண்டன் , நீங்க அகநானுற்றில் ஆபாசமிருக்கு என்று தொடங்கினிங்க…., ஆதாரத்துடன் அகநானுற்று பாடலை கேட்டேன்… ஆதாரம் கொடுக்காமல் கம்ப ராமாயணத்துக்கு ஓடிவிட்டீர்… அதுவும் ஆபாசம் தானே என்றீர்.. ஆமாங்க கம்பராமாயணம் காமரசம் தான்… அதனை அதில் உள்ள ஆபாசத்தை முன்பே பெரியார் அம்பலபடுத்திவிட்டார் என்றேன்… இப்ப காளிதாசரை படிக்க சொல்றீங்க….இது தான் விவாத முறையா? சரி விவாத முறை என்றே வைத்துகொண்டு உங்களுடன் விவாதிக்க தயாராக தான் இருக்கேன்…அதே நேரத்தில் கிழ் உள்ள கேள்விகளை படித்து பதில் அளிக்க முயலவும் ….

                      1. கம்பராமாயணம் உங்க பார்வையில் காமரசம் கமழும் காவியம் தானே?

                      2. அகநானுற்றில் உள்ள ஆண்டாள் பாடல்களை போன்ற ஆபாச பாடல்களை சுட்டிகாட்ட ஏன் ஒரு உதாரணம் கூட உங்களால் கொடுக்க முடியவில்லை…?

                      3.காளிதாசர் சுட்டிக்காட்டும் தேவதாசி முறை அத்துனை உயர்ந்த முறை அது பிற்காலத்தில் தான் அசிங்கப்ப்டுத்தப்ப்டு உள்ளது என்றால் அன்றைய சிரிங்கார ரசம் கமழும் பாடல்களை பாடிய தேவதாசி ஆண்டாளை தேவதாசி என்று அழைக்க உம்மை போன்ற இந்துதுவாகளுக்கு என்ன பிரச்னை?
                      தொடரும்…..

    • ஒரு பெண் (ஆஸ் பெர் யுவர் வெர்சன்) ஒரு பொம்பளைப் பொறுக்கியை அதாவது கிருஸ்ணனை (ஆஸ் பெர் யுவர் வெர்சன் இன் கிருஸ்ண லீலா) நேசித்தாள் என்றாள், என்ன டிசைன் சார் அது ?..

      அகநானூறு, திருக்குறள் பேசும் காமம் என்பது மெடிக்கல் சயின்ஸில் உடலியல் இன்பங்கள் பற்றியவை. அதாவது இன்று மருத்துவர் காமராஜ் போன்றவர்கள் எழுதும் நூல்களில் வரும் எழுத்துக்கள் போன்றது.

      ஆண்டாளின் நூலில் வழியும் காமம், சாட்சாத் சரோஜாதேவி புத்தகத்தை இலக்கியத் தரத்தில் வடிவமைத்துத் தருவதைப் போன்றது. ஆகவே.. தாங்களே ஒரு நல்ல முடிவாக எடுத்து ஆண்டாளை இன்னாரென்று டிஃபைன் பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன் மணி மாம்ஸ்..

      • அனானியன் இதே பதிலை அப்படியே ரெபெக்காவின் கடைசி பின்னுட்டத்துக்கும் கொடுங்க…. அவன் இவன் என்று வக்கணையாக பேசிக்கிட்டு இருக்கும் அந்த அம்மா திருந்தறாங்களா பார்கலாம்….!

  11. இதுவே ஆண்டாள் மற்ற மதத்தில் பிறந்து இருந்தால் (அப்போது இந்த மாதிரி எழுதி இருக்க முடியாது) உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆணாதிக்க சமூகத்தில் இப்படி ஒரு துணிச்சலான பெண்ணா என்று ஆண்டாள் பாராட்டி இருப்பீர்கள் ஆனால் ஆண்டாள் ஒரு பெண் அதுவும் ஹிந்து மத கடவுளை பற்றி பாடிய பெண், அதனால் இந்தளவுக்கு அவதூறாக பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

    • வணக்கம் மணி மாமஸ்,

      சவுக்கியமா .. பாத்து ரொம்ப நாள் ஆச்சே..

      //// இதுவே ஆண்டாள் மற்ற மதத்தில் பிறந்து இருந்தால் (அப்போது இந்த மாதிரி எழுதி இருக்க முடியாது) உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆணாதிக்க சமூகத்தில் இப்படி ஒரு துணிச்சலான பெண்ணா என்று ஆண்டாள் பாராட்டி இருப்பீர்கள்/////

      அதாவது ஆண்டாளின் பாடல்களின் ’துணிச்சலை’ வினவு பாராட்டவில்லை என்பது தான் தங்களது மனக்குறையாக இருக்கிறது ..

      சரி மணிகண்டன், உங்கள் விருப்பப்படியே ஆண்டாளின் ‘துணிச்சலான’ எழுத்துக்களை வைத்து வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

      அந்தக்காலத்தில் வரலாறோ, அல்லது கதையோ எழுதுவதென்றால் செய்யுள் வடிவத்தில் தான் எழுதியுள்ளார்கள் என்பதை மணி மாம்ஸ் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே கருதுகிறேன். அந்த அடிப்படையில், இன்றைய உரைநடை அன்றைய செய்யுள்.

      இப்போ மணிகண்டனுக்கு சின்ன வயசுல ஆபாசப் புத்தகம் படிச்ச அனுபவம் இருக்கா … நீங்க நெம்ம்ம்ப நல்லவருன்றதால படிச்சிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. அந்தப் புத்தகங்கள்ல எழுதப்படக் கூடிய கதைகள்ல பாதிக் கதை சொந்தமான அனுபவங்களை எழுதுவது போல எழுதியிருப்பாங்க கதாசிரியருங்க …

      அந்தக் கதாசிரியரு ஆம்பளையா, பொம்பளையான்னு பலான புக்க படிக்கிறவனுக்கு தெரியாது. ஆனா அங்க நெரேசன் பண்றது கதையோட கேரக்டர் தான். அந்த மாதிரி அந்தக் காலத்துல எழுதப்பட்ட பிட்டுப் படக் கதை தான் ஆண்டாளோட பாசுரமோன்னு எனக்கு லைட்டா ஒரு சந்தேகம் இருக்கு ஓய்.. நம்ம பா.ராகவனே தன்னோட வெப்சைட்டுல முன்னாடி ஒரு நாள் தமிழ்-ல நல்ல சாஃப்ட் போர்னோ கதை வேணும்னா ஆண்டாளைப் படிங்கன்னு சொல்லிருக்காருன்னா பாத்துக்கோங்க மணி.

      இப்ப உங்களுக்கு ரெண்டு ஆப்சன் இருக்கு மணி. ஒண்ணு, அந்த சாஃப்ட் போர்னோ க(வி)தையை ஆண்டாளுன்னு ஒரு பொண்ணு எழுதிருக்கனும். அல்லது ஒரு ஆண் கதாசிரியர் தன்னோட சாஃப்ட் போர்னோ க(வி)தை அதிக சர்குளேசன் ஆகனும்னு ஒரு பொண்ணோட நேரேஷனுல அதாவது ஆண்டாளோட நெரேஷனுல எழுதிருக்கனும்.

      ரெண்டுல எதைத் தேர்ந்தெடுக்கப் போறேள் ?.

      ஆண்டாளு ஒரு ஆம்பளை தான்னு சொல்லப் போறேளா ?. இல்லை இது ஆண்டாளோட சொந்த நேரேஷன்னு சொல்லப் போறேளா ?. அதாவது ஆண்டாளே இல்லையா ?. அல்லது ஆண்டாள் ஒரு காமம் சொட்ட சாஃப்ட் போர்னோ கதை எழுதிய ’துணிச்சலான’ பெண்ணா ?.

      பதில் சொல்லுங்கோ ஓய் …

      அக்கா ரெபெக்கா மேரி, அப்புறம் அல்லக்கை R, எல்லாரும் பதில் சொன்னா நல்லா இருக்கும்

      • உங்களின் வாதமே தவறு.

        ஹிந்து மதத்தில் கடவுளை நண்பனாக, தெய்வமாக, எதிரியாக, காதலனாக, கணவனாக வழிபடும் முறை இருக்கிறது. இதில் ஆண்டாள் கடவுளை அடைய தேர்ந்தெடுத்த முறை காதல்.

        காதல் மூலமும் கடவுளை அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை.

        என்னை பொறுத்தவரையில் கடவுள் பக்தி என்பது கேள்விகளுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது (கமல் வார்த்தைகளில் சொல்வது என்றால்) ஆண்டாளின் காதலை உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது

        ஏ ஆர் ரஹ்மான் இசையில் வந்த வைரமுத்துவின் “மார்கழி திங்கள் அல்லவா” பாடல் கேட்டு இருக்கிறீர்களா ? அந்த பாடலின் மூலம் ஆண்டாளுடையது, ஒரு பெண் தனது காதலனை அடைய தவிக்கும் தவிப்பை பற்றி அந்த பாடலில் எழுதி இருக்கிறார். ஆண்டாளின் பாடல்கள் எல்லாமே கடவுளை அடைய வேண்டும் என்ற தவிப்பு தான் இருக்கிறது.

        மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
        நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
        சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
        கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
        ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
        கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
        நாராயணனே நமக்கே பறை தருவான்
        பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

        இந்த பாடலை பாருங்கள் காதல் காமம் என்று அனைத்தையும் தாண்டி ஒரு சிறு பெண்ணின் மிக சிறந்த தமிழ் அறிவு தெரியும். ஆண்டாளின் பாடலை படித்த பிறகு கடவுள் மீதும் காதல் மீதும் தனி மரியாதையே வரும்.

        வினவு கூட்டங்களை போன்ற வக்கிர மனங்களுக்கு இது ப்ரோனோவாக தெரியலாம்

        • உங்களுக்கும் அதே கேள்வி தான் ….மணிகண்டன்….! நீங்க குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது எவனோ ஒரு ஆண்டாளை மொரட்டு தனமாக ஆராதனை செய்யும் பொருக்கி, ஆண்டாளின் ஆபாச பாடலை உங்க குடும்ப பெண்களை கிண்டல் செய்ய படறான் என்றால் அதில் உள்ள, அந்த பாடலில் உள்ள தமிழை ரசிப்பீரா? இல்ல அந்த பாடலில் உள்ள ஆபாச கருத்தை அடையாளம் கண்டு அவனை உதைபீரா? செருப்பால் அடிபீரா?

          நான் அவனை செருப்பால் அடிப்பேன்… நீங்க எப்படி..? வெக்கம் மானம் சூடு சொரனை எல்லாம் இருக்கா உங்களுக்கு?

  12. ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக என்னுடைய கருத்தினை சுருக்கமாக தொகுத்து அளித்து விடுகிறேன்.

    ௧) கோதையை தேவதாசி என்று பட்டம் கட்டி விட நினைப்பவர்கள், தாங்கள் கூற வரும் கருத்திற்கு ஆதாரமாக முன்வைப்பது, அவள் எழுதிய சிருங்கார நடையிலமைந்த பாடல் வரிகளை மட்டும் தானே தவிர, வேறு உருப்படியான எந்த தரவுகளையும் ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இது அப்பட்டமான ஆணாதிக்க வெறியின் உச்சம். இன்றைய காலத்தில் கூட ஒரு பெண், ஆண் துணையில்லாமல் தனியாக நின்று வாழ்வில் பொருளாதார வளர்ச்சியை எட்டினால், “இவள் என்னவெல்லாம் செய்து சம்பாதித்திருப்பாளோ” என்று ஆணாதிக்க பொறுக்கிகள் எப்படி எல்லாம் மட்டம் தட்டி வார்த்தைகளால் வேசையாக்கி கேவலப்படுத்த பார்ப்பார்களா, அதற்க்கு கொஞ்சமும் சளைக்காமல் தான் இப்பொழுதும் ஆண்டாளின் மீது தங்களின் வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு கல்வி மறுக்க பட்டிருந்த காலத்தில், டாகடர் முத்துலட்சுமி ரெட்டி எவ்வாறெல்லாம், கடுமையான வசைகளுக்கெல்லாம் ஆளானரோ அதே தான் இப்பொழுது பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் கோதை நாச்சியாருக்கு செய்து கொண்டிருப்பது.

    ௨) இதனை வைத்து என்னவெல்லாம் ஆதாயம் அடைய முடியுமோ, அதை முடிந்த அளவு கச்சிதமாக இரண்டு பக்கங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹெச்.ராஜா போன்ற கேடுகெட்ட இழி பிறவிகளும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இதனை வைத்து எப்படியாவது இங்கே காலூன்றிவிடலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இவர்கள் யாருக்கும் ஆண்டாளின் மீது கொஞ்சமும் அன்போ, அக்கறையோவெல்லாம் கிடையாது. இவர்கள் நினைத்திருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக ஆக்கி இருக்காமல் செய்திருக்கலாம். மேலே, நெப்போலியன் என்கிற பதிவர் குறிப்பிட்டது போன்று இவை அனைத்தும் கலவரத்தை ஏற்படுத்தி தங்களின் அரசியலை போனியாக்க உதவும் மாடல்கள் அவ்வளவே.

    அதற்க்கு சற்றும் குறைவில்லாமல், தங்கள் அரசியலை, கருத்தியலை முன்னெடுக்க இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பாக ம.க.இ.க, தி.க போன்ற முற்போக்குகள் இதனை பயன்படுத்தினார்கள். அந்த வகையில் பார்த்தால் ஆண்டாள் இவர்களும் ஒரு நல்ல துருப்புசீட்டாகி விட்டாள். கோவன் பேசியது மிகவும் அநாகரீகமான ஒன்று தான். இந்துத்துவா இயக்கங்களையும், பார்ப்பன சக்திகளையும் அம்பல படுத்த போகிறோம் என்கிற பெயரில் ஆண்டாளையும் சேர்த்து நன்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். இவர்கள் நினைத்திருந்தால், ஆண்டாளை தவிர்த்து பார்ப்பன, இந்துத்துவா இயக்கங்களை மட்டும் தனியா வைத்து உரித்தெடுத்திருக்கலாம். ஆனால், இவர்களின் இலக்கில் ஆண்டாள் தான் முக்கியமாக இருக்கிறாள் என்பது இவர்களின் காணொலியை பார்த்த பொழுதே புரிந்து கொண்டேன். சரி, இப்போது கேட்கிறேன் கோவன் அவர்களே, “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” என்று கேட்டீர்களே, நீங்களும் உங்களின் கும்பலும் சேர்ந்து, எங்கள் தமிழ் மகளை தெருவில் இழுத்து விட்டு நன்றாக செய்து விட்டீர்களே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள். இது தொடர்பாக நீங்கள் என்ன ஆய்வு செய்து, என்ன உண்மையை கண்டறிந்து கிழித்து விட்டீர்கள். கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம். ஆண்டாளின் கவிதையை இதற்க்கு முன்பு தாங்கள் படித்ததாவது உண்டா..

    ௩) அன்று பெரியாருக்கு தமிழர்களின் தொன்மமான கண்ணகி கிடைத்தாள், இன்று ம.க.இ.க விற்கு ஆண்டாள். நல்ல கூட்டணி, நல்ல ஒற்றுமை. நீங்கள் இந்துமதத்தை, சாதியை, பார்ப்பனியத்தை அவர்களின் இலக்கியமான மனுதர்மம், பகவத் கீதை, வேதம் போன்றவைகளை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து விட்டு போங்கள். ஆனால், எங்களின் தமிழ் அடையாளத்தை சிதைக்க நினைத்தால் நிச்சயம் இதில் தோல்வி அடைய போவது தாங்கள் தான். அது மட்டும் உறுதி.

    இறுதியாக, இதற்க்கு மேல் கோதை நாச்சியாரை பற்றி பேசுவதாக இருந்தால், தக்க ஆதாரம் இருந்தால் அதன் அடிப்படையில் பேசவும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று வந்தவன் போனவன், கண்ட இத்துப் போனவனின் புத்தகத்தில் உளறி கொட்டியதை எல்லாம் இனியும் நீங்கள் கூறினால்…. கூறினால்…….. கூறினால் ……………. ஒன்றுமில்லை, உங்களை அஃறிணையாக நினைத்து கடந்து போவது ஒன்று மட்டும் தான் ஒரே வழி. நன்றி.

    • வினவு கூட்டங்களை பொறுத்தவரையில் பெண் என்பவள் ஒரு போக பொருள், அவர்களின் பார்வை அதன் அடிப்படையிலேயே இருக்கும், இவர்களிடம் காதல் அன்பு பற்றி பேசுவதே வீண் வேலை.

      பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொல்லும் பெரியார் வழி வந்தவர்களுக்கு காதலை பற்றி ஒன்றுமே தெரியாது அவர்களுக்கு காமம் ப்ரோனோ என்பது தான் தெரியும்.

    • ஹச் ராஜாவாவது ஆண்டாளை பற்றி பேசியவரை தேவரடியார் மகனாக தான் சொன்னார்… இந்த ரெபெக்கா அம்மா என்ன சொல்றாங்க பாருங்க…..அஃறிணையாக நினைத்து கடந்து போவாங்களாம்…அப்படியே போறப்ப… ஆண்டாள் மேட்டரில் எதுக்கு ஹிஸ்டீரியா வந்த மனநோயாளி போன்று இந்த பெண் மணி கத்தனும் என்ற விசயத்தின் உளவியலையும் கொஞ்சம் அவதானித்து விட்டு நாம நம்ம விசயத்தை பார்க்கலாம் என்று இருக்கேன்….தேவரடியார் என்ற சமுக முறைமையை உருவாகியது யார் என்றால் இதே பார்பன பண்பாட்டு விசிலடித்தான் குஞ்சுகள் தான். இப்ப ஆண்டாள் அந்த வரையறைக்குள் வரும் போது இது காரும் அனுப்வித்துகொண்டு இருந்த சமுக சிறப்பு வாய்ந்த படிநிலை புறகணிக்கபட்டு பார்பனர்களுக்கும் அதே தேவரடியார் என்ற பட்டம் சுமத்தப்டுகிறதே என்ற வலியை தவிர வேறு ஏதும் இருபதாக தெரியவில்லை.தேவரடியார் என்று ஒரு சாதியையே வேலை அடிப்டையில் உருவாகிய பார்பன கூட்டம் இப்ப தனக்கு அந்த பட்டம் ஆண்டாள் மூலமாக வரும் நிலையில் ஊளையிட்டுகொண்டு இருக்கு… அந்த ஊளையின் மவுத் பீஸ் தான் இந்த ரெபெக்கா மேரி போல….

      “””””””””இறுதியாக, இதற்க்கு மேல் கோதை நாச்சியாரை பற்றி பேசுவதாக இருந்தால், தக்க ஆதாரம் இருந்தால் அதன் அடிப்படையில் பேசவும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று வந்தவன் போனவன், கண்ட இத்துப் போனவனின் புத்தகத்தில் உளறி கொட்டியதை எல்லாம் இனியும் நீங்கள் கூறினால்…. கூறினால்…….. கூறினால் ……………. ஒன்றுமில்லை, உங்களை அஃறிணையாக நினைத்து கடந்து போவது ஒன்று மட்டும் தான் ஒரே வழி. நன்றி.
      “””””””””””””””””””

      ரெபெக்காவின் இந்த மனபானமைக்கு ஹச் ராஜாவே எவ்வளவோ தேவலாம்…

    • ரெபெக்கா மேரி,

      பொதுஇடத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் தப்பாக பேசிட்டார் என்பதனை மனதில் வைத்துக்கிட்டு மொத்த ஆட்டோ டிரைவரும் அப்படி தான் என்று வினவுக்கு வந்து இழிவு செய்த புனித ஜென்மம் அல்லவா நீங்க…! இப்ப ஒரே ஒரு கேள்வி தான் என்கிட்டே இருக்கு உங்களை நோக்கி கேட்க….!

      எவனோ ஒரு ஆண்டாளை மொரட்டு தனமாக ஆராதனை செய்யும் பொருக்கி, ஆண்டாளின் ஆபாச பாடலை(விவாதத்துக்காக இங்கே அந்த பாடல் உங்களாலும் என்னாலும் பதவு செய்யபட்டு உள்ளது) உங்களை கிண்டல் செய்ய படறான் என்றால் அதில் உள்ள, அந்த பாடலில் உள்ள தமிழை ரசிப்பீரா? இல்ல அந்த பாடலில் உள்ள ஆபாச கருத்தை அடையாளம் கண்டு அவனை உதைபீரா? செருப்பால் அடிபீரா?

      மேற்கண்ட நிகழ்வின் காரணமாக அடுத்தாக அவனை போன்ற அனைத்து ஆண்டாள் மொரட்டு பக்தர்களும் தவறானவர்கள் என்ற முடிவுக்கு வருவீர்களா?

    • திரும்ப . . திரும்ப . . . கூறியதையே கூறாமல், நாட்டாமை மாதிரி ‘இந்த சாட்சியை ஒத்துக்க முடியாது’ என்று கூறாமல், இங்கு கருத்துக்களை பதிவு செய்திருக்கிற நண்பர்களுக்கு சரியான பதிலடி கொடுங்களேன் பார்ப்போம்!
      முத்துலட்சுமி அம்மாவின் தேவதாசி முறை ஒழிப்பு சட்ட மசோதாவிற்கு துணை நின்றதே பெரியாரும் அவரது இயக்கமும் தான். உங்களுக்கு வரலாறு தெரியாதா, இல்லை எங்களுக்கு தெரியாது என நினைத்து விட்டீர்களா?
      // “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” //
      என்று தோழர்கள் கேட்பது அவர்கள் ஆண்டாளுக்காக வாதிடுகிறார்கள் என்று புரியவில்லையா?
      ஆண்டாளுக்கான உங்களது வாதத்தில் மணிகண்டன்களின் சாயல் தெரிகிறது.

  13. வினவு கூட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான், முதலில் காதலித்து பாருங்கள் பிறகு நீங்கள் ஆண்டாளின் காதலை தானாகவே உணர்ந்துகொள்வீர்கள். நாம் காதலித்த பெண்ணையே திருமணம் செய்யும் போது காதல் காமம் பற்றிய உண்மையான அர்த்தமும் மகிமையும் புரியும்.

    • அது தான் சொலிகிட்டு திரியிரானே ஒரு பேமானி…இந்து மக்கள் கட்சிகாரன்….. பிப்ரவரி 14 அன்று காதலர்கள் தெருவில் நடந்தால் உடனே கல்யாணம் செய்துவைப்பாமே ! அவனிடம் போய் சொல்லுங்க மணி…..!

  14. பெரியாரிஸ்டுகள் தொடங்கி அல்லடை.. சில்லாட்டைகள் வரை அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டாக கூறும் ஒரே விடயம் ” 15 வயதிற்குள் ஆண்டாளால் எப்படி இதை போன்றதொரு சிருங்கார நடை கொண்ட கவிதை எழுத முடியும் என்பது தான். முதலில், இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களோடு, ஆண்டாளை ஒப்பிட்டு பேசுவதே தவறு. ஆண்டாளின் காலம் ஏழாம் நூற்றாண்டு, 12 13 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். கண்ணகிக்கு திருமணம் ஆகும் பொழுது அவளின் வயது வெறும் 15 தான். மதுரையை எரித்த பொழுது 20 இருக்கும் அவ்வளவே. 35 அகவைக்குள்ளாகவே அவர்கள் பேரக் குழந்தைகளை பார்த்து விடுவார்கள். அறுபதை கடக்கும் முன்பே கொள்ளு பாட்டிகள் ஆகி விடுவார்கள். இந்த நவீன முதலாளித்துவ கால கட்டத்தில் நின்று கொண்டு இதனை நினைத்து பார்க்க முடியுமா. அப்படி மீறி நினைத்து பார்த்தல் என்பது முட்டாள் தனமாகும். ஆகவே, அன்றைய காலகட்டத்தில்(இன்றைய கால கட்டத்திலும் கூட) காதல் உணர்வு என்பது பதினைந்து வயதிற்குள்ளாகவே ஒரு பெண்ணுக்கு வருவது இயல்பான ஒன்று தான்.

    கோதை தன்னுடைய கல்வியை, கவி பாடும் திறனை வெகு சீக்கிரம் பெற்றிருக்கிறாள், இன்று கூட 15 வயதை தொடாத எவ்வளவோ சிறார்கள் இலக்கியத்தில்,அறிவியலில் வயதிற்கு மீறி பெரிய சாதனைகளை செய்வதில்லையா? அதனை போன்று தான் கோதையின் கல்வியும் தமிழ் அறிவும். அவர் தன் தந்தை சிறு வயது முதலே தமிழையும், கண்ணன் மீதான பக்தியையும் ஒரு சேர தன் தந்தை பெரியாழ்வாரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

    பக்தியில் உச்ச நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உன்னதம் இன்னதென்று தெரியும். உண்மையான பக்திக்கு பாலின ஆண், பெண் என்கிற பாகுபாடென்பது கிடையாது. இறை அடியவர்களுக்கென்று எந்த இலக்கண நிபந்தனைகளும் கிடையாது. இருந்தாலும், கோதை தன்னுடைய இலக்கண ஆசான் தொல்காப்பியர் வகுத்த இலக்கண நெறியின் படி வழுவாமல் நின்று தன் கவிதைகளை யாத்தாள். மற்றைய ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்பிடும் பொழுது, வடமொழி சொற்களை அதிகம் சேர்க்காமல், மேலும் வடமொழி ஓசைகளை உள்ளே புகுத்தாமல் மிகவும் அழகான செவ்வியலான தமிழில் தன்னுடைய பாடல்களை உருவாக்கி இருக்கிறாள். மொழியின் இலக்கணத்தை பழுதற கற்றவர்களால் தான் அவ்வாறான வெண்பாக்கள் இயற்ற கூடும்.

    கோதை, தான் இயற்றிய பாடல்கள் அனைத்திலும் நாயக-நாயகி பாவத்தையே கையாள்கிறாள். தொல்காப்பியரின் பாணியில் கூற வேண்டுமாயின் தலைவன் தலைவி என்கிற பாவனையில் நின்று அரங்கனை பாட்டுடை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் தான் எண்ணி பாடல் இயற்றுகிறாள்( நன்றாக கவனிக்கவும், தலைவியாகத் தானே தவிர, தாசியாக அல்ல ) அப்படி கோதை உருவாக்கிய பல நூறு பாடல்களில் ஒரு ஏழு அல்லது பத்து பாடல் வேண்டுமானால் சிருங்கார கவி ரசம் பொங்க இருக்கலாம். பக்தியின் பரவச நிலை மேலிடும் பொழுது வரும் உணர்வு நிலையில் இருந்து பிறக்கும் சொற்கள் தான் அவை. இதை உணர உண்மையான பக்தி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். சூனியத்தில் உழலும் நாத்திக பதர்களால் அவைகளை எப்படி உணர முடியும். அவர்களுக்கு, மேற்படி பாடல்கள் கிளுகிளுப்பூட்டும் காம காளியாட்டங்களாகவும், ஆபாச வருணனைகளாகவும் தெரிவதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை.

    நான் ஒன்று கேட்க்கிறேன், சிருங்கார நடையில் பாடல் புனைந்தாள் என்பதற்காக, அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டுமென்றால், இதனை போன்றே பல ஆண் கவிஞர்களும் இன்ப நடையில் அதே நாயக நாயகி பாவனையில் பாடி இருக்கிறார்களே அப்போது அவர்களை என்ன சொல்வது. அதை விட, இந்து மத கோவில்களில் உள்ள சிற்பங்களில் எவ்வளவோ நிர்வாண சிற்பங்கள் இருக்கின்றனவே, அவைகளை எல்லாம் என்ன தேவதாசிகள் தான் செதுக்கினார்களா ? அல்லது அதை செதுக்கிய சிற்பிகள் எல்லாம் தேவதாசர்களாக இருப்பார்களோ.

    ஐரோப்பிய மறுமலர்ச்சி காலமான மத்திய காலத்தை சார்ந்த லியானார்டோ, வான் காஹ், ரெம்பரான்ட்,மைக்கேலேஞ்சலோ போன்ற எவ்வளவோ ஓவியர்கள் வரைந்து தள்ளிய நிர்வாண படங்கள் எல்லாம் ஆபாச குப்பைகள் ஆகுமா, அவற்றில் எவ்வளவோ ஓவியங்கள் பிரான்ஸ் இத்தாலி நாட்டு தேவாலயங்களில் கொலுவீற்றிருக்கின்றன. அவர்களுக்கு தெரிகிறது எது ஆபாசம், எது கலை என்பது. கோவன் போன்ற ஆட்கள் எல்லாம் அங்கு செல்லுபடியாக மாட்டார்கள். ஆக, ஓவியத்தை என்ன கண் கொண்டு பார்க்கிறோமோ, அதே அளவு கோலுடன் தான் ஒரு கவியின் உள்ளத்தையும் நாம் ரசிக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் ஆபாசமும் அருவருப்பும் பார்ப்பவரின் மனதினை பொறுத்தே இருக்கின்றது. ஆண்டாளின் வரிகள் ஆபாசமாக தெரிந்தால் அது அதனை படிப்பவரின் மன வக்கிரம் தானே ஒழிய, ஆபாசம் என்பது அவளின் படைப்பினில் அல்ல.

    ரோட்டில் விற்கும் ஆபாச புத்தகமும், கோதையின் கவியும் உங்களுக்கு ஒன்றென தெரிந்தால் ஒன்று உங்களுக்கு நல்லதற்கும், தீயதற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் உங்களின் கண்களை மறைக்கின்றது என்று தான் அர்த்தம்.

    ரோட்டில் விற்கும் தப்பான புத்தகத்திலும் ஆபாசம் தான் இருக்கிறது, ஆண்டாளின் பாடல்களிலும் இருப்பதும் அதே ஆபாசம் தான். ஆகவே, இரண்டும் ஒன்று தான் என்று பேசுவது எப்படி இருக்கிறது என்றால், என் தாய்க்கும் மார்புகள் இருக்கிறது, விபச்சாரிக்கும் மார்புகள் இருக்கிறது ஆகவே இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது ஒன்றுதான் என்று பேசுவதை போல் உள்ளது. புரிந்தவர்கள் திருந்தினால் சரி.. இதற்க்கு மேல் கூற ஒன்றுமில்லை…. ஆண்டாளை இனியும் அவதூறு பேசுவோர் பேசி விட்டு போகட்டும், எத்தனை ஆயிரம் கோவன்கள் வந்தாலும் சரி, எத்துனை லட்சம் பெரியாரிஸ்டுகள் பொங்கினாலும் சரி.தமிழுள்ள வரை கோதையின் பெயர் என்றும் பெருமை பட நிலைத்து நிற்கும்.அதனை எந்த கொம்பனாலும் ஒன்றும் அசைக்க முடியாது..

    கைப்பொருள்கள் முன்னமே
    கைக்கொண்டார், காவிரிநீர்
    செய்ப்புரள வோடும்
    திருவரங்கச் செல்வனார்,
    எப்பொருட்கும் நின்றார்க்கு
    மெய்தாது, நான்மறையின்
    சொற்பொருளாய் நின்றாரென்
    மெய்ப்பொருளும் கொண்டாரே.

    வாழ்க கோதை நாச்சியார் … வாழ்க அவளின் தமிழ்…

    • ரெபெக்கா மேரி அவர்கள் , திருநெல்வேலி வட்டார வழக்கில் அல்லடை.. சில்லாட்டை என்று வினவில் விவாதிப்போர திட்டுவதனை அனுமதிப்பதில் வினவுக்கு அப்படி என்ன இன்பமோ தெரியவில்லை… சரி நாமும் அவரை அப்ப்படியே பாராட்டி விவாதிகலாம் என்றால் மேடை நாகரிகமும், விவாத நெறிமுறைகளும் நம்மை தடுக்குது… அதனால புத்தன் வழியில் நாம் அந்த “அல்லடை.. சில்லாட்டை” ஆகிய வார்த்தைகளை ஏற்காமல் ரெபெக்கா மேரிக்கே அவற்றை பூமாலையாக திருப்பி அனுப்பிவைத்துவிட்டு விவாதத்தை தொடரலாம்…

      தமிழை தந்தையிடம் கற்றார் என்பதில் எல்லாம் இங்கே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நினைகின்றேன்… அவர் எழுதிய அந்த காமரசம் சொட்டும் சிருங்கார கவி நடையை எப்படி அந்த சிறுமி அறிந்தார் என்பதே இங்கே கேள்வி…

      ரெபெக்காவின் நீண்ட நெடிய விளக்கம் எல்லாம் மேற்பார்வைக்கு சரியா தான் தோணுது… ஆனாலும் அதில் என்ன பிரச்னை என்றால் ஆண்டாள் என்ன அந்த சிருங்கார பாடல்களை பாடும் தருணத்தில் திருமணம் ஆனவரா? திருமணம் ஆகி தான் அவர் திருவில்ல்லிபுத்தூரில் இருந்து திருவரங்கம் சென்றாரா? இந்த கேள்விகள் எல்லாம் எப்படி எழாமல் இருக்கும்? திருமணம் ஆனவர் என்று வைத்துகொண்டால் கூட கணவன் இருக்கும் போதே கடவுள் உடன் சல்லாபம் செய்ய முனைந்தார் என்ற பதில் தான் அவர் சிருங்கார பாடலின் ஊடாக நாம் உணர முடியுது…

      திருமணம் ஆகாதவர் என்றால் அப்படி திருமணம் ஆகாதவர் எப்ப்படி பாலியல் பற்றி வெளக்கமாக சிருங்கார நடையில் எழுதமுடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை… இதற்கு அல்லடை.. சில்லாட்டைகளின் பேட்டன்ட் ரைட் வைத்து உள்ள அவற்றுக்கு சொந்தகாரர் ரெபெக்கா மேரி பதில் அளிபாரா?

      //பெரியாரிஸ்டுகள் தொடங்கி அல்லடை.. சில்லாட்டைகள் வரை அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டாக கூறும் ஒரே விடயம் ” 15 வயதிற்குள் ஆண்டாளால் எப்படி இதை போன்றதொரு சிருங்கார நடை கொண்ட கவிதை எழுத முடியும் என்பது தான். முதலில், இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களோடு, ஆண்டாளை ஒப்பிட்டு பேசுவதே தவறு. …………தமிழ் அறிவும். அவர் தன் தந்தை சிறு வயது முதலே தமிழையும், கண்ணன் மீதான பக்தியையும் ஒரு சேர தன் தந்தை பெரியாழ்வாரிடமிருந்து கற்றுக் கொண்டார். //

    • ரெபெக்கா மேரி, ஆண்டாளின் பாடல்களில் உள்ள வடிவத்திலே ஏதும் யாரும் குறை சொல்லவில்லை…ஆண்டாளின் பாடல்களின் வடிவம் தமிழ் இலக்கண நெறிக்கு உட்பட்டே உள்ளது மேலும் வட மொழி சொற்கள் தொல்காப்பிய விதிகளுக்கு ஏற்ப தமிழ் படுத்தப்பட்டு உள்ளது என்பதனை எல்லாம் ஏற்றாலும்…மேலும் பார்பனர்கள் பூஜிக்கும் வைணவ கோவில்களில் பாடப்படும் அந்த சிருங்கார காமரசம் சொட்டு பாடல்களில் பச்சையாக ஆபாசம் குடியிருக்க அவைகள் வடமொழியுடன் இயைந்து பாடப்பட்டு உள்ளது என்பது உண்மையாகவே இருப்பினும்…, இங்கே விவாதத்துக்கு உரிய விசயம் என்னவென்றால் அந்த ஆண்டாள் பாடல்களில் உள்ள உள்ளடக்கம் மட்டுமே!

      மொத்தம் உள்ள முப்பது திருப்பாவை பாடல்களில் கிட்டத்தட்ட பதினைந்து பாடல்கள் சிருங்கார நடை கமிழபாடபட்டு உள்ளது என்ற நிலையில் அத்தகைய உள்ளடக்க போக்கு தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்பட்டது இல்லையே! ஆண்டாளின் பாடல்களில் உள்ள அப்பட்டமான ஆபாசத்தை பக்தி பரவசத்துடன் ஒப்புமை காணும் போக்கு என்பது காமத்தின் உச்சத்தை பக்தி பரவசத்துடன் ஒப்பிடும் நிலை தானே தவிர வேறு ஏதுமில்லை….

      இறைவனை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் ஒப்புமை செய்து பாடல்களை இயற்றும் போக்கு அதிலும் சதிராட்ட பாடல்கள் ஊடாக ஆபாசத்தின் உச்சத்துக்கே செல்லலும் என்பது தேவதாசிகளுக்கே உரியது தானே தவிர குடும்ப பெண்களுக்கான சமுக போக்கு அதுவன்று….ஆண்டாள் தேவதாசியும் அன்று , குடும்ப பெண்ணும் அன்று என்று ஒத்தைக்காலில் நின்று தவம் செய்யும் உங்களை போன்றவர்கள் தான் அவர் யார் என்று தக்க ஆவணங்கள் ஊடாக விளக்கவேண்டும்….

      //பக்தியில் உச்ச நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உன்னதம் இன்னதென்று தெரியும். உண்மையான பக்திக்கு பாலின ஆண், பெண் என்கிற பாகுபாடென்பது கிடையாது. இறை அடியவர்களுக்கென்று எந்த இலக்கண ………. நாத்திக பதர்களால் அவைகளை எப்படி உணர முடியும். அவர்களுக்கு, மேற்படி பாடல்கள் கிளுகிளுப்பூட்டும் காம காளியாட்டங்களாகவும், ஆபாச வருணனைகளாகவும் தெரிவதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. //

    • அதே கேள்வி தான் எதர் திசையில் மீண்டும் எழுகிறது…. ஆபாச பாடல்களை பாட ஆண் புலவர்கள் தான் வேண்டுமா? ஏன் அப்படி எழுதுபவர்கள் அன்றைய சமுகத்தில் ஆபாச சதிராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த தேவதாசிகளாக இருக்க கூடாது என்று ஏதேனும் சட்டம் இருந்ததா? கோவிலின் பெயரால் ஆபாச வெளியில் சுகம் கண்டஅரசர்கள் ,பார்பனர்கள் மற்றும் ஆண்டைகள்
      மகிழ அன்றைய சிற்ப கலைகள் உதவின என்றால் அதுவும் ஆபாசம் தான்… அதனை வடிவமைக்க தேவதாசிகள் தான் வரவேண்டும் என்ற தேவை இல்லையே!
      //நான் ஒன்று கேட்க்கிறேன், சிருங்கார நடையில் பாடல் புனைந்தாள் என்பதற்காக, அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டுமென்றால், இதனை போன்றே பல ஆண் கவிஞர்களும் இன்ப நடையில் அதே நாயக நாயகி பாவனையில் பாடி இருக்கிறார்களே அப்போது அவர்களை என்ன சொல்வது. அதை விட, இந்து மத கோவில்களில் உள்ள சிற்பங்களில் எவ்வளவோ நிர்வாண சிற்பங்கள் இருக்கின்றனவே, அவைகளை எல்லாம் என்ன தேவதாசிகள் தான் செதுக்கினார்களா ? அல்லது அதை செதுக்கிய சிற்பிகள் எல்லாம் தேவதாசர்களாக இருப்பார்களோ. //

    • தாய்மை என்ற நிலைவரும் போது பெண்ணின் மார்பகங்கள் குழந்தைக்கு பால்வழங்கும் கிண்ணங்கள் தான்…. அந்த பெண் ஆனடாளாக இருந்தாலும் அல்லது பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்….

      ஆபாசம் என்று வரும் நிலையில் அது யார் எழுதியதாக இருந்தாலும் ஆபாசம் தான்…

      //ரோட்டில் விற்கும் ஆபாச புத்தகமும், கோதையின் கவியும் உங்களுக்கு ஒன்றென தெரிந்தால் ஒன்று உங்களுக்கு நல்லதற்கும், தீயதற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் உங்களின் கண்களை மறைக்கின்றது என்று தான் அர்த்தம்.

      ரோட்டில் விற்கும் தப்பான புத்தகத்திலும் ஆபாசம் தான் இருக்கிறது, ஆண்டாளின் பாடல்களிலும் இருப்பதும் அதே ஆபாசம் தான். ஆகவே, இரண்டும் ஒன்று தான் என்று பேசுவது எப்படி இருக்கிறது என்றால், என் தாய்க்கும் மார்புகள் இருக்கிறது, விபச்சாரிக்கும் மார்புகள் இருக்கிறது ஆகவே இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது ஒன்றுதான் என்று பேசுவதை போல் உள்ளது. //

  15. ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஒன்றுமில்லை.

    ஆண்டாளை பற்றிய தேவதாசி சர்ச்சைகள் உருவானதும், அனைத்து முற்போக்கு மேதாவிகளும் கைகாட்டியது எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவனின் “bhakti movements in south india ” என்கிற நூலினை தான். ஆனால், மேற்படி நூலின் ஆசிரியரான எம்.ஜி.எஸ். நாராயணனே ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்தாள் என்பதற்கு எவ்விதமான வலுவான ஆதாரங்களும் கிடையாது, வெறும் அனுமானத்தின் அடிப்படையில் தான் அவ்வாறு கூறினோம் என்பதை தெளிவாக கூறிவ விட்டார்.. தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-

    எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அளித்த பேட்டி:

    கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒருதேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

    நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.

    கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?

    நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.

    கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

    நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்துதான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.

    கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒருபுரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?

    நாராயணன்: இது ஒரு அனுமானம்தான். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

    இதற்க்கான வீடியோ ஆதாரம்:- https://www.youtube.com/watch?v=ASUAnINM_jw

    ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஏதுமில்லை.. நூலினை எழுதிய நாராயணன் அவர்களே, இது வெறும் அனுமானம் தான் என்று கூறு விட்டார். இனி இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை..

    இதற்க்கு பிறகாவது முற்போக்கு மூடர்கள் தங்களின் தவறை திருத்தி கொண்டால் சரி. இல்லை என்றால் அசிங்கம் அவர்களுக்கு தான். கோவன் அவர்களே, இனி உங்களுக்கு தெரியாத விஷயங்களை பேசி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..

    • இவர்களின் முற்போக்கு எல்லாம் ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டும் தான், மற்ற மதங்களில் உள்ள தவறுகளை பற்றி வாய் கூட திறக்க மாட்டார்கள், கேட்டால் மதசார்பின்மை என்று பம்புவார்கள்.

    • ரெபெக்கா மேரி,

      இந்த வெண்ணைகள் அதாங்க எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் ஆகியோர் கட்டுரையை எழுத குறிப்புதவி நூலாக பயன் படுத்தியது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ். இருங்க விசயத்தை இன்னும் விரிவாக பார்கலாம்…

      ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform. அதற்கு அவர்கள் அந்த வெண்ணைகள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      ஹச் ராஜாவின் காவி கூட்டம் அடிக்க வந்த உடனே ,கழுத்தை அறுக்க வந்த உடனே இந்த எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் இருவரும் பின்வாங்குகின்றார்கள் என்றால் அதில் உள்ள வெளிப்படையான பாசிச அரசியல் மிரட்டலை கண்டு உணர முடியாத அளவுக்கா நீங்க முட்டாளாக, உங்க ஊர் பாசையில் , உங்க வார்த்தையிலேயே, எங்க ஊர் வட்டார வழக்கில் கூறுவது என்றால் பயனற்ற பன்னடையாக இருக்கீங்க?

      சரி சரி….., இப்ப விசயம் என்ன வென்றால் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் ஆகியோர் எழுதிய கட்டுரை எந்த நூலின் ஊடாக எழுதப்பட்டதோ அந்த நூலை(History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)) ஒருத்தரும் மறுதலிக்கவில்லையே… அந்த நூலை ஒருத்தரும் தப்பு என்று கூற முடியவில்லையே! மூல நூலை தவறு என்று நிருபணம் செய்யாதவரைக்கும் அந்த நூலை தங்கள் கட்டுரை எழுத குறிபுதவியாக பயன்ப்டுத்ய்யவ்ர்கள் இப்ப மறுகின்றார்கள் என்றால் அவர்கள் பேச்சு பாசிச காவிகளின் மிரட்டலின் பயத்தின் அடிப்படையானது தான்.

      ஆம் மூல நூலின் [History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)]அடிபடையில் ஆண்டாள் தேவதாசி தான்…

    • ஆண்டாள் ,திருவரங்கத்து கோவிலில் தேவரடியார் ஆனதற்கான ஆதாரம் :

      When she reached marriageable age, she refused to marry any one except
      the God_Ranganatha of the rirangam temple. The God appeared
      to the Alvar in a dream to declare before him his acceptance of
      the girl in marriage and ordered her to be brought to his residence
      at Srlrangam. Periyalvar took her there with great eclat and left
      her in her Lord’s house and returned to his quiet residence at
      SrTvilliputtur.

      From the page number 5 , History of Sri Vaisnavas by SIR SUBRAHMANYA AYYAR LECTURES

      ON THE HISTORY OF SRI VAISNAVAS , DELIVERED BY THE LATE MR. T. A. GOPINATHA RAO, M.A.,

      web link to download this book :

      https://ia802702.us.archive.org/7/items/MN40128ucmf_0/MN40128ucmf_0.pdf

    • ஹ ஹா…….. வடிவேலு மாதிரி வெட்டி உதாரு எதுக்கு ரெபெக்கா மேரி??இப்ப தான் ஆட்டமே ஆரம்பிக்கிறது…. மூல நூலை விட்டுவிட்டு அந்த நூலை குறிப்புதவியா பயன்படுத்தி அன்று கட்டுரை எழுதியவர்கள் (எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் )இன்று ஹச் ராஜாக்களின் அடிதடிக்கும் ஆபாச பேச்சுக்கும் பயந்து ஆமாம் ஆமாம் தப்பு தப்பு எங்க கட்டுரை தப்பு என்று மாறுக்கின்றார்கள் என்றால் அதனை நீங்களும் பிடித்துகொண்டு ஆதாரம் அஆதாரம் என்று உஞ்சல் ஆடுவீர்கள் என்றால் உங்களை போன்ற அல்லடையை வேறு எங்குமே பார்க்க முடியாதுங்க! அன்று கட்டுரை எழுத மூல நூலின் (History of Sri Vaisnavas -வைணவர்களின் வரலாறு) கருத்துகளை ஏற்றவர்கள் இன்று அதே கருத்தை மறுக்க என்ன ஆதாரத்தை முன் வைக்கின்றார்கள் இந்த கட்டுரையாளர்கள் இருவரும் என்று அவர்களிடம் நேர்காணல் எடுத்து கேட்டு சொல்லுங்க! ஹ ஹா… //ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஒன்றுமில்லை.//

      • ஏண்டா இப்படி என்ன பண்றேள். நோக்கு இது நன்னாருக்கா…
        விதேசி ரெபக்கா மேரியுடனும், இந்த கௌபாய் மணியுடனும் சேர்ந்து என்ன இப்படி பாடாய் படுதறேலே..நீங்க எல்லாம் நரகத்துக்கு போக….

        நான் என்ன பண்ணுனேன். கண்ணனின் லீலைக்கு ஏமாந்து அவனை காதலித்தது குற்றமா?நான் அவனை காதலிக்கும் போது நேக்கு தெரியாதேடா அவனுக்கு ரெண்டு போண்டாடிகளும் ஏகத்துக்கும் வைப்பாட்டிகளும் இருப்பாங்கன்னு…

        கையெடுத்து கும்புடுறேன் இதோட என்ன விட்டுடுங்கடா……..

  16. குமார் சொல்லி தெரிவதில்லை காமம்.

    காதலின் முக்கிய நோக்கமே உடல் உறவு தான், அதனால் தான் பெண்களை கண்டால் ஆண்களுக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கும் ஈர்ப்பு வருகிறது. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிர் இனங்களுக்கும் பொதுவான ஒரு இயல்பு.

    ஆண்டாள் கண்ணனால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார், அவனையே அடைய வேண்டும் என்று விரும்புகிறாள் அதன் வெளிப்பாடு தான் அவரின் பாடல்கள். கண்ணன் மீது காதல்வயப்படவில்லை என்றால் இம்மாதிரியான பாடல்களே எழுதி இருக்க மாட்டார்… பக்தி காவியங்களை தான் படைத்து இருப்பார்.

    மேலும் காம வயப்படுவது தவறில்லை, காமசூத்ரா உலகிற்கு சொல்லி கொடுத்த தேசம் இது, காஜுஹரோ கோவில் அமைத்த தேசம்… உடல் உறவை பற்றி தெரிந்துகொள்ள திருமணம் ஆகி இருக்க வேண்டும், முன் அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் நோக்கம் ஆண்டாளை பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்பதாகவே இருக்கிறதே ஒழிய அவரின் காதலை பற்றி புரிந்துகொள்ளும் எண்ணம் உங்களை போன்ற மனவக்கிரம் கொண்டவர்களிடம் இல்லை.

    • மணிகண்டன் என்னய்யா உளறிகிட்டு இருக்க? அப்புறம் எதுக்கு சென்சார் மயிறு மட்டை எல்லாம்? அப்புறம் எதுக்கு U , A ,U/A சாட்ரிபிகேட் எல்லாம்? பதின்ம வயது குழநதையை அழைத்துகொண்டு போய் காமஸூதிரா படத்தை பார்பீரோ நீர்? வெக்கம் சிறிதும் இல்லாமல் இப்படி உளறிகிட்டு இருந்தால் வினவில் உளறிகிட்டு இருந்தால் நல்லாவா இருக்கு மணி?

      • குமார், பள்ளிகளில் sex education கொண்டு வருவது பற்றி விவாதங்கள் நம் நாட்டில் நடந்து கொண்டு இருப்பது எல்லாம் உங்களுக்கு தெரியாது போல. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் HIV பாதிக்கப்பட்டவர்கள் 34 சதவீதம் பேர் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் என்று தெரிவித்து உள்ளது.

        உங்களை போல் ************* கெட்டு போவதை விட, டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு முறையான sex education கொடுப்பதில் தவறில்லை பல தவறுகள் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும்.

        மேலும் பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொன்ன ************************ கண்ணனை தவிர வேறு ஆண்மகனை நினையேன் என்று சொன்ன ஆண்டாளின் தூய காதலை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லாதவர்கள்.

        • ஆபாசத்துக்கும் , பாலியல் கல்விக்கும் வேறுபாடு தெரியா சிறுவனா நீர் மணிகண்டன்…(உமக்கு எல்லாம் இவ்வளவுதான் பதில் அளிக்கணும்… அவ்வளவு தான் நீர் ஓர்த்தி !)

    • மணிகண்டன்,
      ஆண்-பெண் உறவையும் காதலையும் வெறுமனே உடல் உறவிற்காக மட்டுமே நீவிர் பார்கின்ரீர்….அப்படித்தான் கிரிஷ்ணனும் பார்த்தான். இராமனும் பார்த்தான். பார்ப்பனர்களும் பார்த்தார்கள். ஆண்டாலும் அவர்களிடம் அகப்பட்டு கொண்டார்.

      ஆண்-பெண் என்றாலே உடல் உறவு தான் உமக்கு ஞாபகம் வருகிறது என்றால் உம்முடைய மாட்டு மூளையை தீவைத்து தான் கொளுத்த வேண்டும்.

      • செல்வம் நான் சொன்ன வார்த்தையை திரிக்க வேண்டாம். காதலின் அடிப்படை நோக்கமே உடல் உறவு என்றே சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் ஆண் பெண் உறவு என்று திரிக்கிறீர்.

        • அப்போ கிரிஷன்னிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள தான் ஆண்டாள் விரும்பியிருக்கிறார் என்பது உங்களது வாதம்….பாமா உருக்குமணிக்கு தெரியுமா? சரி விதின்னு அவுங்க விட்டுருக்கலாம்.

          ஏற்கனவே திருமணமான ஒருவனிடம் ஒரு சிறுமி செக்ஸ் வைத்து கொள்ள விரும்புகிறாள் என்றால் அதுக்கு பேரு காதலா? கர்மம் கர்மம்….

          ஏண்டா கிருஷ்ணா!! இப்படி மாட்டுமூளை கூடை இல்லாமல் கண்ட பேரு கண்டபடி பேசாறாலே…நோக்கு நன்னாருக்கா இது. இத நீ கேக்கப்படாதா?

  17. குமார் அகநானுறு பாடலில் ஒரு decent பாடலை உங்களுக்கு உதாரணம் சொல்கிறேன்

    யாரும் இல்லைத் தானே களவன்
    தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
    ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்,
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

    தலைவி திருமணத்திற்கு முன்பே தலைவனோடு உடல் உறவு கொள்கிறாள் ஆனால் அதற்கு சாட்சி யாரும் இல்லை என்று தோழியிடம் வருந்துகிறாள்.

    அகநானுறு பாடல்கள் பலவற்றில் திருமணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டு தலைவன் தலைவி உடல் உறவு பற்றி பல பாடல்கள் உள்ளது. மான் விடு தூது, மயில் வீடு தூது என்று காதலால் இப்படி எல்லாம் வருந்துகிறேன் உடனே தலைவனை வர சொல் என்று சொல்லும் பாடல்கள் பல உண்டு.

    • நீர் எழுதியுள்ள அகநானுற்று , குறுந்தொகை பாடலுக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கின்றேன்….படிச்சிட்டு அதில் என்ன ஆபாசம் இருக்கு என்று கூறு பார்கலாம்…

      “தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர். தலைவன் ஒருவனே இருந்தான். அவனே தான் கூறிய சூளுறவினின்றும் தப்பி ஒழுகுவானாயின் நான் யாது செய்ய வல்லேன்? அவ்விடத்து அச்சமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தான் உண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது,” என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.”

      இந்த பாடலில் என்னய்யா ஆபாசம் இருக்கு….! ? ஆண்டாளின் பாடல்கள் உடன் வேண்டுமானால் ஒப்புமை செய்து பார்த்துக்கோ ராசா… !

      இந்தா பிடி உன் ஆண்டாளின் அங்க அசைவுகளுடன் கூடிய ஆபாச பச்சை ஆபாச பாடல்…!

      புணர்வதோர் ஆசையினால்
      என் கொங்கை கிளர்ந்தது

      அவரைப் பிராயம் தொடங்கி
      ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
      துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
      தொழுதேன்…

      கபிலன் எழுதிய குறுந்தொகை பாடல் 25 உன் ஆண்டாள் பாடலுடன் ஒப்புமை செய்துகொள் மணிகண்டன்….!

      • பாராட்டுக்கள் குமார்! உங்கள் வாதங்கள் செழுமையாக இருக்கின்றன.
        ரெபெக்கா மேரியின், தாயுடன் பாலியல் தொழிலாளியின் ஒப்பிடு விதம் சரியானதன்று. உயிரியல் ரீதியான ஒற்றுமையை வைத்து அவர் ஒப்பிடுகிறார். ஆனால் செயல்பாட்டில் முறை தவறி நடக்கும்போது ஒரு தாய் பாலியல் தொழிலாளிக்கும் கீழானவளாகி விடுகிறாள். பாலியல் தொழிலாளிகளும் தாயாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

        மேலும் அவர் கூறும் நிர்வாண ஓவியங்களையும் ஏன் ஆபாசமென்று கூறக்கூடாது? வரைந்தவர்கள் ஏன் பெண்களை மட்டுமே வரைகிறார்கள்? ஆண்களை ஏன் தனியாக வரைவதில்லை?

        அவர் பெண்களை விபச்சாரிகள் என்று இழிவு செய்கிறார். நீங்கள் பாலியல் தொழிலாளிகள் என்று மதிப்பளிக்கிறீர்கள். இதிலேயே தெரிகிறது வித்தியாசமும் மேட்டிமைத்தனமும். இவர் தோழர் கோவனுக்கு பெண்களை மதிப்பது பற்றி பாடம் எடுப்பது, “சாத்தான் திருக்குறள் பாடம் எடுப்பதுதான்” ஞாபகத்திற்கு வருகிறது.

        • //ரெபெக்கா மேரியின், தாயுடன் பாலியல் தொழிலாளியின் ஒப்பிடு விதம் சரியானதன்று. உயிரியல் ரீதியான ஒற்றுமையை வைத்து அவர் ஒப்பிடுகிறார்…//

          நான் ஒப்பீடு செய்தது உடல் உயிரியல் ரீதியாக மட்டுமல்ல , குணத்தின் அடிப்படையிலும் தான்.

          //அவர் பெண்களை விபச்சாரிகள் என்று இழிவு செய்கிறார். நீங்கள் பாலியல் தொழிலாளிகள் என்று மதிப்பளிக்கிறீர்கள்….//

          விபச்சாரம் என்பது இழிவான ஒன்று தான், அதிலென்ன உயர்வு வேண்டி கிடக்கிறது. கொள்ளை அடிப்பது, கஞ்சா விற்பது , திருடுவது போன்ற சமூக குற்ற செயல்கள் எப்படி தொழில் ஆகும்?? சமூகத்திற்கு எந்த தீங்கும் நேரா வண்ணம், சுய முயற்சியினால் நம் குடும்பத்தின் வளர்ச்சிக்காக நியாயமான முறையில் பணம் ஈட்டுவதுதான் தொழில் என்பது. விபச்சாரம் என்பது “தொழில்” தானா என்பதை மூச்சுக்கு முன்னூறு முறை எங்கள் கம்யூனிச சமூகத்தில் விபச்சாரமே இருந்ததில்லை இருக்கவும் இருக்காது என கூறும் உங்களின் கம்யூனிச தோழர்களிடம் கேட்டு சொல்லவும். அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

          • பெண்கள் பாலியல் தொழிலை விரும்பி தேர்ந்தெடுக்கிறார்களா? இல்லை தள்ளப்படுகிறார்களா? விரும்பி தேர்ந்தெடுத்தால் நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் உண்மை அப்படியில்லையே! இந்த சமூக சூழலில் வேறு வழி இல்லாமல் அம்மாதிரி முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். பின்னர் எப்படி அது இழிவாகும்? உங்கள் கூற்றுப்படி மலம் அள்ளும் தொழிலாளர்கள் கூட இழிவானவர்கள்தானோ!

            // மூச்சுக்கு முன்னூறு முறை எங்கள் கம்யூனிச சமூகத்தில் விபச்சாரமே இருந்ததில்லை இருக்கவும் இருக்காது என கூறும் //

            கம்யூனிசத்தில் விபச்சாரம் இருக்காது என்பதில் உங்களுக்கு என்ன வயித்தெரிச்சல் . . .?

          • நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சமுகத்தில் ஆண்களின் பாலியல் தேவைகளை தீர்க்கும் பெண் பாலியல் தொழிலாளர்களின் செயல் சமுக குற்றம் என்றால் அதே ஆண்களின் பாலியல் உணர்வுகளை தன் ஆபாச பாடல்கள் ஊடாக ,திரைகதை வசனம் ஊடாக தூண்டிவிட்டு நிற்கும் ஆபாசபாவை ஆண்டாள் , வைரமுத்து ,வாலி…சுஜாதா ….., போன்றவர்களின் செயல் சமுக குற்றம் ஆகாதா ரெபெக்கா மேரி? சமுக குற்றம் தான்… இவர்களுக்கு மட்டும் எதுக்கு சமுக அங்கிகாரம் கொடுக்கபடுகிறது ? அப்புறம் ஏன் ஆபாச ஆண்டாளின் ஆபாசபாவை பாடல்களை பிடித்துகொண்டு தொங்க வேண்டும் நீங்க? செலக்டிவாக பாலியல் தொழிலை மட்டும் குறை சொலவது ஏன் ? அதே நேரத்தில் அதே பாலியல் தொழில் சார்ந்த பிற உப தொழில்களான ஆபாச பாடல்கள் மற்றும் ஊடகங்கள் குறை சொல்லாமல் ஆண்டாளை ஆராதனை செய்வதன் மூலமாக அவற்றை ஆதரிப்பது ஏன் ரெபெக்கா?

        • எப்பா அறிவு கொழுந்துகளா “decent” வார்த்தையை எழுதி இருக்கிறேனே அதை படிக்க மாட்டிங்களாப்பா?

          என் வாதம் சங்க தமிழ் இலக்கியங்களில் காமத்தை பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறார்கள் என்று சொன்னேன் அதற்கு ஒரு decent பாடலை உதாரணமும் காட்டினேன்.

          என் கேள்வி எல்லாம் சங்க தமிழ் பாடலில்களில் காமத்தை பற்றி எழுதியவர்களை எல்லாம் ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது போல் அவர்களையும் பேச போகிறீர்களா என்பதே ? ஆனால் அதை பற்றி ஒரு வார்த்தையை காணும்.

          கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பனை பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார்கள் ஆனால் ராமனை பற்றியும் சீதையை பற்றியும் அவதூறு பேச வந்து விடுவார்கள்.

          • அட லூ சு மணிகண்டன்…, கம்ப ராமாயணத்தை பெரியார் காம சரம் சொட்டும் ராமாயணம் என்று எப்போதோ அம்பலப்டுத்திய செய்தியை உமக்கு நான் அளித்து பல நாட்கள் ஆகின்றனவே… உமது மாட்டு மூளையில் அந்த செய்தி ஏறவே இல்லையா?

          • குடிபோதையில் உளறிகிட்டு உள்ளீரா மணிகண்டன்? உமக்கான பதிலை பின்னுட்டம் 21.1 ல் நான் அளித்து 24மணி நேரங்கள் ஆகிவிட்டனவே மணி? உமக்கு என்ன புரிந்தலில் குறைபாடா? என் பதிலை படித்துவிட்டு வந்து பேசுமையா! (நீர் எழுதியுள்ள அகநானுற்று , குறுந்தொகை பாடலுக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கின்றேன்….படிச்சிட்டு அதில் என்ன ஆபாசம் இருக்கு என்று கூறு பார்கலாம்…)

            //என் கேள்வி எல்லாம் சங்க தமிழ் பாடலில்களில் காமத்தை பற்றி எழுதியவர்களை எல்லாம் ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது போல் அவர்களையும் பேச போகிறீர்களா என்பதே ? ஆனால் அதை பற்றி ஒரு வார்த்தையை காணும்…//

          • என்னுடைய வாதமும் அதே தான் மணிகண்டன்… தமிழ் அக நூறு பாடல்களில் காதல் ,களவொழுக்கம் மற்றும் காமத்தை பற்றி பேசி இருக்காங்க! ஆனால் அந்த பேச்சு மற்றும் பாடல்கள் அறிவுரை சார்ந்தது தானே தவிர ஆண்டாளின் ஆபாசபாவை போன்று பெண்களின் அங்க அசைவுகளை உடலுறவின் போது வெளிகாட்டும் ஆபாச எழுத்து அல்லவே அவைகள்…! சரி அகநாற்றில் இன்டிசன்டான ஒரு பாடலை உதாரணமாக காட்டு பார்கலாம் ?

            //என் வாதம் சங்க தமிழ் இலக்கியங்களில் காமத்தை பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறார்கள் என்று சொன்னேன் அதற்கு ஒரு decent பாடலை உதாரணமும் காட்டினேன்.//

  18. History of Sri Vaisnavas என்னும் இந்த நூலினை தான் நான் மிகவும் தேடி கொண்டிருந்தேன், ஏனென்றால், ஆண்டாள் தேவதாசியல்ல அவள் ஒரு தேவதைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக மெய்ப்பிக்க இந்த நூல் எனக்கு தேவைப்பட்டது. ஆகவே இந்நூலினை கண்டு பிடித்து கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

    மேற்ப்படி நூலான வைணவர்களின் வரலாற்றை, முழுவதுமாக புரட்டி பார்த்தேன், அதிலும் குறிப்பாக எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள் கூறும் 5 ஆம் பக்கத்தினை முழுவதுமாக படித்தேன், அதில் ஒரு வார்த்தை கூட ஆண்டாளை தேவதாசி என எங்குமே குறிப்பிடவில்லை. அந்த நூலில் புதிதாக ஒன்றுமே கூறவில்லை, காலங்காலமாக கூற பட்டு வந்த அதே குருபரம்பரை செய்திகள் தான் உள்ளது. அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழுகதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள்தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்ட தாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் திருவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலென்ன புதிதாக கூறிவிட்டார்கள், நானும் அதனை தானே கூறுகிறேன் .

    புத்தகம் முழுவதும் தேடியாயிற்று எதிலுமே கோதை ஒரு தேவதாசி ஆனாள் அல்லது ஆக்கப்பட்டாள் என்று ஒரு வார்த்தை இல்லை, எப்படி இருக்கும், இல்லாத பொல்லாததை ஆதாரம் அற்றதை கூற அவர்கள் ஒன்றும் சில்லாட்டைகள் கிடையாதே. இத்தனைக்கும் அந்த நூல் 1917 ஆம் ஆண்டு கோபிநாத் அவர்களால் மதராஸ் பல்கலைகழகத்தில் உரையாற்றப்பட்டு 1923 ஆம் ஆண்டு அச்சில் ஏறிய நூல்.இப்பொழுது இருப்பதை போன்று அப்போது எந்த தொந்தரவுகளும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் போன்ற எந்த இந்துத்துவ அமைப்புகளும் உருவாகாத காலம் அது, ஆகவே நாராயணன் பயந்தது போல யாரும் தலையை வாங்கி விடுவார்களோ என்ற பயமெல்லாம் இல்லாத காலம் அது.

    மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். ஆழ்வார்களின் பாடல்களில், வைணவ ஆச்சாயார்களின் இலக்கியங்களில் இல்லாத ஒன்றை, மேலும் எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லாத ஒன்றை எவ்வாறு, எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு வெறும் அனுமானத்தின் அடைப்படையில் தான் என்று பதிலளித்துள்ளார். இல்லையென்றால்,இந்த கோவிலில் இந்த நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டில் தகவல் இருக்கிறது போய் பாருங்கள் என்று கூறி இருப்பாரே.

    நானும் விவாதம் தொடங்கி பார்த்துக் கொண்டிருக்கிறேன், யாரவது உருப்படியான சான்றுகளோடு வந்து ஆண்டாளை தேவதாசி என்று நிரூபிப்பார்களா என்று. இது வரை இல்லை. இதில் காமெடி என்னவென்றால், வேத இலக்கியத்தில் இருக்கும் சரஸ்வதி நதியை இல்லையென மறுக்கும் இவர்கள் தான், இலக்கியத்தில் இல்லாத ஒன்றை(ஆண்டாள் தேவதாசி என்பதை) அனுமானத்தில் எந்த ஒரு காத்திரமான சான்றுகளும் இல்லாமல் அடித்து விடுகிறார்கள்.(சரஸ்வதி நதியை விவாத பொருளாக்கிட வேண்டாம், பதில் வராது) ஆகவே, தயவு செய்து, அடுத்தமுறை கறாரான சரித்திர பூர்வமான, அறிவியல் பூர்வமான யாரும் மறுக்க முடியாத படிக்கு, வலுவான தொல்லியல் ஆதாரங்களுடன்(அதாவது கோவில் கல்வெட்டுகள், பாடல்கள், செப்பு பட்டயங்களோடு) வந்தால், மேற்கொண்டு விவாதிக்கலாம்,மறுமொழி பெட்டியில் தான் போட வேண்டுமென்றில்லை, மேற்கூறிய ஆதாரம் இருப்பின் வினவில் தனி கட்டுரையாகவே வெளியிடலாம்.. இல்லையென்றால் என் நேரத்தை வெட்டியாக வீணடிக்க இனியும் நான் விரும்பவில்லை. அப்புறம் உங்கள் இஷ்டம். நன்றி.

    History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)நூலினை கொடுத்தமைக்கு நன்றி, பல தேவையான தகவல்கள் கிடைத்தன. அப்படியே, எங்கள் ஊர்காரரான நம்மாழ்வாரை பற்றியும் படித்து மகிழ்ந்தேன். நன்றி நன்றி…

    • திருவரங்கம் கோவிலுக்குள் விடப்பட்ட ஆண்டாள் அன்றைய சமுக சூழலில் (கோவில்களில் பெண்கள் தேவரடியாராக மட்டுமே நிருத்திவைக்கப்ப்ட்டர்கள் என்ற சமுக சூழலில்) ஆண்டாள் மட்டும் தேவரடியார் பணி இன்றி அங்கே வேறு என்ன பணி அங்கே ஆற்றினார் என்று ஒவ்வொரு தேவரடியாருக்கும் அவர்கள் தேவரடியார்கள் என்று நிருபணம் செய்ய கல்வெட்டுகள் மூலமாகவும் ,தொல்லியல் துறை மூலமாகவும் ஆய்வு நடத்தும் ரெபெக்கா மேரி தான் பதில் அளிக்கவேண்டும்…

      “”””Periyalvar took her there with great eclat and left
      her in her Lord’s house and returned to his quiet residence at
      SrTvilliputtur.””””

      மேல் உள்ள நூல் ஆசிரியரின் கருத்துக்கு ஆண்டாள் தேவரடியார் அன்றி வேறு என்ன என்று ரெபெக்கா மேரி தான் அறிவுக்கண் திறந்து பதில் சொல்லவேண்டும்…

      தொடரும்…..

      • ஆண்டாள் மிக தெளிவாக தனது பாடல்களில் கண்ணை மட்டும் தான் காதலிப்பேன் அவனையே மணப்பெண், கண்ணை தவிர வேறு ஆண் மகனை நினையேன் என்று மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று (அதுவும் ஆதாரம் எதுவும் இல்லாத யூகத்தின் அடிப்படையில்) நீங்கள் சொல்வது உங்களின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.

        தனது காதல் உணர்வை பற்றி ஒரு பெண் பேசினால் உடனே அவளை கேவலமாக சித்தரிக்கும் ஆணாதிக்க சிந்தனை தான் உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது.

        ஆண்டாளின் பாடல்களே அவரின் கற்ப்பிற்கு சாட்சி, அதை தெரிந்துகொள்ள எந்த விதமான ஆராய்ச்சியும் எங்களுக்கு தேவையில்லை.

        • எனக்கு தெரிந்தவரைக்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் தேவதாசி முறை அமைப்பு ரீதியாக சிதைவடைந்து பாலியல் தொழிலாக மாறிஉள்ளது. ஆனால் மணிகண்டன் அடிச்சாரு பாருங்க செம் சைடு கோல்….. வெக்கமாக இல்லையா மணி…இப்படி ஆண்டாளை பற்றி இழிவாக பேச? இப்ப உங்க கருத்தின் அடிப்படையில் பார்ப்போம் என்றால் ஆண்டாள் காலத்திலேயே தேவரடியார் முறை பாலியல் தொழிலுக்கான முறையாக மாறிவிட்டது என்று செம் சைடு கோல் அடிகிறிங்க மணி! இன்னும் எதிர்பார்கின்றோம் மணி…! எடுத்துவிடுங்க உங்க வாயாலேயே உண்மைகளை…. அட கருமத்த!

          தமிழக பேரரசன் ராஜராஜன் காலத்திலேயே அவரின் அக்கா குந்தவை நாச்சியார் தஞ்சை சிவன் கோவிலில் தேவரடியாராக மாறிய செய்திகள் வரலாற்றில் இருக்க(பத்தாம் நூற்றாண்டு)அந்த தொழில் ஆண்டாள் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டில் பாலியல் தொழிலாக இருந்தது என்று கூற உங்களுக்கு வெக்கமாக இல்லையா மணிகண்டன்?

          ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது இந்த எச்ச ராஜா, ரெபேக்கா, மற்றும் மணிகண்டன் வகையராகளுக்கு தேவதாசி என்றாலே அவர் பாலியல் தொழிலாளி என்று மனதில் நிரந்தரமாக பதிந்து விட்டது…. அது எப்ப,எந்த காலகட்டத்தில் தேவதாசி தொழிலாகவே இருந்தது, அது எப்ப பாலியல் தொழிலாக உருமாற்றம் அடைந்தது என்ற காலம் சார்ந்த வரலாற்று தேடல் எல்லாம் இவர்களுக்கு இல்லையே! அதுக்கு நாம என்ன செய்ய?

          மாட்டு மூளைகளுக்கு மனிதனை போன்று சிந்திக்க முடியாது என்பது மணிகண்டன் விசயத்தில் உண்மையாகிறது…

          //இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று (அதுவும் ஆதாரம் எதுவும் இல்லாத யூகத்தின் அடிப்படையில்) நீங்கள் சொல்வது உங்களின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.//

          • உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆண்டாளை பற்றி கண்டபடி அவதூறு பேசி விட்டு இப்போது என்னமோ நான் தான் ஆண்டாளை பற்றி தவறாக பேசினேன் என்பது போல் என் மீது பழி போடுகிறீர். ஹிந்து மதத்தில் இயல்பிலேயே இருக்கும் சகிப்புத்தன்மையால் தான் உங்களை போன்ற ஆட்கள் இப்படி எல்லாம் பேச முடிகிறது.

            நிச்சயம் உங்களை போன்ற வினவு கூட்டங்களின் பொய்களை விவாதம் மூலமே வெல்ல முடியும்.

            • ஆண்டாள் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று சொல்வது உங்களின் சொந்த கருத்துதானே மணிகண்டன்….எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் தேவதாசியாக திருவரங்கம் கோவிலில் வாழ்ந்தார் என்பது தான் ஆண்டாளின் வரலாறு…அதனை தான் என் வாதங்கள் மூலம் உங்களிடமும் உங்களை போன்ற அராஜக ரெபெக்கா மேரிகளிடமும் என் கேள்விகள் மூலம் கேட்டுகிட்டு இருக்கேன்… பதில் தான் வரவில்லை இன்னும்… நீங்களும் மேரியும் அக்கபோரு செய்துகிட்டு இருக்கீங்க… சரி மீண்டும் கேட்கின்றேன் பதில் வருதா பார்கலாம்…:

              ஆண்டாள் எத்தகைய சமுக நிலையில் திருவில்லிபுத்தூரில் இருந்தார்? அங்கிருந்த அவர் என்ன சமுக அங்கிகாரத்துடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்? அவர் அன்றைய வைணவ சமுகத்தால் என்னவாக ஏற்க்க்பட்டார்? ஒன்று அவர் குடும்ப பெண்ணாக இருந்து இருந்தால் அவருக்கு “சிருங்கார ரசனையில்” அதாங்க காம ரசனையில் பாடல் எழுத எல்லாம் அறிவு எப்படி வந்து இருக்கும்?மேலும் கோவிலுக்குள் புழங்கிய பெண் ஆண்டாள் தேவதாசியாக , நாட்டிய மங்கையாக, சிருங்கார கவியாக இல்லாமல் வேறு என்னவாக அவர் அங்கிகரிக்க்பட்டார் என்று நீங்க தான் மீண்டும் முதலில் இருந்து விளக்கனும்…

              • ஏம்பா நீங்கள் சொன்னதை எல்லாம் என் தலையில் காட்டுகிறீர்கள், ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறாக பேசியதால் தானே இந்த விவாதமே… நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஏற்க்கனவே பதில் சொல்லியாகி விட்டது மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி கேட்டு போர் அடிக்க வேண்டாமே.

                • ஹ ஹா ஹா…அட லூசு மணி…, “ஆண்டாள் பலரோடு உறவு வைத்து கொண்டார்” என்று உங்க சொந்த கற்பனையில் சொல்ல்லிட்டு இப்ப இல்ல இல்ல என்றால் எப்படி மணி? இல்ல இந்த விசத்துக்கு ஏதாவது ஆதாரம் மெம்மரி கார்டு ஆதாரம் அல்லது ஏதாவது நித்தியானதா-ரஞ்சிதா மேட்டர் மாதிரி தடயம் எல்லாம் வைத்து இருக்கீங்களா? இல்ல வினவு உங்க கருத்தை திரித்து மாற்றி எழுதி பழிவாங்கிவிட்டதா? ஹ ஹா ஹா…

                  மேல் உள்ள கருத்தை நான் சொன்னேன் என்பதற்கு ஆதாரத்தை காட்டுங்க அரைமண்டை அறிவாளி , மாட்டு மூளை மனிதா மணி!

                  //இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார்//

            • “”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?””””

              என்னுடைய எளிய கேள்விகளுக்கு எல்லாம் நீங்களோ அல்லது ரெபெக்காவோ பதில் சொல்லாவிட்டாம் கோவன் அவர்கள் எழுப்பும் சந்தேகமான “ஆண்டாள என்னடா பண்ணிட்டிங்க?” என்ற கேள்வி தான் அனைவர் முன்பும் வந்து நிக்கும் மணி!

              திருவரங்கம் கோவிலில் ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தார் , ஆபாச கவிதை எழுதினார்…, காமதேவன் மூலமாக ரங்கனுக்கு காமதூது விட்டுவிட்டு காத்திருந்தார் (கடைசியாக உள்ள ரேபாக்காவின் பின்னுட்டத்தில் உள்ள பிட்டு பாடலை பாருங்க) என்பதனை எல்லாம் ஏற்கா விட்டால் அவர் திருவரங்கத்தில் உள்ள ரங்கன் கோவிலில் வட சுட்டுகிட்டு , புளியோதரை செய்துகிட்டு இருந்தார் என்பதனையாவது நாம ஏற்க்க தானே வேணும்? இல்லை என்றால் கோவன் அவர்கள் எழுப்பும் சந்தேகத்தையாவது அம்பி மணி நீங்க தீர்க்கவேணும் இல்லையா? “”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?””””

              விவாதத்தை விட்டு ஓடுபவர்களை எல்லாம் உங்க கட்சியில் வைத்துக்கிட்டு எப்படிங்க விவாதத்தில் வெல்லுவீங்க மணி? விவாதம் முடியும் முன்னே விவாதம் முடிந்துவிட்டது என்று பறைசாற்றுபவர்களை எல்லாம் உங்க அணியின் தளபதியாக வைத்து கிட்டு எப்படி வெல்லுவீங்க மணி? இப்ப பாருங்க களத்தில் தனித்து நிற்கின்றீர்கள்…தலபதி அனுமார் வாலை பிடித்துகொண்டு விவாதத்தில் அடிபட்டதுக்கு மருந்து தவிக்க சிரஞ்சீவி மலைக்கு பறந்து போய்கிட்டு இருக்கார்..

            • //ஹிந்து மதத்தில் இயல்பிலேயே இருக்கும் சகிப்புத்தன்மையால் //
              //பரப்பி ஹிந்து மக்களின் சகிப்பு தன்மையை சோத்தித்து கொண்டு இருக்கிறீர்கள்..//

              என்ன சொல்லவரிங்க மணிகண்டன்?? அதான் பங்களாதேசில பாயிங்க சமூக ஆர்வலர்களை மத மறுப்பாளர்களை வெட்டுவது போல நீங்க சுட்டு தள்ளுரிங்களே?? இதுக்கு மேல என்ன சகிப்புதன்மையே சோதிக்க வேண்டி இருக்காம்? அல்லது ஏதாச்சும் கலவரத்தை தூண்டிவிட செய்ய வேண்டாம் என்கிறீரா??

              • இங்கே ஹிந்துதுவாக்குள் என்று குறிபிடுவது போன்று அங்கே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று அவர்களை குறிபிடலாம் என்று உணருகின்றேன்…..

    • எம்.ஜி.எஸ். நாராயணன் அவர்கள் அன்று காவிகள் யாருக்கும் பயப்படவில்லை என்பதால் தானே அன்று அக்கட்டுரை எழுத அந்த மூல நூலில் உள்ள செய்தியான

      “”””Periyalvar took her there with great eclat and left
      her in her Lord’s house and returned to his quiet residence at
      SrTvilliputtur.””””

      இதன் அடிப்டையில் தானே அவர் கீழ் உள்ள கருத்தை தன் கட்டுரையில் பதிவு செய்த்தார்..

      Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple

      அப்படி தன கட்டுரையில் பதவு செய்த எம்.ஜி.எஸ். நாராயணன்அவர்கள் இன்று அதே கருத்தை மறுதலிக்க என்ன ஆதாரத்தை நம் முன்வைகின்றார்..? ஆதாரம் ஏதும் கிடையாது…. காவிகளிடம் இருந்து அடி உதய் விழுமே என்ற பயத்தை தவிர வேறு ஏதும் இல்லை….

      மேலும் கேடி ராகவன் கூட தன் இணைய தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் “சாப்ட் பரோன் என்று ஆண்டாளின் பாடல்களை ” விமர்சித்தவர் இன்று அதே கருத்தை-பதிவை வைரமுத்து சர்ச்சைக்கு பின் நீக்க காரணம் என்ன? அடி உதை பயம் இன்றி வேறு என்ன என்று ரெபெக்க மேரி தான் விளக்கவேண்டும்….

      //மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். ஆழ்வார்களின் பாடல்களில், வைணவ ஆச்சாயார்களின் இலக்கியங்களில் இல்லாத ஒன்றை, மேலும் எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லாத ஒன்றை எவ்வாறு, எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு வெறும் அனுமானத்தின் அடைப்படையில் தான் என்று பதிலளித்துள்ளார். இல்லையென்றால்,இந்த கோவிலில் இந்த நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டில் தகவல் இருக்கிறது போய் பாருங்கள் என்று கூறி இருப்பாரே. //

    • முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சியளிகின்றார் ரெபெக்கா மேரி அவர்கள்…! அம்பலப்படும் நிற்கின்றார்… மகிழச்சி! ஒருபக்கம் ஆண்டாள் தேவதாசி என்பதற்கு கல்வெட்டுகள், பாடல்கள், செப்பு பட்டயங்களின் ஊடாக ஆதாரத்தை தேடும் ரெபெக்கா மேரி அவர்கள் , மறுபக்கம் அந்த வைணவர்களின் வரலாறு நூலினை படித்து மகிழ்ந்தேன் என்னும் போதே அந்த நூலில் இருந்து பல தேவையான தகவல்கள் கிடைத்தன என்று கூறுமிடத்தே அவற்றை நம்புகின்றார் என்று தானே பொருள் ஆகின்றது..?

      அப்படி அந்த நூலை நம்பும் ரெபெக்கா மேரி, அதே நூலில் ஆண்டாள் அவர்கள் திருவரங்கம் கோவிலில் விடப்பட்டார் என்ற செய்தியை (அந்த செய்தியின் ஊடாக நாம் அறியும் பொருள் என்ன? கோவில்களில் பெண்கள் விடப்படுகிரார்கள் என்றால் என்ன அர்த்தத்தில் என்று சிந்திக்க ரேபெக்காவுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் என்ன?) நம்பாமல் இருக்க என்ன காரணமோ? செலக்டிவாக இந்த செய்திக்கு மட்டும் ஆதாரத்தை தடயவியல் துறை ,தொல்லியல் துறை ஊடாக தேடும் நிலையில் தானே ரெபெக்கா அவர்கள் அம்பலப்ட்டு நிற்கின்றார்! இந்த ரெபெக்காவின் இந்த அவலத்துக்கு காரணம் அவரின் அறிவின் குறைபாடு அல்ல… அறிவு நானையத்தின் குறைபாடே காரணமாக அவர் முன் நிற்கின்றது..

      //History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)நூலினை கொடுத்தமைக்கு நன்றி, பல தேவையான தகவல்கள் கிடைத்தன. அப்படியே, எங்கள் ஊர்காரரான நம்மாழ்வாரை பற்றியும் படித்து மகிழ்ந்தேன். நன்றி நன்றி…//

    • அதனையே தான் நானும் கூறுகின்றேன்…திருவரங்கம் கோவிலில் ஆண்டவனின் கட்டளைபடி சென்று அங்கே தங்கி இருந்து உள்ளார் ஆண்டாள்! இதில் இருந்து ஆண்டாள் தேவதாசி தான் என்று எளிமையாக நாம் அறிந்து கொள்ள முடியுமே ரேபெக்காமேரி! ATM சென்டருக்கு வெளியே உட்கார்ந்து இருக்கும் வாட்சிமேன் அங்கே என்ன வேலையை செய்வார்? பாலியல் தொழில் நடக்கும் வீட்டில் தங்கியிருக்கும் பெண் என்ன வேலையை அங்கே செய்வார்? கோவிலுக்குள் தங்கி இருந்த ஆண்டாள் அங்கே என்ன வேலையை செய்து இருப்பார்…தேவரடியார் வேலையை தவிர?

      //அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் திருவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலென்ன புதிதாக கூறிவிட்டார்கள், நானும் அதனை தானே கூறுகிறேன் .//

    • M M Kalburgi, மற்றும் Gauri Lankesh ஆகியோர் ஹிந்துத்துவாகளால் கொல்லபட்ட விசயத்தை மறந்துவிட்டீரா? இல்ல அறிவு நாணயம் இன்றி அந்த விசயங்களை உங்கள் விவாத தேவைக்கு ஏற்ப மறைத்துவிட்டீரா ரெபெக்கா மேரி? எம்.ஜி.எஸ். நாராயணன் காவிகளுக்கு பயப்டவில்லை என்றால் ஹச் ராஜாவின் ஆபாச பேச்சுக்கு பயப்படவில்லை என்றால் பிஜேபி துணை தலைவர் அல்லது செயலாளர் (உங்க ஊர் பக்கம் தான் அவரு!)பேசிய கழுத்தை வெட்டுவேன் என்ற பேச்சுக்கு பயப்டவில்லை என்றால் எதுக்கு இப்ப தான் எழுதிய கட்டுரை வார்த்தைகளை அதுவும் மூல நூலை மேற்கோள் காட்டி எழுதிய சொற்தொடரை இப்ப மாற்றிக்கொள்ள வேண்டும்? சொல்லுங்க பார்கலாம்… கேடி ராகவன் எதுக்கு இப்ப அவர் எழுதிய “சாப்ட் புரோன் ஆண்டாள் பாடல்கள்” என்ற கட்டுரையை இணையத்தில் இருந்து தூக்கணும் சொல்லுங்க:?

      //மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். //

      • கௌரி லங்கேஷ் போன்றவர்களை ஹிந்துக்கள் கொன்றார்கள் என்ற ஆதாரம் இல்லாத “பச்சை” பொய்களை பரப்பும் உங்களை போன்ற ஆட்கள் தான் ஆண்டாளை பற்றியும் ஆதாரம் இல்லாத பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்

        • மணிகண்டன்,,,, காந்திய கொன்றது ஹந்துத்டுவா மத வெறியர்கள் இல்ல பாகிஸ்தான்காரன் தான் என்ற கணக்கா பொய் பேசிகிட்டு இருந்தால் எப்படி மணிகண்டன்? வைரமுத்துவின் கழுத்தை அறுப்போம்… அறுப்பவனுக்கு ஒரு கோடி கொடுப்போம்….அவன் அம்மா…. என்று எல்லாம் வெறிபுடிச்சி பேசிகிட்டு இருப்பதும் பாகிஸ்தான்காரன் தானா மணிகண்டன்? அட கருமத்த…. உன் நாயத்த போயி மாட்டுக்கிட சொல்லு மணி…. அது வேண்டுமானால் உனக்கு தலையாட்டும்….

          • கௌரி அவர்களை பற்றி நீங்கள் சொன்னது தவறு ஆதாரம் இல்லாத குற்றசாட்டு என்று சொன்னேன் ஒன்னு அதற்கு ஆதாரம் கொடுத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் சொன்னது பொய் என்று மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் மீண்டும் யூகத்தின் அடிப்படையில் பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

            இந்த நாட்டில் ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் அவமதிப்பு ஒரு வழக்கமாக இருக்கிறது, ஹிந்து கடவுளை அவமதித்தார் என்று என்று யாரும் யாரையும் கொன்றது இல்லை, ஹிந்து மக்களின் சகிப்பு தன்மை உயர்வாக இருக்கிறது.

            ஆனால் உங்களை போன்ற ஆட்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு ஹிந்து கடவுளை பற்றி அவதூறு பரப்பி ஹிந்து மக்களின் சகிப்பு தன்மையை சோத்தித்து கொண்டு இருக்கிறீர்கள். இது சரியல்ல நியாயமும் இல்லை.

            இந்த நாட்டில் மத அடிப்படைவாதம் வளர்ந்தால் அதற்கு உங்களை போன்ற வினவு கூட்டங்கள் தான் காரணமாக இருக்கும்.

            • இன்னும் எதுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பீர்கள் மணிகண்டன்…? கௌரி லங்கேஷ் ஹிந்துத்டுவாக்க்ளால் மிரட்டப்ட்டது உண்மை என்ற நிலையில் வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? இன்று வைரமுத்து நீ வெட்டப்படுவாய் என்று அதே ஹிந்துதுவாக்ளால் மிரட்டப்ட்டு இருக்கிறார்… சரி சரி நடப்பதனை நாங்களும் பார்க்க தானே போறோம்…

  19. இப்பொழுதும் சொல்கிறேன் ஆட்டம் முடிந்து விட்டது தான், இனி பேச ஏதுமில்லை. வலுவான ஆதாரம் இருந்தால் பேசவும், அதை விட்டு பக்கத்தை நிரப்பும் வேலைக்கெல்லாம் என்னால் பதில் அளித்து கொண்டிருக்க முடியாது.சொல்வதற்கு ஒன்றுமில்லை, நான் இத்தோடு விடை பெறுகிறேன். என் கருத்துக்களை வெளியிட்ட வினவு தளத்தின் ஆசிரியருக்கு என் நன்றிகள்.

    • இதுகாறும் விவாதித்தமைக்கு நன்றி சகோதரி ரெபெக்கா மேரி…. ஒரு வழியாக தன்னுடைய அறிவு நாணயம் இன்மை, ஹிந்துத்துவா சார்பு, போன்ற “தேசிய வாதம்” சார்ந்த கருத்தாகங்களின் அடிபடையில் ஆண்டாள் விசயத்தில் பேசிகிட்டு இருந்த ரெபெக்கா மேரி அவர்கள் அந்த ஆண்டாள் திருவரங்கம் கோவிலில் என்னவாக வேலை செய்தார் என்ற எனது கேள்விக்கு பதில் அளிக்க பயந்துகிட்டு (அப்புறம் எச்ச ராஜா விடம் பேச்சு வாங்க நேருமே! பிஜேபி தலைவர் நாகேந்திரனின் கழுத்து வெட்டு மிரட்டலுக்கு பயந்துகிட்டு ) விவாதத்தை விட்டு வெளியேறுகின்றார் என்று நாம் இந்த விவாதத்தின் முடிவை ஏற்க்க வேண்டியது தான்… நன்றி…

    • ஆகா! நீங்கள் இவ்வளவு நேரம் இந்தப் புலையர்ளிடம் பேசியதே எங்களின் பெரும் பேறு அம்மணி!

      போய் வாருங்கள் . . .!!!

  20. கடைசியாக கூற வந்ததில் விடு பட்ட செய்தி

    அந்த நூலினை நம்பும் நான், அந்த நூல் நேரடியாக கூற வரும் செய்தியை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, அனுமான அற்பத்தனங்களை எல்லாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அனுமானிப்பவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை, கம்யூனிச பாணியில் கூறினால் “பொருள்முதல்வாத” அடிப்படையில் துல்லியமாக அளிக்க வேண்டுமே அல்லாமல் யுகத்தின் அடிப்படையில்அடித்து விடக்கூடாது .

    மேலும், புத்தகத்தில் இருந்து புது தகவல் ஒன்றையும் தெரிந்து கொண்டேன், ஆண்டாளின் காலம் ,அதாவது பெரியாழ்வாரின் காலம் (B.C. 3056). (அந்நூலின் குறித்தபடி) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பே என்பதை தெரிந்து கொண்டேன். எம் தமிழர்கள் அவ்வளவு காலத்திற்கு முன்பே மாலியம்(வைணவம்) என்கிற உயர் இறை நெறியை உருவாக்கி இருக்கிறார்கள் என்னும்பொழுது வியப்பு மேலிடுகிறது.. 4000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண், திருமாலை வணங்கி, அவன் ஆலயத்திற்க்கே சென்று, அரங்கனின் பாதம் பணிந்து சோதி வடிவாய் வைகுந்தம் ஏகினாள், என்பதை நினைக்கும் பொழுது ஆனந்தமாய் இருக்கின்றது. இப்போது,, இதற்க்கு மட்டும் பாருங்களேன் எப்படி அனுமான அனுமார்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புமென்று.

    //Periyalvar flourished in the reign of a Pandya king named
    Srlvallabha ; the original name of Periyalvar was Visnucitta. He
    was the incarnation of Garuda, being born at Srivilliputtur in the
    fprty-seventh year of Kali (B.C. 3056).// நல்ல தகவல், நல்ல நூல்…மிக்க நன்றி … வருகிறேன்

    சுவரில் புராணநின் பேரேழுதிச்
    சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
    கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
    காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
    அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
    ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
    துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
    தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே.

    • வினவு , திரையரங்கில் திடிரென்று பிட்டு படம் போடுவது போன்று மேல் உள்ள பின்னுட்டத்தின் இறுதியில் எட்டு அடிகளில் ஒரு “”பிட்டுபாட்டு”” எந்தவிதமான தொடர்ப்பும் ஆண்டாள் ரங்கன் மீதான தன் காம இச்சைக்கு காமதேவனை தூது போக சொல்லி கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே… !வினவு அந்த ஆபாச பாடலின் பொருளை அறிந்து தெரிந்து புரிந்து தான் அந்த மேல் உள்ள பாடலை வெளியிடதா இல்ல…தெரியாமலா?

      வரவங்க போறவங்க எல்லாம் ஆபாசத்தை ஆண்டாளின் காமரசனை சொட்டும் சிருங்காரத்தின் ஊடாக கொட்ட இதுவென்ன பாலியல் இணைய தலமா வினவு ?

  21. கற்பில் சிறந்த தெய்வமான எங்களின் தாய் ஆண்டாள்.ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்துரில் பெருமை மிகு பெரியாழ்வாரின் மகளாய் வளர்ந்து வந்தார். அங்கிருந்து பெரியாழ்வாரின் மகளாகவும், திருமகளின் அவதாரமாகவும் அங்கீகாரம் பெற்று திருவரங்கம் வந்து சேர்ந்தார். அன்று அவள் வைணவர்களால் அரங்கனின் பத்தினியான திருமகளாம் மகாலட்சுமியின் அவதாரமாவே துதிக்க பெற்றாள். அரங்கனை எந்த அளவிற்கு நேசித்தாலோ அதே அளவு அன்னை தமிழையும் அவள் நேசித்தால், அவளின் அருளி செயல்களை படிப்போருக்கு இது நன்கு விளங்கும். தன் தாய்மொழி தமிழ் மொழியின் இலக்கணை மரபை தாண்டாதவள், தன் வாழ்வின் இலக்கண மரபை தாண்டியதில்லை, நாவுக்கரசர் எப்படி தன்னையே சிவ பெருமானுக்கு அர்ப்பணித்தாரோ அதனை போன்று, அரங்கனுக்கே தன்னை அர்ப்பணித்தாள் கோதை. திருஅரங்க கோவிலுக்கு சென்று அரங்கனிடம் ஐக்கியமானாள், வள்ளல் பெருமானாரை போல் சோதியுறுவாய் அரங்கனோடு இரண்டற கலந்தாள். நான் கூறியதற்கு கல்வெட்டு இலக்கிய ஆதாரங்கள் இருக்கிறது. மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டது இதனை தான்..அவள் நாட்டிய மங்கையாக, தேவதாசியாக அங்கீகரிக்கப்பட்டாள் என்பதை, அதனை நம்புவோர் தான் அறிவு நாணயத்தோடு தக்க சான்றாதாரங்களுடன் நிரூபணம் செய்ய வேண்டும். எங்களிடமே எதிர் கேள்வி கேட்பது கையாளாக தனத்தை தான் காட்டுகிறது. எங்கே கல்வெட்டுக்கள், ஆதார பாடல்கள் எல்லாம்.

    கோதையின் இன்னொரு பாடல்

    மின்னாகத் தெழுகின்ற
    மேகங்காள், வேங்கடத்துத்
    தன்னாகத் திருமங்கை
    தங்கியசீர் மார்வற்கு,
    என்னாகத் திளங்கொங்கை
    விரும்பித்தாம் நாடோ றும்,
    பொன்னாகம் புல்குதற்கென்
    புரிவுடைமை செப்புமினே.

    பொருள்:-அந்தத் திருவாழ்மார்பனிடம் சொல்லுங்கள் என்கிறாள்.. அந்தப் பொன் உடம்பை நாள்தோறும் விரும்பி அணைக்கவே என் மனம் .விரும்புகிறது . அவர்தம் மார்பை என் இளம் மார்போடு அணைத்தே கிடக்க விரும்புகிறேன் அதுவே என் ஆசை என்று அவனிடம் சென்று சொல்லுங்கள் !!!!

    • குமார்,

      விட்டு விடுங்கள். இருதரப்பு வாதங்கள் இருக்கின்றன. படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ரெபெக்கா மேரி ஆபாசப் பாடல்களை பக்திப் பாடல்கள் என்கிறார். நானும் பக்தி செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு அது புரியவில்லை. ஒருவேளை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புரியும் போலிருக்கிறது. (RSS போன்ற …)
      அது ஆபாசமாகப் பட்டதால்தான் ராஜகோபாலாச்சாரி ஆண்டாளை கற்பனை பாத்திரம் என்றார்.

      ஆண்டாளுக்கு பின் வந்த எந்த பக்தரும், கவியும் ஆண்டாளின் பக்தி முறையை பின்பற்றவில்லை, பாரதி உட்பட.

      • அது தான் ரெபெக்கா மேரி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டாங்களே கார்த்திகேயன்! அப்புறம் என்ன நமக்கு இங்கே வேலை? நந்தனை எரித்தது போன்று, வள்ளலாரை கொளுத்தியது போன்று ஆண்டாளையும் ரங்கனுடன் சோதியுருவாய் அய்கியம் செய்துவிட்டார்கள் திருவரங்கத்து வைஷ்ணவர்கள் என்ற கொடும் துயர் கொலை செய்தியை கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரத்துடன் கொடுக்கிறேன் என்று சொல்றாங்க இல்லையா? அதனுடாக அம்பலப்பட்டு நிற்கின்றார்கள் அல்லவா மேரி…? நான் விக்ரமன் படத்தில் வருவது போல மகிழ்வான மனநிலையில் திருவரங்கம் சென்ற ஆண்டாள் அம்மாள் ,ரங்கனின் நினைவுகளுடன் ரங்கனுக்கு பூசைகள் செய்துகிட்டு காதல் கவிகள் காமத்துடன் பாடிகிட்டு, நாட்டியம் ஆடிகிட்டு ,வட சுட்டுகிட்டு, தயிர்தாசம் படையல் இட்டுகிட்டு தன் முதுமைவரைகும் திருவரங்கத்தில் வாழ்ந்து விட்டு இறுதியில் இயற்கை ஏய்தி இருப்பாங்க என்று நினைத்துகிட்டு இருந்தேன்… !

  22. ரெபெக்காவின் வாக்குமூலம் “ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?” என்ற கேள்விக்கு!

    ரெபெக்கா மேரி, இதனை தானே கோவன் அவர்கள் தன்னுடைய விடியோ பதிவில் கேள்வியா எழுப்பி இருந்தார்…!“”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?”””” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.. அப்போது அந்த கேள்விக்கு இந்த பதில் அளிக்காமல் நீங்க ,என்ன சொன்ரீர்கள் என்று பார்கலாமா?

    “”” நீங்களும் உங்கள் ஆஸ்தான பாடகரான கோவனும் வரம்பு மீறி பேசுவது சரியல்ல. அந்த டீசரில் “இந்த கொலைகார பாவிங்க கோவில்ல வச்சு ஆண்டாளை என்ன பண்ணிருப்பாங்க” என்று பேசுவது, “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” என்பது போல வரும் வார்த்தைகள் அனைத்தும் அநாகரீகத்தின் உச்சம். “”””””

    இப்ப என்ன சொல்றீங்க என்றால் திருவரங்கம் கோவிலில் ஆண்டாளை …, நந்தனை போல, வள்ளலாரை போல வைணவர்கள் ஐக்கிய படுத்திட்டாங்க என்று சொல்வது மிக சரியான பதில் தானே? இதனை அப்பவே சொல்லியிருந்தால் இவ்வளவு நீண்ட நெடிய விவாதமே தேவை பட்டு இருக்காதே…! அதுவும் எப்படி ஐக்கியம் ஆகி இருக்காங்க..? ஆண்டாள் சோதியுறுவாய் அரங்கனோடு இரண்டற கலந்தாள் என்று வாக்குமூலமாக கொடுத்து இருக்கீங்க… மிக்க நன்றி ரெபெக்கா மேரி…

    இந்த விசயத்துக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரம் வேற இருக்கு என்று சொல்லும் போது நாங்க நம்பாமலா போயிடுவோம்… நந்தன் ,வள்ளலார் மற்றும் ஆண்டாள் சோதியில் கலந்தார்கள் என்றால் வரதட்சனை பெண்கள் எரிக்கபடுவதனை எப்படி கொண்டுபோய் முடிப்பாங்க என்று உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்..போன தலைமுறையில் ஸ்டவ் வெடிசிடிச்சி என்பது போல இன்று கேஸ் அடுப்பு பயர் ஆயிடுச்சு என்ப்பது போல தானே நந்தன் ,வள்ளலார் மற்றும் ஆண்டாள் எல்லாம் ஜோதியில் கலந்ததும்….!

    நான் மிகவும் இளகிய மனம் உடையவனாக இருந்ததால் கோவனின் கேள்விக்கு நீங்க அளித்த பதிலை நான் சிந்திக்கவே இல்ல… ஏதோ அந்த அம்மா ஆண்டாள் திருவரங்கத்தில் ரங்கம் அருகிலேயே அவர்கள் விரும்பியபடி வாழ்ந்து இருப்பாங்க, வட, புளியிதர செய்து கடவுளுக்கு படைத்துகிட்டு, சிருங்கார கவிதை எழுதிகிட்டு, நாட்டியம் ஆடிகிட்டு உசுரோட இருந்து இருப்பாங்க என்று நம்பினேன்… என்னமோ போங்க அவிங்களையும் எரிச்சாச்சா?

    //அரங்க கோவிலுக்கு சென்று அரங்கனிடம் ஐக்கியமானாள், வள்ளல் பெருமானாரை போல் சோதியுறுவாய் அரங்கனோடு இரண்டற கலந்தாள்//

    • Kumar it’s a Nice discussion about Andal. interrogation about Andal. Mary has been trapped. Waiting for her replay . Both You and Mary accepted that Andal Entered into the Thiruvarangam Temple. Now your investigation is going on the excellent direction. Whether She lived there as Davadasi or she has been killed my Vishnavas. ? As a kind heated man, you love her that she should be live in the Temple till her natural end. That is the real character of atheism. Good. According to Hard heated Mary she stress that she has been integrated with God by fire. That’s believer ,God believer. I like to add one more point now. I realized that As periyar said atheist think about Human and believers think about the pride of the God.

  23. என்னுடைய 24வது கமெண்டில் ஏற்கனவே சோதி வடிவில் அரங்கனோடு ஐக்கியமானாள் என்பதனை கூறியிருந்தேன் அப்போது அது யாரின் கண்ணிலும் படவில்லை, அறிவிலும் உரைக்கவில்லை. அதனால் தான் 26 ஆம் மறுமொழியில் வள்ளலார் பெயரையும் சேர்த்து மீண்டும் சொன்னேன். இப்போதாவது கண்ணில் தெரிந்தது மகிழ்ச்சி.

    நந்தனை விடுங்கள். ஆதிசங்கரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற பார்ப்பனர்களும் சோதியில் கலந்து சிவ பரம்பொருளை அடைத்ததாக தான் அவர்களின் வரலாறு கூறுகிறது. முற்போக்குகளின் பாணியில் கூற வேண்டுமானால், இந்த மூவரும் தான் பவுத்த சமணத்தை அடியோடு அழித்து, சனாதனத்தையும், பார்பனீயத்தையும் வளர்த்தவர்கள். அவர்களையும் பார்ப்பனர்கள் எரித்து விட்டனரா, அடடே, என்னவொரு ஆச்சர்யம்!!!!!!. சோதியில் ஐக்கியமாதல் என்பது குறியீட்டு ரீதியிலான தத்துவ பொருள். அதனை பற்றி பத்தி பாதியாக எழுத வேண்டும். அது இங்கு தேவை இல்லாத ஒன்று. மேலும், அதனை பற்றி இங்கு பேசுவது எவ்விதத்திலும் பயன் தராது, யேசுநாதர் கூறியதை போன்று “பன்றிக்கு வைர முக்குத்தி” போட்ட கதையாக மாறிவிடும். எது எப்படியோ உண்மையை ஏற்று கொண்டமைக்கு நன்றி.. இருந்தாலும் நன்றிகள் அனைத்தும் அரங்கனுக்கு உரித்தாகட்டும். இதற்க்கு மேல் எது உண்மை, எது பொய் என்பதை பகுத்து அறிந்து கொள்ள கூடிய வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். நன்றி …

    இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
    நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
    செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
    அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

    தமிழ் இன்றும் செழித்திருக்க காரணமான ஆண்டாள் திருவடிகளே போற்றி…….. முற்றும்…

    • உண்மைக்கு புறம்பான தகவல்களை விவாதத்தில் வைக்ககூடாது என்ற பண்பு கூட தெரியலையே இவருக்கு! யேசுநாதர் கூறியதை போன்று “முக்குத்த அணிந்த ******* இருக்கும் இவரை நாம என்ன செய்ய?”

      ஆதிசங்கரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் சோதியில் கலந்துவிட்டதா சொல்லும் ரெபெக்காவின் வார்த்தைகளில் யாதொரு உண்மையும் இல்ல… ஆதிசங்கரர் இமையமலைக்கு போய் காணமல் போயிட்டார்… மாணிக்கவாசகர் அவர்கள் எவ்வித மாயாஜாலங்களும் இல்லாமல் எளிமையாக ஒரு நாள் இயற்க்கை எய்து சிவனடி சேர்ந்துட்டார்…

      திருஞானசம்பந்தர் மறைவு தான் மர்மமானது… திருஞானசம்பந்தர் திருப்பெருமணம் என்னும் கோயிலை அடைந்தார். இக்கோயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு வைகாசி மாதம் மூலநாளில் திருமணம் நடைபெற்றது. “கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.

      கடவுளுடன் போய் சேர விரும்பிய திருஞானசம்பந்தர் எதுக்கு திருமணத்துக்கு ஒத்துக்கனும்? அப்புறம் சோதியில சேரனும்? அதுவும் அவரின் திருமணத்துக்கு வந்தவர்களையும் அழைத்துகிட்டு போய் சோதியில் சேர்த்து விட்டார் என்றால் முரண்பாட்டாக தெரியலையா ரேபெக்காவுக்கு… திருஞானசம்பந்த மரணித்த பின்னனி வரலாறாவது தெரியுமா தெரியாதா ரெபெக்கா மேரி உங்களுக்கு?சமண-சைவ சண்டையில் இருப்பக்கமும் கொல்லப்பட்டதன் பின்னியில் இருந்து திருஞானசம்பந்தர் அவர்களின் துர் மரணத்தை அறிந்துகொள்ளும் சிற்றறிவு கூட இவருக்கு இல்லையே!

      ரெபெக்காவின் கருத்து படி பார்த்தால் உண்மையில் மர்மங்களாக முடியும் வாழ்க்கை மட்டுமே சோதியில கலக்குது என்றால் இந்த பின்னியில் இருந்து பார்க்கும் போது ஆண்டாள் ,திருஞானசம்பந்தர் மற்றும் நந்தனார் ஆகியோரின் மரணமும் அவர்கள் சோதியில் கலந்த மர்மமும் விசாரணைக்கு உரியதே!

      சோதியில் கலந்த வள்ளலார் மரணமும் மரமமானதே என்று மறைமலை அடிகளால் மிக தெளிவாகவே கூறியுள்ளார்…

      திருவரங்கம் சென்ற ஆண்டாள் என்ன ஆனார் எளிய கேள்விக்கு ரேபெக்கே பதில் அளிக்கையில் அவர் சோதியுடன் கலந்தார் என்ன்று கூறும் போதே நந்தன் எரிந்தது கொலப்ட்ட வரலாறு தானே ஆண்டாள் விசயத்திலும் முன் வந்து நிற்கின்றது…

      • ரெபெக்கா மேரி, இப்போது திருஞான சம்பந்தரின் துர்மரண விசயத்துக்கு வருவோம்.

        சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும் கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா நிகழ்வும் இதனை மீண்டும் மீண்டும் நடத்திக்காட்டுகிறது.

        இந்த வரலற்று பின்னணியில் சிந்திக்கும் போது கழுவேற்றப்பட்ட சமணர்களின் உறவினர்கள் மற்றும் மதத்தவர்கள் பழி தீர்க்க திருஞான சம்பந்தரின் திருமண நிகழ்வின் போது அவரையும் அவர் சார்ந்தவர்களையும் எரித்துக்கொன்று உள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வரமுடிகின்றது. திருமணத்துக்கு வந்த ஊற்றார் உறவினர் , நண்பர்கள் மற்றும் சைவ பெரியவர்களை எல்லாம் அழைத்துகொண்டு திருஞானசம்பந்தர் தீயில் எரிந்து ஜோதியில் கலந்து சிவனடி சேர்த்தார் என்ற கருத்து முட்டாள் தனமாக இல்லையா உங்களுக்கு? திருஞான சம்பந்தரின் முடிவு என்பது சமணர்களால் நடத்தப்பட்ட பழி தீர்க்கும் படுகொலை… அதனை நீங்க ஜோதியில் கலந்தார் என்று எளிதில் சொல்லிட்டு போகின்றீகள் அறிவுகெட்ட தனமாக!

        இந்த பின்னனியில் பார்க்கும் போது தோழர் கோவனின் கேள்வி ஒன்றும் மரியாதை அற்றது அலல்வே.ஆம் “”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?”””” என்ற கேள்வி பதில் இன்றி பல நூற்றாண்டு காலமாக உறைந்து நிற்கின்றது… அது கோவனின் சிந்தனையில் இருந்து மீண்டும் வெளிபடுகிறது… பதில் கிடைக்காத வரைக்கும் அது எத்துனை நூற்றாண்டுகளானாலும் மீண்டும் மீண்டும் எதிரோளித்துகிட்டே இருக்கும்… அந்த கேள்வி ஆண்டாளை கொன்ற பார்பனர்களை சங்கடப்டுத்திகிட்டே இருக்கும்… உங்களை போன்ற பார்பன அடிமைகள் பழைய பதிலையே அதான் “ஜோதியிலே சேர்த்துடார்” என்ற மொள்ளமாரிதனமான பதிலையே வாந்தி எடுத்துகிட்டு இருப்பீங்க…

    • ரெபெக்கா மேரி,

      வேதத்தை மட்டுமே நம்பும் ஆதி சங்கரர் சோதியில் கலந்து சிவனடி சேர்ந்தார் என்று ரெபெக்கா மேரி எழுதியதை படித்தால் கண்டிப்பாக ரேபெக்காவை பார்த்து சிரித்து எள்ளி நகையாடும் இந்த காஞ்சி சங்கரமட கும்பல்….மேலும் சிலவிவரங்கள் ஆதிசங்கரரை பற்றி :

      ஆதிசங்கரர் அமைத்ததாக 4 மடங்கள் உண்டு. வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. இந்த 4 மடங்களுமே ஆதிசங்கரர் கி.பி. 800-ல் கேரளத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்கின்றன; அதுபோலவே, வடக்கே கேதார்நாத்தில் இயற்கையோடு கரைந்து மறைந்து விட்டார் (அந்தர்தானம்) என்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லி வந்த கும்பகோணம் மடம் பிறகு பிறப்பு காலடி என்ற ஊரில் என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் அந்தர்தானம் ஆனது காஞ்சி காமாட்சி கோயிலில் என்று சொல்ல ஆரம்பித்து இன்று வரை விடாப்பிடியாக அப்படியே பொய் சொல்லி வருகிறது.

      //நந்தனை விடுங்கள். ஆதிசங்கரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற பார்ப்பனர்களும் சோதியில் கலந்து சிவ பரம்பொருளை அடைத்ததாக தான் அவர்களின் வரலாறு கூறுகிறது.//

  24. பொதுவாக இவர்கள் சொல்லும் விளக்கம் பரம்பொருளான அனாதியில் கலப்பது, அதாவது ‘இரண்டற’ / இரண்டல்லாமல் இறைவனாகவே ஆவது. ஆனால் சித்தர்கள் யாரும் ‘சோதி’ என்று கூறியதாக இல்லை. ‘எதுவும் இல்லை’ அதாவது இருப்பது எதுவுமே ஆகாத ‘தோன்றா’பெருமையன். ஆக தோன்றா பெருமையனை ‘சோதி’ என இட்டு கட்டுவது ஏன் சகோதரி?? சோதி என்பது குமார் கூறும் இந்த எரித்து கொல்வது, பந்தம் கொளுத்துவது போன்றவை போல சவுண்டு வரல???
    மர்மங்கள் மர்மங்கள் , அந்த சோதியனே வந்து சொன்னால் தான் உண்டு. அதானால நாம எதோ விசயம் புரியாம பேசுவதாக என்ன வேண்டாம்.பக்தியின் உச்சம், சச்சிதானந்த சொச்சம், புளியோதரை மிச்சம் ‘எல்லாம்’ கரைச்சு குடிச்சு தான் கேக்கிறோம்.

    • //சோதி என்பது குமார் கூறும் இந்த எரித்து கொல்வது, பந்தம் கொளுத்துவது போன்றவை போல சவுண்டு வரல//???It is something like posters saying “Sivalogapathavai adainthaar” and “eeyarkai eythnaar” . nothing to dig in this issue much more. It is a faith that in hindu family if a man ends his life and saying that he entered in tho the feet of a god.

      But Mary is saying this like “enter in to fire” is totally foolish. That derives the meaning that he/she commit suicide by fire or he/she has been killed by fire.

  25. திருஞானசம்பந்தரை எரித்து கொன்றார்கள் என்பது “ஈவே.ரா” பக்தாள்கள் அவிழ்த்து விட்ட இன்னொரு புரட்டு. இதற்கும் எந்த ஆதாரமுமில்லை. சம்மந்தர் சமணர்களை கழுவேற்றி ஒழித்து காட்டினார் என்கிற வரலாறு தான் பதிவாகி இருக்கிறதே ஒழிய, சமணர்கள் தீ வைத்து பழி தீர்த்துக் கொண்டார்கள் என்று எந்த இடத்திலும் கூற படவில்லை. சமணர்களின்
    இலக்கியங்களிலும்(வடமொழி,தென்மொழி ஆகிய இரண்டிலுமே) இதை பற்றி எங்குமே ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. பெரியாரிய அனுமார்களின் அனுமானத்தை தாண்டி, நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் எந்த பவுதீக ஆதாரமும் இல்லாமல், அறிவு நாணயமற்ற அனுமானங்களை தாண்டி இதற்க்கு வேறு எந்த முகாந்திரமும் இல்லை.

    இரண்டாவது, கோவன் ஒன்றும் அப்பாவியாக ஒன்றும் தெரியாதவராக, என்னடா செய்தீர்கள் என்றும் மட்டும் கேட்டு நிறுத்தவில்லை, அடுத்த வரியிலேயே ” தேவநாதன் என்ன பண்ணினான், நித்யானந்தா என்ன பண்ணினான்” என்று போலி சாமியார்களை கூறுவதன் மூலமாக ஒரு விடயத்தையும் சேர்த்து தான் சொல்ல வருகிறார் கோவன். அதாவது ஆண்டாளை கோவிலுக்குள் கொண்டு சென்று பார்ப்பனர்கள் தங்களுக்கு தாசியாக வைத்துக் கொண்டார்கள் என்று ஆதாரமும் இல்லாமல் லும்பன் தனமாக பாடுகிறார். ஒன்றை தெளிவாக்கி விடுகிறேன்,நிச்சயம் உங்களின் அஜெண்டா தமிழர்களிடம் விலை போகாது, நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார பிரச்சனைகளை மூலதனமாக வைத்து நல்லது செய்ய போகிறோம் என்கிற பெயரில் தமிழர்களை ஏமாற்றி அவர்களின் தொன்மங்களை, நம்பிக்கைகளை சிதைக்க அழிக்க நினைக்கும் கம்யூனிஸ்ட் ,பெரியாரிய இயக்கங்களின் பகல் கனவு ஒரு நாளும்பலிக்காது.

    • பாரபனர்களின் வரலாற்றையும் , பார்பன பெருமைகளையும் தமிழரின் பெருமைகளாக நம் முன் வைப்பதன் மூலமாகவும் மேலும் பார்பன கருத்தாக்கங்களுக்கு எதிரான பெரியாரிய கருத்தாக்கங்களை எள்ளி நகையாடுவதன் மூலம் ரெபெக்கா தன்னை “பார்பனனுக்கு சத் சூத்திரன்” என்ற பட்டத்தை மனு தர்மத்தின் அடிபடையில் பெறுகின்றார்…

  26. சின்னா….

    //ஆனால் சித்தர்கள் யாரும் ‘சோதி’ என்று கூறியதாக இல்லை//

    கூறி இருக்கிறார்கள், நீங்கள் படிக்கவும். வள்ளலாரே பல இடங்களில் பாடி இருக்கிறார். அவரின் வழிபாட்டு முழக்கம் அருட்பெரும்ஜோதி என்பது தான்.

    என் நோக்கம் ஒன்று தான், அது இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குவது கிடையாது. அதனை இந்துக்கள் பார்த்துக் கொள்ளட்டும். எங்கள் தமிழர்களின் தொன்மங்களை, பெரியாரிய கம்யூனிச அரை வேக்காடுகளிடம் இருந்து காக்க வேண்டும் என்பது மட்டுமே. அன்று ஈ.வே.ரா கண்ணகியை பழித்தது போல் இப்போதும் அவதூறு பேசி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அது ஆண்டாளாக இருந்தாலும் சரி அல்லாவை பற்றி பாடிய உமறு புலவராக இருந்தாலும் சரி.

    கோதையை தாசி என்று கூறினார்கள், இப்போது சோதியில் ஐக்கியமானாள் என்று கூறியதன் மூலம், வள்ளலாரை கூறியது போல் பார்ப்பனர்கள் எரித்து விட்டார்கள் என்று கூறும் நிலைக்கு வந்து விட்டார்கள். இது போதும். இனிமேல் மற்றதை, இந்து மதத்தை சார்ந்த மக்கள் முடிவு செய்து கொள்வார்கள். இதற்கும் மேல், தாசியாக வைத்திருந்து பிறகு கொன்று விட்டார்கள் என கூறினால், அதை விட கேவலம் இந்த அனுமார்களுக்கு வேறு ஏதும் இருக்க முடியாது. வள்ளல் பெருமானாரின் விடயத்தில் இந்த பெரியாரிஸ்டுகளின் பித்தலாட்டம் விலை போகவில்லை. மக்கள் பெரியாரின் உளறல்களை குப்பையில் எரிந்து விட்டார்கள் அதே போன்றது தான் ஆண்டாளிடம் ம.க இ.க , கோவன், தி.க போன்றோர்கள் நடத்தும் பித்தலாட்டமும், இதுவும் தமிழர்களிடம் செல்லுபடியாகாமல் போகும், செல்லாக்காசாகி போகும்.

    //மர்மங்கள் மர்மங்கள் , அந்த சோதியனே வந்து சொன்னால் தான் உண்டு. அதானால நாம எதோ விசயம் புரியாம பேசுவதாக என்ன வேண்டாம்//

    சோதியன் உங்களுக்கு வந்து சொல்ல மாட்டான், உண்மையை நீங்கள் தான் தேடி போக வேண்டும். வினவு தளத்தின் பின்னூட்ட பெட்டியில் விவாதம் செய்து சண்டை போட்டு கொண்டிருந்தால்,” உன்னை அம்பல படுத்துகிறேன் பார் பேர்வழியாக” சண்டை போட்டு கொண்டே இருக்க வேண்டியது தான்,. அதற்க்கு முடிவே இருக்காது.

    இங்கு நான் யாரிடமும் நேரடியாக விவாதிப்பதில்லை. வினவு குழுவிடம் மட்டுமே பேச வந்தேன். ஆண்டாளை பற்றி சிலரின் அநாகரீக பேச்சினால் நான் தொடர வேண்டியது ஆனது. நீங்கள் மாற்று கருத்து உடையவராக இருந்தாலும், பண்பாக பேசுவதால் தான் உங்களிடம் தனி பட்ட முறையில் என்னால் விவாதிக்க முடிகின்றது. நன்றி

    • பார்பனியத்தின் அடிமையாக , வரலாற்றுக்குற்றவாளியாக இங்கே நிற்கும் ரெபெக்கா மேரி இடம் நடத்தப்டும் விசாரணையில் “சோதியன் உங்களுக்கு வந்து சொல்ல மாட்டான், உண்மையை நீங்கள் தான் தேடி போக வேண்டும்” என்று ரெபெக்காவின் புலம்பல் அளவுக்கு மீறி போய்கிட்டு இருக்கு. இவர் கூறும் ஜோதியில் சேர்த்துட்டாங்க என்ற விசயத்தின் பின்ன்ணணியில் முட்டாள் தனம் , அறிவியல் அற்ற மடமை தனம் ,பார்பனிய கால் நக்கி தனம் எல்லாம் வெளியே வந்து கிட்டு இருக்கு…

    • தமிழ்தேசியம் எங்கு இழுத்துக்கொண்டு செல்கிறது தெரிகிறதா…
      அவன் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி அனைவரையும் திரட்டி பழைய மூடத்தனங்கள் அனத்தையும் தமிழ் என்ற புது மூட்டையில் கட்டி எங்கு போய் ஐக்கியமாக வேண்டுமோ அங்குதான் வெகுவேகமாய் ,தமிழ் என்ற வெறியூட்டி இழுத்துச்செல்கிறது.
      பெரியார் யாருக்கெல்லாம் வேப்பங்காயாய் கசப்பாரோ அவர்களில் இவர்களும் அடக்கம்.சிலரை உரசிப்பார்க்க ஒரே உரைகல், பெரியார் இனிக்கிறாரா கசக்கிறாரா என்பதுதான்.அதிலிருந்து அவர்களின் போக்கு என்ன அவர்களின் பயணம் என்ன புரிந்து கொள்ள முடியும்.

      சீறாப்புறாணம் இலக்கியமா வரலாறா என்பதில்தான் அதை தூக்குவதா வீசுவதா என்பது இருக்கிறது..
      தமிழின் சுவைக்காக அதை ஏற்றால் எந்த சிக்கலும் இல்லை.அதையே வரலாறாக மாற்றி தூக்கி தலையில் தாங்கினால் கடாசி எரிய வேண்டியதுதான்.
      சிலப்பதிகாரத்தை ரசிப்பதில் பெரியாருக்கு பிரச்சினை இல்லை.கற்பனையை வரலாறாக்கி கண்ணகிக்கு கோயில்வரை போவதுதான் அவரை உறும வைக்கிறது.

      ஆனால் ஒன்று..
      இன்று தமிழ்தேசியம் பேசும் குஞ்சுகள், தான் அடைகாத்து பொறிக்கப்படுவதற்க்கு காரணமானவரையே நன்றிகெட்டு இகழும் நிலைக்கு போனதற்க்கு, பொய் பெரியாரிய சுயநல் கோட்டான் களே காரணம்.
      அவைகள் பெரியாரையும் அசலாய் தமிழ்ச்சமூகத்திற்க்கு காட்டவில்லை.அவரை பின்பற்றியும் கொஞ்சமும் நடக்கவில்லை….
      விளைவு …பல்வேறு வேடமிட்டு பார்ப்பணிய பாம்பு படமெடுத்து ஆட ஆரம்பிக்கிறது.

      • மீரான் சார் , இங்கே நான் செய்துகிட்டு இருக்கும் விசயம் பொதுவெளியில் சீமான் தமிழ் தேசியம் என்ற பெயரில் காவியை நோக்கி பயணிக்கும் செயல் போன்று ரெபெக்காவின் வாயை பிடுங்கி அவர் உள்ளக்கிடங்கை வெளிக்காட்ட அவருக்கு உதவிகிட்டு இருக்கேன்… அவரும் தன் போலியான தமிழ் தேசியத்தின் உணர்வுகளை பார்பனிய பிரமிடுகளின் ஊடாக கட்டமைத்துகொண்டு இருக்கார். வெக்கம் இன்றி வெளியே பார்பனிய போலி தமிழ் தேசிய குப்பையை வினவில் கொட்டிகிட்டு இருக்கார்.. இவற்றை எல்லாம் வேடிக்கை பார்ப்பது பெரியாரிஸ்டுகள் மட்டும் அல்ல.. அறிவார்ந்த மார்சிஸ்டு களும் தான்… ஒரு இஸ்லாமியரா நீங்க பெரியாரை உயர்த்தி பேசிகிட்டு இருக்கீங்க… ஒரு புத்த-ொவுத்த நம்பிகையாலனாக நான் நம் மக்களுக்காக பேசிக்கிட்டு இருக்கேன்… ஆனால் மற்றவர்கள்?

        //நன்றிகெட்டு இகழும் நிலைக்கு போனதற்க்கு, பொய் பெரியாரிய சுயநல் கோட்டான் களே காரணம்.///

        • மாணவன் குமார்
          வெறும் ஆதங்கப்பட்டு பயனில்லை.தமிழனுக்கு மிக சோதனையான காலகட்டம் இது….
          அரசியல் ரீதியாகவும் ..பண்பாட்டு ரீதியாகவும்
          இதை மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டிய கடமை பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

          அதிகாரத்தை வைத்துள்ள நச்சு பாம்பு எப்படியாவது தன் நஞ்சை இந்த மண்ணில் கக்கி அதை பரவச்செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது.
          ரஜினி கமல் சீமான் போன்றதுகளெல்லாம் அதற்க்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தளம் அமைத்து கொடுக்கும் சேவக குஞ்சுகள்.

          இந்த பெரும் ஆபத்தை மிக நேர்த்தியாக கவனமாகத்தான் மக்களின் பார்வைக்கு எடுத்த்ச்செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்.
          இதற்க்கு பெரியார் வழி வந்தவர்கள் என்று பொய் பேசித்திரியும் திமுகவை நம்பி பயனில்லை.
          திகவும் இதுவரை கருணாநிதிக்கு முதுகு சொறிந்து விட்டு இப்போது ஸ்டாலினுக்கு கால் அமுக்கி விடும் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

          இதற்க்கெல்லாம் மூலகர்த்தா திருவாளர் கருணாநிதிதான்.
          கண்ணகிக்கு சிலை வைக்கிறேன்…வசனம் எழுதுகிறேன்…
          என்று கூறுகெட்டத்தனமான எல்லா வேலைகளையும் செய்துகொண்டு, “நான் பெரியாரிடம் பாடம் படித்தேன்” என்று வெட் கமில்லாமல் பிதற்றித்திரிந்தார்…
          கண்ணகி கதையை அப்படியே உண்மையாக்கி உளறித்திரிவது பெரியாரின் சிந்தனையா…

          கண்ணகி கணவனுக்காக மதுரையை சபித்தாள்..மதுரை எறிந்தது என்றால், ராமன் கடலில் பாலம் கட்டினான் என்பதை ஏன் நக்கலடிக்கிறார்..

          பெரியார் ஆவேசமாக கடவுள் சிலைகளை உடைத்தார்…கடவுள் நம்பிக்கையை நகையாடினார்..
          உண்மை.
          அவரிடம் இருந்தது அறச்சீற்றம் அவருக்கு எந்த சுயநல உள் நோக்கமுமில்லை.அதை சமூகம் உணர்ந்திருந்தது.அதனால் எந்த கொந்தளிப்புமில்லை.
          கருணாநிதி அப்படிப்பட்டவரா….கபடமும் கள்ளமும் நிறைந்த ஒரு மனிதரின் எள்ளலும் நக்கலும் நிச்சயம் மக்களுக்கு எரிச்சலையும் வேதனையையும் தான் தரும்.
          அதை பார்பணியம் பயன்படுத்திக்கொள்கிறது.

          ராமன் கட்டிய பாலம் கடலுக்குள் கிடக்கிறது என்ற ஒன்றை சொல்லி கிளப்புவது தெரிகிறதா…
          அதை எப்படி எதிர் கொளவது…

          ” அடப்பாவிகளா..இதே ராமனின் பெயரைச்சொல்லித்தான் இருக்கிற பள்ளிவாசலை இடித்துத்தள்ளி ரத்த ஆற்றை ஓட்டினீர்கள்.
          அதே ராமனின் பெயரைச்சொல்லி இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாக காட்டி மறுபடியும் ஒரு ரத்த ஆற்றை ஓட்டப்பார்க்கிறிர்களேடா”

          என்று சொன்னால் சிந்திக்கும் மக்கள் சிந்திப்பார்கள்..சிந்திக்காமல் போகிறவனுக்கும் பிரச்சினை இல்லை.
          அதைவிடுத்து,” ராமன் பொறியியல் படித்தானா..எந்த கல்லூரியில் படித்தான் எப்போது படித்தான்”
          இது எதற்க்கு?
          இது ராமன் மேல் பக்தி இல்லதவனையும் எரிச்சல் படுத்தும்.
          அதுபோல ஒரு இஸ்லாமிய விழாவில் போய், “இந்து என்றால் திருடன் என்று பாரசீக மொழியில் சொல்வார்கள்”
          இதையார் இவரிடம் கேட்டார்கள்?
          இதெல்லாம் தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள்..தன் குடும்பத்து அழுக்கை போக்க வக்கற்று சிலபேரை தாஜா செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டுவது..
          இது, வாய்பிளந்து காத்திருக்கும் பார்பணிய திமிங்கலத்திற்க்கு வாலண்டியராய் போய் இரையாவது.

          அவரின் இளவல் இப்போது, திமுகவில் 90 சதவீதம் இந்துக்களதான் என்று திருவாய் மலர்கிறார்.
          எதற்க்கு இந்த ஈனத்தனம்?
          தந்தையின் வார்த்தையில் இந்து என்றால் திருடன். தனயனின் வார்த்தையில் 90சதவீதம் இந்துக்கள் திமுகவில்.
          அப்படி என்றால் திமுகவில் 90சவீதம் திருடர்கள்தான் இருக்கிறார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்களா…

          இந்த கேனத்தனமெல்லாம் பெரியாரை சரியாக புரியாமல், புரிந்தாலும் பதவி வெறியால் அதை புறக்கணித்து திரிவதால் நடக்கும் அவலங்கள்.
          இதையும் சமாளிக்க சுபவீ போன்றவர்கள்.

          இதையெல்லாம் கருத்தில் கொண்டே இன்றைய சூழ்ச்சிகளை எதிர்கொண்டு வெல்ல வேண்டி இருக்கின்றது.
          புத்தம்புது ரத்தம் பாய்ச்சிய பெரியாரின் கொள்ளுப்பேரன் கள் வரவேண்டி இருக்கின்றது.
          பெரியாரின் மேல் படிந்திருக்கும் தூசு படலங்களை துடைத்து எறிந்து அவரை வெளியில் கொண்டு வந்துதான் இவற்றை எதிர் கொள்ள முடியும்.

      • மீரான் சார், சிலபத்திகாரம் -கண்ணகி விசயத்தில் பெரியார் அவமரியாதை செய்துட்டார் என்று இங்கே கூறும் பார்பனிய அடிமைகலுக்கு பல விசயங்கள் சுத்தமாக தெரியாதுங்க… விவாதம் என்பது பெரியார் காலத்தில் இருந்து சைவ பெரியார்களான மறைமலை அடிகளார் அவர்களுக்கும் பெரியாருக்கும் நடந்துகொண்டு தான் இருந்தது என்ற விசயம் தெரியாதுங்க.. அவர்களை போன்று அந்த பெரியோர்களை போன்று விவாதிக்க துப்பற்ற இவர்கள் இங்கே வினவில் உலவும் பார்பன அடிமைகள் பெரும் மறு மொழியை பார்கின்றிர்கள் தானே?

  27. அப்புறம் இன்னொன்று, மாணிக்கவாசகர் கோவிலுக்குள் சென்று மறைந்தார் என்று தான் வரலாறு இருக்கிறதே ஒழிய, நோய்வாய் பட்டு, மூக்கு சிந்தி, இருமி இறந்து போனார் என்று எங்கும் கூறவில்லை. முடிந்தால் பெரியாரிய அனுமார் இதற்கும் ஒரு பொருள்முதல்வாத தொன்மவியல் ஆதாரத்தை அளிக்கட்டும். சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார். இதற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது. அவரை கொலை செய்யும் அளவிற்கு ஒரு காரணமும் பார்ப்பனர்களுக்கு கிடையாது. முடிந்தால் புது விஷயத்துடன் யோசித்து வரவும்..

    • தமிழர் என்ற அடையாளம், ஹந்த்டுத்டுவா , போலி பொருள்முதல் வாதம் ஆகிய கருத்தாகங்களுடன் பார்பனியத்தின் அடிமையாக வந்து பேசிகிட்டு இருக்கும் நிலையில் உள்ள ரெபெக்காவின் நிலை மிகவும் கவலக்கு உரியதாக தான் இருக்கு. “மாணிக்கவாசகர் கோவிலுக்குள் சென்று மறைந்தார் என்று தான் வரலாறு இருக்கிறதே ஒழிய, நோய்வாய் பட்டு, மூக்கு சிந்தி, இருமி இறந்து போனார் என்று எங்கும் கூறவில்லை” என்று ரெபெக்கா மேரி கூறுவதே பொருள் முதல் வாதாத்துக்கு முர்ணபாடானது தான் என்று ஏன் எந்த மார்சிய வாசகர்களுக்கும் புரியவில்லை ? உயிரியல் சார்ந்த மனித உடல் திடிரென்று காணாமல் போக முடியாது என்ற எளிய அறிவியல் உண்மை கூட இந்த மேரிக்கு தெரியவில்லையே ஏன் ? கண்ணை மறைப்பது பார்ப்பனியமாக இருக்க உண்மை எப்படி அறிவின் முன் வந்து நிக்கும்? இவரின் கருத்து முதல் வாதத்துக்கு பொருள் முதல்வாதத்தை இழுப்பது அறிவியல் ஆபாசமாக இருக்கு!

      பொருள் முதல் வாதம் அறிவியல் சார்ந்தது… அப்படி அறிவியல் அடிபடையில் ஒரு மனிதன் மறைந்து போனான் என்ற மேரியின் கூற்று எப்ப்படி அறிவு பூர்வமானதாக இருக்க முடியும்? ரெபெக்கா மேரி அவர்களே மாணிக்கவாசகர் கோவிலுக்குள் சென்று மறைந்தார் என்ற உங்கள் வாதத்துக்கு நீங்க கொடுக்க நினைக்கும் ஆதாரமும் அப்ப மொக்க பீசு தானே?

    • //பொருள்முதல்வாத தொன்மவியல் ஆதாரத்தை அளிக்கட்டும். //
      /மாணிக்கவாசகர் கோவிலுக்குள் சென்று மறைந்தார்//
      what a Nonsense talk it is!Death of a man might occur based on his health. Some times might be based on Accident or suicide. How can someone provide material evidence for the misty in the history? Even Mary can not provide evidence for this issue.

      //தமிழர்களின் தொன்மங்களை, பெரியாரிய கம்யூனிச அரை வேக்காடுகளிடம் இருந்து காக்க வேண்டும் என்பது மட்டுமே. // By saying this Mary I have supported all type of false statements given by Hindu-Bramanas. In Science it is a Very simple derivation : A man Integrating with the fire means either suicide or murder. In Samanthar death too how a man like him murdered all his supporters with fire. In rare cases it is happening in the Christianity. In UK Christian priest kills his followers in the name of God.(mass suicide) . Samandar too did the same for his followers.

      //கோவன் ஒன்றும் அப்பாவியாக ஒன்றும் தெரியாதவராக, என்னடா செ//

      Yes Conrad kovan is thinking on the right direction. In the name of “Andal integrated in to Fire” What is really happened to Andal? What did the Srirangam people do for Andal?

  28. உண்மை தான் ஆண்டாள் தாசியாக வாழ்ந்து இருப்பாங்க என்பது மனித நேயம் கொண்டோரின் கூற்று.. ஆண்டாளை தீயில் இட்டு கொன்றோம் எப்பது பார்பன அடிமை ரெபெக்காவின் கூற்று…

    ஜோதியில் கலந்துட்டாங்க என்ற ரெபேக்காவின் கூற்றில் ஒவ்வொன்றாக அப்படி இல்ல அவர் பேச்சு பொய் என்று விளக்கப்ப்ட்டுகிடு வருது இந்த விவாதத்தில்…இதுவரைக்கும் சம்மந்தர் , மாணிக்கவாசகர் ஆதிசங்கராரியும் , வள்ளலாரையும் அவர்கள் ஜோதியிலே கலந்துட்டாங்க என்று சொன்ன ரெபெக்கா இப்ப அடக்கியே வாசிகின்றார்கள்….தன் வாதத்தை நிலை நிறுத்த இப்ப அவர்கள் ஜோதி விசயத்தை கண்டும் காணாமலும் போறாங்க…..

    மீதி உள்ள ஆண்டாள் மேட்டரில் ஜோதி எங்கே இருந்து வந்தது யார் இட்ட தீ அது என்று கூறட்டுமே… ஆண்டாள் எப்படி கொலை செய்யப்பட்டார் என்று விளக்கமா இந்த மேரி கூறுவதில் என்ன தயக்கம்?

    உண்மை தான் ஆண்டாள் தாசியாக வாழ்ந்து இருப்பாங்க என்பது மனித நேயம் கொண்டோரின் கூற்று.. ஆண்டாளை தீயில் இட்டு கொன்றோம் எப்பது பார்பன அடிமை ரெபெக்காவின் கூற்று…

  29. தோழர் கோவனின் “ஆண்டள என்ன பண்ணிட்டீங்கடா?” என்ற கேள்விக்கு பின்னாடி வரும் போலி சாமியார்கள் இந்த பார்பன அடிமை ரெபேக்காவுக்கு குத்துது குடையுது என்றால் .., இந்த அடிமை உண்மை நினைக்கும் திருமங்கை ஆழ்வார் அதே ரங்கன் துணையுடன் கொன்று ஒழித்த உழைக்கும் மக்களை பற்றிய செய்தியும் வருதே அது இந்த அடிமையின் அறிவுக்கு ஏறவில்லையா? ஏன் ஏறவில்லை? இந்த அடிமை ரெபெக்கா பார்பன அடிமை என்பதால் ஏறவில்லையா? தேவனாதனாவது பரவாயில்லை பாலியல் வித்தில் எதிர் பாலினத்தவிரின் அனுமதியுடன் தான் கோவிலில் அசிங்கம் பண்ணினான்…

    ஆனால் இந்த அடிமை ஆராதிக்கும் திருமங்கை ஆழ்வார்..? கொலை காரபாவியாதானே இருந்து இருக்கான்.

    தோழர் கோவனை பார்த்து லும்பன் என்று கூறும் இந்தபார்பன அடிமை தான் உண்மையிலேயே பார்பன பண்பாட்டை கால் நக்கும் லும்பி… தூ…

    • குமார் எங்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் ஜோதிமயமானவர் என்பது எங்களின் நம்பிக்கை.

      உலக புகழ் பெற்ற மனித மேதை ராமானுஜருக்கு கணிதம் பற்றி நாமகிரி அம்மன் சொல்லி கொடுத்ததாக அவரே பல முறை சொல்லியிருக்கிறார்.

      ராமானுஜருக்கு நாமகிரி அம்மன் கணிதம் சொல்லி கொடுத்தார் என்பதை நாங்கள் நம்புகிறோம். உங்களை போன்ற ஆட்கள் நாமகிரி அம்மன் எப்படி சொல்லி கொடுக்க முடியும், அது நடக்காது எண்பிர்கள் ஆனால் அதற்கான ஆதாரம் தரமாட்டிர்கள். இதையும் நீங்கள் யூகத்தின் அடிப்படையில் ஆதாரம் இல்லாமல் நிராகரிப்பீர்கள்.

      என் கேள்வி எல்லாம் கோதை ஸ்ரீரங்கத்தில் ஜோதியில் கலந்தார் என்பது எங்கள் நம்பிக்கை நீங்கள் இல்லை என்கிறீர்கள் ஜோதியில் கலந்தார் என்பதை தீயிட்டு கொன்றார்கள் என்கிறீர்கள் சரி ஆதாரம் எங்கே ? வல்லாரை பற்றியும் இது போல் பேசுகிறீர்கள் வள்ளலார் வாழ்ந்தது ஆங்கிலேயர் ஆட்சியில், வள்ளலாரை தீயிட்டு கொளுத்தினார்கள் என்றால் ஆங்கிலேயர்கள் வழக்கு தொடர்ந்து இருப்பார்களே அந்த ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாம் எங்கே.

      • மணி,தேர்வுக்கு முன்னே என் மாணவர்கள் பசங்களும்,பிள்ளைகளும் கோவிலுக்கு போய் வேண்டிகிட்டு போறாங்க,, . காரணம் என்ன என்று கேட்டேன்…படிக்காத பசங்க சொன்ன காரணம் வியப்பில் ஆழ்த்தியது.ஏன் சார் நாங்க நல்லா படிச்சி இருந்தால் தேர்வுக்கு முன்னே எதுக்கு சார் கோவிலுக்கு போறோம் என்றார்கள்.. ஒரு ஆசிரியரா இந்த கேள்வியும் அவர்கள் பதிலும் எனக்கு முக்கியமானது..மாணவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள உதவும் உரையாடல் அது. இங்கே என்ன விசயம் என்றால் இந்த கேள்விகள் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு எதிரானதா என்ன?

        இப்ப கணித மேதை ராமானுஜம் அவர்களின் விசயத்துக்கு வருவோம்… அவருக்கு அம்ம்னால் தான் கணிதம் வந்தது என்றால் அதே அம்மன் ராமானுஜத்துக்கு மற்ற பாடங்களையும் நல்ல படிக்க உதவி இருக்கனும் அல்லவா? ஏன் அவர் மற்ற பாடங்களின் பெயில் ஆனார்? அம்மன் அவருக்கு ஏன் உதவவில்லை? இப்ப இந்த கேள்வி எழுகின்றது இல்லையா? இந்த கேள்வியை கேட்டால் அது எப்படி ராமனுஜரின் தனி பட்ட நம்பிக்கைகளுக்கு எதிரானதாக ஆகும்… தம்பி மணி எதனையும் கேள்வி கேட்பது தான் அறிவியல்…அது சமுகத்தின் மீதும் கேள்வியை வைக்கும்…

        இப்ப பாருங்க திருமங்கை ஆழ்வார் எவ்வளவு கேடுகெட்ட வேலையை தன் வாழ்க்கையில் செய்து இருக்கார்… திருடனாக, கொலைகாரனாக, தொழிலாளிகளை கூலி கொடுக்காமல் நீரில் முழுகடித்த கொலைகாரனாக இருந்து இருக்கார்.. இதனை எல்லாம் உங்களின் தனிபட்ட நம்பிக்கை என்றால் பாதிக்கபட்ட எங்க ஜனங்க சார்பாக நான் கேள்வி எழுப்பத்தான் செய்வேன்.. முடிந்தால் பதில் சொல்லுங்க.. இஇல்லாட்டி போங்க.. உங்களை யார் இங்கே கையை பிடித்து இழுத்தா?

        அதே தான் ஆண்டாள் விசயத்திலும்..ஆண்டாள் என்பவர் இந்த சமுகத்தின் ஒரு அங்கம்… அவிங்களை நீங்க ஜோதியிலே கலந்துட்டாங்க (தனிபட்ட நம்பிக்கை)என்று கூறும் போது அறிவுக்கு ஏற்புடையதாக இல்லாமல் அது எப்படி ஒரு பெண் ஜோதியிலே கலக்க முடியும் என்பது தான் எங்க கேள்வியா இருக்கும்.. கேட்போம்..கேட்டுகிட்டு தான் இருப்போம்…

        ஏன் உங்க ஹிந்து மதம் தர்க்கம் செய்யவே கூடாது என்று எங்கே கூறியிருக்கு சொல்லுங்க பார்க்கலாம்… தரகம் இல்லை என்றால் இன்று ஆதிசங்கரர் மற்ற மறைந்த மனிதர்களை போன்று ஒரு சாதாரன மனிதர் தான்… தர்க்கம் இல்லை என்றால் ராமானுஜர் யார் என்றே தெரியாமல் போய் இருக்கும்ம்…. தர்க்கம் இல்லை என்றால் சித்தார்த்தர் புத்தராகவே மாறியிருக்க முடியாது…

        • Excellent discussion kumar. But you can not expect proper replay from so called hinthuthutvaas.. They need to create problem in public based on religion instead of a nice discussion. But do not leave them. You keep on writing fitting replays like this. //ஏன் உங்க ஹிந்து மதம் தர்க்கம் செய்யவே கூடாது என்று எங்கே கூறியிருக்கு சொல்லுங்க பார்க்கலாம்… தரகம் இல்லை என்றால் இன்று ஆதிசங்கரர் மற்ற மறைந்த மனிதர்களை போன்று ஒரு சாதாரன மனிதர் தான்… தர்க்கம் இல்லை என்றால் ராமானுஜர் யார் என்றே தெரியாமல் போய் இருக்கும்ம்…. தர்க்கம் இல்லை என்றால் சித்தார்த்தர் புத்தராகவே மாறியிருக்க முடியாத//

        • வள்ளலார் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தான் ஜோதியில் கலந்தார்… உங்கள் வாதப்படி வல்லாரை கொன்று இருந்தால் ஆதாரம் எங்கே ? காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் எங்கே ? நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவரங்கள் எங்கே ? சாட்சிகள் பற்றிய விவரங்கள் எங்கே ?

          கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள், ஜோதியில் கலப்பதை தீயிட்டு கொல்லப்பட்டார்கள் என்கிறீர்கள் ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்காமல் எப்போதும் போல் யூகத்தின் அடிப்படையில் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று உங்கள் கற்பனை கதைகளை அடித்து விடுகிறீர்கள்.

          நீங்கள் ஹிந்து மாதத்தில் மட்டுமே இப்படி விவாதம் செய்ய முடியும் மற்ற மதங்களில் அவர்களின் கடவுளை பற்றி இந்த மாதிரி அவதூறாக பேசினால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும் அதற்கான துணிச்சல் உங்களை போன்ற முட்டாள் (முற்போக்கு) வாதிகளையும் இல்லை.

      • மணி,இங்கே நான் பேசிகிட்டு இருபது நீங்க கொடுக்கும் பொய் வாக்குமூலம் மற்றும் அதற்கான திரிக்கப்பட்ட ஆதாரங்கள் மீதுதான். அதனை தான் நான் இங்கே விவாத பொருளாக எடுத்துகிட்டு பேசிகிட்டு இருக்கேன்.ஜோதியில சேர்த்துட்டாங்க என்று கூறும் உங்க வாங்குமூலத்தை எப்படி அறிவியல் பூர்வமாக ஏற்றக முடியும் மணி? நீங்க கொடுக்கும் இந்த வாக்குமூலம் அறிவியலுக்கு உட்படாதது, லாஜிக் இல்லாதது தானே?ஜோதியில கலந்துட்டாங்க என்று நீங்க கூறும் போது திருவரங்கத்து பார்பனர்கள் ஆண்டாளை தீயில் இட்டு கொன்று இருக்கனும்… இல்ல அப்படி இல்லை என்று நீங்க கூறவருகிண்றீகள் என்றால் ஆண்டாள் திருவரங்கத்து கோவிலில் தன் இறுதி காலம் வரைக்கும் தேவரடியாராக வாழ்ந்தார் ,ரங்கனுக்கு சேவை செய்தார் என்பதனையாவது அறிவின் அடிபடையில் ,எதார்த்த வாழ்வின் அடிப்டையில் ஏற்கனும் அல்லவா? ரெண்டையும் ஏற்காவிட்டால் எப்படி?

        நீங்க முட்டாள் தனமாக தான் பேசுவிங்க அதனை உங்க நம்பிக்கை என்பீர்கள்.. அந்த முட்டாள் தனமான உங்க நம்பிக்கையை நான் எதுக்கு ஏற்று கொள்ளனும் ?

    • தனக்கு வேண்டிய இடத்தில் வரலாறு, வேண்டாத இடத்தில் புராணம் நல்ல லாஜிக் மாவோ பிரதர்..

      • ஆண்டாள் ஜோதியில சேர்ந்தது ,திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை கூலி கொடுகாமல் நீரில் முழுகடித்து கொன்றது வரலாறாக இருந்தாலும் அல்லது புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கொடுமைகள் தான் இங்கே பேசுபொருள் என்பது நம்ம அட்வகேட் ரங்கராஜனுக்கு தெரியலையே…! அப்ப இதுவெல்லாம் புராணம் என்றால் அவைகள் அனைத்தும் கட்டுகதை அதனை பற்றி பேசி என்ன பயன் என்று கூருங்க… ஒரு வேலை வரலாறு என்பீர்கள் என்றால் அந்த வ்ர்லார்ரில் பார்பனர்களால் நிகழ்த்தபட சமுகத்தின் மீதான் கொடுமைகளுக்கு பகிரங்கமாக் மன்னிப்பு கேளுங்க ரங்கா…

        எது உங்க சாய்ஸ்…. கட்டுகதை என்பதா? பகிரங்க மன்னிப்பா?

  30. திருமங்கை ஆழ்வாரை பற்றி பெரியாரிய மனநோயாளிகளின் இன்னொரு அவதூறு. அரங்கானதா.. இன்னும் இந்த பெரியாரிய அரை வேக்காடுகளிடம் இருந்து என்னவெல்லாம் வர போகிறதோ. அனுமானிக்கும் அனுமார்களின் தொல்லைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கம்ப ராமாயணத்தில் சாதியை தூக்கி பிடிக்கும் பாடல்கள் இருக்கிறது என்று இவர்களின் தலைவர் ஈ.வே.ராமசாமி நாய்க்கர் கூறிய வடிகட்டிய பொய்க்கே இன்னும் ஆதாரம் கொடுக்கவில்லை. கம்பர் எழுதிய பத்தாயிரத்து சொச்ச பாடல்களில் எங்கே மனு தர்மத்தை தூக்கி பிடிக்கிறார் என்று கூற துப்பில்லை. இதில் ஆழ்வாரை பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், இங்கு வந்து புகைச்சலில் கதறுவதை பார்க்கும் பொழுது இன்னும் இனிமயாக இருக்கிறது.

    பொருள்முதல்வாத அடிப்படை என்றால், தக்க பவுதீக ஆதாரங்களை கூறுவது. நாம் பேசும் கூற்றுக்கு சரியான துல்லியமான ஆதாரம் அளிக்க வேண்டும். அனுமானத்தில், மண்டை காய்ச்சலில் அடித்து விடுவது, அறிவியல் முறையில் வராது.

    • ஆமாம் ஆமாம் ஜோதியில கலந்துட்டார்…. கோவிலுக்கு உள்ளே போய் மறைந்துவிட்டார் என்பது தான் இந்த பார்பன அடிமை ரெபெக்கா மேரிக்கு பொருள்முதல்வாத தத்துவம் போல… வரட்டு தவக்கள மாதிரி சொன்னதையே சொல்லாம மாத்தி யோசிக்கணும் இந்த அடிமை…பார்பன அடிமை…

    • வைகுண்ட ஏகாதசி – காட்டுமான தொழிலாளர்கள் மீதான படுகொலை. ஆதாரம் திருமங்கை ஆழ்வார் வைபவம். இந்த நூலை பார்பன அடிமை ரெபெக்கா மேரி படிக்கவும்… pdf வேண்டுமானால் தரேன்… “ஆமாம் ஆமாம் இந்த புத்தகத்தை தான் தேடிகிட்டு இருந்தேன்” என்று பீலா விடாமல் முழுசா படிச்சிபார்த்துவிட்டு அப்புறம் இன்னும் வெறியை ஏற்றிக்கொண்டு வந்து வினவில் உமது பார்பன அடிமைத்தன விசத்தை கக்கவும் மேரி……

      https://docs.google.com/file/d/0BwlnKSgt8RGmYXpIQ2l5aUVZdGs/view

      வைகுண்ட ஏகாதசி – காட்டுமான தொழிலாளர்கள் மீதான படுகொலை

      நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான்.

      ஆனால் , அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகலுக்கு அந்தக் கோயிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்தையே’ சாத்திவிட்டானர். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டுபோய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டானர்.

      ஓடக்காரன் துணையோடு. அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ ( பார் வானம் – சுடுகாடு, பார்வணம் -சிரார்த்தம் செய்யும் இடம் ) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று கொல்லப்பட்டவர்க் கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்.

      சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகின்றதே ‘சொர்க்கவாசல்’ -அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் படுகொலை செய்து சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு.

      சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

      ஆதாரம்- திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல்.

      • குமார்,

        இதெல்லாம் ஒரு ஆதாரமா? “செல்லாது..! செல்லாது…!!” .

        நீங்கள் பெரும் வெடிப்புல இருந்துதான் பூமி உருவாச்சுனு சொன்னீங்கனா அதுக்கு கல்வெட்டோ இல்லை செப்பு பட்டயமோ கொண்டு வாங்க மேற்கொண்டு பேசலாம்!

        நீங்கள் கொடுத்த ஆதாரத்தில், திருமங்கை ஆழ்வார் இறைவனிடம் இறைஞ்சி அவர்களுக்கு முக்தி வாங்கி கொடுத்திருக்காரே! இதை விட ஒரு மனுசனுக்கு வேற என்னங்க வேணும் ….. ?

        அப்படின்னு நான் சொல்லலீங்க …!

        • ஹஹா…., அப்படி என்று நீங்க சொல்லவில்லை ஆனால் உங்க மூளைக்கு உள்ளே பார்பன அடிமையின் பரிசுத்த ஆவி புகுந்து பேசுது இல்லையா? ஆவியை நேரில் வந்து பேச சொல்லுங்க… ஹஹா… இந்த ஆவி செம காமடி பீசா இருக்கும் போல…செம மொக்க பீசா இருக்கும் போல…!

          • hay kumar, Is it pithaa suthan parisuttha aaviyaa? otherwise Pitha suthan repekkaa mari aaviyaa? nice comedy you perform to vinavu readers. //ஆவியை நேரில் வந்து பேச சொல்லுங்க//

      • எமனது முன்னோர்கள் யாரை பற்றியும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அனைத்தையும் கூறி இருக்கிறார்கள் , அந்த வகையில் திருமங்கை ஆழ்வார் திருடி தான் தான் அடியார் சேவையை செய்தார் என்பதை ஒளிக்காமல் கூறி இருக்கிறார்கள். இதற்க்கு மேல், ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பவற்றுக்கெல்லாம் எந்த உருப்படியான ஆதாரமும் கிடையாது. அப்படி இருந்தால் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கூறவும். இது போன்ற ஆதாரமற்ற பெரியாரின் உளறல்களை கொடுத்து எங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

        பி.கு:- இந்த pdf நூலை கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அதில் ஒரு முக்கியமான தகவலை தெரிந்து கொண்டேன். ஞானசம்பந்தர் திருமங்கையாரின் சந்திப்பு, இருவருக்குமான வாதம், சம்மந்தர் ‘வேலை’ அன்பளிப்பாக வழங்கியது. எவ்வளவு இனிமையாக இருக்கின்றது கேட்கவே. சைவ-வைணவ ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மாலிய சிவனிய அன்பர்கள் இதனை எடுத்துக் கொள்வார்களாக.

    • யம்மா …. பொருளுமுதலைவியாதி ரெபெக்கா மேரி ,,,

      கேக்குறவன் கேணையா இருந்தா சாதிக்கும் பாப்பாரப் பயலுகளுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணுவீக போலியே..

      பொருளு முதலையப் பத்தி அம்மணி பேசுறதப் பாத்தா, பாப்பாத்தி திருக்குறள் ஓதுறமாதிரி இருக்கு. ..

      உங்க பொருளு முதலை அடிப்படையில பவுதிக ஆதாரத்தில கடவுள காட்டு ஆத்தா …. நானும் பாத்தா மாதிரி இருக்கும், உனக்கும் ஒரு நாத்திகன ஆத்திகனா மாத்துன புண்ணியம் வந்து சேரும் தாயி … மாட்டேன்னு மட்டும் சொல்லீடாத பொருளுமுதலையாத்தா …
      ***********

      வந்தோமா , ஆழ்வாரு சேக்கிழாருன்னு ரெண்டு கதைய விட்டமா, புனிதம், புடலங்கான்னு நாலு புருடா விட்டோமான்னு போகனும்.. அதிகமா மண்டையில் அரிப்பு எடுத்துச்சுன்னா, அந்தக்காலத்துலயே சாட்டிலைட் விட்டோம்னு சொறிஞ்சுகிட்டு போயிடனும். அதை விட்டுட்டு பொருளுமுதலை, பொருளு ஆமைன்ன்னுலாம் கிளாஸ் எடுக்கக் கூடாது..

    • அறிவியல் ரீதியாக சொல்லுங்கள், கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டார் என்றால் என்ன அர்த்தம், காணாமல் போய்விட்டார் என்றா?

    • திருமங்கை ஆழ்வார் திருடன், கொலைகாரன், தொழிலாளர்களை சுரண்டியவன் ஆகியவற்றுக்கு தக்க ஆதாரங்கள் தேடிப்போன ரெபெக்கா மேரிக்கு திரும்ப விவாதத்துக்கு வர வழி தெரியலையா? இல்ல உண்மையை கண்டு வெக்கமாக இருக்கா?

    • கம்பராமாயணத்தை பற்றி அதன் கசடுகள் ஊடாக பீற்றிகொள்ளும் ரேபெக்காமேரிக்கு…. பெரியாரின் வார்த்தைகளில் இருந்தே பதில் :

      நான் புராணப் புத்தகத்தைப் படிக்கவேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அத்துடன் அதற்கு நேர்மாறாயிருக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இராமாயணம் என்று எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமா-யணமும், கம்பராமாயணமும் படிக்கட்டும். அத்துடன் எங்களது ரூ.1-12-0 விலையிலுள்ள ஏழு புத்தகங்களைக் கொண்ட இராமாயணத்தையும் படித்து இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்து உண்மையும், உணர்வும் கொள்ளவேண்டும். அதுவே எங்களது கொள்கையுமாகும்.

      ஒன்றைத்தான் படிக்க வேண்டும், ஒருவர் சொன்னதுதான் சரி. அதை எதிர்த்துக் கேட்டால் மாபாதகமாகும். நரகம் கிட்டும் என்று கூறி அந்தப் பழக்கத்திலிருந்து வருவதாலேதான் வீரமும், அறிவும் அறமும் பெற்றிருந்த, நம் நாடும் மக்களும் இன்றைய ஈன நிலைக்கு _ -அடிமை வாழ்வுக்கு ஆளாக நேர்ந்தது.

      ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

      வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

      இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.

      பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

      மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

      இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்.

      எனவே, இந்த இராமாயணங்களையும், புராணங்களையும் நம்பினால் நம் நாட்டின் உயர்வும் மக்களின் ஒழுக்கமும் கெட்டுவிடும்

      • அதே … ஈ.வே.ரா வின் பேத்தல்கள் மட்டும் தான், கம்ப ராமாயணம் சாதியை எங்கே தூக்கி பிடிக்கின்றது என்று நான் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலுமில்லை. மற்றபடி ராமன் நல்லவனா கெட்டவனா, இது ஆரிய திராவிட யுத்தமா( இது அதற்க்கு மேல் பெரிய காமெடி) என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை. எனக்கு தேவை கம்பனின் தமிழ் கவி நயம், பெரியாரின் அலப்பறைகள் அல்ல..

  31. அறிவுச் சூரியன் தந்தை பெரியார் எதிராளிகள் நடுங்குமாறு விவாதித்தவர். தவறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதில்லை. தம்பிகள் இதை தவாறது கடைப்பிடிக்கவும்.

    • பார்பன அடிமையை ……, பார்பன அடிமை என்று தானே நேர்மையாக சொல்லனுமையா ! வேறு வார்த்தைகளை நீங்க கூறினால் அதனை பயன்படுத்த தயாராகத்தான் இருக்கேன் அய்யா.

    • ராஜாராமசாமி நண்பரே!

      இங்கு சகோதரரியின் வாதமும் அதன் சார்பும்தான் நண்பர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறது. தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்றே கருதுகிறேன்.

      சகோதரரி புரிந்துகொள்வார் என நம்புவோமாக!

  32. ஆண்டாள் ஜோதியில் கலப்பதும் சிறுமி ஹாசினி கொலையும் :

    படுபாதகன் தஷ்வத் சிறுமி ஹாசினியை கொன்றது போன்றே ஆண்டாளை திருவரங்கத்து பார்பனர்கள் கொலை செய்து ஜோதியில் எறிந்து எரித்த வரலாறு தான் இன்று நம் கண்முன்னே வந்து நிற்கின்றது. ஆண்டாளை கொன்றமைக்கு சாட்சிகளை கேட்ட்கும் ரெபெக்கா மேரிகள் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் நீதிபதி அவர்கள் ஏற்றக்கொண்ட சந்தர்ப்ப சாட்சியங்களையும் பற்றி யோசிக்க வேண்டாமா?

    இந்த ஹாசினி கொலை வழக்கில் நேரடியான சாட்சிகள் இல்லாவிட்டாலும் விஞ்ஞானப் பூர்வமாக வழக்கை நிரூபித்து தண்டனை பெற்று தந்துள்ளனர். ஹாசினியின் உடல் முழுதாக கிடைக்காத நிலையில் அவரது மண்டை ஓடு மட்டும் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது. அதை டி.என்.ஏ சோதனை மூலம் ஹாசினி என்று நிரூபித்தனர்.

    ஹாசினியின் உடையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரமாக தஷ்வந்தின் உயிரணு திரவ மாதிரி கைப்பற்றப்பட்டது. தஷ்வந்த் சாக்குப்பை எடுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவு, தஷ்வந்த் உடல் எரித்த இடத்தை அடையாளம் காட்டியது, மண்ணெண்ணெய் வாங்கியதைப் பார்த்த சாட்சி உள்ளிட்ட பல சந்தர்ப்ப சாட்சியங்களே இந்த வழக்கின் உயிர் நாடி.

    இப்ப சிறுமி ஆண்டாள் விசயத்துக்கு வருவோம்…சிறுமி ஆண்டாள் திருவில்லி புத்தூரில் இருந்து திருவரங்கம் வந்தாங்க என்ற விசயத்தை இங்கே பார்பன அடிமை ரெபெக்கா ஏற்றுகொள்கின்றார்கள்… ஆண்டாள் கோவிலுக்குள் சென்றதனையும் ஏற்கின்றார்கள்… அங்கே சோதியில் கலந்துட்டாங்க என்றும் கொலை நடந்ததை ஏற்கின்றார்கள்.

    யார் கொன்றது திருவரங்கத்து பார்பனர்கள் தானே ஆண்டாளை கொன்றது என்று நாம கேட்டால் அந்த கேள்விக்கு மட்டும் பின்வாங்கி ஜோதியில் எரிந்து கொள்வது எங்க ஹிந்துத்துவா மரபு அப்படி கொல்வது எங்க பண்பாடு மேலும் தனிபட்ட நம்பிக்கை என்று கூறி ஹிந்து மதத்தில் கணவன் இறந்த பின் மனைவிகளுக்கு நடத்தப்பட “சதி”கொடும் செயலை படுகொலையை ரெபேக்காவும் ,மணியும் தங்கள் தனிபட்ட நம்பிக்கை என்று கூறுகின்றார்கள்..

    சிறுமி ஹாசினிக்கு கிடைத்த நீதி பார்பன மரபில் துளிர்த்து அடுத்தவர் உழைப்பில் செழித்து வாழ்ந்து வந்த பார்பன திருவரங்கத்து மனிதர்களால் கொல்லபட்ட சிறுமி ஆண்டாளுக்கு கிடைக்காது தான்.!ஏன் என்றால் இங்கே குற்றவாளிகள் பார்பனர்கள். ஆனால் நாம பார்பனர்களின் கொடும் குற்றங்களை வரலாற்றின் ஊடாக ஆய்வு செய்து அம்பல படுத்துவோம்.

  33. ரெபெக்கா மேரி மற்றும் மணி,

    ஆண்டாள் கொலை வழக்கில் நாங்க செய்வது விசாரணை… குற்றவாளிகலாக நிற்பது நீங்க..! தோழர் கோவன் வார்த்தைகள் படி திருமங்கை ஆழ்வார் கொலைகாரன், திருடன், தொழிலாளர் உழைப்பை திருடியவன் என்ற விசயங்களும் , நித்தியானந்தா மற்றும் தேவநாதன் பெண்கள் விசயத்தில் அஜால் குஜால் பேர்வழிகள் என்ற விஷங்களும் உணமை என்றே நிருபணம் ஆகிறது. இப்ப சொல்லுங்க பார்பன அடிமைகளே…,

    ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா செய்தீர்கள்? தேவரடியாராக திருவரங்கத்து கோவிலில் வாழ்ந்து இறந்தாரா? இல்ல எரித்து கொன்று வீட்டர்களா உங்க ஆண்டைகளான பார்பனர்கள்? கோவிலுக்கு உள்ளே போனவங்க எப்படி காணாமல் போக முடியும்?

  34. நான் வெளியிட்ட மறுமொழி, மட்டுறுத்தப்பட்டுள்ளது அதனை நாணயமாக வெளியிடவும்.

      • காலையில் திருமங்கை ஆழ்வார் தொடர்பாக ஒரு மறுமொழியினை வெளியிட்டேன். அது வெளியாகவில்லை, மீண்டும் வெளியிட்டால் கீழ்கண்டவாறு வருகின்றது..

        Duplicate comment detected; it looks as though you’ve already said that!

        « Back

        ஏதாவது தொழில் நுட்ப கோளாறா என்று பார்க்கவும்…

  35. கடந்த சில ஆண்டுகளாக வினவை படித்து வருகிறேன் , இங்கு விவாதிக்கும் நண்பர்கள் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர் . பல விடயங்களை புரிந்து கொள்ள முடிகிறது . நன்றி .
    நண்பர்கள் யாராவது ராமாயணம் (வாலமீகி மற்றும் கம்பன் ) தமிழில் சுட்டிகள் இருந்தால் பகிருமாறு கேட்டு கொள்கிறேன் படிக்க ஆவலாக உள்ளேன்.

  36. மீண்டும் வெறி பிடித்த பெரியாரிய அனுமார்களின் சறுக்கல் …

    திருமங்கை ஆழ்வார், கூலி தொழிலாளிகளை ஆற்றில் தள்ளி கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. இங்கு அளிக்க பட்ட ஆதாரங்களின் யோக்கியதையை பாப்போம்.

    https://docs.google.com/file/d/0BwlnKSgt8RGmYXpIQ2l5aUVZdGs/view

    மேற்படி pdf நூலின் கூற்றுப்படி, புத்தர் விகாரையின் சிலையை கொணர்ந்து கோவில் பணிகளை செய்தார் என்று தான் கூறப்பட்டுள்ளதே அல்லாமல். அந்த கோப்பில் எங்குமே, தொழிலாளர்களை ஆற்றில் தள்ளி கொலை செய்தார் என்று ஒரு வரி கூட கூறப்படவேயில்லை. சமணர்களை சம்மந்தர் கழுவேற்றியது, புத்த விகார சிலையை உடைத்து கோவில் திருப்பணி( இதுவும் எந்த அளவிற்கு உண்மையோ) செய்தது இதனை நானே மறுக்கவில்லையே, கொலை பாதகம் செய்தார் என்று எங்கே கூற பட்டுள்ளது

    • தமிழ் தமிழ் என்று போலியாக பிதற்றிகொண்டு இருக்கும் ரெபெக்கா மேரிக்கு ஆழ்வார்கள் பற்றியோ அல்லது நாயன்மார்களை பற்றியோ ஒன்றுமே தெரியாது என்ற விசயம் அவரின் மேல் உள்ள பின்னுட்டத்தில் இருந்து புலனாகிறது… திருமங்கை ஆழ்வார் பற்றிய செய்திகள் அவர் திருடர், கொள்ளைக்காரர், ஏமாற்று பேர்வழி என்ற செய்திகள் பார்பனர்கள் எழுதிய வரலாற்றிலேயே இருக்க அவற்றை இவர் நம்பாமல் போகிறார் என்றால் இவர் இந்த விசயங்களை இதுவரைக்கும் கேள்வியே பட்டது இல்லை என்று தான் பொருளாகிறது..இப்ப என்னுடைய பின்னுட்டத்தில் (45) அவரின் மகிமைகளை நிருபித்து ஆயிற்று… பதில் என்ன சொல்ல போகிறார் ரெபெக்கா?

  37. very interesting.. இப்போது ஆண்டாளை, சிறுமை ஹாசினி கொலையுடன் ஒப்பிட்டு தங்களுடைய வழமையான பேத்தல்களை துவங்கி விட்டார்கள் பெரியாரிய அரைவேக்காடுகள். சத்தியமாக சிரிப்பை அடக்க முடியவில்லை:) . அது சரி ராமசாமி நாயக்கரின் பக்தாள்களிடம் நாகரீகத்தையா எதிர்பார்க்க முடியும். இது போன்ற லும்பன் தனமான, எதையாவது பேசி பக்கத்தை நிரப்ப வேண்டும் என்கிற கேவலமான ஒப்பீடுகள் மட்டுமே தான் கிடைக்கும் இது வரை, ஒரு உருப்படியான ஆதாரத்தை அளிக்க இந்த அனுமார்களுக்கு துப்பில்ல்லை. பெரியாரின் மொக்கை உளறல்களை தாண்டி வேறு எந்த உறுபடியும் இவர்களிடம் கிடையாது. ஆக,இவர்கள் இப்படி தான் பேசி சமாளிக்க வேண்டும். நான் என்ன சொல்றேன்னா, முடிந்தால் வள்ளலார் சோதியில் கலந்தது, மாணிக்க வாசகர் சிதம்பரம் கோவிலில் சோதியில் கலந்தது, சுந்தர மூர்த்தி நாயனார் யானை மீதேறி வானில் சென்று மறைந்தார் என வரும் கதைகளுக்கு கொஞ்சம் சமகால படுகொலைகளை கோர்த்து கூறினால் இன்னும் நன்றாக இருக்கும். எங்கே கூறுங்கள் பாப்போம்.. ம்ம் ..சீக்கிரம் இன்னும் நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள்..

    • ரெபெக்கா மேரிக்கு அறிவு நாணயம் சிரியதாவது இருந்தால் வள்ளலார் சோதியில் கலந்தது, மாணிக்க வாசகர் சிதம்பரம் கோவிலில் சோதியில் கலந்தது, சுந்தர மூர்த்தி நாயனார் யானை மீதேறி வானில் சென்று மறைந்தார் என்ற இவரின் கூற்றுக்கு எல்லாம் தக்க விளக்கம் அறிவியல் பூர்வமாக கொடுக்கணும். தெருவில் இன்று கூட இறந்தவருக்கு சிவலோக பதவி அடைந்தார் என்று தான் போஸ்டர் ஓடறாங்க… அப்ப செத்தவங்க எல்லாம் சிவலோக பதவி அடைந்தார் என்ற கூற்றுக்கும் இதே ரெபெக்கா மேரி தக்க அறிவியல் ஆதாரம் கொடுக்கணும்… இல்ல அந்த போஸ்டரை பிரின்ட் அடித்தவர் மேலே கேசாவது போடனும் இவிங்க…

      வள்ளலார் சோதியில் கலந்த விசத்தில் மறைமலை அடிகளார் அவர்களே கள ஆய்வு செய்து இந்த விசயத்தில் மர்மம் இருக்கு என்று தெளிவாக கூறியுள்ளார்..பெரியாரும், அடிகளாரும் வள்ளலார் மரணத்தில் அவர் மரணம் மர்மமானது என்று கூறி ஒருங்கிணையும் இடம் இது…

    • அந்த பேத்தல கொஞ்சம் விளக்கினால் இந்த அரைவேக்காட்டுகளும் சேர்த்து சிரிப்போம்ல! நீங்களா சிரிச்சுகிட்டிருந்தா ஊரே உங்களைப் பார்த்து சிரிச்சுடப்போகுது, உங்கள் வாதத்திறமை பார்த்து!

      பெரியாரை நாயக்கர் என்று விளிப்பதில் உங்கள் மனவிகாரம் வெளிப்படுகிறது. 1920 களிலே தன் பெயருக்குப் பின் இருந்த சாதி அடையாளத்தை துறந்து இன்று தமிழகம் முழுவதும் யாரும் சாதிப்பெயரை போடுவதற்கு கூசும் அளவு ஒரு உளவியல் மாற்றத்தை உருவாக்கிய தந்தை பெரியாரை அவ்வாறு நீங்கள் விளிப்பது திராவிடர்களின் புல்லுருவியாகத்தான் நீங்கள் தெரிகிறீர்கள்.

      • சரியா ஒரே ஆண்டில் தங்கச்சி ரெபெக்கா மேரிக்கு பெரியார் “ராமசாமி நாயக்கர்” ஆகிறார் என்றால் அதுவும் இதே தங்கச்சி ரெபெக்கா மேரி ரெக்கமன்ட் செய்த “பெரியாரின் கொள்கைகளான பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தல் போன்ற அனைத்தையும் இனி தமிழர்களாகவே இருந்து நாம் முன்னெடுப்போம்” என்ற விசயத்துக்கு எதிரா இவரே அதே பெரியாரை சாதி பெயரை வைத்து கூப்பிடுகின்றார் என்றால்…… இவர்களின் சாதி மீதான பற்றி தான் பீறிட்டு அடிக்கின்றது.. சபாஷ்… தொடரட்டும் ரெபெக்காக்கள் தங்கள் சாதி வெறியையும் ஹுந்துதுவா கொலகைகளையும்…

        இந்த சீமான், ரெபெக்கா மேரி போன்ற போலி தமிழ் தேசிய வியாதிகளின் தராதரம் நமக்கு தெரியுது இல்லையா ? பார்பனியதிடம் தமிழர்களை அடிமைபடுதுவதனை தவிர இவர்களுக்கு என்று வேறு எந்த கொள்கையும் கிடையாது… மாபொசி அவர்கள் சங்கராசாரிகளிடம் தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் அடமானம் வைத்தார்… இந்த ரெபெக்கா மற்றும் சீமான் போன்றவர்கள் மாபொசி காட்டிய வழியில்….

        போனவருசம் February 2, 2017 அன்று ரெபெக்கா சொன்னது ://பெரியாரின் கொள்கைகளான பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தல் போன்ற அனைத்தையும் இனி தமிழர்களாகவே இருந்து நாம் முன்னெடுப்போம்//

        • தப்பா எதாவது சொல்லிட்டேனா வினவு? ஏன் மேல் உள்ள பின்னுட்டம் இன்னும் வெளியாகவில்லைங்க!

  38. பெரியாரின் உளறல்களை அன்றே தமிழகத்தின் எல்லை மீது போராளியான மா.பொ.சி கடுமையாக கண்டித்துள்ளார்.. தன்னுடைய “இலக்கியத்தின் எதிரிகள்” என்னும் நூலில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்..

    ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.

    https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    இன்று, பெரியார் எடுத்து சென்ற வாந்தியை அப்படியே அள்ளி தின்பதை தான்,இப்போதுள்ள பெரியாரிஸ்டுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு அங்கம் தான் சிறுமி ஹாசினி படுகொலையோடு ஒப்பிடும் பெனாத்தல்கள் எல்லாம்

    • மிக முக்கியமான கட்டுரை, அனைவரும் படிக்கவும். பெரியாரின் உளறலைகளை அப்பொழுதே ம.பொ.சி. அம்பலப்படுத்தியிருக்கிறார்.

      • மா போ சி அண்ணாச்சி தமிழ் தேசியம் பேசிகிட்டே எப்படி எல்லாம் பார்பனியத்திடம் தன் இறுதி நாட்களில் மண்டியிட்டார் என்ற கதையையும் சேர்த்து படிங்க தங்கச்சி ரெபெக்கா மேரி…

      • ம.பொ.சி பற்றி அதிகம் தெரியாது. பெரியாரை அறிந்து கொண்ட ஆவலைப் போல் சிறிதளவு கூட ம.பொ.சி. யை அறிந்து கொள்ள ஏற்படவில்லை. இதிலிருந்தே இருவருக்கும் உள்ள தர வித்தியாசம் தெரியும். என் சிறுவயதில் அவர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்தார் என நினைக்கிறேன். அங்கு அவர் செல்லாக் காசாகத்தான் இருந்தார். கேடுகெட்ட எம்.ஜி.ஆர். உடன் அரசியலில் ஈடுபட்டிருந்தவர் தந்தை பெரியாரை விமர்சிப்பதை கணக்கில் கொள்ளுவது சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்ததை பெரிதுபடுத்துவதற்கு சமம்.

        • தமிழ் தேசியம் என்று போலியாக நடித்துகொண்டு இருந்த மாபொசி காஞ்சி சங்கராசாரியார் நடத்திய ஹிந்து மாநாட்டில் கலந்து கொண்டு ஹிந்து மதத்துக்காக தமிழ் உணர்வுகளை மட்டு படுத்திகொள்ளலாம் என்று தமிழை பார்பனியத்திடம் அடகுவைத்த “தமிழ் தியாகி” மற்றும் அதி மேதாவிங்க இவரு… இந்த மா பொசி….

          அவர் சார்ந்த ஜாதிக்கு இவர் தான் சாதி சங்க தலைவருங்க….

  39. அய்யகோ இதுவென்ன எனக்கு வந்த சோதனை! உலகமே என்னை திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன், உழைப்பாளிகளை ஏமாற்றி கூலி கொடுக்காமல் கொன்றவன் என்று கூற…மேலும் நானே என் அவல பெருமைகளை கூற எனக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்யும் ரெபெக்கா மேரி தங்கையிடம் இருந்து எப்படி தப்புவேன்-திருமங்கை ஆழ்வார் நாராயண காப்பாத்து காப்பத்து…!

    ஆழ்வார் அரங்கன் சன்னிதியைச் சுற்றித் திருமதில் எடுக்க விரும்ப, சிஷ்யர்கள் அதற்காம் பெரும் செலவுக்கு, நாகப்பட்டினத்து புத்த விஹாரத்துள்ள பொன் விக்ரஹம் சரியாயிருக்கும் என, அந்த விக்ரஹத்தைக் களவாட அவர் விக்ரஹத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்த ஸ்தபதி வேறு தீவில் இருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவர்களோடு அங்கே செல்ல முற்பட்டு, அங்குச் சென்ற அளவில் அவ்விடத்து ஸ்தபதி தன் ஆகாராதிகளை முடித்துவர அவனிடம் இவர், “நாகைக் கோயிலில் களவு போயிற்றாம்” என்று வருந்துவதுபோல் சொல்ல அவன் “ஐயோ யார் குறும்போ இது. நான் விமானத்தில் வழியே பூட்டுப் போட்டேனே, இதுபோல்” என்று திறக்கும் வழியைச் சொல்லிக் காட்ட அதைக் கிரஹித்துக்கொண்ட இவர் அக்கோயிலை உடைத்து உள்ளே புகும் வழி அறிந்துகொண்டார். அங்கே அப்போது ஒரு கப்பல் கிளம்ப, இவர் அந்த மாலுமியிடம் ஒரு கொட்டைப் பாக்கில் பாதியை வெட்டித் தந்து “இதை வைத்துக்கொள்ளும், பயணம் முடிந்து நான் வாங்கிக்கொள்வேன் அதற்கு ஒரு சீட்டு மட்டும் கொடும்” என்ன அவன், “ஆழ்வாரிடம் இக்கப்பலின் அரைப் பாக்குப் பெற்றேன்” என எழுதித் தர, பயணம் தொடங்கியது. நாகப்பட்டினம் சேர்ந்த அளவில் இவர் அவனிடம் கப்பல் சரக்கில் பாதியைத் தமக்குத் தரக் கேட்க, அவன் மறுக்க அவ்விடத்து வணிகர்களிடம் இவர் முறிச்சீட்டுக் காட்டவும் அவர்கள் இவர்க்கு ஸாதகமாகத் தீர்ப்பு சொல்லிப் பொருள் சேர்ந்ததும், மீண்டும் ததியாரதனம் தொடங்கியது.

    பின் ஆழ்வார் சிஷ்யர்களோடு அப்புறமதக் கோயிலில் நுழைந்து பளபளக்கும் ஸ்வர்ண விக்ரஹம் கண்டு எடுக்கப்போக, அது “ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ, தேயதேய் பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே” என்று வினவ, ஆழ்வார் தன் மைத்துனனைக் கொண்டு அந்த விக்ரஹத்தை எடுத்தார். ஆழ்வார் அவ்விக்ரஹத்தை எடுத்து சிஷ்யர்களோடு அருகிலுள்ள சிற்றூரில் அப்போதே உழுது ஈரமாயிருந்த ஒரு நிலத்தில் பாதுகாப்புக்காகப் புதைத்துச் சென்றனர். பின்னர் அவர் அதைத் தோண்டப் போகவும் உழவர்கள் எங்கள் நிலம் நீர் யார் இதில் என்று சினக்க, ஆழ்வார் இது நம் நிலம் நாளை நாம் நிரூபகம் காட்டுவோம் என்று போக, விக்ரஹக் களவறிந்த ஊரார் அறியாமல் அதை உத்தமர் கோயிலில் சென்று சேர்ப்பித்தார். அவர்கள் வந்து கேட்க முதலில் ஏதும் அறியேன் என்றவர் பின் பங்குனியில் மழை நின்றபின் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்தார். அவர் உடனே அதை உருக்கி விற்றுக் காசாக்கி, பெரிய கோயிலின் பெரு மதில் கட்டலானார். இடையில் தொண்டரடிபொடி ஆழ்வார் திருநந்தவநம் வர, அங்கு சுவரை வளைத்து நந்தவனத்தோடே சேர்த்துக் கட்டினார். தொண்டரடிப்பொடிகள்பால் தம் ஆதரத்தால் தம் பூக்குடலைக்கு அருள்மாரி என்று பேரிட்டுக் க்ருதஜ்ஞதானுசந்தானம் பண்ணினாராயிற்று.

    மழைக்காலத்துப்பின் அவர்கள் மீளவும் வந்து விக்ரஹத்தைக் கேட்க, வாக்குவாதம் முற்றி அவர்கள் நீதிபதியிடம் சென்று முறையிட, நீதிபதியின் முன்னால் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ளதால் தன் விரலைத் தருகிறேன் என்கிறார். நீதிபதியும் அதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் ஸாமர்த்தியத்தைப் புரிந்து கொண்டனர். பின்னர்,

    “”””””””ஆழ்வார் அந்தக் கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, ஒரு தீவில் தன் சொத்து உள்ளதாகவும், அங்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். அவர்கள் படகில் செல்லும் பொழுது படகோட்டியிடம் சொல்லி அவரகளை மூழ்கடித்துவிடுகிறார். இறந்தவர்களின் பேரன்கள் ஆழ்வார்மீது சந்தேகப்பட்டு அவர்கள் தம் மூத்தோர் என்னாயினர் என்றும் கேட்க இவர் கவலையுற்றார். பெரிய பெருமாளின் ஆணைப்படி, அவர்களிடம், காவிரியில் நீராடி ஊர்த்வ புண்ட்ர தாரணம் செய்து பெரிய பெருமாளை சரண் புகுருங்கோள் என்ன அவர்களும் அவ்வாறே செய்து எம்பெருமான் திருமுன்பே வர, பெரிய பெருமாள் அவர்களை நோக்கி “உங்கள் பாட்டனார்களின் பெயர்களைக் கூப்பிட்டு அழையும்” என, அவரகளும் அவ்வாறு செய்ய, இறந்த ஒவ்வொருவரும் பெருமாளின் பின்புறம் இருந்து வெளி வன்து “நாங்கள் ஆழ்வார் ஸம்பந்தத்தால் மோக்ஷம் பெற்றோம், நீங்களும் அவ்வாறே செய்யுங்கோள்” என, அவர்களும் அவரை ஆசார்யனாய் ஏற்று ஊர் திரும்பினர்.””””

    பெரியபெருமாள் இவரை, உமக்கு ஏதும் ஆசையுண்டோ என வினவ, ஆம் உம் தசாவதாரம் சேவிக்க வேணும் என்றாராய் அவர் “ஆகில் நீரே ஒரு தசாவதார சந்நிதி கட்டுவியும்” என்ன அவ்வாறே கட்டினார்.

    http://www.srikainkaryasri.com/2016/04/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

  40. தோழர கோவனை பார்த்து லும்பன் என்று கூறுபவர் லும்பச்சியாக வினவில் உலாவருகிறார்… ஆமாம் ரெபெக்கா மேரி!… தோழர் கேவனின் கருத்தை கண்டு அற சீற்றத்துடன் சீறி எழுந்து அவரை லும்பன் என்று விளிர்க்கும் ரெபெக்கா மேரி லும்பச்சிசி ஆனா கதை இது..

    கோவன் தன் பாடலில் என்னடா “செய்தீர்கள் ஆண்டாளை என்று கேள்வி எழுப்புகின்றார்.” அதற்கு முன் திருமங்கை ஆழ்வாரின் ஏமாற்று வேலைகளை கூறுகின்றார். (திருமங்கை ஆழ்வார் அவர்களின் கொலை கொள்ளை வரலாறுங்க அது வரலாறு )அதற்கு பின் காஞ்சிபுரம் புகழ் தேவநாதன் மற்றும் நித்தி ஆகியோரை பற்றி பேசுகின்றார். இது தான் ரெபெக்கா மேரிக்கும் கோவத்தை கிளப்பி இருக்காம்… அதற்காக தான் தோழர் கோவனை லும்பன் என்று கூறுகின்றாராம் இவர். உண்மையில் தோழர் கோவனின் கேள்விக்கு முன்னும் பின்னும் பேசுபொருள் உண்மையாக இருக்க இந்த ரெபெக்கா மேரி பார்ப்பனியத்துக்கு தன் விசுவாசத்தை காட்ட பார்ப்பனியத்துக்கு எதிரான தோழர் கோவன் அவர்களை லும்பன் என்கின்றார்… உண்மையில் பார்பனியத்துக்கு இவர் விசுவாசமாக இருப்பார் என்ற நிலையில் ஏன் இங்கே வந்து தமிழ் உணர்வாளர் போன்று நடிக்க வேண்டும் இந்த லும்பச்சி….?

    இதற்கு மேல் இந்த விசயத்தில் என்னுடைய பின்னூட்டங்கள் தேவை படாது என்றே நினைகின்றேன்… என்ன கார்திகேயன் சார் கொடுத்துள்ள விசயங்கள் போதும் தானே?ஆனாலும் தேவை பட்டால் மீண்டும் வருவேன்….. அது பார்பன அடிமையின் அதாங்க லும்பச்சியின் பதிலை பொருத்தது…

    குறிப்பு : லும்பன் என்ற சொல்லுக்கு பெண் பால் லும்பச்சி தானே வினவு ?

    • குமார் நண்பரே!

      உங்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். நாம் பல விசயங்களில் கடுமையான கருத்து வேறுபட்டு இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் இங்கு வைத்த வாதங்கள் அற்புதமானவை. உங்கள் மூளை உழைப்பின் மூலம் பலருக்கும் (என் உட்பட) நிறைய விசயங்களை புரிய வைத்தீர்கள். உங்கள் உழைப்புக்கு நன்றி. உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். சின்னாவும் மற்ற நண்பர்களும் மகிழ்ந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

  41. ஆண்டாள் சோதியில் கலந்தார் என்பதை மறுக்கும் பெரியாரிய வாதிகள் அதற்க்கு தக்க அறிவியல் ஆதாரம் கேட்க்கிறார்கள். சோதி வடிவாய் இறை ஒளியில் ஒன்று கலக்கலாம் என்பதை நானா கூறுகிறேன், சித்தர்கள், யோகிகள் அவ்வாறு கூறுகிறார்கள். இது பற்றி சிவவாக்கியரின் பாடலை கேளுங்கள்..

    “ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே”

    பொருள்:- அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

    சிவ வாக்கியர் மட்டுமல்ல, இன்னும் இவரை போன்ற எவ்வளவோ சித்தர்கள், சோதி வடிவான அதாவது அருள் வடிவான ஞான தேகத்தை பெறுவதை பற்றி கூறி சென்றிருக்கிறார்கள். அனைவரின் பாடல்களையும் என்னால் இங்கே பிரசுரம் செய்ய முடியாது, உண்மையை உணரும் நாட்டம் உள்ளவர்கள் அல்லது சந்தேகம் உள்ளவர்கள் தான் அதனை ஊன்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    சரி, இப்போது வள்ளல் பெருமானார், சோதியில் ஐக்கியமானாரா? இல்லையா? என்கிற விவாதத்திற்கு வருவோம். இரண்டு கருத்துக்கள் அவரை உடலோடு சோதியில் ஐக்கியமானார் என ஒரு தரப்பு, இல்லை அவரை பார்ப்பனர்கள் எரித்து கொன்று விட்டார்கள் எனும் இன்னொரு தரப்பு.

    உண்மை எதுவென்பதை, வள்ளல் பெருமானே கூறுகிறார், அவர் கூற வருவதை அவரின் பாடல் மூலமே கேட்போம். சாகாநிலை பற்றி அவர் பாடிய எத்தனையோ பாடல்களில் இரண்டினை மட்டும் இப்போதைக்கு தருகிறேன்.

    “சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
    இத்தாரணியில் எனக்கிணை யார் என்று இயம்புவனே” (திருஅருட்பா5417)

    “யாராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே”
    (திருஅருட்பா 3670)

    இந்த இரண்டு பாடல்களை படிப்போர், சகா வரம் என்பது புகழ் அடைந்து விட்டார் என்று தவறாக நினைத்து கொள்ள கூடும் என்பதால் மிக தெளிவாக, இன்னொரு பாடலில் மிக சிறப்பாக தான் அடைந்த நிலையினை கூறுகிறார்.

    “என் அடுத்தோர் கூடி அழாத வண்ணம் சாகா வரம் தந்திட்டான்” (திருஅருட்பா 5510)

    என்னை அடுத்தோர், அதாவது என் உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் போன்ற எவரும் அழா வண்ணம் தனக்கு இனி ஞான தேக சித்தி(ஒளியுடம்பாதல்) என்னும் உயர் நிலையை இறைவன் அளித்தான் என்று தெளிவாக பதிவு செய்கிறார்..

    இந்த உடலை அழியாமல் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ,மேலும் . ,மண்ணுக்கோ,தீயிக்கோ,தண்ணீர்க்கோ,காற்றுக்கோ ,ஆகாயத்திற்கோ ,எமனுக்கோ ,கிரகங்களுக்கோ ,பிணிகளுக்கோ, கொலை கருவிகளுக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களுக்கோ ,இன்னும் வேறு ஏதாவது வழிகளிலோ ,இந்த உடம்பை அழிக்க முடியாத நிலைகளில் வாழ முடியும் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிவித்தது ,மட்டும் அல்லாமல் ,தான் வாழ்ந்தும் காட்டி உள்ளார் வள்ளலார் .

    மேலும் அதற்கு ஆதாரமான பாடலையும் பதிவு செய்து உள்ளார் ;–

    காற்றாலே, புவியாலே, ககனம் அதனாலே,
    கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
    கூற்றாலே,பிணியாலே ,கொலைக் கருவியாலே ,
    கோளாலே ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே ,
    வேற்றாலே,எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
    மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் என்தனக்கே
    ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
    என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

    இந்தப் பாடல்களையும்,உரைநடைப் பகுதிகளையும்,மேல் எழுந்த வாரியாகப் படிப்பவர்கள் அதன் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள முடியாது.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை வாழ்வில் கடைபிடித்து வருபவர்கள் தான் அதன் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக திருஅருட்பாப் பாடல்களுக்கும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

    திருஅருட்பாப் பாடல்கள் வெறும் சமய மதப் பாடல்கள் அல்ல …அவை திருஅருட்பிரகாச வள்ளலார் பெற்று இருக்கும் மரணம் இல்லாப் பெருவாழ்வை விளக்கும் அனுபவப் பாடல்களாகும்.

    வள்ளலார் , கூறிய ஏதும் பொய்யான மிகைப்படுத்தப்பட்ட பேச்சுக்கள் ஏதும் கிடையாது. என்னால், வள்ளல் பெருமான் கூறியதை நிரூபிக்க முடியவில்லை என்பதற்காக, அது பொய்யெனலாகாது, மெய்யுணந்த ஆன்றோர் வாக்கு அது.. அதை உணர வேண்டுமானால் அவர் கூறிய பாதையில், இலக்கு நிரணயிக்கமால் தனிபெரும்கருணையோடு பயணம் செய்ய வேண்டும். சும்மா அறிவியல், அறிவியல் என்று அரற்றிக் கொண்டே இருந்தால், நஷ்டம் வள்ளலாருக்கோ மாணிக்கவாசகருக்கோ ஆண்டாளுக்கோ அல்ல.

    இந்த மரணமிலா பெருநிலையை தான், மாணிக்க வாசகர் தொடங்கி ஆண்டாள் அனைத்து சித்தர்களும் பெற்றது. இவர்கள் பெற்றேன் என்று கூறிய அனுபவத்தை, ஏற்காமல் போவதும் அவர் இஷ்டம், ஆனால் எள்ளி நகையாடவோ அல்லது மனம் போன படிக்கு பேசவோ யாருக்கு உரிமையில்லை. இது பற்றி இதுவே எனது கடைசி பதிவு, நான் ஆண்டாளை போல் வள்ளலாரை போன்று அந்த உயந்த நிலையை அடைந்தவள் அல்ல.இதில் சந்தேகம் இருப்பின் போய் தக்க நூலினை கொண்டு ஆராயவும். பொய்யுரை என நினைப்போருக்கு வள்ளல் பெருமானின் கீழ்கண்ட பாடலோடு நிறைவு செய்கிறேன்( இதை பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை)

    பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
    மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ – ஐயனருள்
    சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
    இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.

    • ரெபெக்கா மெரி, ஆமாம் பெரியாரை பற்றி போன ஆண்டும் ,இந்த ஆண்டும் நீங்க முரண்பட்டு பேசியுள்ளீர்களே ஏன் ? நேர் எதிராக பேசியுள்ளிர்களே ஏன் ? நான் கேள்வி எழுப்பி ஒரு நாள் ஆயிற்றே பதில் இல்லையே ஏன் ?

      அது சரி இப்ப அறிவியல் விசயத்துக்கு வருவோம. யாராக இருந்தாலும் அது பெரியாராக இருந்தாலும் சரி ,பெரியாழ்வாராக இருந்தாலும் சரி ,பள்ளி மற்றும் கல்லூரிகளில் எனது ஆசானாக இருந்தாலும் தர்கத்துக்கு எதிராக இருதால் ,அறிவியலுக்கு முரணாக இருந்தால் கேள்வி எழுப்புவது தான் என் வேலை.. அதனை தொடர்ந்து செய்வேன்.. முடிந்தால் மேல் உள்ள உங்க கருத்துகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கம் கொடுங்க.. சும்மாச்சிக்கும் இங்கே வினவின் இணைய தளத்தை உங்க அக மன குப்பைகள் கொண்டு நிரப்பாதிங்க… ஒரு வேலை நீங்க உங்க அக மன குப்பைகளில் ரொம்ப அறிவியலை மீறி பிடிவாதமாக இருதால் நான் என்ன செய்ய? ஒரு வழியில் வாழ்த்தலாம்… நீங்க நூராண்டு வாழ்ந்து பல செல்வம் பெற்று ,மகிழ்வுற்று வாழ்ந்து, இறுதியில் முதுமையில் “ஜோதியில் கலக்க வாழ்ந்துக்கள்” அவ்வளவு தான் என்னால முடிந்த வாழ்த்து.

      ஏன் இப்படி சொல்றேன் என்றால் அறிவியலுக்கு முரணான நீங்க கூறும் விசங்களை அறிவியல் கொண்டு விளக்கும் திறமை உங்களை போன்றே எனக்கும் இல்லைங்க…

      //ம்மா அறிவியல், அறிவியல் என்று அரற்றிக் கொண்டே இருந்தால், நஷ்டம் வள்ளலாருக்கோ மாணிக்கவாசகருக்கோ ஆண்டாளுக்கோ அல்ல. //

  42. இங்கு அறிவியல் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக என்று அறிவியலை கண்டு பிடித்தவர்களை போன்று மூச்சு முந்நூறு முறை கேட்கும் அறிவு ஜீவிகளை நான் ஒன்று கேட்கிறேன். அறிவியலை கொண்டு அனைத்திற்கும் பதில் கூறி விட முடியுமா. பக்தி என்பது சாதாரண நிலை அன்று, அன்பின் உச்சகட்ட நிலையை தான் பக்தி என்போம். அது ஒரு சரணாகதி நிலை. எங்கே கொஞ்சம் இந்த அன்பை(Affection), காதலை(Love), எதையும் தியாகம் செய்ய துணியும் பக்தி(Devotion) என்கிற சரணாகதி அன்பை முடிந்தால் உங்களின் அறிவியலால் நிரூபித்து காட்டுங்களேன் பார்க்கலாம். Can u plz define what’s love n devotion as per scientific analysis. அன்பு, காதல், கருணை போன்றவற்றை எல்லாம் அறிவியலால் அளக்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. அதற்கென்று எந்த மானியும் கிடையாது. அதே போன்று, கடினமான மனம் கொண்ட ஒரு மனிதரை, கருணை உள்ளம் கொண்டவராக அறிவியலால் மாற்ற முடியாது, அது வள்ளலார், புத்தர் போன்ற மகான்கள் முன்னெடுத்த ஆன்மீகத்தினால் மட்டுமே முடியும். ஹிட்லர் போன்றவர்களை அறிவியல் கொண்டு மாற்ற முடியாது.

    ஆகவே, ரொம்ப அறிவியல்… அறிவியல்… என்று ரொம்ப ஆட வேண்டாம். முடிந்தால் அன்பை காதலை விஞ்ஞான பூர்வமாக விளக்கி தான் காட்டுங்களேன் பார்க்கலாம். அறிவியல் எதற்கு வேண்டுமோ அதற்க்கு மட்டும் தான் அது தேவை. அணு ஆயுதம், தொழிற்சாலைகள் போன்ற இவ்வளவு நாசகார அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பிறகும் இந்த உலகமும், மனித குலமும் இன்னும் இருக்கிறதென்றால், அது அறிவியலால் அல்ல. அறிவியல் போன்ற எல்லா இயல்களையும் கடந்த, அன்பு என ஒன்று இன்னும்இருப்பதினால் தான்.

    ஷேஸ்பியரின், ஷெல்லியின் கவிதைகளை ரசிக்க வேண்டுமானால் கூட, இதயத்தால்(அன்பினால்) தான் முடியுமே தவிர, அறிவியல் என்னும் மூளையை கொண்டுள்ள. அதனை வைத்து A.K 47
    வேண்டுமானால் தயாரிக்கலாம்

  43. பெபெக்கா மேரி , அறிவியல் ஊடாக அது எப்படி அன்பை(Affection), காதலை(Love), எதையும் தியாகம் செய்ய துணியும் பக்தி(Devotion)ஏன் ஆண்டாளின் காமத்தை பற்றியும் விளக்குவதற்கு முன் திருமங்கை ஆழ்வார் பற்றி நான் கொடுத்த ஆதாரபூர்வமான தகவல்களை படித்தீரா? ஏன் இந்த விசயத்தில் அமைதி காக்கவேண்டும் நீங்க? என்னுடைய பின்னுட்டம் 45 (திருமங்கை ஆழ்வார் வரலாறு பற்றி )மற்றும் கோவன் மீதான உங்கள் மட்டமான குற்றசாட்டு பற்றிய என் பதில் பின்னுட்டம் ஆகியவற்றுக்கு பதில் அளிக்கவேண்டும் என்று உணரவில்லையா நீங்க? இவற்றுக்கு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், கோவனின் மீதான தரம் தாழ்ந்த உங்க குற்றசாட்டுக்கு வருத்தம் கோருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இப்ப நீங்க கேட்கும் அறிவியல் விசயத்துக்கு வரேன்.

    ஆமாங்க இணைய தளங்களை ஆராய அதில் இருந்து உங்களுக்கு தேவையான மொக்கைகளை எடுத்து பேச எல்லாம் அறிவியல் வேணும் உங்களுக்கு! ஒரு நாள் காலை முதல் மாலை வரைக்கும் ஏன் இரவு வரைக்கும் நாம் பயன்படுத்தும் அத்துனை பயன்பாட்டு சாதனங்களிலும் அறிவியலின் பின்புலம் இருக்க இருக்க…ஹ ஹா அறிவியல் எதுக்கு என்று கூவுவது ஏன்?

    இந்த உணர்வுகளான காதல் ,காமம், கோபம் இவரைஎல்லாம் ஆய்வு செய்ய முடியுங்க… இந்த உணர்வுகளால் உடம்புக்குள் குறிப்பா மூளைக்குள் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது, என்ன என்ன ஹார்மோன்கள் உற்பத்தி ஆகின்றன என்று எல்லாம் இன்றைய அறிவியலில் கண்டு உணர முடியுங்க…நீங்க கோபபடும் போது , தூங்கும் பொது , மகிழும் போது ஏற்படும் உங்க மூளையில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் CT ஸ்கேன் MRI ஸ்கேன் மூலமாக கண்டு உணரமுடியுங்க..

    அறிவியல் மூலமாக உங்க தலைவர் ஐயா டெண்ல்டு டிரம்பு (உங்க ஆதரவு பெற்ற அமெரிக்க தேசியவாத தலைவர்) AK 47 செய்வது என்று போனால் என்னோட அறிவியலின் நோக்கம் எல்லாம் மக்கள நலம் சார்ந்ததா தான் இருக்கும். விவாதம் திசை மாறாம இருக்கனும் என்றால் என்னுடைய பின்னுட்டம் 45,46 ஆகியவற்றுக்கு கடிதாசி எழுதுங்க மறக்காமல்…

    • குறிப்பு : ரெபெக்கா மேரி அவர்கள் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெண் வெறியன்,பித்தன் இன்றைய ஜனாதிபதி டிரம்புக்கு அவன் தேசியவாதி என்று இவர் முட்டு கொடுத்து ஆதரவு கரம் நீட்டினார்…

  44. ரெபெக்கா மேரிக்கு இன்னும் புரியலையா? எதுக்கு தோழர் கோவன் “ஆண்டாளை என்னடா செய்தீர்கள் என்று” கேட்கும் கேள்வி ஏன் எழுந்தது என்று இன்னுமா புரியலை உங்களுக்கு ? மா பாதக கொலைகாரன் ,கொலைகாரன் ,திருடன் திருவரங்கத்து திருமங்கை ஆழ்வார் என்ற லும்பன் பற்றி பேசும் கோவன் அவர்கள் அடுத்ததா ஆண்டலை என்னடா செய்தீர்கள் என்று கேட்கும் கேள்வியின் அர்த்தம் இன்னுமா புரியவில்லை உங்களுக்கு? திருவரங்கத்தில் கொலை செய்யபட்ட தொழிலாளர்கள் சொர்கத்துக்கு போயிட்டாங்க என்று நம் சமுகத்தை நம்ப வைத்தது போல ஆண்டாளை எரித்து கொன்று விட்டு ஜோதியில கலந்துட்டார் என்று சொன்னால் கேட்பவர் என்ன கேனையனா? அதற்கு அடுத்ததா கோவன் பேசும் விசயம் என்ன ? காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் லும்பன் தேவநாதன் பற்றி..! லும்பன் நித்தி பற்றி! இல்ல திருவரங்கம் கோவிலில் ஆண்டாளை அசிங்கம் பண்ணிட்டு அப்புறம் எரித்தது கொன்று விட்டீங்களா என்று மர்மங்களை விடுவிக்க கேள்வி எழுப்புறார் கோவன்… இப்படி கேள்விகள் எழுப்பும் சமுக செயல்பாட்டாளர் கோவனை லும்பன் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் உங்க உள்ளார்ந்த பார்பன அடிமை தனத்தின் காரணமாக நீங்க வெறிபிடித்து கூறிவிட்டு இப்ப மவுனம் சாதிப்பது ஏன் ரெபெக்கா?

    உங்க பார்பன அடிமை தனம் கோவன் விசயத்தில் வருத்தம் தெரிவிக்க கூட அனுமதிக்காது என்று தெரியும். அதனால் தான் உங்களை மீண்டும் மீண்டும் உங்களை உங்க பார்பன அடிமை தனத்தை ,பார்பன கால் நக்கி தனத்தை வினவில் அம்பல படுத்திகிட்டு இருக்கேன்…

    நியாயமாக நீங்க லும்பன் என்று திருமங்கை ஆழ்வார், தேவநாதன் மற்றும் நித்தியை தானே கடுமையாக விமர்சித்து இருக்கனும் அவர்களின் மா பாதக செயல்களின் அடிபடையில்? ஆனால் அந்த குற்றங்களை எல்லாம் அம்பல படுத்தும் கோவன் அவர்களை நீங்க எதுக்கு லும்பன் என்று பேசணும்? நல்லா வருவிங்க ரெபெக்கா மேரி!

    தோழர் கோவன் மீது நீங்க வைக்கும் உங்களின் கீழ் தரமான குர்ரசாட்டுக்கும் எச்ச ராஜா வைரமுத்தை கடும் சொல்லால் பேசியதற்கும் என்ன வேறுபாடு ரெபெக்கா மேரி? லும்பன் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் எல்லாம் பேசியிருக்க மாட்டிர்கள் என்று நம்பறேன்..

    குறிப்பு: வினவு, திரும்ப திரும்ப இந்த விசயம் விவாதத்தில் வருது என்றால் அதக்கு நான் காரணம் அல்ல ! ரெபெக்காவின் நீண்ட மவுனவே காரணம்.

    • இந்த விவாதம் பார்பனர் ,மற்றும் பார்பனர் அல்லாதோர் பற்றியது இல்லையே சினிமா விரும்பி… தமிழ் தேசியத்தை பார்பனியதிடம் அடகுவைத்து , கோவன் என்ற சமுக செயல்பாட்டலரை அவதூரு செய்யும் ரெபெக்கா மேரியின் கருத்துகளின் மீதான விவாதமாக போய்கிட்டு இருக்கு… விவாதத்தில் அம்பலப்ட்டு போன ரெபெக்கா மேரி திரும்ப வர வழியின்றி வெக்கப்பட்டுக்கிட்டு நிற்கின்றார்கள் . வேற ஒன்றும் இலிங்க…

  45. இரண்டு மூன்று நாட்கள் அதிக வேலை பளுவின் காரணமாக, இணையத்தின் பக்கமே என்னால் வர முடியாமல் போய் விட்டது. அதற்குள் இந்த பெரியாரிய “கொடுக்குகள்” அலப்பறைகளை துவங்கி விட்டன .ஒருவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று கூட யூகிக்க தெரியாத கும்பல், ஆழ்வார்களை பற்றி ஆய்வு செய்கிறதாம். இவர்கள் கொடுத்த அந்த பயங்கரமான ஆதாரத்தை?!!!!! பார்த்து நான் ஓடி விட்டேனாம். சரி, இவர்கள் கொடுத்த ஆதாரத்தின் யோக்கியதையை பாப்போம்.. குருபரம்பரை என்கிற பெயரை வைத்துக் கொள்வதால் மட்டும் அதில் உள்ள விஷயங்கள், கூறப்படும் செய்திகளை அனைத்தும் உண்மை என்றாகி விடாது. எந்த குருபரம்பரையின் அடிப்படையில் என்பதை தெளிவு படுத்தி இருக்க மேலும் அந்த பிளாகில் திருமங்கையாரை பற்றி பல விஷயங்கள் தெளிவாக கூற படவில்லை. அதனை பற்றி நான் பின்னர் விளக்குகிறேன்.

    அந்த பிளாக்கரில் திருமங்கையாரை பற்றி கூறப்பட்டதாக சொன்ன விடயம் இது தான்…

    //ஆழ்வார் அந்தக் கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, ஒரு தீவில் தன் சொத்து உள்ளதாகவும், அங்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். அவர்கள் படகில் செல்லும் பொழுது படகோட்டியிடம் சொல்லி அவரகளை மூழ்கடித்துவிடுகிறார். இறந்தவர்களின் பேரன்கள் ஆழ்வார்மீது சந்தேகப்பட்டு அவர்கள் தம் மூத்தோர் என்னாயினர் என்றும் கேட்க இவர் கவலையுற்றார். பெரிய பெருமாளின் ஆணைப்படி, அவர்களிடம், காவிரியில் நீராடி ஊர்த்வ புண்ட்ர தாரணம் செய்து பெரிய பெருமாளை சரண் புகுருங்கோள் என்ன அவர்களும் அவ்வாறே செய்து எம்பெருமான் திருமுன்பே வர, பெரிய பெருமாள் அவர்களை நோக்கி “உங்கள் பாட்டனார்களின் பெயர்களைக் கூப்பிட்டு அழையும்” என, அவரகளும் அவ்வாறு செய்ய, இறந்த ஒவ்வொருவரும் பெருமாளின் பின்புறம் இருந்து வெளி வன்து “நாங்கள் ஆழ்வார் ஸம்பந்தத்தால் மோக்ஷம் பெற்றோம், நீங்களும் அவ்வாறே செய்யுங்கோள்” என, அவர்களும் அவரை ஆசார்யனாய் ஏற்று ஊர் திரும்பினர்//

    மேற்கண்ட இந்த விடயத்தை குருபரம்பரை என்கிற பெயர் கொண்ட ஒரு பிளாகில் இருந்து எடுத்து காட்டி இருக்கிறார். இப்போது என்னுடைய சந்தேகம் என்னவென்றால், மேற்படி தொழிலாளர்களை ஆழ்வார் படுகொலை செய்தார் எண்டு கூறியதற்கு எதனை சுட்டி காட்டி கூறுகிறார்கள். புரியும் படி கேட்க்கிறேன், எந்த குருபரம்பரையின் பிரபந்தத்தை அலகீடாக கொண்டு இதனை கூறி இருக்கிறார்கள் என்பதனை சொல்லவும். நானும் திருமங்கையாரின் அனைத்து பாடல்களிலும் தேடி விட்டேன், அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே எங்குமே கூறப்படவில்லை. இப்போது. இந்த பிளாக்கை வைத்து நடத்துபவர்கள் எதன் அடிப்படையில், யார் தொகுத்த வரலாற்றின் அடிப்படையில் இதனை கூறினார்கள் என்று தெளிவு படுத்தி இருக்க வேண்டும், அனால் அப்படி எந்த தெளிவான ஆதாரமும் அந்த பிளாகில் இல்லை. சும்மா விட்டேத்தியாக கதை அளந்திருக்கிறார்கள். இது உண்மையான வரலாறு கிடையாது வெறும் இடை செருகல் மட்டுமே.

    ஆக, இது யாரு கூறிய வரலாற்றின் அடிப்படையில் சொல்ல பட்ட தகவல் என்பதனை நிரூபிக்கவும். அதன் பிறகு, அடுத்த கட்ட விவாதத்தினை தொடங்குவோம்.

    • ***எந்த குருபரம்பரையின் அடிப்படையில் என்பதை தெளிவு படுத்தி இருக்க***

      “எந்த குருபரம்பரை செய்தியின் அடிப்படையில் என்பதனை தெளிவு படுத்தி இருக்க வேண்டும்” என்று பாடம் கொள்க…

  46. அந்த இடைச்செருகல் எதற்காக மேரி? தங்களை பெருமை படுத்திக்கொள்ளவா? அல்லது பிற்காலத்தில் வரப்போகும் பெரியாரிய கொடுக்குகளை சீண்டுவதற்கா?

    குமார் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் பதிலுரைக்கவில்லை.

  47. நீங்கள் இடைச்செருகல் என்று கூறியது அவாளுக்குத் தெரியாமல் இருப்பதே நலம். பின்னர் வைரமுத்துவை பேசியது போல உங்களை ஏதாவது சொல்லிவிடப் போகிறார்கள். அப்புறம் உங்களை காப்பாற்றவும் பெரியார் கொடுக்குகள்தான் ஓடிவர வேண்டும்!

  48. ரெபெக்கா மேரி , திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை ஏமாற்றிய விசயத்தில் இந்த அளவுக்கு நீங்க விவாதத்தில் நேர்மையற்று இருக்க கூடாது.. என்ன செய்வது பார்பன்ர்களுடன் சேர்த்த சேர்கையால் அவர்களை போன்றே நீங்களும் பொய்யாலும் ,புரட்டாலும் விவாதித்து கொண்டு இருக்கீங்க… பெரியார் கொடுத்த ஆதாரத்திலேயே அந்த செய்திகளை எங்கே இருந்து எடுத்தார் என்று கூறியுள்ளார்…

    ஆதாரம்- திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல்.

    இந்த நூலினை தேடிபடித்து இருக்கவேண்டியது உங்க கடமை தானே தவிர அதனை இணையத்தில் உங்களுக்கு கொடுக்கவேண்டியது என்னுடைய கடமை அதுவல்ல…சரி அந்த நூலை படிக்காமல் இங்கே வந்து பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசிக்கிட்டு இருக்கீங்க என்றால் உங்களை வினவில் அம்பலப்டுதுவ்து எனது நோக்கம் என்பதால் அந்த நூலை அதே நூலை இனைய நுலை இங்கே வெளியிட விரும்புகிறேன்…

    நூலின் பெயர் : ஆழ்வார்களின் வைபவமான குருபரம்பரை…….

    இது ஒட்டுமொத்த ஆழ்வார்களின் வரலாறு…1902 ஆம் ஆண்டு வெளியிடபட்ட நூல் இது இன்று கன்னிமாரா பொது நூலகம் மூலமாக இணையத்தில் கிடைகிறது…பதிவிறக்கம் செய்ய வேண்டிய லிங்க் இந்தாங்க….

    http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMejuYy

    இந்த நூலின் திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற தலைப்பின் உள் நான் கூறும் செய்தி இருக்கு… ஆமாம் தொழிலாளர்கள் கூலி கொடுக்ப்டாமல் ஏமாற்றப்பட்டு காவேரியில் முழுகடிக்கப்பட்டு கொல்லபட்ட செய்தி தெளிவாகவே இருக்கு…

    அந்த வாக்கியம் எப்படி தொடங்குது என்றால் …..

    “”அவ்வாறு செய்து வரும்போது சில சிறிபிகளுக்கு கூலி கொடுப்தர்க்கில்லாமையால்…….””

    பக்கம் எண் : கூகூ

  49. ரேபெக்காமேரி நான் February 19, 2018 at 2:19 pm அன்று அளித்த 147 ஆவது பின்னுட்டத்திலேயே தெளிவா சொல்லியிருக்கேன்… எங்கே இருந்து இந்த செய்தி அதாங்க திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை கூலி விசயத்தில் எப்படி ஏமாற்றினார், எப்படி கொன்றார் என்ற செய்தியை தெளிவா சொல்லியிருக்கேன். அந்த செய்திக்கு ஆதாரமாக உள்ள புத்தகத்தின் பெயரையும் கொடுத்து இருக்கேன் “திருமங்கை ஆழ்வார் வைபவம்” என்று.

    அப்படியும் அந்த நூலை இத்தனை நாட்களாக படிக்காமல்இப்ப வந்து அது சரியில்லை இது சரியில்லை என்றால் அப்படி? 1902ஆம் ஆண்டு வைணவ பெரியோர்க்ளால் எழுதபட்ட அந்த நூலுக்கு (“””ஆழ்வார்களின் வைபவமான குருபரம்பரை”””)பகுத்தறிவு பெரியார் ஈவெரா அவர்கள் தனது விடுதலை இதழில் சரியான பதிலை கொடுத்து திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை ஏமாற்றி கொன்ற செய்தியையும் அம்பலபடுத்தி இருக்கார். அதற்கு பதில் அளிக்க வழியின்றி வைணவ பெரியோர்கள் திகைத்து நின்றது தான் வரலாறு…! சரியா 100 ஆண்டுகள் கழித்து திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை ஏமாற்றி கொன்றவர் என்று நிருபணம் ஆன பின்னும் நீங்க அதனை ஏற்கவில்லை என்றால்….

    எதோ இடிக்குதே… உங்க ஆளுமையில் ஏதோ பிரச்னை இருக்கே ரெபெக்கா! இதுவும் போன வருடம் பெரியாரை புகழ்ந்த உங்க ஆளுமை இந்த ஆண்டு இகழ்வது போன்ற குற்றம் தானே?

  50. ரெபக்கா மேரிக்கு கொடுக்க ஆதாரங்களுக்கா பஞ்சம்? வடிவழகிய நம்பிதாஸ் அவர்கள் இயற்றி பண்டிதர் கிருஷ்ணமாசாரியார் அவர்களால் பதிப்பிக்க பெற்ற நூல் ஆழ்வார்கள் வைபவம் ஆகும். இந்த நூலினை நாம் காண

    http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/aazhvaarkal_vaibavam.pdf

    என்ற விலாசத்தில் இருந்து இறக்கம் செய்ய திருவாளர் ரெபெக்காவே வேண்டுகின்றேன்! இந்த நூலில் அனைத்து ஆழ்வார்களின் வரலாறும் கொடுக்கபட்டு இருக்கு… திருமங்கை ஆழ்வாரின் திருட்டு வேலைகளும் , தொழிலாளர்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொன்ற வரலாறும் பாடல் வடிவில் தெளிவாகவே கொடுக்கபட்டு இருக்கு ? எங்கே ? திருமங்கை ஆழ்வார் பிரபந்தம் என்ற தலைப்பில்…!

    திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் உள்ள பாடல்களில் எது இடை சொருகல் என்று இந்த ரெபெக்கா வெட்டி பந்தா விடாமல் எடுத்துகூறலாமே !

  51. ரெபக்கா மேரிக்கு ஆதாரம் கொடுத்து கொடுத்து இணைய MB-களை தீர்க்கும் எனக்கு வேலை மிச்சம் போல…

    விரைவில் வினவில்………… புதிய ஜனநாயகத்தில் இருந்து தனி கட்டுரையாக….. தோழர் மருதையன் எழுதியிருபாரு என்று நினைகின்றேன்….

    வினவு : 7. குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை!
    ஆழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலக மகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை, வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத் தருகிறோம்.

  52. மீண்டும் மீண்டும் ஆழ்வார்களின் மீது பெரியாரிஸ்டுகள் எந்த அடிப்படையும் இல்லாத, வெறும் காழ்ப்புக்களும் வன்மங்களையும் மட்டுமே வைத்து பக்கத்தை நிரப்ப துவங்கி விட்டார்கள். ஏற்கனவே, ஆண்டாள் விவகாரத்தில் அனுமானங்களை மட்டுமே வைத்துக் பிழைப்பு ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் , இப்பொழுது திருமங்கையாரின் விடயத்தில் பழைய நூல்களை தலையில் தூக்கி கொண்டு பிதற்ற துவங்கி விட்டார்கள். அதில் உள்ள செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவையாக இருக்கும் என்கிற ஆராய்ச்சி அறிவெல்லாம் இவர்களுக்கு கிடையாது. இவர்களின் ஒரே நோக்கம், இவர்களின் தலைவர் ஈ.வே.ராவுடன் சேர்ந்து கொண்டு பகுத்தறிவு என்கிற போர்வையில், தமிழுக்கு மேலும் இனிமை சேர்க்கும் பக்தி இலக்கியங்களை அறிமுகப்படுத்திய தமிழர்களான ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் திட்ட மிட்டே இழிவு படுத்தி கொண்டு இருப்பது மட்டும்தான்.

    அதாவது ஒரு பழைய புத்தகத்தை காட்டி. “இதோ பார் குருபரம்பரை நூலில் கூறி இருக்கிறது, நான் கண்டுபிடித்து விட்டேன்” என்று கூறுவது அறிவுடைமை ஆகாது. முன்பு, குருபரம்பரை என்கிற பெயரில் ஒரு பிளாக்கரை காட்டினார்கள், இப்போது சில பழைய நூல்கள் அவ்வளவு தான் வித்யாசம், எந்த குருபரம்பரை ஆச்சாரியாரின் கிரந்தத்தை கொண்டு இந்த நூலினை செய்தார்கள் என்பதை பற்றி அந்நூலில் ஒரு குறிப்புமில்லை. ஆனால், இதனை நாங்கள் ஆதாரமாக ஏற்றுக் கொண்டு நம்ப வேண்டுமாம். பார்ப்பனர்கள் பதிப்பித்த பழைய நூலில் கூறி இருப்பது அனைத்தும் உண்மையென்றால், நானும் ஒரு நூலினை தருகிறேன், ஆழ்வார்கள் சரிதம் என்கிற நூல் சடகோப ராமானுஜாச்சாரியரால் எழுதப்பெற்ற நூல். ஆழ்வார்கள் வரலாற்றை பற்றி கூறும் நூல்களில் இவருடையது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஆழ்வார்களின் வரலாற்றை பேசும் பலரும் இவரின் நூலினியே துணையாக எடுத்துக் கொள்ளவார்கள்.

    அதன் லிங்க்:- http://acharya.org/bk/pb/vmsr/ac.pdf

    மேற்படி நூலில், திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்று எங்குமே கூறப்படவில்லை. அவர் பவுத்த விகாரையில் உள்ள புத்தர் சிலை அபகரித்து கொண்டார் என்கிற செய்தி மட்டுமே இருக்கிறது. இப்பொழுதும் கூறுகிறேன், திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்றார் என்பது கற்பனையான வரலாறு தான், இன்னும் சொல்ல போனால் கடைந்தெடுத்த இடை செருகல் தான். இதனை ஏற்க மறுபவர்களுக்கு வேண்டுமானால், நானே உங்களுக்கு ஒரு பாய்ண்ட் எடுத்து தருகிறேன், சில விஷமம் பிடித்த பார்ப்பனர்கள் வேண்டுமென்றே உண்மையை மறைத்து விட்டார்கள் என்று கூறி ஆறுதல் அடைந்து கொள்ளலாம். இதில், பெரியார் அப்போதே கூறி வைணவர்களை திகைப்பில் ஆழ்த்தி விட்டார் என்கிற ஈன பேத்தல்கள் வேறு, பெரியார் ஒன்றும் பெரிய இலக்கிய ஆய்வறிஞர் கிடையாது.

    பி.கு:- நீங்கள் கொடுத்த வடிவழகிய நம்பிதாஸ் அவர்கள் இயற்றி பண்டிதர் கிருஷ்ணமாசாரியார் அவர்களால் பதிப்பிக்க பெற்ற நூல் ஆழ்வார்கள் வைபவம் http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMejuYy என்னும் சுட்டியை ஆராய்ந்து பார்த்ததில் எங்குமே திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் மூழ்கவிட்டு கொன்றார் என்கிற செய்தி இல்லவே இல்லை. முடிந்தால் நீங்கள் எனக்கு அதனை தேடி தரவும்…. இடை செருகல்களை எங்கிருந்து தேடுவது. ஏனெனில் அவை யாவும் உண்மை கிடையாது.

    ஆக, உங்களது அடுத்த ஆதாரத்தினை அளிக்கவும், அதன் யோக்கியதை என்னவென்பதையும் பார்ப்போம்…

  53. ஒரு பெண் கவிஞரை இழிவாக சித்தரித்ததை ஒரு பெண் தட்டி கேட்கிறார் . அதுவும் பொருள் பொதிந்த வகையில் எப்படி சிந்தனை ஓட்டம் இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தி , பின்னர் பல பொருள் பொதிந்த வார்த்தையை பிரயோகம் செய்கிறார்கள்

    இதை ஒரு வாசக பெண்மணி தட்டி கேட்கிறார் .

    அதற்கு எதிர் வினையாற்றிய ஒருவர் , பல பொருட்களில் ஒரு பொருளை மையம் கொண்டு நல்லவர்கல் எனும் சித்திரத்தை வரைகிறார் .

    அடுத்து அதற்கு மேலும் சென்று , மாற்று கருது கொண்டவர் என்பதால் அவர் பார்ப்பனீயத்தை ஆதரிப்பவராக இருக்க வேண்டும் என்று அவதூறு செய்கிறார்.

    அடுத்து ட்ரம்ப் என்பவரின் தேசியத்தை ஆதரித்து பேசியதை வைத்து , அவர் ட்ரம்ப் பெண்களை கொச்சை படுத்தியதையும் ஆதரிக்கிறார் என்று அவதூறு செய்கிறார் .

    இவர்களுடைய சிந்தனையோட்டத்தில் ஒரு வருடைய செயல்பாட்டில் அல்லது கருத்தில் தேர்ந்த்டுத்து அதற்கு மட்டும் ஆதரவு தர இயலாது .

    ஒன்று ட்ரம்பை ஆதரிக்க வேண்டும் இல்லையென்றால் எதிர்க்க வேண்டும் . இது தனி நபர் வழிப்பாட்டு பாசறையில் வளர்ட்ந்த காரணமாக இருக்கலாம் .

    அதே போன்ற அளவுகோலை பயன்படுத்தி பெரியார் கூறிய அணைத்து கருத்தையும் அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் . இல்லை என்றால் அவர் சாதியை ஆதரிப்பவர் ,பார்பனீயத்தின் ஆதரவாளர்.

    இது போன்ற அரைகுறை கருத்து தீவிரவாதிகளுக்கு தமிழில் எழுதுவது புரிவது இல்லையா ? இவர்கள் தங்களை தாங்களே பெரியார்வாதி , மார்க்சியவாதி என்றும் வேறு கூறிக்கொள்கிறார்கள் .

    ஒருவர் நபரை அப்படியே சரணடைவதை பெரியாரே ஏற்று கொள்ளமாட்டார் என்பதை அறிந்துகொள்ளும் அறிவு கூட இல்லாதவர்கள்.

    இது போன்ற அரைகுறை கருத்து தீவிரவாதிகலை ரெபேக்கா மெரி கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
    இது போன்றவர்கள் மற்றவர்களை லூசு என்று எழுதி அதை வினவு பிரசுரித்தது வருத்தத்திற்கு உரியது

  54. //வேணும் என்றால் இந்த விசயத்தை நம்ம அம்மா அல்லது நம்ம மூதாதை கொள்ளுபாட்டி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் கலை பின்னணியில் இருந்து தெரிந்து கொண்டு வந்து விவாதிக்லாமே நீங்க!//

    Mr.மாணவன் குமார் Who is this//நம்ம அம்மா//-JJ?

  55. அட அடா ஹ ஹா……முதலில் திருமங்கை ஆழ்வார் மதில் கட்டிய செய்தி அந்த பாடலில் எந்த இடத்தில் வருது என்றாவது கண்டுபிடிங்க பார்கலாம்..! கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய? என்னமா பொய்மீது விவாதத்தை கட்டமைத்துகிட்டு இருக்காங்க இந்த ரெபெக்கா….!மறுபடியும் இல்ல இல்ல என்றீர்கள் என்றால் உங்கள் அளவில் திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய செய்தியே இடைசொருகலாகிடும் ரெபெக்கா! ஹ ஹா.,..!

    வடிவழகிய நம்பிதாஸ் அவர்கள் இயற்றியபாடலில் திருவரங்கத்தில் கோவில்மதில் கட்டிய செய்தி எந்த அடிகளில் வருகின்றனவோ , தொண்டர்போடி ஆழ்வார் கட்டிய கட்டிடம் எந்த அடியில் வருதோ , அதனை தவிர்த்து திருமங்கை ஆழ்வார் கட்டிய மதில் பற்றிய செய்தி எங்கே அந்த பாடலில் வருதோ அதே இடத்தில் தான் திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் மூழ்கவிட்டு கொன்றார் என்கிற செய்தியும் சேர்ந்தே வருது. நல்லா படிங்க வடிவழகிய நம்பிதாஸ் பாடல்களை… !

    முதலில் திருமங்கை ஆழ்வார் மதில் கட்டிய செய்தி அந்த பாடலில் எந்த இடத்தில் வருது என்று கண்டுபிடிங்க பார்கலாம்..

    எளிய வழியை வேண்டுமானால் சொல்றேன்…. நான் குறிப்பிட்ட ஒரு லிங்க்கில் வடிவழகிய நம்பிதாஸ் பாடல்கபாடல் இருக்கு இல்லையா…, மறு லிங்கில் அதற்கான விளக்கமும் அடி மாறாமல் அப்படியே இருக்கு இல்லையா? இப்ப இரண்டையும் ஒப்பிட்டு கண்டு பிடிங்க பார்கலாம்…

    மறுபடியும் இல்ல இல்ல என்றீர்கள் என்றால் உங்கள் அளவில் திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய செய்தியே இடைசொருகலாகிடும் ரெபெக்கா! ஹ ஹா.,..!

    //பி.கு:- நீங்கள் கொடுத்த வடிவழகிய நம்பிதாஸ் அவர்கள் இயற்றி பண்டிதர் கிருஷ்ணமாசாரியார் அவர்களால் பதிப்பிக்க பெற்ற நூல் ஆழ்வார்கள் வைபவம் http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMejuYy என்னும் சுட்டியை ஆராய்ந்து பார்த்ததில் எங்குமே திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் மூழ்கவிட்டு கொன்றார் என்கிற செய்தி இல்லவே இல்லை. முடிந்தால் நீங்கள் எனக்கு அதனை தேடி தரவும்…. இடை செருகல்களை எங்கிருந்து தேடுவது. ஏனெனில் அவை யாவும் உண்மை கிடையாது. //

  56. பார்பனர்அவர்கள் கடவுள்களை பற்றி பார்பனர்கள் தானே நூல் எழுதுவார்கள்.. அந்த அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் நீங்களசுட்டும் நூலும் நான் சுட்டிய நூற்களும் பார்ணர்க்ளால் தானே எழுதபட்டு உள்ளது? நீங்க குறிப்பிட்ட நூல் வெறும் 80 பக்கங்கள் மற்றுமே அடங்கியது. அதுவும் வசங்களை அடிபடையாக கொண்டது…சுருக்கமானது. மேலும் அது வடிவழகிய நம்பிதாஸ் பாடல்களை அடிபடையாக கொண்டு தான் எழுதபட்டு உள்ளது. சுருக்மாக இருபதால் திருமங்கை ஆழ்வார் கட்டிட தொழிலாளர்களை கொன்ற அந்த தகவல் விடுபட்டு உள்ளது.அதுமட்டும் அல்ல…திருமங்கை ஆழ்வாரின் வரலாறே சுருக்க்பட்டு உள்ளது…

    அதே நேரத்தில் நான் சுட்டும் இரு நூற்களும் முழுமையானது… ஒன்று பாடல் வடிவில் வடிவழகிய நம்பிதாஸ் அவர்களால் எழுதப்பட்டும மற்றது அதே வடிவழகிய நம்பிதாஸ் அவர்களின் பாடல்களுக்கு விளக்க உரையாகவும் உள்ளது.

    முழுமையான நூற்களை காட்டினால் கூட அவற்றை படிக்க அறிவிழந்து நிற்கும் உங்க நிலை கண்டு எனக்கு சற்று வருத்தமாக தான் இருக்கு… ஆனால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும்!

    முழுமையான நூற்களை நீங்க இடை சொருகல் உடையவை என்றால் (வடிவழகிய நம்பிதாஸ் அவர்களின் பாடல்களையும் தான்) அவற்றுக்கு மாற்றாக உள்ள மூல நூலை கொடுக்கவேண்டியது இப்ப உங்க கடமை ஆகிறது அல்லவா? என்ன கேட்கின்றேன் என்றால் ஆழ்வார்களின் வைபவத்தை பற்றிய முழுமையான நூலை பாடல்கள் மற்றும் விளக்கம் சார்ந்து நீங்க தான் கொடுக்கணும் அல்லவா இப்ப?

  57. பெரியார் அவர்கள் திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை காவிரியில் முழுக்கி கொன்று குவித்து வைகுண்டம் அனுப்பிய வரலாற்றை அம்பலபடுத்த பயன்பட்ட திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூலினை தானே பயன்படுத்தினார். ஆழ்வாரின் மீதான அந்த குற்றசாட்டுகளை இது வரைக்கும் பெரியாரின் எதிர்பாளர்கள் யாருமே இடைசொருகல் என்று கூறவில்லையே…அந்த செய்தி இடைசொருகல் என்று இது வரைக்கும் யாராவது மறுப்பு தெரிவித்த வரலாறு உண்டா தமிழகத்தில்?

  58. ‘ஜோதியில கலந்துட்டார்’ங்கிறதை நம்புறீங்க! ஆனால்,’ஆற்றிலே தள்ளி கொன்னுட்டார்’ ன்னா நம்ப மாட்டேன்னு சொல்றீங்க!

    ஆதாரங்கள் கூட உங்கள் வசதிப்படிதான் இருக்கனும் போலிருக்கு!

  59. ஒரு சிறு புரிதல் பிழை நடந்து விட்டது, வடிவழகிய நம்பிதாஸ் பற்றிய என்னுடய பதிலில், அவருடைய நூலின் லிங்கை தருவதற்கு பதிலாக, வேறு ஒரு லிங்கை அளித்து விட்டேன்(அந்த லிங்கிலும் இடை செருகல் செய்தியை தான் கூறி இருக்கிறார்கள் அதற்க்கு பதிலாகராமானுஜாச்சாரியாரின் நூலினை நான் அளித்து விட்டேன்), அது ஒரு அவசரத்தில் ஏற்பட்ட விவர பிழை தான். அதனால் பாதகமொன்றும் கிடையாது. வடிவழகிய நம்பிதாஸரின் ஆழ்வார் பாடல் தொகுப்பிற்கான சுட்டி இது தான், இதனை பதிப்பித்தவர் கிருஷ்ணமாச்சார்யார் என்கிற வைணவ பார்ப்பனர் :-

    http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/aazhvaarkal_vaibavam.pdf

    மேற்படி லிங்க்கில் திருமங்கையார் தொழிலாளர்களை படுகொலை செய்தார் என்கிற செய்தி எங்குமே வரவில்லை. ஒரு வேளை என் ஊன கண்களுக்கு புலப்படவில்லையா என்னமோ,, பெரியார் கொடுத்த ஞான கண் கொண்டவர்கள் எங்கே வடிவழகிய நம்பிதாசர் பாடி இருக்கிறார் என்பதை காட்டுவீராக.அது ஒரு இடை செருகல் என்பதனால் தான் , நம்பிதாசர் அதனை பற்றி பாடவேயில்லை.

  60. யாரும் விவாதிக்கவில்லை என்றால், பெரியாரின் உளறல்களை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பெரிது படுத்த வேண்டாம் என்று கடந்துபோய் இருப்பார்கள். யாரும் பதில்சொல்லவில்லை (கண்டுகொள்ளவில்லை) என்பதற்காக பெரியார் கூறியவை அனைத்தும் பதில் சொல்ல முடியாத புத்திசாலித்தனமான கருத்தாகிவிடாது. தாய்மொழி கல்வியின் அவசியத்தை பற்றி பேசியவர்களையே, தாய் பால் வெறியர்கள் என்று கூறிய மகா புத்திசாலி ஆயிற்றே. அதனால், அவரின் அறிவொளியை கண்டு எல்லோரும் ஒதுங்கி விட்டார்களோ என்னவோ? யார் கண்டார்?

  61. அரங்கநாதன் ஒன்றும் பார்ப்பனர்களின் கடவுள் கிடையாது, அவர் தமிழர்களின் கடவுள் தான். ராமானுஜாச்சாரியார் எழுதிய 80 பக்க நூலில் திருமங்கையர் தொழிலாளிகளை கொன்றார் என்பதனை கூற ஒன்றும் 400 பக்கங்கள் ஆகி விட போவதில்லை, விடயம் என்னவென்றால், அப்படி ஒரு சம்பவம் அவர் வாழ்வில் நடைபெறவில்லை. அவர் தொழிலாளிகளை கொன்றார் என்பது யாரோ ஒரு பொய்யாழ்வார் இட்டு கட்டிய பொய் வரலாறு தான் என்பதனை நன்றாக புரிந்திருந்தால் தான் அதனை கூறவில்லை. அந்த பொய் வரலாறு எதன் அடிபடையில் புனையப்பட்ட ஒன்று என்பது இனி போக போக தெரியும், பாப்போம்.

  62. வடிவழகிய நம்பிதாஸ் அவர்கள் இயற்றிய பாடலில் திருவரங்கத்து கோவிலின் மதில் சுவர் கட்டபட்டு உள்ள செய்தியை , அப்படி கட்டும் போது தொண்டர்போடி ஆழ்வார் கட்டிய கட்டுமானங்களை விட்டு விட்டு மதில் கட்டிய செய்தி , கோபுரங்கள் கட்டிய செய்தி அப்படி கட்ட நாகை பொவுத்த கோவிலில் தங்க சிலைகளை திருடிய செய்தி , அவற்றை நிலத்தில் புதைத்த செய்தி என்று அனைத்துமா விடுபட்டு உள்ளது? இல்லையே! இந்த செய்திகளுடன் கூட தானே தொழிலாளர்கள் கொல்லபட்ட செய்தியும் கூடியே வருகிறது. செலக்டிவாக இந்த செய்தியை மட்டும் எப்படி ஒரு இந்த ஒரு வரியை இடைசொருகல் என்று நீக்கி இருக்க முடியும்? ஆம் நீக்கபடவில்லை வடிவழகிய நம்பிதாஸ் அவர்களின் குருபரம்பரை பிரபந்தத்தில் எதுவும் நீக்கபடவில்லை . அங்கேயே தான் அந்த செய்திகள் இருகின்றன… அதே லிங்க் தான் .. நானும் நீங்களும் அளித்த அதே லிங்க் தான்…

    http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/aazhvaarkal_vaibavam.pdf

    கண்டுபிடியுங்கள்…ஒன்று மேலே நான் கூறிய அனைத்து செய்திகளும் இருக்கனும் … அல்லது அனைத்து செய்திகளும் விடுபட்டு இருக்கனும்… இருக்கா ? விடுபட்டு இருக்கா? கண்டுபிடிங்க பார்கலாம்…! ஒரு குறிப்பு வேண்டுமானால் தரேன்… ஏன் சில படல்ல்கள் மட்டும் () என்று அடைப்பு குறிக்குள்தரப்பட்டு உள்ளன?

    ஆமாம் அந்த செய்திகள் அனைத்தும் இருக்கு! () அடைப்பு குறிக்குள் உள்ள பாடல்களில் இருக்கு!

    முதலில் திருமங்கை ஆழ்வார் திருவரங்க கோவிலுக்கு மதில் கட்டிய செய்தியை அந்த பாடல்கள் ஊடாக கண்டுபிடிங்க பார்கலாம்…!

    //மேற்படி லிங்க்கில் திருமங்கையார் தொழிலாளர்களை படுகொலை செய்தார் என்கிற செய்தி எங்குமே வரவில்லை. //

  63. ஆழ்வார்களின் வைபவனான குருபரம்பரை -உரைநடை (மூல நூல் குருபரம்பரை பிரவாகம் அதன் ஆசிரியர் வடிவழக தாசர் ) என்ற நூல் விதவ கல்யாண ஸ்ரீனிவாசதாதாசாரியாரால் உரைநடையாக எழுதபட்டு அந்த நூல் திரு முத்துகிருஷ்ணணன் அவர்களால் பரிசோதனை செய்யபட்டு 1902 ஆம் ஆண்டு வெளிவந்து இருக்கே! அதில் திருவரங்கம் கோவில் மதிகள் கட்டபட்ட செய்தியும் ,அந்த திருவரங்க கோவிலின் சுவர்களை கட்டிய சிற்பிகள் கூலி கொடுக்படாமல் கொல்லபட்ட செய்தியும் இருக்கே…! யாருகிட்ட கதை விடுறிங்க ரெபெக்க? இடைசெருகல் என்று யாருகிட்ட கதை விடுறிங்க ரெபெக்கா?

    நான்கு அடி நான்கு அடிகளாக வரும் அந்த பாடல்களில் இடைசொருகல் என்றால் கோவில் மதில் கட்டிய செய்தி அதனை தொடர்ந்து வரும் கூலி கொடுக்காமல் கொன்ற செய்தி ஆகிய அனைத்துமே இடைசொருகளாக தானே இருக்கனும்…! அது எப்படி கூலி கொடுக்காமல் தொழிலாலர்களை கொன்ற செய்தி மட்டும் இடைசொருகல் என்று இரண்டு அடியை மற்றும் நீக்க வாய் கூசாமல் சொல்றீங்க ரெபெக்கா?

    மீண்டும் பாருங்க இந்த லிங்கில் உள்ள pdf நூலை….

    http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMejuYy

  64. இடை சொருகல் என்று அலம்பரை செய்துகிட்டு இருக்கு ரெபெக்கா மேரிக்கு எனது எளிய விசாரணை கேள்விகள் :

    ஆழ்வார்களின் வரலாறு என்பதுகீழ்கண்ட ஐந்து மூல நூற்களின் அடிப்படையில் பலவேறு வைணவ பெரியோரால் எழுதபட்டு உள்ளன..அவைகள் ஆயிரம்படி குருபரம்பரா பிரவாகம் ,பன்னீராயிரம் குருபரம்பரா பிரவாகம் ,அறிச்மயதீபம் ,வடகலை குருபரம்பரா பிரவாகம் ,மற்றும் உபதேசற தினமாலை ஆகியன.

    இந்த நூற்களில் எந்த நூலில் இடைசொருகல் இருக்கு? அதாவது நீங்க சொல்லும் இடைசொருகலென்று கூறும் தொழிலாளர் கொலை செய்யபட்ட செய்தி இடைசொருகளாக உள்ளது என்று கூற வேண்டியது இப்ப இங்கே உங்க கடமை தானே?

    பெரியார் அவர்களும் திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூலை தான் ஆதாரமாக சொல்றார். வைணவ பெரியோர் எழுதிய அந்த நூலை நானும் இங்கே குறிப்பிட்டு இருக்கேன்.. அதன் லிங்க் கூட கீழே இருக்கு:

    http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMejuYy

    சொல்லுங்க…சொல்லுங்க இடை சொருகல் எங்கே இருக்கு எந்த மூல நூலில் இருக்கு என்று சொல்லுங்க?

  65. பெரியார் அவர்கள் சைவ, வைணவ நூற்களில் உள்ள கசடுகளை ,மக்கள் விரோத செயல்களை எல்லாம் அம்பலபடுத்த தொடங்கிய பின் குத்துதே குடையுதே என்று சைவர்களும், வைணவர்களும் இப்ப இடைசொருகல் என்று அந்த நூற்களில் உள்ள முடைநாற்றம் அடிக்கும் பாகங்களை ஒதுக்க முயலும் நிகழ்வு தான் நடந்துகிட்டு இருக்கு. அந்த செயலுக்கு தூதுவராக தான் இங்கே ரெபெக்கா மேரி வந்து தன் வலுவிழந்த வாதங்களை வைத்து பேசிகிட்டு இருக்காங்க..இதில் வேறு அவருக்கு வினவில் கருத்தியல் ரீதியாக அம்பலப்பட்டு இருக்கும் இராமன் வைகையறாக்கள் ஆதரவு.

  66. இந்த பெரியாரிஸ்டுகளின் அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி முட்டாள் ஆக்குகின்றார்கள், அந்த பாடல் தொகுப்பில் அவர் படுகொலை செய்ததற்கான பாடல் எங்கே வருகிறது என கேட்டதற்கு, இது வரை அதற்க்கு ஒரு உருப்படியான பதிலும் இல்லை. புத்தரின் சிலையை அபகரித்து, கோவில் மதில் கட்டியதாக தான் இருக்கின்றனவே ஒழிய, ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்று எங்குமே கூறப்படவில்லை. அறிவு நேர்மை கொஞ்சமாவது இருந்தால், அது எந்த பக்கத்தில் இருக்கின்றது என கூறி, அந்த பாடலின் ஒரு வரியை மட்டும், அதாவது திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பதனை மட்டுமாவது தட்டச்சு செய்து இங்கு மறுமொழியில் அளிக்கவும்.

    முடிந்தால் நீங்கள் கூறிய மூல நூற்களை தேடிக்கண்டு பிடித்து இங்கே வாசகர்களின் பார்வைக்கு கொடுங்கள், அதனை பார்த்து ஆராய்ந்த பின்பு, அதன் யோக்கியதையை தெரிந்து கொள்கிறோம். வைணவ பார்ப்பனர்களே பதிப்பித்த ஒரு பழைய நூலில் இருக்கின்றது என்பதற்காக அது உண்மையென்றாகி விடாது. இதனை எந்த போலியாழ்வார், எந்த நூற்றாண்டில் குருபரம்பரை என்கிற பெயரில் இந்த புரட்டல் வேலைகளை செய்தார் என்பது மட்டும் தான் தெரிய வேண்டும். குருபரம்பரை என்கிற பெயரில் உலாவரும் எத்தனை நூல்களை கொண்டுவதாலும் சரி, திருமங்கை ஆழ்வார் ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பது கடைந்தெடுத்த இடை செருகல் தான். ஆகவே ,ரொம்ப துடிக்க வேண்டாம், உங்களுக்கு முட்டு கொடுக்க வினவு, சீக்கிரமே புதிய ஜனநாயகத்தில் உள்ள குரு பரம்பரை கட்டுரை வெளியிடும், அப்போது தெரியும் முடை நாற்றம் எங்கிருந்து வரும் என்று.

    முடைநாற்றம் என்பது, பெரியாரிய அரைவேக்காடுகளின் புத்தியில் தான் இருக்கின்றனவே தவிர, ஆழ்வார்களின் வாழ்வில் கிடையாது. பெரியார் ஒன்றும் ஆய்வறிஞர் கிடையாது, அவருடைய உளறல்களை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று சைவ, வைணவ நெறியினை சார்ந்தோர் அதனை நன்கு உணர்ந்தோர் சென்று இருக்கலாம். ஏனென்றால், வெறுப்பு மற்றும் காழ்ப்பின் அடிப்படையில் பேசும் ஒருவனிடம் சென்று என்னதான் நியாயத்தை எடுத்து உரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காக தான் முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இப்போதும் கூட பெரியாரின் பக்தாள்களும், ஒருசில ஏமாந்த தமிழர்களும் தான், அவரின் தமிழ் எதிர்ப்பையும், தமிழ் இலக்கிய எதிர்ப்பையும் தலையில் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்கள். இதனை கடந்து வேறு எவரும் அவரின் பேச்சுக்களை மதிப்பதே கிடையாது. தமிழர்கள் அனைவரும் எப்பொழுதோ அவரின் உளறல்களை எல்லாம் குப்பையில் எறிந்து விட்டார்கள். இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் கடைசி தமிழன் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை எந்த கொம்பனாலும் தமிழர்களின் அடையாளமாக திகழும் ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் ஒன்றும் செய்ய முடியாது

  67. ரெபெக்கா மேரி..!, இடைசொருகள் என்றால் அதனை சுட்டிகாட்டவேண்டியது யார் வேலை ? ஏன் இப்படி தப்பாட்டம் ஆடுறிங்க?

    I too repeat the same. “புத்தரின் சிலையை அபகரித்து, கோவில் மதில் கட்டியதாக தான் இருக்கின்றனவே ஒழிய”-இந்த செய்தியை தான் அந்த பாடல்களில் எங்கே இருக்கு என்று வினவி உள்ளேன். பதில் கூறுவதற்கு என்ன பிரச்னை ரேபெக்காவுக்கு? குறிப்புகளையும் கொடுத்து இருக்கேன்… திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய செய்தி அந்த வடிவழகிய நம்பி தாஸ் அவர்களின் குருப்ரம்ரை-பிரவாகம் நூலின் பாடல்களின் எங்கே இருக்கு என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தடை ? மனத்தடை?

    திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய செய்தி உண்மை என்றால் அது எங்கே வடிவழகிய நம்பி தாஸ் அவர்களின் பாடல்களின் எங்கே இருக்கு கூருங்க பார்கலாம்! அதற்கு அடுத்து வரும் படலில் உள்ள தொழிலாளர்களை திருமங்கை ஆழ்வார் கொன்ற செய்தியை நான் கூறுகின்றேன்.

    இடைசொருகல் என்று கூறி விவாதத்தில் தப்ப முனைவது நீங்க தான். நான் இல்ல… அப்ப அந்த இடைசொருக்லான பாடலை சுட்டிக்காட்ட வேண்டியதும் நீங்க தானே? முயற்சி பன்னுங்க..ஹ ஹ்ஹா… கடைசியா திருவரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் மதிலே கட்டல என்று சொல்லி தப்ப முய்ர்சிகாதிங்க!

    // வரை அதற்க்கு ஒரு உருப்படியான பதிலும் இல்லை. புத்தரின் சிலையை அபகரித்து, கோவில் மதில் கட்டியதாக தான் இருக்கின்றனவே ஒழிய, ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்று எங்குமே கூறப்படவில்லை. அறிவு நேர்மை கொஞ்சமாவது இருந்தால், அது எந்த பக்கத்தில் இருக்கின்றது என கூறி, அந்த பாடலின் ஒரு வரியை மட்டும், அதாவது திருமங்கையார் தொழிலாளிகளை ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பதனை மட்டுமாவது தட்டச்சு செய்து இங்கு மறுமொழியில் அளிக்கவும். //

  68. ரெபெக்கா உங்க தரப்பு வாதத்துக்கு (இடைசொருகல் வாதத்துக்கு ) எதிர் கட்சியாகிய என்னைய ஆதாரத்த கொடுக்க சொன்னால் எப்படி? கிறுக்கா பிடிச்சி இருக்கு உங்களுக்கு? எங்கே இடை சொருகளாக அந்த செய்தி இருக்கு என்று கூருங்க… குறைந்தபட்சம் மதில் கட்டிய செய்தியையாவது சுட்டிகாட்டுங்க…

    திருமங்கை ஆழ்வார் தொழிலாளர்களை கொன்றார் என்பதற்கு ஏன் நீங்க அதனை தக்க ஆதாரங்கள் கொடுத்தும் இடைசொருகல் என்று கூறனும்? எனக்கு புரியலையே! திருமங்கை ஆழ்வார் தேவையின்றி மக்களை கொன்ற செய்தியையே அவர் பாடல்களில் கூறியிருக்க தொழில்லாலர்களை கொன்ற செய்தியை நீங்க மறுக்க வேண்டிய தேவை எங்கே இருந்து வந்தது.? அது இடை சொருகல் என்றால் அது எங்கே இடையே சொருக பட்டு இருக்கு என்று அஆதரத்துடன் நிருபிக்கவேண்டியது உங்க கடமை தானே? அதனை விட்டு விட்டு அது இடை சொருகல் ஆனா அதுக்கு நீ ஆதாரத்தை கொண்டு வா என்று கேட்பது கேனத்தனமாக இல்லையா ரெபெக்கா மேரி? இடை சொருகலுக்கு நீங்க தான் ஆதாரம் கொடுக்கணும் ரெபெக்கா? எந்த நூலின் பாடலில் அது இடைசொருகளாக வந்து இருக்கு என்று நீங்க தான் ஆதாரம் கொடுக்கணும்…!

    இவ்வளவு ஆங்காரமாக “””குருபரம்பரை என்கிற பெயரில் உலாவரும் எத்தனை நூல்களை கொண்டுவதாலும் சரி, திருமங்கை ஆழ்வார் ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பது கடைந்தெடுத்த இடை செருகல் தான்” சொல்லிறிங்க என்றால் அது இடைசொருகல் என்பதற்கு என்ன ஆதாரத்தை டுபாக்கூர் ரெபெக்கா வைத்து இருக்கீங்க?

    அது எப்படி வினவு கட்டுரையை படிக்காமல் நீங்க டென்சன் ஆவது சரியா இருக்கும்? வினவு கட்டுரையை படிகாமாலையே இந்த அளவுக்கு சத்தமா கூவுரிங்க என்றால் பயம் வந்துடிச்சி என்று தானே அர்த்தம்?

    கடைசி பத்தியில் நீங்க கூவும் கூவலுக்கு எல்லாம் உளறல்களுக்கு எல்லாம் நான் பதில் கொடுக்க மாட்டேன்… நல்ல மன நல மருத்துவரை பாருங்க…
    //முடிந்தால் நீங்கள் கூறிய மூல நூற்களை தேடிக்கண்டு பிடித்து இங்கே வாசகர்களின் பார்வைக்கு கொடுங்கள், அதனை பார்த்து ஆராய்ந்த பின்பு, அதன் யோக்கியதையை தெரிந்து கொள்கிறோம். வைணவ பார்ப்பனர்களே பதிப்பித்த ஒரு பழைய நூலில் இருக்கின்றது என்பதற்காக அது உண்மையென்றாகி விடாது. இதனை எந்த போலியாழ்வார், எந்த நூற்றாண்டில் குருபரம்பரை என்கிற பெயரில் இந்த புரட்டல் வேலைகளை செய்தார் என்பது மட்டும் தான் தெரிய வேண்டும். குருபரம்பரை என்கிற பெயரில் உலாவரும் எத்தனை நூல்களை கொண்டுவதாலும் சரி, திருமங்கை ஆழ்வார் ஆற்றில் தள்ளி படுகொலை செய்தார் என்பது கடைந்தெடுத்த இடை செருகல் தான். ஆகவே ,ரொம்ப துடிக்க வேண்டாம், உங்களுக்கு முட்டு கொடுக்க வினவு, சீக்கிரமே புதிய ஜனநாயகத்தில் உள்ள குரு பரம்பரை கட்டுரை வெளியிடும், அப்போது தெரியும் முடை நாற்றம் எங்கிருந்து வரும் என்று. /////

  69. எச்ச ராஜா, ராமன், மணிகண்டன், ரங்கராஜன் வகையறாக்களுக்கு,

    பாருங்கள் எங்கள் சூத்திர மேரியின் போர்க்குணமிக்க வாதங்களை! உங்களில் யாருக்கேனும் இந்த திறமை இருக்கிறதா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்கிற்கு விலை சொல்லுவீர்கள்! இல்லையெனில் ஓடி மறைவீர்கள்! இது எங்கள் தந்தை பெரியார் வளர்த்தெடுத்த போராளி குணம். என்ன செய்ய தீட்டிய மரத்தில் கூர் பார்க்கிறது!

    பகிரங்கமாக பரிந்துரைக்கிறேன்! உங்கள் மதவெறி கூட்டத்தில் இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறுநரிகளுடன் மோதுவதை விட ஒரு சிங்கத்துடன் மோதிய திருப்தி கிடைக்கும் எங்களுக்கு!

  70. மேரி,குமார் சிறப்பாக உங்கள் வாதங்களை எடுத்து வைக்கின்றிர்கள். நன்று. வழக்கறிஞராக ஒரு முக்கிய அறிவுரை கூறவிரும்புகின்றேன்.

    நேர்மையாக நடத்தபடும் விவாதங்களில் மற்றும் வழக்காடுதல்களில் , தன் கருத்தை எடுத்துவைப்பவர் அதற்கு உரிய ஆதாரங்களையும் தரவேண்டும் என்பது இயற்கையின் விதி. இங்கே திருமங்கை ஆழ்வார் கூலி தொழிலாளர்களை கொன்றார் என்ற கருத்தை எடுத்துவைக்கும் குமார் அதற்கான ஆதாரமாக குருபரம்பரை பிரபந்ததம் என்ற உரைநடை நூலில் இருந்து கொடுத்து இருக்கார். மிகவும் பழமையான நூல் அது. அது அதிகார பூர்வமான நூல் அல்ல என்றால் தன் வாதங்கள் மூலம் அதனை நிருபிக்கவேண்டியது மேரி அவர்களின் கடமை தான். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த நூல் வைனவப்பெரியோர்களால் நேர்மையாக எழுதபட்டு கவனமாக திருத்தங்கள் செய்யப்பட நூல் .நம்பாமல் இருக்க எனக்கு ஏதும் வழியில்லை. சுஜாத்தாவின் வைணவர்கள் ஒரு எளிய அறிமுகம் என்ற குப்பையை விட அது அதிசிறந்த நூல் தான். அதே போல கூலி தொழிலாளர்கள் கொள்ளப்பட செய்தி இடைசெருகல் என்று மேரி கூறுவார் என்றால் அதற்கான ஆதாரத்தையும் தரவேண்டியது மேரியின் கடமை. எந்த பாடலில் அந்த செய்தி இடையே சொருகப்படு உள்ளது என்று கூரவேண்டியதும் மேரியின் கடமை தான். “shifting the responsibility to opponent solder” என்ற குற்றத்தை தன் கருத்துகளுக்கு தேவையான தரவுகளோ எதிர் தரப்பில் உள்ள குமாரிடம் கேட்பதன் மூலம் செய்து கொண்டு இருக்கின்றார் மேரி. இந்த விவாதத்தில் வசவுகளை இருதரப்புமே தவிர்த்து விட்டு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கையில், ஆனால் ஆனாலும் அது சாத்தியம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

  71. திருமங்கையின்இந்த பாடலையா தேடிகிட்டு இருகிங்க? விவாதத்தின் குறுக்கே நுழைவதற்கு மன்னிக்கணும். இதனையா இடைசொருகல் என்று சொல்லுரிங்க? கொலை செய்தார் ஓகே. குறிக்கோள் இன்றி கொலை செய்து இருகார் என்றால் அவர் என்ன மனநலம் சிதைந்தவரா? ஹிட்லரா?

    திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

    கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
    என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
    குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
    அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

    காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை அவர்.

  72. முதலில், வடிவழகதாசர் எழுதி உள்ள பாடலில் எங்கே படுகொலை சம்பவம் இருக்கின்றது என்பதை நீங்கள் கூறவும், பிறகு அந்த சம்பவம் ஒரு இடை செருகல் தான் என்பதனை நான் நிரூபிக்கின்றேன். திருமங்கையார், மதில்களை கட்டினார் என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது, ஆனால், மதில் கட்டிய தொழிலாளிகளை அவர் ஆற்றில் மூழ்கடித்தார் என்று எங்குமே அந்த நூலில் கூறப்படவில்லை. ஆக, இதனை நீங்கள் நிரூபியுங்கள் மற்றதை நான் மெய்ப்பிக்கின்றேன். கேள்வி இது தான், வடிவழக தாஸரின் எந்த பாடலில் திருமங்கையார் ஆற்றில் தாலி கொன்றார் என்று கூறப்பட்டுள்ளது?

  73. Rebecca Mary”s last para in 223 is sheer nonsense.What authority or knowledge she has to judge Periyar’s research on Puranams like Ramayanam?No one has answered Periyar”s queries in his book “Ramayana Pathirangal” so far.Does she know that the above referred book has been translated in Hindi and is selling like hot cake in Bihar and other northern States?There is a proverb in Tamil.”POONAI KANNAI MOODIKONDAAL ULAGAME IRUNDU PONADHAAGA YENNIKOLLUMAAM”

  74. இருவரும் தன் கருத்துகளுக்கு ஆதாரங்களை கொடுக்காமல் நிற்பது தகுமா? ஏன் இந்த தயக்கம்? ஆதாரத்தை கொடுத்தால் விவாதம் முடிந்து விடும் என்ற அச்சமோ? சரி நான் கொடுக்கின்றேன் ஆதாரத்தை. இருவரின் கருத்துகளையும் மெய்பிக்க நான் தருகின்றேன் ஆதாரத்தை

    சிறந்த ஆய்வியல் அறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பௌத்தமும் தமிழும் எனும் நூலில் (பக்கம் 37) கீழ்க்கண்டவாறு எழுதி யுள்ளார்.

    திருமங்கை ஆழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலி ருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று, அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு. இப்படி திருடி வந்த பொன்னைக் கொண்டு சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் மதில் சுவர் எழுப்பப்பட்டது அல்லவா!
    அக்கோயிலின் மதிற் சுவரையும், கட்டடங்களை யும் எழுப்பிய தொழிலாளர்களுக்குக் கூலி ஏதும் கொடுக்காமல், தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றிச் சென்று காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டனர்.

  75. ரெபெக்கா அந்த கொலை செய்தி இடைசொருக்லா? இல்ல இடையே சொருகப்டவில்லையா? குழம்பாமல் கூருங்க!

    சிற்பிகள் திருமங்கை ஆழ்வாரால் கொலை செய்ய பட்ட செய்தியை நீங்கள் இடைசொருகள் என்றால் அதனை வடிவழகதாசர் எழுதி உள்ள பாடலில் சுட்டிகாட்டவேண்டியது யார் வேலை ? முதலில் அந்த செய்தியை இடை சொருகல் என்று பிதற்ற ஆரம்பித்த அறிவிலி நீங்கதானே? அப்ப நீங்க தான் அதனை வடிவழகதாசர் எழுதி உள்ள பாடலின் ஊடாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டனும். அடுத்து புத்தன் பொன்சிலை திருடியசெய்தி ,அதனை கொண்டு மதில் கட்டிய செய்தி, அப்ப சிற்பிகள் கொள்ளிடக்ரையில் கொலையுண்ட செய்தி ஆகியவற்றை பற்றி ஆதாரத்துடன் கூறவேண்டியது எனது கடமை. கண்டிப்பாக தருகின்றேன் ஆதாரத்தை…

    அந்த செய்தியை இடைசொருகல் என்று முதலில் முதன்முதலில் பிதற்றிய உங்க வாயில் இருந்து அது அங்கே எந்த பாடலில் இடையே சொருகப்பட்டு இருக்கு என்று கூருங்க பார்கலாம்.

    அது என்ன இடைசொருகல் என்று சொன்ன நீங்க இப்ப மதில் கட்டிய தொழிலாளிகளை அவர் ஆற்றில் மூழ்கடித்தார் என்று எங்குமே அந்த நூலில் கூறப்படவில்லை என்று(இடையே சொருகப்டவில்லை ) என்று மாற்றி கூருகிண்றீகள்! ஏதாவது ஒத்த நிலைபாடு உடன் இருங்க ரெபெக்கா.

    உங்க ரெட்டை நிலைபாடு எப்படி இருக்கு தெரியுமா? பெரியார் நமக்கு தேவை என்று போன ஆண்டு நீங்க புகழ்துவிட்டு இந்த ஆண்டு அவரை அவதூரு செய்வது போல மாற்றி மாறி மாறி மாற்றி மாறி மாறி மாற்றி பேசினால் வினவு வாசகர்கள் உங்ககளை பார்த்து சிரிப்பாங்க. முட்டாள் மற்றும் பேச்சில் நேர்மை அற்றவர் என்று கூட நினைக்கமாட்டார்கள்…உங்களுக்கு மன நிலை சரியில்லை என்று தானே நினைப்பார்கள்.

    //ஆனால், மதில் கட்டிய தொழிலாளிகளை அவர் ஆற்றில் மூழ்கடித்தார் என்று எங்குமே அந்த நூலில் கூறப்படவில்லை//

  76. மேரி தொழிலாளர்கள் கொலை செய்யபட்ட செய்தியை இடை செருகல் என்று கூறுவார் எனில் எங்கே அது இடைசொருகளாக உள்ளது எந்த நூலில் அது இடைசொருகலாக உள்ளது மேரி கூறலாம் அல்லவா? பெரியார் அந்த நூலின் பெயரை திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற பக்தி நூல் என்று குறிபிடுகின்றார். இது தொடர்பான ஒரு நூலை படிக்கும் படி வினவு வாசகர்களை கேட்டுகொள்கின்றேன்.

    இந்துமதப் பண்டிகைகள். முதல் கட்டுரை சொர்கவாசல் மகிமை

    http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/10.pdf

    அந்த நூலில் பெரியார் கூறும் விசயம் இதோ.

    நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் – ஓடக்காரன் துணையோடு.

    அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் – சுடுகாடு, பார்வணம் – சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம் (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி)

    சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் – அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வனத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

    மேரி பெரியார் கூறும் இத செய்தியை இடைசொருகல் என்று கருதுவார் என்றால் அதற்கு மேரி ஆதாரத்தை தரனும் அல்லவா ?

    (மேலும் என் முந்தைய கருத்தை(227) சுஜாத்தாவின் ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் என்ற குப்பையை விட அது அதிசிறந்த நூல் தான். என்று திருத்தி படிக்கவும். தவறுக்கு வருந்துகின்றேன்.)

  77. இந்த விவாதங்களை அவதானிக்கும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் ஒருவிடயம் மேரி வம்படியாகச் செய்யும் ஆதாரமற்ற வாக்குமூலங்கள்.மாணவர் குமார் கொடுக்கும் ஆதாரஙகளுக்கு காரணமற்ற புரந்தள்ளுதலை தவிர எதிர்வினையாற்ற வக்கற்ற மேரியை உச்சி முகர்ந்து ஒரே தளத்தில் வைப்பது அல்லது சூத்திர மேரி என்றும் சிங்கமென்றும் விதந்தோதுவது சரியானதுதானா?

  78. சூழ்ந்திருக்கும் சுவாசக்காற்று ஒரு உண்மை;
    மதப்பித்து சுவாசப்பையின் நோய்ப்புற்று; சுவாசக் கோளாறு நோயை வளர்க்கும்,
    உண்மையை மறைக்கும்,
    அதுவே ஆன்மாவையும் அழிக்கும்.

  79. Pravda நண்பரே!

    அது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாகத் தெரியவில்லையா? அவரைப்பற்றி என்னுடைய முந்தைய பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.

  80. சூத்திர மேரி என்று அவரை விளித்தது, பெரியாரை அவதூறு செய்யும் அவரை, இந்து மதத்தில் அவரது படிநிலையை நினைப்பூட்டத்தான்!

  81. ரெபெக்கா மேரிக்கு இது வரைக்கும் நான் கொடுத்த ஆதாரங்களின் போதமையின் காரணமாக இன்னும் ஒன்று கொடுக்போகிறேன். சிவனுக்கு ,பிட்டு செய்யும் கிழகி அளித்த பெரம்படி போல நான் கொடுக்கபோகும் ஆதாரமாவது போதுகின்றதா என்று பார்கலாம்..

    தமிழ் தாத்தா என்று நம்மால் அன்புடன் அழைக்கபடும் உ.வே.சா அவர்களால் பலவேறு நூற்களுக்கு உயிர் கொடுக்கபட்ட அதில் ஒன்று தான் அரிசமய தீபம் என்ற நூல். இது ஆழவார்களை பற்றிய நீண்ட நெடிய வரலாற்றை கூறும் ஒரு அரிய நூல். இது 514 பக்கங்களை கொண்டது. சடகோபநாசர், கீழையூர் அவர்களால் எழுதபட்ட பாடல் வடியில் உள்ள இந்த நூலை தாத்தா உ.வே.சா அவர்கள் கண்டெடுத்து அதனை உரைநடையாகி நமக்கு அளித்து உள்ளார். நாட்டுடமை ஆக்கப்பட்ட இந்த நூல் தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY யில் காணகிடைகிறது. தேவைபடுவோர் இதனை தன் கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.

    நூல் : அரிசமய தீபம்

    ஆசிரியர்: சடகோபநாசர், கீழையூர்

    தொகுத்து உரைநடை ஆகியவர் : தமிழ் தாத்தா அய்யா உ.வே.சா

    இணைய இறக்கத்துக்கு :

    http://www.tamilvu.org/library/nationalized/scholars/html/pdf/literature/arichamayatiibam.pdf

    இந்த நூலினை தரவிறக்கம் செய்தபின் அதன் பக்கங்கள் 445,446,447,448 ஆகிய பக்கங்களில் பரகாலசருக்கம் என்ற தலைப்பில் திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்துக்கு கோவில் கட்டிய வரலாறு மிக விரிவாக கொடுக்கபட்டு உள்ளது. ஆழ்வார் அவர்கள் புத்த கோவிலை களவாடிய செய்தி, தொண்டர்போடியாரவர் கட்டுமானத்தை உள் அமைத்து மதில் கட்டிய செய்தி, அதனால் தொண்டர்போடியாரவர் மகிழ்து அவரின் பூ செறியும் கருவிக்கு திருமங்கை ஆழ்வார் பெயரை வைத்த செய்தி, சிரிபிகளை கடனுக்கு வேலை செய்ய திருமங்கையன் கோரியசெய்தி அப்படி கடனுக்கு வேலை செய்தால் பெருமான் மோச்சம் அருளுவான் அதன் பின் கூலி தருகின்றேன் என்று கூறிய செய்தி., சிறிபிகள் ,கம்மாளர்கள், கைதொழிலாளர்கள் ஆகியோர் வேலையை செய்து முடித்து அதற்கான கூலியினை கேட்ட செய்தி …கூலி தருவதாக சொல்லி சிறிபிகளை அழைத்து சென்று திருகாவேரி ஆழாமாக இருக்கும் ஓர் இடத்தில் அவர்களை கவிழ்த்து கொன்ற செய்தி, என்று திருமங்கை ஆழ்வார் அவர்களின் களவாணித்தனங்கள் தொடர்ந்து சென்று கொண்டு உள்ளன…

    அந்த பாடல்களும் எளிதாக இருக்க அதற்கான உரைநடையும் மிக தெளிவாகவே இருக்கிறது. ரெபெக்கா மேரி என்ற சிவனை கிழவி போன்று நாமும் இப்ப பெரம்பால் அடித்தாயிற்று ! வினவு தளத்துக்கு என்ன ஆகுமோ தெரியலையே!

    இதனை படித்தமைக்கு நன்றி ரெபெக்கா . நிதானமாக சிந்தியுங்க…

  82. கூறப்பட்ட குற்றச்சாட்டையே இடைசெருகலா இல்லையா என மறுக்க முடியாமல் குழம்பும் மேரி பெரியாரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வைது தீர்க்கிறார். உங்களிடம் பாயிண்டு இருந்தால் அதை பதியவும், வீணே ஒப்பாரி வைப்பது சரியல்ல.

    இன்னொரு விடயம், தாமதம் ஆனாலும் சொல்கிறேன், சோதியில் கலப்பது ஒளியுடல் ஆவது என்று சொல்கிறீரே சித்தர்கள் கூட யதார்த்த பிரபஞ்ச விதிகளை மீறி ஏதும் ஆகாது என்று உணர்ந்தவர்களே, அதனால் மாணிக்க வாசகர் கதை உண்மை என்றே இருந்தால் கூட அவர் குமார் கூறியது போர் வயதாகி இருமி தான் ‘சோதியில்’ கலந்திருப்பார். அப்படியே உங்களுக்கு சிலிர்ப்படையும் படி சோதியில் கலக்கும் காட்சி வேண்டுமென்றால், நாயன்மார் காலத்துக்கு போகவேண்டாம். போரை எதிர்த்து தமக்கு தாமே தீமூட்டி ஆடாமல் அசையாமல் கத்தாமல் கருகி போகும் புத்த பிட்சுகளின் கதைகளை தேடி பாருங்கள், ‘சோதி’ உணர்வு பொங்கி வழியும். அதுவே ‘சோதியில்’ கலப்பதற்கு பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்ட ஒரே வழி. அதை விட்டு சோதியில் கலக்கிறேன் பேர்வழி என்று சம்பந்தர் போயிருந்தால் விக்கிரகக்தில் முட்டி மூஞ்சியில் தக்காளி சட்னி தான் வழிந்திருக்கும்.

    விவாதத்தை அவதானித்து வருகிறேன், குமார் தொடரட்டும், ஆழ்வார் நாயன்மார் புத்தகங்களில் நிறைய படித்திருக்கிறார்.

  83. கோபமா ? கோபம் கொண்டு விவாத மேடையை விட்டு விலகிச்சென்ற ரெபெக்கா அவர்களை பார்பனர்கள் சார்பில் தக்க ஆதாரங்களுடன் மீண்டும் வந்து விவாதிக்க அழைக்கின்றேன். விவாதத்தில் பாதியில் செல்வது தோல்வியை ஏற்பதாகும் என்பதால்…. நண்பர் கார்த்திகேயன் சொல்வது போன்று பார்பனர் பாதுகாப்பு (அ)சிங்கமாக, பார்பனர்களின் சூத்திர அடிமை பொண்ணாக மீண்டும் வினவுக்கு வந்து பார்பனர்கள் சார்பில் ஹிந்துதுவா கால்நக்கியாக இவரை விவாதிக்க அழைக்கின்றேன்.

  84. என்ன மாணவரே குமார், நீங்க தமிழில் டாகடரேட் பட்டத்துக்கு வைணவர்களை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளிரா? உங்க கருத்துக்கு தேவையான ஆதாரங்களை அருமையாக அம்சமாக எடுத்து வைகின்றிர்கள். நீங்கள் சுட்டிகாட்டிய இணைய தொடர்பில் இருந்து அரிசமய தீபம் நூலை எடுத்து படித்தேன்.அவ்வளவு பெரிய நூலை தேடியெடுத்து அதில் இருந்து ஒரே நாளில் உங்களுக்கு தேவையான ஆதரங்களை எடுத்து கொடுத்தது மிகவும் அறிவுகூர்மையான ,ஆக்கமான செயல். இது வரையில் மூன்று ஆழ்வார்களின் நூற்களில் இருந்து ஆதாரங்களை உங்களின் ஆணித்தரமான ஒரே கருத்துக்கு எடுத்து கொடுத்து இருக்கிங்க. எதிர் தரப்பு வாழக்கரிஞர் மவுனம் சாதிக்கின்றார் என்றால் அவரிடம் உங்களை ஆதாரத்தை மறுக்க அல்லது அவர்ஆ தரப்பில் புதிய ஆதாரத்தை கொடுக்க அவருக்கு வழி இல்லை என்று தான் பொருளாகிறது.

    இந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வரும் எனில் வள்ளளார்-யாழ்ப்பாணநாவலர் (கடலூர் கோர்ட்டு) வழக்கு போல வரும் என்றால் வள்ளலார் போன்று நீங்க தான் வெல்லுவிங்க.

    நீங்க வைத்த மெட்டிரியல் எவிடன்ஸ் (material evidence) உங்க கருத்தை (தொழிலாளர்கள் திருமங்கை என்ற குற்றம் சுமத்தப்ட்டவரால் தான் கொல்லபட்டனர் என்ற நிகழ்வு) நிருபிக்க போதும் போதும் என்ற அளவுக்கு இருக்கு.

    அது சரி சிதம்பரம் நடராஜர் கோவில் தீச்சதர்களது அல்ல மக்களுக்கானது என்று நிருபிக்க ஏதேனும் வரலாற்று ஆதரங்களை எடுத்து கொடுங்க. சைவத்துக்கு உள்ளே புகுந்து ஆதாரங்களுடன் வெளியே வாங்க மாணவரேகுமார்.

    ////இந்த நூல் தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY யில் காணகிடைகிறது. தேவைபடுவோர் இதனை தன் கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.////

  85. பெரியார் மீதான உங்களின் காழ்புணர்சியை எல்லாம் தமிழ் மொழி மீது காட்டாதீங்க ரெபெக்கா மேரி. ஆழ்வார்கள்-வைணவர்கள் மீதான ஆய்வுகளில் ஈடுபட்ட தமிழறிஞர்கள் ம.பெ. சீனிவாசன் மற்றும் புலவர் கோவிந்தராசர் போன்றவர்கள் எல்லாம் சடகோபரின் அரிசமய தீபம் என்ற இந்நூலை தான் ஆய்வுக்கான அடிப்படை ஆவணமாக பயன்டுத்திஇருக்காங்க. இந்த நூலை போன்ற ஆழ்வார்களின் வரலாற்றை முழுமையாக கூறும் தெளிவான நூலை நான் கண்டதில்லை. இந்த நூலின் விவரங்களையும் இடைசொருகல் என்று சொல்லுவீர்கள் என்றால் ஆழ்வார்களை பற்றியறிய வேறு எந்த விரிவான நூலை நாம் தமிழில் தேடமுடியும்? ஆறாயிரப்படி குருபரம்பரை ,மூவாயிரம்படி குருபரம்பரை போன்ற நூற்களிலும் அதே விவரங்கள் மணிபிரவாக மொழிநடையில் தொழிலாளர்கள் திருமங்கையனால் கொலை செய்யபட்ட விவரங்கள் இருக்கே. பெரியாரும் சரி குமாரும் சரி இந்த கொலையுண்ட விவரங்களை மிக துல்லியமாக தான் நிருபித்து இருக்காங்க.

  86. ரெபெக்கா மேரி, உங்க எசமான் ஆர் எஸ் எஸ் ஆட்களின் ஆண்டாள் ஆய்வு மற்றும் விசாரணையின் அருகதைய /நேர்மைய பார்கலாமா?

    இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
    சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.

    ”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.

    அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

    ”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

    ”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.

    அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

    ”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

    உடனே ஆண்டாளைத் தேவதாசி என்று சொல்வதற்கு முதன்மை ஆதாரம், Primary evidence ஏதும் இல்லை என்று நாராயணனே ஒப்புக்கொண்டுவிட்டது போல தந்தி டி.வி. பிரகடனம் செய்கிறது. நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்.

    இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
    சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.

    நன்றி வினவு.

  87. அரிச்சமய தீபம் என்கிற நூலினை அளித்தமைக்கு மிக்க நன்றி…

    எதிர்பார்த்ததை விடவே, இது வரை கொடுத்ததிலேயே மோசமான டுபாக்கூர் நூலாகவே இருக்கின்றது. உ.வே சா இதனை பதிப்பித்து விட்டாராம், அதனால் இந்த நூல் எந்த குற்றமும் இல்லாத அப்பழுக்கற்ற சொக்க தங்கமாம். உ.வே சா அச்சிட்டு வெளியிட்ட தொல்காப்பியம் நூலிலேயே ஏக பட்ட இடை செருகல் இருக்கும் பொழுது, கீழையூர் சடகோபதாசர் எழுதிய நூலினை பற்றி கூறவா வேண்டும். குருபரம்பரையில் இல்லாத செய்திகளை, வெறும் கற்பனையின் அடிப்படையிலேயே கட்டமைத்திருக்கிறார். பெரியாரிய அரைவேக்காடுகளுக்கே சவால் விடும் அளவிற்கு இருக்கின்றன இவரின் கற்பனைகள். அவற்றில் சிலவற்றை பார்போம்.

    ஆண்டாளின் வரலாற்றை கூறுமிடத்து, அரங்கநாதன் கோவிலுக்கு சென்று அவன் பாதங்களை வணங்கியதும் மறைந்தாள் என்று தான் அனைத்து நூல்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்படி நூலிலோ, அரங்கன் வந்து, மங்கள நாண்(தாலி) அணிவித்து, கோதையின் கரம் பற்றி அக்கினியை வளம் வந்தார்கள் என்று வாய் கூசாமல் கற்பனை கதை அளந்திருக்கிறார், இப்படி ஒரு கதை எந்த குருபரம்பரையில் கூறப் படாத ஒன்று.

    அதுமட்டுமல்ல, இது வரலாற்றிற்க்கே முரணான ஒன்று, ஆண்டாளின் காலம் கி.பி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு அந்த காலகட்டத்தில் திருமணத்தில்தாலி அணியும் வழக்கமே கிடையாது. அதிலும் குறிப்பாக வைதீக திருமணத்தில் தாலி என்னும் சடங்கு இல்லவே இல்லை. இதனை ராசமாணிக்கனார் போன்ற எவ்வளவோ ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள். ஆண்டாளும் தன்னுடைய பாடலில் அரங்கன் தனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக எங்குமே பதிவு செய்யவில்லை. நிலை இப்படி இருக்க, எதனை வைத்து இந்த நூலின் ஆசிரியர் இப்படி ஒரு பொய் பாடல் புனைந்தார் என்று தெரியவில்லை, இந்த அழகில் இவர் இயற்றிய குப்பை நூலை திருமங்கையாரின் வரலாற்றுக்கு ஆதாரமாக கொள்ள வேண்டுமாம்.

    திருமங்கையாரின் விடயத்திற்கு வருவோம்,, அதிலாவது உருப்படியாக ஏதாவது இருக்கிறதா என பார்த்தால், அதிலும் வெறும் கற்பனை குதிரைகள் தான் பறக்கின்றன. புத்தர் சிலையை அபகரிக்க, அதன் நுட்பங்களை தெரிந்து கொள்ள, அதனை வடிவமைத்த சிற்பி ஒரு தீவில் இருப்பதாகவும், அந்த தீவிற்கு சென்று அதன் ரகசியத்தை அறிந்து வர புறப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். அது எந்த தீவு என்று பார்த்தால், பெரிய ஆச்சர்யம், அந்த தீவின் பெயர் சீனவாம். சீன ஒரு மிக பெரிய நாடு என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம், எந்த மொழி இலக்கியத்திலும் அதனை ஒரு தீவு என்று யாரும் குறிப்பிட்டதில்லை. ஆனால், சீனாவை ஒரு தீவு என்று கூறிய ஒரே மேதாவி இந்த பார்பனராகத் தான் இருக்க முடியும். இதற்க்கு தினதந்தியில் வரும் கன்னி தீவு என்று கூறி இருந்தாலும் போய் தொலைகிறது என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம் .

    இப்படி கதைக்கு கதை கற்பனை காமெடிகளை அள்ளி விட்டிருக்கும். இந்த குப்பை, முற்போக்கு என்று கூறிக் கொள்ளும் முட்டாள்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம், உண்மையான வரலாறாக தெரியலாம், அனைவருமே அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இவர்களின் கையாலாதனைத்தை தான் காட்டுகிறது. அதிலும், பவுத்தர்கள் புத்தர் சிலையை கேட்டு மன்னனிடம் முறையிட, அவர்களுக்கு அருள் கொண்டு தீர்ப்பினை கூறாதே, என்னோடு வாதம் புரிந்து என்னை வென்று விட்டு பிறகு சிலையை வாங்கி கொள்ளட்டும் என்று ஆழ்வார் கூறினாராம், அதனை மன்னனும் ஏற்றுக் கொண்டானாம். இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது எல்லாம் பக்கா இடை செருகல் தான், என்பது குழந்தைக்கும் புரியும். இதற்கெல்லாம் எந்த குருபரம்பரை ஆதாரமும் கிடையாது.

    இந்த நூலில், இவர் கற்பனைக்காக விரித்திருக்கும் சரக்குகளுக்கு எவ்வித முகாந்தாரமுமில்லை, யாருடைய குரு பரம்பரை நூலினை, அடியொற்றி இதனை சடகோபர் உருவாக்கினார் என்று எங்குமே கூறப்படவில்லை. உ.வே.சாவும் குறிப்பிடவில்லை.உ.வே சா பதிப்பாளர் தானே தவிர, அவர் பதிப்பிக்கும் நூலில் வரும் செய்திகளுக்கெல்லாம் அவர் பொறுப்பாளி ஆகமாட்டார். மொத்தத்தில், அறிவு விளக்கமற்ற ஒரு பார்ப்பானின் பாடல் தொகுப்பு உளறல்களை வைத்துக் கொண்டு ஊளை சத்தம் விடுவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.

    ஆழ்வார், தொழிலாளிகளை ஆற்றில் தள்ளி கொன்றார் என்பது இடைச்செருகல் என்பதால் தான், 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த வடிவழகிய நம்பி தாசர், தன்னுடைய நூலான ஆழ்வார்கள் வைபவத்தில் இதனை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடவில்லை. ஆனால், 18 ஆம் நூற்றாண்டை சார்ந்த கீழையூர் சடகோப தாசரின் நூலில் இது இடம் பிடித்திருக்கிறது. இதற்க்கு காரணம் இடையில் ஏற்பட்ட குழப்பங்கள்(இடை செருகல்) தான். ஆகவே, திருமங்கையார் யாரையும் கொலை செய்யவில்லை. விரைவில் இது வினவில் வரவிருக்கும் கட்டுரை மூலமாகவே வெளிவரும்.

    அப்புறம், சகிக்கமுடியாத ஒன்று என்னவென்றால், பிட்டுக்கு மண் சுமந்த கதையை மாற்றிக் கூறியது. சிவனின் முதுகில் பிரம்பால் அடித்தது கிழவி அல்ல, அடித்தவர் பாண்டிய மன்னன். இந்த எளிய புராணம் கூட தெரியாத ஒரு பெரியாரிய அரைவேக்காடு தான் திருமங்கையாரை பற்றி ஆதாரம் அடுக்குகிறாராம். நியாயமாக இவரின் பதிவுகளுக்கு பதில் கூறுவதே அசிங்கம்,, என்ன செய்வது யாருக்காக இல்லை என்றாலும் வினவில் வரும் வாசகர்களுக்காக நான் சில உண்மைகளை கூறியே ஆக வேண்டும்..

    அடுத்த முறை, வேறொரூ பழைய பார்ப்பன குப்பையை கொண்டு வரவும். அதையாவது ஒழுங்காக ஆய்விற்கு உட்படுத்தி பிறகு அளிக்கவும். அதன் யோக்கியதை என்னவென்று பார்த்து, அடுத்த கட்ட விவாதத்தை கொண்டு செல்வோம்.

  88. புராண குப்பைகளை முழுதும் அறிந்த அருவருப்பு ரெபெக்கா மேரி அவர்கள் பார்பன இந்துத்துவா இணையதளமான தமிழ்ஹிந்துவில் கதறி அழுது ஆண்டாள் சார்ந்த தரவுகளை அளிக்கவும் அல்லது இந்துத்துவா பார்பன வெறியர்களை விவாதத்தில் பங்கு பெற்று உதவி செய்ய அழைத்த கணகிடைகாதா காட்சி இதோ….. வெக்கமாக இல்லையா மேரி… தமிழ் ஆண்டாளை காப்பாத்த பார்பன்ர்களிடம் மண்டியிட்ட உங்க செய்கை வெக்கமாக இல்லையா மேரி! இதற்கு பெயர் தான் உங்களை போன்ற போலி தமிழன உணர்வாளர்கள் (மா மபொசி மற்றும் சீமான் வைகையராகள் ) பார்பனியத்தை கால் நக்கும் செயல் என்பதா?

    http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

    Rebecca Mary on February 14, 2018 at 7:12 pm
    வினவு தளத்தில், அதன் வக்கிரம் பிடித்த பதிவர்களுடனும் தமிழர்களின் தாயான கோதை நாச்சியாருக்காக மிகவும் போராடி கொண்டிருக்கிறேன், முடிந்தால் எனக்கு அங்கு வந்து விவாதத்தில் பங்கு பெற்று உதவி செய்யயும், அல்லது ஆண்டாள் சார்ந்த தரவுகளை எமக்கு அளிக்கவும்.. மறுமொழியினை மட்டுறுத்தாமல் வெளியிடவும்.
    விவாத களம்:- https://www.vinavu.com/2018/02/04/soda-bottle-jeeyar-teaser/#comments

    //பிட்டுக்கு மண் ………ளை கூறியே ஆக வேண்டும்..//

    பார்பன குப்பைகளை தான் பெரியார் தன் எழுத்துகள் ஊடாகவும், பேச்சுகள் ஊடாகவும் அம்பலப்டுத்திகிட்டு இருந்தார். அதனை இப்ப நாங்கள் தொடரும் போது உங்களுக்கு எங்கே குத்துது குடையுது.? பார்பனர்கள் வந்து பதில் அளிக்க துப்பு இல்லாத நிலையில் ஏன் பார்பன அடிமை ரெபெக்கா மேரி வந்து இங்கே சதிராட்டம் ஆடனும்? பார்பனர்க்ளிடம் ,ஹிந்த்த்துவா வெறியர்களிடம் அதாங்க தமிழ்ஹிந்து இணைய தளத்திடம் மண்டியிடும் உங்க செயலுக்கு உங்களுக்கு அருவருப்பு ரெபெக்கா மேரி என்று தான் பெயர் அழைக்கணும்…

    //அடுத்த முறை, வேறொரூ பழைய பார்ப்பன குப்பையை கொண்டு வரவும்.//

  89. அது என்ன செலக்டிவாக பகுத்தறிவை பயன்ப்டுதுகிண்றீகள்? இந்த நூலுக்கு மட்டும் (அரிச்சமய தீபம்) என்ற இந்த நூலுக்கு மட்டும் உங்க அறிவுக்கண்ணை திறந்து சிந்திகிண்றீகள்! இந்தநூல் டுபாக்கூர் என்றால் மீதம் உள்ள ஆழ்வார்களை பற்றிய மற்ற நூற்களும் டுபாக்கூர்கள் தானே ரெபெக்கா? அவைகள் மட்டுமா ஹிந்து புராண மயிர் மட்டைகள், அனைத்துமே குப்பைகள் தானே ரெபெக்கா? எல்லாவற்றிலும் அறிவுக்கு பொருந்தாத செய்திகள் வரலாறு என்ற பெயரில் குப்பைகளாக இருக்கேரெபெக்கா? அவற்றுக்கு எல்லாம் உங்க அறிவு கேள்வி எழுப்பாதா? ஏன் உங்களுக்கு இந்த நூல் விசயத்தில் மட்டும் செலக்டிவ் அம்னிசியா?

    ஆனால் பாருங்க பெரியார் எல்லா புராண குப்பைகளையும் அம்பலப்டுதினார். அப்ப்படி அம்பல படுத்தும் ஒரு தருணத்தில் தான் பெரியார் அவர்கள் இந்த பார்பனர்கள் தங்கள் ஆழ்வார்களை பற்றி கஞ்சா போதையில் எழுதிய அறிவுக்கு பொருந்தாத தற்பெருமை செய்திகளையும் சுட்டிக்காட்டி நாரடித்துகொண்டு இருந்தார்.

    அறிவுக்கு பொருந்தாத புராண இதிகாச வைணவ குப்பைகளுக்கு ஆதரவா பேசுவதனை விட்டுவிட்டு வேற வேலைய பாருங்க ரெபெக்கா? அதுவென்ன தமிழ் உணர்வுடன் இருப்பதாக செல்ல்லிகிட்டு பார்பன குப்பைகள் மீது பாலம் கட்டிகிட்டு இருக்கீங்க!

    //எதிர்பார்த்ததை விடவே, இது வரை கொடுத்ததிலேயே மோசமான டுபாக்கூர் நூலாகவே இருக்கின்றது. //

  90. இந்த நூலையும் இதில் உள்ள செய்திகளையும் புராண குப்பைகள் என்று ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி ரெபெக்கா! இதனை தானே புத்தனில் இருந்து பெரியார் வரைக்கும் தன் வாழ்நாளில் மக்களிடம் சொல்லி அம்பல படுத்திகிட்டு இருந்தாங்க…உங்க பகுத்தறிவு சிந்தனை இந்த நூலுடன் நிற்காமல் மற்ற வைணவ, ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் பற்றிய புராண குப்பைகளை தன்னகத்தே கொண்டு உள்ள நூற்கள் மீதும் பாயுமா? இல்ல மீண்டும் புராண குப்பைகளிலேயே ம்ண்டியிடுவீர்க்ளா ?

    தாலி விசயத்தில் தமிழ் உணர்வாளராக நீங்க மதிக்கும் மாபோசி அவர்கள் வேறு மாதிரியா கூறுகின்றாரே ரெபெக்கா? சிலப்திகாரகாலத்தில் தாலி இருத்து என்று கூறுகின்றாரே! அப்ப சிலபத்திகாரம் என்ன பத்தாம் நூற்றாண்டு நூலா? தேவைக்கு ஏற்ப தரவுகளை மாற்றி மாற்றி பேசகூடாது ரெபெக்கா? நேத்து வரைக்கும் மாபோசியை தூக்கி பிடித்த உங்க சிந்தனை ஏன் இன்றைக்கு அவரை கீழே இறக்கி வைத்து விட்டு தாலி விசயத்துக்கு அது பிற்காலத்தில் தான் வந்தது என்று வினவு ஆதாரமாக கூறிய ராசமாணிக்கனார் அவர்களின் செய்தி மீது பாசம் கொள்கின்றது? நாக்குக்கு நரம்பு இல்லை என்பது இதுதானா?

    பரவாயில்லையே தமிழ் தேசிய போலிகள் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட தொடங்கிடிங்க போல… கலக்குங்க…

    //ஆண்டாளின் வரலாற்றை கூறுமிடத்து, அரங்கநாதன் கோவிலுக்கு சென்று அவன் பாதங்களை வணங்கியதும் மறைந்தாள் என்று தான் அனைத்து நூல்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்படி நூலிலோ, அரங்கன் வந்து, மங்கள நாண்(தாலி) அணிவித்து, கோதையின் கரம் பற்றி அக்கினியை வளம் வந்தார்கள் என்று வாய் கூசாமல் கற்பனை கதை அளந்திருக்கிறார், இப்படி ஒரு கதை எந்த குருபரம்பரையில் கூறப் படாத ஒன்று.

    அதுமட்டுமல்ல, இது வரலாற்றிற்க்கே முரணான ஒன்று, ஆண்டாளின் காலம் கி.பி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு அந்த காலகட்டத்தில் திருமணத்தில்தாலி அணியும் வழக்கமே கிடையாது. அதிலும் குறிப்பாக வைதீக திருமணத்தில் தாலி என்னும் சடங்கு இல்லவே இல்லை. இதனை ராசமாணிக்கனார் போன்ற எவ்வளவோ ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள். ஆண்டாளும் தன்னுடைய பாடலில் அரங்கன் தனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக எங்குமே பதிவு செய்யவில்லை. நிலை இப்படி இருக்க, எதனை வைத்து இந்த நூலின் ஆசிரியர் இப்படி ஒரு பொய் பாடல் புனைந்தார் என்று தெரியவில்லை, இந்த அழகில் இவர் இயற்றிய குப்பை நூலை திருமங்கையாரின் வரலாற்றுக்கு ஆதாரமாக கொள்ள வேண்டுமாம். //

  91. ஹ ஹா…ஹ…வென்றார் மேரி…! விவாதத்தில் வென்றார் மேரி! சீனா தீவு அல்ல…, என்ற விசயத்தை அறிவியல் இலக்கியம் , புவியியல் , வரலாறு மூலமாக ஆதாரபூர்வமாக் நிருபித்த ரெபெக்காவுக்கு என் வாழ்த்துகள்… நான் வாதத்தில் பகுதி அளவுக்கு தோற்றேன்…ஏற்கின்றேன்!! ஏற்கின்றேன்…ஏற்கின்றேன்.

    அதே அறிவியல் புவியியல், வரலாற்று சமுக அறிவுடன் சிந்தித்து ஆண்டாள் எப்ப்படி மறைந்தார் மற்றவர்கள் எப்படி சோதியில் கலந்தார்கள் என்று, என்றும் பகுத்து அறிந்து அறிவுடன் , அறிவு பூர்வமாக சொன்னால் …..சொன்னால் நான் விவாதத்தில் தோற்றதனை முழுமையாக ஏற்கின்றேன்.. ஹ ஹா…

    ரெபெக்காவின் அறிவு ,சிந்தனை ஒருதலை பச்சமானதாக (இந்துத்துவாவுக்கு சார்பாக )இருப்பது தான் கயமையானது, இன தனமானது, சமுகத்துக்கு ஆபத்தானது என்ற விசயத்தை சகோ ரெபெக்காவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேனன்.

    //திருமங்கையாரின் விடயத்திற்கு வருவோம்,, அதிலாவது உருப்படியாக ஏதாவது இருக்கிறதா என பார்த்தால், அதிலும் வெறும் கற்பனை குதிரைகள் தான் பறக்கின்றன. புத்தர் சிலையை அபகரிக்க, அதன் நுட்பங்களை தெரிந்து கொள்ள, அதனை வடிவமைத்த சிற்பி ஒரு தீவில் இருப்பதாகவும், அந்த தீவிற்கு சென்று அதன் ரகசியத்தை அறிந்து வர புறப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். அது எந்த தீவு என்று பார்த்தால், பெரிய ஆச்சர்யம், அந்த தீவின் பெயர் சீனவாம். சீன ஒரு மிக பெரிய நாடு என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம், எந்த மொழி இலக்கியத்திலும் அதனை ஒரு தீவு என்று யாரும் குறிப்பிட்டதில்லை. ஆனால், சீனாவை ஒரு தீவு என்று கூறிய ஒரே மேதாவி இந்த பார்பனராகத் தான் இருக்க முடியும். இதற்க்கு தினதந்தியில் வரும் கன்னி தீவு என்று கூறி இருந்தாலும் போய் தொலைகிறது என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம் . //

  92. இதத்தான் எதிர்பார்த்தேன்ரெபெக்கா…. !புராண குப்பைகளை எல்லாம், வரலாறாக ஏற்று அதனை உயர்வாக கருத்தும் ,வைணவ குப்பைகளை எல்லாம் மதித்து அதனை உயர்வாக ஏற்கும் , ஆண்டாள் மறைந்தாள் என்பதனை அப்படியே அறிவை கழற்றி வைத்து ஏற்கும் , சைவ பெரியோர் எல்லாம் ஜோதியில் கலந்தார்கள் என்று முழுமையாக நம்பும் வினவில் என்னுடம் விவாதிக்கும் என் தங்கை மேரி அவர்களுக்கும் இதனை சொல்ல்லிடுங்க ரெபெக்கா.. அந்த முட்டாளுக்கு நான் எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேன் என்கின்றது. நீங்களாவது வந்து இந்த விவாதத்தை முறை படுத்துங்க ரெபெக்கா…

    என்னது ரெபெக்கா மற்றும் மேரி நீங்க ரெண்டு பேருமே ஒரே ஆளா? தலையே சுத்திடிச்சி எனக்கு…!!@@#%%^&&******((())__

    //இப்படி கதைக்கு கதை கற்பனை காமெடிகளை அள்ளி விட்டிருக்கும். இந்த குப்பை, முற்போக்கு என்று கூறிக் கொள்ளும் முட்டாள்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம், உண்மையான வரலாறாக தெரியலாம், அனைவருமே அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இவர்களின் கையாலாதனைத்தை தான் காட்டுகிறது. அதிலும், பவுத்தர்கள் புத்தர் சிலையை கேட்டு மன்னனிடம் முறையிட, அவர்களுக்கு அருள் கொண்டு தீர்ப்பினை கூறாதே, என்னோடு வாதம் புரிந்து என்னை வென்று விட்டு பிறகு சிலையை வாங்கி கொள்ளட்டும் என்று ஆழ்வார் கூறினாராம், அதனை மன்னனும் ஏற்றுக் கொண்டானாம். இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது எல்லாம் பக்கா இடை செருகல் தான், என்பது குழந்தைக்கும் புரியும். இதற்கெல்லாம் எந்த குருபரம்பரை ஆதாரமும் கிடையாது. //

  93. இவ்வளவு நேரம் அறிவா பேசிட்டு மீண்டும் வேதாளம் மரத்தில் எரினால் எந்த விக்ரமாதித்தன் தான் பொறுமையா இருப்பான் சொல்லுங்க ரெபெக்கா… புராணமே குப்ப… அதில் நாம் பயன்படுத்தும் நக்கல் நையண்டிகளில் கூடவே மாற்றம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன செல்லுங்க… அப்புறம் ஒரு விசயம்.,… சீனா நாடு தான் அஅது தீவு அல்ல என்று உங்க அறிவுக்கண்களால் கண்டு பிடித்த நீங்க தான் இப்ப சிவன் எதுக்கு வந்தார், எப்ப வந்தார், ராசா எதுக்கு அடிச்சான், கெழவி எதுக்கு சிவனுக்கு வேலை கொடுத்தார்கள் என்று அறிவு பூர்வமாக விளக்கனும் ! சீனா தீவு இல்ல என்று பகுத்து அறிய பயன்பட்ட உங்க அறிவு சிவன் விசயத்தில் பயன்படுத்தா இல்ல சொல்லாம கொள்ளாமல் ஓடி போயிடுத்தா என்று வினவில் நாங்களும் பார்க்க தானே போறோம்… உலக மகா முட்டாள் ரெபெக்கா!

    //அப்புறம், சகிக்கமுடியாத ஒன்று என்னவென்றால், பிட்டுக்கு மண் சுமந்த கதையை மாற்றிக் கூறியது. சிவனின் முதுகில் பிரம்பால் அடித்தது கிழவி அல்ல, அடித்தவர் பாண்டிய மன்னன். இந்த எளிய புராணம் கூட தெரியாத ஒரு பெரியாரிய அரைவேக்காடு தான் திருமங்கையாரை பற்றி ஆதாரம் அடுக்குகிறாராம். நியாயமாக இவரின் பதிவுகளுக்கு பதில் கூறுவதே அசிங்கம்,, என்ன செய்வது யாருக்காக இல்லை என்றாலும் வினவில் வரும் வாசகர்களுக்காக நான் சில உண்மைகளை கூறியே ஆக வேண்டும்..//

  94. மேரி ,உங்க வாதத்திறமையை கண்டு ஒரு நிமிடம் பிரமித்துப்போய்விட்டேன். பின்பு சுதாகரித்துக்கொண்டு யோசிக்கும் போது தான் நீங்க உங்க அறிவை ,புத்திசாலிதனத்தை உங்களின் கருத்துகளுக்கு எதிராகவே பயன்படுத்துகின்றிர்கள் என்று உணரமுடிந்தது. அரிச்சமய தீபம் என்கிற நூலில் உள்ள அறிவுக்கு புறம்பான விசயங்களை உங்களால் பட்டியலிடமுடியும் என்றால் அதே போன்று தானே அனைத்து சமய நூற்களும் வரலாறு என்ற பெயரில் அறிவுக்கு ஏற்பற்ற செய்திகளை சொல்லிகொண்டு உள்ளது. ஏசு நாதர் கல்லறையில் இருந்து வந்த செய்தி, நீங்கள் குறிபிடும் மத பெரியோர்கள் மாணிக்கவாசகர், திருநாவுகரர் போன்றோர் சோதியில் சேர்த்த செய்தி , ஆனாடால் பெருமாளுடன் கலந்து மறைந்த செய்தியனைத்துமே அறிவுக்கு புறம்பானது தானே? சின்னாவும் அதனை தன் பின்னுட்டத்தில் கேள்வியாக எழுப்புகின்றாரே!

    “சோதியில் கலப்பது ஒளியுடல் ஆவது என்று சொல்கிறீரே சித்தர்கள் கூட யதார்த்த பிரபஞ்ச விதிகளை மீறி ஏதும் ஆகாது என்று உணர்ந்தவர்களே, அதனால் மாணிக்க வாசகர் கதை உண்மை என்றே இருந்தால் கூட அவர் குமார் கூறியது போர் வயதாகி இருமி தான் ‘சோதியில்’ கலந்திருப்பார். அப்படியே உங்களுக்கு சிலிர்ப்படையும் படி சோதியில் கலக்கும் காட்சி வேண்டுமென்றால், நாயன்மார் காலத்துக்கு போகவேண்டாம். போரை எதிர்த்து தமக்கு தாமே தீமூட்டி ஆடாமல் அசையாமல் கத்தாமல் கருகி போகும் புத்த பிட்சுகளின் கதைகளை தேடி பாருங்கள், ‘சோதி’ உணர்வு பொங்கி வழியும். அதுவே ‘சோதியில்’ கலப்பதற்கு பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்ட ஒரே வழி. அதை விட்டு சோதியில் கலக்கிறேன் பேர்வழி என்று சம்பந்தர் போயிருந்தால் விக்கிரகக்தில் முட்டி மூஞ்சியில் தக்காளி சட்னி தான் வழிந்திருக்கும்.”

    -சின்னா

    இங்கே மேற்கோளில்சி உள்ள சின்னாவின் கேள்விகளுக்கு பதில் இல்லையே உங்களிடம் இருந்து. ஆனால் சின்னா எழுப்பும் வாதத்தை உங்களின் வாதமாக ஏற்றுகொண்டு மீண்டும் அதே வாதத்தை வினவில் நீங்கள் கூறுவது நகைப்புக்கு உரியது மட்டும் அல்ல அறிவற்ற செயலும் கூட தானே!

    உண்மை அப்படி இருக்கு இந்த நூலில் மட்டுமே சடகோபநாசர், கீழையூர் அவர்கள் அறிவுக்கு புறம்பாக பேசுகின்றார் ஆனால் மற்ற வைணவ நூற்கள் எல்லாம் ஆதாரபூர்வமானவை என்று சொல்ல எப்படி உங்களுக்கு முடிகின்றது. இந்து மதம் என்று அல்ல, எந்த மதத்து நூற்களும் அறிவுக்கு எதிரானவையே என்பதனை உணர பைபிளின் முதல் ஐந்து பக்கங்களை படித்து சிறிது சிந்தித்தாலே போதுமானது.

    அந்த நூலில் உள்ள இடமான சீனா தீவல்ல அது நாடு என்று அறிவாக பேசும் உங்க மூளை , சோதி, ஆண்டாள் அப்படியே பெருமாளுடன் சேர்த்து மறைந்தார் என்ற செய்திகளை மட்டும் ஏன் அப்படியே ஏற்றுகொள்கின்றது. இப்படி சமய சார்புடன் பேசுபவர் ஏன் சீனா ஆய்வில் ஈடுபடவேண்டும்? நீங்கள் நம்பும் சோதியில் கலந்தார் ,பெருமாளுடன் மறைந்தார் போன்ற அறிவற்ற விசயங்களை போன்று தானே சடகோபரும் பலவேறு விசயங்களை ஆண்டாளுக்கு
    தாலி கட்டப்ட்ட விசயங்களை அவர் உண்மை என்று நம்பி எழுதியுள்ளார்.

    மேரி மற்றும்உ சடகோபர் ஆகிய இருவர் நம்பிக்கைகளும் சரியா அல்லது உங்கள் இருவர் நம்பிக்கைகளும் முட்டாள்தனமானவைகளா? விளக்கம்முடியுமா மேரி ?

  95. //மேரி மற்றும்உ சடகோபர் ஆகிய இருவர் நம்பிக்கைகளும் சரியா அல்லது உங்கள் இருவர் நம்பிக்கைகளும் முட்டாள்தனமானவைகளா? விளக்கம்முடியுமா மேரி ?//

    அவர் இதுவரை எதை விளக்கியுள்ளார்? ‘விலக்க’ வேண்டுமானால் செய்வார்!

    மேரியின் வாதங்களைப் பார்க்கும்போது திமிர் பிடித்த நிர்மலா சீதாராமன் முகம்தான் நிழலாடுகிறது !

  96. மீண்டும் பெரியாரிய கோட்டிகள் உளர ஆரமித்து விட்டார்கள். கீழையூர் சடகோப தாசர் பொய்யாக புனைந்து இருக்கும், குரு பரம்பரையில் இல்லாத ஒன்றை கூறுவதை மட்டுமே தான் நான் எடுத்து பேசி கொண்டிருக்கின்றேனே தவிர, அந்த நூலில் உள்ள இடை செருகல்களை மட்டும் தான் நான் அம்பல படுத்தி கொண்டிருந்தேன் தவிர, மற்றபடி புராணங்கள் அனைத்தும் குப்பை என்றெல்லாம் நான் எங்கும் பேசவில்லையே. இடை செருகல்களை பற்றி பேசுவது என்பது வேறு.. மொத்தமாக ஒரு விடயத்தையே பொய் என்று நிராகரிப்பது வேறு. இது கூட தெரியாத முட்டாளாக நீங்கள் இருந்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. திருமங்கை ஆழ்வாரை பற்றி இவ்வளவு ஆதாரங்களை அடுக்க தெரிந்த இவர்களுக்கு, ஆண்டாளை பற்றி ஒரு வரி கூட ஆதாரத்தை அளிக்க முடியவில்லை, அனுமானங்களை தவிர.

    //இந்த நூலையும் இதில் உள்ள செய்திகளையும் புராண குப்பைகள் என்று ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி ரெபெக்கா! இதனை தானே புத்தனில் இருந்து பெரியார் வரைக்கும் தன் வாழ்நாளில் மக்களிடம் சொல்லி அம்பல படுத்திகிட்டு இருந்தாங்க…உங்க பகுத்தறிவு சிந்தனை இந்த நூலுடன் நிற்காமல் மற்ற வைணவ, ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் பற்றிய புராண குப்பைகளை தன்னகத்தே கொண்டு உள்ள நூற்கள் மீதும் பாயுமா? இல்ல மீண்டும் புராண குப்பைகளிலேயே ம்ண்டியிடுவீர்க்ளா ?//

    நான் குப்பை நூல் என்று கூறியது, அரிச்சமய தீபத்தை மட்டுமே தானே தவிர, மற்றபடி குருபரம்பரை மொத்தத்தையும் அல்ல. ஆனாலும், குப்பை என்று நான் கூறியதை ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி. எனக்கு அது போதும். எது குப்பை, எது கோபுரம் என்பதை இனி நடுநிலையாளர்கள் வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். நியாயமாக நான் இந்த நூலினை தாக்கி பேசியதற்கு பார்ப்பனர்கள் தான் கோப படவேண்டும், உங்களுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது என்பது தான் புரியவில்லை.

    //தாலி விசயத்தில் தமிழ் உணர்வாளராக நீங்க மதிக்கும் மாபோசி அவர்கள் வேறு மாதிரியா கூறுகின்றாரே ரெபெக்கா? //

    அது அவருடைய கருத்து, ம.பொ.சி தமிழ் உணர்வாளர் என்பதற்க்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை ஒன்றும் எனக்கில்லையே. ஈ.வே.ராவை ஏற்றுக் கொள்பவர்கள், பெரியார் என்றால், அவர் கூறும் அனைத்தும் வேத வாக்குதான் என்று ஏற்றுக் கொண்டு அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழும் அற்ப பிறவிகள் போன்று என்னை நினைத்தால், அதற்கு நான் பொறுப்பில்லையே. ம.பொ.சி தமிழ் உணர்வாளர் தான், ஆனால் தமிழ் தேசியவாதி கிடையாது. அவர் கறாரான இந்திய தேசியவாதி. இந்தியா என்கிற அமைப்பை என்றுமே அவர் விட்டு கொடுத்தது கிடையாது. அவர் ஏக இந்தியா என்று கூறியதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள முடியுமா. அவரை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்க்காக, அவரின் சங்கர மடத்தின் மீதான பாசத்தை எல்லாம் ஏற்க முடியுமா. பகுத்தறிவு என்கிற பெயரில், பெரியாரின் முட்டாள்தனமான தமிழ் எதிர்ப்பை, தமிழ் இலக்கிய எதிர்ப்பை அவர் அம்பல படுத்தினார். எனக்கு தேவையும் அதுதான்.

    நான் இங்கு அம்பல படுத்துவது திருமங்கையாரின் மீதான பார்ப்பனர்களின் சூழ்ச்சியான இடை செருகலைகளை மட்டும் தானே தவிர, மற்றபடி குரு பரம்பரையினர் கூறிய அனைத்தையும் கிடையாது. இந்த ஒரு சின்ன விஷயத்தை புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லை, இவர் பகுத்தறிவு என்று பேச வந்து விட்டார். இறைவனுடன் சோதியில் கலப்பது என்பதை பற்றி ஏற்கனவே நான் வள்ளலாருடைய நூலில் இருந்து விளக்கி விட்டேன். மீண்டும் மீண்டும் என்னால் கூறி கொண்டிருக்க முடியாது. ஏற்றுக் கொள்ளுங்கள் ஏற்காமல் போங்கள் அது உங்களின் இஷ்டம்.

    தமிழ் ஹிந்து தளத்தாரிடம் உதவி கேட்டதற்கு நான் ஏன் வெட்க படவேண்டும். நான் என்ன இந்து மதத்தில் பிறந்தவளா? நான் பிறந்ததில் இருந்து கிறித்துவ நெறி படி தான் வளர்ந்தேன். என்னுடைய முன்னோர்களின் வேர் இந்து மதத்தில் இருக்கலாம். ஆனால், எனக்கு இந்து மதத்தை பற்றி அவ்வளவாக அத்துப்பிடி கிடையாது. ஆக, எனக்கு சந்தேகம் உள்ள ஒன்றை அது சம்மந்த பட்டவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இணையம் என்பதே அதற்காக தான் இருக்கிறது. கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், வினவிடம் தான் நான் வரவேண்டும். அவர்கள் உதவி செய்தார்களோ இல்லையோ நீங்கள் எனக்கு இணையத்தில் இருந்து பல தரவுகளை அளித்து திருமங்கையார் எந்த தவறும் செய்யாதவர் என்பதை மெய்ப்பிக்க உதவி விட்டிர்கள். அப்படியே போய் அங்கே நான் செய்திருக்கும் மற்ற விவாதங்களை பார்க்கவும். அவர்களின் தமிழ் எதிர்ப்பையும், மணிப்பிரவாள நடையையும், சமக்ருத மொழி திணிப்பையும் எதிர்த்ததற்கு உங்களை போன்றே எனக்கு அங்கு நிறைய பட்டம் சூட்டி இருக்கிறார்கள் “திராவிட குளுவான்” “வாட்டிகன் கைக்கூலி” “பெரியாரின் கால் நக்கி” என்றெல்லாம் அங்கே எனக்கு பல பட்டங்கள் இருக்கின்றன. போய் பார்க்கவும். அவர்களும் உங்களை போன்றே முட்டாள்கள் தான். அங்கு கூட ஆண்டாளை தமிழர்களின் தாய் என்று தான் கூறி இருக்கிறேனே தவிர, இந்துக்களின் தாய் என்றோ அல்லது இந்துத்துவா கலாச்சாரம் என்றோ எங்குமே கூறவில்லை. எப்படி பார்த்தாலும் என் சொந்த பெயரில் தான் என் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன். நான் எங்கு போக வேண்டும், யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் முடிவு செய்ய கூடாது. எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது, உண்மையை அறியும் என் பயணத்தில் எங்கு வேண்டுமாயினும் நான் போய் தெரிந்த்து கொள்வேன். வெறுப்பு என்பதை மனத்தில் வைத்திருந்தால் இப்படி தான், எந்த ஆராய்ச்சியும், தேடலுமில்லாமல் பார்ப்பனீயம் என்று அனைத்திற்கும் முத்திரை குத்த தோன்றும். நான் அறிந்த வரையில், சிவனியமும், மாலியமும் தமிழரின் தொல் நெறிகள் தான்.

    சரி, இதற்க்கு நான் அசிங்க பட வேண்டும் என்றால், நீங்கள் இங்கே பல பெயர்களில் உலவி கொண்டு இருக்கிறீர்களே, இந்த அசிங்கத்தை எங்கு போய் சொல்ல, இந்த ஆண்டாள் விவாதத்திலேயே உங்கள் கருத்திற்கு வலு சேர்க்க, பலரும் உங்களின் கருத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் மருதன்கிழக்கு, ஸ்டேன்லிஆரோக்கியதாஸ் என்று இன்னும் பல பெயர்களில் வந்து கருத்து பதிந்து ஒரு கேவலமான மோசடி வேலைகளை கொண்டு இருக்கிறீர்களே இதை என்ன சொல்ல? இதெல்லாம் எங்களுக்கு தெரியாமல் ஒன்றுமில்லை, நான் கண்டுகொள்ளாமல் இருக்கிறேன் அவ்வளவே. நான் செய்தது வெட்கப்பட வேண்டிய செயல் என்றால். நீங்கள் செய்த இது போன்ற லுட்ச்சா தனமான வேலைகளுக்கு பெயர் என்னவாம்? சொல்ல போனால் உங்களிடம் பேசுவது வக்கிரம் பிடித்தவரிடம் பேசுவது போல் இல்லை. அதையும் தாண்டி ஒரு மன நோயாளியிடம் பேசுவதை போல் இருக்கிறது.

    ஆகவே, கருத்துக்கு பதில் கருத்தை வைக்கவும். தேவை இல்லாத பேச்சுக்கள் எல்லாம் வேண்டாம். வினவில் இன்னும் திருமங்கையார் தொடர்பான கட்டுரை இருக்கின்றது. ஆகவே, பொறுமையாக இருந்து உங்கள் கருத்துக்களை சேமித்து வைக்கவும், இன்னும் வினவில் விவாதிக்க நிறைய இருக்கிறது, ரொம்ப தேவை படும்.

    பிட்டு மண் சுமந்த கதையிலேயே, உங்களின் மேதா விலாசத்தை பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன். இதில் பெரியார் பகுத்தறிவு என்கிற பேத்தல்கள் வேறு. பேச்சை பாரு, போலி தமிழ் தேசியமாம். தமிழர்களின் தலையில் பெரியார் கட்டிவிட்ட, வரலாற்றில் இல்லாத திராவிட கோவணம் தான் தமிழ் தேசியம் என்றால், அப்படி ஒரு தமிழ் தேசியமே எனக்கு வேண்டாம். தமிழ் எதிர்ப்பு பார்ப்பனர்களை எப்படி முறியடிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

  97. எனது கேள்வி தெளிவாக தானே இருக்கு மேரி! நீங்க எதனை இடைசொருகல் என்று சொல்கின்றீர்களோ அவைகளை தான் பெரியார் புராண குப்பைகள் என்கின்றார். அதன் அடிபடையில் ஏகாதசி கும்பிடும் பார்பன பண்பாட்டையும் வெறுக்கின்றார். குருபரம்பரை நூற்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் அறிவுக்கு பொருத்தமானாவை என்றால் நீங்க ஒரு நல்ல மன நல மருத்துவரை கண்டிப்பாக சென்று காணவேண்டும். பெருமாளுடன் ஆண்டாள் சென்று மறைவது, பிற சைவ பெரிவவர்கள் எல்லாம் எப்படி ஜோதியில் சேர்த்தார்கள் என்ற விசயத்தில் உங்களால் ஏன் இன்னும் அறிவுபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியவில்லை? தயக்கம் ஏன் ? அரிச்சமய தீபம் என்ற நூலை பகுத்தாராய்ந்த உங்க மனம் மற்ற குருபரம்பரை விசயங்களில் எல்லாம் ஏன் கள்ளமவுனம் சாதிக்கின்றது? இந்த கள்ள மவுனத்துக்கு பெயர் தான் உங்களின் இந்துத்துவா கள்ள காதலா?

    //மீண்டும் பெரியாரிய கோட்டிகள் உளர ஆரமித்து விட்டார்கள். கீழையூர் சடகோப தாசர் பொய்யாக புனைந்து இருக்கும், குரு பரம்பரையில் இல்லாத ஒன்றை கூறுவதை மட்டுமே தான் நான் எடுத்து பேசி கொண்டிருக்கின்றேனே தவிர, அந்த நூலில் உள்ள இடை செருகல்களை மட்டும் தான் நான் அம்பல படுத்தி கொண்டிருந்தேன் தவிர, மற்றபடி புராணங்கள் அனைத்தும் குப்பை என்றெல்லாம் நான் எங்கும் பேசவில்லையே. இடை செருகல்களை பற்றி பேசுவது என்பது வேறு.. மொத்தமாக ஒரு விடயத்தையே பொய் என்று நிராகரிப்பது வேறு. இது கூட தெரியாத முட்டாளாக நீங்கள் இருந்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. திருமங்கை ஆழ்வாரை பற்றி இவ்வளவு ஆதாரங்களை அடுக்க தெரிந்த இவர்களுக்கு, ஆண்டாளை பற்றி ஒரு வரி கூட ஆதாரத்தை அளிக்க முடியவில்லை, அனுமானங்களை தவிர. //

  98. நீங்க மபொசி மீது வைத்து இருக்கும் பகுதி நேர பற்று மெய்சிலிர்க்க வைகின்றது மேரி! சங்கராசாரியின் கால்களை நக்கிய அதே மாபோசி உங்களுக்கு விவாதத்தில் பெரியாருக்கு எதிரான கருத்துகளுக்கு தேவை படுகின்றார் என்றால் நீங்கள் யார் எப்படிபட்டவர் என்பதனை எல்லாம் நாங்க அறிந்துகொள்ள முடிகின்றது அல்லலவா? இந்து சமைய புரானகுப்பைகளை தமிழ் மொழியின் மீதான உன்னதங்களாக உணரும் உங்களை போன்ற அறிவற்ற காட்டுமிராண்டிகளுக்கு ஆம் தமிழ் காண்டுமிரண்டிகளின் மொழி தான். அதில் ஏதும் சந்தேகமே இல்லை.

    //அது அவருடைய கருத்து, ம.பொ.சி தமிழ் உணர்வாளர் என்பதற்க்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை ஒன்றும் எனக்கில்லையே. ஈ.வே.ராவை ஏற்றுக் கொள்பவர்கள், பெரியார் என்றால், அவர் கூறும் அனைத்தும் வேத வாக்குதான் என்று ஏற்றுக் கொண்டு அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழும் அற்ப பிறவிகள் போன்று என்னை நினைத்தால், அதற்கு நான் பொறுப்பில்லையே. ம.பொ.சி தமிழ் உணர்வாளர் தான், ஆனால் தமிழ் தேசியவாதி கிடையாது. அவர் கறாரான இந்திய தேசியவாதி. இந்தியா என்கிற அமைப்பை என்றுமே அவர் விட்டு கொடுத்தது கிடையாது. அவர் ஏக இந்தியா என்று கூறியதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள முடியுமா. அவரை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்க்காக, அவரின் சங்கர மடத்தின் மீதான பாசத்தை எல்லாம் ஏற்க முடியுமா. பகுத்தறிவு என்கிற பெயரில், பெரியாரின் முட்டாள்தனமான தமிழ் எதிர்ப்பை, தமிழ் இலக்கிய எதிர்ப்பை அவர் அம்பல படுத்தினார். எனக்கு தேவையும் அதுதான்.//

  99. ரெபெக்கா ,சோதியில் சேர்வதனை நீங்க யார் நூற்கள் கொண்டு விளக்கினாலும் அது அறிவுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் அல்லவா? நான் கேட்பது அறிவையும் அதன் ஆற்றலையும் நீங்க பகுதி நேரத்துக்கு குறிப்பிட்ட ஒரு நூலுக்கு மட்டும் அதாங்க அரிச்சமய தீபம் என்ற நூலை ஆராய மட்டும் தான் பயன்படுத்தும் ரகசியம் என்ன? மற்ற குருபரம்பரை நூற்களில் உள்ள விசயங்கள் எல்லாம் என்ன அறிவியல் ஆய்வுபடி எழுதப்பட்ட கட்டுரை தொகுப்புகளா?

    சோதியில் கலத்தல் மற்றும் ஆண்டாள் மறைந்த விசயங்களுக்கும் சேர்த்தே நீங்க அறிவியல் விளக்கம் கொடுக்கணும் என்ற அறிவு கூடவா உங்களுக்கு இல்ல? ஏன் அறிவு வேலை செய்ய மாட்டேன் என்கின்றது?

    //நான் இங்கு அம்பல படுத்துவது திருமங்கையாரின் மீதான பார்ப்பனர்களின் சூழ்ச்சியான இடை செருகலைகளை மட்டும் தானே தவிர, மற்றபடி குரு பரம்பரையினர் கூறிய அனைத்தையும் கிடையாது. இந்த ஒரு சின்ன விஷயத்தை புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லை, இவர் பகுத்தறிவு என்று பேச வந்து விட்டார். இறைவனுடன் சோதியில் கலப்பது என்பதை பற்றி ஏற்கனவே நான் வள்ளலாருடைய நூலில் இருந்து விளக்கி விட்டேன். மீண்டும் மீண்டும் என்னால் கூறி கொண்டிருக்க முடியாது. ஏற்றுக் கொள்ளுங்கள் ஏற்காமல் போங்கள் அது உங்களின் இஷ்டம். //

  100. ரெபெக்கா மேரி நீங்க கொடுக்கும் ஒப்புதல் வாங்குமூலம் மிக சிறப்பு :”தமிழ் ஹிந்து தளத்தாரிடம் உதவி கேட்டதற்கு நான் ஏன் வெட்க படவேண்டும்” இதுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலையில் எல்லாம் வினவு வாசகர்கள் இல்லை. அவர்கள் அறிவானவர்கள். ஹிந்துத்துவாகளிடம் சென்று தமிழ் ஆண்டாளை அமானம் வைத்து பார்பனர்களின்கால் நக்கியாக இப்ப அம்ப்லாப்ட்டு நிற்பதே போதுமானது. நீங்க தமிழின உணர்வாளர் அல்ல என்ற விசயமே இப்ப நிருபணம் ஆகிறது அல்லவா ? அதுவே போதுமானது.

  101. அட நீங்க வேற ரெபெக்கா.., பாலாஜி,மருதன், ஸ்டேன்லி, ,சின்னா, கார்திகேயன் மற்றும் பலவேறு பெயர்களின் ஒத்த கொளகையுடன் பேசிக்கொண்டு இருப்பது நான் தான்.. அதாவதுங்க உங்களுக்கு எப்படி ராமன் மற்றும் மணிகண்டன் போன்றோர் உங்க பார்பன ஹிந்துத்துவா கொள்கைக்கு ஆதரவோ அது போன்று எனக்கு என் பெரியாரிய பொவுத்த கொள்கைகளுக்கு மேலே நான் குறிபிட்டவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவு. முடிந்தால் அவர்களுக்கு பதில் அளிங்க….இல்லை என்றால் போங்க… யாரும் யார் கைய்களையும் புடித்து இழுக்கவில்லை அல்லவா?

  102. பார்பன திமிர் பிடித்தவ்ருக்கும் , பார்பன அடிமைக்கும் வித்தியாசம் இருக்கே கார்த்திகேயன். பார்பன திமிர் பிடித்த மனம் ஓட்டில் gst போட்டால் வீட்டில் சாப்பிட்டு என்று குதர்கமாக பேசும்… அதே நேரத்தில் பார்பன அடிமையின் மனம் பார்பன திமிருக்கு கால் அமுக்கும்வேலையை ஒழுங்காக செய்யும்.. பாப்பன திமிருக்கு அடியாள் வேலையையும் செய்து கொண்டு இருக்கும்.

    நிர்மலா மற்றும் ரெபெக்கா ஆகியோரில் இப்ப யார் திமிர் பிடித்த பார்பனர், யார் பார்பன அடிமை என்று உங்களுக்கு புரிந்து இருக்குமே!

    //மேரியின் வாதங்களைப் பார்க்கும்போது திமிர் பிடித்த நிர்மலா சீதாராமன் முகம்தான் நிழலாடுகிறது !//

  103. ரெபெக்கா மேரி, அனுமானம் என்பதே inference என்பதன் வடமொழி தானே? அனுமானம் என்றால் என்ன வென்று வினவின் தந்தி-தொந்தி கட்டுரையில் விளக்கியுள்ளேன். படிக்கவில்லையா? இல்ல படிக்காதது போன்று நடிப்பா? மீண்டும் வேண்டுமானால் கூறுகின்றேன். Inference என்ற ஆங்கில சொல்லை ஆய்வாளர் நாராயணன் அவர்கள் பயன்ப்டுத்தியுளார் அல்லவா?ஒரு ஆய்வாளராக அதனை அவர் பயன்படுத்தியுள்ள பின்னணி என்ன?

    An inference is a conclusion reached on the basis of evidence and reasoning.

    An inference is an educated guess.Inference is the process of inferring things based on what is already known.

    An inference is a conclusion that you draw about something by using information that you already have about it.

    இன்னுமா புரியல உங்களுக்கு ? திருவில்லிபுத்தூரில் இருந்து திருவரங்க கோவிலுக்கு ஆண்டால் அழைத்து செல்லபட்டு அவர் வளர்ப்பு தந்தையால் ,அதாங்க பெரியார்ழ்வாரால் அங்கே தேவரடியாராக விட்ப்ட்டார் என்று inference மூலம் ஆய்வாளர் நாராயணன் கூறும் முடிவு உங்களுக்கு புரியவில்லையா மேரி?
    //ஆண்டாளை பற்றி ஒரு வரி கூட ஆதாரத்தை அளிக்க முடியவில்லை, அனுமானங்களை தவிர. //

  104. ரெபெக்காமேரி யார் பக்கம் என்று முடிவு செயட்டும். மதவெறியர்கள் பக்கமா? ஜனநாயகவாதிகள் பக்கமா?

    மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும். எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.

    ஆண்டாள் எழுத்துகளை சாப்ட் போர்னோ என்று விமர்சித்த பா ராகவனும், ஆண்டாளை கற்பனை என்ற ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள். வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை. இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

    வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார். அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

    ரெபெக்காமேரி யார் பக்கம் என்று முடிவு செயட்டும். மதவெறியர்கள் பக்கமா? ஜனநாயகவாதிகள் பக்கமா?

    நன்றி இனியொரு.https://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/

  105. ரெபெக்கா அறிவியல் பூர்வமாக ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியம் ஆனாள் பெரியவாள்கள் ஜோதியில் மறைந்தார்கள் என்ற விசயங்களுக்கு அறிவியல் ரீதியில் விளக்கம் அளியுங்க பார்கலாம்.

    ரெபெக்கா ஆண்டாளை மாகாலட்சுமியின் அவதாரம் என்று சொன்னீர்கள் என்றால் அதற்காக கல்வெட்டுகளை ஆதாரமாக கொடுத்து அதனை முட்டாள் தனமாக முழுமையாக நம்புவீர்கள் என்றால் அதே முட்டாள் தனத்துடன் தானே நீங்க சடகோபரின் அரிசமயதீபம் என்ற நூலையும் நம்பியாகவேண்டும். ஒருவேளை சடகோபரின் அரிசமயதீபம் நூலை அறிவு பூர்வமாக நம்பாவிட்டால்,(நம்பவில்லை தானே ?) (கல்வெட்டுகளில் உள்ள விசயத்தை நீங்க இதுவரைக்கும் வெளியிடவே இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கத்தில்) அந்த கல்வெட்டுகளில் உள்ள ஆண்டாள்ல ல்ட்சுமி அவதாரம் மற்றும் ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியம் ஆனா வெவகாரம் ஆகியவற்றுக்கும் அறிவு பூர்வமாக விளக்கம் தரனும் அல்லவா நீங்க ? அப்படி அறிவா விளக்கம் அளிக்காமல் அதுக்கு மட்டும் வள்ளலாரையும் அவரின் ஆன்மிகத்தையும் உதவிக்கு அழைப்பது ஏன் ? வள்ளாலார் பேசிய விசயங்கள் அன்பு மற்றும் ஆன்மிகமா இல்லை அறிவியலா? அன்பு மற்றம் ஆன்மிகம் என்றால் அதனை பற்றி பேசவேண்டியது இல்ல.. அறிவியல் என்றால் எப்படி என்று நீங்க தான் விளக்கனும். கண்டிப்பாக விளக்கியாகனும். சடகோபருக்கும் அவர் நூலுக்கும் ஒரு அறிவியல் ஆய்வு முறையையும் அதே நேரத்தில் மத்தவாளுக்கும் அவர்களின் நூர்களுக்கும் நம்பிக்கை என்ற மத வெறியையும் பயன்படுத்தும் உங்க அறிவு விஷமதமானது என்ற முடிவுக்கு தான் நான் வரவேண்டியுள்ளது.

    ஒருவேளை சின்னாவின் கேள்விக்கு (பின்னுட்டம்ப 239) பதில் அளித்து இருந்தால் இப்ப இந்த கேள்வி எழாது அல்லவா? ஏன் சின்னாவுக்கு பதில் அளிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

    //திருமகளின் அவதாரமாகவும் அங்கீகாரம் பெற்று திருவரங்கம் வந்து சேர்ந்தார். அன்று அவள் வைணவர்களால் அரங்கனின் பத்தினியான திருமகளாம் மகாலட்சுமியின் அவதாரமாவே துதிக்க பெற்றாள். அரங்கனை எந்த அளவிற்கு நேசித்தாலோ அதே அளவு அன்னை தமிழையும் அவள் நேசித்தால், அவளின் அருளி செயல்களை படிப்போருக்கு இது நன்கு விளங்கும். தன் தாய்மொழி தமிழ் மொழியின் இலக்கணை மரபை தாண்டாதவள், தன் வாழ்வின் இலக்கண மரபை தாண்டியதில்லை, நாவுக்கரசர் எப்படி தன்னையே சிவ பெருமானுக்கு அர்ப்பணித்தாரோ அதனை போன்று, அரங்கனுக்கே தன்னை அர்ப்பணித்தாள் கோதை. திருஅரங்க கோவிலுக்கு சென்று அரங்கனிடம் ஐக்கியமானாள், வள்ளல் பெருமானாரை போல் சோதியுறுவாய் அரங்கனோடு இரண்டற கலந்தாள். நான் கூறியதற்கு கல்வெட்டு இலக்கிய ஆதாரங்கள் இருக்கிறது..//

  106. //அட நீங்க வேற ரெபெக்கா.., பாலாஜி,மருதன், ஸ்டேன்லி, ,சின்னா, கார்திகேயன் மற்றும் பலவேறு பெயர்களின்//

    இத்தனை, அவதாரங்களும் எடுத்து அயோக்கிய தனம் செய்தது நீங்கள் தான் என ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. தன் கருத்தை நிலை நாட்டை இப்படி பல்வேறு போலி அவதாரங்கள் எடுப்பது என்பது ஒரு கேவலமான பொழப்பு என்பதை கொஞ்சமாவது உணர்ந்தாள் சரி.

    விசயத்திற்கு வருகிறேன், ஆண்டாள் சோதியில் ஐக்கியமாவது பற்றி ஏற்கனவே நிறைய பேசி விட்டேன். இங்கு என் கருத்துக்களை பதிவு செய்வது உங்களை போன்ற முற்போக்கு முகமூடி அணிந்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரைவேக்காடுகளுக்கு புரிய வைப்பதற்கல்ல. மாறாக எந்த பக்க சார்புமில்லாத, நடுநிலையான வாசகர்கள் அதனை முடிவு செய்து கொள்ள தான். அதற்க்கு உங்களின் உளறல்கள் நன்கு உதவி புரிந்தன.

    இங்கு உங்களின், புலம்பல்கள் பேத்தல்கள் போன்றவை எனக்கு வேண்டாம், வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் அளிக்கவும். இனி உங்களின் உளறல்கள் புலம்பல்களுக்கு எல்லாம் நான் நேரம் செலவிட முடியாது. திருமங்கை ஆழ்வாரை பற்றி அடுத்த ஆதாரத்தினை(இடை செருகல் புருடாவை) எடுத்து விடவும்.

  107. ரெபெக்கா, இங்கே உங்க அறிவு குறிப்பிட்ட ஒருநூலுக்கு அதுதான்ம சடகோபரின்ட்நூலுக்கு மட்டும் தான் வேலை செய்யும் , பிற நூற்களில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை பற்றி கண்டு கொள்ளாது என்றால் அதுக்கு பேரு தாங்க கயமை தனம்.. அறிவு நாணயம் அற்ற செயல்.. இப்படியே வினவில் மொக்கை போட்டுக்கிட்டு மங்கலம் பாடிகிட்டு இருப்தனை விட நீங்க வாயையும் வினவில் தட்டும் உங்க விரல்களையும் மூடிகிட்டு போகலாம்.

    என்ன என் பின்னுட்டம் 258 புரியலையா? இல்ல புரியாத மாதிரியே நடிப்பா? உங்களுக்கு ஆதரவா பிறர் பேசுவது போன்று எனக்கும் என் கருத்துக்கும் ஆதரவா மற்றவர்கள் பேசும் போது சூடான தோசை கல்லில் விழுந்த பெரிசாலி போன்று எதுக்கு குதிக்கணும் நீங்க… யார் கேள்வி கேட்டாலும் அதில் என் முகம் தான் வந்து தெரியுது என்றால் அதுக்கு என்ன செய்ய நம்ம கருத்துகளின் வலிமை அப்படி…

    என்னுடைய கருத்துகள் உங்க தூ கத்தை கூட கெடுக்குது போல… நடுராத்திரி ரெண்டு மணிக்கு எல்லாம் வந்து பதில் அளித்து கிட்டு இருக்கீங்க.!

    //விசயத்திற்கு வருகிறேன், ஆண்டாள் சோதியில் ஐக்கியமாவது பற்றி ஏற்கனவே நிறைய பேசி விட்டேன். இங்கு என் கருத்துக்களை பதிவு செய்வது உங்களை போன்ற முற்போக்கு முகமூடி அணிந்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரைவேக்காடுகளுக்கு புரிய வைப்பதற்கல்ல. மாறாக எந்த பக்க சார்புமில்லாத, நடுநிலையான வாசகர்கள் அதனை முடிவு செய்து கொள்ள தான். அதற்க்கு உங்களின் உளறல்கள் நன்கு உதவி புரிந்தன.//

    ரெபெக்கா, இதுவென்ன கதையா இருக்கு! உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் பதில் சொல்ல தெரியாது என்றால் எப்படி? நன்றாகவா இருக்கு? என்ன தரவுகளை நீங்க பிச்சையாக அழுது அடம்பிடித்து கேட்ட இடத்தில் அதாங்க தமிழ் ஹிந்து பார்பன இனைய தளத்தில் இருந்து எந்த உதவியும் வரலையா? வரும் அனால் வராது என்று சொல்லாமல் சொந்தமா முயற்சி செய்து தரவுகளை கண்டுபிடியுங்க… ஒன்று பாப்பானிடம் தரவுகளை பிச்சை கேட்கவேண்டியது இல்லை என்றில் என்னிடமே அதுவும் எதிர் தரப்பிடமே தரவுகளை கேட்ட்கவேண்டியது… இந்த பொழப்புக்கு…ஹ ஹா….இது என்ன மாதரியான பொழப்பு ரெபெக்காகா கா கா !

    //இங்கு உங்களின், புலம்பல்கள் பேத்தல்கள் போன்றவை எனக்கு வேண்டாம், வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் அளிக்கவும். இனி உங்களின் உளறல்கள் புலம்பல்களுக்கு எல்லாம் நான் நேரம் செலவிட முடியாது. திருமங்கை ஆழ்வாரை பற்றி அடுத்த ஆதாரத்தினை(இடை செருகல் புருடாவை) எடுத்து விடவும்.//

  108. வினவு …………

    தோழர் கோவனை நான் கோபத்தில் தவறாக பேசியமைக்காக எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது தான், வெறுப்பினால் அல்ல, உணர்ச்சி மேலீட்டால் தான் அவ்வாறு நான் பேச நேர்ந்தது. என்ன இருந்தாலும் அவர் ஒரு உழைக்கும் மக்களின் புரட்சி பாடகர். ஆண்டாளை பற்றி அவருக்கு ஒரு நிலைப்பாடு இருக்கலாம். அதற்காக அவரை தனி மனித தாக்குதல் செய்தது தவறு தான். விவாதத்தில் தனி மனித தாக்குதலை முன்னெடுப்பது அடிப்படைவாதிகளின் குணம். ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்ற பொறுக்கிகள் செய்வது அதனை தான். அந்த அடிப்படை வாதம் தான் திரிபுராவில் தோழர் லெனின் சிலையை தகர்த்துள்ளது என்பதை நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது. ஆகவே தோழர் கோவனை பற்றி நான் கூறியதை திரும்ப பெற்றுக் கொண்டு, என் மன்னிப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் இணையத்தில் வரும் கட்டுரைக்கு எனது கருத்தினை மட்டும் பதிவு செய்கிறேன்.. நன்றி..

  109. மேற்படி மன்னிப்பு கோருவதே, எங்களின் தாய் ஆண்டாள் நாச்சியாருக்கு நான் செய்யும் உண்மையான சேவை.

  110. கிட்டத்தட்ட அம்பலப்பட்டுவிட்ட நிலையில் தோழர் கோவனை அவதூறு செய்ததற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
    இன்னும் பெரியாரைப்பற்றி அவதூறு பேசியதற்கு மன்னிப்பு பாக்கியிருக்கிறது.

  111. மேலும் தோழர் கோவன் ‘அவள என்னடா பண்ணுணீங்க’ என்று கேட்டது, அவரது நிலைப்பாடு ரெபெக்கா மேரியிடமிருந்து வேறுபட்டாலும், ஆண்டாளுக்காகத்தான் வாதிட்டிருக்கிறார் என்பதையும் ரெபெக்கா மனசாட்சியுடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.

  112. பல வேறு பதிவுகளில் கருத்து முரண்பட்டு அவரோடு அவரே மாங்கு மாங்குன்னு சண்டை போட்டுகிட்டார் குமார்.

  113. கார்த்திகேயன், பெரியாரை இந்த எச்சை ராஜா ,பிஜேபி பொறுக்கிகள் மற்றும் இத்தியாதி இத்தியாதிகள் வினவில் பெரியாருக்கு எதிராக சதிராடும் இந்த போலி தமிழின உதிரிகள் எவ்வளவு வேணுமானாலும் அவதூரு செய்யட்டும்…அந்த கிழவன் உசுருடன் இருந்த போது தமிழ் மக்களுக்காக அவர்களின் அறிவு மற்றும் பொருளாதார முன்றேர்ரதுக்காக சந்தித்த அவதூருகளும் , பார்பன வெறி பிடித்த பேச்சுகளும் அதிகம் தானே? இப்ப இந்த இத்தியாதிகள் கப்பிகள் போலி தமிழின உதிரிகள் பேசட்டும்… அப்போது தான் அந்த ஈவேரா என்ற கிழவனால் முன்னேறிய தமிழனுக்கு கொஞ்சமாவது சூடும் சொரணையும் ஏற்படும்.

  114. From Azhi Senthilnathan fb:

    பெரியாரைப் போல ஒரு அதிர்ஷ்டக்கார கெழவன் யாரும் இல்லை. அவரால் பலன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும், அவரால் “பாதிக்கப்பட்டவர்கள்” அவரை மறப்பதில்லை.

    ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்று கூறுவதுபோல, பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ராஜா, நீ பேசு ராஜா! நீ ராசிக்கார ராஜா இல்லையா? இன்றைக்கு லட்சம் பேராவது வாட்ஸ்அப்பில் பெரியாரைப் பற்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! முகநூலிலிருந்து தொலைக்காட்சிகள் வரை பெரியாரைப் பற்றி பேசுவார்கள்.

    எதற்காக பெரியார் சிலையை நீ உடைக்கணும்னு சொன்னேங்கிறது பத்தி எல்லோரும் பேசணும். அது பத்தி நன்றிகெட்ட இந்த தமிழ்நாட்டுக்கு நல்லா தெரியணுமில்லையா? நல்ல வேலை செஞ்சிருக்க ராஜா! இன்னும் இன்னும் நீ பெரியாரைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் லெனினைப் பத்தியும் நிறைய பேசணும்னு ஸ்ரீராமபிரானை வேண்டிக்கொள்கிறேன்.

    நாங்க பெரியாரையும் தன்மானத்தையும் மறந்திடும்போதெல்லாம் உன்னைப் போல ஒரு ராஜா தேவைப்படுது. இதோ பாரு. சமீபத்தில மருத்துவ மேற்படிப்பில பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து பண்ணீங்க. தமிழ்நாட்டில எதுவும் வெடிக்கல. அங்கே ஒரு முனகல், இங்கே ஒரு முக்கல். தட்ஸ் ஆல். அந்த அளவுக்கு தூங்கிட்டிருக்காங்க எங்க ஆளுங்க. இவங்கெல்லாம் விழிப்புணர்வு அடையணும்னா நீ – சொல்லக் கூடாது – செய்யணும். போய் ரெண்டு பெரியார் சிலையாவது உடைங்க பாக்கலாம். உங்க லெவலுக்கு நீங்கலெல்லாம் ஒடச்சுட்டுத்தான் போஸ்ட் போடணும் ராஜா. போ, போய் ரெண்டு பெரியார் சிலையை உடை. போட்டோ எடுத்து போடு. நாங்க பாக்கணும்.

    செய் ராஜா செய். சேவையெல்லாம் செய். ப்ளீஸ் எங்கள ஏமாத்திடாதே.

  115. இத்தனை நாள் விவாதங்களுக்குப்பின், தான் பார்ப்பனீயத்திற்கு முட்டுக்கொடுக்கவில்லை எனும் விதமாக எச்ச ராஜாவையும் நயினார் நாகேந்திரனையும் பொறுக்கிகள் என்று வைத பின்னும், ராமன்கள், ‘மன்னிப்பு கேட்க இவர்கள் தகுதியற்றவர்கள், வருத்தம் தெரிவித்தால் போதுமானது’ என்று ஆலோசனை வழங்குகிறார்கள் என்றால் ரெபெக்கா மேரி யார் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  116. Raman ..

    //I wish you could have expressed regret but not apologized. They dont deserve for this issue.//

    yes .. i think so .. but just because considering his position, which he is holding as working class peoples minstrel, so i apologized. Nothing more than that. But still, i don’t accept his third rate malicious notion towards andal. its quiet unacceptable and also barbaric. If i express my differences of opinion towards their communist leaders. i know for sure they’ll close all the democratic ways. verbal Abusiveness towards me will be the only option left.

  117. Jothiyil Aikiyam aanathukku vilakkam ketkum Stanly,
    – Jesus 3rd day uyirthu Ezunthatharku Vilakkam kodupaara.
    – Jesus Thanni mela nadanthatharku vilakkam koduppaara?

  118. கார்த்திகேயன் சார், கோவன் அவர்கள் ஆண்டாள என்னடா பண்ணுணீங்க ? என்று கேட்பது, நாம வள்ளலரை என்னடா செய்தீர்கள் என்று கேட்பது எல்லாம் யாருகிட்ட..? அவர்களின் மரணத்த்தில் யாரின் தொடர்பு இருக்கோ அதாங்க பார்பன்ர்களிடம் தானே? அப்படி நாம பார்பனர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றிய போது போலி தமிழின உணர்வுடன் இங்க வந்தவங்க எதுக்கு அழிசாட்டியம் செய்துகிட்டு இத்தனை நாட்டகளாக மொக்கை போடனும் இந்த ரெபெக்கா? அவிங்க அறிவில் எல்லாம் எனக்கு எந்த குறையும் இருபதாக தெரியல… அதே சமயத்தில் அவிங்க அறிவு விஷம தனமாக பார்பன ஆதரவுடன் செயலபடுகிறது என்பதனை நாம உணரமுடிகின்றது அல்லவா? இந்த விவாதத்தில் இருந்து மாட்டு மூளை மணிகண்டன் , வக்கில் ரங்கன் மற்றும் ராமன் போன்ற ஹிந்துத்துவாக்கள் எல்லாம் விலகி ஓட ரெபெக்கா மட்டும் விவாதித்து இருக்காங்க என்றால் அது என்ன புத்தி? பார்பன அடிமை புத்தி தானே? பார்பன கால் நக்கியாக நன்றாகவே அம்பலபட்டு போனார் ரெபெக்கா!

    கூடுதல் செய்தி என்னவென்றால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் யார் விரோதியோ (அதாங்க இந்துத்துவா கூட்டம் ) அவர்களிடமே இங்கே வினவில் நம்முடன் விவாதிக்க தரவுகளை கேட்டு வெக்கமே இல்லாமல் மண்டியிட்டு இருந்து இருகார் இந்த ரெபெக்கா…. தமிழ் ஹிந்து என்று ஒரு மதவெறி ஹிந்துவா இணைய தளம் இருக்கு அல்லவா அதனிடம் தான் மண்டியிட்டு பவ்யமாக கொடுங்கோ கொடுங்க தரவுகளை என்று கதறிஇருக்கார் இந்த ரெபெக்கா..

    இங்கே வினவில் வினவு அட்மினிடம் இவர் பேசிய திமிர் பேச்சையும் நாம பார்த்து இருக்கோம்…. அங்கே அந்த ஹிந்துத்வா இணையதளத்தில் இதே ரெபெக்கா மண்டியிட்டதனையும் பார்த்து இருக்கோம்…

  119. உமாவின் முக நூல் பதிவில் இருந்து :

    https://www.facebook.com/umamaheshwaran.panneerselvam?fref=mentions

    பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்னதும் கொதித்தெழுந்தது பாதிக்கும் மேல் ஆத்திகர்கள்.

    பெரியார் சிலையை உடைத்த கயவனை புரட்டி எடுத்ததில் பாதிக்கும்மேல் ஆத்திகர்கள்..

    பெரியாரைப் போற்ற நாத்திகனாய் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.
    சமூகநீதிக்கு நன்றியுள்ளவனாய் இருந்தாலே போதும்…

    இதெல்லாம் சிலையை பிடித்துக்கொண்டு சித்தாந்தம் என்றால் “கூறு எவ்வளவு ரூபாய் ?” என்று கேட்கும் அற்பர்களுக்கு புரியாது.
    பெரியார் என்பவனை ஒற்றைக் கிழவனாக அவர்கள் பார்க்கிறார்கள். பெரியார் இங்கே ஏற்படுத்தியிருப்பது Nuclear Fission. சமூகநீதியின் Chain Reaction.

    ஹோமகுண்ட புகையால் Radiation குறையும் என்று நம்பும் ஈத்தரைகளுக்கு ஈ.வெ.ராவை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது.

    தமிழ்நாட்டில் சமூகநீதி தான் ஆன்மிகம்.
    அதை விஞ்சிய வழிபாடு வேறில்லை.
    தமிழகத்தின் அரசியல் என்பது சமூகநீதியை சுற்றி தான்.

    ஆன்மிக அரசியல் என்றாலும் அது இது தான்.

  120. சின்னா சார்,

    மன்னிப்பு கேட்டு நீளிக்கண்ணீர் வடித்த ரெபெக்காவின் வாயில் இருந்து கோவனை பற்றி வரும் வார்த்தைகள் : “”But still, i don’t accept his third rate malicious notion towards andal. its quiet unacceptable and also barbaric””” இவைகள்.

    நாமும் அவரை திரும்ப திட்டவேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதனை கூறியுள்ளார். மேலும் இப்படி எல்லாம் அசிங்கம் பிடித்து பேசிவிட்டு இப்ப நாம அவரை திட்டுவோம என்று கீழ் கண்டவாறு தன்னையே சொரிந்து கொள்கின்றார் ரெபெக்கா! “””If i express my differences of opinion towards their communist leaders. i know for sure they’ll close all the democratic ways. verbal Abusiveness towards me will be the only option left.”””

    வினவில் இவர் செய்யும் இந்த பிழைப்புக்கு இந்த பிழைப்புக்கு அவர் மண்டியிட்டு கதறி அழும் தமிழ் ஹிந்து இணைய தளத்திலேயே பார்பன ஹிந்துத்துவா பஜனை பாடிகிட்டு இருக்கலாம் ரெபெக்கா… இப்ப வினவில் இந்த விவாதத்தில் கொஞ்சம் பிரேக் எடுத்துகிட்டு மீண்டும் வந்து பார்பன ஹிந்துத்துவா பஜனைகளை தமிழின் பெயரால் ஓலருவாறு பாருங்க இந்த ரெபெக்கா…!

  121. Rebecca,

    Hope you understood the attitude/behavior of so called marx-Lenin-periyar supporters. even though u Apologize, they don’t have a mentality to accept it. as Raman said they don’t deserve it.

  122. நண்பர் ராம் , பைபிளில் உள்ள மோசடி பதிவுகளை நான் எப்படி சரி என்று சாதித்து விளக்கமுடியும்.? இந்த விவாதத்தில் பைபிளை பற்றிய எனது கருத்த்தை முன்பே பதிவு செய்து இருக்கேன். நீங்க பார்க்கவில்லையா?

    1.அதே போன்று தானே அனைத்து சமய நூற்களும் வரலாறு என்ற பெயரில் அறிவுக்கு ஏற்பற்ற செய்திகளை சொல்லிகொண்டு உள்ளது. “””””ஏசு நாதர் கல்லறையில் இருந்து வந்த செய்தி””””, நீங்கள் குறிபிடும் மத பெரியோர்கள் மாணிக்கவாசகர், திருநாவுகரர் போன்றோர் சோதியில் சேர்த்த செய்தி , ஆனாடால் பெருமாளுடன் கலந்து மறைந்த செய்தியனைத்துமே அறிவுக்கு புறம்பானது தானே? சின்னாவும் அதனை தன் பின்னுட்டத்தில் கேள்வியாக எழுப்புகின்றாரே!

    வேறு ஏதேனும் விளக்கம் வேண்டுமா ராம்.

    //Jothiyil Aikiyam aanathukku vilakkam ketkum Stanly,
    – Jesus 3rd day uyirthu Ezunthatharku Vilakkam kodupaara.
    – Jesus Thanni mela nadanthatharku vilakkam koduppaara?//

  123. Ram இங்கே இந்த ஆண்டாள் விசயத்தில் விவாதம் நடத்திக்கொண்டு இருபது நான். நான் தான் ரெபேக்காவிடம் Jothiyil Aikiyam aanathukku vilakkam அறிவியல் பூர்வமாக விளக்கம் கேட்டு இருந்தேன். அப்புறம் தான் ஸ்டேன்லி…. என்னை விட்டு விட்டு அதுவென்ன ஸ்டேன்லியிடம் ஜீசஸ் விசயத்துக்கு தாவுரிங்க..? பெயரை வைத்து கிறிஸ்டியன், ஹிந்து ,முஸ்லிம் என்ற மத அடையாளங்களை அடிபடையாக கொண்டு விவாதிக்கும் உங்க நோக்கம் விவாதத்தை திசை திருப்புவது தானே? ஸ்டேன்லியிடம் கேள்வி எழுபியமைக்கு வேற எதாவது நோக்கம் இருக்கா ராம்?

  124. ராம்…., ரெபெக்கா மன்னிப்பு கேட்டா அதனை ஏற்பதும் நிராகரித்தும் அவரால் அவரின் அவதூரால் பாதிப்பு உள்ளான கோவனின் வேலையே தவிர அல்லது வினவின் வேலையே தவிர அது என்னுடைய வேலையோ அல்லது கார்த்திகேயனின் வேலையோ அல்ல. விவாதம் எதனை பற்றியது என்று உங்களுக்கு தெரியும் என்றே நினைகின்றேன். அந்த விவாதத்தை தொடர்வது மட்டுமே என்னுடைய வேலையாக பார்கின்றேன். வினவிடம் கோவன் விசயத்தில் மன்னிப்பு கேட்ட ரெபெக்கா நேற்று மாலை March 6, 2018 at 7:37 pm க்கு மன்னிப்பு கேட்கின்றார் என்றால் இன்று March 7, 2018 at 11:09 am க்கு மீண்டும் கீழ்கண்டவாறு தரக்குறைவாக பேசுகின்றாரே கவனித்தீரா?

    “””But still, i don’t accept his third rate malicious notion towards andal. its quiet unacceptable and also barbaric.”””

    ரெபெக்கா ஏற்புடையதுஅன்று ( unacceptable )என்று கூறுவதில் ஏதும் தவறு இல்ல… அதே நேரதில் காட்டுமிராண்டிதனம்( barbaric) என்று கூறுவது லும்பன் என்று அவர் கோவனை முன்பு அசிங்கமாக பேசியதனை விட அசிங்கமான செயல் தானே?

    அதற்கு அடுத்து அவரை வினவில் அவரை வாசகர்கள் திடடனும் அதன் மூலம் பரிதாப சீன போடனும் என்று கீழ்கண்ட வாறு கூறி எதிர்பார்கின்றாரே..அது சரியா?

    “””If i express my differences of opinion towards their communist leaders. i know for sure they’ll close all the democratic ways. verbal Abusiveness towards me will be the only option left.”””

    விவத்தத்தை விட்டு ஓடி போனால் போகவேண்டியது தானே இந்த ரெபெக்கா? அதனை விட்டு விட்டு எதுக்கு இப்படி மன்னிப்பு கேட்பது மீண்டும் திட்டுவது என்று செண்டிமெண்ட் சீன் போடனும் இவிங்க?

    //Hope you understood the attitude/behavior of so called marx-Lenin-periyar supporters. even though u Apologize, they don’t have a mentality to accept it. as Raman said they don’t deserve it.//

  125. ரெபெக்கா மேரி, ஒரு ஆட்டோகாரர் ராங்கா பேசிட்டால் அணைத்து ஆட்டோ தொழிலளர்களையும் தவறாக சித்தரிப்பது, கோவன் தன் பாடலின் ஊடாக ஆண்டாள் என்ன ஆனார் என்று கேள்வி எழுப்பினால் அவரை கோவனை தரக்குறைவாக லும்பன் என்று திட்டுவது….. இன்னும் வாழ்க்கையில் நிறைய கத்துக்கணும் ரெபெக்கா.வாத்தியார் பாடம் நடத்தும் போது நடுவில் வகுப்பு வந்து அந்த பாடத்துடன் இணைவது புரிந்து கொள்வது புத்திசாலித்தனம் தான். அதுக்காக தன் புத்திசாலிதனத்தை மிக உயர்வாக நினைத்து பிறரை ஆங்காரம் கொண்டு தரக்குறைவாக பேசகூடாது இல்லையா..? சித்தாந்த வேறுபாடுகளை விவாதிக்கும் போது தரக்குறைவாக பேசிவிட்டு உணர்ச்சி மேலீட்டால் தான் அவ்வாறு நான் பேச நேர்ந்தது என்று பேசுவதில் உங்க புத்திசாலித்தனம் எல்லாம் முட்டாள்தனமாக தானே காட்சி அளிக்கின்றது .

    வருத்தம் மன்னிப்பு எல்லாம் வேண்டாம், அவர் அதாங்க தோழர் கோவன் எவ்வளவோ தன் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார். விவாதம் நீங்க முடிந்தது என்று சொன்னால் முடிந்தது இல்ல… ரெடி ஸ்டார்ட் என்றால் எனக்கும் ஓகே தான் தொடர…

    அப்புறம்ஒரு செய்தி புத்திசாலித்தனம் மட்டுமே விவாதிக்க போதுமானது இல்லைங்க…தான் கொண்ட கொள்கை சரியா தவறா என்ற ஆராய்ந்துவிட்டு பேசுவதில் தான் அறிவு வெளிபடும். உதரணத்துக்கு பார்த்தீர்கள் என்றால் சடகோரின் நூலை ஆராய முடிந்த மனம் இப்ப மற்ற நூற்களை அதில் உள்ள புராண குப்பைகளை ஆராய இடம் கொடுக்கவில்லை அல்லவா ஏன் ? உங்க புத்திசாலித்தனம் உங்க அறிவை தொற்கடித்ததால் தான். நான் முன்பே சொன்னது போன்று சடகோபர் நூலை ஆய்வு செய்த போது உண்மையிலேயே நீங்க விவாதத்தில் வென்றீர்கள் தான். அதனை நான் நேரடியாகவே என்றுக்கொண்டேன் அல்லவா? அதே போன்று பிற குருபரம்பரை நூற்களையும் விருப்பு வெறுப்புஇன்றி ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பீர்கள் என்றால் நீங்க முழுமையாக வென்று இருப்பீர்கள்… பெரியாரின் அறிவு வாரிசாக மாறியிருப்பீர்கள்… ஆஹா வர போச்சே…! எப்படி இருந்தாலும் அரிசமைய தீபம் நூலை ரொம்ப சரியா ஆராய்ந்து இருக்கீங்க… எனக்கு எதிராக பேசவேண்டிய கட்டாய்த்துக்கக்வாவது… இப்பவும் ஒன்றும் கைவிட்டு போகல… போட்டுத்தாக்குங்க உங்க ஆய்வுகளை அணைத்து மத நூற்கள் மீதும். உங்க அறிவாற்றல் ஒளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்…

    இத்துணை நாட்களாக தொடர் விவாதம் செய்த தோழர் ரெபக்காவுக்கும் மிக்க நன்றி.(விவாதத்தின் தொடக்கத்தில் நீங்க அல்லடை சல்லடை என்று வட்டார வழக்கில் திட்டிய பொது தான் நானும் அதற்கு அதே மொழி நடையில் எதிர்வினைய்ற நிகழ்ந்தது)

  126. நண்பர் ராம், பைபிளை பற்றி மற்றும் ஒரு விமர்சனத்தையும் வைத்து இருந்தேன் ; பார்கிண்றீக்லா? பின்னூட்டம் 251 ல் :
    உண்மை அப்படி இருக்கு இந்த நூலில் மட்டுமே சடகோபநாசர், கீழையூர் அவர்கள் அறிவுக்கு புறம்பாக பேசுகின்றார் ஆனால் மற்ற வைணவ நூற்கள் எல்லாம் ஆதாரபூர்வமானவை என்று சொல்ல எப்படி உங்களுக்கு முடிகின்றது. இந்து மதம் என்று அல்ல, எந்த மதத்து நூற்களும் அறிவுக்கு எதிரானவையே என்பதனை உணர “”””பைபிளின் முதல் ஐந்து பக்கங்களை படித்து சிறிது சிந்தித்தாலே போதுமானது””””

  127. i did not see Maanavan Kumar’s statement on “Jothiyil Aikiyam”. i saw the statement from Stanley only hence i directly asked him if he has any idea on Jesus resurrection.

    Yes Maanavan kumar. you are correct. i asked Stanley intentionally on Jesus resurrection because he would have read Bible. if i would have saw your statement first i could have addressed you and asked.

    also.. every one have their own belief… which gives strength for them .
    if you want answer for something, you should go and search for answer. for eg: when you ask about Jothiyil Aikiyam etc… to get /feel the answer, you should at least follow half of what Vallalaar did to reach that Situation or Feel.

    you might have heard/felt Sprituality is all about ullunarvu.
    so without going in depth just keep on asking is of no use.

  128. ராம் எப்படிங்க தல இப்படி கேட்டுபுட்டிங்க!! ஜோதியில் கலப்பது எல்லாம் உள்ளுணர்வு சார்ந்தது , அதனை பற்றி ஆழமாக உள்ளே நுழையாமல் கேள்வி கேட்க கூடாது என்று இப்ப சொல்லிவிட்டு அதே வாயால நீங்க அப்ப…….. “ஜோதியில் ஐக்கியம் ஆனதுக்கு விளக்கம் கேட்கும் ஸ்டேன்லி..,ஏசு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தமைக்கு விளக்கம் தருவாரா ? தண்ணியில நடப்பதற்கு விளக்கம் தருவாரா” என்று கேட்டால் அதில் லாஜிக் இல்லையே!

    அவர் தான் சரியான விளக்கம் கொடுத்து இருகாரு இல்லையா? என்னவென்று? “பைபிளில் உள்ள மோசடி பதிவுகளை நான் எப்படி சரி என்று சாதித்து விளக்கமுடியும்.?” என்று!

    இப்ப நீங்க விளக்குங்க ஜோதியில் கலப்பது எப்படி என்று அறிவியல் பூர்வமாக விளக்குங்க சார். எனக்கு ஸ்டேன்லியிடம் கேள்வி கேட்ட்க தான் தெரியும் அதே கேள்வியை என்னிடம் கேட்டால் அதுக்கு பதில் சொல்ல தெரியாது என்று சொல்லிட்டு எல்லாம் எஸ்கேப் ஆக கூடாது பாஸ்… பொறுப்பா பதில சொல்லுங்க…

    மறுபடியும் இந்த உள்ளுணர்வு, ஆழமாக போவனும் பிசினஸ் எல்லாம் வேண்டாம்.. அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுங்க…!

  129. அறிவியல் பூர்வமாக அறிவியல் பூர்வமாக என்று சாமியாடுபவர்கள் அன்பு, கருணை என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பார்களா. அன்பு, கருணை, வாழ்வு, மரணம் இவைகளை எல்லாம் அறிவியல் பூர்வமாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்பு செலுத்தும் பொழுது மூளையில் ஏற்பாடு மாற்றங்களை பற்றி கேட்கவில்லை. அவை வெறும் விளைவுகள் மட்டுமே. நியூட்டன் விதியை போன்ற அன்பு என்கிற உணர்வை அறிவியல் பூர்வமாக விளக்கவும். அன்பை எந்த அறிவியல் மானியை கொண்டு அளப்பார்கள் என்று கூறவும்.

  130. ரெபெக்கா மேரி நான் கேட்கும் கேள்விக்கு தான் பதிலை சொல்ல இயலவில்லை உங்களால்.. உங்க கேள்விக்கு திருவள்ளுவர் முன்பே பதிலை சொல்லிட்டார். நானும் விளக்கி இருக்கேன் முன்பே…அன்பு ,கோபம் ,குரோதம் ஆகிய உணர்வுகள் எப்படி எல்லாம் மூளையின் மின் அணு சிதறல்களை வேறுபடுத்தும் என்று. அவற்றை நாம் Electroencephalography (EEG)மூலம் அறியமுடியும் என்று தெளிவாகவே சொல்லி இருக்கேன். அங்கே அதற்கு பதிலை அளிக்காமல் இப்ப இங்கே மீண்டும் அதே கேள்வியை எழுப்பினால் அது தகுமோ? மேலும் அந்த அந்த உணர்வுக்கு ஏற்ப ஆர்மொன்கள் நமக்கு உற்பத்தி ஆகும் என்றும் விளக்கி இருக்கேன்.

    Low levels of estrogen and progesterone signal the pituitary gland to produce Follicle Stimulating Hormone (FSH).

    Leptin is a hormone, made by fat cells, that decreases your appetite. Ghrelin is a hormone that increases appetite, and also plays a role in body weight.

    When we get angry, the heart rate, arterial tension and testosterone production increases, cortisol (the stress hormone) decreases, and the left hemisphere of the brain becomes more stimulated.

    இப்போதைக்கு திருவள்ளுவரை படிங்க சகோ…

    அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
    (அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
    புன்கண்நீர் பூசல் தரும்.)

    இன்னும் ஒரு திருக்குறள் கூட நச்சினு இருக்குங்க…

    புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

    உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

    அன்பு நம் அகம் சார்ந்தது (இலக்கியத்தின் அகம் அல்ல… உடலின் அகம் சார்ந்தது) என்று தெளிவாக தானே கூறுகின்றார் திருவள்ளுவர்.

    திருவள்ளுவரின் இந்த கூற்று அறிவு சார் விளக்கம் இன்றி வேறு என்ன ரெபெக்கா மேரி?

    மேலும் விரிவா பேசுவோம்…

  131. மேலும்…..

    Oxytocin is a hormone secreted by the posterior lobe of the pituitary gland, a pea-sized structure at the base of the brain.It’s sometimes known as the “cuddle hormone” or the “love hormone,” because it is released when people snuggle up or bond socially.

    Prolactin (PRL)Stimulates milk production in the breasts and plays a role in sexual behaviour

    Adrenaline is the one that allows us to be alert to any danger and triggers the necessary behaviors in case of fight or flight response. The effects it produces in the body are varied, from increased blood pressure, dilated pupils and increased heart rate, இன்னும் நிறைய ஆர்மொன்கள் இருக்குங்க..தேடி படித்து அறிவுச்செல்வம் பெருக…

  132. தமிழிலக்கியத்தின் ஊடாக……. தமிழரின் மனம் பற்றிய கோட்பாடு

    மேலும் இந்த விசயம் தொடர்பாக என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ் பேராசிரியர் அய்யா டாக்டர் கரு.நாகராசன் அவர்கள் ஒரு ஆய்வு 1988களிலேயே எழுதியுள்ளார். நூலின் பெயர் தமிழரின் மனம் பற்றிய கோட்பாடு.. இது தமிழ் இலக்கியத்தினுடாக தமிழர்களையும் அவர்களின் மனதையும் ஆய்வு செய்யும் மிக சிறந்த நூல்..அன்பு உற்பத்தியாகும் இடம் மனதத்துவத்தில் மனம் என்று கொண்டால் அந்த மனதில் இருந்துவெளிப்டும் உணர்வுகளை அய்யா கீழ் கணடவாறு தமிழ் இலக்கியத்தில் இருந்து வரிசை படுத்துகின்றார்.

    மகிழும் மனம்

    மயங்கா மனம்

    தளர்ந்துகு மனம்

    அன்புறு மனம்

    இருள் மனம்

    பொறா மனம்

    மையறு மனம்

    ஐயுறு மனம்

    ஆய்வுறு மனம் (எதனையும் ஆய்வு செய்யும் என் மனம் போல)

    உருகிய மனம் (ஆண்டாளுக்கு உருக்கும் உங்க மனம் போல)

    கள்ள மனம்

    உளைவுறு மனம்

    இலக்கியத்தின் ஊடாக அவர் மகிழுதல், மயங்குதல் , அன்புடைத்தாதல் ஆகியவற்றை சங்க இலக்கியங்களில் இருந்தும், அறம், அருள் போன்ற நல்லியல்புகளையும் கள்ளம்,பொறாமை ,தெருளுடைமை போன்ற தீய இயலபுகளையும் அவர் வரிசை படுத்திஉள்ளார் (தமிழர் மனம் பற்றிய கோட்பாடு பக்கம் 59)

  133. ரெபெக்கா மேரி, நீயுட்டன் விதி மட்டும் அல்ல எந்த அறிவியல் விதிகளும் ஒரு செயலின் விளைவுகளை (experiments and its cause) அடிபடையாக கொண்டு தான் வரையறை செய்யபடுகிறது. நியுட்டனின் அனைத்து விதிகளுக்கும் கண்டிப்பாக பரிசோதனை இருக்கிறது… அந்த பரிசோதனைகளின் விளைவுகள் தான் முடிவுகளை (விதிகளை) தீர்மானிக்கின்றன. அறிவியலில் விதிகளை சரிபார்க்க எவ்வளவோ பரிசோதனைகளை நாம் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் செய்து இருக்கோமே மறந்து விட்டனவா? அதே போன்று தான் அன்பை அளக்க மற்றும் அறிய மூளையில் ஏற்படும் மின் வேதியல் மாற்றங்களும், இதய துடிப்புகளில் ஏற்படும் மாற்றங்களும் , உற்பத்தி ஆகும் ஆர்மொன்களும் தான் உறுதுணை புரிகின்றன.

    மேலும் சமுக அறிவியல் ரீதியாக அன்பை அறிய தேவையான வரலாற்று உதாரணங்களை பார்கலாம். வர்க்கங்களே இருக்க கூடாது என்ற தோழர் லெனின் நம் நாட்டின் தனி சிறப்பான வர்க்கம் என்றாரே அதில் அன்பின் அளவுகோல் உங்களுக்கு தெரியவில்லையா? வாடிய பயிரை கண்டவுடன் வாடினாரே வள்ளலார் அதில் உங்களுக்கு அன்பின் வரையாரை விளங்கவில்லையா? உடனே எங்கே பரிசோதனைகள் என்று சமுக அறிவியலில் எழுப்புவீர்கள் என்றால் வ்ள்ள்ளளரும் ,லெனினும் சமுகத்தை மக்களை கண்டார்கள் அல்லவா அவர்களை பற்றி சிந்தித்தார்கள் அல்லவா அதுவென்ன அது தானே சமுகத்தின் மீதான பரிசோதனை.?

    //அன்பு செலுத்தும் பொழுது மூளையில் ஏற்பாடு மாற்றங்களை பற்றி கேட்கவில்லை. அவை வெறும் விளைவுகள் மட்டுமே. நியூட்டன் விதியை போன்ற அன்பு என்கிற உணர்வை அறிவியல் பூர்வமாக விளக்கவும். அன்பை எந்த அறிவியல் மானியை கொண்டு அளப்பார்கள் என்று கூறவும்..//

  134. ஆகா! இருவரின் வாதத்திலும் “மானே.! தேனே..!! பொன்மானே…!!!” எல்லாம் இல்லாமல் இருக்கே…..!!!

  135. கார்த்திகேயன் சார் எப்பவுமே நான் தேவை ஏற்படும் போது நீயுட்டனின் மூன்றாம் விதி படிதான் செயல்படுவேன். இப்ப அந்த விதியை பயன்படுத்த தேவை ஏற்படவில்லை என்றே நினைகின்றேன்.

  136. விடுபட்ட வார்த்தை : வர்க்கங்களே இருக்க கூடாது என்ற தோழர் லெனின் நம் நாட்டின் தனி சிறப்பான வர்க்கம் “”””குழந்தைகள்”””””என்றாரே அதில் அன்பின் அளவுகோல் உங்களுக்கு தெரியவில்லையா?

  137. அன்பு என்பது யாதெனில்… என்ற தலைப்பில் நான் கேட்டு அறிந்த…. மற்றும் இரயில் நிலையத்தில் நான் நேரில் கண்ட நிகழ்வுகளையும் அடிபடையாக கொண்டு ஒரு சிறுகதை எழுதிஇருந்தேன். வினவுக்கு இதனை இங்கே வெளியிடுவதில் உடன்பாடு எனில் வெளியிடலாம்…
    ———————————————————————–

    சிறுகதை: அன்பு என்பது யாதெனில்…

    ” என் உள் உணர்வு நண்பனை உடனே பார்க்க உந்தியது. மதிய உணவு இடைவேலையில் விடுதி அறைக்கு சென்றவன் அதிர்தேன். நண்பன் வாந்தி எடுத்து தரையில் அலங்கோலமாக கிடந்தான். அன்று மாலையே என் “போஸ்ட் மாட ” நண்பனுக்கு போஸ்ட்மாடம் நடந்தது. ”
    ————————————————————————

    “இரயில் நிலையத்தில் அவசர அவசரமாய் கொடுக்கப்பட்ட முத்தங்கள் அவை.” முத்தம் எனக்கு புதிது இல்லை என்றாலும் அவள் அவனுக்கு கொடுத்த முத்தங்கள் என்னை வியக்க வைத்தன. அப்பா உடல் நிலை சரி இல்லாத போது பார்க்க வந்த அத்தை தலையை வருடி நெத்தியில் இட்ட முத்தத்தை பத்து வயதில் கூச்சத்துடன் பெற்று கொண்டவன். சிறு வயதில் எவ்வளவோ முத்தங்களை பாட்டி,அம்மாவிடம் இருந்து பெற்று இருப்பேன். அவைகள் நினைவில் பதியாமலும் இருக்கலாம். அன்பின் வெளிப்பாடான முத்தத்தை இப்போது எல்லாம் அறிவியல் ஆராய்சிக்கு உட்படுத்துகின்றேன். எல்லாம் படிக்கும் படிப்பின் கோளாறு தான்.

    —–சை மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் நான் ,உலகத்தின் தலை சிறந்த அறிவு களஞசியமாக நினைத்துக் கொண்டேன்.ஒரு சிகரேட் பிடிக்கும் போது எவ்வளவு கலோரி இழப்பு ஏற்படுகிறது ? காதலன் ,காதலிக்கும் இடும் முத்ததின் உடல் கூறு இயல் விளைவுகள் என்ன ? என்று எல்லாம் நண்பர்களுடன் விவாதிப்பேன். எனக்கு என்றே சிறப்பான ஒரு நண்பர் கூட்டம். ஒவ்வொருவரும் எங்கள் படிப்பு தொடர்பான எதோ ஒரு துறையில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாகவே இருந்தோம்.

    என் அறை நண்பன் பிணங்களை கூறுபோடும் “போஸ்ட்மாட” கலையில் கை தேர்ந்தவன். பிண உடலை நளினமாக வெட்டி உறுப்புகளை எடுத்து திரவ குடுவையில் போட்டு விளக்கம் கொடுபதில் எங்கள் பேராசிரிகளுக்கே சவால் விடுவான். போஸ்ட்மாடம் முடித்து விடுதி அறைக்கு வருபவன்,உடல் கூறு இயல் புத்தகத்தை எடுத்துகொண்டு அன்று செய்த ஆய்வை சரிபார்த்துக் கொள்வான்.

    காலையில் எழுந்த உடன் புகைக்கும் “போஸ்ட் மாட” நண்பன் ,இரவே தீர்ந்த சிகரேட்டை நினைத்து எரிச்சல் அடைவான். நாங்கள் காலையில் அவசர கதியில் கிளம்ப வேண்டியுள்ளதால் நண்பனின் காலை தேவைக்காக இரவில் “ஸ்டாக்” வைக்க தொடங்கினேன். அறையை சுத்தம் செய்ய, புத்தகங்களை பிரதி எடுக்க என்று எல்லாவற்றுக்கும் என்னை சார்ந்து இருக்க தொடக்கினான்.

    அன்று மாலை அறைக்கு வந்தவன் பதட்டத்துடன் இருந்தான். ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. அவனே சொல்லட்டும் என இருதேன். சிரிது நேரத்தில் மவுனத்தை கலைத்தவன் அன்று இரவு அவன் தோழியை சந்திக்கப்போவதை கூறினான். இரவு நேர சந்திப்பு ;அதுவும் போஸ்ட்மாட அறையை அடுத்து இருந்த பழைய பயன்படுத்தாத அறையில்….. இரவு இரண்டு மணிக்கு சந்திப்பதாக திட்டம் … விடுதி காவலர்களை சரிகட்டி விட்டதாக கூறினான். எங்கள் கல்லூரியில் இத்தகைய சந்திப்புகள் புதிது இல்லை என்றாலும், நண்பனின் நடு இரவு விளையாட்டு எனக்கு கவலை அளித்தது.அடுத்த நாள் காலை வழக்கத்தை விட நீண்ட நேரம் தூங்கி இருந்தேன். “முத்தம் கூட கொடுக்க முடியல …… முடியல …” என்று தூக்கத்தில் நண்பன் உளறிக்கொண்டு இருந்தான். என் மனதத்துவ மூளை விழித்துக்கொண்டது .உறக்கத்தின் தொடக்கத்தில் அல்லது விழிக்கும் போது வரும் கனவுகளின் வெளிபாட்டு தான் இந்த பிதற்றல்.நான் எப்போதும் மனித மனங்களை உற்று நோக்குவதையே பழக்கமாக கொண்டவன். மேற்கொண்டு மனநோய் சார்ந்த படிப்பை படிக்க முடிவு செய்து இருந்தேன். தனி மனித ஆளுமை பற்றி பேராசிரியர் நடத்தும் பாடங்களை, நூலகம் சென்று மேலும் கற்று , ஆய்வு கட்டுரைகள் எழுதும் அளவிற்கு சென்றுவிட்டேன். மனதத்துவ இயலை அனுபவத்தின் மூலம் நன்கு அறிய முடியும் என நான் உணர்ந்து கொண்ட பின், என் சக மனிதர்களின் அசைவுகள் யாவும் காரண கரியங்களை விளக்கியது. எனக்கு இதுவே இப்போது பெரும் பிரச்சனை ஆகிவிட்டது.

    நண்பனை எழுப்பாமல் கல்லூரிக்கு சென்றவன் ,காலை நேர இடைவேலையில் மேசை மீது தலை கவிழ்ந்தேன். எனக்கு பின்னால் இருந்து மெல்லிய குரலில் இரு பெண்களின் உரையாடல் கேட்டது.

    “நேத்து என்ன ஆசிடா ?”
    “அட நீவேர … டிசம்பர் மாத குளிரில் நடுங்கிட்டான் ….போஸ்ட்மாடம் செயத்தான் முடியும் அவனால ”

    உடனே திரும்பி யார் என பார்க்க ஆசை தான். கட்டுப்படுத்திகொண்டேன். என் பொய் தூக்கத்தை அடுத்த வகுப்பிற்கான மணி ஓசை கலைத்தது. என் உள் உணர்வு நண்பனை உடனே பார்க்க உந்தியது. மதிய உணவு இடைவேலையில் விடுதி அறைக்கு சென்றவன் அதிர்தேன். நண்பன் வாந்தி எடுத்து தரையில் அலங்கோலமாக கிடந்தான். அன்று மாலையே என் “போஸ்ட் மாட ” நண்பனுக்கு போஸ்ட்மாடம் நடந்தது. தற்கொலை என்று உறுதியானது. நண்பனின் உடலை அவன் அண்ணனுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த உடன் என் அறையில் தங்க பிடிக்காமல் பேராசிரியரிடம் வாய் மொழியாக அனுமதிப்பெற்று என் ஊருக்கு புறப்பட்டேன்.
    இரவு நேர பேசஞ்சர் இரயில் பயணம் மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியது. உறங்க இடம் இருந்தும் உறங்காமல் விழித்து இருந்தேன் . இரயில் சிதம்பரத்தை அடைந்த போது மணி இரண்டு இருக்கும் . இரயில் வண்டியின் வாசல் அருகே வந்து நின்ற என்னை குளிர் தக்கியது. “டீ” கிடைக்குமா என கண்கள் அலைந்தன.கீழே இருவர் நின்று இருந்தனர். எளிய உடை ;மெலிந்த தேகம். கணவன் ,மனைவியா ? காதலன் , காதலியா ? என்று நான் ஆராயவில்லை. கீழ் இறங்கி டீ அருந்தி விட்டு திரும்பிய நான்………………………. இரயில் புறப்படும் நேரத்தில் அவள் , அவனுக்கு அவசர அவசரமாய் இட்ட முத்தங்களை கண்டேன். அவன் புறங்கையில் ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு முத்தங்களை இட்டுக்கொண்டு இருந்தாள். இரயில் நகர தொடங்கியது. அவனும், அவனுக்கு பின் நானும் ஏறிக்கொண்டோம். பாத்திரங்கள் வைக்கும் மேல் அடுக்கில் ஏறி படுத்தவன் உடனே தூங்கிப் போனான். எனக்கு ஏனோ அவள் , அவனுக்கு இட்ட முத்தங்களை இன்னும் மறக்க முடியவில்லை.

  138. நீங்கள் என் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறன்.மீண்டும் உங்களிடம் சறுக்கல், அன்பை பற்றி நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைத்தும் புறமாற்றங்களை அடிப்படையாக கொண்டவை பற்றி தான்(உடல்,ஹார்மோன், சமூகம் என்பன). நான் கேட்டது எளிமையான கேள்வி தான் “அன்பு என்றால் என்ன? இதனை அறிவியல் பூர்வமாக விளக்க முடியுமா என்று தான். அன்பு, கருணை ஆகியவற்றிற்கு scientific derivation கொடுங்கள் என்று கேட்டேன்.

    பாருங்கள், அன்பை பற்றி விளக்க கடைசியில் இலக்கியத்திடம் தான் சரணடைய வேண்டியதாக இருக்கிறது. திருவள்ளுவர் கூறும் அகத்துறுப்பு என்பது கண்ணால் காண முடியாத ஒன்று. அவர் கூறுவருவது அன்பு என்கிற உணர்வை தான் அகத்து உறுப்பு என கூறுகிறார். மற்றபடி சதையினால் ஆன உறுப்பை பற்றியல்ல. மேலும், தாங்கள் கூறிய லெனின், வள்ளலார் போன்றோர்களின் அன்புணர்வினால், இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது பற்றி தானே தவிர. அது அன்பிற்கான வரைவிலக்கணம் ஆகாது.

    மீண்டும் சொல்கிறேன் அன்பு, கருணை என்பதெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. அறிவியல் கணக்கை வைத்து அன்பை அளக்க முடியாது. அதே போன்றது தான் ஆன்மிகம் என்பதும். அறிவியல் வரையைக்குள் அதனை அடைக்க முடியாது. இரண்டுமே சர்வ வியாபக தன்மையை கொண்டவை. வள்ளலார் கூறிய அனுபவம் நமக்கு ஏற்பட வேண்டுமானால், அவர் கூறிய வழியில் ஆணவத்தை அடக்கி பின்பற்ற வேண்டும். என் கண்முன்னால் செய்து காட்டு , அறிவியல் பூர்வமாக நிரூபி என்று கேட்டுக் கொண்டிருப்பதால் ஒரு லாபமுமில்லை. அன்பினை அளக்க எந்த அறிவியல் மானியும் கிடையாது. தெளிவாக சொல்லப் போனால் அறிவியலே அறிவியல் பூர்வமற்றது.

    விஞ்ஞானத்தில் அன்பை எதை வைத்து அளக்கிறார்கள் என்று துல்லியமாக கூற முடியுமா. அன்பை விடுங்கள், அன்பை கடந்த உச்சகட்ட நிலை ஒன்று இருக்கிறது , அதற்க்கு பெயர் தான் தயவு. தோழர் லெனினிற்கு இருந்தது அன்பு, இரக்கம். உழைக்கும் மக்களின் மீதான அன்பு, அவர்களை சுரண்டுவோர் மீதான கோபம். ஆனால், தயவு என்பது எதிரியையும் நேசிக்க வைப்பது. எதிரி என்பவனிடம் இருக்கும் தீய குணத்தையும் போக்கி அவனை நல்வழி படுத்துவது. அந்த உயர்ந்த நிலையினை அடைய அறிவியலால் முடியாது. ஆன்ம உருக்கத்தினால் மட்டுமே கூடும். அதனை புரிந்து கொள்ள நீங்கள் கூறிய வள்ளல் பெருமானாரின் பாடலுக்கு வருவோம்.

    வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்
    பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்.
    நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
    ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

    பயிர் வாடியதை கண்டு ஒருவரின் மனம் வாடுகிறது என்றால், அதற்க்கு பெயர் தான் தயவு என்பது.பயிர் என்கிற உயிர் தண்ணீர் இல்லாமல் வாடி இறந்து போவதை கண்டு அதனால் வரும் துக்கம் இது. இந்த தனி பெருங்கருணைக்கு என்ன அறிவியல் விளக்கம் கொடுக்க முடியும். அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமானால் அறிவியல் உதவலாம், ஆனால் அன்பிற்கும் கருணைக்கும்????!!!!. அபிராமி அந்தாதியில் ஒரு பாடலின் வரி இப்படி வரும்,

    “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
    விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்”

    இதனை போன்றே தான் அன்பு, கருணை தயவு போன்றவை எல்லாம் அவை மொழிக்கும், நினைவிருக்கும் எட்டாதவை. மொழியும் நினைவும், விழியும், வினையும் உலகத்தின் பருண்மையான ஆராய்ச்சிக்கு தான் தேவை. இதனை பட்டி நான் நிறைய பேசுவதால் ஒன்றும் பயனில்லை, நீங்கள் தான் இதனை சுயமாக ஆய்ந்து உணர வேண்டும். இது புரிந்துக் கொள்வது கிடையாது, உணர்ந்து கொள்ள வேண்டியது. இதனை தர்க்கம் செய்வதால் யாருக்கும் பயனில்லை. இதனை ஏற்பதலோ அல்லது கருத்து முதல்வாதம் என்று கூறி நிராகரித்து விட்டு போவதாலோ, எது உண்மையோ அதற்க்கு எந்த இழப்புமில்லை. நன்றி

  139. @Rebecca
    //Pls provide scientific definition or values for love and affection.
    //

    I read the answers written by an imbecile and had a good laugh. You have to learn to ignore some personalities .my 2 cents !

  140. அன்பின் மீதான அறிவுபூர்வமான ,அறிவியல் ரீதியான எந்த விளக்கத்தையும் உங்களால் ஏற்க்க இயலாது என்ற அனுமானத்தின் (inference) அடிபடையில் தான் என்னுடைய முந்தைய பின்னுடங்க்களை எழுதினேன். எதனை நீங்கள் விதிகளாக நீயுட்டன் விதிகள் போன்று வரையறை செய்ய வேண்டுமானாலும் முதலில் அதற்கு உரிய பரிசோதனைகளும் , பரிசோதனையின் முடிவுகளும் தான் அடிப்படை என்ற விசயத்தை கண்டும் காணாது எளிதில் கடந்து செல்லுவீர்கள் என்றால் உங்களால் இவ்வுலகில் நாம் துய்க்கும் அறிவியல் வளர்சியின் தொழில்நுட்ப பயன்பாடுகளான எந்தசாதனங்களையும் நீங்க பயன்படுத்தவே கூடாது அல்லவா?அன்பின் மீதான வரையறையை எழுதுவது எல்லாம் பெரியவிசயமே இல்ல…மார்க்ஸ் அவர்களின் கம்யுனிச சித்தாந்த உழைப்பையும் வள்ளலாரையும் அவரின் கருணைசார்ந்த செயல்பாடுகளையும் , லெனினின் தனி சிறப்பு வர்கமான குழந்தைகள் என்ற கோட்பாட்டையும் ஆன்மிகத்தின் உள் நுழைப்பீர்கள் என்றால் அதே ஆன்மிகம் மக்களை பற்றி யோசிக்க வைக்கின்றதா, இல்லை காணா பொருளான கடவுளை பற்றி அது சிந்திக்க வைக்கின்றதா என்றும் எண்ணிப்பார்க்கவேண்டும்..இலகியதுக்குள் எல்லாம் சென்று அன்பை விவாதிக்ககூடாது என்றால் எம் தமிழர்கள் குறிப்பாக திருவள்ளுவர் அறிவு பூர்வமாக சிந்தித்து எழுதி உள்ள கருத்துகளை நான் எப்படி புறகணிக்க முடியும்.

    ஆம் திருவள்ளுவர் கூறும் அகத்துறுப்பு என்பது கண்ணால் காண முடியாத ஒன்று. அவர் சரியாக தான் சொல்லியுள்ளார். அன்பு என்ற உணர்வு வெளிபடும் இடம் மனிதனின் அகத்துறுப்பாகிய மூளை என்று கொண்டால் அவர் கூறும் கூற்று மிக சரியே!உடம்பின் அகத்து உறுப்பாகிய மூளையின் வெளிப்பாடான அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

    அன்பை பற்றி இவ்வளவு ஆராய கூட நமக்கு மூளை என்ற அகத்து உறுப்பு தான் தேவைபடுகின்றது என்ற நிலையில் அந்த மூளையின் பல்வேறு உணர்வுகளின் ஒரு வெளிப்பாடு தான் அன்பு என்று எளிமை படுத்தி புரிந்துகொள்ள உங்களுக்கு தடையாக இருக்கும் கருத்துக்கள் எதுவோ?

    ஏன் விளக்க முடியாது அன்பை! அது தான் மிக தெளிவாக கூறியுள்ளேனே! அன்பு என்ற உணர்வு நம் இதயத்தில், மூளையில் , ஆர்மொன்களில் ஏற்படுத்தும் மாற்றங்களை! அந்த மாற்றங்களை வைத்து நீங்களே அன்பை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள உங்களுக்கு தடையாக இருக்கும் உங்களின் ஆன்மிக கருத்தாக்த்தை உடைத்து எறிந்தால் அன்பை எளிதில் புரிந்து கொண்டு நீங்களே எளிய வரையறை கொடுக்கலாம்.மீண்டும் சொல்கின்றேன்… எந்த அறிவியல் வரையறையும் பரிசோதனையையும் அதன் முடிவுகளின் அடிபடையில் தான் எழுதபடுகின்றன. அன்பை பற்றி அறிய நாம் முழுமையாக ஒரு அறிவியல் ஆய்வாளன் அளவுக்கு அறிய கண்டிப்பாக மூளையின் செயல்பாடுகளையும் , இதயத்தின் செயல்பபாடுகளையும் மருத்துவ ரீதியில் தான் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
    //அன்பு என்றால் என்ன? இதனை அறிவியல் பூர்வமாக விளக்க முடியுமா என்று தான்.//

    தமிழர்களின் இலக்கியங்கள் குறிப்பாக திருக்குறள் அறிவுக்கு புறம்பானது என்று சொல்ல வருகின்றீர்களா? கண்டிப்பாக கிடையாது. அவர் வாழ்ந்த வரலாற்று காலகட்டத்தின் அடிப்டையான அறிவியல் கருத்துகள் அவைகள். ஏன் நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூட அறிவியல் பூர்வமானது தானே! வட மொழி இதிகாசங்கள் அவற்றின் தமிழ் மொழி பெயர்ப்புகள் ,புராணங்களில் உள்ள குப்பைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு அறிவு பூர்வமான தமிழ் இலக்கியங்கள் ஊடாக ஆராயுங்கள்.
    //பாருங்கள், அன்பை பற்றி விளக்க கடைசியில் இலக்கியத்திடம் தான் சரணடைய வேண்டியதாக இருக்கிறது.//

    நீங்க எத்தனை முறை சொன்னாலும் அன்பு கருணை மற்றும் பிற உணர்வுகள் அனைத்துமே நாம் காணும் காட்சிகள்…. ,சுருக்க சொன்னால் ஐம்புலன்கள் ஊடாக நாம் பெரும் உள்ளீட்டின்(input) காரணமாக , அந்த உள்ளீடுகள் நமது மனித மூலையில் நிகழ்த்தும் மின்வேதிவினையின் காரணமாகவும் மேலும் நாம் கொண்டு உள்ள பழைய நினைவுகளின் feedback காரணமாகவும் தான் பல்வேறு உணர்வுகளாக(அன்பு ,கோபம், குரோதம், கயமை…… etc ) வெளிப்படுகின்றன. நீங்கள் இல்லை என்று மறுக்க இயலாத அளவுக்கு என்னால் ஒரு உதாரணத்தை கொடுக்க முடியும்.

    நான் ஆண்டாள் மீது அளவற்ற அன்பும் ,மரியாதையும் கொண்டவன் என்று வைத்துக்கொள்வோம். தினமும் ஆண்டாளின் பாடல்களை பாடிவிட்டு தான் மற்ற வேலைகளை செய்பவன் என்றும் வைத்துகொள்வோம். ஒரு நாள் நான் ஒரு விபத்தில் கண் மற்றும் காத்து ஆகிய புலன்களின் செயல்பாட்டை இழகின்றேன் என்றும் , பழைய நினைவுகளை முழுமையாக இழந்துவிட்டேன் என்றும் வைத்துகொள்வோம். இப்ப என்னால் ஆண்டாளை பற்றி சிந்திக்கமுடியுமா? ஆண்டால் பாடல்களை கேட்கவும் இயலாத நிலையின் ஆண்டாளை பற்றிய எனது உணர்வுகள் என்னவாக இருக்க முடியும்? ஒன்றும் இல்லை தானே? ஐம் புலன்களும் , மூளையும் உணர்வுகளை கட்டமைக்கும் சாதனம் என்றாவது இப்போதாவது புரிந்து கொள்ள முடிகின்றதா?
    //மீண்டும் சொல்கிறேன் அன்பு, கருணை என்பதெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது.//

    நீங்கள் ஆண்டாளின் மீது பற்றுடனும் , அன்புடனும் இருக்கும் போது ஏற்படும் மூளை மற்றும் இதய துடிப்புகளை அளக்க தான் EEG மற்றும் ECG சாதனங்கள் இருக்கின்றனவே…இன்றைய நவீன மருத்துவ துறையில் CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் இவைகள் எல்லாம் உங்கள்மூளையின் செயல்பாடுகளை வெளிக்காட்டாது என்றா சொல்ல வருகின்றீகள்? வள்ளலார் கூறும் ஆன்மிக அனுபவத்தை பற்றி பேச உங்களுக்கு அறிவியல் எதற்கு?

    //விஞ்ஞானத்தில் அன்பை எதை வைத்து அளக்கிறார்கள் என்று துல்லியமாக கூற முடியுமா. //

    ஆதி மனிதனில் இருந்து இன்றைய மனிதன் வரைக்கும் இயற்கையை ஆராய குறிப்பா மழை பேயுமா பேயாதா, புயல்வருமா வராதா என்று உணர அவர்கள் வாழும் காலகட்டத்தில் அவனுக்கு தெரிந்த அறிவியலை பயன்படுத்திக்கிட்டு தான் இருக்கான். நீங்க சொல்வது படி அறிவியலே அறிவியல் பூர்வமற்றது என்றால் உங்களின் மேல் உள்ள கருத்துகளை வினவில் கொண்டுவந்து சேர்த்து யார் ? அறிவியல் இன்றி வேறு என்ன?

    ///தெளிவாக சொல்லப் போனால் அறிவியலே அறிவியல் பூர்வமற்றது.//

    அந்தாதி பற்றி தனி பின்னுட்டத்தில் பேசறேன்…

  141. இராமன் உங்களை போன்ற மூளையற்ற , மதியற்ற ஐந்தறிவுகள் எல்லாம் மற்றவர்களை பற்றி பேசுவது தகுமா? ஜால்ரா சத்தம் உரக்க கேட்கின்றது ராமன். //I read the answers written by an imbecile and had a good laugh. You have to learn to ignore some personalities .my 2 cents !//

  142. தலை கீழாக பேசிகிட்டு இருக்கீங்க ரெபெக்கா… ஆன்மிகத்தில் கூறப்படும் விசயங்களை எல்லாம் அறிவியலுடன் இணைத்து பேசி என்னிடமே ஆன்மிக மாயைகளுக்கு ,மாயாவாத கருத்தாங்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கேட்பது சரியா என்று நீங்க எண்ணிப்பார்க்க வேண்டும்…அபிராமிப்பட்டரால் இயற்றபட்ட இந்த பாடல்கள் மாயாவாத தன்மை கொண்டவை என்று அறிய உங்களுக்கு பெரிய அளவில் அறிவெல்லாம் தேவையே இல்லையே! சடகோபரின் அரிசமயதீபம் பாடல்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்த உங்க மூளையின் செயல் திறன் இங்கே அபிராமி அந்தாதி பாடலகளில் உள்ள கற்பனைகளை கண்டறிய முடியாமல் நிற்க காரணம் என்ன என்று உங்களையே நீங்கள் சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள் ….

    இநத்தகைய சிந்தனைகளே மனிதனின் மூலையில் இருந்து தான் பிறக்கின்றன என்ற எளிய உண்மையை உணர உங்களுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் எதுவோ?

    உங்கள் மூளையின் செயல்பாட்டின் ஊடாக பிறக்கு கீழ் உள்ள கருத்துகள் உங்கள் மூளையின் செயல் ஆற்றலை புறகணித்து கொண்டு பேசுகின்றது என்றால் அதற்கான காரணம் எது வென்று வேண்டுமானால் என்னால் விளக்க முடியும். உங்கள் மூளையில் கண் மற்றும் காது ஆகிய புலன்களை ஊடாக சிறுவயதில்இருந்து உங்களுக்குள் செலுத்தப்பட்ட தவறான கருத்து முதல் வாத கருத்தாக்கங்கள் தான் அன்றி வேறு என்ன?

    ///இதனை போன்றே தான் அன்பு, கருணை தயவு போன்றவை எல்லாம் அவை மொழிக்கும், நினைவிருக்கும் எட்டாதவை. மொழியும் நினைவும், விழியும், வினையும் உலகத்தின் பருண்மையான ஆராய்ச்சிக்கு தான் தேவை. இதனை பட்டி நான் நிறைய பேசுவதால் ஒன்றும் பயனில்லை, நீங்கள் தான் இதனை சுயமாக ஆய்ந்து உணர வேண்டும். இது புரிந்துக் கொள்வது கிடையாது, உணர்ந்து கொள்ள வேண்டியது. இதனை தர்க்கம் செய்வதால் யாருக்கும் பயனில்லை. இதனை ஏற்பதலோ அல்லது கருத்து முதல்வாதம் என்று கூறி நிராகரித்து விட்டு போவதாலோ, எது உண்மையோ அதற்க்கு எந்த இழப்புமில்லை. நன்றி ///

  143. அன்பை அளக்க முடியுமா முடியாதா என்ற கேள்விக்கு பதில் :

    A polygraph, popularly referred to as a lie detector, measures and records several physiological indices such as blood pressure, pulse, respiration, and skin conductivity while a person is asked and answers a series of questions.

    இல்ல இல்ல polygraph பொய் மட்டும் தான் கண்டுபிடிக்கும் என்று சொல்வீர்கள் என்றால் உங்களை Polygraph,Cognitive polygraph,ERP,EEG,Eye-tracking,Voice stress analysis,Functional magnetic resonance imaging,Functional near-infrared spectroscopy ஆகிய தொழில் நுட்பங்கள் மூலமாக ஆராய்ந்து ஆண்டாள் மீதான உங்க உணர்வுகள் உண்மையா அல்லது பொய்யா என்று கூற தயாராக உள்ளேன். உங்க உணர்வுகள் பொய் எனில் உங்களின் அன்பும் பொய் ஆகிறது அல்லவா?

  144. அன்பை அளக்க அன்புடையோரின் இரத்த்தத்தில் உள்ள oxytocin என்ற ஆர்மோன் அளவை அவர் அன்புறும் போது ரத்தத மாதிரிகள் எடுத்து அளக்கலாம்.

  145. நண்பர் குமாரைத் தரக்குறைவாக விமர்சிக்கும் பார்ப்பனத் திமிர் பொங்கி வழியும் ராமனை ரெபெக்கா கண்டனம் செய்ய வேண்டும்

  146. நீங்க கூறும் இரு வார்த்தைகளான அன்பு மற்றும் தயவு ஆகிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் sympathy and empathy என்று பொருள் கொள்ள முடியும் என்ற நிலையில் இவைகள் இரண்டுமே love என்ற உணர்வின் வேறு வேறு நிலைகள் தான்.empathy என்ற சொல்லை ஆங்கிலதத்தில் கீழ் உள்ளாவாறு பொருள் கொள்ளலாம். It is an ability to imagine oneself in the situation of another, thereby vicariously experiencing the emotions, ideas, or opinions of that person. பயிர் வாடியதை கண்டு ஒருவரின் மனம் வாடுகிறது என்றால் அதனை empathy க்கு உதாரணமாக்க கொள்ள்ள்லாம்ம்.

    scientific Studies find that Oxytocin Increases Empathy and Emotional Connection

  147. ராமன், மணிகண்டன் மற்றும் ரெபெக்கா உட்பட இங்கே வந்து பேசும் ஆத்திகவாதிகள் அவர்களுள் சில இந்துத்துவாக்கள் இரு சாதாரண கேள்விகளான……

    ரங்கனுடன் ,ஆண்டாள் ஐக்கியம் ஆதல் எப்படி ?

    மற்றும்

    ஹிந்து மத பெரியோர்கள் ஜோதியில் கலத்தலுக்கு விளக்கம் என்ன?

    ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு மாதங்களாக ஏமாற்றிகொண்டு இருபது சரியா? எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் , எங்களிடம் நீங்க கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாது என்ற மனபான்மையுடன் வினவில் ஆத்திகர்கள் எல்லாம் இங்கே விவத்தத்தை தொடர்வது சரியா? இல்லை ஆத்திகர்கள் தான் கேள்வி கேட்கணும் நாத்திகர்கள் தான் பதில் சொல்லனும் என்று ஏதேனும் விதி இருக்கா என்ன?

  148. இப்போதும் உங்களிடம் இருந்து நேரடியான பதில் இல்லை, அதே அரைத்த மாவு தான். நான் கேட்டது அன்பு என்றால் என்ன என்பதற்கான Scientific definitionதான். உங்களுக்கு கேள்வி புரியவில்லை என்று நினைக்கிறன். pls quote accurate scientific definition for anbu?

    நீங்கள் சொல்கிற “Polygraph,Cognitive polygraph,ERP,EEG,Eye-tracking,Voice stress analysis,Functional magnetic resonance imaging,Functional near-infrared spectroscopy” ஆகிய தொழில் நுட்பங்கள் மூலமாக, மனித உடல் மொழியின் அசைவுகளை கொண்டு சில உண்மைகளை கண்டு பிடிக்கலாமே ஒழிய, அன்பை அல்ல. உண்மையா பொய்யா என்கிற factஐ கண்டுபிடிக்கலாம் ஒழிய, அன்பு தயவு முதலான உயர் குணங்களின் அளவினை அல்ல.

    //அன்பை அளக்க அன்புடையோரின் இரத்த்தத்தில் உள்ள oxytocin என்ற ஆர்மோன் அளவை அவர் அன்புறும் போது ரத்தத மாதிரிகள் எடுத்து அளக்கலாம்.//

    அப்படியா.. அப்படி யாராவது ஆய்வு செய்து இருந்தால், அந்த அறிக்கையை இங்கே வெளியிடவும்.

    அப்புறம் உங்களின் sympathy empathy போன்றவைகளுக்கான விளக்கம் சகிக்கவில்லை. தயவு என்னும் சொல்லுக்கு நேரடியான ஆங்கில அர்த்தம் கொண்ட வார்த்தை benevolent என்பது மட்டும் தான். sympathy என்றால் அனுதாபம் என்று அர்த்தம். empathy என்றால் பச்சாதாபம் என்று பொருள். வள்ளலாருக்கோ, லெனினுக்கோ இருந்தது பெயர் அனுதாபம் கிடையாது. அப்படி கூறி அவர்கள் சமூகத்தின் மீது கொண்ட பேரன்பை கொச்சை படுத்த வேண்டாம்.

    //இநத்தகைய சிந்தனைகளே மனிதனின் மூலையில் இருந்து தான் பிறக்கின்றன என்ற எளிய உண்மையை உணர உங்களுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் எதுவோ?//

    சிந்தனைகள் பிறப்பது மனித மூளையில் இருந்துதான், ஆனால் ஆன்மிகம் என்பது இந்த பெளதீக மூளையினை கடந்த ஒன்று. இப்பவும் சொல்கிறேன், இதனை பற்றி விரிவாக உணர்ந்து கொள்ள நீங்கள் தான் முயற்சிக்க முடியுமே தவிர, என்னிடம் விவாதிப்பதால் ஒன்றும் ஆக போவதில்லை.

    உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய ஒரு விஷயம், திருக்குறளை அறிவியல் ரீதியான நூல் என்று ஏற்றுக் கொண்டமைக்கு, அதில் உள்ள 1330 குறள்களும் விஞ்ஞான பூர்வமானவை என ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. திருக்குறளை ஏற்காத பெரியார், பெரியாரிஸ்டுகளுக்கு சரியான மரண அடி கொடுத்துளீர்கள்.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    மு.வரதராசனார் உரை:
    கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

    //நான் ஆண்டாள் மீது அளவற்ற அன்பும் ,மரியாதையும் கொண்டவன் என்று வைத்துக்கொள்வோம். தினமும் ஆண்டாளின் பாடல்களை பாடிவிட்டு தான் மற்ற வேலைகளை செய்பவன் என்றும் வைத்துகொள்வோம்……//

    நான் கேட்பது அன்பை பற்றி ஆனால், நீங்கள் பேசுவதோ குருட்டு தனமான பக்தியை பற்றி. இரண்டிற்கும் வித்யாசங்கள் உண்டு. உண்மையை கூற வேண்டுமானால், மூளை என்னும் பருப்பொருளை கடந்தது அன்பு என்பது. உண்மையை கூற வேண்டுமானால், புத்தர் கூறியதை போன்று இந்த பிரபஞ்சமே அன்பினாலும், கருணையினாலும் நிறைந்துள்ளது என்பதை போன்று. மூளை பேதலித்து விட்ட மன நோயாளிகள் கூட, அன்பை கருணையை உணர கூடியவர்களே.

    அறிவியலை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்க்கு மட்டும் தான் அது தேவை. வினவில் கமண்ட் போட பயப்படுகிறது என்பதற்காக, அறிவியல் அனைத்திற்கும் மேலான உயர்ந்த ஒன்றாகி விடாது.

    சரி இப்போது கேள்விக்கு மீண்டும் வருகிறேன், அன்பு என்றால் என்ன? அறிவியல் பூர்வமான விளக்கம் தரவும். pls quote accurate scientific definition for anbu?

  149. //I read the answers written by an imbecile and had a good laugh. You have to learn to ignore some personalities .my 2 cents !//

    Exactly, may be, this might be my last comment. i’ve said all what i can. above all, i got nothing to say for ramblings.

  150. //ரங்கனுடன் ,ஆண்டாள் ஐக்கியம் ஆதல் எப்படி ?

    மற்றும்

    ஹிந்து மத பெரியோர்கள் ஜோதியில் கலத்தலுக்கு விளக்கம் என்ன?

    ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு மாதங்களாக ஏமாற்றிகொண்டு இருபது சரியா?//

    இதற்கான பதிலை எப்போதோ கொடுத்தது விட்டோம். கமண்ட் எண்: 189 ஐ பார்க்கவும். அது சரி, உங்கள் அறிவுக்கு ஏறவில்லை என்றால், நாங்கள்ள ஏமாற்றுவதாக அர்த்தமா. இன்னும் நன்கு விளங்கி கொள்ள வள்ளலாரின் நூலினையும், திருமந்திரத்தையும் ஆய்ந்து படிக்கவும்.

  151. சகோதரி ரெபேக்கா மேரி, எனக்கு தெரிந்து வெகு நாட்களாக இந்த thread ஓடி கொண்டு இருக்கிறது. உங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ எனக்கு தெரியாது.

    ஆனால் நீங்கள் திருக்குறளை பற்றி சொன்ன கருத்தை அவர்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்

    // திருக்குறளை ஏற்காத பெரியார், பெரியாரிஸ்டுகளுக்கு // இது உண்மை தான்

    நன்றி

  152. வள்ளலாரின் நூலினையும், திருமந்திரத்தையும் ஆய்ந்து படிப்பது தான் நான் கேட்ட கேள்விகளுக்கு அதாங்க ரங்கனுடன் ,ஆண்டாள் ஐக்கியம் ஆதல் எப்படி ? மற்றும் ஹிந்து மத பெரியோர்கள் ஜோதியில் கலத்தலுக்கு விளக்கம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு பதில் என்றால் அது தான் அறிவியல் ரீதியான விளக்கம் என்றால் ரெபெக்கா மேரி அவர்கள் இந்த விவாதத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதனை தவிர வேறு வழி இல்லை.! பதில் இன்றி நிற்பவருக்கு ரெபெக்காவுக்கு இன்று போய் நாளை வாங்க என்பது மட்டுமே எனது மட்டுமே எனது சரியான பதிலாக இருக்க முடியும்.

    வேறு என்ன செய்ய என் போன்ற அறிவியல் சார்ந்த மனிதர்களுக்கு வள்ளலாரின் ஆன்மிகமும் , திருமந்திரமும் அறிவியல் பூர்வமாக இல்லையே! நான் என்ன செய்ய. ஒன்று நீங்களாவது மேல் உள்ள என் கேள்விகளை அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்க வேண்டும்.. அல்லது நானாவது அவற்றை அறிவியலுடன் ஒருங்கிணைத்து ஆம் வள்ளலாரின் ஆன்மிகமும் , திருமந்திரமும் அறிவியல் பூர்வமாக சரியானவை தான் என்று பரிசோதனை அடிபடையில் கண்டு இருக்க வேண்டும். என்னால் அவ்வாறு செய்ய இயலாததால் ஓ இங்கே ரெபெக்காவின் க்ருத்தாக்தின் அடிபடையில் அறிவியல் அல்லலவா தோற்றது…! ஆன்மிகம் வென்றது தானே?

    சடகோபரையும் அவரின் அரிசமய தீபம் நூலையும் அறிவு பூர்வமாக தவறு என்று அறிவித்தவர் வள்ளலாரின் ஆன்மிகத்துக்கும் ,திருமந்திரத்துக்கும் அறிவு பூர்வமாக விளக்கம் கொடுத்தால் அப்போது நான் தோற்றதாக தான் அர்த்தம். ஆனாலும் இன்னும் எத்துனை நாட்கள் ஆகுமோ அப்படி அறிவுபடி என் கேள்விகளுக்கு ரெபெக்கா பதில் அளிக்க…?

  153. சொன்ன கருத்துகளை மீண்டும் நான் சொல்லியிருந்தாலும் (அரைத்த மாவையே நான் அரைத்து இருந்தாலும்) அதனை கொண்டு இட்லி சுடும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இல்லையே. அந்த அரைத்த மாவுக்கு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்க உங்க அறிவில் இடம் இல்லையே.
    மீண்டும் அதே கேள்விகள் தான் உங்கள் முன்.

    1. பரிசோதனை மற்றும் அதன் முடிவுகள் தான் விதிகளை குறிப்பாக நீங்க சொன்ன நீயுட்டன் விதிகளை தீர்மானித்து உள்ளன என்ற நிலையில் ஐகியமாதல், சோதியில் கலத்தல் ஆகிய நிகழ்வுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும் உங்களால்?

    2.அன்பினை அளக்க oxytocin என்ற ஆர்மோன் மருத்துவ துறையில் பயன்படுகிறது.., ரத்தத்தில் உள்ள இந்த ஆர்மோன் அளவை கொண்டு நாம் முடிவு செய்யலாம் என்ற அறிவியல் கண்டுபிடிப்பை நீங்க காணாமல் போவதன் மர்மம் என்ன? oxytocin என்ற ஆர்மோன் பற்றி அறிவியல் ரீதியான இந்த கண்டுபிடிப்புகளை தேடிப்படிங்க நீங்க இல்லை என்று வாதிடும் நிலையில் ஆதாரங்களை கொடுக்க தயாராக தான் இருக்கேன். இந்த ஆர்மோன் பற்றிய உங்கள் கருத்து என்ன?

    3.Polygraph மற்றும் அதனை சார்ந்த பிற தொழ்லில் நுட்பங்கள் மனித உணர்வுகளை வெளியிடாது(அன்பு என்ற உணர்வையும் சேர்த்து) என்ற முடிவுக்கு வந்தது ஏன் ? ஒவ்வொரு தொழில் நுட்ட்பத்தை பற்றிய அடிபடை புரிதல் உங்ககளுக்கு அறவே இல்லை என்று எடுத்துகொள்லாமா ?

    4.அறிவியலே அறிவியல் பூர்வமற்றது என்பதற்கு இன்னும் நீங்க விளக்கம் கொடுக்கவே இல்லை.. உங்க கருத்துகள் வினவில் பதிவானதன் அறிவியல் பின்னனியாவது உங்களுக்கு தெரியுமா?

    உங்கள் ramblings தனமான மொக்கை கருத்துகளுக்கு எதிரான எனது கேள்விகள் தொடரும்….

  154. Ramblings Rebecca Mary (RRM) அவர்களுக்கு…. பெரியாரை பற்றிய உங்களின் பொய் கலந்த குரோத மனப்பான்மையை வினவில் அம்பலபடுத்த போறேன். பெரியார் திருக்குறளை பற்றி என்ன கூறியிருகின்றார் என்று பார்கலாமா?

    15.01.1949 அன்று திருவள்ளுவர் – குறள் மாநாடு கூட்டப்பட்டது.

    பெரியார் வேண்டுகோள்!

    திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமை யையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.

    திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு‡ தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

    குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.

    ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

    நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.

    எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ஈ.வெ.ரா (விடுதலை 10.01.1949)

    //திருக்குறளை ஏற்காத பெரியார், பெரியாரிஸ்டுகளுக்கு சரியான மரண அடி கொடுத்துளீர்கள். //

  155. Ramblings Rebecca Mary (RRM) க்கு என் கேள்விகள் தொடர்கின்றன….

    5.Empathy என்பதன் பொருள் ஆங்கிலத்தில் It is an ability to imagine oneself in the situation of another, thereby vicariously experiencing the emotions, ideas, or opinions of that person. என்று கூறியிருந்தேன். மேலும் வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் உணர்வு Empathy என்றும் கூறியிருந்தேன். Empathy மற்றும் வல்லாலரின் உணர்வும் சரியாக பொருந்துகின்றது. மேலும் நான் வள்ளலாரின் உணர்வை அனுதாபம் என்று கூறியதாக பேசுகிண்றீக்ள ? எங்கே பேசினேன்…?

    // sympathy என்றால் அனுதாபம் என்று அர்த்தம். empathy என்றால் பச்சாதாபம் என்று பொருள். வள்ளலாருக்கோ, லெனினுக்கோ இருந்தது பெயர் அனுதாபம் கிடையாது. அப்படி கூறி அவர்கள் சமூகத்தின் மீது கொண்ட பேரன்பை கொச்சை படுத்த வேண்டாம். //

    6. அறிவுகெட்ட முண்டம் மாதிரி பேசகூடாது ரெபெக்கா! ஆன்மிகம் என்பது எப்படி பெளதீக மூளையினை கடந்த ஒன்றாக இருக்க முடியும் என்று விளக்குங்க பார்கலாம். பெளதீக மூளையினை கடந்து ஆன்மிகம் இருக்க முடியாது என்பதற்கு உதாரணத்தையும் கொடுத்துவிட்டேன் நான். மீண்டும் கொடுக்கின்றேன்…
    உதாரணம் :நான் ஆண்டாள் மீது அளவற்ற அன்பும் ,மரியாதையும் கொண்டவன் என்று வைத்துக்கொள்வோம். தினமும் ஆண்டாளின் பாடல்களை பாடிவிட்டு தான் மற்ற வேலைகளை செய்பவன் என்றும் வைத்துகொள்வோம். ஒரு நாள் நான் ஒரு விபத்தில் கண் மற்றும் காத்து ஆகிய புலன்களின் செயல்பாட்டை இழகின்றேன் என்றும் , பழைய நினைவுகளை முழுமையாக இழந்துவிட்டேன் என்றும் வைத்துகொள்வோம். இப்ப என்னால் ஆண்டாளை பற்றி சிந்திக்கமுடியுமா? ஆண்டால் பாடல்களை கேட்கவும் இயலாத நிலையின் ஆண்டாளை பற்றிய எனது உணர்வுகள் என்னவாக இருக்க முடியும்? ஒன்றும் இல்லை தானே? ஐம் புலன்களும் , மூளையும் உணர்வுகளை கட்டமைக்கும் சாதனம் என்றாவது இப்போதாவது புரிந்து கொள்ள முடிகின்றதா?

    //சிந்தனைகள் பிறப்பது மனித மூளையில் இருந்துதான், ஆனால் ஆன்மிகம் என்பது இந்த பெளதீக மூளையினை கடந்த ஒன்று. இப்பவும் சொல்கிறேன், இதனை பற்றி விரிவாக உணர்ந்து கொள்ள நீங்கள் தான் முயற்சிக்க முடியுமே தவிர, என்னிடம் விவாதிப்பதால் ஒன்றும் ஆக போவதில்லை.//

    7. களவாணி தனமாக , கயமையுடன் பேசும் விசயத்தில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது RRM-Ramblings Rebecca Mary.திருக்குறளின் மீதான பெரியாரின் வாக்குமூலத்தை தனி பின்னுட்டமாக கொடுத்து இருக்கேன். அறிவு சிறிதாவது உங்களுக்கு இருந்தால் படித்து தெளியவும்.

    //உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய ஒரு விஷயம், திருக்குறளை அறிவியல் ரீதியான நூல் என்று ஏற்றுக் கொண்டமைக்கு, அதில் உள்ள 1330 குறள்களும் விஞ்ஞான பூர்வமானவை என ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. திருக்குறளை ஏற்காத பெரியார், பெரியாரிஸ்டுகளுக்கு சரியான மரண அடி கொடுத்துளீர்கள். //

  156. மாற்றி மாற்றி பேசுவதில் ராமசாமிக்கு நிகர் அவர் தான். திருவள்ளுவரை அவர் சொன்னது பின் வருமாறு

    திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் “”பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல்”” நீதி கூறும் முறையில் தனது “”மத உணர்ச்சியோடு”” ஏதோ கூறிச் சென்றார்.

    20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது: ‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்.

    இது தான் ராமசாமி திருவள்ளுவரை பற்றி சொன்னது. ராமசாமி திருவள்ளுவரை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்

    திருவள்ளுவர் ‘ஆரியரா’ (அல்லது) ‘திராவிடறா’ (அல்லது) ‘தமிழரா’ என்பதை யாரேனும் விளக்க வேண்டும். திருவள்ளுவர் ‘ஆரியராக’ இருந்தால் ‘திருக்குறளை’ எப்படி உலக பொது மறையாக ஏற்று கொள்ள முடியும் ?

    நன்றி

  157. ஆம், மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர் பெரியார். திருக்குறளை பற்றி 1949 இல் நடைபெற்றன குறள் மாநாட்டில் புகழ்ந்து பேசிய உங்கள் பெரியார் தான், அடுத்த ஆண்டே திருக்குறளை பற்றி தரைகுறைவாகவும் பொரிந்து தள்ளி இருக்கிறார். அதனையும் தருகிறேன்..

    வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார்

    திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார். ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய எதிர்ப்பு’ என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய ஆதரவு’ என்பார். தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை.

    இன்னும் எவ்வளவோ இருக்கிறது கூறுவதற்கு,ஆனால் ஏன் நோக்கம் இப்போது அது கிடையாது.

    விசயத்திற்கு வருகிறேன்அன்பு என்கிற உணர்விற்கு அறிவியல் பூர்வமான ஒரு கேட்டேன் இன்னும் பதிலில்லை., நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருந்து சம்பந்தா சம்மந்தம் இல்லாத பதில்கள் தான் வருகின்றனவே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை. எப்போது திருமந்திரத்தினை தொட்டு கூட பார்க்காமல், அறிவுக்கு புறம்பானது என்று கூறினீர்களாளோ, இதற்க்கு மேல் நான் உங்களிடம் விவாதிக்க ஏதுமில்லை. பவுத்தர்கள் கூட அந்த நூலினை குறை கூற மாட்டார்கள். களவாணி தனம், கயமை என்று பேச்சில் கூட பண்பில்லை. அறிவு விளக்கம் இல்லாதவன் தான் பிறரை தனி மனித தாக்குதல் செய்து சீண்டி பார்ப்பான். நன்றி.. வருகிறேன்.

  158. Ramblings Rebecca Mary (RRM) ,கிறுக்கு தனத்தின் எல்லை எது என்று கேட்டால் அது ரெபெக்கா என்ற அறிவிலி செல்லும் பாதையின் இறுதி என்று தெளிவாக சொல்லலாம் போல… என்ன கொடுமை இது ! திருவள்ளுவர் எழுதிய அத்துனை குரளையும் நீங்களோ அல்லது நானோ முழுமையாக படித்தது கிடையாது .அப்படி ஒருவேளை நீங்க படித்து இருந்தாலும் அதில் உள்ள அத்துனை குரலுக்கும் உங்களுக்கு பொருள் தெரியுமா என்பது சந்தேகம் தான். அதில் உள்ள 1330 குறள்களும் விஞ்ஞான பூர்வமானவை என்று எப்ப நான் கூறினேன். திருக்குறள் அறிவு பூர்வமானது என்று சொல்கின்றேனே தவிர அதில் உள்ள 1330 குறள்களும் விஞ்ஞான பூர்வமானவை என்று எப்ப சொன்னேன். பெரியார் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பற்ற ரெபெக்கா மேரிகள் முட்டாள்களாக இருந்தாலும் பெரியார் கேட்ட கேள்வியை வினவில் பதிய விரும்புகின்றேன்.

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.

    (அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம் குறள் எண்:55)

    மேற்கண்ட குறளை யாருக்கேனும், எக்காலத்திலும்
    போதிக்க முடியுமென்று கருதுவீர்களா?

    இந்த குறளையும் சேர்த்துதான் உலக பொதுமறை என்று கூற வேண்டுமென்று ரெபெக்கா கூறுவீர்கள், நம்புவீர்களானால்…

    கோடை காலத்தில் சென்னை போன்ற நகரங்களின் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்க அப்படியொரு பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்..

    இந்த குறள் உட்பட அறிவுக்கொவ்வாத விசயங்களை ஏற்றுக் கொண்டால்தான் தமிழர்கள் என்று முத்திரை குத்துவீர்களானால்….

    முட்டாள்கள் மட்டும்தான் தமிழர்களாக இருக்க முடியும்..(நன்றி நண்பர் மகிழ்நன் )

    //அதில் உள்ள 1330 குறள்களும் விஞ்ஞான பூர்வமானவை என ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. திருக்குறளை ஏற்காத பெரியார், பெரியாரிஸ்டுகளுக்கு சரியான மரண அடி கொடுத்துளீர்கள். //

  159. Ramblings Rebecca Mary (RRM) உங்காளுக்கு அறிவுதான் இல்ல என்று நினைத்தேன்… கண்களிலும் கோளாறா… அன்பை பற்றி இவ்வளவு நேரம் விளக்கி சொன்ன பின்னும் அதனை வரையரைக்க உங்களால் முடியவில்லை எனில் எனக்கு ஒன்றும் ஆச்சிரியம் இல்லை… அன்பை அறிவுபூர்வமா புரிந்து கொள்ளவே கூடாது என்ற ஒற்றை முடிவுடன் இங்கே சுத்திகிட்டு வினவில் மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கும் ஒரு Ramblings உடன்பேசுவதற்கு எனக்கு தான் பொறுமை அதிகம் இருக்கு போல….

    திருக்குறள் பற்றி பெரியார் 1949 ல் என்ன கூறினார் அதற்கு அடுத்த ஆண்டு 1950 ல் என்ன மாற்றி கூறினார் என்று உங்களால் சொல்ல முடியுமா? திருக்குறளில் குறையையும் ,மிகையும் ஆராயும் அவரின் அறிவின் பக்கத்தில் கூட உங்க அறிவு வரவே முடியாது ரெபெக்கா… அவர் கரும்பு ஜுஸ் என்றால் நீங்க அதில் இருந்து மூன்று நான்கு முறை பிழிந்து எறியபட்ட சக்க…! ஆமாங்க மாட்டு கூடசாப்பிட விரும்பாத சக்க…!

    உங்களை போன்ற அறிவற்றமுண்டங்கள் தான் அறிவார்ந்த ஆய்வுகளை புறக்கணிக்கும்…!
    //விசயத்திற்கு வருகிறேன்அன்பு என்கிற உணர்விற்கு அறிவியல் பூர்வமான ஒரு கேட்டேன் இன்னும் பதிலில்லை.//

  160. @@மாணவன் குமார்

    வினவு திருவள்ளுவரை பற்றி என்னுடைய கமெண்டை நீக்கி ‘கோழையிலும் கோழை’ என்று ஒப்பு கொண்டு விட்டார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய போகிறர்களா ? இதில் வேறு கருத்து சுதந்திரம் நசுக்க படுகிறது என்று ஒப்பாரி வேறு. இந்த பிழைப்பிற்கு வினவு பத்திரிகையை இழுத்து மூடி விடலாம்

    என்னுடைய கமெண்டை வினவில் பதியாததை பற்றி கவலை இல்லை. Facebookல் உங்கள் ராமசாமியின் முகத்திரையை நாங்கள் கிழித்து கொண்டு தான் இருக்கிறோம்.

    தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் எப்படி ‘பாப்பான் சொன்னதை வைத்து பாப்பானை’ கிழிக்கிறீர்களோ அதே போன்று நாங்கள் ‘ராமசாமி’ சொன்னதை வைத்து தான் ‘ராமசாமியை’ கிழிக்கிறோம். நாங்களாக இட்டுக்கட்டி ராமசாமியை கிழிப்பதில்லை. விஷயத்திற்கு வருவோம்

    // 2.அன்பினை அளக்க oxytocin என்ற ஆர்மோன் மருத்துவ துறையில் பயன்படுகிறது.., ரத்தத்தில் உள்ள இந்த ஆர்மோன் அளவை கொண்டு நாம் முடிவு செய்யலாம் என்ற அறிவியல் கண்டுபிடிப்பை நீங்க காணாமல் போவதன் மர்மம் என்ன? //

    அன்பினை அறிவியல் கொண்டு அளக்க முடியும் என்பதனை நான் இப்போது தான் அறிகிறேன். நன்றி

    இந்த அன்பு என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். உதாரணமாக ‘கணவன் மற்றும் மனைவி’ இருவருக்கும் இடையிலான அன்பு, ‘சகோதர மற்றும் சகோதரிகளுக்கு, ‘ தாய் குழந்தைகளிடம் காட்டும் அன்பு’

    இதில் உயர்ந்தது தாயன்பே. கணவன் மனைவியிடம் காட்டும் அன்பிற்கும், சகோதரன் சகோதரியிடம் காட்டும் அன்பிற்கும், தாய் குழந்தைகளிடம் காட்டும் அன்பே உயர்ந்தது. அம்மா மட்டுமே குழந்தையிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை

    1) கணவன் மனைவியிடம் காட்டும் அன்பின் போது இந்த ‘oxytocin; அளவு எப்படி இருக்கும் ?
    2) சகோதர மற்றும் சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் போது இந்த ‘oxytocin; அளவு எப்படி இருக்கும் ?
    3) தாய் குழந்தைகளிடம் காட்டும் அன்பின் போது இந்த ‘oxytocin; அளவு எப்படி இருக்கும் ?

    4) ‘oxytocin’ அன்பு காட்டும் போது மட்டும் தான் சுரக்குமா (அல்லது) அளவு வேறுபடுமா ? அதே போன்று ‘பாசம் – நேசம் – காதல்’, இவற்றை ஒருவர் மேல் காட்டும் போது ”oxytocin’ செயல்பாடு எப்படி இருக்கும் ? (அல்லது)
    5) பாசம் – நேசம் – காதல் இவற்றிற்கு வேறு ஏதாவது hormoneகல் உள்ளதா ?

    எல்லாவற்றையுமே அறிவியலாக பார்க்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான் பதில் வரும்.

    நன்றி

  161. திருவாளர் fake ,பெரியாரை முக நூலில் பார்பனர்கள் கிழிப்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சி… வாதங்களும் ,எதிர் விவாதங்களும் தான் அவர் கருத்துகளை மக்களிடையே குறிப்பாக இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்கின்ரகுது என்ற நிலையில் பார்பனர்கள் பெரியாரை நன்றாகவே கிழிகிழி என்று கிழிக்கலாம். ஏன் மதுபான போதையில் அவரின் சிலையை கூட நீங்கள் உடைக்கலாம்… தொடருங்க உங்க சமுக சேவையை…

    உங்களின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் வேண்டுமானால் வாரம் ஒரு முறை உங்களின் பெல்வேறு தன்மையிலான அன்பை வெளிப்டுத்திகொண்டு உங்க இரத்தில் உள்ள oxytocin ஆர்மோன் அளவை பரிசோதனைகள் மூலம் கண்டு அறிய யார் உங்களுக்கு தடையாக் இருப்பார்கள் என்று சொல்லுங்க பார்கலாம். அட்டவணை வேண்டுமானாலும் தரேன்…

    முதல் வாரம் எந்த உணர்வும் அற்ற தியான நிலையில் பரிசோதனை

    2 ஆம் வாரம் கணவன் மனைவியிடம் காட்டும் அன்பின் பரிசோதனை

    3ஆம் வாரம் சகோதர மற்றும் சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் பரிசோதனை

    4ஆம் வாரம் ‘oxytocin’ அன்பு காட்டும் போது மட்டும் தான் சுரக்குமா (அல்லது) அளவு வேறுபடுமா பரிசோதனை

    5ஆம் வாரம் வந்த ரிசல்டுகளை வினாவுக்கு அனுப்புங்க…

    என்ன சரியா?

  162. AgainstFake முற்றிலும் உண்மை ஒரு தனிமனிதனின் கருத்தை கூட ஏற்க முடியாத இவர்களின் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கோழைத்தனமானது. ஒருவனின் கருத்தால் இவர்களின் சித்தாந்தம் உடைக்கப்படும் என்று இவர்கள் நினைக்கும் அளவிற்கு மிக பலவீனமாக இருக்கிறது.

    இந்த வினவின் கருத்துரிமை பசப்புகள் எல்லாம் போலித்தனமானது.

  163. வினவு இந்த fake தம்பியின் திருவள்ளுவர் பற்றிய பின்னுட்டம் டிராப்ட் மோடில் உங்க இணையத்தில் இருந்தால் வெளியிடுங்களேன்.. fake தம்பி ஏதாவது ரெபெக்கா மாதிறியே ஓலரியிருந்தால் கிழி கிழி என்று கிழித்து எறியலாம்..

  164. Fake தம்பி நீங்களும் Ramblings Rebecca Mary (RRM) மாதிரியே இந்த fake தம்பியும் கேள்விய மட்டும் தான் எழுப்புவேன் …, அறிவியலின் ஒரு பக்கமான ஆர்மோன்களை பற்றி கொஞ்சம் கூட அறிந்து கொண்டு வந்து பேச மாட்டேன் என்றால் எப்படி? எல்லாமே அறிவியல் தான் என்ற நிலையில் முதலில் நீங்க மருத்துவ துறையில் மனிதனின் உடலில் செயல்படும் ஆர்மோன்களை பற்றி அறிவியல் பூர்வமாக முதலில் அறிந்துகொண்டு தானே இங்கே வந்து கேள்வி எழுபனும் ? ஆர்மோன்களை பற்றிய அடிபடை அறிவு உங்களுக்கு இருந்து இருந்தால் இப்படி மிக அடிபடையான கேள்விகளை எழுப்பி இருக்க மாட்டீர்கள் அல்லவா?

    oxytocin டெஸ்ட் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மொக்கை போட்டிர்கள் என்றால் நீங்க கிழி கிழி என்று கிழித்து எறியப்படுவீர்கள்…ஆதாரபூர்வான என் கருத்துகளுடன்…
    //எல்லாவற்றையுமே அறிவியலாக பார்க்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான் பதில் வரும்.//
    //அன்பினை அறிவியல் கொண்டு அளக்க முடியும் என்பதனை நான் இப்போது தான் அறிகிறேன். நன்றி //

  165. தம்பி fake, ஒன்றுமே அறியாமல் இங்கே கேள்வி மட்டும் எழுப்பும் RRM( Ramblings Rebecca Mary (RRM) என்ற அறிவர்ரவரை விட அறிந்து கொள்ள இவ்வளவு துடிப்பா இருக்கும் உங்களுக்கு சொல்லித்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே!

    நீங்க சொல்வது போன்று இதில் உயர்ந்தது/அதிகபடியாந்து/அத்தியாவசியமானது தாயன்பே என்பது உண்மை தான் .., அதற்கான அறிவியல் அடிப்டை என்னவென்றால் Oxytocin is a hormone and a neurotransmitter that is involved in childbirth and breast-feeding. Moreover Oxytocin is produced in the hypothalamus, a part of the brain. Females usually have higher levels than males. ஒருவேலை உங்க ஆர்மோன் சிஸ்டம் கொலபஸ் ஆயிட்டா நீங்க எதனையும் அன்பு செலுத்த முடியாதுங்க தம்பி… குறிப்பா இந்த ஆர்மோன் குறைபாடு உங்களுக்கு ஏற்பட்டால் depression, anxiety, and intestinal problems எல்லாம் ஏற்படும். எனவே பெருமாளை நம்புவதனை விட பேரன்பை உங்களுக்குள் ஏற்படுத்தும் Oxytocin ஆர்மோனை நம்புங்க தம்பி…

    //இதில் உயர்ந்தது தாயன்பே. கணவன் மனைவியிடம் காட்டும் அன்பிற்கும், சகோதரன் சகோதரியிடம் காட்டும் அன்பிற்கும், தாய் குழந்தைகளிடம் காட்டும் அன்பே உயர்ந்தது. அம்மா மட்டுமே குழந்தையிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை //

  166. Dear Fake,Production of this hormone is a feedback system. Love thoughts and behavior might raise oxytocin levels and lead to increased affection and connection, which leads to more oxytocin and so on.

  167. // வினவு இந்த fake தம்பியின் திருவள்ளுவர் பற்றிய பின்னுட்டம் டிராப்ட் மோடில் உங்க இணையத்தில் இருந்தால் வெளியிடுங்களேன்.. fake தம்பி ஏதாவது ரெபெக்கா மாதிறியே ஓலரியிருந்தால் கிழி கிழி என்று கிழித்து எறியலாம்.. //

    குமார் தம்பி நான் வினவை ‘கிழி கிழி என்று கிழித்ததால் தானே’ என்னுடைய பின்னூட்டம் வெளி வரவில்லை. அப்புறம் நீங்க எப்படி என்னை ‘கிழி கிழி என்று கிழித்து எறிய முடியும்’ ?

    // oxytocin டெஸ்ட் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மொக்கை போட்டிர்கள் என்றால் நீங்க கிழி கிழி என்று கிழித்து எறியப்படுவீர்கள்…ஆதாரபூர்வான என் கருத்துகளுடன் //

    நான் எப்போது தம்பி அப்படி சொன்னேன். எல்லோரையும் எப்போதுமே கிழி கிழி என்று கிழித்து எரிய முடியாது தம்பி.

    // ஆர்மோன்களை பற்றிய அடிபடை அறிவு உங்களுக்கு இருந்து இருந்தால் இப்படி மிக அடிபடையான கேள்விகளை எழுப்பி இருக்க மாட்டீர்கள் அல்லவா? //

    ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துறையில் ஈடுபாடு இருக்கும். அதில் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். உங்களுக்கு Accounts பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டல் அதற்க்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் ?

    // எல்லாமே அறிவியல் தான் என்ற நிலையில் முதலில் நீங்க மருத்துவ துறையில் மனிதனின் உடலில் செயல்படும் ஆர்மோன்களை பற்றி அறிவியல் பூர்வமாக முதலில் அறிந்துகொண்டு தானே இங்கே வந்து கேள்வி எழுபனும் ? //

    என்னங்க சொல்றீங்க. எல்லாமே அறிவியலா. நீங்கள் உங்கள் நண்பனை திடீரென ஒரு நாள் எதிர்பாராமல் சந்தித்தால் அதுவும் அறிவியலா ? எப்படி எல்லாமே அறிவியலாக இருக்க முடியும் ?

    // ஒருவேலை உங்க ஆர்மோன் சிஸ்டம் கொலபஸ் ஆயிட்டா நீங்க எதனையும் அன்பு செலுத்த முடியாதுங்க தம்பி //

    அப்போது இந்த உலகில் கடின மனம் படைத்த எல்லோருக்கும் (குறிப்பாக பயங்கரவாதிகள்) இந்த Oxytocin குறைவாக இருக்குமா ? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு Oxytocin சமன் படுத்தும் மருந்துகளை கொடுத்தால் அவர்கள் குடும்பத்துடன் (அப்பா, அம்மா, கணவன்-மனைவி) இணக்கமாக இருப்பார்களா ?

    ஏனென்று கேட்டால் இந்த உலகில் இப்போது அன்பு, பாசம், நேசம், உண்மையான காதல் என்பெதல்லாம் குறைந்து கொண்டே வருகிறது அல்லவா ?

    நன்றி

  168. திருவள்ளுவரை பற்றி எழுதிய பின்னுட்டம் வரவில்லை என்று சொன்னீர்கள்…இப்ப வினவை கிழி கிழி என்று கிழித்தேன் அதனால் வரவில்லை என்று சொல்கிறீர்கள் fake ! எது உண்மை?

    //குமார் தம்பி நான் வினவை ‘கிழி கிழி என்று கிழித்ததால் தானே’ என்னுடைய பின்னூட்டம் வெளி வரவில்லை. அப்புறம் நீங்க எப்படி என்னை ‘கிழி கிழி என்று கிழித்து எறிய முடியும்’ ?//

    அப்படி எனில் oxytocin டெஸ்ட் மற்றும் நான் கொடுத்த அட்டவணை படி பரிசோதனை செய்து கொவ்தனையும் ஏற்கிண்றீகள் தானே ?
    \\நான் எப்போது தம்பி அப்படி சொன்னேன். எல்லோரையும் எப்போதுமே கிழி கிழி என்று கிழித்து எரிய முடியாது தம்பி. //

    ஒரு விசயத்தை விவாதிக்க தொடங்கும் போது அது பற்றிய அடிபடை அறிவை பெற்று வருவது தானே சரியாக இருக்கும் fake? இங்கே விவாத பொருள் இப்போதுoxytocin என்ற ஆர்மோன் என்ற விசயத்தை அறிந்து தானே வந்தீர்கள் fake ?
    //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துறையில் ஈடுபாடு இருக்கும். அதில் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். உங்களுக்கு Accounts பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டல் அதற்க்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் ? //

    எதிர்பாராமல் சந்தித்தாலும் அப்படி சந்திப்பதற்கான பின்ன்ணணியில் நிகழ்தகவு இருக்கே fake ? நிகழ்தகவு அறிவியலுடன் குறிப்பாக பரிசோதனைக்கான மாதிரிகளை ஆய்வுக்கு எடுக்கும் விசயத்துடன் தொடர்புடையது தானே?
    //என்னங்க சொல்றீங்க. எல்லாமே அறிவியலா. நீங்கள் உங்கள் நண்பனை திடீரென ஒரு நாள் எதிர்பாராமல் சந்தித்தால் அதுவும் அறிவியலா ? எப்படி எல்லாமே அறிவியலாக இருக்க முடியும் ?//

    தெளிவாகத்தானே சொல்லியிருக்கேன்….Oxytocin ஆர்மோன் உற்பத்தி ஆவது ஒரு feedback system அடிப்டையில் ஆனது என்று… மருந்து சாப்பிட்டு அந்த ஆர்மோனை உற்பத்தி செய்வதனை விட சமுகத்தின் மீது அன்பு , அக்கறையுடன் செயல்பட்டால் அந்த ஆர்மோன் உங்க மூளையில் உற்பத்தி ஆகும் இல்லையா? அப்படி உற்ப்பத்தி ஆகும் அந்த ஆர்மொன்கனின் காரணமாக நீங்க அன்பும் அக்கறையும் உள்ளவராக சமுகத்துடன் வழுவிங்க fake ? (Production of this hormone is a feedback system. Love thoughts and behavior might raise oxytocin levels and lead to increased affection and connection, which leads to more oxytocin and so on.)
    //அப்போது இந்த உலகில் கடின மனம் படைத்த எல்லோருக்கும் (குறிப்பாக பயங்கரவாதிகள்) இந்த Oxytocin குறைவாக இருக்குமா ? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு Oxytocin சமன் படுத்தும் மருந்துகளை கொடுத்தால் அவர்கள் குடும்பத்துடன் (அப்பா, அம்மா, கணவன்-மனைவி) இணக்கமாக இருப்பார்களா ?//

  169. //அப்போது இந்த உலகில் கடின மனம் படைத்த எல்லோருக்கும் (குறிப்பாக பயங்கரவாதிகள்) இந்த Oxytocin குறைவாக இருக்குமா ? //

    என்ன Fake id இப்படி கேட்டுடீங்க? அப்புறம் அன்பு உருவாக முக்கிய காரணம் oxytocin ஹார்மோன் தான் என்றால், அன்பு இல்லை என்றால், அதற்க்கு காரணம் என்ன ? oxytocin சுரப்பது குறைவாக இருப்பது தான்? அதான் நமது பின்னூட்ட விஞ்ஞானியே கூறி விட்டார் அல்லவா? ஆக, இந்த ஹார்மோன் குறைபாட்டை சரி செய்து விட்டால் போதும், இந்த பூமியே அன்பு மயமாகி சொர்கமாகி விடும். யாரும் மதத்தின் பெயரால் அடித்துக் கொள்ளமாட்டார்கள், ஒருத்தரை ஒருத்தர் சுரண்ட மாட்டார்களால். தன கருத்தினை ஏற்காதவர்களை வெடி வைத்து பீஸ் பீஸ் ஆக மாட்டார்கள். அப்பறம் என்ன இந்த ஹார்மோனை ஊசி மூலமாக ஒரு 10 mg செலுத்தினால் முடிந்தது, முதலாளிகள் எல்லாம் அன்பே உருவாக மாறி, தங்களாவே முன்வந்து தங்களுடைய உற்பத்தி கருவிகளை மக்களிடம் ஒப்படைத்து விட்டு போய் விடுவார்கள், கம்மினிஸ்டுகளுக்கு தங்கள் வேலை இலகுவாக முடிந்து விடும். மக்கள் எல்லோரும் அன்பாகி விட்டபடியால் இனி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் ராணுவம் போன்றவை தேவை இருக்காது. ஒவ்வொரு நாட்டையும் காக்க ஆயுதம் உற்பத்தி செய்ய தான் எவ்வளவு செலவு செய்ய வேண்டு கிடக்கிறது. அதற்க்கு பதிலாக இந்த ஹார்மோனை செலுத்தாவிட்டால் போதும் குறைந்த செலவில் சொர்கத்தை காணலாம். பார்ப்பனர்களை எல்லாம் சாதியை வெறுக்கும் ஜனநாயகவாதிகள் ஆக்கி விடலாம். இனி மதம் என்கிற அமைப்பும் வேண்டாம், கம்யூனிசம் என்கிற சித்தாந்தமும் வேண்டாம். இனி அனைத்தையும் oxytocin ஊசி பார்த்துக் கொள்ளும்.

    என்ன கம்மினிஸ்ட் காம்ரேட்ஸ், பின்னூட்டத்தில் எவ்வளவு பெரிய விஞ்ஞானத்தை கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார். சீக்கிரம் இதனை குறித்து பரிசீலிக்கவும். எப்பேர்ப்பட்ட சாதனை, எனக்கு தலையே சுத்திரிச்சி. முடிந்தால் “Noble prize committe” கூறி இவருக்கு அடுத்த ஆண்டு பதக்கம் கிடைக்க சிபாரிசு பண்ணவும். எவ்வளோ பெரிய கண்டு பிடிப்பு.

  170. தெளிவாக தானே சொல்லி இருக்கேன் RRM ….., பின்னுட்டம் 329 lல் தெளிவாகத்தான் இருக்கு!

    தெளிவாகத்தானே சொல்லியிருக்கேன்….Oxytocin ஆர்மோன் உற்பத்தி ஆவது ஒரு feedback system அடிப்டையில் ஆனது என்று… மருந்து சாப்பிட்டு அந்த ஆர்மோனை உற்பத்தி செய்வதனை விட சமுகத்தின் மீது அன்பு , அக்கறையுடன் செயல்பட்டால் அந்த ஆர்மோன் உங்க மூளையில் உற்பத்தி ஆகும் இல்லையா? அப்படி உற்ப்பத்தி ஆகும் அந்த ஆர்மொன்கனின் காரணமாக நீங்க அன்பும் அக்கறையும் உள்ளவராக சமுகத்துடன் வழுவிங்க fake ? (Production of this hormone is a feedback system. Love thoughts and behavior might raise oxytocin levels and lead to increased affection and connection, which leads to more oxytocin and so on.)

  171. @@மாணவன் குமார்

    1) // திருவள்ளுவரை பற்றி எழுதிய பின்னுட்டம் வரவில்லை என்று சொன்னீர்கள்…இப்ப வினவை கிழி கிழி என்று கிழித்தேன் அதனால் வரவில்லை என்று சொல்கிறீர்கள் fake ! எது உண்மை? //

    இதற்க்கு ஒரே பதில் தான். நான் வேண்டுமானால் நீக்கப்பட்ட கமெண்டை மீண்டும் பதிகிறேன். வினவு அதை வெளியிடும் பட்சத்தில் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

    2) // ஒரு விசயத்தை விவாதிக்க தொடங்கும் போது அது பற்றிய அடிபடை அறிவை பெற்று வருவது தானே சரியாக இருக்கும் fake? இங்கே விவாத பொருள் இப்போதுoxytocin என்ற ஆர்மோன் என்ற விசயத்தை அறிந்து தானே வந்தீர்கள் fake ? //

    நீங்கள் விஞ்ஞான ரீதியாக ஒரு சில விஷயங்களை சொல்லுகிறீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதத்தை தொடருவோம்

    3) // Production of this hormone is a feedback system. Love thoughts and behavior might raise oxytocin levels and lead to increased affection and connection, which leads to more oxytocin and so on. //

    நீங்கள் இதற்க்கு முன்பு என்ன குறிப்பிட்டு இருந்தீர்கள் என்பதை பார்ப்போம். நீங்கள் சொன்னது போல் இது ‘feedback system’ மட்டும் அல்ல

    // Oxytocin is a hormone and a neurotransmitter that is involved in childbirth and breast-feeding. // (கமெண்ட் #326)

    1) தாய் பால் ஊட்டுவதன் மூலம் default ஆகவே ‘Oxytocin’ அனைவருக்கும் இருக்க வேண்டும் தானே ?
    2) கடின மனம் படைத்தவர்களுக்கும் ‘தாய் பால்’ கொடுக்கபட்டு இருக்கும் தானே ?

    அப்படியென்றால் ‘Oxytocin’ குறைபாடு உள்ளவர்களுக்கு (தாய் பால் கொடுத்தும்) அந்த ஹோர்மோனை சமன் செய்யும் மருந்துகளை கொடுத்தால் அவர் ‘அன்புடைய’ மனிதராக மாறுவர் தானே ?

    மேலும் அன்பு என்பதை பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம் (1) கட்டிபிடித்தல் மூலம் (2) பார்வையின் மூலம் (3) முத்தம் கொடுத்தல் மூலம் (4) அழுகையின் மூலமும் வெளிப்படுத்தலாம்

    நீங்கள் சொன்ன ‘Oxytocin’ மேலே சொன்ன 4 செய்கைகளில் எந்த செய்கையின் போது வெளிபடும். அல்லது 4 செய்கைகளிலும் வெளிப்படுமா ? இந்த 4 முறைகளுக்கும் ‘Oxytocin’ சுரக்கிறது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் உள்ளதா ?

    3) // எதிர்பாராமல் சந்தித்தாலும் அப்படி சந்திப்பதற்கான பின்ன்ணணியில் நிகழ்தகவு இருக்கே fake ? நிகழ்தகவு அறிவியலுடன் குறிப்பாக பரிசோதனைக்கான மாதிரிகளை ஆய்வுக்கு எடுக்கும் விசயத்துடன் தொடர்புடையது தானே? //

    நான் தினமும் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரு நாள் ‘என்னுடைய பழைய; நண்பனை சந்திக்கிறேன்.

    ஆத்திகனை பொறுத்தவரை இந்த நிகழ்வு ‘விதி’. நாத்திகனை பொறுத்தவரை இது ‘தற்செயல்’. ஆனால் ‘அறிவியல்’ என்று நீங்கள் புதிதாக சொல்லுகிறீர்கள். இது எப்படி அறிவியலுடன் சம்பந்தப்பட்டது (அல்லது) அறிவியலாகும் என்று எங்களுக்கு விளக்கவும்

    நன்றி

  172. AgainstFake இந்த ஆர்மோன் விசயத்தில் நீங்க அடிப்டையிலேயே முரண்பட்டு இருந்தால் நாம் விவாதிக்கலாம்… ஆனால் இப்ப விசயம் அப்படி இல்ல.. நாம் ஒன்றும் இந்த ஹார்மோன் விசயத்தில் ரெபெக்கா மேரி போன்று அடிப்டையிலேயே முரண்பட்டு நிற்கவில்லை. மேலும் நான் உங்க குருவும் அல்ல நீங்க என் சிசியரும் அல்ல. எனவே இந்த நிலையில் நிலையில் அறிவியல் இதழ்கள் மூலம் நிறைய தேடிபடிங்க. ஒருவேளை நீங்க நான் கூறிய விசயத்தில் ஏதேனும் முரண்பட்டால் அதனை பட்டியல் இடுங்க…

    இது தொடர்பான தகவல்கள் இணையத்திலும் இருக்கு.

    அடுத்து உங்க கடைசி கேள்வி திடீர் சந்திப்பு விதியா? தர்செயல்லா? பற்றி எளிமையான எனது பதில் என்ன வென்றால் Bayesian method மட்டுமே… What is the mathematical probability of me meeting a friend in a distant city with a population of 4.3 million? இந்த கேள்விக்கு இணையத்தில் பதில் இருக்கு. படிங்க சகோ….

  173. // ருவாளர் fake ,பெரியாரை முக நூலில் பார்பனர்கள் கிழிப்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சி… வாதங்களும் ,எதிர் விவாதங்களும் தான் அவர் கருத்துகளை மக்களிடையே குறிப்பாக இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்கின்ரகுது என்ற நிலையில் பார்பனர்கள் பெரியாரை நன்றாகவே கிழிகிழி என்று கிழிக்கலாம். ஏன் மதுபான போதையில் அவரின் சிலையை கூட நீங்கள் உடைக்கலாம்… தொடருங்க உங்க சமுக சேவையை… //

    இந்த கருத்துக்கு பதில் அளிக்க நான் தயார். ஆனால் வினவு சத்தியமாக வெளியிடாது. பார்பனர்கள் தான் கிழிக்கிறார்கள் என்று சொல்வதில் இருந்தே உங்கள் மனநிலை புரிகிறது. உங்கள் ராமசாமியே ‘காந்தி சிலையை’ உடைக்க வேண்டும் என்று சொன்னவர் தான். அதை மனதில் நிறுத்தி பேசுங்க

  174. ரெபக்க மேரி போன்ற அறிவியலை கேலி கிண்டல் செய்யும் அரைகுறைகளுக்கு இல்ல இல்ல ரெபக்க மேரி என்ற அரைகுறைக்கு இன்னும் தெளிவா விவரிகனும் போல…ஒரு பரிசோதனை என்பது அதன் முடிவுகள் என்பது அகம் மற்றும் புற சூழலகளியும் சார்ந்தது என்று விளக்கனும் போல… ஒரு மனிதனின் ரத்தத்தில் உள்ள Oxytocin ஆர்மோன்களின் அளவு அந்த மனிதனின் புறத்தே நிகழும் சமுகத்தின் செயல்பாடுகளையும் அவன் அந்த சமுகத்தில் இருந்து கற்கும் விசயங்களையும் , அவனின் வர்க்க நிலைகளையும் அதனுடாக அவன் பெரும் உணர்வுகளையும் பொருத்தது என்று விளக்கனும் போல இந்த அறிவறவருக்கு…நான் முன்பே சொன்னதை பத்தி பத்தியா விளக்கனும் போல இவிங்களுக்கு!

    மருந்து சாப்பிட்டு அந்த ஆர்மோனை உற்பத்தி செய்வதனை விட சமுகத்தின் மீது அன்பு , அக்கறையுடன் செயல்பட்டால் அந்த ஆர்மோன் உங்க மூளையில் உற்பத்தி ஆகும் இல்லையா? இப்ப நீங்க சமுகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பீர்கள் அல்லவா? அதனால் இன்னும் அதிகமாக அந்த ஆர்மோன் சுரக்கும் அல்லவா…அதானால் மீண்டும் நீங்க சமுகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பீர்கள் அல்லவா? இது ஒரு பின்னுட்டம் சார்ந்த நிகழ்வு அல்லவா?

  175. விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன் வாழ்நாளில் 21 ஆவது வயதில் இருந்து மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பில் இருந்தாலும் எஞ்சிய பல பத்தாண்டு வாழ்கையில் தொடர்ந்து அறிவியிலேயே முழுகி அதனையே மானுட சமுகத்துக்கு ஆசிரியராக இருந்து தன் சமுக கடமையை பூர்த்தி செய்து கொண்டு இயற்கை எயிதினார்… ஆனால் இங்கே எகனை மொகனையாக பேசும் ரெபெக்கா மேரிகள்….! ? சதாரண நிகழ்வான இயற்கை எய்துவதனை கூட ஐக்கியம் ஆகிட்டாங்க… இல்ல சோதியிலே சேர்த்துட்டாங்க என்று கூறி மங்கலம் பாடிகிட்டு இருக்காங்க… கொடுமை..!

  176. இது பெரியாரின் மண் தான். 1

    காந்தி கோட்சேவால் கொலையுண்டு இறந்தபோது, பல மாநிலங்களில் கலவரமும் நடந்தது. அவ்வாறு தமிழகத்திலும் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக யார் சொன்னால் தமிழகம் கேட்குமோ அவரை வானொலியில் பேசச் செய்தார்கள்,அவரும் பேசினார் அவர்தான் பெரியார்.அவரது பேச்சினால் தமிழகத்தில் எந்த கலவரமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது –

    ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் – 2

    குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்த இராஜாஜி பெரியாருக்கு பயந்தே அத்திட்டத்தை கைவிட்டார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் -3.

    எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டாலும் பெரியார் எதிர்த்த இந்தியை இன்று வரை தமிழகம் எதிர்க்கவே செய்கிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் -4.

    மண்டல் கமிஷன் பரிந்துரையை திரு.வி.பி.சிங் செயற்படுத்த முனைந்தபோது அதை எதிர்த்து வடமாநில உயர்சாதி மாணவர்கள் போராட்டம் செய்தார்கள்,ஆனால் அதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் இல்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் -5.

    நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்ற போதிலும் தமிழகம் மட்டும் எதிர்த்து போராடுகிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் -6.

    ஒரு சாமியாருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக மிகப்பெரிய கலவரமே வெடித்தது வட மாநிலத்தில் ஆனால் இங்கு சங்கராச்சாரியே கைது செய்யப்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் – 7

    இந்தியா முழுவதும் சாதிப் பெயரை தன் பெயரோடு இணைப்பதை தவிர்த்து தன் பெயரை மட்டுமே அடையாளப்படுத்துகிறார்கள் தமிழக மக்கள் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் – 8

    சாதி மத கலவரங்கள் சிறு நெருப்பாக எரிய ஆரம்பிக்கும்போதே அதை அணைக்கின்ற நீராக இங்கு பெரியாரியம் இருக்கின்றது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண்தான் – 9

    நாட்டை ஆளுகின்ற, 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிற ஒரு தேசிய மதவாத கட்சியின் தேசியச் செயலாளர் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோற்றுப் போனார்,சட்ட மன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் நோட்டாவைக் காட்டிலும் குறைவாக வெறும் 1368 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.

    இது பெரியார் மண் தான் – 10

    ஆண்டாள் விவகாரத்தை கையில்
    வைத்துக் கொண்டு மிகப் பெரும் கலவரத்தை நடத்தி விடலாம் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் மண்
    விழுந்ததே இது பெரியார் மண்தான்.

    இது பெரியார் மண் தான் – 11

    இந்தியா முழுக்க பூணூல் என்பது உயர் சாதியினரின் அடையாளமாக கருதும் போது தமிழ்நாடு மட்டும் பன்றிக்கு பூணூல் போட்ட வரலாற்றைக்
    கொண்டுள்ளது.

    ஆகவே, இது பெரியார் மண் தான்

    இது பெரியார் மண் தான் – 12

    இந்தியா முழுக்க இராமனைக் கொண்டாடிக் கொண்டிருக்க தமிழ்நாடு மட்டும் இராமனை செருப்பால் அடித்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

    ஆகவே, இது பெரியார் மண் தான்

    நன்றி தோழர் க.இரா. தமிழரசன்
    https://www.facebook.com/profile.php?id=100008233068659

  177. மாபெரும் அறிவியல் மேதை மட்டுமல்ல.. சமூக மனிதனாக தனது கடமையை செய்தவர்.. காலத்தை பற்றி ஆய்வு செய்தவர் .காலமாகி விட்டார். #Hawking_Stephen தமிழில் அவருடைய வாழ்க்கையை பற்றிய நூல் அவசியம் படிக்க வேண்டியது

    நன்றி தோழர் கி. நடராசன் https://www.facebook.com/natarajan.krishnan.1?hc_ref=ARSmftJB8krh9-7XijUFFak6d-A5aEPzSrPMPk6LGHlh6vWUARNAXjxXVPU3nabbo34

  178. ஆண்டாள் விசயத்தில் மங்கலம் பாடுவோர் பாடட்டும்….நாம் சாதாரண மக்களுக்காக அவர் Hawking_Stephen எழுதிய நூற்களை படிப்போம்.

    காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)

    கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)

    பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)

    நன்றி தோழர் கி. நடராசன்

  179. சோதியில் சேர்த்தார்கள், ஐக்கியம் ஆனார்கள் என்று அறிவியலுக்கு புறம்பாக மங்கலம் பாடும் ரெபெக்கா மேரிகளுக்கு…,

    சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை’: ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி :

    சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எல்லாம் கற்பனைக் கதை என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தி கார்டியனுக்கு அளித்தப் பேட்டியை இன்று நாம் நினைவுகூர்வது அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

    ஸ்டீபன் ஹாக்கிங்…அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்ற தசை உருக்கி நோய் அவரை அவருடைய 21-ஆம் வயதில் தாக்கியது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.

    மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.

    எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தி கார்டியன் இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

    எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை “சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே” என்றார்.

    இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.

    தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், “மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை” என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன” என்றார்.

    தி கிராண்ட் டிசைன் சம்பாதித்த எதிர்ப்புகள்..

    2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் ‘தி கிராண்ட் டிஸைன்’, (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.

    யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், “ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    http://tamil.thehindu.com/world/article23237325.ece?homepage=true
    நன்றி ஹிந்து தமிழ் நாளிதழ்.

  180. மாணவன் குமார்,

    நீங்கள் probabilityல் தான் முடிப்பீர்கள் என்று யூகித்தேன். நீங்களும் அதில் தான் முடித்து உள்ளீர்கள்

    பெரியார் மண் என பல விஷயங்களை அடுக்கி உள்ளீர்கள். அவற்றிற்கு நேரம் கிடைக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறேன். ஆனால் நீங்கள் அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனத்து இருந்தீர்களேயானால் நீங்களே ‘பல பாய்ண்ட்களை’ சொல்லி இருக்க மாட்டீர்கள்

    நன்றி

  181. AgainstFake, உங்கள் கேள்விக்கான பதிலை நான் March 12, 2018 at 7:25 pm அன்றே கொடுத்து இருக்கேன் அல்லவா? எப்படி?

    “”””எதிர்பாராமல் சந்தித்தாலும் அப்படி சந்திப்பதற்கான பின்ன்ணணியில் நிகழ்தகவு இருக்கே fake ? நிகழ்தகவு அறிவியலுடன் குறிப்பாக பரிசோதனைக்கான மாதிரிகளை ஆய்வுக்கு எடுக்கும் விசயத்துடன் தொடர்புடையது தானே?”””

    மீண்டும் நேற்று probability யில் உள்ள Bayesian method யை சுட்டிக்காட்டி இருந்தேன்.

    ஒரு வேலை நிகழ்தகவுக்கு ஆங்கில வார்த்தை probability என்பதனை ஊர்ஜித படுத்த மீண்டும் கேள்வி எழுப்புகின்றீர்கள் என்று நினைகின்றேன். கணிதத்தின் ஒரு பிரிவான probability அறிவியல் பரிசோதனைகளில் எங்கேயும் எப்போதுமே பயன்பாட்டில் உள்ளது என்பதனை கூற விரும்புகின்றேன். ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறை என்று இல்லாமல் அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் probability தன் பங்கை ஆற்றிகொண்டு தான் உள்ளது.அதில் உள்ள உள் பிரிவாக உள்ள Bayesian method உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக தான் உள்ளது. இபோதாவது நீங்கள் எதுவும் அறிவியல் தான் என்று அறிவு பூர்வமாக உணருகிண்றீகளா?

    பெரியாரை பற்றி விவாதிக்க நான் தயாராக தான் இருகின்றேன். அதற்கு முன் இந்த ஐக்கியமாதல் மற்றும் சோதியில் சேருதல் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களை எதிர்பார்கின்றேன்.

  182. வைணவ ஜீயரை கேலி பேசியது போல, தீவிரவாதத்தில் ஈடுபடும், இஸ்லாமிய தீவிரவாத ஜிஹாத் அமைப்புகள், கொலைகாரர்களைப்பற்றியும், கற்பழிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் கிறித்தவ பாதிரியார்களைப்பற்றியும் பேசிப்பார்… நீ முதுகெலும்பு உள்ளவன் என்றால்…!!

  183. ஆண்டாளை எங்கள் கோதை நாச்சியாரை அவதூறு செய்த வைரமுத்துவுக்கு காலம் நல்ல தீர்ப்பினை சின்மயி மூலமாக வழங்கிவிட்டது.. அவமானம் என்றால் என்னவென்று வைரமுத்து இந்நேரம் புரிந்துக் கொண்டிருப்பார். இனிமேலாவது தமிழர்களை இழிவு செய்யாமல் நாவடகத்துடன் வைரமுத்துவும் மற்ற பகுத்தறிவு கம்யூனிஸ்ட்டுகளும் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறன் ..

Leave a Reply to மாணவன் குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க