மிழகம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியை சார்ந்த மாணவர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கலந்து கொண்டதை அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

மாணவர்கள்  ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினார்கள். அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதையும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதையும் சகித்துக்கொள்ள முடியாத போலீசு மாணவர்களை மிரட்டினர். அங்கிருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்  இவர்கள் எங்க பசங்க நாங்க இருக்கிற வரைக்கும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அரவணைத்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றதையடுத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உற்சாகமடைந்தனர். மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்: 97888 08110.

♦ ♦ ♦

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் நேற்று (28.01.19) திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி. தொடர்புக்கு: 99431 76246

♦ ♦ ♦

க்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான்  தீர்வா? விடக்கூடாது !
அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
அனைவரும் ஆதரிப்போம்!ஜாக்டோ  ஜியோ போராட்டம்! மக்களோடு இணையட்டும்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு: 99623 66321.

படிக்க:
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

தொகுப்பு: