குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். துணை இராணுவம், போலீசு, ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளை ஆளும் அரசு ஏவினாலும் போராட்டத்தின் வீரியத்தை அவர்களால் குலைக்க முடியவில்லை.

மோடி – ஷாவின் பாசிச சட்டத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும் பொருட்டும் வெவ்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே…

என்னுடைய ஹிஜாப் அல்லது ”ஹிஜாபுடன் கூடிய நெற்றி போட்டு”… எது உங்களை பாதிக்கிறது?

மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உரிமைக்காக பதாகை ஏந்திவந்திருந்த பெருந்திரளான மக்கள்

பாசிசம் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது !
‘நான் முசுலீம்; இந்து; பவுத்தர்; சீக்கியர்; கிறித்துவர்; ஜெயின்; மொத்தத்தில் நான் இந்தியர்.
‘மேரி கிரைசிஸ், ஹேப்பி நியூ ஃபியர்’ (நிறைய பிரச்சினைகளுடன் புதிய பயமுறுத்தல்)

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
♦ “இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்

துப்பாக்கியல்ல, புத்தகங்கள். வன்முறை அல்ல கலாச்சாரம். நான் ஜாமியா மாணவர்களுடன் அவர்களுக்காக நிற்கிறேன்.
தேநீர் செய்யுங்கள்; போரை அல்ல.
மோடி – ஷா-வுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
பாசிஸ்டுகளும் (மோடி அமித்ஷா) கோபக்காரர்களும் (போராட்டக்காரர்கள்)
கேளாத செவிகள் கேட்க வேண்டுமெனில் சத்தம் மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும் – பகத் சிங்
மோடி – ஷா – போய் அரசியலமைப்பைப் படியுங்கள்!
பிழை 404 – இந்து ராஷ்டிரம் காணப்படவில்லை
(காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைக் கடந்து) இயல்பு நிலை இப்போது டெல்லியை எட்டியுள்ளது.
பாசிசத்தை முடக்குங்கள்; இணையத்தை அல்ல.
அவர்கள் எங்களைப் பிரித்தால் நாங்கள் பல்கிப் பெருகுவோம்.
உங்கள் துப்பாக்கியைவிட எங்கள் குரல் வலிமையானது
என்னுடைய உடை முசுலீமை போன்றது, நெற்றி இந்துவைப் போன்றது; என்னுடைய கழுத்து கிறித்துவன் எனக் காட்டுகிறது. ஆனால், நான் ஒரு மனிதன்
நான் ஒரு ஜெர்மானியர், (NRC, CAA அனுமதித்தால்) நிச்சயம் உங்கள் எதிர்கால சந்ததியினர் உங்கள் மீது உமிழ்வார்கள்.


கலைமதி