privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திகஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவும்.

-

குமரி மீனவர்கள் மீளாத்துயரில் ஆழ்த்திய ஒக்கி புயலின் ஓராண்டு நிறைவில் டெல்டா மாவட்டங்களுக்கு அழிவைக் கொண்டு வந்தது கஜா புயல். இப்புயலில் 64-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். விவசாயிகள், கூலி விவசாயிகள், விவசாயம்சார் சிறுதொழில்கள், முறைசாரா தொழிலாளர்கள், மீனவர்கள் என இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன.

வீடுகள் – குடிசைகள், மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தரைமட்டமாகின. புயல் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் புயல் நிவாரண முகாம்கள் என்ற பெயரில் உணவும் நீரும் கூட இல்லாத கட்டிடங்களில் மக்களை அடைத்து வைத்ததையும் பெரும் சாதனையாக பீற்றியது எடப்பாடி அரசு. இதற்கு ஊடகங்கள் பாராட்டு!

கடன் வாங்கி தென்னை, மா, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நிற்கதியாக நின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்துக்கே உணவளித்த டெல்டா மக்கள், ஒருவேளை உணவுக்கு ஏதேனும் நிவாரண வண்டி வராதா, என வீதிகளில் காத்து நின்றனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி மாமனார் வீட்டில் விருந்துக்கு சென்றிருந்தார். மோடியோ வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆத்திரம் கொண்ட மக்களோ மறியல் செய்தும் நேரில் வந்த அமைச்சர்களை விரட்டியடித்தும் போராடினர்.

ஒரு வாரம் கழித்து வந்தது மத்திய ஆய்வுக்குழு புயலைவிட வேகமாக பார்வையிட்டு பறந்து சென்றது. அதன் பிறகு மோடி அரசு வெறும் ரூ.353 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.

கடும் உழைப்பிற்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் இனி என்ன செய்ய முடியும் ? டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்கி அதானிக்கும் அனில் அகர்வாலுக்கும் தாரைவார்க்கத் துடிக்கும் மோடி அரசிடம் நிலங்களை ஒப்படைத்து விட்டு சொந்த நாட்டில் அகதிகளாக அலைய வேண்டுமா?

கஜா புயலின் அழிவு இயற்கையானது. ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட வழங்கத் தகுதியற்ற இந்த அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவுகள் இயற்கையானதல்ல.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் களச் செய்திகள் புயலின்போது டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவுமென நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • கதவுல தொத்திக்கிட்டிருக்கும் போதே கடலோட போயிருந்திருக்கலாம்…!
  • தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, கூலி சேமிப்பு எல்லாம் அழிந்தது !
  • மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
  • எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க.. நாங்க உயிரோட வந்துட்டோம் !
  • தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
  • வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை !
  • மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை!
  • புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு!
  • மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்!
  • மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை !எது முன்னெச்சரிக்கை ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
  • சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறிகொடுத்தார் !
  • எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்!
  • எங்க ஓட்டு செல்லும்போது, எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
  • புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
  • எங்களுக்கு மட்டும் ஆசையா? இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுறதுக்கு !
  • அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்!
  • காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்!
  • கஜா புயல் சேதங்கள் – படத்தொகுப்பு

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க