பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கேட் ( GATE – Graduate Aptitude Test in Engineering ) எனப்படும் திறனறித் தேர்வை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). ”இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது” என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.
இதுகுறித்து, மேலும் அவர் பேசும்பொழுது, ‘’ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் ஏழை – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நுழைய முடியாதவாறு நீட் தேர்வை கொண்டு வந்து அவர்களின் மருத்துவக் கனவை பறித்துவிட்டார்கள். அவ்வாறு இன்னல்களை எதிர்கொண்டு மருத்துவம் படித்துவிட்டு வெளியேறிவிடலாம் என்றால், அதற்கும் ஒரு திறனறித் தேர்வை நடத்தி, மருத்துவராகும் தகுதியைப் பறித்துவிடுகிறார்கள். சட்டக்கல்வி பயிலும் மாணவர்களும் திறனறித் தேர்வை எதிர்கொண்டால்தான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும். அதேபோலதான், தற்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டில், கேட் தேர்வை எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் அவர் பொறியாளராக வெளியில் பணியாற்ற முடியும் என்ற சூழலை கொண்டுவந்துள்ளது.
இந்தியா முழுவதும் 3000 பொறியியல் கல்லூரிகள், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றது. ஆண்டுக்கு 7 இலட்சம் மாணவர்கள் படித்து வெளியே வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிடும்.
நான்காண்டுகளில் அந்த மாணவனின் திறமையை சோதித்தறிய முடியாதவர்கள், அந்த ஒரு தேர்வில் அவனது திறமையை சோதித்துவிடப் போகிறார்களா?
இதெல்லாம் பொய். ஏமாற்று. உண்மையான காரணம், படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திரிகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் நாடுமுழுதும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்னேகால் கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்கள். இதில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரி மாணவர்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் பொறியியல் படிப்பின் மீது ஒரு கவர்ச்சியை உருவாக்கி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கி, பல இலட்சம் மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளையடித்து, கல்வியை வியாபாரமாக்கி இவர்கள் சம்பாதித்துவிட்டார்கள்.
படிக்க:
♦ பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
♦ கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! மின்னூல்
ஆனால், பொறியியல் படித்து வெளியில் வந்த மாணவர்கள் வேலையின்றி தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐந்தாண்டுகளில் நாட்டை வல்லரசாக்கிவிடுகிறேன் என்று சொன்னவர்கள் இன்று அனைத்திலும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். இளைஞர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கேட் தேர்வு கொண்டுவரப்படுகிறது.’’ என்கிறார்.
இதன் பின்னுள்ள அரசியல் உண்மைகளை உணர்ந்து, கேடான நோக்கத்தோடு கொண்டுவரப்படும் இத்தகைய திறனறித்தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார், தோழர் த.கணேசன்.
அவரது உரையின் முழு காணொளி…
பாருங்கள் ! பகிருங்கள் !!
Gate is not necessary to get graduation it was cleared by AICTE last month notification.
The AICTE decision is not wrong and it is already existing
!. The graduates coming out is not qualified properly and there basic Eng. Knowledge is very weak
2. The Engineers coming out of colleges are not even knowing how to read the drawings and design documents in their respective field
3. Their knowledge is very low since the colleges are not teaching & guiding them properly and 90% of the colleges are not having proper facilities and qualified lecturers
At least by preparing for the GATE exams they will understand the basics of Engineering and general working knowledge in their respective field
Please understand the ground reality qualifying is not a crime it is to develop the process for selecting the right one for the job to be done
I support exit test. But against neet because it’s filters students even before joining college.
தோழர் பேசுவதில் சில மிகைப்படுத்தலாக தெரிகிறது. திறமை இல்லாத பொறியாளர்களை தான் நம் கல்வி நிலையங்கள் உருவாக்கியிருக்கின்றன.அது fact.
Exit test வைத்தாலும் பிரச்சணையை தீர்க்க முடியாது என காரணங்களை விடுத்து கான்ஸ்பைரசி தியரி , மிகைப்படுத்தல் என்பதாக இவ்வுரை இருக்கிறது.
4 வருசம் படிச்சி ஒரு எக்சம் பாஸ் பன்ன முடியலனா அப்புறம் படிச்சி என்னத்துக்கு?
இந்த எக்சாம் மாணவர்கள் வாழ்க்கை பாழாக்கபோவதில்லை. தனியார் கல்லூரிகள் தான் வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறார்கள். இந்த எக்சாமுக்கும் எப்படி பாசாவது என்று கற்றுகொடுத்துவிடுவார்கள்.
கடுமையான எக்சிட் டெஸ்ட் வைப்பதன் மூலம் பல கல்லூரிகள் மூடவைக்க வேண்டும். பள்ளி போல மனப்பாட கல்வி நடத்தும் கல்லூரிகள் மூடப்பட்டாலே, அதிலும் அண்ணா பல்கலைகலைகழக தேர்வு முறை ஒழிந்தால் பிரச்சணை சரியாகும். பெயில் ஆனாலும் 1000 பணம் கட்டி மறுமதிப்பீடு போட்டால் எல்லாரும் பாஸ் ஆகலாம் என்றால் அது தேர்வா?
I support a very strict exit test.
//4 வருசம் படிச்சி ஒரு எக்சம் பாஸ் பன்ன முடியலனா அப்புறம் படிச்சி என்னத்துக்கு?//
இதற்கு யார் காரணம் நண்பரே ! மாணவர்களா . . ? கல்லூரிகளா . . ?
கல்லூரிகள் செய்த தவற்றிற்கு மாணவர்களை பலி வாங்குவதை எவ்வாறு ஏற்க முடியும்?
மாணவர்களுக்கு பொறியியல் திறன் போதாமையாக இருந்தால் வேலைக்கான நிறுவனங்களின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. பொறியியல் முடித்தவுடன் யாரும் வேலையை தூக்கி கொடுத்து விடுவதில்லை.
இந்த மயிராண்டிகள் நீட் தேர்வு, கேட் தேர்வு என்று ஏற்கனவே இருக்கின்ற தேர்வுமுறைகளை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
நம்மையும் “ஆமா . . ! தரம் சரியில்ல . . ! மேற்கொண்டு Strictஆ டெஸ்ட் வச்சு இவங்கள தரமாக்கிடனும்”னு பேச வச்சுற்றானுங்க . . !
Neet is different. It filters students even before coming to college. It denies level playing field.
but exit test is different. students should dare to take exit test. This exit test will make lot of inefficient colleges to shut down.
Our students are not clearing interviews. Atleast to identify good colleges strict exit test is mandatory. Can you deny +2 public exams because of quarterly/half yearly exams. same logic applies here too. Anna university exam lost it’s credibility. if you pay money for revaluation you can pass.
Engineering colleges are like EMU bird business. our students are like EMU bird. Private Engg colleges cheated parents. Parents fell prey to them. Now there is no market for EMU bird. What to do? you can’t force society to buy EMU bird because some parents invested in them.
This is one part of the story. Another part is there is no job market. I think the solution is ask the govt to create job market and reskill the students. govt and colleges should spare the expense.