இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை விவாதத்திற்கு வந்திருக்கின்றன.
தொற்று நோய் தடுப்பு, ஆயுள் சராசரி கூடியது, குழந்தை – பிரசவகால மரணங்கள் வெகுவாக குறைந்திருப்பது, ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம், சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக்கியிருப்பது… என அறிவியலால் வழிநடத்தப்படும் நவீன மருத்துவம் பல சாதனைகளைச் செய்து வருகின்றது.
இன்னொருபுறம் வாழ்க்கை முறை – உணவுப் பழக்கம் மாற்றம், நுகர்வுக் கலாச்சார போதை காரணமாக மக்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளை நாடுவதும் அதிகரித்திருக்கிறது. முந்தைய காலத்தில் இத்தகைய நவீன மருத்துவம் இல்லாததால் சாதாரண நோய்களுக்கே மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தனர்.
உலகமயத்தின் காலத்தில் சுகாதாரம் என்பது அரசின் சேவைப் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்டு வணிக சேவையாக மாற்றப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. மறுபுறம் அரசு மருத்துவமனைகளை திட்டமிட்டே நலிவடையச் செய்கிறார்கள். அரசின் கொள்கை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை ஆகிய இப்பிரச்சினைகளை ஆங்கில மருத்துவத்தின் தவறாக சித்தரித்து பல்வேறு போலி வைத்தியர்கள் பெருகிவிட்டனர். இவர்களும் மக்களிடம் முடிந்த மட்டும் கொள்ளையடிக்கின்றனர்.
இத்துடன் கூடவே சிலர் நவீன மருத்துவத்தை இலுமினாட்டிகளின் சதி என்று கதைகள் பல உருவாக்கி உலாவ விட்டிருக்கின்றனர். அதில் பெரியார் கொள்கைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்போடு சேர்த்து, வல்லரசு நாடுகளின் சுரண்டலை ஏதோ சில தனிக் குடும்பங்கள் – அதுவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே – செய்துவரும் சுரண்டலாக புரளி கிளப்புகின்றனர்.
இவை எல்லாம் சேர்ந்துதான் இன்று திருப்பூர் கிருத்திகாவை கொன்றிருக்கிறது.
நவீன மருத்துவமும், அரசு மருத்துவமனைகளை நலமாக வைத்திருப்பதும்தான் நமது நலத்தைக் காப்பாற்றும் என்பதையும் இலுமினாட்டி சதிக் கோட்பாட்டாளர்களின் பின்னணியையும் அறியத் தருகின்றது இத்தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரிசாலனையும் கைது செய் !
- பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை !
- பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
- அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
- இந்தியாவின் பழங்கால பிரசவ கொடுமைகள்
- ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?
- மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
- ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
- ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
- மருத்துவத் துறையை சீரழிக்கும் தனியார்மய வைரஸ் !
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்
வினவு, பாரிசாலனையும் பாஸ்கரையும் விடுங்கள். பிரசவ வைத்தியம் தொடர்பான உங்கள் நிலைப்பாடு தன என் நிலைப்படும்.முறையான வைத்தியம்தான் உயிர்காக்கும். உண்மைதான். ஆனால் வல்லரசு சுரண்டுகிறது வல்லரசு சுரண்டுகிறது என்று கூறுகிறீர்களே, எதைத்தான் ‘வல்லரசு’ என்று குறிப்பிடுகிறீர்கள்? உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுப்போம். அமெரிக்க அரசாங்கமா? அமெரிக்க ராணுவமா? அமெரிக்க ஏழை/மத்தியதர வர்க்கமா? பணக்கார வர்க்கமா? அதிஉச்ச பணக்கார வர்க்கமா? அமெரிக்க அரசியலை தீர்மானிக்கும் கார்பரேடுகளா? அவற்றின் விதியை தீர்மானிக்கும் வங்கிகளா? அல்லது வங்கிகளை கட்டுப்படுத்தும் யூத குடும்பங்களா???
முதலில் நான் கூட தான் சாதாரண அமெரிக்க மக்களை கூட சுரண்டி தின்னும் போர் வெறியர்கலாகவே எண்ணி இருந்தேன், ஆனால் அவர்கள் அப்படி பயிற்றிவைக்கப்பட்ட மந்தை என்பதே உண்மை, அனைத்தின் பின்னாலும் யூதனே ஒளிந்திருக்கிறான். ஆதாரங்கள் உண்மைகள் நிறையவே உண்டு. ஏன் உங்களுக்கு கூட தெரியும் அமெரிக்காவில் யார் ஜனாதிபதி என்பதே ஆண்டவர் தேசம் தான் முடிவு பண்ணும். பாரிசாலன் பாஸ்கர் போன்றோர் இல்லுமினாட்டி என்ற வார்த்தை உபயோகிப்பது தவறுதான், அவர்கள் உபயோகிக்க வேண்டிய வார்த்தை ‘சயோனிச யூத கும்பல்’.
உண்மை திரித்து கூறப்பட்டால், அதை சரியாக வெளிப்படுத்துவது தான் உங்களை போன்ற மக்கள் நேச சக்திகளுக்கு அழகு. அதை விடுத்து இப்படி ஒரேயடியாக போட்டு மூடுவது சந்தேகம் தான் உண்டாக்குகிறது. இல்லுமினாடி பினாத்தல்கள் இல்லாமல் யூதர்கள் பற்றி ஒருகட்டுரை வேண்டுமானால் எழுதுங்கள், எப்படி கிட்டத்தட்ட அனைத்திலும் அவர்கள் அதிகம் செலுத்துகிறார்கள் என்பதை பற்றி (முக்கியமான இணைய ஆபாச பட வலையமைப்பு 95% யூத உற்பத்தியே, கணிசமளவு ஆபாச நடிக நடிகை தயாரிப்பாளர்களும் யூதர்களே, வெறும் பணம் மட்டும் இதன் குறிக்கோள் அல்ல)
ஒரு கட்டுரை வரையுங்களேன் பார்ப்போம், தகவல் இல்லையா ? பயமா ?
நவீன மருத்துவம் விஞ்ஞானப்பூர்வமானது என்று நிரூபிக்க.ஹாலோபதி மருத்துவத்திற்கு ஆதாரம் தேடும் நோக்கத்தில் ஹாலோபதி மருத்துவமனை,நரிக்குறவர்கள் இடமெல்லாம் போய் ஆதாரங்களை திரட்டி பல கட்டுரைகள் வெளி விற்றுகிங்க.
இப்போ இயற்கை மருத்துவம் தான் விஞ்ஞானப்பூர்வமானது என்று சொல்லுபவர்களின் கருத்தையும் சேர்த்து வெளியிட்ட நல்லஇருக்கும்.நவீன் பாலாஜி,உமர்ஷாருக் அக்குபஞ்சர்,அல்மா சித்தமருத்துவர் மதுரை,தணிகாசலம் கோடம்பாக்கம் சித்த மருத்துவத்திலும் மருத்துவம் பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறங்க அவர்களிடமும் இப்படியொரு கருத்துக்கணிப்பை நடத்த தயாரா?
ஒரு சார்பு கருத்துக்களை மட்டும் வெளியிடுவது இன்னொரு சார்பு கருத்துக்களை பேசவே அனுமதிக்க மாற்றிங்க இது எந்த வகையில சரியானது.
இந்த லட்சணத்துல அரசுக்கு எதிரா கருத்து சொல்றவங்களை .பொய்வழக்கு கருப்புச்சட்டங்கள் மூலம் இந்த அரசு சிறையில் அடைத்து அடக்குமுறை செலுத்துகிறது என்று அடக்குமுறைதான் ஜனநாயகம்? மாநாடு வேற நடத்துறீங்க.
100க்கு 58 பேருக்கு சிசேரியன் நடக்கிறது தெலங்கானாவில். அதாவது 58 பேருக்கு ‘அறுவை சிகிச்சை’ செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்
இது நம்பும்படியாகவா இருக்கிறது ? அறிவியல் வணிகம். இதில் ‘அறுவை சிகிச்சைக்கு’ EMI லோன் ஏற்பாடுகளும் மருத்துவமனைகளே செய்து கொடுக்கின்றன
அறிவியலுக்கு சலாம் போடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அப்போ அப்போ ‘வியாபாரத்தையும்’ சேர்த்து எழுதுங்கள்