தேதி: 23.3.2020

ன்பார்ந்த வாசகர்களே, நண்பர்களே!

எமது வினவு இணைய தளத்தின் ஆசிரியர்குழு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி “விடைபெறுகிறோம் வினவு ஆசிரியர் குழு’’ என தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.

தற்போதைய அரசியல் சூழலில் கடந்த ஒரு மாத காலமாக தளம் செயல்படாததற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வினவு தளம் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கருதியும், வினவின் வாசகர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வினவை விரைந்து செயல்பட வைக்குமாறு கோரிய வகையிலும் நான் பொறுப்பாசிரியராக இருந்து வினவு தளத்தை இயக்கத் தொடங்கியுள்ளோம். இதுவரை எமக்கு உறுதுணையாக இருந்து வந்த வாசகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

வினவு பொறுப்பாசிரியர்,
காளியப்பன்.