இன்றுடன் கும்பமேளா நிறைவு பெறுகிறது. நிர்வாண நாகா சாமியார்கள் தொடங்கி கார்ப்பரேட் சாமியார்கள் வரையிலான காவிகளின் கூட்டம் ஒருபுறம். கடுங்குளிரிலிருந்து தப்பிக்க உருப்படியான உடைகள் கூட இல்லாத ஏழைச் சிறுவர்கள் பலரையும் கும்பமேளாவில் காண முடிந்தது. இவர்கள், ஆற்றங்கரையோரம் காந்தத்தை வைத்து சில்லறைகளை சேகரிப்பது; கயிறுகட்டி அந்தரத்தில் நடந்து சாகசம் செய்வது; தொப்பி, பூஜை பொருட்கள் விற்பது என வயிற்றுப் பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலையோடு சுற்றித் திரிந்தனர்.
தமிழகம் போன்ற மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். உத்திரப்பிரதேசத்திலோ அது இன்றும் அமலில் இருக்கிறது. பாஜக தயவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஒருபுறமிருக்க மறுபுறம் குழந்தைகளே உழைக்க வேண்டிய அவல நிலையும் இருக்கிறது.
காற்றில் கரையும் வாழ்க்கை: யமுனை கரையில் புல்லாங்குழல் விற்கும் சிறுவன்.
கங்கை ரயில் பாலத்தின் அருகே தொப்பி விற்கும் சிறுவன்.
யமுனை ஆற்றங்கரையில் பூஜைபொருட்கள் விற்கும் சிறுமி.
கும்பமேளா நுழைவாயில் அருகே, அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை.
யமுனை நதிக்கரையோரம் விடியற்காலை யாசகம் கேட்கும் சிறுமி.
யமுனை கரையில் கடவுள் வேடமணிந்து யாசகம் செய்யும் சிறுவர்கள்.
யமுனை ஆற்றங்கரை கங்கை கரையோரம் நாடோடி சிறுவர்கள்.
யமுனை ஆற்றங்கரையோரம் காணிக்கையாக பக்தர்கள் வீசும் சில்லறை காசுகளை சேகரிக்கும் சிறுவர்கள்.
கங்கை சாஸ்திரி பாலத்தின் கீழ் தஞ்சமடைந்திருக்கும் சிறுவர்கள்.
இது வேறு வர்க்கம்: அம்மாவுடன் ஒரு செல்பி
அம்மாவிடம் ஆசையாய் ஏதோ கேட்டு அடம்பிடிக்கும் சிறுவன்.
குடியிருப்பும் இதே. மளிகை கடையும் இதே. பாட்டிக்கு ஒத்தாசையாக புன்னகைக்கும் சிறுவன்.
யமுனை ஆற்றிலே… தந்தையோடு படகை செலுத்தும் சிறுவன்.
திரிவேணி சங்கமத்தில் அந்தி சாயும் வேளையில் ஓர் இனிய பயணம்.
(முற்றும்)
வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …
முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
பாகம் – 4: அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
பாகம் – 5 : நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !
பாகம் – 6 : நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
குழந்தைகள் எது செய்தாலும் அழகு…. என்று ஆனந்தபடுவதா? நம் குழந்தைகளைப்போன்று படித்து, விளையாடி சுகமான அனுபவங்களைப் பெற வேண்டிய வயதில், அவர்களின் வாழ்வை சுமையாக்கிய நம் சமூகத்தை கண்டு கோபப்படுவதா? சற்றே குழப்பமாகிறேன்.