ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்

ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார் ஸ்டான் சுவாமி. அவர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு, இதுவே முக்கியக் காரணமாகும்.

ழங்குடி மக்கள் நலனுக்காக தன் 84 வயதிலும் போராடி வந்த ஸ்டான் சுவாமியை பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. அவரது உடல்நிலை பாதிப்பின் காரணமாக தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா வைத்த குவளை கேட்டதைக் கூட கொடுக்க மறுத்து அவரை சிறையில் துன்புறுத்தியது மோடி அரசு. சிறையில் கொரோனா பரவுகையில் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க கோரிய நிலையில், அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இப்படி தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி மரணமடைந்துவிட்டார் ஸ்டான்சுவாமி. திருச்சியில் புள்ளப்பாடியில் பிறந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தபோது, பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார். கடவுளுக்கு தொண்டூழியம் செய்வதை விட மக்களுக்கு வேலை செய்வதையே முக்கியமான பணி என்று முடிவு செய்தவர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

அவர் கடவுளுக்கு தொண்டூழியம் செய்திருந்தால் கூட அவரை விட்டுவைத்திருக்கும் இந்த அரசு. ஆனால் அவர் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியதன் காரணமாகவே மோடி கும்பலால் தற்போது கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிராக பேசும் சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர் கடுமையாக ஒடுக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போல் தற்போது சமூக செயற்பாட்டாளர்  ஸ்டான் சுவாமி மோடி, அமித்ஷா மற்றும் அதிகார வர்க்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார், என்பதை மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ரெட்பிக்ஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!