லூன் கடை ஒன்றில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதுவும் குறளுக்கு உரை தந்த கலைஞர் டி.வியில். “யப்பா அந்த சத்தத்தை குறைப்பா. முடியல!”, சலிப்புடன் ஒருவர் சொல்ல ஒலியை மியூட் செய்தார் கடைக்காரார். சிறிது நேரத்திற்கு அந்த இடமே மயான அமைதியுடன் ஒடுங்கியது. உடனே “எழவு வீடு மாதிரி இருக்கு. சத்தத்த கூட்டு” என்றபடியே மீண்டும் தமிழ் வர்ணனை கேட்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட தமிழ் வர்ணனையில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்களின் மனநிலை இதுதான். அந்த மொழியோடு ஒட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு பார்க்கிறார்கள்.

மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.

“அரவுண்ட த விக்கெட்ல(around the wicket) போட்டுண்டுருக்காரு, அல்ட்ரா எட்ஜ்(ultra edge) நன்னா காமிக்கர்து, சிக்சர் போயிடுத்து, 4 வந்துடுத்து, பிரண்ட் ஃபூட்(front foot) வந்து ஆடுறச்சே நன்னா…., அவா ஜெயிச்சிருவானு கிளியரா தெரிஞ்சுண்டுருக்கு..”

ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் என்ற பெயரில் ஒரு அக்கிரஹாரத்தையே களமிறக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம். வர்ணனை என்ற பெயரில் பார்பனத் தமிழைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் காதுகளை கர்ண கொடூரமாக பதம் பார்க்கிறது மேற்படி கூட்டணி. ஆர்.ஜே.பாலாஜியே பரவாயில்லை எனும் நினைக்கும் அளவுக்கு நம்மை தாக்குகிறார்கள்.

“என்ன மாமா ஆத்துல அத்திம்பேர் சௌக்கியமா இருக்காளா?” என்று ஐ.பி.எல் வர்ணனையில் இன்னும் பேசப்படவில்லை. அதையும் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம். இதை தவிர பந்து உஸ்ஸ்ஸ்-னு போகுது, மூக்கு மேல ராஜா என இவர்கள் அடிக்கும் மொக்கை வர்ணனைகள் கேட்பவர்களை எரிச்சலூட்டுகின்றன.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

பொதுவில் நாம் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஒரு மேடையில் பலர் முன்னிலையில் பேசும்போது நாம் அனைவருக்குமான பொதுத் தமிழ் மொழியில் தான் பேச ஆரம்பிப்போம். அது இயல்பு. ஆனால் பல லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அக்கிரஹாரத்து மொழியை எந்த கூச்சமும் இன்றி பயன்படுத்துகிறார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் முதல் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் ‘அவா’- க்களாக இருப்பதால் கிரிக்கெட் சங்க தாழ்வாரங்கள் இயல்பாக அக்கிரஹாரங்களாகவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றன. அதனால் அக்கிரஹாரத்து மொழியும் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

சிவராமகிருஷ்ண ‘ஐயர்’

இப்பார்ப்பன மாமக்களின் வர்ணனைகளைவிட சிறுநகரங்களில் ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை சிறப்பானதாக இருக்கிறது. “முன் சென்று தடுத்து ஆடினார் (front foot defence)” “மட்டையாளரை ஏமாற்றி காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது”. “பந்து எல்லைகோட்டை தாண்டியது. நான்கு ஓட்டங்கள்” என இவ் வர்ணனைகள் சிறப்பானதாக இருக்கும். இவை சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் போன்றவர்களின் வானொலி கிரிக்கெட் வர்ணனைகளை பிரதியெடுத்து பேசப்படுபவை. நீங்கள் தஞ்சை, திருநெல்வேலி என வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றாலும் ஒரே மாதிரியான வர்ணனைகளை பார்க்க முடியும்.

பார்ப்பன மொழி என்பதையும் தாண்டி கடந்த 10-ஆம்(10-5-2018) தேதி நடைபெற்ற டெல்லி vs  ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள் இப்பார்ப்பன முன்னாள் வீரர்கள். காரணம் டெல்லி அணியில் விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் என்ற வீரர். அவர் பெயரின் பின்னொட்டை பார்த்ததும் வர்ணனையில் இருந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

“……ஸ்ரேயஸ் ஐயர்…..நானும் ஐயர் தான். என் பெயர் சிவராமகிருஷ்ண ஐயர்” என்ற பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேரடி வர்ணனையில் தன் சாதியை தெரிவிக்கிறார்.

அபினவ் முகுந்த்.

நேற்று(17-05-2018) நடைபெற்ற ஹைதராபாத் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தான் ஒரு மாத்வா பிராமின் என வர்ணனையில் தெரிவித்தார் அபினவ் முகுந்த என்ற கிரிக்கெட் வீரர்.

சக வர்ணனையாளரான முத்து என்பவர் ” எந்த அணி ஜெயிக்கப் போகிறது. ஹைதராபாத்தா இல்லை பெங்களூரா? பிரியாணியா இல்லை பிசிபெல்லா பாத்தா?  என்ற கேட்டபோது  “பிசிபெல்லாபாத்துதான், அக்சுவலி நான் மாத்வா பிராமின்” என்று சம்பந்தமில்லாமல் தனது சாதியை குறிப்பிட்டார் அந்த கிரிக்கெட் வீரர்/வர்ணனையாளர்.

சாதி வெறியனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் சாதி பெயர் கேட்பது நாகரிகமற்றதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த நாகரிகமும் இல்லாமல் ஐயர் என்பதை ஏதோ முனைவர் பட்டம் போல பெருமைமிகு அடையாளமாக கூறி அற்ப சந்தோசமடைவதை பார்ப்பனத் திமிர் என்று தான் அழைக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் ஒரு வீரர்  பந்து பிடிப்பதை தவற விட்டுவிட்டார். அப்போது ஶ்ரீகாந்தின் வர்ணனை.“ விட்டுடான்… ஐயோ…நாராயணா,வாசுதேவா…” என்று பார்த்தசாரதி கோவில் தெரு மாமாக்களை நினைவுபடுத்தினார்.” ஓ மை காட்” என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாராயணா வாசுதேவா என்று தமிழ்படுத்தியிருக்கிறார் திருவாளர் ஶ்ரீகாந்த். விட்டால் ஆங்கில வழக்கை சுதேசிப்படுத்தியிருப்பதாக நம்மிடம் படுத்தினாலும் படுத்துவார்கள். சிவராமகிருஷ்ண ‘ஐயரி’-ன் மேற்படி கூற்றுக்கு ஒரு ‘ஐயங்காரரி’-ன் எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். சைவ-வைணவ, ஐயர்-ஐயங்கார் சண்டை அங்கேயும் தொடர்கிறது போலும்.

ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் சாதி வெறியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சாதி வெறிக்கு இடமளித்ததற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு இப்பார்ப்பன வெறியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

பொதுவில் தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துகொள்வது இழிவானது நாகரிகமற்றது என்று கருதப்படுகிறது. அதனால் தான் சாதிவெறி கட்சி நடத்தினாலும் கொங்கு ஈஸ்வரனுக்கும், ராமதாஸ்களும் தமது பெயரில் சாதி பின்னொட்டை சேர்க்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் சாதி வெறியர்களோ – சாதி அபிமானம் கொண்டவர்களோ, பொது இடங்களில் தமது சாதியை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.

ஆடுறதுக்கு அமெரிக்கா, பாடுறதுக்கு பார்த்தசாரதி தெருவா?

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் சாதி பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள். (ஸ்ரேயஸ் ஐயரும் தமிழக கிரிக்கெட் வீரர் அல்ல). தமிழகத்தில் மதிக்கப்பட வேண்டுமானால் சாதி பெயரை துறக்க வேண்டியிருக்கிறது. இவர்களைப் பொறுத்த வரை இது எவ்வளவு பெரிய அநீதி! இச்சூழலில் அமித் மிஸ்ராக்கள், இசாந்த் சர்மாக்களை மட்டுமே பார்த்த இடத்தில் ஐயர் என்ற பெயரை பார்த்தால்? தன்னை அறியாமல் குதூகலம் அடைகிறார்       லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன ஐயர். இந்த குதூகலத்தை அபபடியே திருப்பிப் போட்டால் அது தான் பார்ப்பனர்கள் தமிழகத்தின் மீதும் திராவிட இயக்கத்தின் மீது காட்டும் வெறுப்பு. அவாளது சாதி பெருமிதத்தை அவர்களே மறைக்கும்படி பெரியாரின் மண் செய்து விட்டதைத்தான் கலிகாலம் முத்திடுத்து என்று புலம்புகிறார்களோ என்னமோ!

இதுவே தம்மை நட்டநடு சென்டராகவும், தாராளமயத்தை ஆதரிக்கும் லிபரலாகவும் இருக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? உள்ளூர இருக்கும் திராவிட இயக்கத்தின் மீதான் காழ்ப்பு இன்னும் பலமடங்காக துள்ளி எழுகிறது. அதற்கு சரியான சான்று சமீபத்திய ந.ந.சென்டரும், ஆல்பர்ப்பஸ் அங்கிளுமான எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர். இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன், திராவிடம் – பெரியாரையும் எதிர்க்கிறேன் என்று இந்த பெரியவாள் அடித்து விடும் வார்த்தைகளால் தமிழ் ஃபேஸ்புக்கே வெட்கித் தலை குனிகிறது. காலஞ்சென்ற சுந்தர ராமசாமியின் தயவால் காலச்சுவடில் கருத்துபதேசம் பண்ணின பெரியவாள் இன்றைக்கு டி.வி.விவாதம் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரையும் படுத்தி எடுக்கிறார். அவாள் யாராக இருந்தாலும் விவாதத்திற்கு கூப்பிட்டே ஆக வேண்டும் என்று தமிழ் சேனல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்திரவு போட்டிருப்பதால் இந்த அடிமுட்டாள் பிரைம் டைம்மில் மனுதர்மத்தையே  மாத்திப் போட்டு பேசுகிறார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஐ.பி.எல் வர்ணனையில் சாதி பெயரை தெரிவித்தது ஒரு உதாரணம் தான். சாதி பெயர் கேட்கப்படாத ஐ.டி அலுவலகங்களிலும் இதை பார்க்க முடியும். அங்கு ஒரு தேவர் மற்றொரு தேவரையோ, நாடார் நாடாரையோ கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு அக்கவலையில்லை.காரணம் அவர்களின் பார்ப்பன மொழி, பண்பாடு. அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

பார்ப்பன மொழியை மீறி வேறு சில உபாயங்களையும் வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அணு குண்டு வெடித்தவர்களாயிற்றே!  ஐ.டி நிறுவன டீமில் புதிதாக சேருபவர்களில் ‘அவா’க்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கு ஒரு கையேடே வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக பேசிகொண்டிருக்கும் இடத்தில் “கொஞ்ச நாளா நான் சந்தியாவந்தனமே பண்றதில்லை”

“என்ன பாஸ் இன்னிக்கு லேட்.”

“வீட்டுல ஆவணி அவிட்டம்”

“உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும். இல்லையென்றால் கட்டிப்பிடிக்கும் “ஹக்” கலையின் மூலம் உள்ளே நெளியும் பூணூலை பாசத்தோடு அடையாளம் காண்பார்கள். பிறகு என்ன, அவா, இவா, ஆத்துல, காயத்ரி மந்திரம், தோப்பனார், அத்திம்பேர் என்று அவாளது கலைக்களஞ்சியம் கொஞ்சி விளையாடும். இந்த அவாள் மொழி பேசினால்தான் நாகரிகம் என்று சிலபல சூத்திரர்களும், பஞ்சமர்களும் முயற்சி செய்யும் சோகம் தனிக் கதை. தொலைக்காட்சிகளிலும், சினிமா உலகிலும் கூட இந்த பார்ப்பனியமயமாகும் தமிழின் அவலத்தைக் கேட்கலாம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். என்ற 20-20 வடிவம் ஒரு நவீன வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல ஐ.டி. வேலையும் அதன் வாழ்க்கையும் நவீனம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நவீனத்திலும் தொடர்பு மொழி என்னவோ பழைய பார்ப்பன பஞ்சாங்கங்கள்தான்.

****

சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் வெளிவந்த “காஷ்மீர் மன்னர்கள் ஆய் போன கதை” என்ற கட்டுரையில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் காஷ்மீர் மன்னர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய கதை குறிப்பிடப்பட்டிருந்தது. அது மன்னர் காலம். அதே போன்ற ஒரு கதை நாம் வாழும் காலத்திலும் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை கீழே படியுங்கள்.

நவம்பர்-23,2000-ஆம் ஆண்டில் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்தது.

ஆனால் இங்கு மன்னர் ஆடவில்லை. மன்னரின் புதல்வரான இளவரசர் கிரிக்கெட் ஆடினார். ஏழு நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகினார். இளவரசருக்கு அன்று மூட் சரியில்லாததால் அவுட் ஆனதை ஏற்றுக் கொண்டு பெவிலியனுக்கு நடையை கட்டினார். இல்லையெனில் காஷ்மீர் மன்னரின் நிலை தான். எதிர் அணியின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அந்த இளவரசர் வேறு யாரும் இல்லை. ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தான். மன்னர் அன்றைய ஹிமாச்சல் பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால்.

இப்போட்டி நடைபெற்றதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் அனுராக் தாகூர் ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பின்னர் தேர்வு குழுவின் தலைவராகவும் ஆனார்.

பிறகு என்ன? இதுவரை ரோட்டு ஓரத்தில் ‘ஒன்பிச் கேட்ச்’ கில்லி கிரிக்கெட் கூட விளையாடியிராத தன்னை ஹிமாச்சல் பிரதேச ரஞ்சி அணிக்கு தானே தேர்வு செய்து கொண்டார். பிறகு தன்னை கேப்டனாகவும் அறிவித்துக் கொண்டார். விளையாடவும் செய்திருக்கிறார். அந்த ஆட்டம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். நிச்சயமாக காஷ்மீர் மன்னரைவிட மட்டமாக இருந்திருக்கும்.

மாநில முதல்வரின் மகன் கிரிக்கெட் சங்க தலைவராகி, பின்னர் தேர்வுக் குழுவில் தன்னைத்தானே நியமித்துக் கொண்டு,  தன்னைத் தானே தேர்வு செய்து அதுவும் கேப்டனாகி கிரிக்கெட் விளையாடி டக் அவுட் ஆகியிருக்கிறார்.

விசயம் அதோடு முடியவில்லை. அந்த ஒரு மேட்சில் டக் ஆவுட் ஆனதை தகுதியாக கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தில் தேசிய அளவில் ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவரானார். கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தான் இடம்பெற முடியும் என்பது விதி. இளவரசர் கிரிக்கெட் விளையாடியதன் நோக்கமே இதற்குதான். பின்னர் அதை கொண்டு படிப்படியாக பி.சி.சி.ஐ. தலைவராகவும் உயர்ந்தார்.

தன் மீதான வழக்கை தானே விசாரிக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி; தன் மீதான குற்றத்திற்கு தானே விசாரணை கமிசன் அமைக்கும் தமிழக ஆளுநர்; தன்னை தானே ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.பி.

மேற்கண்ட மூவரும் பா.ஜ.க-வினர் அல்லது பா.ஜ.க. எடுபிடிகள் என்பது ஒரு யதேச்சையான ஒற்றுமை இல்லை. மேற்கண்ட செயலுக்காக இவர்கள் கடுகளவுக்கேணும் கூச்சமோ நாணமோ அடைவதில்லை. பா.ஜ.க.வினரின் டிசைனே அப்படித்தான்.

வேத காலத்தில் இணையம் இருந்தது, சேது பாலத்தில் குரங்கு போட்ட பாலம் இருக்கிறது, ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் அந்தக் காலத்து லைவ் ஒளிபரப்பு, அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் நைட்ரஜன் குண்டுக்கு இணையானது, பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட ஜோசியம் குறித்த படிப்பு அறிவியல் துறையின் கீழ் வருவது………… இன்னபிற கூத்துக்கள் நடைபெறும் நாட்டில் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட்டா இருக்கும்!

மற்ற நாடுகளில் ஆடப்படும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது. ஆம். இதன் பெயர் மனுதர்ம கிரிக்கெட்!

  • ரவி

Anurag Thakur, former Himachal CM’s son, turned HPCA into a company after benefitting from state largesse

 

29 மறுமொழிகள்

  1. சரி நீங்கள் என்ன முடிக்கு & கூந்தலுக்கு எல்லாருக்கும் கமெண்ட் பன்றீங்க அப்படியே உங்க … பெருத்த ….. மட்டும் சிறப்பா வர்ணனை செய்ய வேண்டியதுதானே?

  2. ஒவ்வோரு சொல்லும் உண்மை.
    //மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.// என் பலநா சந்தேகம் தீர்ந்தது.

  3. இந்தியாவை ஒரு முஸ்லீம் ஆள வேண்டும். அப்போது தான் இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்

  4. “உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும். —இது போன்ற சங்கேத வார்த்தைகளை வைத்து பேசுபவர்கள் ப்ராஹ்மணர்கள் மட்டுமே . முஸ்லிம்கள் இவ்வாறு பேசுவது இல்லை. முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து நமாஸ் செய்ய கூட செல்ல மாட்டார்கள்.

  5. எந்த நாடாரும் தேவரும் பறையரும் முஸ்லிமும் லைவ் டிவி யில் நான் தேவர் நாடார் முஸ்லிலிம் னு சொல்லி பாத்ததில்லை. பாப்பானுக மட்டும் தான் இப்படி பண்ரான்னுக.

  6. இந்து மன்னனோ முஸ்லிலிம் மன்னனோ பிரிட்டிஷ் காரனோ அனைவரின் ஆடசியிலும் செல்வாக்கு செலுத்தியது பார்ப்பனர்களின் வரலாறு. எஸ்.வி சேகர் என்ற கிரிமினலை கைது செய்யாமல் இருக்கும் காவல் துறை இதுவே ஒரு தமிழன் தவறு செய்திருவ்தால் எப்படி நடத்தியிருப்பார்கள்.

  7. இந்தியாவ எவன் ஆண்டால் தமின்னுக்கும் என்ன? எவனும் தண்ணி தரமாடடான். நீடடை திணிப்பான். இந்தியாவை எவன் ஆளுவது என்று கவலையை விட தமிழனுக்கு எதிரிகளான ஆர்.எஸ்.எஸ் , மோடி போன்றவர்களுக்கு கருப்பு கோடி காட்டி விரட்டி அடித்ததை போன்று அடுத்து என்ன செய்து தமிசகத்தின் நலனை பாதுகாப்பது என்று யோசிக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவை ஆதரிப்பவர்களை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும்.

  8. முஸ்லிம்களுக்கென்று தனி தமிழ் இல்லை .அழகான தமிழில் பேசுவார்கள்.எந்த ஊரில் இருக்கிறார்களோ அந்த ஊரின் சாயலோடு பேசுவார்கள்

  9. சமீப காலமாக நன்றாகப் புராணச் சொற்பொழிவு செய்யும் ஒரு பிராமணரல்லாத பெண்மணி வேண்டுமென்றே ” பேஷினா! யோஷிப்பா! பஷி” என்று பேசுகிறார்!

    சினிமா விரும்பி

  10. முஸ்லிம்னு குல்லா போட்டுட்டு வராங்களே!வணக்கம் சொன்னா திரும்ப வணக்கம் சொல்றதில்லையே?அதெல்லாம் என்ன?

  11. 11 முட்டாள்கள் விளையாடுவதை,
    11 ஆயிரம் முட்டாள்கள் பார்ப்பதே கிரிக்கெட் என்றார் பெர்னாட்சா.
    தோழர்கட்கும் நேயர்கட்கும் சில தகவல்கள்:
    1. பிரிட்டனின் காலனி நாடுகள் மட்டுமே கிரிக்கெட்டை விளையாட்டாகக் கருதுகின்றன.
    2. பிரிட்டனின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உடலில் சூரிய ஒளி வெகுநேரம் பட உருவாக்கப்பட்டதே ஐந்து நாள் விளையாட்டு.
    3. காலனி நாடுகளில் நிலவும் வெப்பத் தினால் ஒரு நாள் ஆட்டம், பின் பகலிரவு ஆட்டம், இருபது ஓவர் என மாற்றப் பட்டு இன்று தேசவெறி யூட்டுவதற்கும் சூதாட்டத்திற்கும் பயன்படுகின்றது.
    3. கிரிக்கெட்டில் சாதனைகள் என்பவை புள்ளி விவர சோதனைகள்.
    4. பதினோரு பேர் விளையாட்டாக இருப்பினும் அதிக பட்சமாக ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே செயலில் இருக்கும் சோம்பேறிகளின், மேட்டுக்குடி யினரின் பொழுது போக்கு இன்று உழைப்பை வெறுக்கும் கும்பல் கையில் சிக்கியுள்ளது.

Leave a Reply to nivi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க