புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு
நெ.7,மாதா கோவில் முதல் தெரு, நொளம்பூர், சென்னை-95, 9445112675
தேதி : 10.1.2019
கண்டன அறிக்கை!
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு!
இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை, புராண கட்டுக்கதைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவதை செய்திருக்கிறது மோடி – பி.ஜே.பி கும்பல்.
அறிவியலாளார்கள் என்ற போர்வையில் இந்துமத கருத்துக்களை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவுப்பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய அறிவியல் காங்கிரசின் 106-வது மாநாடு ஜனவரி 3 முதல் 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. இதில் 60 நாடுகளின் 20,000 அறிவியல் அறிஞர்கள், உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனை குழாய் மூலம் பிறந்தவர்கள் என்று அளந்துவிடுகிறார்.
அதோடு, டார்வினது பரிணாம கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர், ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர், ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தினார் என்றெல்லாம் அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகளை, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.
அதே மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஜகதள கிருஷ்ணன் எனும் மின்னணுவியல் பொறியியல் அறிஞர்; ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்கிறார். புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் என ஆர்.எஸ்.எஸ். காரரைப் போல் பிதற்றுகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் டைனோசர்களின் தோற்றமும் மறைவும் குறித்து ஆய்வு செய்துவரும் பஞ்சாப் பல்கலைக்கழக புவியியலாளர் அசு கோஸ்லா, “இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றி தெரிந்திருந்தது. வேதங்களில் அது குறித்த தகவல் உள்ளது” என்கிறார்.
அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல், இந்துமத வேதம் / புராணங்களில் உள்ள கட்டுக்கதைகளை, மூடத்தனங்களை எல்லாம் வேதத்தில் உள்ள அறிவியல் – தொழில்நுட்பம் என்று பேசுவதை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
கடந்தாண்டு இதே அறிவியல் மாநாட்டில் இதே கட்டுக்கதைகளை, குப்பைகளை அறிவியல் உண்மைகள் என நாட்டின் பிரதமர் மோடி பேசினார். இப்போது அதே கருத்துக்களை அறிவியலாளர்கள் வாயால் சொல்ல வைக்கிறார்கள். இது போன்ற ஆதாரங்களற்ற புராணக் குப்பைகளை கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அறிவியல் பேராயத்தில் RSS/BJP ஆதரவு பேராசிரியர்கள் பேசிவருகின்றனர்.
கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
இந்தி – சமஸ்கிருத திணிப்பு, கல்வியில் காவிமயத்தை புகுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களை பொறுப்புகளில் அமர்த்தி கைப்பற்றுவது, அரசு கட்டமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை போட்டு நிரப்புவது, உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என அவர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுப்பது, இந்த வரிசையில் இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மோடி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு வேத – புராண கட்டுக்கதைகளை பரப்புகிறது. ஒரு அடிமைச் சமூகத்தை, இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற துடிக்கிறது.
இதை அம்பலப்படுத்தியும், மாற்றாக அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள், மாணவர் அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோருகிறோம்.
இவண் :
த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675
*****
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை
நாள் : 11-01-2019
இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியலுக்கு புறம்பானவற்றை பேசியதற்கு கண்டனம் !
இந்திய அறிவியல் பேராயத்தின் (Indian science congress) 106 -வது மாநாடு ஜனவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை ஜலந்தரில் நடைபெற்றது. ஏறத்தாழ 60 நாடுகளில் இருந்து 20,000 அறிவியல் அறிஞர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. நாகேஸ்வரராவ் கௌரவர்கள் சோதனை குழாய் தொழில் நுட்பம் மூலம் பிறந்தவர்கள் எனவும், டார்வினது பரிணம் கோட்பாட்டிற்கு முன்னரே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர் என்றும் ஏவுகணைகளை ராமர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியவர் என்றும் ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தினார் என்றும் பேசியிருக்கிறார்.
அம்மாநாட்டில் பேசிய தமிழகத்தை சேர்ந்த கண்ணன் ஜகதல கிருஷ்ணன் என்பவர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்றும் பேசியிருக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் புவியீர்ப்பு அலைகளுக்கு (Gravitational wave) நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் எனக் கூறியுள்ளார்.
எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாததையும் வேதம், புராணங்களில் உள்ள குப்பைகளையும் அறிவியல் – தொழில்நுட்பம் என்று இவ்விரு பேராசிரியர்களும் கூறியுள்ளனர்.
அறிவியலுக்கெதிரான இவ்விரு பேராசிரியர்களின் இச்செயல்பாட்டை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புகுழு(CCCE) கடுமையாக கண்டிக்கிறது.
இத்தகைய பிற்போக்குதனமான கருத்துகளுக்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும், கல்வியாளர்களும் நோபல் பரிசு பெற்றவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !
இது போன்ற ஆதாரங்களற்ற புராணக் குப்பைகளை கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அறிவியல் பேராயத்தில் RSS-BJP ஆதரவு பேராசிரியர்கள் பேசிவருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற 105 -வது இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் ஆல்பர் ஐன்ஸ்டைனின் நிறை ஆற்றல் சமன்பாடு (E=mc’) பற்றி வேதங்களிலேயே உள்ளதாக பேராசிரியர் ஸ்டீபன் ஹக்கிங் சொன்னதாக பொய்யுரைத்தார்.
அனைத்துக்கும் மூலமாக 2014 அக்டோபரில் மருத்துவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி மகபாரதம் மற்றும் வேதங்களில் genetic engineering, plastic surgery போன்ற தொழில்நுட்பங்கள் இருந்து என்று கர்ணனையும், விநாயகரையும் உதாரணம் காட்டி பேசியிருந்தார்.
இந்துத்துவ கருத்துகளை கல்வித்துறையில் திணிக்க மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தை விருப்ப படமாக்கியது, அடுத்த கல்வியாண்டிலிருந்து சமஸ்கிருதமும், புராணக் கதைகளையும் அறிவியல் பெயரில் பொறியியல் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக்கியது மேலும் RSS புரவலர்களை பள்ளி – கல்லூரிகளின் உயர் பதவிகளில் பணியமர்த்துவது மற்றும் பேராசிரியர்களாக நியமிப்பது போன்ற வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் ஒருபுறம் தேசிய இனங்களின் மொழி, கலச்சார, பண்பாட்டு அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்துவதையும், மறுபுறம் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தை கல்விபுலத்திலிருந்தே துடைத்தெறியவும் செய்கிறது.
நாளுக்குநாள் இதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால் பின் எப்போதும் செயலாற்ற முடியாமல் போகலாம்.
பேராசிரியர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்புகளும் இணைந்து இத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கும் இந்துத்துவ திணிப்புக்கும் எதிராக குரல் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை
தொடர்புக்கு : 72993 61319, 94443 80211
1) பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE -சென்னை. (மேனாள் தமிழ்த்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்).
2) முனைவர். க. ரமேஷ், துணை ஒருங்கிணைப்பாளர், CCCE-சென்னை.
3) பேரா. கதிரவன், சென்னை பல்கலைக்கழகம். பொருளாளர், CCCE-சென்னை.
4) பேரா. சிவக்குமார், மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி.
5) பேரா. கருணானந்தன், மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி.
6) பேரா. லட்சுமனன், MIDS. CCCE-சென்னை.
7) பேரா. அருணாச்சலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
8) பேரா. கமலக்கண்ணன், பச்சையப்பன் கல்லூரி.
9) பேரா. ரகுபதி, திரு கோவிந்தசாமி கலைக்கல்லூரி, திண்டிவனம்.
10) பேரா. அருள்.
11) முனைவர். சாமிநாதன்.
12) முனைவர். ஆனந்த்.
13) திரு. மணிபாலன்.
தொகுப்பு:
இதையும் பாருங்க:
இந்த மாநாட்டை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் இருக்கும் பி.பி.மாத்துர் என்னும் பேராசிரியர் பச்சையான இந்துத்துவ உயர்சாதி வெறியன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இவனுடைய ஆணவமான நடத்தையும் சேட்டைகளும் வெகு பிரசித்தம். குறிப்பாக ஆசிரியர்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் சுவர்ணா அவர்ணா என தரம் பிரித்து சுரண்டுவதும் தரக்குறைவாக நடத்துவதும் இவன் பழக்கம். மாநாட்டை வழி நடத்தும் பொறுப்பில் இருப்பவர்களின் யோக்கியதையே இப்படி எனில் வந்து கட்டுரை படிப்பவன் எப்படி இருப்பான்?
வேதங்கள் என்பது அறிவு கருவூலங்கள் தான், அதற்காக அதில் உலக விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்தும் இருக்கின்றன என்று கூறுவது முட்டாள் தனமான கருத்து.. வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள்(திருக்குறளை போன்று) அடங்கிய தொகுப்பு தான் வேதங்கள் அனைத்தும் … வேதங்களின் சாரத்தினை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் தன்னிடம் இருப்பதை வைத்து மன அமைதியோடு ஆனந்தமான வாழ்வினை வாழலாம்.. ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கலாம்..சுதந்திரமான, மகிழ்வான ஆரோகிய தனிமனித அல்லது சமூகத்தினை உருவாக்க வழிசொல்லும் ஒன்றை காட்டிலும் வேறொரு அற்புதமான கண்டுபிடிப்பு என்ன வேண்டும் ??
திருக்குறள் அடிப்படையில் வேதத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்ட நூல். வேதத்தின் அடிப்படை வர்ணாசிரம தர்மம்தான். வேதத்தின் பாடல்கள் எல்லாம் ஆரியர்களுக்கு செல்வத்தையும் வெற்றியையும் திராவிடர்களுக்கு அழிவையும் தருமாறு வேண்டும் சுயநல பாட்டுகளே ஆகும்
அப்படியா சொல்லவே இல்ல ? முதலில் வருணாசிரமம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.
வருணாசிரமம் என்றால் என்ன என்று தெரியுயாமலேயே இந்து மதத்தை ஆதரிக்கிறிர்களா? எனக்கு தெரிந்து வர்ணாசிரம தர்மம் என்பது 4 வகை சாதி அதில் 4000 பிரிவுகள். இந்த பிரிவுகளில் ஆக உயர்ந்த இடத்தில் தங்களை அமர்த்தி கொண்டவர்கள் பார்ப்பனர்கள்.
இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பொருந்தி போகாத கம்யூனிஸ்ட் மூடத்தனத்தை விட பெரிய மூடத்தனம் உலகில் வேறு எதுவும் இல்லை.
“இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பொருந்தி போகாத கம்யூனிஸ்ட் மூடத்தனத்தை விட பெரிய மூடத்தனம் உலகில் வேறு எதுவும் இல்லை.”
So which one is dumbest , Communism or வேதங்கள் . Is that your question ?
Your comments are based on Hatred.
(Not good for your health)
Foreigners like Vinavu (communist) are spreading hatred towards our Vedhas and our country.
Better try to learn Tamil properly Mr. R
So, Tell me Mr. Manikandan
“இந்திய அறிவியல் பேராயத்தில் அறிவியலுக்கு புறம்பானவற்றை பேசியதற்கு கண்டனம் !பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை”
Are they too Communists ?
I suspect this group might be part of Vinavu and Christians… these two groups are against Hinduism and India.
I suspect that you are commenting under different name
aka Mr. Manikandan,
Your name must be H Rajah