பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய கல்விக் கொள்கை – 2019 –யை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழக தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

அன்பாந்த மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே!

டந்த 5 ஆண்டுகாலம் மோடி தலைமையில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல், கல்வித்துறை முழுவதுமாக கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க 2015 -ல் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதுமட்டுமல்ல, பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி வரை இந்தி – சமஸ்கிருதத்தை திணிப்பது, பார்ப்பனிய பண்பாட்டை புகுத்துவது, உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள ஆட்களை அமர்த்துவது என காவிமயமாக்கியும் வந்தது.

இப்போது மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதால் 100 நாட்கள் இலக்கு வைத்து கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற வெறிகொண்டு அலைகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள கஸ்தூரிரங்கன் என்பவர் தலைமையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு அவசர அவசரமாக கருத்துக்கேட்டு, சட்டமாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

உண்மையில் இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல. கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ’சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!

பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எந்த விலைகொடுத்தேனும் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

படிக்க:
♦ அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

ஏன் புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிக்க வேண்டும்?
  1. இது கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் பார்ப்பனியத்தின் புதிய மனுநீதி!
  2. தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மீண்டும் உயிர்ப்பெறுகிறது!
  3. தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!
  4. இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது – சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது!
  5. தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவது.
  6. சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவது.
  7. உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது. உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது.
  8. இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது.

இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்!

புதிய கல்விக் கொள்கை –2019-ஐ நிராகரிப்போம் ஜூன் – 20, 21 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ! அனைவரும் வாரீர் !

தகவல் :
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675,
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com
முகநூல் : rsyftn