privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம்...

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது.

-

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா மாணவர்கள் அமைதியான முறையில் இன்று (30-01-2020)  நடத்திய போராட்டத்தின் மீது, ஒரு இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கியால் சுட்டுள்ளான். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஜாமியா கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்துத்துவக் கிரிமினல் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளான இன்று, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டில்லியின் ஜாமியா பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். அங்கு கலவர தடுப்புப் போலீசும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

போராட்டம் அமைதியாகச் சென்று கொண்டிருக்கையில், அங்கு வந்த கோபால் எனும் இந்துத்துவ கிரிமினல், “இதோ வாங்கிக்கொள்.. சுதந்திரம்” என்று கத்திக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கிச் சுட்டான். மேலும் “ஹிந்துஸ்தான் வாழ்க, டில்லி போலீஸ் வாழ்க” என முழக்கமிட்டுக் கொண்டே சுட்டான்.

இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுல் ஒருவரான ஷதாப் நஜார் என்பவருக்கு கையில் குண்டு பாய்ந்தது. இந்த மாணவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும், ஜாமியா கல்லூரியில் பெருந்திரள் தொடர்புத்துறையில் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !

குண்டடி பட்ட மாணவரை அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் போலீசு மற்றும் மீடியாக்களின் முன்னிலையில் நடந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், டில்லியில் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பேசிய பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது. இந்த வெறியூட்டும் சம்பவம் நடந்து சரியாக இரண்டாம் நாளில் அதே போல ஒரு துப்பாக்கிச் சூடு மாணவர்கள் மீது நடந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என போற்றப்படும் ஒரு நாட்டில், ஒரு மத்திய அமைச்சர், பிடிக்காதவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளார். இந்த வெறியூட்டும் பேச்சில் வெறியேற்றப்பட்ட ஒரு இந்துத்துவ கிரிமினல், அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடவும் செய்திருக்கிறான்.

இந்தியா போன்ற நாட்டில், ஒரு சாதாரண நபரால் ஒரு துப்பாக்கியை வாங்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அன்று காந்தியைக் கொன்ற கோட்சேவின் பின்னணியில் கோழை சாவர்க்கரின் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நின்றது போல, இன்று துப்பாக்கிச் சூடு நடத்திய கோபாலின் பின்னணியில் நிற்கும் கிரிமினல் கும்பல் எதுவாக இருக்க முடியும் ? – இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்.-ஐத் தவிர !


நந்தன்

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்