PP Letter head

தேதி: 21-2-2020

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம்,

வரும் 23-2-2020 ஞாயிறு மாலை 5-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மாநகராட்சி திடலில், மக்கள் அதிகாரம் சார்பில் CAA – NRC – NPR  வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும், அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. போலீசாரின் உத்திரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாரின் உத்திரவை ரத்து செய்து மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைத்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சி.ஏ.ஏ – என்.பி.ஆர். தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கைகாக தமிழகம் தொடர் போராட்டங்களால் குமுறி கொண்டே இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் இரவு பகலாக போராட்ட களத்தில் இருப்பது அனைவரும் பின்பற்ற தக்கவையாக உள்ளது.

தமிழக முதல்வர் சட்டமன்ற உரையில் சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஆதாரம் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், வரலாற்று ஆய்வாளர்கள், மெத்த படித்த உயர்கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள் கடந்த இரண்டு மாதமாக குடியுரிமை சட்டத்தின் அபாயத்தை விளக்கி களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் வரை பலியாகி உள்ளனர். உலக நாடுகள் பல கண்டித்திருக்கின்றன. அசாமில் கண்முன்னே பல லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு வதை முகாமை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் குடியுரிமையை நிரூபிக்க சொல்லி ஆதார் அட்டையை ரத்து செய்து ஆயிரம் முசுலீம்களுக்கு நோட்டிசு அனுப்பி உள்ளனர். எனவே, என்.ஆர்.சி-யின் முன்தயாரிப்பான  என்.பி.ஆர். திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் :

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உயர்திரு. கோபால கவுடா அவர்கள்
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்கள்.

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட ஆட்சியர் திரு. சசிகாந்த் செந்தில்,

எழுத்தாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கின்
கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர். பாலன்,

திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி,

தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர். தியாகு,

டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தலைவர்,
ஆராய்ச்சி மாணவர் திரு. சாய் பாலாஜி,

மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். சி. ராஜு ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழக கலைக் குழுத் தோழர்கள் கோவன் தலைமையில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

சி.ஏ.ஏவை எதிர்த்து பாடி வரும் ராப் பாடகர். தெருக்குரல் அறிவு அவர்களும் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

மாநாட்டிற்கு மக்கள் அதிகார பொருளாளர் தோழா். காளியப்பன் அவர்கள் தலைமை தாங்கவும்,  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்கள் வரவேற்புரை வழங்கவும், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் அவர்கள் நன்றியுரை வழங்கவும் உள்ளார்கள்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் பாசிச பா.ஜ.க ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும் போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வே தனது பாசிச நடவடிக்கையால் அதை துரிதபடுத்துகிறது. தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காமல் துன்பப்படும் மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்க முனைகிறது. இன்று நாட்டில் நிலவுகின்ற அமைதியற்ற சூழல் அனைத்திற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க தான். கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது.

மாநாட்டிற்கு பத்திரிக்கை ஊடக தொலைகாட்சி நண்பர்கள் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கோருகிறோம். பொது மக்கள் அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்தோடு பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இருகரம் கூப்பி அழைக்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பங்கேற்பாளர்கள் :
1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
2. காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள்  அதிகாரம்.
3. மருது, செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.
4. கோவன், புரட்சிகர பாடகர், ம.க.இ.க
5. லெ. செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை-083.
E-mail : ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn