காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.
சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !
பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது.
பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?
தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன.
பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்துள்ளனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது அரசு.
அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !
நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !
“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.
‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்பால் உணர முடியும்.
16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!
16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களோ! மருத்துவமனை நிர்வாகமோ! அவர்களுக்கு என்ன தண்டனை அவர்கள் குற்றமற்றவர்களா?
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
மாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்களின் போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.
மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!
இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும்.
“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !
ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.
முனகுவது கூட இனி தேசத்துரோகம்!
பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..
ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!
ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார்.
தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.