டந்த அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் எனத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி கேரளத்தில் காலூன்ற பார்க்கும் பா.ஜ.க., இந்துத்துவ ரவுடிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறது.  மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் போர்வையில் ஆர்.எஸ். எஸ். குண்டர்கள் சபரிமலையில் தங்கி பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது திருவாங்கூர் தேவசம் போர்டு.  சபரிமலை கோயிலை நிர்வகித்துவரும் இந்த போர்டு, அடிப்படையான சில வசதிகளை செய்து தரவேண்டியதன் காரணமாக கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.  இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சச்சரவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் இப்படி தெரிவித்திருக்கிறது.

போராட்டக்காரர்கள் என்கிற பெயரில் சபரிமலையில் குவியும் ஆர்.எஸ். எஸ். குண்டர்களை கைது செய்துவருகிறது கேரள இடது முன்னணி அரசு. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் பக்தர்களின் வழிபடும் உரிமையில் கேரள அரசு தலையிடுவதாக தெரிவித்துள்ளன.  இதற்கு பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “கைது செய்யப்பட்டவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல, சன்னிதானத்தில் ஆர்.எஸ். எஸ். காரர்கள் முகாமிட்டு, பிரச்சினையை உருவாக்கப் பார்க்கிறார்கள். சபரிமலையில் பிரச்சினை உருவாவதை அரசு பார்த்துக் கொண்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரட், மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தங்களுடைய மதவாத அஜெண்டாவை செயல்படுத்த முனைவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

“ஆர்.எஸ். எஸ்.  – பா.ஜ.க. கூட்டு சேர்ந்து வடக்கில் அயோத்தி பிரச்சினையையும் தெற்கில் சபரிமலை பிரச்சினையையும் ஊதிப் பெரிதாக்கி மதவாத பதற்றத்தை உருவாக்கப் பார்க்கின்றன. இதன் மூலம் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இதை முறியடிப்பதே நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி” எனத் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் பெயரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று சந்நிதானத்துக்கு அருகே பக்தர்கள் வேடமிட்ட கயவர்கள் சுமார் 50 பேரை போலீஸார் கைதுசெய்தனர். உடனே பக்திக்கு ஆபத்து என இந்துத்துவவாதிகள் கிளப்பிவிட்டனர். இது தொடர்பான வழக்கு நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராமசந்திர மேனன் மற்றும் அனில் குமார் அடங்கிய அமர்வின் முன்பு வந்தது.

அப்போது நீதிபதிகள், சபரிமலையில் போலீஸாரின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர். கோயில், பக்தர்களுக்கானது. அவர்களை அங்கு தங்கக் கூடாது என யார் உத்தரவு பிறப்பித்தார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை செய்தனர்.  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 144 தடை உத்தரவை மீறிச் செயல்பட்டவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். கேரளாவின் பொதுப்புத்தி என்பது நீதிமன்றம் முதல் ஓட்டுக் கட்சிகள் வரை பக்தி, சம்பரதாயம் என்றே இருக்கிறது. இல்லையேல் நீதிமன்றம் குண்டர்களை பக்தர்கள் என்று நம்பியிருக்குமா?

இந்நிலையில், 1000-க்கும் அதிகமான பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இத்தனை சச்சரவுகளுக்கு நடுவிலும் தங்களுடைய வழிபடும் உரிமைகளை பெற விரும்பும் இந்தப் பெண்களுடைய பக்தியை பழிக்கிறது இந்துத்துவ அடிப்படைவாத கும்பல். இந்து மதமே பெண்களுக்கு எதிரானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

13 மறுமொழிகள்

  1. இந்த கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் ஹிந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டி கொண்டே இருப்பார்களாம் அதற்கு ஹிந்துக்கள் அமைதியாக இருக்க வேண்டுமாம்…. அந்த காலம் மலையேறிவிட்டது, இனி ஹிந்துக்கள் பொறுமையாக இருக்க மாட்டோம்.

    • சார்வாள் நீங்க பொறுமையை இழந்துட்டேள்னா ஊருக்குள்ள கைப்புள்ள நம்மளுக்கு இனி ஜோலி இல்லேன்னு கோபிசத்சுண்டு காலி பண்ணி போயிடப் போறான். பொறுத்தார் புரட்டாள்வார் சாரி சாரி, பூமியாள்வார்! பாத்து இருங்கோ

  2. சரி உங்களை போன்றவர்களுக்கு துலியாவுது நேர்மையிருந்தால் அந்த 1000 பெண்களில் எத்தனை பேர் உண்மையான ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள பக்தர்கள், எத்தனை பேர் விளம்பரத்திற்காக வர விரும்புகிறார்கள், எத்தனை பேர் மதவெறி பிடித்த கிறிஸ்துவர்கள் என்ற விவரங்களை சொல்ல முடியும்மா ? அந்த நேர்மை உங்களை போன்றவர்களுக்கு இருக்கிறதா ?

  3. மணிசார் ஏன் டென்சனாரேள்? கலிகாலத்துல கோயிலுக்கு வர பிள்ளையாண்டாள் குறைஞ்சுண்டே போறாள். முன்ன கலரு பிகருன்னு கோவிலுக்கு வந்த இளவட்ட ஆம்படையானெல்லாம் ஃபேஸ்புக்கல ஸ்ட்ரைட்டா கடலை போடறன். பொம்மனாட்டிங்களும் அப்டித்தான் மாறிண்டு வாறான். இந்த இலட்சணத்துல சாஸ்தா கோவில்ல பொம்மானாட்டிங்க வரதை எதிர்க்கிறது லாஜிக்கா இடிக்கிறதில்லியோ? கிறிஸ்டியானிட்டியில சண்டே மாஸ்ல எல்லாரும் போறாளில்லையா? நம்ம இந்துதர்மத்தையும் அப்டி மாத்தணுமோ இல்லியோ? இப்டி சில்லறையா சண்டே போடாதேள்!

    • அய்யப்பன் கோவில், திருப்பதி என்று நாட்டில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களுக்கும் பல ஆயிரம் பேர் தினமும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

      உங்கள் சர்ச்சுகளில் ஈ அடிக்கிறது அதை பாருங்கள். கிறிஸ்துவராக மதம் மாறிய பலரும் இன்றும் ஹிந்துக்களாகவே இருக்கிறார்கள், தினமும் சிவன் பெருமாள் கோவில்களுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்…

      • மணி ஷார் ஏன் இப்படி காண்ட் ஆறேள்? இப்போ கஜா வந்து நாசம் பண்ணின நம்ம காவிரியாத்து தஞ்சை ஜில்லாவையே எடுத்துக்குங்களேன். பல ஷேத்ரங்கள செத்த போய் பாத்தேள்னா, அங்க பாவப்பட்ட நம்ம வாத்தியாரும், பறக்க கூட த்ராணியில்லாத வெவ்வாலுங்கதான் இருக்குதுங்கன்னு இந்த கம்யூனிஸ்டு படவாள் கேலி பண்றதெல்லாம் உண்மையில்லையோ இன்னோ? திருப்பதி பணக்கார சாமி, திருவிளக்கு ஏத்தறதுக்கு கூட வழியில்லாத கோவிலுங்களை அவா ஒரு பட்டியலே போட்டிருக்காளே பாத்தேளா? தீட்சிதர் சிதம்பரம் கோவில் மண்டபத்துல சரக்கடிக்கிறான், தேவநாதன் பிகர் அடிக்கிறான், கொன்னு போட்ட ஜெயேந்திரன் போய்ச் சேந்தான்ன்னு நம்மவாள அவா நாஸ்தி பண்ணிண்டு இருக்கச்சே நீங்க செத்த அடக்கி வாசிக்கிப்படாதோ?

  4. Manikandan சார யாராலயும் முந்தவே முடியாது!!!!
    என்ன புத்திஷாலி ஊர்க்கண்ணே பட்டறபோர்து உக்காந்து மாமிய ஷுத்திப்போடச்ஷெள்ளுங்கோ.

  5. மணிகண்டன் முன்வைத்த கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் அக்ரகாரத்து மொழியில் கிண்டல் செய்வதால் என்ன பயனுள்ளது.. அக்ரகாரத்து தமிழ், அசிங்கமான சேரி பாஷை இதனை தவிர்த்து முறையான விவாதத்தினை மேற்கொள்ளவும் .

  6. மணிகண்டன் ஷார் கேள்வி கேட்டாருன்னு நீங்க சொல்றதே பெரிய அபச்சாரம், அவதூறு. அவா ஏதோ ஐஞ்சு பத்துக்கு ஐம்பது நூறு காப்பிபேஸ்ட்ட வெச்சுண்டு ஜீவன்த்த ஓட்றா? அதையும் கெடுத்துராதீங்கோ! அப்புறம் அசிங்கமான சேரி பாஷைன்னு பிக்பாஸ் காயத்ரி மாதிரி தத்துபித்துன்னு உளறுனீங்கன்னா இத வெச்சே உங்கள தலித் விரோதின்னு ரவுண்டு கட்டிடுவாள்!

    • கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க துப்பில்லை இதில் வெட்டி பேச்சு வேற… உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் போல் மற்றவர்களை நினைக்க வேண்டாம்… முதலில் உங்கள் கிறிஸ்துவ மதமாற்றிகளை பணம் கொடுப்பதை நிறுத்த சொல்லுங்களேன் பார்ப்போம் நீங்கள் உட்பட அனைவருமே கிறிஸ்துவ மதத்தை விட்டு தலைதெறிக்க ஓடிவிடுவான்… பணத்திற்காக மட்டுமே செயல்படும் உங்களை போன்ற கிறிஸ்துவர்களுக்கு மற்றவர்களை பார்த்தாலும் இப்படி தான் பேச தோன்றும்.

  7. அக்ரகாரத்து தமிழ், அசிங்கமான சேரி பாஷை இதனை தவிர்த்து முறையான விவாதத்தினை மேற்கொள்ளவும் .// rebecca mary அவர்களே உங்களது பதிவில் அது என்ன “அசிங்கமான சேரி பாஷை” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? என்ன அசிங்கத்தை சேரி பாஷையில் கண்டீர்கள்??? எத்தனை கேவலமான சிந்தனை உங்களது? நீங்கள் யாருக்காக மறுமொழிகளை பதிவுசெய்கிறீர்கள் என்பது மீண்டும் மீண்டும் ஒரு முறை உங்களால் உங்களையே அம்பலப்படுத்தியுள்ளீர்கள்!!!அதைவிட அக்கிரகாரத்து மொழியை பலர் பகடிசெய்தே பதிவு செய்கிறோம், ஆனால் நீங்கள் அக்கிரகாரத்து தமிழ் என்று பொதுவாக மேன்மைபடுத்தி ‘அசிங்கமான சேரி பாஷை’ என்றும் கேவலமாக கொச்சையாக எழுதியுள்ளீர்கள்….
    முறையான விவாதத்திற்கு நான் தயார்….. அதற்க்காக நீங்கள்?????

    • அக்ரகாரத்து கேவலமான தமிழும் வேண்டாம் , ஒரு Flow இல் இதனை குறிப்பிட மறந்து விட்டேன் …..

      • rebecca mary அக்ரகாரத்து கேவலமான தமிழும் வேண்டாம் , ஒரு Flow இல் இதனை குறிப்பிட மறந்து விட்டேன் ///என்பது சரிதான் ஆனால் முந்தைய பதிவில் ‘அசிங்கமான சேரி பாஷை’ என்று பதிவிட்டுள்ளீர்கள் அது பற்றிதான் எனது முந்தைய பதிவு ஆனால் அதை எளிதாக கடந்த செல்கிறீர்கள் இந்த போக்கு சரியா? இதுதான் உங்களது உண்மையான யோக்கியதை…. மேலும் ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டது போல முறையான விவாதம் எங்கே? பார்ப்பன கைக்கூலித்தனத்தை விடுத்து நேர்மையாக விவாதிக்க முயற்சி செய்யுங்கள்….. நன்றி

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க