”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`

114 மறுமொழிகள்

  1. திருக்குறளை திரித்து,பெண்ணை அடிமையாக்கி,ஆணாதிக்க மூடத்தனத்தை வளர்த்த பார்ப்பனியத்தின்,உச்சமாகிய இந்த பொள்ளாச்சி சம்பவம்.பெண்ணை போகப்பொருளாக கருதும் இன்றைய சூழலில் ,பெண்ணினத்தை வீறு கொண்டு எழ வைத்து இருக்கிறது.ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் பெண்ணினம்,இன்று தன் உரிமைக்காக, வீதியில் இறங்கி போராடி கொண்டு இருக்கிறது.மனிதர்கள் வாழ வழி வகுத்த,இந்த திருக்குறள் தோன்றிய இம்மண்ணில்தான் பெண் விடுதலைக்கான முதல் எழுச்சி தோன்றியதில் ஐயமில்லை!

  2. பேராசிரியர். அர.வெங்கடாசலம் பி.எச்.டி மேனாள் பேராசிரியர் உளவியல் துறை.பாரதியார் பல்கலைக் கழகம்

    ஐயா நான் ஒரு திருக்குறள் ஆய்வாளன். ஆங்கிலத்தில் ஒரு நூலும் தமிழில் மூன்று நூல்களும் எழுதி உள்ளேன்.

    தெய்வம் தொழாள் . . பாவிற்கு நான் கொண்டு உள்ள பொருள்
    காலையில் கண்விழித்துக் கடவுளைத் தொழும் முன் தன்னுடைய கணவனின் அன்பான நினைவில் மூழ்கித் திளைத்துத் தம் அன்பினைப் புதிப்பித்துக் கொண்டு நாளைத் துவக்கும் மனைவி மிகுந்த புத்துணர்ச்சி பெறுவதோடு அதன் காரணமாக மிகுந்த ஊக்கமும் ஆக்கமும் பெறுவாள். அவள் பெய்யென்றால் மழை பெய்யும்.( தோளோடு தோள் கொடுத்து நம்மோடு நிற்க ஒருவர் இருக்கிறார் என்ற நிலை பெறும் ஊக்கத்தைத் தருவதாகும் என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்த.ஒன்று. அவ்வூக்கத்தில் பிறக்கும் ஆற்றலின் அளவைக் கூறப் புகுந்த கவி தமக்கே உரிய ஓங்கி உரைக்கும் பாணியில் அவள் மழை பொழியச் சொன்னாலும் அவ்வாறே மழை பொழியும் என்று கூறுகிறார் காலத்தாலும் இடத்தாலும்.செயல்பட்டால் ஒருவன் உலகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடியும் என்றும்(484) அனிச்சத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்(1120) என்றும் கூறியதைப் போல.)

    • உங்களது விளக்கம் (#தன்னுடைய கணவனின் அன்பான நினைவில் மூழ்கித் திளைத்துத் தம் அன்பினைப் புதிப்பித்துக் கொண்டு#) `கொழுநன் தொழுதெழுவாள்`என்ற சொற்தொடரிற்குப் பொருந்தவில்லையே ! . “தொழு = நினைவில் மூழ்கித் திளைத்து” என்கின்றீர்களா? சான்று என்ன?

      • நீங்க மட்டும் என்னோடு நில்லுங்க அவங்களை நான் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று சொல்வதில்லையா! அன்பான கணவனை தொழுதவுடன் அவள் பெய்யெனப் மழை பொழியும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிடுகிறாள் என்றால் மனதில் அந்த அளவுக்கு நம்பிக்கையும் நேர்மறையான ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி கிட்டுகிறது என்று பொருள். இதையே இப்படிப் பாருங்கள். அவளுடைய கணவன் அவளிடத்தில் அன்பு இல்லாதவளாக இருந்தால் அவள் அவனைத் தொழவும் மாட்டாள் அவள் உள்ளத்தில்.உற்சாகமும் இருக்காது. கடவுளே இன்றையை தினத்தை நான் எவ்வாறு கழிக்கப்போகிறோனோ என்று கலங்கி நிற்பாள்.
        திருக்குறளில் பக்தி கிடையாதும் ஆன்ம மேம்பாடு மட்டுமே உண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன முற்றிலும் நீங்கி அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம் மற்றும் வாய்மை ஆகிய ஐந்தும் நிறைந்தால் அவன்/அவள் பிறவித்தொடர் முற்றுப் பெற்று புத்தேளிர் உலக வாசியாவர். அது மனிதன் ஈட்டுவது. கடவுள் ஈவது/அருள்வதன்று.

  3. ஐயா… அருமையான விளக்கம் ..தங்களின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது …. மற்றபடி வினவில் வருவதனை போன்று, பார்ப்பன வெறுப்பின் பார்பட்டு வள்ளுவர் இப்படி குறள் செய்திருப்பார் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை …

    • திருக்குறள் திருவள்ளுவர் என்ற தனி மனிதனால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.சமண சமயத்தை சேர்ந்த பல துறவிகள் எழுதியது.தென்னிந்திய மன்னர்கள் பலர்,சமண மதத்தவராய் இருந்து பின்னர் பார்ப்பனிய மேலாதிக்கம் காரணமாக சைவ மதத்தை தழுவினர்.இதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன.இரு பிரிவினரிடையே அனல் வாதம்,புனல் வாதம் என்று நிறைய வாதங்கள் நிகழ்ந்தன. உண்மையான தர்க்கத்தின் அடிப்படையில் வாதத்தில் வெல்ல முடியாத பார்ப்பனர்கள்,பல சமணர்களை கழுவில் ஏற்றினர்.எனவே அதன் அடிப்படையில் இந்த குறளும் பார்ப்பன எதிர்ப்பு குறள் என்பதில் ஐயமில்லை.!.

  4. Dear team,

    I humbly request you that if you want to follow thanthai periyar go ahead. If you want to follow Jesus or Nabi, kindly go ahead. If you want to follow any other religion in this world kindly, go ahead. But don’t take an example of thirukural to critisise another religion. Here, the people not trying to follow one god; they want to critisise other religion gods, this is not good stage.. ok.. let us consider if you want to tell us all brahmins are making us fool. You Don’t follow brahmins, but you don’t have the rights to say that or read that brahmins vedas. If you don’t believe on veda, Why you want to read it? If you read, also how can you understand the correct meaning? Because your ideas was “there is no god”..

    Don’t critisise other believes, it’s like critisising a neighbor around you; who you don’t like.

    Live.. let others live..

  5. Dear team,

    This is nagapandian; let I come to your point.. if thiruvalluvar want to tell like that. Ok.. But thiruvalluvar also told importance of not taking non-veg, why don’t you follow that?

    This what you people do.. you never fully follow one person. Your main motto is critisise other religion and make people mad.

    • Same valluvar said,find the truth behind the word,doesn’t matter who said it.
      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
      May be you have to reconsider your point.

      • Ok.. let I agree? What about second point ? Do you follow the words of thiruvalluvar regarding vegetarian?

        This what I’m telling, if you want to get message from a book, read the book fully… Then you can speak about the book.

        Why people are not obeying a great man who told to avoid non-veg?

        • Again, the choice is entirely up to you,whether to follow vegetarian food or not.If you are a kind person,you can follow vegetarian.If you want to be strong and healthy eat non vegetarian food.Because many research says, vegetarian food doesn’t provide,enough vitamin B,which is available in meat.

          • Mam,

            If you are taking references from a book, you should agree with all the pages in the same book… Why you are diverting it from thiruvalluvar to our current researchers?

            If you don’t agree with thiruvalluvar, then why are you taking references from his book?

            If you agree with thiruvalluvar then why don’t you agree with his context of “pulal maruthal”?

            If we agree on our current researchers then I’m very happy.. then go ahead with them; surely we don’t want speak about thiruvalluvar or thirukural.

            I agree with the things of what the essay breifed, but why you don’t agree on same thiruvalluvar context on non-veg?

            Only one thing can accepted, if you believe on thanthai periyar better stop talking about thirulluvar or thirukural or if you believe on thiruvalluvar better don’t follow thanthai periyar. Kindly don’t mix both context and Dont hurt anyone.

            • According to me, learning a good thing,even from evil is the best policy.Moreover, following the advice,whether it is from Thiruvalluvar or Periyar,if it is useful for your present life,time and situation you can follow it.If it is not appropriate,you can always leave it.Accepting one person as a guru,following him blindly with all his flaws happens only in guru kulam.

              • Mam,

                Evil is always evil, you cannot learn a good thing from evil, that’s y it was called evil.

                Let us consider the school where you are blindly to follow the abcd…, Where you don’t know why you read it.. you cannot tell the teacher that I don’t like to read this.
                I never tell that blindly follow the guru.. just search for a good guru.. he will help you to lead good life; A good Guru never needs your money, and he always ask us to lead a simple life.

                Thiruvalluvar was a good guru and we are not that much wise to comment on his context. We cannot compare him with us.

                Even Jesus told us in the ten commandments ” thou shalt not kill”; but we don’t follow that by taking non veg.

                Kill in the sense don’t kill the living things, we interpret those things and we are killing animals for food.

                I don’t want to blindly follow the guru, you ask him the things, “why do we should not do that?”; He will surely explain the things. A good guru or good will never let you down. Only thing is just to believe things.

                I compared the school because we are wise enough to analyze or research about our forefathers or thirukural.

                Thirukural is “ulaga pothu murai ” book. I hope there will be no flaws in this book.

                  • “குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
                    மிகைநாடி மிக்க கொளல்”
                    வள்ளுவர் சொல்லிவிட்டார் என்பதால் அவர் கூறியதனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது.
                    “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” என்று கூறிய கடவுளே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்.
                    மிருகங்களைக் கொன்று புலால் ருசிப்பது பாவம் என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வண்டி வண்டியாக பசுக்களையும் குதிரைகளையும் யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு தின்று வந்த பார்ப்பனியத்தை பவுத்தமும் சமணமும் “கொல்லாமை” பிரச்சாரம் செய்து ஒழித்துக்கட்டியது. அந்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட திருக்குறள் அதற்கு அத்தாட்சி. பிற மத கருத்துக்களை திருடி செரித்து தன்னை மீட்டுக்கொண்டது பார்ப்பனியம்.
                    இன்று பார்ப்பனர்கள் எல்லோரும் புலால் உண்ணுகிறார்கள் என்று குற்றம் சாட்டினால் “அவரு ஷாப்பிடுறதில்லை, இவரு ஷாப்பிடுறதில்லை” என்று தான் பதில் வருமே தவிர “எவனுமே ஷாப்பிடுறதில்லை” என்று கூற முடியாது. இது நம்மை உறுத்துவதேயில்லை. அக்லக்குகளைக் கொன்று தான் மாடுகளை காப்பாற்ற வேண்டுமா? என்பது தான் கேள்வி.

                    • Mr.Karthikeyan,

                      Again why are we taking references from thirukural?; the first basic things in thirukural is “glory of God”.
                      Do we accept God existence?

                      Then don’t take references from thirukural to explain our own thinking.

                      Do you know Sanskrit language to explain the context of your quote “chathur varnam Maya srishtam”?

                      If I tell my teacher that I will not read ABCD, but directly want to read English! Will the teacher accept it?

                      Again you are taking references from Sanskrit to explain gods quality?

                      If you taking a book to read, you don’t accept the first 2 pages of the book, then you accept the 60th pages of the book. What is this type of reading?

                      How you can do that?

                      Please accept things as it is or don’t comment on that book or don’t take references from that book.

                      Don’t mix the things..

                      If we are not accepting thirukural, then which book we will trust as the best book of displine?

                      At least will we follow all the things which stated on that book which you consider as the best?
                      We cannot critisise people that is also told in every regions holy book.

                      At least you can follow that, if you don’t like them leave it. That is upto you, every person has a different dimension: Your thinking will not sync with your son’s thinking or wife thinking.

                      The thing is follow a discipline where we should not critisise others.

                      Nowadays, we people are mixing current author books with older books.
                      how could it will be possible?

                      Ok.. let us consider we accept Buddha, he also told not to kill any living things! At least will we accept it..
                      If we are taking references from Buddha then you should follow him.. otherwise don’t take references from him to disprove other things.

                      We are not wise enough to research on buddihism or Jainism or any other religion, Accept as it is or better don’t speak about that.
                      If we don’t accept it; better don’t follow it.

                      But don’t interpret with the things.

                • There is no such thing as purely good or purely evil.There is a combination of these two qualities in every person.Only the percentage varies.As you say,the so called good guru,his knowledge is limited,compare to the rest of the world.(கற்றது கையளவு,கல்லாதது உலகளவு) Thirukkural is said to be written 2000 years ago.There are lot of changes in people,compare to those days and now.So it may not be possible to follow everything what is written in that.Understanding the kural itself varies depending on individual perception.Infact we need those differences,to make the life more interesting.We may not be wise enough to analyse thirukkural ,but we can be wise enough to choose to listen to someone who is good in that.That makes life easier.

                  • Mam,

                    There is pure god and pure evil. We are not speaking about a normal person. A normal person may have both things good and bad. But the spiritual Masters won’t have evil things. In olden days they never try simply write anything. They will experience and with God’s blessings only we can write things. Without God’s blessings thiruvalluvar could not write things.

                    You may believe that God is not there. But it’s upto you, don’t compare older books to prove that.
                    If you want to prove that, you want believe all the things stated in the book.

                    No issues if you don’t believe that book and also don’t refer things from that book.

                    You have different ideas I appreciate it, but my point is don’t take references from the book in which you don’t believe.

                    You can live as such, but in this world there are some disciplines to lead a good life which was stated in thirukural very clearly.

                    • I don’t get your point,why are you imposing your ideas,of belief in following the book.You act asthough you have the copyright of the book thirukkural.If you want to believe God helped Thiruvalluvar,to write that kural,that’s fine.Don’t expect others also to believe,or act like you.It’s really annoying.

                    • Mam,

                      You cannot wrongly percept any book.

                      If I’m reading big bang theory, I cannot percept in anyway, I should understand the concept told by scientist. If I don’t agree with him, I can say him directly that ” im not agreed with you” – no issues in that.

                      But I can’t say that “the fourth point you told in big bang theory was attracted me – I believe that , I agree that point. ”

                      We cannot percept as our wish, we should understand, believe, then we can speak about that – regarding thirukural.

  6. அருமையான விளக்கம்!
    பார்ப்பன அடிமைகளை கதற வைக்கிறது.
    வெறும் பார்ப்பன வெறுப்பு என்று அடிமைகள் புறந்தள்ளாமல் கட்டுரையில் நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு சவாலான விவாதத்தை எடுத்து வைக்க வேண்டும்

  7. அற்புதமான விளக்கம். இந்த விளக்கத்தில் வரும் ‘பார்ப்பன’ என்ற சொல்லாடலை தவிர்த்துவிட்டு, ‘தன்னையே தெய்வமாக காட்டிக்கொள்ளும்’ அனைத்துவிதமான கயவர்களுக்குமான ஒரு அடைமொழிப் பெயரை தேர்வு செய்து பயன்படுத்தியிருந்தால், பிராமணர்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகவே இது பார்க்கப்படலாம்.

    இதற்கு முன் இக்குறளுக்கு நான் படித்த பல விளக்கங்களில் கலைஞர் கருணாநிதி அவர்களின் விளக்கமே சரியானதாகத் தோன்றியது எனக்கு.

  8. 1) இன்னும் இந்த சோமன், கந்தர்வன் இந்த பாட்டையெல்லாம் தி.க குரூப் விடவில்லை போலும். இதற்குண்டான விளக்கத்தை ‘மஞ்சை வசந்தனுக்கு’ எப்போதோ கொடுத்தாகி விட்டது. அது சரி தி.க குரூப் இப்படி எல்லாம் செய்யவில்லை என்றால் தான் ஆச்சார்யம்

    2) // திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; //

    மனு இருந்த சமயம் 170 – 150 BC என்று சொல்லப்படுகிறது. ‘மனு தர்மம்’ என்பதே இந்திரன் வாய் மொழியாக சொன்னதை ‘மனு’ அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றான். அதுவும் அந்த காலத்தில் ‘எழுதுகோல்’ இருந்ததா என்று கூட தெரியாது.

    இதில் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் ‘இந்திரன்’ என்பதே புராண புரட்டு. ஆனால் நம்முடைய ‘தி.க’ குரூப்பிற்கு இங்கு மட்டும் இந்து கடவுள் ‘இந்திரன்’ வாழ்கிறான் போல்

    3) // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது //

    மனுதர்மத்திற்கு (அல்லது ) ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் ? அப்போது எழுதுகோல் இருந்ததா ? எழுதுகோல் இல்லை என்றால் எதை வைத்து வள்ளுவர் எழுதினார் என்பதை எல்லாம் ஆசிரியர் விளக்கவில்லை

    4) // (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //

    வைதீக தெய்வத்தை திருவள்ளுவர் எங்கு குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. மற்றவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் எழுதி விட்டு போகட்டும்

    ஆசிரியர் சொன்னபடியே திருவள்ளுவர் ‘தெய்வம்’ என்கிற சொல்லை (1) ஊழ் (2) வாழ்வாங்கு வாழ்ந்தோர், (3) ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன் என்று பல்வேறு பொருள்பட கூறுகிறார்

    அதவது மேற்சொன்ன விளக்கத்தின் படி ‘தெய்வம்’ என்கிற சொல் ‘கடவுளை’ குறிக்கவில்லை

    அனால் ‘குறள் 55ல்’ மட்டும் ‘வைதீக தெய்வம்’ என்று ‘திருவள்ளுவர்’ எப்படி குறிப்பிட்டு இருக்க முடியும் ?
    இந்த ஒரு குறளில் மட்டும் ‘வைதீக தெய்வம்’ (அல்லது) கடவுளராக ‘திருவள்ளுவர்’ எப்படி குறிப்பிட்டார் ?

    விளக்கம் அளிக்க முடித்தவர்களுக்கு நன்றிகள்

    நன்றி

    • பாயின்ட் பாயின்டா போட்டு எழுதியதில் உங்க கொண்டைதான் வெளியே தெரியுது Sathish.
      // திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; //
      கட்டுரையாளர் குறிப்பிடாததை அடைப்புக்குறியில் போட்டு அதற்கு விளக்கமும் அளிப்பது என்ன வகையான அயோக்கியத்தனம் …?

      • நான் படித்ததை எழுதி இருக்கிறேன். ஏன் மனுவே ஒரு கர்ப்பிணி பாத்திரமாக இருக்கக்கூடாது ?

        அது தான் உண்மையா என்பதை உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் சிந்திக்கவே பிறந்தவர்கள்

        அது சரி நீங்கள் யோக்கியன் ஆயிற்றே/ குரல் 55ல் மட்டும் எப்படி ‘தெய்வம்’ என்கிற சொல் ‘கடவுளை’ குறிக்கும் சொல் ஆயிற்று? அதுவும் ‘வைதீக கடவுளை’ குறிக்கும் சொல் ஆயிற்று ?

        நீங்கள் செய்வது அயோகியதனம் இல்லையென்றால் விளக்கம் கொடுக்கவும். அதை விடுத்து வெட்டி விவாதம் எதற்கு ?

      • தட்டச்சு பிழை

        ஏன் மனுவே ஒரு கறபனை பாத்திரமாக இருக்கக்கூடாது ?

      • // கட்டுரையாளர் குறிப்பிடாததை அடைப்புக்குறியில் போட்டு அதற்கு விளக்கமும் அளிப்பது என்ன வகையான அயோக்கியத்தனம் …? //

        யார் அயோக்கியத்தனம் செய்வது? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

        • // (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //
          கட்டுரையாளர் ரிக் வேதம் மற்றும் திருக்குறள் காலத்தை விவரிப்பதை முன் பின்னான வாக்கியங்களுடன் சேர்த்து கொடுத்திருக்கிறேன்.
          நீங்கள் கொடுத்த “ரிக்வேதம் திருக்குறள் காலத்திற்கு முந்தையது” என்று கட்டுரையாளர் கூறுவதை முன் பின் வாக்கியங்களுடன் கொடுங்கள்.
          நீங்கள் கொடுத்தது போல் கட்டுரையாளர் கூறியிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருவேன்.
          இல்லையெனில் நீங்கள் செய்தது “அயோக்கியத்தனம்” என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்

          • மனு’ என்பவன் யார்? இது பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் விரிவாக ஆய்வுகளை செய் துள்ளார்.
            பழங்கால இந்தியாவில் ‘மனு’ என்பது ஒரு மரியாதைக்குரிய பெயராக இருந்து வந்திருக்கிறது. அதற்காக ‘மனு’ என்ற பெயரில் இதை பார்ப்பனர்கள் பரப்பினார்கள். உண்மையில் இது ‘மனு’ என்ற ஒரு தனி நபரால் எழுதப்படவில்லை. ‘நாரத ஸ்மிருதி’ என்ற மற்றொரு நூலை எழுதிய சுமதிபார்க்கவா என்பவன்தான் மனுஸ்மிருதியை எழுதி, தன் பெயரை மறைத்துக் கொண்டு அந்த காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘மனு’வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டான் என்கிறார் அம்பேத்கர். பவுத்தர்களுக்கு எதிராகவே மனு சாஸ்திரத்தில் பல ஸ்மிருதிகள் திணிக்கப்பட்டன. எனவே, பவுத்த கொள்கைகளை ஒழித்து மீண்டும் வேத பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்ததே மனு சாஸ்திரம்.
            மனு நீதியில் பல கருத்துகள் பிற்பட்ட சேர்க்கையே.கட்டுரையாளர் குறிப்பிட்டது சரி.

  9. `சோமன், கந்தர்வன்.. (ஸோம ..)` மந்திரத்திற்கு ராமானுசர் கொடுத்த விளக்கத்தைப் படிக்கவும். கீழுள்ள இணைப்பில் நேரடியாகக் காண்க (3வது 3rd manthra மந்திரத்தின் 15 வது வரியினைக் கவனிக்குக- மொழிபெயர்ப்பும் இணைப்பும் யாருடையது என்பதையும் கவனிக்குக)

    ஆளவந்தார் ((யாமுனாசார்யர்) என்ன சொல்கின்றார் .எங்களிற்குத்தான் வேதம் புரியாது. இராமனுசர், ஆளவந்தார் போன்றோரிற்குமா வேதங்கள் தெரியாது?
    பார்ப்பனர்களின் பொய்முகத்தினை வெளிப்படுத்திய அருமையான ஒரு கட்டுரை.

      • “மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
        பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)

  10. Poongodi Mam,

    I don’t want everyone to believe thirukural, that is upto their wish.

    My question is you don’t totally accept “kadavul vazhthu” from thirukural, then why are jumping or referring to 55th context to impose your own ideas?

  11. My question is why do you have two different approach to science and literature.Author in this article has done a great job of finding the time,place and circumstances of the kural.He has done a research in finding the correct meaning of that particular kural.which helps in ,better understanding, of life style in those days,influence of philosophy and so on.So we can not only learn,but pass on the good ideas to the next generation.Otherwise reading and reciting the kural,or making valluvar as a saint or God, doesn’t help the society,much.

  12. Mam,

    You not reached my point; ok.

    Let I come to yours, I’m not approaching science and literature both inb
    different ways. Already valluvar explained the human science in kural “piravi perungadal neenthuvar neenthar iraivanadi Sera thar” in kadavul Vazhthu.
    On that day itself he told us soul and body is different; our soul crosses the ocean of birth and death – only when it reaches God feet.

    It was a pure science of self realisation; the soul is the energy. It was transferred from one body ( living thing ) to another body ( living thing ) always until the energy ( soul) reaches God.

    It was also explained by scientist ” energy can neither be created; nor be destroyed but can be transformed from one form to another form.

    Our literatures have some scientific experiments and understanding, which we don’t understand.

    Let us consider, the author taking explained in a good manner; but the author was taking example of a book in which he won’t believe the first 10 context and only explain on 55th context.

    This thirukural book only for people, who believe god, even hindu, Christian or Muslim, jains, Buddhist, or any religion who believe god.

    I also don’t want to interrupt in your ideas for which you tell about non- existence of God. Similarly, I also expect that; I don’t want to argue the existence of God with you.

  13. நான் கேட்ட எந்த கேள்விக்கும் இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் பரவாயில்லை

    (1) உரை ஆசிரியர் குறிப்பிட்டது பின் வருமாறு

    // அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு.//

    முன் மற்றும் பின் வரிகளை சேர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ளது

    // நீங்கள் கொடுத்தது போல் கட்டுரையாளர் கூறியிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருவேன்.
    இல்லையெனில் நீங்கள் செய்தது “அயோக்கியத்தனம்” என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் //

    அதாவது யாதெனில் திரு S S கார்த்திகேயன் தவறு செய்தால் ‘மன்னிப்பு’ கேட்டு நல்ல பிள்ளை ஆகிவிடுவார்.

    அதையே நான் செய்தால் நான் ‘அயோகியன்’. நான் ‘மன்னிப்பு’ எல்லாம் கேட்கக்கூடாது. இதற்க்கு பெயர் தான் சிறப்பு பகுத்தறிவாதம்

    (2) உரை ஆசிரியர் மேலும் என்ன சொல்கிறார்

    // `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது //

    // இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும். //

    மேலே சொன்னதில் இருந்து ‘இறை ‘, ‘தெய்வம்’ என்பது வெவ்வேறு பொருள்களில் குறிப்பிட பயன்படுத்திய ஒரு வார்த்தை அவ்வளவே.

    இதற்கும் ‘வைதீக தெய்வத்திற்கும்’ என்ன சம்பந்தம் ? எப்படி குறள் 55ல் மட்டும் ‘கடவும்’ மற்றும் ‘வைதீகம் தெய்வம்’ உள்ளே வந்தது

    3) திருவள்ளுவர் ஆண்டு 31 BC என்று சொல்லப்படுகிறது. 500 தமிழ் புலவர்கள் சேர்ந்து கண்டுபிடித்த வருடம் இது

    மனு வாழ்ந்த காலம் 170 – 150 BC என்று சொல்லப்படுகிறது. இருவரும் ஏறத்தாழ சமகாலத்தில் வாழ்ந்துள்ளார்கள்

    ஆனால் உரை ஆசிரியர் “திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க” என்று கூறுகிறார். மனு வாழ்ந்த காலம் (170 – 150 BC) என்றால், திருவள்ளுவர் எப்படி ‘மனுவுக்கு’ முன்பு இதை இயற்றி இருக்க முடியும் ?

    4) மேலும் உரை ஆசிரியர் என்ன சொல்கிறார்

    // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது //

    ரிக் வேதம் தமிழ் மண்ணை எந்த நூற்றாண்டில் வந்து சேர்ந்தது ? இதற்கு உரை ஆசிரியர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. போகிற போக்கில் ஒரு வரி சேர்த்தால் போல் தோன்றுகிறது

    எந்த நூற்றாண்டில் ‘ரிக் வேதம் தமிழ் மண்ணை வந்து சேர்ந்தது’ என்று சொன்னால் விஷயங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

    வாழ்க சிறப்பு பகுத்தறிவாதம் !!!

    நன்றி

    • குப்த பேரரசு காலத்தில் அதற்கும் பின்பே மனுசாத்திரம் எழுதப்பட்டிருக்கும், ஏனெனில் சமற்கிரத மொழிக்கு கி.பி 2ம் நூற்றாண்டுவரை எழுத்துவடிவமே இல்லையே. (இருக்கின்றது என நினைப்பவர்கள், சான்று தரவும்)

      • திருக்குறள் மனுவுக்கு முன்பு எழுதப்பட்டதா அல்லது பிற காலத்தில் எழுதப்பட்டதா என்பது தனி விவாதமாக எடுத்து கொள்ளலாம். இதை தான் நானும் முன்பே சொல்லி இருக்கிறேன். மனு தர்மம் என்பது வாய் வழியாக சொல்லப்பட்டது / பரப்பப்பட்டது என்று

        உரை ஆசிரியரின் குறளுக்கான விளக்கம் எப்படி சரியாகும் என்பதே கேள்வி ? பார்ப்பான வெறுப்பாளர்கள் ‘உரை ஆசிரியர்’ சொன்ன விளக்கத்தை ஏற்று கொண்டு மனதளவில் பொய்யாக மகிழ்ந்து கொள்வது தான் ‘பகுத்தறிவா’ ??

        உரை ஆசிரியரின் இந்த விளக்கம் தவறு எனில் பார்ப்பான வெறுப்பாளர்கள் ‘சிறப்பு பகுத்தறிவாதிகள்’ என்றே கருதப்படுவர்

    • Sathish,
      நீங்கள் கட்டுரை ஆசிரியரின் முந்தைய கட்டுரையிலிருந்து விபரங்களை கையாண்டுள்ளீர்கள். இதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் ரிக்வேத காலத்தையும் மனுதர்ம காலத்தையும் நான் சரியாக உள்வாங்கவில்லை.
      இந்த குழப்பங்களால் உங்களை கடுமையாக விமர்சித்ததற்கு வருந்தி உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
      //அதாவது யாதெனில் திரு S S கார்த்திகேயன் தவறு செய்தால் ‘மன்னிப்பு’ கேட்டு நல்ல பிள்ளை ஆகிவிடுவார்.
      அதையே நான் செய்தால் நான் ‘அயோகியன்’. நான் ‘மன்னிப்பு’ எல்லாம் கேட்கக்கூடாது. இதற்க்கு பெயர் தான் சிறப்பு பகுத்தறிவாதம்//
      நீங்கள் தவறு செய்ததாக கருதி மன்னிப்பு கோரினால் நிச்சயமாக ஏற்கப்படும். அதிலென்ன பாரபட்சம்…
      விவாதங்களின் குறிக்கோளே நட்பை வென்றெடுப்பதுதானே..!
      விவாதத்தை தொடருவோம் நண்பரே…!

  14. பார்ப்பன ஆதரவாளர்கள் கதறுவதைப் பார்க்க மகிழ்வாக உள்ளது. சரியான கட்டுரை

  15. Dear team,

    You people don’t believe on god, then why are you quoting references from thirukural book ( that proves existence of God )?

    Please accept only one thing from Below two points!

    1) If you accept God, then you can come to thirukural.

    2) If you don’t accept God, better stay away from it and follow your well wisher periyar.

    It is the foolish thing to mix both.

    Don’t confuse your ideas with thiruvalluvar quotes; take things as it is. Here there is no way for “in my opinion”.

    What you people want actually?
    All the people want to hate brahmins?

    See, our soul will always try to critisise everyone. We are the best, my thinking is best, I’m telling best; I know everything. Don’t give the way to your soul to think like this, it was the dangerous way.

    Let you know everything, better keep it in yourself.

      • Mr.Sumerian,

        God meaning can be explained only to people who believe god.

        How you can understand the meaning if you don’t believe on it.

        Here you cannot say, only with seeing it on eyes I can believe. You cannot see the smell of anything, only with the help of your nose you can feel it! If someone’s nose was not able to smell anything or rose, he will think that rose is just a flower, but he don’t know the fragnance of flower. Hence from his opinion the flower is just a flower. But we know it was giving good fragnance, untill someone tell him that you have problem with your nose, hence you couldn’t undergo the fragnance of rose, he will never understand.

        God is source of energy, the supreme personality, all the soul was from him.

        Already I have explained energy with thiruvalluvar and proved with scientist ideas.

        We always believe on our mother to get knowing about our Father. Only if our mother says, we can understand the relationship between us and father. We can’t refuse our mother words or just her to argue I don’t believe.

        Also we don’t accept mother’s words ( fore father’s ), who were considering god and following God for more than 5000 years.

        I don’t want to explain the existence of God to you; I just want to tell that thiruvalluvar is a person who believe in God. But your ideas was an atheist; then why are taking examples from a person who believe in God.

        • அப்படியென்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நாத்திகர். ஆத்திகர்கள் அவரது கோட்பாடுகளை பயன்படுத்தக் கூடாது.
          கமல்ஹாசன் நாத்திகர். அவர் படங்களை ஆத்திகர்கள் பார்க்க கூடாது.
          என்று புரிந்து கொள்ளலாமா?

          • to,

            Mr.Karthikeyan,

            Please go through the things of Einstein… the below mentioned thing was letter to Einstein by a six year Girl.
            “My dear Dr. Einstein,

            We have brought up the question: ‘Do scientists pray?’ in our Sunday school class. It began by asking whether we could believe in both science and religion. We are writing to scientists and other important men, to try and have our own question answered.

            We will feel greatly honored if you will answer our question: Do scientists pray, and what do they pray for?

            We are in the sixth grade, Miss Ellis’s class.

            Respectfully yours,
            Phyllis

            Dear Phyllis,
            I will attempt to reply to your question as simply as I can. Here is my answer:

            Scientists believe that every occurrence, including the affairs of human beings, is due to the laws of nature. Therefore a scientist cannot be inclined to believe that the course of events can be influenced by prayer, that is, by a supernaturally manifested wish.

            However, we must concede that our actual knowledge of these forces is imperfect, so that in the end the belief in the existence of a final, ultimate spirit rests on a kind of faith. Such belief remains widespread even with the current achievements in science.

            But also, everyone who is seriously involved in the pursuit of science becomes convinced that some spirit is manifest in the laws of the universe, one that is vastly superior to that of man. In this way the pursuit of science leads to a religious feeling of a special sort, which is surely quite different from the religiosity of someone more naive.

            With cordial greetings,
            your A. Einstein”

            This is information about Spinoza Theory.

            Comparison to Eastern philosophies
            Similarities between Spinoza’s philosophy and Eastern philosophical traditions have been discussed by many authors. The 19th-century German Sanskritist Theodor Goldstücker was one of the early figures to notice the similarities between Spinoza’s religious conceptions and the Vedanta tradition of India, writing that Spinoza’s thought was

            … a western system of philosophy which occupies a foremost rank amongst the philosophies of all nations and ages, and which is so exact a representation of the ideas of the Vedanta, that we might have suspected its founder to have borrowed the fundamental principles of his system from the Hindus, did his biography not satisfy us that he was wholly unacquainted with their doctrines… We mean the philosophy of Spinoza, a man whose very life is a picture of that moral purity and intellectual indifference to the transitory charms of this world, which is the constant longing of the true Vedanta philosopher… comparing the fundamental ideas of both we should have no difficulty in proving that, had Spinoza been a Hindu, his system would in all probability mark a last phase of the Vedanta philosophy.

            Max Müller, in his lectures, noted the striking similarities between Vedanta and the system of Spinoza, saying “the Brahman, as conceived in the Upanishads and defined by Sankara, is clearly the same as Spinoza’s ‘Substantia’. “Helena Blavatsky, a founder of the Theosophical Society also compared Spinoza’s religious thought to Vedanta, writing in an unfinished essay “As to Spinoza’s Deity—natura naturans—conceived in his attributes simply and alone; and the same Deity—as natura naturata or as conceived in the endless series of modifications or correlations, the direct out-flowing results from the properties of these attributes, it is the Vedantic Deity pure and simple.”

            I don’t Know about Mr.Kamala Hassan – actually what he thinks. He will always tell about krishna, and at last will say there is no God.

            • To,
              MR.Karthikeyan,

              In his reply to Phyllis, Einstein hints at his pantheism; the idea that “God is everything”. Several times he expressed this view explicitly, telling the Rabbi Herbert S. Goldstein, “I believe in Spinoza’s God, who reveals himself in the harmony of all that exists, not in a God who concerns himself with the fate and the doings of mankind.” He went further in telling an interviewer that he was, “fascinated by Spinoza’s Pantheism.” This pantheism would form the basis of his worldview, and even influence his ideas in physics.

              • To,
                Mr.Karthikeyan,

                The Pantheism of Spinoza, which Einstein was most interested in, holds that the universe is identical to God. This God is impersonal and uninterested in human affairs. Everything is made of the same fundamental substance, which is derivative of God. The laws of physics are absolute and causality leads to determinism in this cosmos. Everything which happens was the result of necessity and it was the will of God. For the individual, happiness follows from understanding the cosmos and our place in it rather than trying to pray for divine intervention.

  16. To,

    Mr.Samy,

    Do you know which is humanity? Considering everyone in this world.

    Only animals will be happy if an another animal killed for food. Only the animals will feel good when other animal cry when they were killed.

    If someone hurt you, speak in a good way make understand them; otherwise leave it.

    If someone hurt you, they also considered as an animal. Hope, now you can understand.

    Don’t hurt them, if you are the reason for any people’s hurting, you are considered as an animal.

    That’s why Mahatma Gandhi took Ahimsa against the British. That was the polite way.

    • உயிர்களை கொல்லாமை பற்றிய பிரச்சாரம் கேட்க இனிமையாக இருக்கிறது.
      சமீப காலங்களில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, வீட்டில் மாமிசம் வைத்திருந்ததற்காக பல மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன.
      அது பற்றி உங்கள் கருத்தைக் கூறவும்

      • Mr.Kathikeyan,

        Vow beautiful name..
        Normally I don’t believe words “in my opinion”; I take things as it is here I’m talking about the books which I read.

        I already stated that, only an animal will kill other animal. Also, taking revenge is an animal behavior.

        Hope, you can understand.

  17. இந்த விவாதம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என்று சற்று திசை மாறிவிட்டது

    பொதுவாக ‘பார்ப்பன வெறுப்பார்கள்’ உரை ஆசிரியரின் கூற்று சரி என்பது போலவே பதிந்துஉள்ளனர்

    உரை ஆசிரியரின் விளக்கம் எப்படி சரியாகும் என்கிற என்னுடைய கேள்விக்கு இன்னும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. அது தான் தலைப்பும் கூட

    • Mr.Satish,

      The editor of the media was planning to earn money with these type of posts. They want to attract people to this websites with wrong concepts.

      The author was also not replying to the post, very good plan of them.

      Suddenly, Mr.Samy will come and say, “vow it’s nice to see the brahmin supporters crying”..

      They are doing it as a nice business.

      • பகுத்தறிவாதிகள் உண்மையிலேயே பகுத்தறிவாதிகளாக இருந்தால் பரவாயில்லை. அதிலும் தி.க வுக்கும் பகுத்தறிவுக்கும் ஒரு காத தூரம்

        என்னுடைய கேள்விக்கு இங்கே இருக்கும் ‘பார்ப்பன வெறுப்பாளர்கள்’ பதில் அளிக்கவில்லை என்பது பொருட்டாக தெரியவில்லை

        ஆனால் உரை ஆசிரியர் அவருடைய கட்டுரையை படிப்பவர்கள் எல்லாம் ‘தமிழ் சரி வர படிக்க தெரியாதவர்கள்’ என்று நினைத்து விட்டாரா ? (அல்லது) இந்த தளத்தை படிக்கும் அனைவருக்குமே ‘பார்ப்பன வெறுப்பாளர்’ என்று நினைத்து விட்டாரா ? (அல்லது) படிப்பவர்கள் கேணையங்கள் என்று நினைத்து கொண்டாரா என்று தெரியவில்லை

        As a side note, Vinavu and DK are unofficial wings of DMK which is well known who follows politics

        நன்றி

        • எங்களிற்கு கட்டுரையாளரின் கருத்து விளங்குகின்றது. உங்களிற்கு விளங்காதுவிடின் குறளிலுள்ள எந்தச் சொல்லிற்கான பொருள் புரியவில்லை (தொழு, கொழுநன்…) எனக் கூறவும்.
          {எமக்கு தமிழ் ஒன்றே தாய்மொழி, சிலரிற்கு சமஸ்கிரதம் என்ற செத்த மொழி மீதே பற்று. அவர்களிற்கு விளக்கம் குறைவாகவே இருக்கும்}.

  18. திரு சுமேரியன், எனது கேள்விகள் பின்வருமாறு

    உரை ஆசிரியர் தான் முன்பு எழுதிய கட்டுரையில் என்ன சொல்கிறார்

    // `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது //

    // இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும். //

    கேள்வி #1: ‘தெய்வம்’ என்கிற சொல் குரல் 55ல் மட்டும் எப்படி கடவுளை’ அதுவும் ‘வைதீக தெய்வத்தை’ குறிக்கிறது ? எங்கே இருந்து கட்டுரை ஆசிரியர் இந்த குறளுக்கு ‘வைதீக தெய்வத்தை’ திருவள்ளுவர் சொன்னதாக சொல்கிறார் ?

    // அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார். //

    // தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும். //

    கேள்வி #2: தெய்வத்துடன் எப்படி புணர முடியும் ? திருவள்ளுவன் பகுத்தறிவு இல்லாமல் இதை எழுதி இருக்கிறான் என்று நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

    கேள்வி #3: அதுவும் திருவள்ளுவன் “பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்”. திருக்குறள் சாதி, மதம் இனம் கடந்த நூல் தானே ? அப்படி இருக்கும் போது ‘பார்ப்பன தெய்வத்துடன்’ புணர வேண்டாம் என்று எப்படி எழுதுவார் ?

    எனது கேள்விகளை கேட்டு விட்டேன். உமது பதில்களை தரவும்

    நன்றி

    • Sathish
      உங்களால் கட்டுரையை புரிந்து கொள்ள முடியவில்லை. திறனில்லாமலில்லை.. மனமில்லாமல்…
      கட்டுரையின் சூத்திரம் இதுதான்
      “தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
      மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
      தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
      பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!”
      மேற்கண்ட சூத்திரம் உங்களுக்கு புரிந்துவிட்டால் சூரியனைக் கண்ட பனிபோல ‘பளிச்’சென்று உங்களுக்கு புரிந்துவிடும்.
      சூத்திர பொருளில் உங்களுக்கு மாறுபாடு இருந்தால் கீழ்க்கண்டவர்களிடம் உங்களின் சமக்கிருத மொழிப்போரைத் துவங்குங்கள்..!
      1.இராமானுசர்
      2.ஆளவந்தார் (யாமுனாசார்யர்)
      நன்றி! வணக்கம்!!

      • To,

        Mr.Karthikeyan,

        I hope you will never start a book from beginning. The same thing I told you regarding thiruvalluvar, if you people believe on thiruvalluvar’s first ten quotes.. there will be no problem.

        As you described the Sanskrit quotes, have you ever read the book of ramanujar and yamunachariyar from starting to end?

        Nevertheless you read the book from start to end, how you get a idea of the book?

        Likewise, people starting new trends of researching vedas and thirukural from their own opinion. This is not good for young generation.

        Consider books as it is. Learn vedas from good guru. You will never get confused..

        First, think of why you came to this world? What is the necessity?

        Have you ever asked this type of questions to yourself?

        • Mr.Nagapandian,
          விவேகானந்தரின் ‘சிகாகோ சொற்பொழிவை” பலமுறை வாசித்து அவரை மனதில் வரித்தவன் நான். அவரின் துவைத, விசிஷ்டாத்வைத, அத்வைத விளக்கங்களை படித்து அத்வைத கோட்பாட்டில் மனதை பறிகொடுத்தவன்.
          இஸ்கான் கோயில்களில் கிருஷ்ணனின் இரவுநேர சயன கொண்டாட்டங்களில் பங்கெடுத்தவன். பகவத் பாதா நூல்களை படித்தவன். நாராயணனே உச்ச தெய்வம் எனும் இஸ்கான் கோட்பாட்டை அத்வைதம் கொண்டு நண்பனுடன் விவாதித்தவன்.
          பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதையை சிலாகித்து படித்தவன்.
          சித்தர் ஒருவருடன் 20 வருடங்களுக்கு மேலாக பயணித்தவன். அவர் மனதிற்கு நெருங்கிய சீடர்களில் ஒருவன். சமீபத்தில் மறைந்த அவரை இன்றும் வணங்குபவன்.
          உங்களுக்கு ஆலோசனை சொல்ல இந்த தகுதி போதும் என்று நினைக்கிறேன்.
          உண்மையான தேடல் மூலம் தான் ஆழ்ந்த அறிவை பெறமுடியும். நாணயத்தின் ஒருபக்கமாக இருந்து கொண்டு மறுபக்கத்தை விமர்சிப்பதால் நாம் உண்மையான அறிவை பெறமுடியாது. விருப்பு வெறுப்பற்ற அறிவுத்தேடல் மூலம் “உண்மையான அன்பை” அறிந்து கொள்ள முடியும்.

          நன்றி! வணக்கம்!!

    • தெய்வத்துடன் எப்படி புணர முடியும்?
      நித்தியானந்தா தன்னைத் தெய்வம் என்று சொல்லி ரஞ்சிதாவினைப் புணர்ந்தது போன்று.
      பார்ப்பனர்களும் அவ்வாறே தம்மைத் தெய்வங்களாகக் காட்டி, சூத்திரப் பெண்களை அனுபவிக்கப் பார்த்தார்கள்.

      • ப்ராம்மணர்களே தெய்வங்கள். அவர்களுடன் புணரக்கூடாது. சரி.

        மற்றவர்களுடன் புணரலாமா ? திருவள்ளுவர் ‘மற்றவர்களுடன் புனரலாம்’ (அல்லது) ‘மற்றவர்களுடன் புணரக்கூடாது” என்று எங்கேயாவது சொல்லி இருந்தால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

        • பதட்டப்படாதீங்க Sathish,
          “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
          பெய்யெனப் பெய்யும் மழை.” (குறள் : 55)
          இந்த குறளிலேயே உங்களுக்கு பதில் இருக்கிறது

  19. மேலும் உரை ஆசிரியர் என்ன சொல்கிறார், ‘ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது’

    // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //

    கேள்வி #4: அதென்ன உரை ஆசிரியர் குறிப்பாக ‘ரிக் வேதத்தை’ குறிக்கிறார் ? ஏனென்றால் உரை ஆசிரியர் தன்னுடைய கட்டுரைக்கு தேவைப்படும் ‘“ஸோம: ப்ரதமோ…” இந்த பாடலை நுழைத்து இருக்கிறார்

    இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. இதற்க்கு எத்தனை முறை விளக்கம் கொடுப்பது ?

    மற்ற மூன்று வேதங்கள் ‘தமிழ் மண்ணை’ எப்போது சேர்ந்ததாம் ? மற்ற மூன்று வேதங்கள் இது போன்ற மந்திரங்கள் இல்லையா (அல்லது) உரை ஆசிரியர் ஆராயவில்லையா என்பது தெரியவில்லை

    கேள்விகளுக்கு தனி தனியாக விடை அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன்

    நன்றி

  20. Mr S S Karthikeyan

    நீங்கள் வேரை விட்டு விட்டு நுனியை பிடித்து கொண்டுளீர்கள். உரை ஆசிரியர் “என்ன சொல்கிறார் ?” அதை “எப்போது சொல்கிறார்” என்பதை கீழே கொடுத்துள்ளேன்

    // சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம். //

    கட்டுரை ஆசிரியர் ‘வைதீக தெய்வம்’ என்று முன்னரே ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு பின்னர் இந்த சூத்திரத்தை தருகிறார்

    // தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில் //

    இப்போது கேள்வி கட்டுரை ஆசிரியர் குறள் 55ல் ‘வைதீக தெய்வம்’ என்று எப்படி முடிவுக்கு வருகிறார் என்று பாருங்கள்

    // ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //

    மேற்சொன்னதை நீங்களே எனக்கு விளக்குங்கள்

    நீங்கள் சொல்வது ‘வைதீக தெய்வம்’ என்கிற உரை ஆசிரியரின் கூற்றை ஏற்று கொண்டு பதில் இடுகிறீர்கள்.

    நான் கேட்பது உரை ஆசிரியரின் ‘வைதீக பார்ப்பன தெய்வமே ஆகும்’ என்கிற அவரின் ‘interpretation’ சரியானதா என்று கேட்கிறேன்

    நீங்கள் உரை ஆசிரியரின் ‘interpretation’ சரி என்றால் நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன்

    நன்றி

  21. இந்த குறளுக்கு நிறைய தமிழ் அறிஞர்கள் வெல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர் பரிமேலழகர், பாரதிதாசன், கருணாநிதி, சாலமன் பாப்பையா, திரு.வி.க., திரு வேங்கடமணி இன்னும் நிறைய பேர் என்று இந்த பட்டியல் ரொம்பவே நீள்கிறது

    ஆனால் மற்றவர்கள் கொடுத்த விளக்கத்திற்கும் இந்த ஆசிரியர் கொடுத்த விளக்கத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

    இது வரை நான் படித்ததில் எந்த ஆசிரியரும் ‘வேதங்கள்’ (அல்லது) ‘மனு தர்மத்தை’ வைத்து அர்த்தம் சொல்லவில்லை. மற்றவர்கள் சீவசிந்தாமணி, கலித்தொகை போன்ற பண்டைய தமிழ் நூல்களையே தங்கள் விளக்கத்திற்கு எடுத்து கொண்டுள்ளனர்

    ஆனால் இந்த ஆசிரியர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்

    1) பெண்ணடிமை தனத்திற்கு ஈ.வெ.ரா சிஷ்யகோடிகள் என்றுமே எதிரானவர்கள் என்கிற மாய தோற்றத்ததை உருவாக்கி உள்ளார்
    2) பார்த்தீர்களா!! திருவள்ளுவரே ‘பார்ப்பனர்களை’ ஒதுக்கி தள்ளியுள்ளார் என்று எடுத்து காட்டியுள்ளார்

    #1: இந்த ஆசிரியர ‘பார்ப்பன வைதீக தெய்வத்தையே’ குறிக்கிறது என்று முடிவுக்கும் வரும் இடம் விந்தையாக உள்ளது

    // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் (நிற்க, நிற்க, நிற்க) இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //

    #2: தெய்வம் ஒரு பாலறியா கிழவி என்கிறார். பின்பு “வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும்.” என்று குறள் 55கு விளக்கம் கொடுக்கிறார்

    தெய்வம் என்பது பார்பனர்களையே குறிக்கும் என்பதற்கு இவர் (நிற்க) “தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்” என்கிற சூத்திரத்தை தருகிறார்.

    திருவள்ளுவரும் (நிற்க) குறள் 55ஐ இயற்றும் பொது ” “தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்”” என்கிற இந்த பாடலை தான் refer செய்தார் (அல்லது) ‘சோமன், கந்தர்வன்’ பாடலை refer என்பதற்கு யாரவது சான்று தந்தால் பரவாயில்லை.

    ரிக் வேதம் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில் இது எழுதப்படுவதால் திருவள்ளுவர் ‘ரிக் வேதத்தை’ refer செய்து இருக்க வேண்டும் என்று புலப்படுகிறது.

    அவர் கட்டுரைக்கு வலு சேர்க்க ‘சோமன், கந்தர்வன்’ என்கிற பாடலையும், ‘இறைப்பகை நாயனரையும்’ சேர்த்து கொண்டார்

    மற்ற வேதங்களில் ‘சோமன், கந்தர்வன்’ போன்ற பாடல்கள் இல்லையா என்று தெரியவில்லை. மற்ற 62 நாயன்மார்களை விட்டுவிட்டார், இறைப்பகை நாயனாரை தவிர்த்து. மற்ற நாயன்மார்கள் அவருடைய இந்த விளக்கத்திற்கு தேவை இல்லை போலும்

    நன்றி

  22. Dear S S Karthikeyan,

    நானும் பதட்டப்படாமல் தான் கேள்விகளை கேட்டு கொண்டு இருக்கிறேன். ஆனால் பதில் தான் வர மாட்டேன் என்கிறது

    தெய்வத்தை எப்படி புணர முடியும் என்று கேட்டால் நித்யானந்தாவை சொல்கிறீர்கள் (அல்லது) அந்த குறளை copy / paste செய்து அதில் பதில் இருக்கிறது என்கிறீர்கள்

    உரை ஆசிரியர் என்ன சொல்கிறார்

    // தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. // – பாலறியாக் என்றால் பாலினம் அற்றது அல்லது குறிப்பிட்ட பாலினத்தை குறிக்காதது என்று நான் புரிந்து கொள்கிறேன்

    // அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். //

    ஆனால் உரை ஆசிரியர் என்ன சொல்கிறார் ‘பார்ப்பன தெய்வத்தை அஃதாவது பார்ப்பானை’ புணர வேண்டாம் என்று திருவள்ளுவர் கூறுவதாக கூறுகிறார்

    // அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார். //

    பார்ப்பனனில் ஆண் / பெண் என்கிற ‘பாலினம்’ உண்டு தானே ? உரையின் தொடக்கத்தில் தெய்வம் ‘பாலறியாக் கிளவி’ என்று சொல்லிவிட்டு ‘பாலினம்’ உள்ள ‘பார்ப்பானை’ புணர வேண்டாம் என்று சொல்வது முரண் இல்லையா ?

    மற்ற குறள்களில் ‘தெய்வம்’ என்பது வேறு பொருளை தருகிறது. ஆனால் குறள் 55ல் மட்டும் பார்ப்பன கடவுளை குறிக்கிறது அதே போல் (நிற்க)

    மற்ற இடங்களில் ‘தெய்வம்’ என்பது ‘பாலறியாக் கிளவி’ ஆனால் குறள் 55ல் மட்டும் ‘பாலறிந்த கிளவியாக’ பொருள் கொள்ள வேண்டுமா ?

    இதை கேட்டால் நித்யானந்தா – ரஞ்சிதா உதாரணத்தை சொல்லுகிறார்கள்

    நன்றி

    • Sathish,
      பொருளில் குற்றம் கண்ட நக்கீரரையே ‘குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குபவர்’ என்று வசைபாடுகிறார்கள். நீங்கள் சொல்லிற் குற்றம் காண விளைகிறீர்கள். ஷாமர்த்தியமாக கேட்பதாக நினைத்து இவ்வாறு கேட்கிறீர்கள்…
      //மற்ற இடங்களில் ‘தெய்வம்’ என்பது ‘பாலறியாக் கிளவி’ ஆனால் குறள் 55ல் மட்டும் ‘பாலறிந்த கிளவியாக’ பொருள் கொள்ள வேண்டுமா ?//
      பாலறியா கிளவி என்பது பாலற்றது அல்ல. இருபாலருக்கும் பொருந்துவது. இடம் கண்டு பொருள் கொள்ள வேண்டும். இங்கே பெண்களைப் பற்றிய குறளாகையால் அது பார்பன ஆண்களையே குறிக்கிறது.
      புரிந்திருக்கும் என நினைக்கிறேன்…..!

      • //
        // தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. // – பாலறியாக் என்றால் பாலினம் அற்றது அல்லது குறிப்பிட்ட பாலினத்தை குறிக்காதது என்று நான் புரிந்து கொள்கிறேன்//
        //மற்ற இடங்களில் ‘தெய்வம்’ என்பது ‘பாலறியாக் கிளவி’ ஆனால் குறள் 55ல் மட்டும் ‘பாலறிந்த கிளவியாக’ பொருள் கொள்ள வேண்டுமா ?//
        முரண்பாடு உரையாசிரியரிடம் இல்லை. உங்களிடம்தான் உள்ளது

        • நான் கேள்விகளை என்னுடைய புரிதலின் அடிப்படையில் தான் கேட்டு இருக்கிறேன். வார்த்தையை கவனிக்கவும்

          // பாலறியாக் என்றால் பாலினம் அற்றது அல்லது குறிப்பிட்ட பாலினத்தை குறிக்காதது என்று நான் புரிந்து கொள்கிறேன் //

          ‘நான் புரிந்து கொள்கிறேன்’ என்று கூறி விட்டு என்னுடைய கேள்வியை கேட்டு உள்ளேன். இதை விட அவை அடக்கமாக எப்படி கேள்வி கேட்பது

          // நீங்கள் சொல்லிற் குற்றம் காண விளைகிறீர்கள். // குற்றம் காணும் அளவிற்கு எனக்கு இலக்கிய அறிவு இல்லை.

          பார்ப்பன அடிவருடி, பார்ப்பன ஆதரவாளர்கள் என்றெல்லாம் வசை பாட நம் தமிழ் நாட்டில் ஒரு தனி குரூப் உள்ளது

          // முரண்பாடு உரையாசிரியரிடம் இல்லை. உங்களிடம்தான் உள்ளது //

          இது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னுடைய முந்தைய கேள்விகளை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் முந்தைய கேள்விகளுக்கு பதில் வரவில்லை என்பது வேறு விஷயம்

          நன்றி

        • உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால் இதே கேள்வியை நான் முன்பும் கேட்டு உள்ளேன்

          // #2: தெய்வம் ஒரு பாலறியா கிழவி என்கிறார். பின்பு “வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும்.” என்று குறள் 55கு விளக்கம் கொடுக்கிறார் //

          ஆனால் அப்போது அதற்க்கு பதில் வரவில்லை. விரிவாக கேட்ட பெண் பதில் வந்தது

          நன்றி

          • `தெய்வம் பாலறியாக் கிளவி` என்பது இயற்கை சார் வழிபாடான பழந்தமிழரின் வழிபாட்டினைக் குறிக்கும்.
            குறள் 55 இல் பார்ப்பனர்கள் வேதத்தின் வழியே தமிழர்களிடம் திணித்த தெய்வமே# `பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!` # குறிப்பிடப்படுகின்றது.
            ஒன்று தமிழரின் தொன்மைசார் தெய்வம்= பாலறியாக் கிளவி
            மற்றையது பார்ப்பனர் தம்மைத்தாமே தெய்வமாக்கியது.
            இரண்டும் வெவ்வேறு.

  23. எனக்கு தோன்றிய சில கேள்விகள் கீழே கேட்டு உள்ளேன். இவற்றிற்கு விடை தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ‘கருத்தொற்றுமை க்கு’ கூட தமிழ் அறிஞர்கள் மற்றும் புலவர்களால் கொண்டு வரமுடியவில்லை

    1) திருவள்ளுவர் எப்போது பிறந்தார் ? சரியாக யாருக்கும் தெரியாது
    2) திருவள்ளுவர் எப்போது இறந்தார் ? கிட்டத்தட்ட எந்த தகவலும் இல்லை
    3) திருவள்ளுவரின் தந்தை யார் ? பார்ப்பனரா ? வள்ளுவ இனமா ? குறளி இனமா ?
    4) திருவள்ளுவரின் தந்தை பார்ப்பனர் என்றால் ‘வைதீக தெய்வத்தை தொழ வேண்டாம்’ என்று எழுதி இருப்பாரா ?
    5) “தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்” இந்த பாடல் எப்போது, எந்த நூற்றாண்டில், யாரால் இயற்றப்பட்டது ? எந்த மொழியில் இயற்றப்பட்டது ?
    6) “தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்” சமஸ்க்ரிதத்தில் இயற்றப்பட்டு இருந்தால் திருவள்ளுவர் ‘யாரிடம்’ சமஸ்க்ரிதம் கற்றார் ? திருவள்ளுவரின் ‘குரு’ யார் ? ஏனெனில் திருவள்ளுவர் ‘எழுத படிக்க’ தெரியாதவர் என்று ஒரு கதை உள்ளது
    7) ரிக் வேதம் எப்போது (அல்லது) எந்த நூற்றாண்டில் தமிழ் மண்ணை வந்து சேர்ந்தது ? அப்போது திருவள்ளுவர் இருந்தாரா ?

    எந்த கருத்து ஒற்றுமைக்கும் வர முடியாத கேள்விகளுக்கும், விடை காண முடியா கேள்விகளையும் வைத்து கொண்டு உரை ஆசிரியர் குறளுக்கு தந்த விளக்கம் ‘சரி தான்’ என்கிற தொனியில் வாதம் செய்வது எப்படி பகுத்தறிவாகும் என்று எனக்கு தெரியவில்லை

    குறிப்பு :- உரை எழுதிய ஆசிரியர் திருக்குறளுக்கு விளக்கம் தந்ததோடு நிறுத்தி கொண்டு இருந்தால் பரவாயில்லை. அனால் எப்போது ‘சோமன், கந்தர்வன்’ என்கிற பாடலை சேர்த்தரோ அப்போதே உரை ஆசிரியரின் “உண்மை முகம்” தெரிந்து விட்டது

    நன்றி

  24. திருவள்ளுவரின் பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் கேட்ட ஒரே ஆள் நீங்கள்தான். அதுகூடப் பருவாயில்லை. `வள்ளுவரிற்கு எழுதப் படிக்கத் தெரியாது` என்றீர்களே ! இதற்கே ஒரு முப்பரிநூல் தரலாம்(ஏற்கனவே இருந்தாலும் பருவாயில்லை).

    மற்றையது சோமன், கந்தர்வன் பாடலிற்கு ராமனுசர், ஆளவந்தார் போன்றோரே கட்டுரையாளர் குறித்த பொருளிலேயே விளக்கம் கொடுத்துள்ளனர்.

    • நான் பிறப்பு சான்றிதழும் கேட்கவில்லை, இறப்பு சான்றிதழும் கேட்கவில்லை. வள்ளுவரின் வரலாற்றை பற்றி ஏதேனும் கருத்து ஒற்றுமை புலவர்கள் இடையே உள்ளதா என்று கேள்வியை தெளிவாக தானே சுவாமி கேட்டு இருக்கிறேன்.

      // வள்ளுவரிற்கு எழுதப் படிக்கத் தெரியாது` என்றீர்களே // அதாவது வழக்கத்தில் ஒரு கதை உண்டு. வள்ளுவருக்கு எழுத படிக்க தெரியாது. சரஸ்வதியின் அருளால் அவர் எழுத படிக்க முடிந்தது என்பவர் உண்டு. அதை தான் நான் சொல்லி இருக்கிறேன். ஒரு துணை கேள்வியையும் கேட்டு இருக்கிறேனே சுவாமி ‘வள்ளுவரின் குரு யார்’ என்று ?

      // இதற்கே ஒரு முப்பரிநூல் தரலாம்(ஏற்கனவே இருந்தாலும் பருவாயில்லை // It’s as simple as that. கேள்விகளை கேள்விகளாக பார்க்கவில்லை என்றால் இப்படி தான் பதில் வரும் . இதை தான் நான் முதலிலேயே ‘சிறப்பு பகுத்தறிவாதம்’ என்று கூறினேன். இப்போது பூனை குட்டி வெளியில் வந்து விட்டது

      // மற்றையது சோமன், கந்தர்வன் பாடலிற்கு ராமனுசர், ஆளவந்தார் போன்றோரே கட்டுரையாளர் குறித்த பொருளிலேயே விளக்கம் கொடுத்துள்ளனர். //

      ராமானுஜர், சங்கராச்சாரியார் என்று யார் வேண்டுமானாலும் என்ன விளக்கம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். குறளுக்கு விளக்கம் கொடுக்கும் உரை ஆசிரியர் குறளுக்கு விளக்கம் மட்டுமல்லாமல் ‘சோமன், கந்தர்வன்’ பாடலுக்கு இந்த உரையில் என்ன வேலை ?

      என்ன உங்களுக்கு இந்த ‘உரை ஆசிரியர்’ சொன்னதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்று கொண்டு இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்

      நன்றி

      • #ராமானுஜர், சங்கராச்சாரியார் என்று யார் வேண்டுமானாலும் என்ன விளக்கம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். குறளுக்கு விளக்கம் கொடுக்கும் உரை ஆசிரியர் குறளுக்கு விளக்கம் மட்டுமல்லாமல் ‘சோமன், கந்தர்வன்’ பாடலுக்கு இந்த உரையில் என்ன வேலை ?#
        அந்த மந்திரத்திற்கே பிழையான விளக்கம் கொடுக்கும்போது ராமானுசர் விளக்கம் தேவையாகின்றது. மேலும் அந்த விளக்கம் இந்தக் குறளிற்கான விளக்கத்துடன் ஒத்துப்போகின்றது. அதனாலேயே கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

  25. ‘பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால், ஒழுக்கம் தவிறினால், கீழ் பிறப்பினன் ஆவான்’ என்று ஆரியப் பார்ப்பான் பரிமேலழகர் எழுதிய உரையை ஒட்டியே, கருணாநிதி உட்பட எல்லாரும் ‘மறப்பினும்’ என்று தொடங்கும் 134-ம் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்களே? ஒழுக்கத்தை பார்ப்பான் கைவிட்டால்தான் பெருந்தவறா? மற்றவர்கள் ஒழுக்கத்தை கைவிட்டால் பரவாயில்லையா? அப்படியானல், பார்ப்பான் ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்தவன் என்று இவர்களும் ஒத்துக் கொள்கிறார்களா?

    “மறப்பினும் ஓத்து கொளலாகும் பார்ப்பான்” என்ற வரியின் மூலம் வள்ளுவர் ஆரியப் பார்ப்பானையும், அவன் ஒதும் வேதத்தையும் எவ்வளவு உயர்வாக குறிப்பிடுகிறார்? மேலும், அந்த சிறப்பு ‘உம்’, வாயிலாக, பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறக்கலாகாது என்றும் அறிவுறுத்துகிறாரே? ஊத்தவாய் பார்ப்பனன் தான் கற்ற வேதத்தை மறந்தால் என்ன, மறக்காவிட்டால் என்ன? வள்ளுவர் அதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?
    உழவர்கள் உழுவதையும் பிறாமணர்கள் வேதம் ஓதுவதையும் நிறுத்தினால், இந்தியா அழிந்து விடும் என்று சமீபத்தில் ஆர் எஸ் எஸ் குருமூர்த்தி உளறிக்கொட்டினானே, அவனுக்கும் வள்ளுவருக்கும் என்ன வித்தியாசம்?
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாக சொல்லப்படும் வள்ளுவர் காலத்தில், ஆரியப் பார்ப்பானர்கள் தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருத வேதம் ஓதுவது, வழக்கில் இருந்ததா என்பது என் முதல் கேள்வி.
    சரி, வள்ளுவர் காலத்துக்கு முன்பாகவே, வஞ்சகப் பார்ப்பனர்கள் தமிழகத்தில் காலூன்றி, ஜாதீயத்தை விதைத்து, மரமாக்கி தண்ணீர் ஊற்றி, வளர்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
    வள்ளுவர் தமிழ் உணர்வு உள்ளவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று அந்த பார்ப்பனர்களை ‘தமிழ்நாட்டில் குடியேறி நஞ்சைப்பரப்பிய வந்தேறிகள்’ என்று தன் குறட்பாக்களில் சாடியிருக்க வேண்டும், அல்லது, அவர்களைப் பற்றியும் அவர்கள் வேதம் ஓதுவதைப் பற்றியும் குறளில் குறிப்பிட்டிருக்கக் கூடாது. பார்ப்பான் வேத்தை ஓதினால் என்ன? மறந்தால்தான் இவருக்கென்ன? அப்படியே மறந்தால் தமிழர்களுக்கு நல்லதுதானே!

    ஓழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை கூற வந்தவர் பொதுவாக எழுதியிருக்க வேண்டியதுதானே? அதென்ன பார்ப்பானுக்கென்று ஒரு குறள்? அதுவும் வேதத்தைத் தொடர்புபடுத்தி?

    பரிமேலழகரைத்தான் ஆரியப் பார்ப்பான் என்று இதுகாறும் நினைத்திருந்தோம். ஆனல், வள்ளுவரும் ஒரு ஆரியப் பார்ப்பானாகத் தெரிகிறாரே?

    இந்த சொரணை இதுவரை ஒரு தமிழனுக்கும் ஏற்படவில்லையே? நம்மை இழிவுபடுத்தும் திருக்குறளை நம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே? ‘பார்ப்பான்’ என்றால், பிறாமணன் இல்லை; நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று பொருள்; அவன் ஒழுக்கம் தவறக்கூடாது என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்று ஒரு சாரார் வலிந்து பொருள் கூறுகிறார்கள். அப்படியானால், ‘ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும்’ என்பதற்கு என்ன பொருள்? ‘பிறப்பு கெடும்’ என்றாலே சாதி நுழைந்து விடுகிறதே.

    ‘கொல்லாமை’ என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறளில், “கொலையைத் தொழிலாக செய்பவர்கள் ‘புலைவினையர் என கருதப்படுவர்” என்று பொருள்பட எழுதியிருக்கிறார். வள்ளுவர் யாரை ‘புலைவினையர்’ என்றுகுறிப்பிடுகிறார்? ‘புலையர்’ என்றால் யார்? தமிழ் அறிஞர்கள் விளக்குவார்களா?

    குறளில், “மேற்பிறந்தார்”, “கீழ்பிறந்தார்”, “இழிபிறப்பு”, என்றசொற்கள்வருகின்றனவே? பிறப்பால் எவரும் மேலானவரோ, கீழானவரோ அல்லது இழிவானவரோ இல்லை என்ற கொள்கை
    உடையவராக இருந்தால் வள்ளுவர், மேற்கூறிய சொற்களை குறளில் கையாண்டிருக்கக்கூடாதே!அம்மாதிரி சொற்களைக் கையாண்டிருப்பதினால், வள்ளுவரும், ‘பிறப்பால் மேலானவர்கள், பிறப்பால் கீழானவர்கள்’ என்ற ஆரிய கொள்கையைஏற்றுக்கொள்கிறார் என்றுதானே தெரிகிறது.

    மேலும், மேற்பிறப்பு, கீழ்பிறப்பு என்ற இடங்களில் எல்லாம் உயர்திணையைக் குறிப்பிடும் வள்ளுவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற இடத்தில், அஃறிணையைப் பயன்படுத்துகிறார். அப்படியானால் இந்தவரிக்கு, ‘பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் பிறப்பு ஒரே மாதிரிதான்; அதாவது, ஆண் விதைக்க, பெண்ணின் யோனி வழியாக வெளியே வருவது’ என்ற பொருளைத்தான் கொள்ள முடியும். மற்றபடி”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதியதன் மூலம், ஆரிய ஜாதீயத்தை வள்ளுவர் மறுப்பவர் என்ற பொருள் கொள்வதற்கு இடமில்லை. ஆக, இந்தக்குறளை நம் தலையில் வைத்துக்கொண்டு, கூத்தாடக்கூடாது.
    தமிழர்கள் இனிமேலாவது உண்மையை உணர்ந்து, திருந்துவார்களா?
    இல்லையில்லை; வள்ளுவர் ஒரு பச்சைத் தமிழர்தான் என்றால், “மறப்பினும்” என்று தொடங்கும் குறளுக்கு, கீழ்க்கண்டபடிதான் பொருள் கூறவேண்டும்:
    பார்ப்பான் : பல பெண்களை காமக்கண்ணொடு பார்க்கும் ஆண்,
    ஓத்து மறப்பினும் : பெண்ணை ஓக்கும் கலையை மறந்தாலும்
    கொளலாகும் : அதனை கற்றுக்கொள்ளலாம்; ஆனல்,
    பிறப்பொழுக்கம் குன்ற : அவன் பிறப்பு உறுப்பிலிருந்து ஒழுகும் விந்து வீர்யம் குறைய
    கெடும் : அவன் ஆண்மை கெடும்.
    இப்படிப் பொருள் கூறுவதே சாலச்சிறந்ததாகும். இவ்வாறு பொருள் கூறுவது ஆண்களுக்கு இன்றியமையாத, பொதுவான, ஒழுக்கத்தை வலியுறுத்துவதாக அமைகிறது. இது போன்றே, மேற்பிறப்பு, கீழ்பிறப்பு என்ற சொற்களுக்கு, மனிதரின் பிறப்பு தொடர்பில்லாத வேறு பொருத்தமான பொருள்களைக் கண்டு பிடிக்கவேண்டும்.

  26. திரு சுமேரியன்,

    1) // மேலும் அந்த விளக்கம் இந்தக் குறளிற்கான விளக்கத்துடன் ஒத்துப்போகின்றது. // இந்த குறள் என்று இல்லை. எந்த குறளுக்கு வேண்டுமானாலும் ஆசிரியர் விளக்கத்தை மாற்றி சொல்லலாம் / பொருத்தலாம்

    திருவள்ளுவர் குறள்களை மட்டும் எழுதாமல் ‘உரைகளையும்’ சேர்த்து எழுதி இருந்தால் இந்த பிரச்சனையே இருந்து இருக்காது.

    2) // அந்த மந்திரத்திற்கே பிழையான விளக்கம் கொடுக்கும்போது ராமானுசர் விளக்கம் தேவையாகின்றது. //

    ராமானுஜர் என்ன விளக்கம் அளித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரலில்’ சொன்னது இது தான்

    நம் ஒவ்வொரு தேஹத்திலும், அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதிதேவதையாக ஒரு தேவன்
    இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ
    சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக் கட்டத்திலும்) ஒவ்வொரு
    தேவதைக்கு நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது.

    ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகீகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு

    3) நமது பகுத்தறிவு கோஷ்டி (அதாவது மஞ்சை வசந்தன் மற்றும் தோசைமாறன் ) என்ன சொல்கிறது

    ‘முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச்சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்.

    நீங்கள் விளக்கம் (2) அல்லது (3) எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். எனக்கு ஒரு சில கேள்விகள் இருக்கின்றன

    1) இந்த மந்திரத்தத்தில் சூத்திரன் என்கிற வார்த்தை எங்கே வருகிறது
    2) சூத்திரனை கேவலப்படுத்தவே இந்த மந்திரம் என்றால் (நிற்க) க்ஷத்ரியர்களுக்கு, வைஸ்யர்களுக்கு, ப்ராஹ்மணர்களுக்கு திருமணம் செய்யும் போது ‘இதற்க்கு பதிலாக’ வேறு என்ன மந்திரம் சொல்லப்படுகிறது ? ஏனெனில் ப்ராமண திருமணங்களில் இந்த மந்திரங்களை சொல்ல முடியாது அல்லவா ?

    விளக்கம் எதிர்பார்க்கிறேன்

    நன்றி

    • ஆரிய வேதங்களின்படி பெண்கள் சூத்திரருக்கும் கீழானவர்கள். பெண்களை இழிவு படுத்தும் மந்திரங்களை பார்ப்பனர்கள் ஏன் தங்களது திருமணத்தில் கூறமாட்டார்கள்? மனமுவந்து கூறத்தான் செய்வார்கள்.

  27. ‘ஸோம: ப்ரதமோ’ என்ற மந்திரத்திற்கு மணப்பெண்ணை ஒவ்வொரு தேவனும் அனுபவிக்கிறான் என்ற ‘literal meaning’ எடுத்துக்கொள்ளக் கூடாது, அந்தந்த இயற்கை சக்திகள் அவளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த பொருளைக் கொள்ள வேண்டும் என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே, உங்களுக்கு சரித்திரம் தெரியுமா?

    ஆளவந்தார் என்ற பார்ப்பன ஆச்சாரியார் ஒரு மஹா மேதாவி; ராமானுஜர் முதலியவர்களுக்கெல்லாம் முன்னோடி. அவர் ‘ஆக்கியாழ்வான்’ என்பவனோடு வாதம் செய்து தோற்கடித்து, பெரும்புகழ் பெற்றவர். வாதப்பொருளில் ஒன்று, ‘மஹாராணி பத்தினியா?’ என்பது. அவை அடக்கம் மிகுந்த ஆக்கியாழ்வான் திகைக்க, இந்த அதிகப்ரசங்கி ஆளவந்தார் ‘ஸோம: ப்ரதமோ என்ற வேத மந்திரத்தின்படி, ஒவ்வொரு மணப்பெண்ணையும் நான்கு தேவர்கள் அனுபவித்து, சுவைத்து விட்டுத்தான் மணமகனுக்கு எச்சில் பண்டமாக தருகிறார்கள்; ஆகவே எந்த மணப்பெண்ணும் பத்தினி அல்ல’ என்று வாதாடி, ஆஹா என்னே அறிவு படைத்தவர் என்ற பாராட்டையும் பெற்றாரே, அது எப்படி?

    இது வைணவ ஆச்சாரியர்களின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள, மிகப் பெருமையாகப் பேசப்படும் ஒரு நிகழ்வு.

    ஆக, பார்ப்பானுக்கு ‘consistency’ கிடையாது. கூச்சமும் கிடையாது. ஒரே மந்திரத்திற்கு, ‘மணப்பெண் தெய்வீக அம்சம் பெறுகிறாள் என்பதுதான் பொருள்’ என்பான்; அதே மந்திரத்திற்கு, தனக்கு தேவையான இடத்தில், ‘மணப்பெண்ணை நால்வர் சுவைத்து எச்சில் பண்டமாக்கித் தருகிறார்கள் என்பதுதான் பொருள்’ என்பான்.

    அப்பாவுக்கு/அம்மாவுக்கு வருடாந்திர திதி செய்யும்போது, ‘என் அம்மா, நான் திதி கொடுக்கும் இந்த அப்பனுக்குத்தான் பெற்றாளோ அல்லது வேறு எவனுக்குப் பெற்றாளோ’ என்ற பொருள்பட வரும் மந்திரத்தை ஒவ்வொரு பார்ப்பனும் இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான். இப்படி ஒரு மந்திரத்தை சொல்லலாமா என்று கேட்டால், அதற்கும் ஒரு வெண்டைக்காய் வ்யாக்கியானம் சொல்லுவான் பார்ப்பான்.

    வேத மந்திரங்கள், வைதீக சடங்குகள் இவற்றை எல்லாம், எப்படி vaccination, medicine, helmet, முதலியவற்றையெல்லாம் நம்முடைய நலனுக்காக, பாதுகாப்புக்காக அறிஞர்கள் பலகாலம் ஆராய்ச்சி செய்து ஏற்படுத்தியுள்ளார்களோ அதேபோன்று நம்முடைய நலனுக்காக ரிஷிகள் ஏற்படுத்தி உள்ளார்கள் என்ற புல்லரிக்கும்படியான ஒரு உரையை, youtube-ல் கேட்டேன்.

    சூத்திரர், பஞ்சமர் இவர்கள் காதுபட வேத மந்திரங்களை சொல்லக்கூடாது என்ற விதி உள்ளதே, ஏன்? அவர்கள்தானே இந்துக்களில் தொண்ணூறு சதவிகிதம்? அவர்களுக்கெல்லாம், என்ன பாதுகாப்பு? அவர்கள் கதி என்ன?

    பார்ப்பானுக்கு பஞ்சுதிரியிலான பூணூல், க்ஷத்ரியனுக்கு சணல் கயிறிலான பூணூல், வைசியனுக்கு ஆட்டு மயிரிலான பூணூல் என்று பூணூலிலேயே சாதிக்கேற்ற நீதி கூறப்பட்டிருக்கிறதே அது ஏன்? சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் பூணூல், மந்திரம் என்று எதுவுமே இல்லையே!

    Helmet, medicine, vaccination – இவையெல்லாம் சாதிக்கேற்ப கொடுக்கப்படுவதில்லையே! பார்ப்பானுக்கு தங்கத்தினாலான ஹெல்மெட், சூத்திரனுக்கு இரும்பினாலான ஹெல்மெட் என்றெல்லாம் விதி இல்லையே?

    திருமழிசை ஆழ்வாரை சூத்திரர் என்று நினைத்துக்கொண்டு, சொல்லிக்கொண்டே வந்த வேத மந்திரத்தை ‘சூத்திரர் காதில் மந்திரம் விழக்கூடாது’ என்பதால் பாதியில் நிறுத்தியவர்கள்தானே பார்ப்பனர்கள்! இந்த நிகழ்வை ஒரு பெருமையாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    ஆக, பார்ப்பானுக்கு நேர்மை, ‘consistency’ கிடையாது. கூச்சமும் கிடையாது. ஒரே மந்திரத்திற்கு, ‘மணப்பெண் தெய்வீக அம்சம் பெறுகிறாள் என்பதுதான் பொருள்’ என்பான்; அதே மந்திரத்திற்கு, அவனுக்கு தேவையான இடத்தில், ‘மணப்பெண்ணை நால்வர் சுவைத்து எச்சில் பண்டமாக்கித் தருகிறார்கள் என்பதுதான் பொருள்’ கேட்டால், வேடிக்கைக்காக சொன்னேன் என்பான்.

    சனாதன தர்மம், வைதீகம், வேதம் முதலியவற்றில் எல்லாம் இரண்டறக் கலந்துள்ள விஷம் ஜாதிக்கொடுமை மற்றும் பிறாமண ஆதிக்கம். இவையெல்லாம் இல்லாதிருந்தால், தி.க., தி.மு.க., மத மற்றம் எதுவுமே தோன்றியிருக்காது. இந்த ‘வினவு’ என்ற தளமே உருவாகி இருக்காது. இதைப் புரிந்துகொண்டு, தீர்வு காண பார்ப்பான் இன்னும் தயாராகவில்லை.

    சமீபத்தில், ஒரு பிறாமணனின் பூணூலை, குடுமியை அறுத்தவனும் கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துதானே? கிறிஸ்துவனோ அல்லது முஸ்லிமோ இல்லையே? இந்து, இன்னொரு இந்துவை இழிவுபடுத்துகிறான். அது ஏன்? ஆனால், ஒரு கிறிஸ்துவன், தன் மத குரு பாதிரியாரின் சிலுவையை அறுப்பதில்லை, அங்கியை உருவுவதில்லை. ஒரு முஸ்லிம் முல்லாவின் தாடியைப் பிடித்து இழுப்பதில்லை, தொப்பியைத் தட்டி விடுவதில்லை. ஏன் என்பதைப் புரிந்து கொண்டால், எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்.

    • // உயர்ந்த பொருளைக் கொள்ள வேண்டும் என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே, உங்களுக்கு சரித்திரம் தெரியுமா? // உங்கள் அளவுக்கு எனக்கு வரலாறோ, இலக்கியமோ தெரியாது ஐயா. நான் வாய் கிழிய எல்லாம் பேசவில்லை ஐயா. சங்கராச்சாரியார் என்ன சொல்லி இருக்கிறாரோ அதை தானே ஐயா நானும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      இது ‘ஸோம: ப்ரதமோ’ என்கிற பாடலை பற்றிய விவாதம் அல்ல. இது திருக்குறள் விளக்கம் பற்றிய விவாதம்

      // அதிகப்ரசங்கி ஆளவந்தார் ‘ஸோம: ப்ரதமோ என்ற வேத மந்திரத்தின்படி, ஒவ்வொரு மணப்பெண்ணையும் நான்கு தேவர்கள் அனுபவித்து, சுவைத்து விட்டுத்தான் மணமகனுக்கு எச்சில் பண்டமாக தருகிறார்கள் //

      நீங்களே சொல்லிவிட்டீர்களே “அதிகப்ரசங்கி ஆளவந்தார” பிறகு இதில் நான் விளக்க என்ன இருக்கிறது

      முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஐயா. இங்கே யாரும் பார்ப்பானுக்கு ‘வால் பிடிக்கவில்லை’.

      நீங்கள் பார்ப்பனர்களை சாடுவதென்றால் தாராளமாக சாடுங்கள். எனக்கு தேவை ‘திருக்குறளுக்கு அளிக்கப்பட்ட விளக்கம்’ சரியானது என்பதை எனக்கு விளக்குங்கள். விளக்கம் சரியானதாக இருந்தால் நானும் ஏற்று கொள்கிறேன்

      நன்றி

    • தமிழினம் என்பது தனி இனம். இதில் இந்துவுக்கு என்ன வேலை. தமிழர்கள் ‘இந்து இல்லை’ என்று சொல்லும் போது அவர்களுக்குள்ளே ‘வர்ணாசிரமம்; எப்படி பொருந்தும் ? பச்சை தமிழர்களுக்கு ‘கோத்திரமே’ கிடையாதே !!!

      மீண்டும் கேட்டு கொள்கிறேன். ‘திருக்குறளுக்கு அளிக்கப்பட்ட விளக்கம்’ சரியானது என்பதை எனக்கு விளக்குங்கள். விளக்கம் சரியானதாக இருந்தால் நானும் ஏற்று கொள்கிறேன்

      நன்றி

  28. திருக்குறளே சரியில்லை என்பது எனது கருத்து. மறப்பினும் என்று தொடங்கும் குறளின் வாயிலாகவும், மேற்பிறந்தார், கீழ்பிறந்தார், இழி பிறப்பு, புலை வினையர் முதலான சொற்களைக் கையாண்டதன் மூலம், வள்ளுவருடைய உண்மையான முகம் ஆரியப் பார்ப்பனருடையது என்று நான் மேலே தெளிவாக எழுதியிருக்கிறேன்.

    எல்லா சங்க இலக்கியங்களும், திருக்குறள் உட்பட, பார்ப்பனைப் பெருமப்படுத்துகின்றன. ஆரிய்த்தின் தாக்கம் இல்லாத தமிழ் நூலே கிடையாது.

    அதனால்தான் பெரியார் தமிழ் இலக்கியம் அனைத்தும் குப்பை, புளுகு மூட்டை என்று ஒதுக்கினார். அப்படி மொத்தமாக ஒதுக்கினால், தமிழினம், தமிழர் பெருமை, தமிழர் மரபு என்றெல்லாம் பேசி அரசியல் வியாபாரம் செய்ய முடியாது என்று கணக்கிட்ட அவருடைய சீடர்கள், குறைந்த பட்சம் திருக்குறளையாவது வைத்து பொழுது போக்கலாமே என்று வற்புறுத்த, பெரியாரும் அரை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

    தி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘கற்புடைய பெண் மழை பெய் என்றால் பெய்யுமா? அப்படியானால் இந்த தியாகராய நகரில் உள்ள் எந்த பாப்பாத்தியாவது வந்து மழை பெய் என்று சொல்லட்டுமே, மழை பெய்யவில்லை என்றால் அவள் அவிசாரியா?’ என்று பெரியார் பேசியதை நேரில் கேட்டவன் நான். இந்தத் தமிழறிஞர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டு குறள்களுக்கு ‘தமிழ் பண்பாட்டிற்கேற்ப’ வலிந்து பொருள் கூறுவதை அவர் என்றுமே ஆதரித்ததில்லை.

    குப்பையில் போடுங்கள் குறளை.

  29. தெய்வம் தொழாள் என்று தொடங்கும் குறளுக்கு மட்டுமில்லை, வேறு சில குறள்களுக்கும் context-க்கு சற்றும் பொருத்தமில்லாத, இலக்கணப்பிழை மிக்க, வலிந்து பொருள் கூறுவது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. பெரியார் என்றைக்கு ‘திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியம் அனைத்தும் குப்பை, புளுகு மூட்டை’ என்று சாட ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து இந்தப்போக்கு அதிகமாகி விட்டது.

    பெரியாரைப் பொறுத்தவரை, ஆரியத்தின் தாக்கம் இல்லாத, பார்ப்பானை பெருமைப்படுத்தாத, பெண்மையை இழிவு படுத்தாத நூல் எதுவும் தமிழில் இல்லை. இப்படி எல்லவற்றையும் ஒதுக்கினால், ‘தமிழர் மரபு, பண்பாடு, நாகரிகம், அறிவுத்திறன்’ என்றெல்லாம் கூறிக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்ய முடியாது என்று நினைத்த அவருடைய சீடர்கள், குறைந்த பட்சம் திருக்குறளையாவது ஒப்புக்கொள்ளுங்கள் என்று வாதாட, பெரியாரும் அரை மனதுடன் சம்மதித்தார்.

    ஆனாலும் அவர், இந்தக் குறிப்பிட்ட குறளையும், பெண் வழிச் சேறல் என்ற மொத்த அதிகாரத்தையுமே தொடர்ந்து எதிர்த்து வந்தார்.

    ‘முலை இரண்டும் இல்லாதாள்’, ‘மிகுநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று’ என்ற சொற்றொடர்கள் வள்ளுவரை கேவலமான பிற்போக்குவாதியாகத்தான் காட்டுகின்றன. மேற்பிறந்தார், கீழ்பிறந்தார், இழிபிறப்பு, புலை வினையர் என்ற சொற்களைப் பயன்படுத்திய வள்ளுவரை ‘ஆரியப் பார்ப்பான்’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

    ‘வேற்றுமை தெரிந்த….’ என்ற புறநானூற்று வரிகள் மறைமுகமாக சாதீயத்தை வலியுறுத்தவே செய்கின்றன. அதைத்தானே வள்ளுவரும் ‘மேற்பிறந்தார்’, ‘மறப்பினும்’ என்று தொடங்கும் குறள்கள் மூலம் செய்கிறார்?

    அது சரி; இப்படி வள்ளுவரையும் விட்டு விட்டால், பெருமைப்படுவதற்கோ அல்லது அரசியல் செய்வதற்கோ தமிழர்களுக்கு ஒன்றுமில்லை. அதனால்தான், எப்படி எப்படியோ சுற்றி வளைத்து பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், நானும் ‘மறப்பினும்’ என்று தொடங்கும் குறளுக்கு தூய தமிழ் மரபில் பதவுரை மேலே எழுதியுள்ளேன்.

    • P.R.Srinivasan ஐயா,
      தங்களின் வருகைக்கு நன்றி!
      தந்தை பெரியாரை எந்த கோணத்தில் அனுகினாலும் ஒரு மாமனிதராகத்தான் திகழ்கிறார்.
      நிறைய சிந்தனை விதைகளைத் தூவியிருக்கிறீர்கள்.
      நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் நினைவுக்கு வருகிறார்.
      இன்னும் பல கற்றறிந்த நல்லோர் இவ்விவாதத்தில் பங்கு பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  30. P.R.Srinivasan ஐயா,
    //தெய்வம் தொழாள் என்று தொடங்கும் குறளுக்கு மட்டுமில்லை, வேறு சில குறள்களுக்கும் context-க்கு சற்றும் பொருத்தமில்லாத, இலக்கணப்பிழை மிக்க, வலிந்து பொருள் கூறுவது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகவே நடந்து வருகிறது.//
    மேற்கண்ட குறளுக்கு உரையாசிரியரின் விளக்கம் ஏற்புடையதாகத்தான் தெரிகிறது. அதுபற்றி தங்களின் விமர்சனத்தை பதிவிட்டால் எங்களுக்கு மேலும் புரியவரும்.
    நன்றி!

  31. நன்றி.

    அந்தக்குறளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் எத்தனை முரண்பாடுகள், ஒவ்வாமைகள் இருக்கின்றன என்பதை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறேன்.

    ‘மறப்பினும்’ என்று தொடங்கும் 134-ம் குறளுக்கு திரு கருணாநிதி உட்பட எல்லோரும் ‘பிறாமணன் தான் கற்ற வேதத்தை மறந்தாலும் மறுபடி கற்றுக்கொள்ளலாம்; அனால் அவன் ஒழுக்கம் தவறினால், இழி பிறப்பினன் ஆவான்’ என்று உரை எழுதியிருக்கிறார்கள். இப்படித்தான் பொருள் கொள்ள முடியும் என்றால், வள்ளுவருக்கு, பரிமேலழகரே மேல் என்றாகி விடுகிறது. என்ன செய்வது? மயிரைப் பிய்த்துக்கொண்ட சில தமிழறிஞர்கள், பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று வலிந்து பொருள் கொண்டு, வள்ளுவரைக் காப்பாற்ற முயல்கிறார்கள். ஆனால், அந்தோ! ‘பிறப்பு கெடும்’ என்பதற்கு சரியான பொருள் கூற முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    இப்படித் தவிப்பவர்களுக்கு நான் ஒரு அருமையான பதவுரை அளித்திருக்கிறேன். அதைப் படியுங்கள். வலிந்து பொருள் கிடையாது; இலக்கணப் பிழை கிடையாது. வள்ளுவர் ‘ஆரியப் பார்ப்பான்’ என்ற அடையாளத்திலிருந்தும் தப்பிக்கிறார். தமிழனும் தப்பிக்கிறான்.

    இப்படித்தான் இருக்கிறது, ‘தெய்வம் தொழாஅள்’ என்பதற்கு எழுதப்பட்ட உரை.

    வள்ளுவரின் 1330 குறள்களையும் அறிஞர் துணைகொண்டு கற்ற பின், வள்ளுவர் எப்படிப்பட்டவர் என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், இவர்களோ, ஒன்றுமே அறியப்படாத வள்ளுவரைப்பற்றி தத்தம் கொள்கைக்கேற்ப ஒரு உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு, அதற்கேற்ப குறள்களுக்குப் பொருள் எழுதிகிறார்கள்.

    எப்படி என்றால், பெர்னார்ட் ஷா ‘GHOTI’ என்பதை ‘கோடி’ என்று உச்சரிக்கக் கூடாது, ‘fish’ என்றே உச்சரிக்க வேண்டும் என்றார். அவ்ர் கூறிய விளக்கம்:

    முதல் இரண்டு எழுத்துக்கள் ‘gh’. இதை laugh, cough, tough என்ற சொற்களில் முடியும் ‘gh’ எப்படி ‘f என்று உச்சரிக்கப்படுகின்றனெவோ அப்படி.
    அடுத்து வரும் ‘o’ என்பதை ‘women’ என்ற சொல்லில் வரும் ‘o’ இ (i) என்று உச்சரிக்கப்படுவது போல்.
    கடைசி இரண்டு எழுத்துக்களான ‘ti’ என்பதை, station, motion, caution பொன்ற சொற்களில் வரும் ‘ti’ என்பது ‘ஷ் (sh)’ என்று உச்சரிக்கப்படுவதுபோல்.
    இப்படி எல்லாம் எடுத்துக்கொண்டால், ‘ghoti’ என்பதை ‘ஃபிஷ்’ என்று ‘pronounce’ செய்யாலாம். ஆனால், இது ஒரு பைத்தியக்காரத்தனமான வாதமாக தோன்றவில்லையா?
    இப்படித்தான் இருக்கிறது இவர்கள் குறளுக்குக் கூறும் பொருளும்.

    இனி ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம்.

    • மிகவும் சுவாரஸ்யமாகவும் சிந்திக்க வைப்பதாயும் இருக்கிறது ஐயா உங்களது விமர்சனம் மற்றும் விளக்கங்கள் !
      நிறைய எழுதுங்கள். கற்றுக் கொள்கிறோம்..!

      • To,

        Mr.Karthikeyan,

        As told by Mr.Srinivasan, I also told many times without completing the book or reading the book from first to last how could you get thiruvalluvar point?

        But people never understand!

        To,

        Mr Srinivasan,

        What thiruvalluvar told is right, pirappu kedum, also told in bhagavat gitai..

        A brahmin’s son will never be consider as a brahmin. People understood the varanashrams principle in bad way like periyar. Actually they divided people only by knowledge not by birth. This was also confirmed in Mahabharat by Maharaj Yudhistra. Later on, people by foolish senses changed everything to this wish. That was the mistakes done by them.

        Periyar takes these advantages and hated all brahmins. Not every people made mistakes.
        To,

        Mr.Karthikeyan,

        As told by Mr.Srinivasan, I also told many times without completing the book or reading the book from first to last how could you get thiruvalluvar point?

        But people never understand!

        To,

        Mr Srinivasan,

        What thiruvalluvar told is right, pirappu kedum, also told in bhagavat gitai..

        A brahmin’s son will never be consider as a brahmin. People understood the varanashrams principle in bad way like periyar. Actually they divided people only by knowledge not by birth. This was also confirmed in Mahabharat by Maharaj Yudhistra. Later on, people by foolish senses changed everything to this wish. That was the mistakes done by them.

        Periyar takes these advantages and hated all brahmins. Not every people made mistakes.

        Periyar was an atheist, he was having a excellent friendship with Mr.Rajagopalachari (theist) was an Iyengar.

        Periyar will have good friendship with brahmins but his followers should not do?

        Or Periyar thought that only he can identify a good person in brahmin to make friendship where as his followers unable to do it or should not do it?

        With his speech he totally planted ideas that brahmin was a fraud!

        He totally spoiled the friendship of community and made then enemies?

        With his speech he should think of the future which he was not done because of poor thinking in this case he was not a “pakutharivalan”.

    • திருக்குறளில் ஜாதி இல்லை. பார்ப்பான் என்பது தச்சன் உழவன் என்பதைப் போல இறைத் தொழில் பெயர். அந்தத் தொழிலுக்கென்று உள்ள சிறந்த நடை முறைகளை ஒரு பார்ப்பான் கடைப் பிடிக்கவில்லையானல் அவன் பெயர் கெட்டு யாரும் தங்களுடைய பூசை போன்றவற்றிற்கு அழைக்க மாட்டார்கள்.அவனுடைய தொழில் கெட்டுவிடும். பிறப்பு என்பது பொதுவாக அபபன் தொழிலையே மகன் செய்ததால் பிறப்பொழுக்கம் என்பது பிறப்பால் ஒருவனுக்குக் கிட்டிய தொழிலுக்கான சிறந்த நடை முறைகள் என்று பொருள்படும்

  32. எனக்கு ஜாதி பிடிக்காது என்பதற்காக திருவள்ளுவருக்கும் ஜாதி பிடிக்காது என்று எப்படி முடிவு கட்ட முடியும்? 1330 குறள்களையும் படித்து விட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.

    ‘மேற்பிறந்தாராயினும், கீழ்பிறந்தார்’ என்ற சொற்கள் பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஜாதி ஏற்றத் தாழ்வைத் தவிர வேறு எதைக் குறிக்கின்றன?, உயர் குடியோர், உயர் குலத்தோர் என்று குறிப்பிட்டிருந்தால் சிக்கலே இல்லையே. ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின்……..’ என்ற புறநானூற்று வரிகள் தெரிவிக்கும் கருத்தைத்தான் வள்ளுவரும் அந்தக் குறளில் கூறுகிறார். ஆக, மேல் ஜாதியில் பிறந்தவர்கள், கீழ் ஜாதியில் பிறந்தவர்கள் என்ற பாகுபாடு சங்க / திருவள்ளுவர் காலத்திலும் தமிழர்களிடம் இருந்தது.

    இப்போது கேள்வி, வள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஜாதி முறையை ஏன் சாடவில்லை? ‘நீ மேற்சாதியில் பிறந்திருந்தாலும் கல்லாதவனாயிருந்தால், கல்வி கற்ற கீழ் சாதிக்காரனுக்கு இணையாக மாட்டாய்’ என்றுதானே அந்தக் குறளுக்குப் பொருள்? இக்கூற்று ஜாதியை வலியுறுத்துவதாகத்தானே இருக்கிறது. என்ன, கொஞ்சம் எச்சரிக்கை விடுகிறார் வள்ளுவர். மேல்சாதிக்காரனே, கல்லாமல் இருந்து விடாதே என்கிறார், அவ்வளவுதான். கற்று விட்டால், நீ தொடர்ந்து ‘மேற்பிறந்தார்’ ஆகவே இருக்கலாம். கல்லாத ‘கீழ்பிறந்தார்’ கதி? அதோகதிதான்.

    இதுதான் வள்ளுவர் கருத்து. ஆமாம், குறளில் ஜாதி இல்லவே இல்லை!

    ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அஃறிணையில் கூரிய வள்ளுவரை விட ஆரியப் பார்ப்பான் பரிமேலழகர் மேல். 26-வது குறளுக்கான உரையை “ஓத்த பிறப்பினராய மக்களுள்” என்று அருமையாகத் துவங்குகிறார்.

    ‘மறப்பினும்’ என்று தொடங்கும் குறளுக்கு மனம்போனபடி பொருள் கொள்கிறார்கள். நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் (பார்ப்பான்) மறப்பதற்கு என்ன இருக்கிறது? கற்றவன், அறிஞன், ஆராய்ச்சி செய்பவன் படித்ததை மறந்தால் என்ன? அதிலென்ன பெரும்பிழை? மறுபடியும் நூலைப் படித்து, கேட்டு தெரிந்து கொள்கிறான். ‘மறப்பினும்’ என்ற சொல்லுக்கு ‘சிறந்த நடை முறைகளை கடைப்பிடிக்காவிட்டால்’ என்று எப்படி பொருள் கொள்ள முடியும். ‘பிறப்பொழுக்கம்’ என்பதற்கு ‘பிறப்பால் ஒருவனுக்கு கிட்டிய தொழிலுக்கான சிறந்த நடை முறைகள்’ என்று எப்படி பொருள் கொள்வது? இப்படி எந்த ஒரு நெறியும், வரைமுறையும் நடைமுறைகளும் இல்லாமல் பொருள் கொள்ளலாம் என்றால், விவாதமே தேவையில்லை. அந்த குறளுக்கு ‘பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளலாகும்; (ஆனால்), ஒழுக்கம் குன்ற, பிறப்பு கெடும்’ என்று குறளின் சொற்களிலிருந்து துளியும் விலகாதபடி பொருள் கொள்வதே இலக்கண முறை, இலக்கிய மரபு. இதற்கு பதவுரை, பொழிப்புரை எதுவுமே தேவையில்லை. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பொருள் விளங்குகிறது.

    இதெல்லாம் அறியாமை என்று இப்போது விளங்கிக் கொண்டேன். திரு குகநாதன், வெங்கடாசலம் போன்றவர்கள் என் அறியாமை இருட்டை மேலும் போக்கி விட்டார்கள்; எப்படி?

    ‘ஈன்ற பொழுதின்’ என்ற குறள் கல்வி கற்பதன் ஏற்றத்தைக் கூறுகிறது. பிள்ளை பெறும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று பிறர் கூறும்போது தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்று பொருள்பட வரும் குறள் ‘மக்கட்பேறு’ என்ற தலைப்பின் கீழ் வருவது எப்படிப் பொருந்தும்? கல்வி அல்லது அறிவுடைமை என்ற தலைப்பின் கீழ்தானே எழுதப்பட்டிருக்க வேண்டும்?

    இப்படியாக எண்ணிக் குழம்பிக்கொண்டிருந்த எனக்கு, மேற்சொன்ன இருவரும் தெளிவூட்டி விட்டர்கள். இவர்கள் காட்டிய வழியில், அந்தக் குறள் மக்கட் பேற்றின் கீழ்தான் வர வேண்டும் என்பதற்காக, நான் உரை எழுதுகிறேன், படியுங்கள்.

    ஈன்ற பொழுதின்: [பார்ப்பனர்கள், அவர்களது தெய்வங்கள், கடைசியில் கணவன்
    என்று பலரால் புணரப்பட்ட ஒரு பெண், அந்தப் புணர்ச்சிகளின்
    விளைவாக] குழந்தையை ஈன்றபின் அடைந்த மகிழ்ச்சியை விட

    தன் மகனை சான்றோன் என: குழந்தை உன் கணவன் புணர்ச்சியினால்தால்தான் பிறந்தவன்
    என்று

    கேட்ட : [DNA test செய்த] மருத்தவர் கூறக்கேட்ட

    தாய் : குழந்தையின் தாய்

    பெரிதுவக்கும் : அதிக மகிழ்ச்சி அடைவாள்.

    இப்படிப் பொருள் கொண்டால், மக்கட்பேறு என்ற தலைப்பின் கீழ் அந்தக் குறள் என்னமாய்ப் பொருந்துகிறது? நன்றி: திரு குகநாதன், திரு வெங்கடாசலம்.

  33. மேற் பிறந்தார் என்றால் பொருளாதார ரீதியாகவும், தொழில்.ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும், ஒழுக்கமுடைமை குடிமை என்றும் கூறி உள்ளபோது வேறு விதமாகப் பொருள் கொள்வதெப்படி?

    • அரங்க வெங்கடாசலம் ஐயா,
      ‘மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
      கற்றார் அனைத்துஇலர் பாடு.’
      – மேற்கண்ட குறளை நீங்கள் கூறுவது போல் பொருள் கொண்டால் ‘பண்பான குடும்பத்தில் பிறந்து கல்லாதவர், பண்பற்ற குடும்பத்தில் பிறந்த கற்றாருக்கு இணையாக மாட்டார்’ எனலாம்.
      பிறப்பின் அடிப்படையில் ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவ்வாறு பொருள் கொள்வது
      P R Srinivasan ஐயா கூறுவது போல் வலிந்து பொருள் கொள்வதாகவேப் படுகிறது.
      வள்ளுவர் குறிப்பிடும் ‘மேற்பிறந்தார், கீழ்பிறந்தார்’ என்பது பிறப்பின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற வாதம் ஏற்புடையதாகவே இருக்கிறது.

      • நீங்கள் கூறி உள்ளது சரி. இன்றும் ஏழைகள் அல்லது கீழான பதவிகளில் இருக்கும் பெற்றோருடைய குழந்தைகள் மிக.நன்றாகப் படிப்பதும் அவர்களது சமூக அந்தஸ்த்து உயர்ந்து விடுவதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே? திருக்குறளைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் திருக்குறளைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது. நான் உளவியல் பேராசிரியராக பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். யாருடைய உரையையும் படிக்காமலேதான் திருக்குறளைக் கற்றேன். இன்றும் ஏறக்குறைய 400 குறட்பாக்களுக்கு சரியான பொருள் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளது திருக்குறள் குறித்துத் தமிழில் மூன்று நூல்களும் ஆங்கிலத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளேன்

        • நன்றி ஐயா!
          விவாதத்தில் தொடர்ந்து பங்கெடுக்க கேட்டு கொள்கிறேன்

  34. நன்றி, திரு கார்த்திகேயன் அவர்களே.
    இந்தக் குறளின் பொருளைப்பற்றி திரு சுப வீரபாண்டியன் சமீபத்தில் பேசியுள்ளதை youtube-ல் கேளுங்கள்.
    மேற்பிறந்தார், கீழ்பிறந்தார் என்ற சொற்கள் மேல் ஜாதியில் பிறந்தவர்கள், கீழ் ஜாதியில் பிறந்தவர்கள் என்ற பொருளைத்தான் தரும்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவருடைய கோட்பாடுதான்; ஆனால், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வாழ்க்கை நடைமுறை தமிழகத்தில் இருந்த காலத்தில்தான் வள்ளுவர் வாழ்ந்திருக்கிறார்; கல்வி கற்பது, இந்த ஜாதி வேறுபாட்டை சமன்செய்யும் என்று கீழ் ஜாதிக்காரனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இந்தக் குறளை இயற்றியிருக்கிறார் என்ற பொருள்பட திரு சுப வீ பேசியிருக்கிறார்.
    அதாவது, வர்ணாச்ரம முறையின் ஒரு கூறு கீழ் ஜாதிக்கரனுக்கு கல்வி அளிக்காதிருப்பது; அந்தக் கூறை உடை என்று கீழ் ஜாதிக்காரனுக்கு வழி கட்டுகிறார் வள்ளுவர் என்று கொள்ளலாம்.
    கல்லாதவன், கல்வி கேள்விகளில் சிறந்தவன விட தாழ்ந்தவன் என்பதில் என்ன ஒரு பொருட்செறிவு உள்ளது? ஜாதியுடன் எதிர் மறையாக இணைக்கும் போதுதானே, கல்வியின் சிறப்பு வெளிப்படுகிறது? ஆழ்ந்து சிந்தித்து பொருள் கொள்ளுங்கள்.
    ‘மறப்பினும்’ என்ற குறளுக்கு ‘தொழிலின் பெருமையை மறந்தவனுக்கு பிழைப்பு கெடும்’ என்று திரு அரங்க வெங்கடாசலம் கூறும் பொருளை எடுத்துக்கொண்டால், அந்தக் குறள் ‘ஒழுக்கம் உடைமை’ என்ற தலைப்பின் கீழ் எப்படிப் பொருந்தும்?
    ஓத்து, மறப்பது, பிறப்பு, ஒழுக்கம், கெடும், பார்ப்பான் முதலியன அந்தக் குறளில் ஆளப்படும் சொற்கள்.
    நூல்களை ஆய்ந்து கற்றதையோ அல்லது பலகாலும் பயின்ற பரம்பரைத் தொழிலையோ ஒருவன் எப்படி மறப்பான்? அப்படி ஏதோ ஒரு பகுதியை மறந்தால்தான் என்ன பிழை? மறுபடி பார்த்து, படித்து, கேட்டு, தெரிந்து கொள்கிறான். சரி, அவன் ஒழுக்கம் தவறினால் எது கெடும்?
    ஒருவன் எதை மறக்கக் கூடும்? பொருள் தெரியாமல் நெட்டுருப் போட்டதை மறப்பான். அதைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஏ பார்ப்பனனே, நீ நெட்டுருப்போட்ட வேதத்தை மறந்தாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தில் குன்றினாலோ, நீ பெருமைப் பட்டுக்கொண்டிருக்கும் பிறப்பு கெடும் என்ற ஒரே பொருளைத்தான் அந்தக் குறளுக்கு ஏற்க முடியும்.
    இதே பொருளில்தான், ‘இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்று எல்லோரையும் எச்சரிக்கிறார் வள்ளுவர்.
    என்ன செய்வது, ஊத்த வாய் பார்ப்பானையும், நாற்றமடிக்கும் வேதத்தையும், இழி பிறப்பைப் பற்றியும் வள்ளுவர் குறிப்பிட்டுத் தொலைத்து விட்டார். இப்படி சில குறள்களில் வள்ளுவர் குளறுபடி செய்திருக்கிறார். அதனால்தான் பெரியார் சொன்னார்; “இம்மாதிரியான குறள்களை ஒதுக்கி விட்டு, பெரும்பாலான மற்ற குறள்களை படியுங்கள்”
    ‘தெய்வம் தொழாஅள்’ என்று தொடங்கும் குறளும் பெரியார் ஒதுக்கிய குறள்களில் ஒன்று. பார்ப்பானையும் அல்லது பார்ப்பார தெய்வங்களையும் புணராமல் கணவனை மட்டுமே புணரும் தமிழ்ப் பெண், இதமான மிதமான மழையைப் போன்றவள் என்று பொருள் கொள்ளும்போதே, அப்படிப்பட்ட பெண் அரிது என்பதாகிறது. இது நமக்கு எவ்வளவு பெரிய இழிவு! இதை நாம் விரிவுபடுத்தினால், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் செய்வது” என்றபடி கோவலனைத் திருமணம் செய்து கொண்ட கண்ணகி “பெய் மழையா அல்லது பேய் மழையா?” அவள் கற்புக்கரசி அல்லவே! மதுரை எப்படி ஏரிந்தது?
    மேலும் விரித்துரைக்க வேண்டும் என்று விரும்பினால் தொடர்வேன்.
    மேலே ஒருவர் ஆங்கிலத்தில், திருதிராஷ்டிரன் ஜாதியைப் பற்றி ஏதோ கூறியதாக எழுதியிருக்கிறார். மஹா பாரதத்தில் வரும் திருதிராஷ்டிரன் ஒரு சரியான கூமுட்டை. அவன் ஜாதியைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
    மஹாபாரதக் கதையில் வரும் ‘விதுரன்’ திருதிராஷ்டிரனுக்கு தம்பி முறை. அவன் சிறந்த அறிஞனாகச் சித்தரிக்கப் படுகிறான்.
    அந்த விதுரன், வர்ணச்ரம தர்மத்தை, சீச்சீ, கர்மத்தைப்பற்றி திருவாய் மலர்ந்தருளி இருக்கிறான். படித்தால், இரத்தம் கொதிக்கும். வாசகர்கள் விரும்பினால், எழுதுகிறேன்.

    • `பெய் எனப் பெய்யும் மழை` போன்று சிறப்பானவள் என்பதற்காக அக் காலத்துப் பெண்கள் எல்லோரும்/ பெரும்பானமையானோர் அவ்வாறு என்ற கருத்து ஏற்புடையதல்ல. `பார்ப்பனத் தெய்வத்துடன் புணர்` என்ற ஒரு புதிய கருத்து தமிழகம் வந்தபோது அதனை எதிர்க்கவே வள்ளுவர் அவ்வாறு கூறியிருக்கலாம். Blue wales என்ற வீடியோ கேம் அறிமுகமாகி, அதனால் ஒரு சில மாணவர்கள் பாதிக்கப்பட்டதும் ஊடகங்கள் எல்லாம் அதைப்பற்றியே எச்சரித்தன. அதற்காக பெரும்பான்மையானோர் கேம் விளையாடினார்கள் என்ற பொருள் இல்லை. அதுபோலவே புதிய கருத்துகள் திணிக்கப்படும்போது அதற்கான எதிர்வினையே வள்ளுவன் கருத்து.

      • P R Srinivasan ஐயா,
        சுப.வீ அவர்களின் பேச்சை அவசியம் கேட்கிறேன். நீங்கள் நிச்சயம் நிறைய எழுத வேண்டும்.
        ஐயா அவர்களின் எழுத்தை தனிக் கட்டுரைகளாக பிரசுரிக்க வேண்டும் என்று இதன் மூலம் வினவு நண்பர்களை கேட்டு கொள்கிறேன்.
        Sumerian அவர்களது வாதமும் சிறப்பாக இருக்கிறது.

        • ஐயா,
          ஆங்கிலத்தில் எழுதியவர் குறிப்பிட்டது திருதராஷ்டிரன் அல்ல யுதிஷ்டிரன்(தருமன்). ஆனால் நீங்கள் வழங்கிய கூமுட்டை பட்டம் யுதிஷ்டிரனுக்கு சாலப் பொருத்தம்தான். ஒருமுறை சூதாடி அனைத்தையும் இழந்து பின்னர் இழந்தவை அனைத்தையும் திரும்பக் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்ட போது சகுனியின் தூண்டுதலால் துரியோதனன் யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட அழைக்கிறான். மீண்டும் சூதாடி அனைத்தையும் மீண்டும் இழக்கிறான் சூதாட்ட வெறியன் கூமுட்டை யுதிஷ்டிரன். அவனுக்கு “தருமன்” என்ற பட்டம் வேறு.
          திருதராஷ்டிரன் நல்லவன். யுதிஷ்டிரன் முதல்முறை சூதாடி அனைத்தையும் இழக்கிறான். சபையில் பாஞ்சாலியிடம் இரு வரங்களை கேட்குமாறு திருதராஷ்டிரன் விளிக்கிறான். பாஞ்சாலி யுதிஷ்டிரனை மட்டும் விடுவிக்குமாறு வரம் கேட்கிறாள். உடனே வரமளித்த திருதராஷ்டிரன் பிறிதொரு வரத்தையும் கேட்குமாறு பாஞ்சாலியிடம் கோருகிறான். பெண்கள் ஒரு வரத்திற்கு மேல் கேட்கக்கூடாது என்ற விதியைக் கூறி மறுதலிக்கிறாள் பாஞ்சாலி. உடனே திருதராஷ்டிரன் suo moto வாக இன்னொரு வரமாக பாண்டவர்கள் இழந்ததனைத்தையும் திருப்பி வழங்குகிறான். திருதராஷ்டிரன் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாண்டவர்கள் சூதாடி அனைத்தையும் இழந்து விட்டார்கள் எனினும் தம்பி பாண்டுவின் மக்களுக்காக, பாண்டவர்கள் ஒருவர் கூட பாண்டுவிற்கு பிறக்கவில்லை என்றாலும் (கர்ணன் உட்பட) திருதராஷ்டிரன் பாசம் காரணமாக அனைத்தையும் திரும்ப வழங்குகிறான். இதைத்தான் யுதிஷ்டிரன் மீண்டும் சூதாடி அனைத்தையும் இழக்கிறான். இவனை என்ன செய்யலாம்……..?
          நன்றி: மதிமாறன்

  35. இப்போது திரு குகநாதனும், பல ஆண்டுகளுக்கு முன் சில தமிழ் அறிஞர்களும் ‘ஸோம: ப்ரதமோ…’ என்ற வரிகளுக்கு கொண்ட பொருளே, மொத்த விவாதத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. இது தவிர, தொழுதல் என்பதற்கு புணர்தல் என்ற பொருளும் வலிந்து கொள்ளப்பட்டு, திருவள்ளுவர் காப்பாற்றப்படுகிறார்.

    இந்த புது விளக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் மற்றவர்களும் அவ்விளக்கத்தை பொருட்படுத்தவில்லை.

    திரு பாரதிதாசன் போன்றவர்கள் இது போன்ற மற்றும் சில விளக்கங்களைக் கொடுத்தபோது, பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை, இந்தக்குறள் ஒதுக்கப்பட வேண்டியது.

    ஆகவே, “ஸோம: ப்ரதமோ….” என்ற வரிகளுக்கு என்னதான் பொருள் என்பதைப் பார்க்கலாம்.

    “காமன் ஒருவர் கண் நின்று ஒழுகுவான் (குறள் 1197)” என்று அரற்றுகிறாள் தலைவி. தலைவனைப் பிரிந்த தலைவியைக் காமன் ஒழுகுவான் என்றால், காதலியின் ஏக்கத்தை, தாபத்தை தூண்டுவான் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும். எப்படித் தூண்டுவான்? தொட்டு, தடவி, மென்மையாகப் புணர்ந்து, தொல்லை கொடுப்பான் என்று பொருள் கொள்ளலாமா? இப்படி நினைப்பதே சிறுமதி அல்லவா?

    காமன் என்பதை ஒரு ஆண்மகனாகக் கொள்வதும் அவன் தலைவியை தன் உடலால் ஒழுகி, தலைவனுடன் சேரத் தயார் செய்வான் என்று பொருள் கொள்வதும் ‘HEIGHT OF PERVERSION” அல்லவா? காமன் என்பது உருவமற்ற ஒரு இயற்கை உணர்வு. காதல் நயத்திற்காக, ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக குறிப்பிடப்படுவது.

    ‘நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும்’ (குறள் 1039) என்றால், நிலம் எனும் பெண் குப்புறப்படுத்து, நிலத்திற்குரியவனைப் புணர விடமாட்டாள் என்ற பொருள் கொள்ளலாமா?

    பகுத்தறிவாளர்கள் உட்பட பலரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆயுர் வேதத்தில் ஒவ்வொரு மருந்து மூலத்திற்கும் ஒவ்வொரு தேவன் அதிபதி. அந்த அந்தத் தேவர்கள் மருந்தின் மூலம் நம்முள் புகுந்து நம் உடல்நலக் குறைவைப் போக்குகிறார்கள் என்று அந்த மருத்துவ நூல் சொல்கிறது. அப்படியானால், அந்தத் தேவன் மருந்து உட்கொண்டவனை (ளை), homosex செய்கிறான் அல்லது புணருகிறான் என்று பொருள் கொள்ளலாமா?

    அதே போன்றுதான் அந்த “ஸோம: ப்ரதமோ ….” என்ற மந்திரமும். குளிர்ச்சி, அழகு, இளமை போன்ற பருவங்களால் ஒவ்வொன்றாக ஆட்கொள்ளப்பட்ட நீ என்னைக் கணவனாக அடைகிறாய் என்றுதான் அதற்குப் பொருள்.

    அதெல்லாம் கிடையாது, அந்தத் தேவர்களால் நீ புணரப்படுகிறாய் என்றுதான் பொருள் என்றால், வள்ளுவர் குறிப்பிடும் தலைவியும் காமன் என்ற ஒரு ஆண் தேவனால் புணரப்பட்டாள் என்றுதான் பொருள் கொள்ள நேரிடும். அதேபோன்று, உழவன் நிலமகளைப் புணருகிறான் என்றுதான் பொருள்.

    இதெல்லாம் போகட்டும். எந்த ஒரு ஆண்மகனாவது, தான் மணக்கப்போகும் பெண்ணை நோக்கி, ‘நீ இது வரை பலரால் புணரப்பட்டு, இப்போது என்னிடம் வந்து சேர்ந்து விட்டாய்’ என்று கூறுவானா? பார்ப்பானாக இருந்தாலும், அவ்வளவு மதி கெட்டவனா?

    அந்த மந்திரத்திற்கு அவ்வாறான பொருளே இருந்துவிட்டுப் போகட்டும். பார்ப்பான் மதி கெட்டவனாகவே இருக்கட்டும். ஆனால் வேத மந்திரத்தை பார்ப்பான் சூத்திரர்கள் திருமணங்களில் சொல்ல மாட்டானே. தமிழர்கள் சூத்திரர்கள் ஆயிற்றே. சூத்திரன் காதில் வேத மந்திரம் விழக்கூடாதே; இந்த விதியை பார்ப்பான் வெகு கவனாமாகக் காப்பாற்றியவன் ஆயிற்றே.

    ஆக, அந்த ரிக்வேத மந்திரம், தமிழர் திருமணங்களில் எக்காலத்திலும் சொல்லப்படவில்லை. எனவே மந்திரத்தின் மூலம் தமிழ்ப் பெண் பார்ப்பன தெய்வத்தால் புணரப்படுவது என்ற நிகழ்வே இல்லை. அதாவது, ‘பார்ப்பன தெய்வத்துடன் புணர்’ என்று தமிழரிடம் சொல்லப்படவேயில்லை.

    எனவே, சில தமிழர் திருமணங்களில் நடப்பதைக் கண்டு, வள்ளுவன் வெகுண்டெழுந்தான் என்று கூறுவது என்றுமே நடவாத, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு, நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும்.

    அதாவது, வள்ளுவர் ‘தெய்வம் தொழாஅள்’ என்பதை ‘பார்ப்பனத் தெவங்களைப் புணராதவள்’ என்ற பொருளில் எழுதவில்லை. திரு குகநாதனும் அவரைப் போன்றவர்களுமே அப்படி ஒரு பொருளைக்கொண்டு, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.

    வள்ளுவரைக் காப்பாற்றப்போய், இனப்படுகொலை செய்து விட்டார்கள்.

    இப்போது, இதைப் படிப்பவர்கள் ‘அட கூறு கெட்டவனே, நீயும்தானடா அந்த மந்திரத்திற்கு தவறான பொருளை உன்னுடைய முன் பதிவுகளில் கொண்டிருக்கிறாய்’ என்று என்னை நோக்கி சீறிப் பாய்வது தெரிகிறது.

    தொடர்வேன்.

    • அருமை ஐயா! விவாதம் சிறப்பாக ஆரோக்கியமாக இருக்கிறது.
      //ஆக, அந்த ரிக்வேத மந்திரம், தமிழர் திருமணங்களில் எக்காலத்திலும் சொல்லப்படவில்லை.//
      அப்படியானால் நமது திருமணங்களில் மந்திரம் ஓதும் முறை எப்படி உருவானது?

  36. ‘நமது திருமணங்களில்’ என்றால் என்ன? பிறாமணர் அல்லாதவர் வீட்டுத் திருமணங்களைக் குறிப்பிடுகிறீர்களா?

    சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பார்ப்பனப் புரோகிதர் சடங்கில் சொல்வது எல்லாமே ‘மந்திரம்’ கிடையாது. உதாரணமாக, தாலி கட்டும்போது ‘மாங்கல்யம் தந்துனா’ என்று எல்லாத் திருமணங்களிலும் (ஜாதி வேறுபாடின்றி) சினிமாக்களிலும் ஒரு ச்லோகம் சொல்லப்படுகிறது. அது மந்திரம் இல்லை. அதனால்தான், புரோகிதன் அதனை அனைத்துத் திருமணங்களிலும் உரக்கக் கூறுவான்.

    பிறாமணர் வீட்டுத் திருமணங்களில், தாலி கட்டி முடிந்த பிறகு ‘பாணிக்ரஹணம்’ என்ற சடங்கு நடக்கும். அப்போதுதான், ‘ஸோம: ப்ரதமோ…’ என்ற மந்திரம் மணமகனால் தன் மனைவியை நோக்கிச் சொல்லப்படும். அது உரையாடலோ, பிரார்த்தனையோ அல்லது வேண்டுதலோ இல்லை. அங்கே மணப்பெண்ணை நோக்கி சொல்லுமுகமாக, உலகத்தார்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
    அதன்பின் ‘ஸப்தபதி’ என்ற சடங்கு நடக்கும். அப்போது சொல்லப்படும் மந்திரம் பிரார்த்தனை வடிவில் அமைந்துள்ளது.

    இவை முடிந்தால்தான், திருமணம் முடிந்ததாக ஆகும்.

    இப்படி ‘பாணிக்ரஹணம்’ மற்றும் ‘ஸப்தபதி’ என்ற சடங்குகளின்போது சொல்லப்படுபவை ‘ரிக்’ வேத வரிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை மட்டுமே ‘மந்திரங்கள்’. அவை ‘பிறாமணர்’ அல்லாதார் வீட்டுத் திருமணங்களில் என்றுமே சொல்லப்பட்டதில்லை.

    ‘ஸோம: ப்ரதமோ….’ என்ற மந்திரத்திற்கு அவப்பெயர் வந்ததே ‘ஆளவந்தான்’ என்ற வைணவப் பார்ப்பனனால்தான். அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரிய பண்டிதனை மடக்க, அந்த மந்திரத்திற்கு விரசமான பொருளைக்கூறி அவையின் கைதட்டலும், “ஆளவந்தான்” என்ற விருதும் பெற்றான். இன்றும் அந்நிகழ்ச்சியைப் பற்றி பெருமையாக எழுதிக்கொண்டும், மேடைகளில் பேசிக்கொண்டும் வருகிறார்கள், பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர். இந்த அசிங்கத்தைத்தான் நான் என் முதல் இரண்டு பதிவுகளில் சுட்டிக்காட்டினேன்.

    திரு குகநாதனைப் போன்றவர்களின் கருத்துப்படி, அந்த வரிகள் அசிங்கமாகவே இருக்கட்டும். அவை ஒரு பெண்ணை நோக்கி சொல்லப்படுகின்றன. உடனே அவள் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் ஏற்பட்டு ‘புணரப்பட்டவள்’ ஆகிறாள் என்று கொள்வது பகுத்தறிவா?

    தொடர்வேன்.

    • ஐயா,
      சுலோகம் மற்றும் மந்திரம் பற்றி சற்று விவரியுங்கள். கோயில்களில் அர்ச்சகர்களால் ஓதப்படுவது சுலோகமா? மந்திரமா?
      மந்திரம் என்றால் சூத்திரர்கள் கேட்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?
      இதற்காகத்தான் பஞ்சமர்களுக்கு கோயில் உள்ளே அனுமதி இல்லாதிருந்ததா?
      தற்காலத்தில் ‘காயத்ரி மந்திரம்’ போன்றவை எல்லாம் ஒலிப்பேழைகளில் ஒலிக்கப்பட்டு நம்மை இம்சிக்கின்றதே..!

    • `சோம.…` மந்திரத்தை ஆளவந்தார் பிழையாகக் கூறிவிட்டார் என்றீர்கள். ஆளவந்தாரின் கருத்தினையே ராமனுசரும் கூறியுள்ளார். மேலும் `இந்து மதம் எங்கே போகின்றது` என்ற நூலைப் படியுங்கள், அதில் தெளிவாகவே தாத்தாச்சாரியார் அதனை `மந்திரம்` என்று குறித்தே விளக்கியுள்ளார். கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள `சூர்யா` விளக்கத்தையும் கவனியங்கள். மறைமலை அடிகளர் குறிப்பிட்டதனையும் கவனியுங்கள்.பின்பு பதில் சொல்லுங்கள்.

  37. தொடர்ந்து ஆர்வம் காட்டும் திரு கார்த்திகேயன் அவர்களே,

    வேதம், மந்திரம், வட மொழி, ச்லோகம் முதலியவை பற்றி பல ஐயங்கள், குழப்பங்கள், எல்லோருக்கும் உண்டு.

    நால் வேதம், நான் மறை என்று சொல்லப்படுவதில் பெரும்பிழையும் அறியாமையும் உள்ளது. வேதம் என்பது ரிக் வேதம் ஒன்றுதான். அது, கடினமான வடமொழியில், துதிகள், வேண்டுதல்கள், உரையாடல்கள், செய்திகள், நிகழ்வுகள் என்று பலவற்றை அடக்கியுள்ள ஒரு நூல்.

    மனித, விலங்கு, பறவை இனங்கள் மற்றும் ஜீவ ராசிகள் எப்படி வாழ்ந்தன, மனித வாழ்வின் பல கட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டிய சடங்குகள், இயற்கையை, தேவர்களை எப்படி திருப்தி செய்வது, ஆண் பெண் உறவின் நெறிகள், மக்கட்செல்வம், அரச நெறிகள், பகை, படை, போர், முதலியவைதான் ரிக் வேதத்தில் சொல்லப்படுபவை.

    அந்த ரிக் வேததில் உள்ள பல துதிகளை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, பலவிதமான வேள்விகள் செய்வதற்காக தொகுக்கப்பட்டதுதான் யஜுர் வேதம்.

    அந்த ரிக் வேதத்தில் உள்ள சில துதிகளை, கேட்கச் சகிக்காத வகையில் பாட்டாக, இழுத்து இழுத்து சொல்வது ஸாம கானம். இதை ’ஸாம வேதம்’ என்று சொல்வது அறியாமை என்றாலும், வழக்காகி விட்டது.

    அதர்வண வேதம் என்பது வேதகால வழக்கில் கிடையாது. நோய்கள். உடல் நலம், வசியம் முதலவற்றைப் பற்றிக் கூறும் இந்த வரிகள் சிறிது சிறிதாக பெரிதாக்கப்பட்டு, வெகு காலம் கழித்து, வேத அந்தஸ்தைப் பெற்றன.

    இப்படியாக, யஜுர், ஸாம வேதங்களை உள்ளடக்கிய ‘ரிக்’ வேத வரிகள்தான் ‘மந்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    அந்த ரிக் வேதத்தில் ‘நாராயணன், பரமசிவன், பிள்ளையார், முருகன், பரம்பொருள், அவதாரங்கள், திருவிளையாடல்கள், புராணம், ஜீவாத்மா, பரமாத்மா, மோக்ஷம் என்ற வீடு பேறு, மறு பிறவி, ஜாதிகள், வர்ணாச்ரம தர்மம் முதலியவை பற்றி எந்த விதமான சொற்களோ குறிப்போ கிடையாது.

    [உடனே எகிற வேண்டாம். இந்த உலகம் எப்படி தோன்றியது, நான்கு ஜாதியினர் எப்படிப் பிறந்தார்கள் என்பதைக்கூறும் ‘புருஷ ஸூக்தம்’ பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயற்றப்பட்டு, ரிக் வேதத்தில் செருகப்பட்டது]

    புரோஹிதர்கள், அரசர்கள், தொழில் செய்பவர்கள் என்ற மூன்றே பிரிவுகளில் உயர்வு தாழ்வு உணர்வின்றி, ‘full convertibility’ யுடன் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுள் புரோஹிதர்கள் அதிகமான ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்க, வர்க சண்டைகள் உருவாயிற்று.

    தங்களது ஆதிக்கத்தை ஏற்காத அரசர்களுக்கும், இதர மக்களுக்கும், வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் செய்ய வேண்டிய சடங்குகளை புரோஹிதர்கள் செய்ய மறுத்தனர்.
    இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சமூக அந்தஸ்தை இழந்த அந்த மக்களையும் இந்தப் போராடங்களையெல்லாம் வெளியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர் வாசிகளையும், ‘சூத்திரர்கள்’ என்று இழிவாகக் குறிப்பிட ஆரம்பித்தனர், புரோஹிதர்கள்.

    தொடர்வேன்.

    • அருமை ஐயா! தொடருங்கள்….!!
      முடிந்தவரை காலங்களை குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  38. கிருஷ்ணன் (கடவுள்) சேலை திருடிய லீலை பற்றி பெரும் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் களத்திற்கும் தளத்திற்கும் சென்றிருந்ததால், இந்த வலை தளத்தில் தொடர்ந்து பதிவிட முடியவில்லை. விரைவில் தொடர்வேன்.

    ஆனால், மிகவும் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். எழுப்பும் எந்த கேள்விக்கும் விடை தராமல், ஆனால் வெறித்தனமாக, ஆபாச வார்த்தைகளில் எழுதுகிறார்கள் ‘இந்து’ என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் பிறாமணர்கள். அவர்கள் மனதின் அடித்தளத்தில் இருக்கும் சேற்றையே இது காட்டுகிறது.

    மாற்றுக் கருத்து உடையவரை, ‘நீ …… மதத்தின் கைகூலி’ ‘உன் அம்மா ஒரு ……..’, ‘இந்த நாட்டை விட்டுச் செல்’ ‘நீ கீழ் ஜாதி, இட ஒதுக்கீட்டில் வந்தவன்’ என்று எழுதுவத ஒரு பெருமையாகக் கருதும் கூட்டமாக இருக்கிறார்கள், பிறாமணர்கள்.

    வினவு வாசகர்களுக்கு என்னுடைய முக்கிய வேண்டுகோள். அப்படி நா கூசாமல் எழுதும் ஒவ்வொரு பதிலுக்கும் ஆயிரம் வாசகர்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் உயர் சாதி கொழுப்பு அடங்கும்.

    தொடர்வேன்.

    • To,

      Mr.Karthikeyan and Mr.Srinivasan,

      You have not read the book of Bhagavat Gita, bhagavatham fully. You are just picking a paragraph and understanding a wrong meaning. This concept is very bad.

      Can you tell me the goal of human life?

      Darwin’s theory may be explain that the people had come from monkey, but he cannot tell the goal of life? What is the goal? Just think!
      Why you born as human?
      Owl will never open his eyes, it will think that world is dark, like that you think it is dark.

      Mr.Karthikeyan, you told that you have mingled in iskcon rasa Leela program! But have you followed the vegetarian rules? Atleast with your Siddhar? Only vegetarians can be close to Krishna! Because mostly vegetarians don’t want to harm any living thing, that itself will create a good way to Krishna! Have you done Pooja for thulasi Devi? Have you done Pooja by keeping Krishna in home?

      See, there are brahmins who helped me to learn vedas, I’m not a brahmin but educated by brahmin to understand concepts of life. Already they helped us by writing thier experiments and showed us a way. Don’t make it complicated by writing your own explanations for their experiments.

      There are some brahmins who took this situation as advantage and made people slaves, but not everyone. Brahmins role is to educate everyone.

      You have not believing Krishna and went to temple, it’s like just betrayal. Also you have done betrayal to your Siddhar guru and vivekanandar.

      You people are staying in drainage and not trying to get out from that.

      Do you think that life is to eat, drink, mate and reproduce? All the animals can do it! Then, What is the difference between you and them?

      Your scientific inventions were no useful to people. All have disadvantages more than advantage. A monkey is trying to drink water from pipe by seeing you, tell me what is the difference?

      God is the energy.. energy (god) is not nature.. nature cannot be self creation. Only God is self creation. Don’t confuse concepts.

      This was proved by scientist also, “Energy can neither be created nor be destroyed, but can be transformed from one form to another form. ”

      We are all part and parcel of God’s energy, we were thinking to live independently; that’s why we are in this world.
      God created a world for people who forgets him and put him in this world to live independently, here also we can’t live independent, we are always depending on any one, like a servant depend on master, wife depend on husband, children depend on parents, businessman depend on people. Politicians depend on people.. and so on.
      We cannot live here happily, we can reach God’s feet by thinking of him always, that is the main goal of human, because no other living thing in this world can do that.

      The God himself told in bhagavatham that world is jail ( people separated by knowledge) , brahmins- first class prisoners; kshatriyas – second class prisoners, vaishays- third class prisoners and sutras – fourth class prisoners.

      It’s like you people hurting each one and fighting inside the jail? What happen when you fight inside a jail? Do you think it will liberate your soul. It will make your crime rate increase! Some people always jealous of first class prisoners!
      what is the use of thinking like that?
      They are also in jail only, having same thing what you have!
      Every religion tells the same thing in different way.

      Please try to reach god by always thinking of him and say his name ( for all religion – it’s same only).

  39. ஆகா… இப்படி ஒரு விளக்கமா? இது நாள் வரை இந்த குறளுக்காக வள்ளுவரை பெண்ணடிமை பேசுபவராய் எண்ணி திட்டிக் கொண்டிருந்தேன்

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க