Tuesday, June 9, 2026
படிக்கும் மாணவரின் முழுக்கை சட்டையும், பைத்தியக்கார விதிகளால் கிழிக்கப்பட்டது. கழுத்தணியும், காதணியும் பாதணியும் கூட பறிக்கப்பட்டது.எச்சரிக்கை விதிகளால் எல்லா கயிறுகளும் அறுக்கப்பட்டது. ஆனால், பூணூல் கயிறு?

தணல்

1
மெரினா விரிந்து கிடக்கிறது நெடுவாசல் நீண்டு கிடக்கிறது தில்லி ஜந்தர் மந்தர் பிடிவாதம் பிடிக்கிறது... உடனே புரட்சி வேண்டுமென ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.
'‍பொது தீட்சீதர் கோயில் தனியார்' எனும் அநீதிக்கெதிராக அடங்கார். அய்யா ஆறுமுகச்சாமி உம் போல் இனி யார் ? விடையேறி திருமேனியனுக்கும் தமிழ் தடை உடைத்த கண்மணியே நெற்றி‍யெல்லாம் திருநீறு உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு ஓயாதய்யா உன் போர் !
அவசர அவசரமாக தூக்கிலிட்டு அறைகுறையாக வெட்டியெறிந்து சட்லெஜ் நதியில் கரைத்தார்கள் இதோ அவன் மெரினா கரையில் துளிர்க்கிறான்... அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் வீரமரணம் எய்திய ஆசாத்தை வெறிகொண்டு முடித்தார்கள். இதோ அவன் நெடுவாசலில் வந்து நிற்கிறான்.
பிறப்புறுப்பை அறுக்கும் இந்து முன்னணி கயவர்களை இந்த ஊரில் வைத்துக்கொண்டே எனக்கும் மகளிர் தின வாழ்த்தா! கேட்கிறாள் அரியலூர் நந்தினி?
கடைக்கண் பார்வைக்கு கிடையாசனத்திலேயே கிடந்தவர் அரியாசனத்திற்காக பத்மாசனமா? கோபத்தில் குமுறுது அம்மாவின் ஆவி! பேய்களை சமாளிக்க ஒரே வழி பேயாகி விடுவதுதான்.
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?
கானாங்கெளுத்தியும், வவ்வாலும் மீனில் மட்டுமா பார்த்தீர்கள்! எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள். காரப்பொடியும், ஓட்டாம்பாறையும் எங்கள் உடம்பில் தின்றீர்கள்! வஞ்சிரத்தை எம் மீனவப் பெண்களின் நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.
நெல்லு வளர்த்துக் கொடுத்தோம் வகை வகையா தின்னீங்க மாடு வளர்த்துக் கறந்தோம் மடிப்பாலு குடிச்சீங்க. ஆடு வளர்த்துக் கொடுத்தோம் கறிக்குழம்பு ருசிச்சீங்க கோழி வளர்த்துக் கொடுத்தோம் நாட்டுக்கோழி ரசிச்சீங்க நாங்க மாரடைச்சி கிடந்தோம் யாரு வந்து தடுத்தீங்க?
செம்பு அலுமினியம் பாக்சைட் தங்கம் கரி... இப்படி நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவிக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் கலந்திருக்கிறோம் நாங்கள் !
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.
“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” - கவிஞர் ஷெல்லி
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்! என்னடா இது இராமாயணம்?
செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை ! ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !

அண்மை பதிவுகள்