கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்துகொண்டிருக்கிறது மோடியின் அடிமை எடப்பாடி அரசு. அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து அந்த ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது.

இந்நிலையில் அந்த ஆலைக்கு எதிராக நோட்டிசு கொடுத்தார் என்பதற்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவரை அடாவடியாக உளவுப் போலீசை வைத்து கைது செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து தனது விளம்பரத்தை தடையில்லாமல் செய்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக அதன் அடியாளாக செயல்படும் போலீசு கும்பலையும் அரசையும் கண்டித்து பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்


தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி,
திருச்சி.
தொடர்புக்கு: 99431 76246.