தூத்துக்குடியிலிருந்து வழக்குரைஞர் அரிராகவன் பேசுகிறேன். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் முன்வைக்கக்கூடிய மிக முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால், நாளைய தினம் கூட்டமைப்பின் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்களுடைய முடிவை நயவஞ்சகமாக தடுப்பதற்காக காவல்துறையை தமிழக அரசு ஏவிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இன்று காலை புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்ற சமூக ஆர்வலரை புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர், கைது செய்துள்ளனர். நாளைய போராட்டத்தை ஒடுக்கும் விதமாக முன்னணியாக உள்ளவர்களை கைது செய்து இந்தப்போராட்டத்தை நீர்த்து போக செய்ய தமிழக அரசு காவல்துறை மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. எனது வீட்டிற்கும் இன்று காலை சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் சுமார் ஐந்து ஆறு போலீசார் சென்றுள்ளனர். எனது மனைவியிடம் என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். என் மனைவி நான் வெளியூர் சென்றுள்ளதாக சொல்லியதால், காவல்துறையினர் சென்றுள்ளார்கள். என் மனைவியை விசாரணை செய்யும்பொழுது, அவர்களை காவல்துறையினர் போட்டோ எடுத்துள்ளனர். எனது மனைவி அதனை தட்டிக் கேட்டுள்ளார். காவல்துறையினர் மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த போக்கு என்பது, மக்களுடைய 22 ஆண்டுகாலம் ஸ்டெர்லைட்டினால் பாதிக்கப்பட்டு ஒரு முடிவை எட்டும் நிலையில், தமிழக அரசு காவல்துறையை வைத்து முன்னணியாளர்களை கைது செய்வது சட்டப்படி தவறு. ஒரு ஜனநாயக நாட்டில், மக்களை பாதிக்கக்கூடிய தொழிற்சாலையை மூட வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தால், அதை அரசு செவிமடுத்து, அதை பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவதுதான் சிறந்தது ஆகும். அதைவிட்டுவிட்டு முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க அரசு முயல்கிறது.

நாளைய தினம் நடக்க இருக்கின்ற இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என்பது தூத்துக்குடி மக்கள் காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி செல்லவிடாமல், காவல்துறை முயற்சி மேற்கொண்டிருப்பதால், தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும் சங்கங்களும் அமைப்புகளும் காவல்துறையினுடைய இந்த கைதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம். தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாப்பாக அரணாக விளங்கினால்தான் இந்தக் கைதை கண்டித்தால்தான் நாளைய போராட்டம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்கள் ஒன்றுசேரும் ஒரு போராட்டமாக அமையும்.

இல்லாவிட்டால், இந்தப் போராட்டம் என்பது காவல்துறையால் அடக்கி ஒடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இதை உணர்ந்து தமிழக மக்கள் எங்களுக்கு அரணாக இருந்து நாளைய போராட்டத்தை நாங்கள் நடத்தி செல்ல உறுதுணையாக இருக்கும்படி எங்களது ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

 

3 மறுமொழிகள்

  1. டேய் காவி தீவிரவாதி, இங்கேயும் வந்துட்டீங்களா மக்களை பிளவு படுத்த… உங்களுக்குன்னு சொந்த முகமே கிடையாதாடா?

Leave a Reply to thendral பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க