சென்ற 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மீ டு (#MeToo) இயக்கம் அனைத்து இடங்களிலும் பேசப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் – குறிப்பாக ஊடகம் மற்றும் திரைத்துறையில் இருந்து தங்கள் கதைகளை வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தனர். உடனேயே அந்தப் பெண்களின் ஆளுமையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ள ஆண்கள் செய்ய ஆரம்பித்தனர். ஆயினும் இவர்களது அவதூறுகளை தூக்கி வீசிவிட்டு மீ டு இயக்கம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது.

#MeToo இயக்கம்ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள். சமூக வாழ்க்கையில் இருக்கும் சாதாரண பெண்களே இத்தகைய துன்புறுத்தல்களை மவுனமாக கடந்து போகையில் அதிகாரத்தில் உள்ள ஆண்களை அத்தனை சுலபமாக எதிர்க்க முடியுமா என்ன? அப்படி புகார் தெரிவித்தால் அந்தப் பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது, இல்லையேல் வேலையை விட்டு தூக்குவது, எதிர்காலத்தையே ஒன்றுமில்லையென ஆக்குவது என அத்தனை ஆயுதங்களும் இப்பெண்களைக் குதறுவதற்கு எப்போதும் காத்திருக்கின்றன.

அமைச்சர்கள், தனியார் நிறுவன உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என பல பிரபலங்கள் மீ டு இயக்கத்தால் அம்பலப்படுத்த்தப்பட்டார்கள். அவர்களில் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது பதவி விலகினார்கள். சில பெண்கள் துணிந்து தம் கதையை பொதுவெளியில் பகிர்வதற்கான மனத்தின்மையை மீ டு இயக்கம் அளித்தது. அதனாலேயே பிரபலமல்லாத சாதாரண பெண்கள் கூட தங்களது வதைக் கதைகளை பொது வெளியில் எடுத்து வைத்தார்கள். ஊடகங்களில் முன்னுக்கு வர வேண்டுமா, டிசம்பர் சங்கீத சீசனில் மேடை ஏற வேண்டுமா அத்தனையும் பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத்தான் நடந்தேற வேண்டும் என்பது எத்தனை கொடுமையானது?

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்காக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வேலை பறிபோனது, கணவருக்கும் அதே நிலை என எத்தனை எத்தனை கொடுமைகள்? |

பார்ப்பனியமும் ஆணாதிக்கமும் சேர்ந்து நடத்திய இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நமது சமூகத்தின் ‘தரத்தை’ தெளிவாகக் காட்டுகிறது. அவ்வகையில் மீ டு இயக்கம் குறித்த ஒரு பறவைப் பார்வையை இத்தொகுப்பு எடுத்து வைக்கிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

இந்தியாவில் #MeToo இயக்கம் – புதிய கலாச்சாரம் ஜூலை 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

” இந்தியாவில் #MeToo இயக்கம் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ?
  • பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம்!
  • #Metoo : நாம் யார் பக்கம் நிற்பது ?
  • பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை!
  • போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ?
  • உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
  • நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன்?
  • #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ”கண்ணியத்துக்கான பேரணி”!
  • பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
  • #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்! இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன? ஒரு முழுமையான அறிக்கை!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

பொள்ளாச்சி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க