1865-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மனுதரும சாஸ்திரம் பற்றிய குறிப்பும் – உங்களுக்கான இணைப்பும்

ண்பர்களே….

திராவிடர் கழகம் வெளியிட்ட அசல் மனுதரும சாஸ்திரம் என்ற நூலின் ஆய்வுரையில் இந்நூல் முதன்முதலாக 1919-ல் வெளிவந்ததாக கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ளார். அது சரியான தகவல் இல்லை என்றும் 1907-ல் வந்ததுதான் முதல் பதிப்பு என்றும் நான் முன்பு பதிவிட்டிருந்தேன். அப்பொழுது நான் சொன்னதுதான் சரி என்று கருதினேன். ஆனால் நான் கருதியது எவ்வளவு பிழையானது என்பதை 1865-ல் வெளிவந்த இந்நூலின் பதிப்பு உணர்த்தியது. (அறிதோறும் அறியாமை கண்டற்றால்…) தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதுதான் உண்மைகளை வெளிபடுத்துமே தவிர நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அல்ல என்பதை இந்த நூல் எனக்கு உணர்த்தியது.

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஒளிநகல் செய்யப்பட்ட இந்த நூலில் உள்ள உரைநடை இன்றும் படிப்பதற்கு அலுப்பில்லாமல் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான ஒரு நூலை நீங்களும் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும், என்பதற்காக இதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்

o0o0o0o

படிக்க :
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?
♦ தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு !

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காது – ”சுக்கிர நீதி” (பக்.189)

ண்பர்களே…

முந்தைய பதிவில் கொடுத்த ”மனுநீதி” நூலை பதிவிறக்கம் செய்து வாசித்திருப்பீர்கள். மனுநீதிக்கு மூலமான நூலாக சுக்கிர நீதியைக் கூறுவார்கள். வடமொழியில் எழுதப்பட்ட இந்த நூலை 1926-ல் பெரும்புலவர் கதிரேசன் செட்டியார் மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலை மேலைச் சிவபுரி சன்மார்க்கச் சபை வெளியிட்டுள்ளது. பல்வேறு வகையான சுவையான செய்திகளை உள்ளடக்கியுள்ள இந்த நூலை பரிமேலழகர் தான் எழுதிய திருக்குறள் உரையில் மேற்கோளாகப் பயன்படுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுவையான நூலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நன்றி : முகநூலில் – பொ.வேல்சாமி