காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்காக 192 டி.எம்.சி நீரை வழங்குமாறு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையிலிருந்த காலத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளையோ கர்நாடக அரசு ஒருமுறை கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், நிலத்தடி நீரைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கான நீர்ப்பங்கீட்டு அளவை 177.25 டி.எம்.சி.-யாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இத்தீர்ப்பில், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவைக் குறைக்க, நிலத்தடி நீரைக் காரணம் காட்டிய உச்சநீதிமன்றம், கர்நாடகத்தின் நிலத்தடி நீரை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை.

பதினோரு ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இவ்வழக்கில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கர்நாடகத்துக்குச் சாதகமாக இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதனாலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டுமல்ல, ஒப்புக்கு சப்பாணியாக ஒரு அமைப்பைக் கூட உருவாக்க மோடி அரசு விரும்பாது. பா.ஜ.க. விற்கு போட்டியாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்போம் என அறிவித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெறும் வெத்து வேட்டுதான் எனக் காட்டிவிட்டார்.

கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வு அமலாக்கம் அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்புகளை திணித்த உச்சநீதி மன்றத்திடம் நடுநிலைமையோ, நியாயமோ கிடையாது. இழந்துபோன உரிமைகளை மீட்கும் அவசரமான காலத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையையும், நீரின்றி அழியும் விவசாயிகளின் வாழ்வையும் ஆவணப்படுத்துகிறது, இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! – புதிய கலாச்சாரம் மார்ச் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • காவிரி : கர்நாடகத்தின் அடாவடி ! மைய அரசின் நழுவும் தீர்வு !!
  • தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது !
  • அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு ! ஆவதென்ன ?
  • காவிரி ஓரம் குடிநீர் இல்லா துயரம் !
  • மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி !
  • காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?
  • காவியைக் கரைக்கும் காவிரி !
  • காவிரி பிரச்சினை : மோடி அரசே முதன்மை குற்றவாளி !
  • காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?
  • என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
  • காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? – நேரடி ரிப்போர்ட்
  • சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
  • தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
  • காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !
  • காவிரி நீர் மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் – பத்திரிகை செய்தி

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க