உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

1

ரிசி மீதான 5% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அரிசி விற்பனையாளர்கள் ஓர் வழியை சொல்கிறார்கள் – வழக்கமான 25 கிலோவுக்கு பதிலாக 26 கிலோ பைகளில் அரிசியை விற்பனை செய்வது. 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள அரிசி மூடைகளை சில்லறை விற்பனையாக அரசு கருதுகிறது, மேலும் இந்த அரிசியின் ஒவ்வொரு கிலோவும் முன்பை விட 2-3 ரூபாய் அதிகமாக உள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டைக்கு 50 முதல் 80 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ஆனால், 25 கிலோ அரிசியை விற்காமல், 26 கிலோ என்ற அளவில் விற்பனை செய்வதன் மூலம், கட்டணத்தைத் தவிர்க்க வியாபாரிகள் வழி சொல்கிறாரக்ள்.

5% ஜிஎஸ்டி உயர்வு பிராண்ட் இல்லாத பொருட்களுக்கு கூட பொருந்தும், அவை முன் பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டு, 25 கிலோவிற்கு கீழ் உள்ள அனைத்து அரிசி பைகள் மீதும் விதிக்கப்பட்டால் (இது சில்லறை விற்பனையாக கருதப்படுகிறது). இருப்பினும், இப்போது 26 கிலோ பைகளில் அரிசி அடைக்கப்படுவதால், அரிசி மொத்தமாக மாறுகிறது, இது நுகர்வோரின் சுமையை கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும், ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான அரிசியை வாங்க முடியாத நுகர்வோருக்கு இது உதவாது, எனவே, ஜிஎஸ்டி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


படிக்க : உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!


சில்லறை விற்பனையில் விற்கப்படும் ஒவ்வொரு கிலோ அரிசியும் முன்பு இருந்ததை விட தற்போது 2-3 ரூபாய் அதிகம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், 25 கிலோ எடையுள்ள மூட்டைகள் முன்பு இருந்ததை விட ரூ.50 முதல் 80 வரை விலை உயர்ந்து, நுகர்வோரை பெரிதும் பாதிக்கிறது.

ஜூலை 18 முதல், ஆட்டா, பனீர் மற்றும் தயிர் போன்ற முன் பேக் செய்யப்பட்ட, லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5% வரி என்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு அமலுக்கு வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற பின்னர், சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரி பட்டியல் வெளியிடப்பட்டது.

சில உணவுப் பொருட்களுக்கு 5% வரி விதித்தது மாநிலங்களவைக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாதிட்டார். ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பே உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பது நடைமுறையில் இருந்தது என்றும் அவர் கூறினார். “சட்ட அளவீட்டுச் சட்டத்தின் விதிகளை ஈர்க்கும் ‘முன்-பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட’ பொருட்களில் வழங்கப்படும் போது, ​​இந்தப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி பொருந்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பருப்பு வகைகள், அரிசி, கோதுமை மற்றும் மாவு போன்ற தானியங்கள் போன்ற பொருட்கள், முன்னதாக ஒரு யூனிட் கன்டெய்னரில் பிராண்டட் செய்து பேக் செய்யப்பட்டபோது ஜிஎஸ்டி 5% பொருந்தும்.

அரிசி என்பது தென்னிந்தியாவின் உழைக்கும் மக்கள் மிகவும் அதிகமாக உண்ணும் உணவு பொருட்களின் ஒன்று. இது போன்ற பல உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை விதித்து சாமானிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய மோடி அரசு. 25 மூட்டை அரிசிக்கு பதிலாக 26 கிலோ மூட்டை கட்டினால் ஜி.எஸ்.டி க்குள் வராது என்று வியாபாரிகள் மக்களுக்கு உதவ நினைத்தாலும் சில்லரை விளைக்கு வாங்கி உணவு சமைக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்று கவலை கொள்ளத்தான் வேண்டும். ஜி.எஸ்.டி வரி போட்டு சிறுதொழில் நிறுவனங்களையும் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கிறது மோடி அரசு.

ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

காளி