ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாளான எடப்பாடி அரசின் போலீசு, போராடும் மக்களையும், உடன் நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களையும் கைது செய்ய நள்ளிரவில் வீடு வீடாகத் தேடி அலைகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதன் பிறகான அடக்குமுறைகளை ஒரு தனி ’மாடலாக’க் கொண்டு, தமிழகம் முழுவதும் போராடும் மக்களை ஒடுக்க எத்தனிக்கிறது அதிகார வர்க்கம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், மக்கள் அதிகாரத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் கண்டித்துப் பேசுகிறார்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

பாருங்கள், பகிருங்கள்!

தூத்துக்குடி அடக்கு முறை பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்


அரசுகளின் சதிச் செயல் தோழர் முத்தரசன் கண்டனம்