டிகர் ரஜினியை யாரும் சந்தித்து நேர்காணல் எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டுமென்றால் அவர் படம் சமீபத்தில் வெளிவந்திருப்பது ஒரு நிபந்தனை. நேர்காணல் மட்டுமல்ல ரஜினியின் பத்திரிகை செய்திகளுமே கூட படங்களுக்கான முன்னோட்ட விளம்பரத்திற்காக மட்டுமே வரும். காலாவிற்காக தூத்துக்குடி சென்றவர் பிறகு காலியானது நேற்றைய கதை!

படிக்க:
♦ 2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !
♦ யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்

லைக்கா சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்திற்காக திருவாளர் ரஜினிகாந்த் இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்காக மனமிறங்கி நேர்காணல் அருளியிருக்கிறார். 2.0 படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாயிருப்பதால் இந்த நேர்காணல் வாய்ப்பு அகில இந்திய ஊடகம் ஒன்றிற்கு கிடைத்திருக்கிறது. அந்த நேர்காணல் செய்திகளை தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரி டெம்பிளேட்டில் வெளியிட்டிருக்கின்றன.

உள்ள நல்லாத்தானே பேசுனாரு, இங்க வந்து இப்படி சொல்லிட்டாப்புலயே ! – மோடி மைண்ட் வாய்ஸ்

அதில் மோடியை ரஜினி பாராட்டுவதாக மட்டும் முன்னிலைப்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும்; அதில் ரஜினி இடம்பெறவேண்டும் என அமித்ஷா – மோடி, குருமூர்த்தி முதல் தமிழிசை, பொன்னார் வரை பெரும் திட்டமே தீட்டியிருக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்துவதற்காகவே ஊடகங்களும் மேற்கண்ட நேர்காணல் செய்தியை விமர்சனமின்றி அப்படியே ஒரே மாதிரியாக வெளியிட்டிருக்கின்றன.

அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பேசியிருக்கிறார். அனைத்தும் பாஜகவிற்கு உடன்பாடானவைதான்.

நடிப்பை பிழைப்பிற்காக ஆரம்பித்தாலும் தற்போது பொழுது போக்கு, மகிழ்ச்சிக்காக நடிக்கிறேன். நடிப்பிறகு சிவாஜியும், சிகரெட் பிடிக்கும் ஸ்டைலுக்கு சத்ருஹன் சின்ஹாவும் முன்மாதிரிகள். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கற்ற பாடம் “அனைத்துமே ஒரு விளையாட்டுதான்”. எம்.ஜி.ஆர் நல்லவர். ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர். அவரது ஆட்சியைப் பற்றி இப்போது பேசவில்லை என்றாலும் ஒரு தனி மனுஷியாக அவர் இங்கே வாழ்ந்து ஆட்சி செய்திருப்பது ஒரு வரலாற்று சாதனை.

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவார்ந்த மக்கள். ஆனால், தாங்கள் யார் என்பதை அவர்கள் தற்போது மறந்து போயிருக்கின்றனர். நல்ல தலைமைதான் தமிழகத்தின் தற்போதைய தேவை. இங்கு தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. மக்களிடம் இருந்து வாக்குகளை மட்டும் பெறுவதை நோக்கமாக கொள்ளாமல், அவர்களுக்கு தேவையானது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நான் இன்னும் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு வந்தால் தனித்துவமாக, மாற்று அரசியலை உருவாக்க விரும்புகிறேன்.

படிக்க:
♦ நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்
♦ டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அதற்காகவே கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்கிறார். மக்களுக்கு சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறார்.

இந்தியா டுடே ஆசிரியர் குழுவுடன் ரஜினி

இவையெல்லாம் அவர் அருளிய முத்துக்கள். மேலும் சபரிமலையில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பக்தர்கள் விசயத்தில் தலையிடுவதாக இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இந்த நேர்காணலை இந்தியா டுடே அச்சு இதழின் அட்டைப் படக்கட்டுரையாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் தலைப்பு “ அரசியல் உலகம் அபாயகரமானது”.

உண்மைதான். ரஜினி போன்றவர்களும் நுழையும் பலவீனம் இருப்பதால் அரசியல் உலகம் அபாயகரமானதுதான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. மோடி நல்லவர். ஜெயலலிதா நல்லவர். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரஜினியின் அரசியல் நுழைவு எப்படி இருக்கும் என்பது வெள்ளிடை மலை.

இன்றைய கேள்வி:

இந்தியா டுடே நேர்காணலில் நடிகர் ரஜினி பிரதமர் மோடியை பாராட்டியிருப்பதற்கு காரணம்  என்ன?

♠ மோடியின் 2.0தான் ரஜினி
♠ பாஜக-வுக்கு முட்டுக்கொடுக்க
♠ மோடியின் பிரச்சாரக்
♠ ரெய்டு பயம்
♠ 2.0-க்கு ஓசி விளம்பரம்

(பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ட்விட்டரில் வாக்களிக்க: