ருமுடி தாங்கி கெடுமதியோடு அய்யனை காண பரிவாரங்களோடு போனார் பொன்னார்.  சபரி மலை அய்யப்பன் கோயிலை ஆர்.எஸ்.எஸ்-ன் கலவர மேடையாக்கி வரும் காவிகள், எங்களையா தடுக்குற பாரு! அண்ணன கூப்புட்டு வரோம் என்று புடைசூழ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தாரு பொன்னார் என்று திட்டமிட்ட வேலையோடு பின்னால் வர, விதி வேறு மாதிரி  விளையாடிவிட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஷ் சந்திரா, நிலவும் தடை உத்தரவு விவரங்கள், அமலில் இருக்கும் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கவனத்துக்கு உள்ளாக்கினார். அமைச்சர் காரில் செல்ல தடை இல்லை அனுமதி உண்டு போகலாம்! திரண்டு வந்திருக்கும் பா.ஜ.க. பரிவாரங்களுக்கு வாகனத்தை அணிவகுக்க அனுமதி இல்லை, மற்ற பக்தர்களைப் போல அரசுப் பேருந்தில் அவர்கள் செல்லத் தடையில்லை எனச் சட்டப்படியான விளக்கங்களை சுட்டிக் காட்டினார்.

இருமுடியும் பக்தியும் இல்லாதவர்களுக்கு அய்யப்பன் கோயிலில் என்ன வேலை என்று மற்றவர்களைப் பார்த்து கேட்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அமைச்சரை சாக்கிட்டுக் கொண்டு அங்கே திரள்வது எந்த வகை மனுதர்ம நியாயமோ? தூத்துக்குடியில் ஒருவர் தும்மினால் கூட யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றும், சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து என்றும் அடிக்கு ஒருதரம் கூவும் பொன்னார் வகையறாக்கள் தாங்களே பீத்திக் கொள்ளும் மதிக்கப்பட வேண்டியதாய் சொல்லும் சட்டம் ஒழுங்கின் படி நடக்கச் சொன்னதையே அமைச்சரை அவமரியாதை செய்து விட்டதாக புளுகாச்சி காவியத்தை அவிழ்த்து விடுகிறது காவிக் கும்பல்.

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

சங்கிகளுக்கு சற்றும் குறையாமல் கடுமையான கட்டுப்பாடுகளால் சபரி மலையில் பத்தர்கள் வருகை குறைந்தது என்றும் சந்தடி சாக்கில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலைக் கோயிலுக்கு செல்ல பத்து முதல் அய்ம்பது வயது வரையிலான பெண்களுக்கு தடையிருந்தது. இது ஒரு பிரிட்டீஷ் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது என தமிழ் இந்து தடி எடுத்து கொடுக்கிறது.

யதீஷ் சந்திரா, ஐ.பி.எஸ்.

இப்படி பக்தர்கள் கூடுமிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அன்றாடம் சரண கோசம் பார்ப்பன மத வெறி போராட்டம், நாமா வளி பூசை, எங்களை மீறி யாராவது வந்தால் மரண கோசம் என அயோத்தி போல அட்டூழியம் செய்து அச்சுறுத்தும் காவிக் கும்பல்; அதன் அமைச்சர் பொன்னார்; சபரி மலை புனிதத்தை அழிக்கும் முயற்சி என கேரள அரசின் மீதே பழியை திருப்பி போடுகிறார்கள்.

மக்களால் கழுவி கழுவி ஊத்தப் படுவதை தவிர வேறு எந்த புனித தீர்த்தத்தாலும் பாவங்களை கழுவிக்கொள்ள முடியாத பா.ஜ.க. சபரி மலை விவகாரத்தை வைத்து புனிதம் தேடவும் அன்றாடம் தனக்கான நியூஸ் வேல்யூவ்வை ஏற்றிக் கொள்ளவும் சொகுசாக அரசு பாதுகாப்போடு கோயிலுக்கு போய் வந்ததைக் கூட ஒரு போராட்டம் போல சித்தரித்து, பொய் பிரச்சாரத்தின் மூலம் ஏதோ இந்துக்களின் பக்தி உரிமைக்கு கேரளா அரசால் பங்கம் வந்துவிட்டதைப் போல கள்ள ஆட்டம் ஆடுகிறது.

ஒவ்வொரு பா.ஜ.க. அமைச்சர்களும் தொகுதிக்குப் போய் மக்களைச் சந்திப்பதை விட சபரி மலைக்கு போவதிலேயே குறியாய் இருப்பதும் அங்கு வந்து சொகுசாக சாமி கும்பிட்டு விட்டு படியை விட்டு இறங்கியவுடன், படாத பாடு! சபரி மலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடு என்று பத்தர்களை படாத பாடு படுத்தும் இந்த காவிகள் டி.வி.க்கு பேட்டி தருவது ஒரு பிழைப்பாகவே இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த சீன் தான் இப்போது பொன்னார் விவகாரம்.

அமைச்சருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று சங்கிகள் என்னதான் சவுண்டு கொடுத்து ‘இந்துக்களை’ உசிப்பி விடப் பார்த்தாலும், பொன்னாரின் ‘இருமுடிக்கு’ அவர் தலையை தாண்டும் சக்தி இல்லை. ஏத்தி விடப்பா! தூக்கி விடப்பா! என்று என்னதான் சங்கிகள் டெரர் காட்டினாலும் ‘ஒழுங்கா பஸ்சை பார்த்து போங்கப்பா, இல்லை கேச போடுவன் வாங்கப்பா’ என்ற எஸ்.பி.யின் உத்தரவுக்கு முன்பு பா.ஜ.க-வின் போங்காட்டம் அடங்கி விட்டது. திரும்பி வரும் போது போலீசின் வாகன சோதனையையும் ஒரு பிரச்சனையாக்கி பிலிம் காட்டலாம் என்ற பொன்னாரின் எண்ணமும் மண்ணாகிப் போனது. பாவம்! பச்ச மண்ணு கோயிலுக்கு போய் அழுதாராம், இருக்கலாம்! “நான் பாட்டுக்கு சாமி கும்பிட்டு போய் இருப்பேன்  என்ன ஒரு சந்துல இழுத்துவிட்டு இப்போ என் அண்ணன் கிட்ட பேசிப்பாருடானு கடைசில மூஞ்சில எதையோ பூசிகிட்ட அவமானம் அவருக்கு இருக்காதா? பின்னே!

இந்த இடத்தில் எச்சு ராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளையார் ஊர்வலத்தில், தடையை மீறி போகாதீர்கள் என தயை கூர்ந்த தமிழகத்து காக்கியிடம், “இந்துக்கள்னா எளப்பமாங்குறன்? மானம் இல்ல!, பாதிரியார் கிட்ட காச வாங்கிட்டு தடுக்கிறிங்களே! குட்கா ஊழல் டி.ஜி.பி. வீட்டுல ரைடு நடக்கறது! உங்களுக்கு வெட்கமா இல்ல? ஆல் ஆர் கரப்சன்! கோர்ட்டாவது மயிராவது” என்ற சண்ட பிரசண்ட கோவம் எங்கே? பொன்னாரின் சன்னிதான அழுகை எங்கே? தங்கள் கைக் காசை செலவு பண்ணியாவது ஒவ்வொரு இந்து டேஷ் பக்தர்களும் எச்சு ராஜாவை யதீஸ் சந்திரா வழி பம்பைக்கு அனுப்ப வேண்டியது பக்தாளின் கடமை. சாதுவாகக் காட்டிக் கொள்வது, கோபமாக பேசுவது ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் வன்மத்தின்
வெவ்வேறு வடிவங்கள். உள்ளடக்கம் குரூரமும், இந்து பாசிசமும்தான்.

ஊரை இழந்து உறவை இழந்து உயிரையும் இழந்து தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் மக்கள், அரசின் அலட்சியத்திற்கு எதிராகப் போராடுவதைப் பார்த்து வன்முறை, போராட்டம் தேவையில்லை என புத்தி சொல்லும் பொன்னார், ஒரு கோயிலுக்கு சகல வசதிகளுடன் போய் வந்ததையே ஒரு பிரச்சனையாக்கி தன்னை அவமதித்து விட்டதாக அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என்று வெறியாட்டம் ஆடுவதை விட ஒரு சமூக விரோத வன்முறை இருக்க முடியுமா?

படிக்க:
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன? இந்துக்களின் சொத்து கோயில் என்று கூவும் இந்தக் கும்பல் வீடு வாசலை இழந்த டெல்டா மக்களுக்காக கோயிலை திறந்துவிட போராடத் தயாரா? கஜா புயலை யாரும் அரசியலாக்க கூடாது என்று மக்கள் உரிமைகளை ஒடுக்கும் இந்தக் கும்பல் சபரி மலையை அரசியலாக்குவது மட்டும் சரியாம்!

துரை. சண்முகம்
கண்ணுக்கு நேரே நமது தமிழக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான ஒருவர் தமது எடுபிடிகளுடன் போய் அங்கே தங்கி மக்களுக்கு வேலை செய்யாதது அவருக்கு  அவமானமாகப் படவில்லை, இருமுடி கட்டிக்கொண்டு கோயிலுக்கு போன இடத்தில் ரெண்டு கொசு கடித்துவிட்டதாம்! அதுதான் இப்போது அவமரியாதையாம்! அதற்காக முழு அடைப்பாம்! எவ்வளவு வக்கிரம் பிடித்த ஒரு பாசிச கட்சி இந்த பா.ஜ.க. என்பதை பொன்னாரை விட வேறு யார் இவ்வளவு பொருத்தமாக நமக்கு விளக்க முடியும்?