தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு மோடி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் அக்டோபர் 2018-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனடிப்படையில் வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை அறிந்த தமிழக விவசாயிகள் அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர்.
படிக்க:
♦ மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
♦ நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் மரக்காணத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால், மாவட்ட பகுதிகளிலும் ஒதுக்கப்பட்டு, சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பூமிக்கடியில் கடல் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உப்பு நிலங்களாக மாறிவிடும். கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே தண்ணீர் உப்பாக மாறிவரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் மேலும் விவசாய நிலங்கள் நிச்சயம் பாழ்பட்டு போகும் என்பது உறுதி.
விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இக்கொடிய திட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மோடி அரசை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து போராடினர்.
ஆனால், இந்த அழிவுத் திட்டங்களின் கூட்டுக் களவானியாக விளங்கும், அடிமை அதிமுக எடுபிடி அரசு, தொடர்ந்து தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்தும், போராடுபவர்களை போலிசை ஏவி கைது செய்து ஒடுக்கி இந்த அழிவுத் திட்டங்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் முப்போகம் விளைந்த பூமியெங்கும் வறட்சியாகிவிட்டது. குடிநீர்ப் பஞ்சத்தால் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதி மக்களும் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இப்படியொரு அபத்தமான, ஆபத்தான திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது மோடி அரசு.
தமிழகத்தைப் பொறுத்தவரை நிலவளம் மற்றும் நீர்வளம் பாதிக்கும் மரபு சாரா திட்டங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நிரந்தர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழக்கம்போல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு மவுனம் சாதித்து வருகின்றனர்.
நாட்டையே பல கூறுகளாக, சிதைத்து பன்னாட்டு நிறுவங்களின் வேட்டைக்காடாக மாற்றத் துடித்து வருகிறார் மோடி. இந்த அரசு தனக்கென்று வரையறுத்துக் கொண்ட கொள்கைகள் எதையும் கடைபிடிக்க முடியாமல் தோற்றுப்போய் விட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடியாளாக இன்றைய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது !
எழில்
இந்த கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் எல்லாவற்றிலும் பொய் பித்தலாட்டம், இவர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பல பொய்களை சொல்லி அந்த மக்களை சாகடித்து விட்டு இப்போது டெல்டா மாவட்டங்களிலும் பொய்களை பரப்பி அந்த மக்களையும் அழிக்க கிளம்பி இருக்கிறார்கள்.
இவர்கள் முதலில் பைக் கார் பஸ் ரயில் என்று எந்த வாகனத்தையும் பயன்படுத்தாமல் வெறும் காலில் நடந்து சென்று அனைத்து ஊர்களிலும் பெட்ரோல் எடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தட்டும், அப்போது தெரியும் இவர்களின் கேவலமான நேர்மை.
மணிகண்டன் அவர்களே பல்வேறு அழிவுத்திட்டங்கள் மூலம் நாட்டையே அழித்து விட்ட பிறகு அதே கார், பஸ் எல்லாவற்றையும் எங்கே கொண்டு சென்று ஓட்டுவீர்கள்?
ஆமா ஆமா விமானம் நிலையம் கட்டினால் அழிவு திட்டம், சாலை அமைத்தால் அழிவு திட்டம், தொழிற்சாலை கொண்டு வந்தால் அழிவு திட்டம், பெட்ரோல் எடுத்தால் அழிவு திட்டம், துறைமுகம் கொண்டு வந்தால் அழிவு திட்டம்… இப்படி எல்லாவற்றையும் அழிவு திட்டம் என்று சொல்லி எதிர்த்து கொண்டே இருந்தால் மக்களின் வாழ்வு என்ன ஆவது ? இப்படி எல்லாவற்றையும் எதிர்த்து கொண்டு இருந்தால் மக்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும் ? தினமும் போராட்டம் நடத்துவதையே தொழிலாக வைத்துக்கொள்ளலாமா ? அது வினவு கூட்டங்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் சாதாரண மக்களின் வாழ்வு ?
வினவு போன்ற சீனா பாக்கிஸ்தான் கைக்கூலிகளுக்கு தமிழக மக்களின் நலன் பற்றி துளிகூட கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்களும் இவர்களின் நேர்மையற்றதனத்திற்கும், துரோகத்திற்கு துணை போக வேண்டும்மா ? இந்த வளர்ச்சி திட்டங்களை குலைப்பதால் கம்யூனிஸ்ட்கள் மற்றும் பல தேசவிரோத கூட்டங்களுக்கு சீனா பாக்கிஸ்தான் மூலம் பிழைப்பு ஓடிவிடும் ஆனால் இந்த மக்கள் விரோதிகளின் செயல்களால் பாதிப்பு சாதாரண மக்களுக்கு தான்.
பெட்ரோல் எடுப்பதை எதிர்க்கும் கூட்டங்கள் இனி தங்கள் வாழ்நாளில் என்றுமே பைக், கார், பஸ், ரயில், விமானம் என்று எதையும் பயன்படுத்தாமல் அனைத்து இடங்களுக்கும் வெறும் காலில் நடந்து சென்று போராட்டம் நடத்த வேண்டும்.
இனி எந்த காலத்திலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு எதிராக வரையே திறக்க கூடாது.
இந்த சவாலை ஏற்க வினவு கூட்டங்கள் தயாரா ?
வினவு சவாலை ஏற்பது இருக்கட்டும்…. நீங்கள் தான் கூடங்குளம் அனுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எல்லாம் ஆதரிக்கிறீர்களே… இடிந்த கரைக்கோ, அல்லது பெட்ரோலிய மண்டலம் அருகே ஒரு இடத்தில் வீடு எடுத்து தங்கிக்கொள்ள வேண்டியதுதானே?
எங்கள் கிராமம் சொந்த வீடு பூர்விக நிலம் எல்லாமே நீங்கள் சொல்லும் டெல்டா பெட்ரோலிய மண்டலத்தில் தான் உள்ளது… சும்மா உங்கள் தேசவிரோத செயல்களுக்காக சாதாரண மக்களின் வாழ்க்கையை நாசம் செய்ய வேண்டாம்.
அப்படியானால் ஹைட்ரோ கார்பனை ஆதரித்து ஊரில் உள்ளவர்களிடம் பிரச்சாரம் செய்து அதனை புகைப்படம் எடுத்து வினவு தளத்திற்கு செய்தி அனுப்புங்கள். அப்போது பார்க்கலாம் உங்கள் பூர்வீக தேசபக்தியை..!
அதெல்லாம் இருக்கட்டும் என் சவாலை ஏற்க முடியுமா முடியாதா ? அதற்கு பதிலை சொல்லுங்க…
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராளிகள் (மக்கள் விரோதிகள்) யாரும் இனி தங்கள் வாழ்நாளில் பைக் கார் பஸ் ரயில் விமானம் எதிலும் பயணம் செய்ய கூடாது அனைத்து இடங்களுக்கும் நடந்து தான் போக வேண்டும், அதேபோல் பெட்ரோல் விலையேற்றத்திற்கு எதிராக வாயே திறக்க கூடாது. அதற்கான தகுதி உங்களுக்கு இல்லை.
நீங்கள் தான் சுற்றுசூழலை காப்பாற்றும் போராளிகளாச்சே, அதனால் சுற்றுசுழலுக்காக பைக் கார் பஸ் ரயில் விமான பயணங்களை தியாகம் செய்யுங்களேன் பார்ப்போம்.
மணிகண்டன் சார்,
வெற்றுக்கூச்சல் போடாமல், ஜீவா அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியதுதானே. சொந்த ஊரிலேயே எந்தளவிற்கு உங்களுடைய கருத்து எடுபடுதுன்னு வின்வு வாசகற்களுக்கு நிரூபிக்கலாம்!
அத என்ன நீங்க சொல்றது ஏற்கனவே எங்கள் கிராமத்தில் பலரிடமும் இது பற்றி பேசியிருக்கிறேன்.
ஆனா நீங்க track மாற வேண்டாம், உங்களை போன்ற வினவு கூட்டத்தை சேர்ந்தவர்கள் என் சவாலை ஏற்க முடியுமா ? முடியாதா ? முடியாது என்றால் இனி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிராக போராட கூடாது இல்லையென்றால் இனி வாழ்நாள் முழுவதும் பைக் கார் பஸ் ரயில் விமானம் எதையும் பயன்படுத்த கூடாது டெல்லிக்கு போய் போராடுவதாக இருந்தாலும் வெறும் காலில் நடந்து போய் தான் போராட வேண்டும்.
வினவு போன்றவர்களுக்கு இந்த மாதிரியான போராட்டங்கள் மூலம் தேசத்தின் வளர்ச்சியை குலைப்பது நோக்கம், மக்களை வேலையில்லாமல் வறுமையில் தள்ளினால் தானே வினவு கூட்டங்களுக்கு ஆட்கள் கிடைப்பார்கள்.
நிச்சயம் மக்கள் கம்யூனிஸ்ட்களை சமூகத்தில் இருந்து விளக்கி வைக்க வேண்டும், மக்களுக்கு தீமைகளை செய்வது மட்டுமே கம்யூனிஸ்ட்கள் அடிப்படை நோக்கம்.
கேட்டால் இதற்கு பெயர் தான் புரட்சி புடலங்காய் என்று கதை அழைப்பார்கள்.
உள்டப்பி மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உள்டப்பி மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனக்கு FTE NEEM வேண்டாம்.
ஆனால் MODI BJP வேண்டும் .
We will talk welfare yes it is personal welfare…
– BJP bhats