மறக்க முடியுமா கடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தை ? தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீயாய் கொழுந்து விட்டு எரிந்தன !
அப்பெரும் நெருப்பைப் பற்ற வைத்த சிறு பொறி எது? அது அனிதா என்ற 12-ம் வகுப்புப் படித்த ஒரு சிறுமிதான். தமது லட்சியம் தன் கண் முன்னேயே கருகியதைக் கண்டு தாங்கமுடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டதன் மூலம் இந்த அதிகார வர்க்கத்தின் மீது காறி உமிழ்ந்தாள் அனிதா!
தமிழகமெங்கும் போராட்டத் தீ பற்றி எரிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் நீரோக்கள் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் நெருப்புக்கும் மதிப்பு இல்லை. இன்று அனைவரின் குரல்வளையும் நெறிக்கப்படுகிறது. என்ன செய்யப் போகிறோம் ?
அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | நிகழ்ச்சி ஏற்பாடு : தன்னாட்சித் தமிழகம்.
பாருங்கள், பகிருங்கள் !