முகப்புஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
Array

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!

-

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நடத்திய வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. National Aviators’ Guld தேசிய விமானிகள் அமைப்பு என்ற தொழிற்சங்கத்தை ஜெட் ஏர்வேசின் விமானிகள் ஆரம்பித்ததை ஒட்டி நிர்வாகம் இரண்டு விமானிகளை வேலைநீக்கம் செய்தது. மொத்தம் 750 விமானிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விமானிகள் இந்த சங்கத்தில் இணைந்திருந்தனர். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக இரண்டு சக ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது விமானிகளுக்கு கடும் ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி இந்த விமானிகள் சங்கம் கடந்த வாரத்தில் நோய்விடுப்பு என்ற பெயரில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. சாதாரணமாக தொழிற்சங்கம் என்பது தொழிற்சாலைகளில்தான் இருக்கும் விமானிகளுக்கெல்லாம் எதற்கு சங்கம் என்று வெகுண்ட நிர்வாகமும் முதலாளியும் மேலும் இரண்டு விமானிகளை வேலை நீக்கம் செய்தனர். இதைக் கண்டு அஞ்சாத விமானிகள் தங்களது வேலை நிறுத்தத்தை காலவரம்பின்றி நீட்டித்தனர்.

வேலைநீக்கம் செய்த விமானிகளை பயங்கரவாதிகள் என்று தூற்றினார் ஜெட்ஏர்வேசின் முதலாளி நரேஷ் கோயல். தினமும் நாற்பது கோடி நட்டம் ஏற்படுவதோடு (ஐந்து நாள் நட்டம் 200 கோடியாம்), விமான நிறுவனத்தில் தொழிற்சங்கமெல்லாம் வந்து விட்டால் முதலிட்டாளர்கள் அச்சமடைவார்கள், என்றெல்லம் கணக்குப்பார்த்து கோயல் விமானிகளை புழுதிவாரித் தூற்றினார். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்த ‘குற்றத்திற்காக’ விமானிகள் பயங்கரவாதிகளானார்கள். விமானங்களை வைத்து இரட்டைக் கோபுரத்தை தகர்த்தாகக் கூறப்படும் பின்லேடனுடன் இப்போது ஜெட் ஏர்வேசின் விமானிகளும் சேர்க்கப்பட்டனர்.

ஊடகங்களும் ரத்தான விமான சேவைகளால் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடியின் சொந்தக் கதை சோகக்கதைகளை சென்டிமெண்டாக போட்டுத் தாக்கி விமானிகளை வில்லன்களாக்க முயன்றனர்.

ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் விமானிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவேண்டுமென தொடர்ந்து போராடினார்கள். இந்த போராட்டத்தால் ஜெட்ஏர்வேசின் ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாற்று பைலட்டுகளை வைத்து, அல்லது வெளிநாட்டு பைலட்டுகளை வைத்தாவது சர்வீசை தொடரலாம் என கணக்கு போட்ட கோயலின் முயற்சி பலிக்க வில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விமானிகளும் இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்தனர்.

முதலாளிகளிடம் கோடி கோடியாய் பணமிருந்தாலும் தொழிலாளிகள் இன்றி ஒரு தொழிற்சாலை இயங்க முடியாது என்ற உண்மை இங்கேயும் வேலைசெய்தது. நான்கைந்து நாட்களுக்கு பின்னர் பணிந்து வந்த நிர்வாகம் தொழிலாளர்கள் ஆணையத்தின் தலையீட்டின் பெயரில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இரண்டு நாட்கள் நெடுநேரம் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு விமானிகளையும் மீண்டும் வேலையில் சேர்க்க முதலாளிகள் ஒத்துக் கொண்டனர். தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை அதை அங்கீகரிக்கும் முடிவை தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் அரசுப் பதிவாளரிடம் விடலாமென முடிவு செய்யப்பட்டது.

ஜெட்ஏர்வேசின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா ” சில தவறான புரிதலால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அன்பில் விரிசல் வந்துவிட்டது.இனிமேல் எந்தப் பிரச்சினை வந்தாலும் நிர்வாக தரப்பில் ஐவரும், விமானிகள் தரப்பில் ஐவரும் அடங்கிய கமிட்டி பரீசீலிக்கும் இனி ஜெட் ஏர்வேசின் ஊழியர்கள் அனைவரும் அன்பான ஒரே குடும்பமாக செயல்படுவோமென” திருவாய் அருளியிருக்கிறார். வேறு வழியின்றி ‘பயங்கரவாதிகளை’ குடும்பத்தில் ‘அன்பாக’ சேர்த்த கருமத்தைப் பற்றி அவரோ கோயலோ மனதிற்குள் எப்படி புழுங்கியிருப்பார்கள் என்பதை நாம்தான் மெனக்கெட்டு ஊகிக்க வேண்டும்.

விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் கிரீஷ் கவுசிக் தங்களால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், நீக்கம் செய்யப்பட்ட நால்வரை மீண்டும் பணியில் சேர்த்தமைக்காகவும் நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

தாராளமயம், தனியார்மயத்தை அமல்படுத்திய உலகமயத்தின் முக்கிய விதியே தொழிலாளர் உரிமைகள், சலுகைகளை ஒட்டப் பறிப்பதே. இதற்குத்தான் பல சங்க உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகள் மாற்றப்படுகின்றன அல்லது மாற்றுமாறு எல்லா தனியார் முதலாளிகளும் அரசை மிரட்டுகின்றனர். எல்லா நீதிமன்றங்களும் இத்தகைய வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன. சாதாரணமாக அரசு மற்றும் பொதுத்துறையில்தான் சோம்பேறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அதுவும் தங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால் போராடுவார்கள் என தனியார்மய தாசர்கள் அவதூறு செய்வார்கள்.

ஆனால் தனியார் முதலாளிகளிடம்தான் தொழிலாளிகள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஹரியாணாவில் நடந்த ஹீரோ தொழிற்சாலை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தையும் அதை போலீசு கொடூரமாக ஒடுக்கியதையும் நாம் அறிவோம். இங்கு சென்னையில் கூட ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காமல் நிர்வாகம் சிலரை வேலைநீக்கம் செய்ததையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் அந்த தொழிலாளிகள் தமது தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகிறார்கள்.

அரசு, பொதுத்துறையில் இருக்கும்  பணிப் பாதுகாப்பு இதர சலுகைகள்  என்பது தனியார் நிறுவனங்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. அப்படி சட்டப்படி கூட கோரக்கூடாது என்பதே முதலாளிகளின் உத்தரவு. பல பன்னாட்டு நிறுவனங்கள் கேட்பார் கேள்வியின்றி தமது ஊழியர்களை கொத்துக் கொத்தாய் வீட்டுக்கு அனுப்புவதும் அதை சட்டப்படி கூட தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது.

இந்நிலையில் முதலாளிகளின் அதி முக்கிய கேந்திரமான விமான நிறுவனத்தில் விமானிகள் ஒன்று சேர்ந்து தமது போராட்டத்தில் பாதி வெற்றியை ஈட்டியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கதுதான். இவ்வளவிற்கும் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்றாலும் அவர்கள் தமது போராட்டத்தில் காட்டிய உறுதியும், கோரிக்கைகளை வென்றதையும் சாதரணாமாக பார்க்க இயலாது. மேலும் விமானிகள் ஸ்டரைக் என்பதால் போலீசைக் கொண்டெல்லாம் ஒடுக்க முடியாது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இதே வேலைநிறுத்தம் சாதாரண தொழிற்சாலை ஒன்றில் நடந்திருந்தால் முதலாளி வீசும் பணத்தை அள்ளிவிட்டு அரசின் ஆசியோடு போலீசு தொழிலாளிகளை பந்தாடியிருக்கும்.

ஆனால் ஆளும் வர்க்கத்தின் அடிமடியில் இருக்கும் முக்கிய துறைகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தால் அது இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதாக இருக்கும்.

இந்த வேலைநிறுத்தத்தை வைத்து மற்ற தனியார் விமான முதலாளிகள் பயணிகள் கட்டணத்தை பலமடங்கு ஏற்றி பிளாக்கில் விற்று சுருட்டியது தனிக்கதை. இது அப்பட்டமாக வெளிப்படையாக நடந்தாலும் அரசு சும்மா கையக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடமைக்காக ஒரு விளக்க கடிதத்தை மட்டும் அனுப்பி முடித்துக் கொண்டது. ஏர் இந்தியாவில் மட்டும் இந்த காலத்தில் டிக்கெட்டுகள் பழைய கட்டணத்திலேயே விற்கப்பட்டன என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாவிற்கு தேவை தனியார் துறையா, பொதுத்துறையா என்பது புரிய வரும்.

இந்த வேலைநிறுத்தத்தில் விமானிகள் பாதி கோரிக்கையைத்தான் வென்றிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமையை பதிவாளர் முடிவு செய்வார் என்று விட்டுக்கொடுத்திருப்பது சரியல்ல. அதேசமயம் தொழிற்சங்கங்களின் பதிவாளர் சட்டப்படி இந்த விமானிகள் சங்கத்தை அங்கீகரித்தே தீர வேண்டும். இருப்பினும் அரசும், முதலாளிகளும் கொல்லைப்புற வழியாக இந்த சங்கத்தை கருவறுப்பதை நிச்சயம் செய்வார்கள். மேலும் மற்ற தனியார் விமான முதலாளிகளும் இதனால் கதி கலங்கியிருப்பதால் அவர்களும் இந்த சங்கத்தை கருவிலேயே ஒழிக்க முயல்வார்கள்.

எது எப்படியிருந்தாலும் தங்களது ஒன்று பட்ட போராட்டமே முதலாளிகளை பணிய வைத்திருக்கிறது என்பதையும் வேலைநிறுத்தம் செய்ததற்காகவே தங்களை பயங்கரவாதிகள் என்று தூற்றிய கோயலையும் அவர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. முதலாளிகள் என்ற முழுப்பானைக்கு இந்த கோயல் என்ற ஒரு பருக்கை என்ன பதமென்பதை நாமும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

  1. இந்த சங்கத்தினை முதலாளிகளிடமிருந்து மட்டுமல்ல, சி.பி.எம் போன்ற ஓட்டுப் பொறுக்கி போலி கம்யூனிச கும்பலிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து ஐ.டி. துறை நண்பர்களுக்கு ரோஷம் வருதான்னு பார்ப்போம்

    • //சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!//

      சங்கம் என்றாலே ஏதோ வேண்டாததுபோல அருவருப்பானது போலத்தான் நம்ம ஐடி ஊஊஊஊஉழியர்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தான் எவ்வளவு தான் ஒட்ட சுரண்டப்பட்டாலும் வாய் விட்டு கதறி அழக்கூடாது அப்படி அழுதால் தன் ஸ்டேடஸ் போவதாக நினைக்கிறார்கள். முதலாளி எலாவற்றையும் உருவி அம்மணமாய் நிற்கும் போதுதான் வருவார்களோ என்னவோ.

      கலகம்

  2. நாங்கு விமானிகளை மீண்டும் பணி அமர்த்தியது மட்டுமே தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி. மாறாக தொழிற்சங்கத்தை அழித்தது ஜெட் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி. இனிமே, இவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் கூட்டுக் குழு தான் முடிவு எடுக்கும். ஐந்து பேர் ஜெட் நிர்வாகத்திலிருந்தும், ஐந்து பேர் விமானிகளிலிருந்தும் அமைக்கப்படுகின்ற குழு அது. மேலும், இனி வரும் பிரச்சினைகளை, இந்தக் குழு ஒன்று சேர்ந்து தான் முடிவு செய்யும். இதில் யாரின் கை ஓங்கி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இனிமேல், இப்படி ஒரு ஸ்டிரைக் நடக்க வாய்ப்பே இல்லாதவாறு அமைந்திருக்கிறது இவர்களின் ஒப்பந்தம்.

    தொழிலாளர்களின் ஒற்றுமையையும், விடா முயற்சியும் பாராட்டப்படவேண்டியவை என்றாலும், இது வெற்றியா தோல்வியா என்று யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும்.

  3. மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ? :)))
    செம்புரட்சிக்காக இவர்களில் யாராவது ஒருவராவது உழைபார்களா அல்லது கம்யூனிசத்தை
    ஆதரிப்பர்களா அல்லது உண்மையான ஏழை தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பார்களா ?
    முக்கியமாக, இவர்களின் வீடுகளில் வேலை செய்யும் சமையல்காரர்கள், வேலைகாரகளை எப்படி
    நடத்துவார்கள் ? நல்ல கதை..

    தொழிற் சங்கங்கள் அமைவதை தடுக்க காரணம் : பழைய வரலாறுதான். தொழிற் சங்கங்களே கூடாது
    என்பது சரியல்லதான். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிற் சங்கங்கள் உருவானால், போக போக‌
    அந்நிறுவனம் அழிவது இயல்பு. ஏனெனில், நேர்மை இல்லா தொழிற் சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் அப்படி. பல பழைய நிறுவனங்கள் சீரழிந்த வரலாறு அப்படி.
    எஸ்.ஆர்.எம்.யூ ப‌ற்றி ஒரு விரிவான‌ ப‌திவு எழுதுங்க‌ள் பார்க்க‌லாம்.

    உண்மையான‌ தொழிலாள‌ர் வ‌ர்க‌ம் தின‌க்கூலிக‌ள் தாம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌.

    • அசட்டு அதியமானே!

      தினக்கூலிகள்தான் தொழிலாளிகள் என்று உளறியிருக்கிறீர்களே, மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளிகளெல்லாம் முதலாளிகளா? மார்க்சிய புரிதலில் தினக்கூலிகளெல்லாம் உதிரிப்பாட்டாளிகள். ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தரத்தொழிலாளர்களும்தான் தொழிலாளி வர்க்கம்.

      srmu கன்னையாவின் தொழிற்சங்கள் ஊழல் மிகுந்த கிரிமினல் சங்கம்தான். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரயில்வே துறை லாபகரமாக இயங்குகிறதே? இப்படிப்பட்ட ஊழல் சங்கங்கள் இருந்தால்தான் நிறுவனம் சிறப்பாக இயங்கும் என்பதுதான் உங்கள் லாஜிக் படி வருகிறது?

      பெரிய நிறுவனத்தில் தொழிற்சங்கம் இருந்தால் நிறுவனம் அழிந்து விடுமா? இன்றைக்கு அமெரிக்காவில் பிரம்மாண்டமான நிறுவனங்கள் திவாலானதற்கு தொழிற்சங்கங்கள் காரணமா இல்லை முதலாளிகளின் அபரிதமான லாபவெறி காரணமா? உளறுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் அசடே?;

      ஜெட் ஏர்வேசின் விமானிகள் விமானத்தை ஓட்டினால்தான் ஒரு இலட்சம் சம்பளம் மற்றும் நடுத்தர வர்க்க வாழ்க்கை கிடைக்கும். தவிர்த்து இவர்களெல்லாம் விமானங்களை வாங்கி முதலாளிகளாகவெல்லாம் முடியாது. தனத நடுத்தர வர்க்க வாழ்க்கை தவிர இவர்களும் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். வேண்டுமானால் இவர்கள் மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கம் என்று கூறலாம். வேலை செய்தால்தான் சம்பளம். இவர்களை கம்யூனிஸ்டுகளாக்கும் வேலையை ஜெட் ஏர்வேசின் முதலாளி கோயலே பார்த்துக் கொள்வான். விமானிகளை பயங்கரவாதிகள் என்று ஏசியவன்தானே அவன். தற்போது வேலை நிறுத்தம் செய்தது, சங்கம் கட்டியது இதெல்லாம் கூட கம்யூனிசத்தின் முதல் படிதான்.

      முதலாளிகளைப் பற்றியும் தெரியாமல், தொழிலாளிகளைப் பற்றியும் தெரியாமல் உளறுவதில் அசட்டு அதியமானுக்கு நிகர் அவரே!

      • லூசு பய‌ காளமேகம், (என்ன உனக்குதான் பேசத்தெரியுமா மவனே),

        ரயில்வே லாபமாக நடக்குதா ? அடிச்ச கொள்ளை போக கிடைக்கும் இது உமக்கு லாபமாத்தான்
        தெரியும். என்ன ஒரு லாஜிக் அப்பனே !! ரயில்வே ஒரு மோனோபலி. அது ஒரு காரணம்.
        அங்கு நடக்கும் “சுரண்டல்” பற்றி உனக்கு என்ன தெரியும் ? ஊழலின் அளவு ?
        அதையும் மீறி சில ஆண்டுகளாகதான் “லாபம்”

        மாத சம்பளம் வாங்கு அனைவரும் தொழிலாளர் வர்கமா ? மாதம் 10 லச்சம் வாங்கும் நிர்வாகிகள்
        பலர் உண்டு ? கேனையன போல உளர வேண்டாம். இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான்
        அதிகம். குறைந்த சம்பளத்தில், கூலியில் வேலை செய்கின்றனர். அவர்களை தான் குறிப்பிட்டேன்.

        சென்னையில் 70களில், 80களி நடந்தவை பற்றி உனக்கு என்ன வெங்காயமா தெரியும். பெரிசா பேச வந்திட்ட.

        ஒரு லச்சம் வாங்குபவர்கள் நடுத்தர வர்கமா ? அறிவு கொழுந்துயை நீர் !!

        இறுதியாக‌ : give respect and take respect. ok. or i can easily call you a bloddy fool and etc..

    • அ.அதியமானின் அசாத்திய கண்டுபிடிப்பு

      ஒரு இலட்சம் சம்பளம் வாங்குனா வீட்டுல வேல பாக்குத வேலைக்காரவுகளை தப்பா நடத்துவாகளாம். அப்புடினா முதலாளி அதியமான் அந்த மாதிரி வருமானம் வந்தா அல்லாத்தையும் தப்பு தப்பா நடத்துவாராம். பாம்பின் கால் பாம்பறியுமாமே? என்ன மக்கா புரியுதா?

  4. //தொழிற் சங்கங்கள் அமைவதை தடுக்க காரணம் : பழைய வரலாறுதான். தொழிற் சங்கங்களே கூடாது
    என்பது சரியல்லதான். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிற் சங்கங்கள் உருவானால், போக போக‌
    அந்நிறுவனம் அழிவது இயல்பு. ஏனெனில், நேர்மை இல்லா தொழிற் சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் அப்படி. பல பழைய நிறுவனங்கள் சீரழிந்த வரலாறு அப்படி.
    எஸ்.ஆர்.எம்.யூ ப‌ற்றி ஒரு விரிவான‌ ப‌திவு எழுதுங்க‌ள் பார்க்க‌லாம். //

    ஐபிஎம் என்ற மிகப் பெரிய நிறுவனத்தில் அமெரிக்காவில் யூனியன் கட்டப்பட்டுள்ளது. http://www.endicottalliance.org/

    • நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.

      80கள் வரை இந்தியாவில் தொழிலாளர் சங்கங்களின் செயல்பாடுகள் விரோதத்தை மற்றும் உற்பத்தியை அழிக்கும் வகையில் இருந்தன. முக்கியமாக இன்றும் மே.வங்காளத்தில் உண்டு. அவர்ளை “வேலை” வாங்க முடியாது. (அரசு துறையில் இந்த போக்கு மிக மிக அதிகம்). நேரில் அனுபவதிதால் தான் புரியும்.
      உடனே சுரண்டல் என்று கதைக்க வேண்டாம். 14000 போல மாத சம்பளம் வாங்கும் மே.வ அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் வேலை செய்யும் மனோபாவம் பற்றி விசாரித்து பார்க்கவும். அம்மாநிலம்
      உருப்படாது என்று ஒரு கருத்து..

      • //நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.//

        ஒரு சில உதாரணங்களை வைத்து தொழில்சங்கங்கள் நிறுவனங்களை திவாலாக்கும் என்று அதியமான் சொல்கிறார்.

        ஆனால், இன்று
        அமெரிக்க பொருளாதாரம் திவால்க்கு சென்றுள்ளது. ஆட்டோ தொழில், வங்கிகள் என பல நிறுவனங்கள் மண்ணைக் கவ்வியுள்ளன. இதற்கு தொழிற்சங்கங்கள் காரணமல்ல. முதலாளிகள்தான் காரணம். முதலாளித்துவமத்தின் அடிப்படை முரன்பாடுதான் இதற்கு காரணம். ஆனால், அதியமான் இதனை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்.

        பாயாசம்

      • இந்த செய்தியுனுள் அனைவருமே பொருளாதாரம் பற்றிய அடிப்படையை அறியாதவர்கள் போல் தெரிகிறது. பின்னோட்டங்கள் அனைத்தும் பிரச்சனையைப் பற்றி மட்டுமே தர்க்கம் செய்துள்ளனர். மூலகாரணம் பற்றிய கருத்தாக்கத்துடன் ஆழமாக இல்லை. முதலாளிகளின் திவால், ஜெட் ஏர்வேஸ் விமானி தொழிலாளியா போன்ற பிரச்சனைகளை தேவை- அளிப்பு, உழைப்பை விற்று பிழைப்பது, உழைப்பை வாங்குவது, உபரியை உடைமையாக்குவது மற்றும் சேமிப்பது முதலியான பொருளாதாரவிகலிருந்து ஆராயவேண்டும். விரைவில் இதுபற்றிய விதிகளுடன் இவ்விடுக்கையினுள் வருகிறேன்.

  5. மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ?

  6. சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

  7. //மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ?//

    அடுத்து பாலியல் தொழிளாலர்கள் முன்னேற்ற சங்கம் அமைக்க வினவு பாடுபடுவார் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

    • காஷ்மீர், மணிப்பூர், ஈராக் பெண்களை வல்லுறவு கொள்ள வெறியாய் அலையும் மதி இந்தியா பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிரோத் குப்பைகளை அப்புறப்படுத்தும் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வார் என கேள்வி!

  8. ஜெட் ஏர்வேஸ் கட்டுரை குறித்து மேலதிக தகவல்.

    93ஆம் ஆண்டு அரபு நாடுகளின் விமானங்களுக்கு டிக்கெட் விற்கும் ஏஜென்சி நடத்தி வந்த நரேஷ் கோயல் ஜெட் ஏர்வைஸை துவக்கினார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட ஈஸ்ட் வெஸ்ட் விமான நிறுவனம் மாஃபியாக்கள் தொடர்பால் மூடப்பட பின்பு ஆரம்பிக்கப்பட்ட சகாராவை கோயல் வாங்கிக் கொண்டு பல விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து மற்ற போட்டியாளர்களை சரிக்கட்ட கட்டணத்தை குறைத்துக் கொண்டு தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுக்க நினைத்தபோது பொதுவான பொருளாதார மந்தத்தால் கம்பெனி தள்ளாட ஆரம்பித்த்து. உடனே 1900 ஊழியர்களை வேலைநீக்கம் செய்தார். பின்னர் அதற்கெதிராக பொதுக்கருத்து உருவானதால் மீண்டும் சேர்த்துக் கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 2000ம் பேரை வெளியேற்றினார். இதனால் தம்மையும் வெளியேற்றக்கூடும் என்று அஞ்சியே பைலட்டுகள் சங்கம் ஆரம்பித்தனர். ஏகபோகமாக மாற நினைத்த கோயலின் பேராசையால் தற்போது ஜெட்ஏர்வேஸ் நட்டத்தில் நடக்கிறது. அகலக் கால் வைத்த இந்த முதலாளிக்காக பலர் வேலையிழந்த்துதான் மிச்சம்.

    • certain wrong concepts here : Goyal did not try to create monoploy. he successfully built up a new company and reduced ticket prices and increased efficiency. Until Jet came, IA and AI were the sole monoploy carriers within India and the prices and efficiceny were terrible. Suppose if free competition was NOT allowed in airlines, and things were the same as the 80s and before ? would there be cheap airlines and more efficency ? under cutting ticket prices is very common in this highly competitive sector all overt the world. hence chronic bankrupttcies and mergers, etc. We are new to all this. and will soon get used to this. If new airlines under cut and price themselves below cost of ops, then surely they will go bankrupt. no big deal and soon there will be balancing between costs and prices. Only the govt and corrupt politicians should be made to stand aside with stictly no intevention of help to the airlines. Let the cheapest and best comapanies win in the long run. that is the basis for free enterprise capitalism. the situation is very similar in Lorry market. constant bankruptcies and sell outs and price wars , etc. No one notices, because that is an old industry while new private airlines is new to Indians. and all this talk about monopoly is nonsense. and the piolts who got these jobs (and have signed the contracts with harsh terms and conditions) should be ready to loose them if the airlines loose money. similar job losses occur routinely in all sectors of economy. while new jobs are created parallely. and during boom times, there is acute shortage of experienced pilots, etc. it is always a balancing act and time will set all this right..

      • தொழிலாளிகலெல்லாம் ரவுடித்தனம்பன்றதும் ஒழுங்கா வேலை செய்யாம நட்டத்தை ஏற்படுத்துறதுமா இருக்காங்க. அப்படியிருந்தும் இந்த முட்டாள் முதலாளிங்க தொழிற்சாலைகளை தொடங்கி ஏன் நட்டப்படுறாங்கன்னு புரியலயே. மேற்குலக நாடுகள் அமெர்க்கா தொழிலாளிகலெல்லாம் பரவாயில்லாமல் இருக்கும்போது இந்த முட்டாள்கள் இந்தியாவுக்கு வந்து தொழில் தொடங்க அரசாங்கத்திடம் தெறந்துவுடு எங்களுக்குன்னு அழிசாட்டியம் பன்றது அடி முட்டாள் தனம் இல்லையா? இந்த முதலாளிகள நெனச்சா பாவமா இருக்கு அதியமான் அண்ணே. அறிவுகெட்டத்தனமா தொழிலாளிகள நம்பி நட்டப்படுகிறார்கள். சும்மா பணத்தை வச்சிக்கிட்டு கால்மேலே கால்போட்டுக் கொண்டு ராசாவாட்டம் உட்காந்து திங்காம. அதியமான் அண்ணே இனிமே யாராவது வந்தா எல்லா நடப்புகளையும் சொல்லி புத்தி சொல்லி காப்பாத்துங்கண்ணே. ஆங்கிலத்திலெல்லாம் பிச்சு உதறிங்க அண்ணே! அதனால எவ்வளவு அறிவுள்ளவர் நீங்கன்னு புரிஞ்சிகிட்டேன் அண்ணே! நானும் எல்லா “சுட்டி” யிலேயும் போயி உங்க அறுவுக்கூர்மைய விளம்பரப்படுத்துறே அண்ணே!

        (இது ஒரு எளிய சூத்தரம். விவரங்கள் விரைவில் எமது http://www.paraiyoasai.wordpress.com Blog- ல் வரவுள்ளது)

  9. ஜெட் ஏர்வேய்ஸ் விமானிகள் போராட்டம் பாராட்டுதலுக்குரியது, அதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டுமே தவிர சாக்கடையில் கல்லை விட்டெறிந்தது போல் வார்த்தை நாற்றம் கூடாது, மாத சம்பளம் பெறுபவர்கள் அனைவரையும் காரைக்குடி சினா தானாவும், தற்போதைய பிரணாப் முகர்ஜியும் வருமானவரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் தகர்த்து வைத்துள்ளனர், ரயில்வேயில் படிப்படியாக தனியார் மயம் வந்து கொண்டிருக்கிறது, தொழிற்சங்கங்கள் ஜாதி, தனி மனித விளம்பரங்களினால் பிளவு பட்டு பட்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் பல தொழிற்சங்க அமைப்புக்கள் முறை சாரா தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை தங்களது போராட்டத்தின் போது வலியுறுத்துகின்றன. தொழிற்சங்கங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற உலகமயமாக்கல் நடவடிக்கையில் ஒன்று சேர்ந்து நியாயமான போராடும் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்களே.

  10. //பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிரோத் குப்பைகளை அப்புறப்படுத்தும் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வார் என கேள்வி!//

    நான் பேசியது பெண் பாலியல் தொழிளாலர்களை பற்றி , நிரோத் ஆண்கள்தான் உபயோகபடுத்துவார்கள் என நினைக்கிறேன் ,

    ஏண்ணே , சீனா ஏதும் பணம் தருவதில்லையா ?

    தொழிலை சேஞ்சு பண்ணிட்டீங்களா ? புரச்சி காண்டம் அள்ளும் காண்ராக்டை எனக்கே தாங்கண்ணே பிலீஸ் ..

    சும்மாவா , புரச்சி தொழிளாளிகள் உபயோகபடுத்தியதாச்சே ?

  11. வினவு தோழரே. அதியமான் சொல்வதில் பாய்ண்ட் இல்லையா என்ன ? லட்சக்கணக்கக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, விமானம் கிளம்பியவுடன் ஆட்டோ பைலட் போட்டுவிட்டு சரக்கு சாப்பிட்டுக்கொண்டு, கிளு கிளுப்பும் கொஞ்சலும் என்று ஜாலியாக பணியாற்றும் விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ? எந்த விமானியாவது ஒரு சொட்டு வியர்வை சிந்தியதாக சொல்லமுடியுமா ? உடனே நீயும் ஏசியில் இருக்கிறாய், ஐடி துறையில் இருக்கிறாய் என்று என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம். தனியார் விமானத்துறையில் சரக்குகளை கையாள்பவர்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ சங்கம் அமைந்து அதனை வினவு வெற்றியாக எழுதியிருந்தால் குறைந்தபட்சம் புரச்சியோ புளித்த ஏப்பமோ வரும் என்று நம்பியிருந்திருக்கலாம். கருத்து சொல்ல வருபவர்களை குதறுவதை நிறுத்தாவிட்டால் மெய்யாலுமே புரச்சி வரும் நாளைக்கு கடைப்பக்கம் யாரும் வராமல்போய்விடப்போகிறார்கள்…

    • நன்பர் அதியமான் / செந்தழல் ரவி

      //விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ?//

      மூலதனத்தை அண்டிப் பிழைப்பதால் ( இவர்கள் மூலதனத்தின் சொந்தக்காரர்கள் இல்லை) தொழிலாளர்கள் தான். ஆனால் ஒரு வர்க்கம் என்று பார்த்தால் ( ஓப்பீட்டளவில் தொழிலாளி வர்க்கத்தை விட அதிக சமூக அந்தஸ்த்து கொண்டவர்கள்) குட்டி முதலாளி வர்க்கமாகத்தன் வகைப்படுத்த முடியும்.

      இவர்கள் ஊசலாட்டம் மிக்கவர்கள். முதலாளி வர்க்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே முனைவார்கள் – ஆனால் முதலாளி வர்க்கம் எப்போதும் குட்டிமுதலாளி வர்க்கத்தை கீழ் நோக்கியே தள்ளும் ( இந்த சம்பவங்களிலும் கோயல் விமானிகளை தீவிரவாதிகள் என்று தூற்றியதை கவனியுங்கள்).. இவர்களும் தாங்கள் பாதிக்கப்படும் நேரத்தில் தமது சொந்த உரிமைகளுக்காக மட்டும் போராடிவிட்டு மீண்டும் முதலாளியோடு சமரசமாகும் வழியைத்தான் பார்ப்பார்கள் ( அதியமான் – hold your questions) – அதாவது தமக்காக போராடிய இவர்கள் வேலை இழந்த க்ரவுண்ட் ஸ்டாஃபுகளைக் கண்டுகொள்ளவில்லை.. அப்படிச் செய்யக்கூடியவர்களும் இல்லை..

      இதையெல்லாம் மீறி இந்த போராட்டம் சொல்லும் செய்தி ஒன்றுள்ளது..

      அந்த செய்தி ஐ.டி துறையினருக்கான பாடம்! ஒன்றுபட்ட போராட்டத்தின் பலத்தை ( ஒரு மாஃபியாவையே மண்டியிட வைத்த கூட்டு பலம்) ஐ.டி துறை அல்ப்பைகளுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

      • ///அந்த செய்தி ஐ.டி துறையினருக்கான பாடம்! ஒன்றுபட்ட போராட்டத்தின் பலத்தை ( ஒரு மாஃபியாவையே மண்டியிட வைத்த கூட்டு பலம்) ஐ.டி துறை அல்ப்பைகளுக்கு சொல்லித்தந்திருக்கிறது./// :))))))))))))) அய்.டி துறை “தொழிலாளர்கள்” மற்றும் அத்துறை எதோ உருப்படியா இருக்கறது பிடிக்கலையா ? சங்கம் உருவான நூற்பாலை துறையில் கடந்த கால வரலாறு எப்படி ?

        அய்.டி “தொழிலாளர்கள்” கண்டிப்பாக உங்க அரிய ஆலோசனைகளை கேட்க்க மாட்டாக என்பது திண்ணம். தேவையே இல்லை. சரி, இருக்கட்டும். இன்று, நேர்மையான, வெளிப்படையான ஒரு தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் சங்கத்தை காட்டுங்க பார்க்கலாம். உரிமைக்காக போராடுவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உரிமைளுக்காக‌ ‘மட்டும்’ போராடுவார்கள், கடமையை ஒழுங்காக செய்ய வேண்டியதன் தார்மீக அவசியத்தை பற்றி யாரும் பேசுவதில்லை ! நேர்மை இல்லாமல் எந்த புரட்சியையும் யாரும் எப்போதும் கொண்டுவர முடியாது. மாஃபியா போன்ற சங்கங்கள் தாம் மிக சகஜம். அரசு துறை பற்றி சொல்லவே வேண்டாம்.

        அமைப்புச்சாரா தொழிலாளர்களை பற்றி இவர்கள் “கவலை” படுவாதாக சொல்வது பொய். வேடதாரிகள் இவர்கள்.

        தோழர் வினவு,

        ஜெட் ஏர்வேய்ஸ் பைலட் கில்ட் “தோழர்களிடம்” உங்க வாழ்த்துக்களை நேரில் தெரிவித்து, உங்க குழுவின் கொள்கை மற்றும் நோக்கங்களை பற்றி அவர்களிடம் விளக்கிப் பாருங்களேன் !! :))) பிறகு புரியும் : யார் உங்க “தோழர்கள்” என்று ; அவர்கள் உங்களை “எதிரிகளாகத்தான்” பாவிப்பார்கள். அருகே விட மாட்டார்கள்.
        வ‌ழ‌க்க‌ம் போல‌ நீங்க‌ தேர்ந்தெடுக்கும் “ந‌ண்ப‌ர்க‌ள்” உண்மையில் ந‌ண்ப‌ர்க‌ள் அல்ல‌. வெள்ளைய‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு “தோழ‌ர்” ; யான் எதிரி !! :)))

    • //புரச்சி வரும் நாளைக்கு//அழகான ஜீவனுள்ள ஆற்றை, சாக்கடைகள் பல காலம் ஆக்கிரமித்திருக்கும். சாக்கடை எவ்வளவு அழகு என சொல்லிக்கொள்கிற ஜென்மங்களும் உண்டு. மழை பொழிந்து, வெள்ளம் வரும் பொழுது, சாக்கடையால் எதிர்த்து நிற்க முடியாது. அது போல தான் புரட்சி.

      ‘எதுக்கு ஜீவனுள்ள நதி?’ என கவித்துவமாக கருத்து சொல்லிக்கொண்டு… நேரடியாவே சொல்லலாம்.

      இன்றைக்கு புரச்சி என கேலி பேசுவர்களை அல்லது எதிர்புரட்சி செய்பவர்களை கட்சி தான் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. புரட்சியை இறுகப்பற்றும் பொதுமக்கள், போகிற் போக்கில் இந்த நபர்களை மண்டையில் தட்டி உட்கார வைத்துவிடும்.

      இப்பொழுது முதலாளித்துவம் பக்கம் இருக்கிற இவர்கள், அன்றைக்கு ஜெயித்த புரட்சியின் பக்கம் சத்தமில்லாமல், வாலை சுருட்டி கொண்டு வந்துவிடுவார்கள்.

      அதுவரை இவர்களுக்கும் சேர்த்து நாம் தான் போராட வேண்டியிருக்கும்.

    • //என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம்//
      அடங்கொன்னியா… காளமேகம் இன்னொரு புரளி மனோகரா?

      • நீ ஜால்ரா வாசிக்கிரியாக்கும்… நோண்டு மாமா ஜமா சேக்க புரளிய பெத்தார் இங்கேதான் அள்ளக்கைகளுக்கும், அம்பிகளுக்கும் டின்னுகட்ட நாங்க இருக்கோமே அப்புறம் எதுக்கு நீயா வந்து கத சொல்லுத

    • எய்யா செந்தழல் ரவி நான் ஆரைப்போய் பிராண்டுதேனு புகார் சொல்லுதீக. கேள்விக்கு பதில் சொல்லுதது தப்புன்னு சொல்லுதீகளா? சரக்கடிச்சுட்டு சைக்கிளே ஒட்ட முடியாது இதுல ஏரோப்பேளேனெல்லாம் ரொம்ப அதிகமுனு தோணணும்லா? தொழிலாளின்னா சரக்கடிக்கமாட்டான்னு யாருவே உமக்கு சொல்லிக் கொடுத்தா? இங்க டாஸ்மார்க் வந்து பாரும். அல்லா தொழிலாளியும் குவார்ட்டரை ராவா முடிச்சுட்டுதான் வே டூட்டிக்கே போறாக. புரட்சின்னா முதலாளிக்குத்தான் வயிறு கலங்கும், உமக்கும் கலங்குதுன்னா எதாவது டாக்டரை பார்த்து உடம்ப பாத்துக்கணுமுலா. பிளேனை ஓட்டுறவன் அவன் பாட்டுக்கு சங்கத்தை கட்டி போராடுதான். அதுல உமக்கு ஏன்வே வயித்தெரிச்சல்? உலகத்துல அல்லா எடமும் சுத்திருக்கீக. ஆனா ராசா அதுக்கேத்த மாரி அறிவும் வளரணும்லா? இம்சையில தொப்புள் படத்தைப்போட்டு சமூக சேவை செய்தீக. இடையில தோழர் வினவுன்னு கூப்புடுதீக. ஒண்ணுமே புரியலை மக்கா

  12. பொருளாதார மந்தத்தினால், உலகம் முழுவதும் முதலாளித்துவத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதை அப்படியே தொழிலாளர்கள் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலை இழப்பு என நாளும் தொழிலாளர் வர்க்கம் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொழிற்சங்கம் கட்டுவது என்பதே சிரமமாகி கொண்டிருக்கும்
    இவ்வேளையில்.. இந்த போராட்டம் நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. ஒற்றுமையாய் நின்று போராடி ஜெயித்ததற்காக வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.நடப்பு நிலைமைகளில், சமுதாய மாற்றம் அல்லது அனைத்துயும் புரட்டி போடும் புரட்சியை, மாத சம்பளத்த்ற்கு வேலை செய்யும்
    செந்தழல் ரவி “புரச்சி” என கேலி எள்ளல் பேசுவது.. அவர் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது.

  13. //சமுதாய மாற்றம் அல்லது அனைத்துயும் புரட்டி போடும் புரட்சியை, //

    புரட்டி புரட்டி 100 வருசம் ரசியாவிலும் , சீனாவிலும் கிழிச்சாச்சு , இனி இங்கதான் பாக்கி

    /மாத சம்பளத்த்ற்கு வேலை செய்யும்//

    உங்களுக்கெல்லாம் சீனாவிருந்து பல்க் பேமெண்ட் போல , மாசாமாசம் வாங்கறதில்லையோ

    • //புரட்டி புரட்டி 100 வருசம் ரசியாவிலும் , சீனாவிலும் கிழிச்சாச்சு , இனி இங்கதான் பாக்கி// ஆமாம் மதி இண்டியா! நிறைய தொழிலாளி வர்க்கம் கிழிச்சுச்சு! அந்த நாட்டு தொழிலாளி வ்ர்க்கம் ஆட்சிக்கு வந்ததும், வாலைச் சுருட்டி ஒரு மூலையில் போய் உட்கார்ந்துச்சு!

      //
      உங்களுக்கெல்லாம் சீனாவிருந்து பல்க் பேமெண்ட் போல , மாசாமாசம் வாங்கறதில்லையோ

      // அவதூறு பிரச்சாரம் பண்ற உனக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உனக்கு பணம் வருதோ!
      ஏன்யா உன்ன மாதிரியே எல்லாத்தையும் நினைக்கிற!
      விவாதம் செய்யும் பொழுது, நேரில் பேசும் பொழுது, என்ன மரியாதையோடு பேசுவோமோ! அந்த மரியாதையோடு தான் விவாதிக்க வேண்டும் என வழிகாட்டியிருக்கிறார்! அதனால் பொறுமையாக பேசுகிறேன்!

      இல்லையென்றால்… என்ன கிழிச்சுச்சு! என்று கேட்ட வாயை கிழித்திருப்பேன்.

  14. //இன்றைக்கு புரச்சி என கேலி பேசுவர்களை அல்லது எதிர்புரட்சி செய்பவர்களை கட்சி தான் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.//

    அய்யோ , கட்சி தண்டிக்கறதே தாங்க முடியல ,

    ரஷ்யாவில ஸ்டாலின் தண்டிச்ச 2 கோடி சொச்சமும் , சீனாவில மாவோ கலாச்சார புரச்சியுலயும் , தியாமன் சதுக்கத்துலயும் தண்டிச்ச தண்டிப்பும் போதாதா ?

    இல்ல , போல்பர்ட் வழியில கம்யூனிச தண்டிப்பு போதாதா ?

    அய்யோ அம்மா கொல்றாங்கப்பா

  15. //விவாதம் செய்யும் பொழுது, நேரில் பேசும் பொழுது, என்ன மரியாதையோடு பேசுவோமோ! அந்த மரியாதையோடு தான் விவாதிக்க வேண்டும் என வழிகாட்டியிருக்கிறார்! அதனால் பொறுமையாக பேசுகிறேன்!

    இல்லையென்றால்… என்ன கிழிச்சுச்சு! என்று கேட்ட வாயை கிழித்திருப்பேன்./

    இத பார்றா , யாருங்க உங்களுக்கு கனவுல வந்து அப்படி ஒரு அறிவுரை சொன்னது , மார்க்ஸா , மாவோவா ?

    கொஞ்சம் அசுரன் , வினவு வகையறா பதிவுகளை திருப்பி பாருங்க , எதிர் கருத்துகளை நீங்க மரியாதையா எதிர் கொண்ட லச்சணத்தை ,

    வந்துட்டாங்கையா செத்து சுண்ணாம்பா போன கம்யூனிச சொம்புக்கு கலர் அடிச்சுட்டு.

    • யோவ் மதி, சொந்த பேத்தி கூடவே அம்மணமா படுத்த காந்தி-ய-வாதி வழிவந்த நீ கையில எடுத்துகிட்டு கருத்து சொல்ல வந்ததுல ஆச்சரியமில்ல. உன்ன மாதிரி ஆளுங்களலெல்லாம் எவன் ஆட்சிக்கு வந்தாலும் நாக்கால பின்வாய கழுவ ரெடிய வருவீங்கன்னு பிரிட்டிஷ் வைசுராயே கனவு நனவு ஆதாரம் அம்மிக்கல்லோட வந்து சொல்லியாச்சு… நீ இப்பவே என்னா வேணுமின்னாலும் ஆடிக்கோ.. புரட்சிக்கு அப்புறம் உனக்கு குலாக்குதான்டி

  16. பாயசம்,

    தொழிற்சங்களின் தரம் பற்றி சொன்னேன். இந்தியாவை போல மேற்க்கில், இத்தனை மோசம் இல்லை.
    இந்திய தொழிற்சங்கங்கள் ஊழல் வசமாகி மற்றும் மாஃபியாவை போல ஆகி பல காலம் ஆகிவிட்டது. அதை தான் சொன்னேன். அனுபவஸ்தர்களிடம் பேசிப் பாருங்க. அமெரிக்காவின் ஜெனர்ல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதற்க்கு அதன் தொழிற் சங்கமும் ஒரு முக்கிய காரணம் தான். அங்கு வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்து பாரும். ஆனால் டோயோட்டிவில் அப்படி இல்லை நிலைமை. ஒப்பிடத்தான் சொன்னேன்.

    பல‌ நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திவாலானதற்க்கான காரணிகளை விளக்கி
    எனது ஆங்கில சுட்டியை அளித்திருந்தேன். பார்க்க.

    உண்மையில் முதலாளித்துவ பொருளாதாரம் மொத்தமாக திவாலாகியிருந்தால், இந்த உரையாடல் சாத்தியமில்லை. :))) மார்க்ஸ் சொன்னபடி பெரும் திவால் உருவாகவில்லை. அவர் சொன்னபடி “இறுதி” மந்தம் வரும் என்று நம்பிக்கொண்டிருங்கள் !! ஒவ்வொறு மந்தமும், முந்தய மந்தத்தை விட கொடுமையாக இருக்கும், பெரும் முதலாளிகள் ஒரு சிலர் மட்டும் மேலும் பெரிதாவர்கள், சிறிய தொழில்கள் படிப்படியாக அழியும் : இவை மார்க்ஸின் ஆருடம். ஆனால் இதுவரை அதற்க்கு நேர் மாறாகத்தான் நடக்கிறது. இந்த மந்தமும், படிப்படியாக முடிந்து கொண்டிருக்கிறது. பாடங்கள் கற்க்கப்படும். சிக்காலான காரணிகள் மற்றும் விளைவுகள் பற்றி ஆங்கில சுட்டி பார்க்கவும். பொருளாதார பாடங்கள் அவை. விவாதம் இன்னும் தொடர்கிறது. கியின்ஸ் வாதிகளுக்கும், மானிடரிஸ்டுகளுக்கும் இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மார்க்ஸிச பெருளாதார நிபுணர்களை இன்னும் யாரும் சீரியசா எடுத்துக்கொள்ளவில்லை !!

    • //அவர் சொன்னபடி “இறுதி” மந்தம் வரும் என்று நம்பிக்கொண்டிருங்கள் !! //

      இறுதி மந்தமா? எங்கே சொன்னார்? எப்போ சொன்னார்?

  17. Payasam,

    http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

    and this is a recent mail :

    /////“Neoliberalism has reduced space for mass protests”
    http://www.hindu.com/2009/09/13/stories/2009091359780800.htm

    Dear Friends,

    It is nice to see the above news report. I was born in 1968 and have only vague impressions
    and images about the heydays of “socialism” in India which persihed in the 80s.

    A whole lot of words and phrases have disappeared from the vocabalry in public domain :

    socialsim, democratic socialism, concentration of economic power, monopoly, IMF dictated
    policies, etc. Thank God that these words are gone for good now !!

    Esp IMF : now that India has got rid of IMF for good, no need to castigate IMF for anything !!

    I can only imagine the impressions and ideas sowed deep into the public mindset thru
    mindless rabble rousers in many poliitcal parties which used the above words freely..


    Regards / அன்புடன்

    K.R.Athiyaman / K.R.அதியமான்

  18. Mr. Athiyaman,

    And the Point here is:

    ////நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.//

    ஒரு சில உதாரணங்களை வைத்து தொழில்சங்கங்கள் நிறுவனங்களை திவாலாக்கும் என்று அதியமான் சொல்கிறார்.

    ஆனால், இன்று
    அமெரிக்க பொருளாதாரம் திவால்க்கு சென்றுள்ளது. ஆட்டோ தொழில், வங்கிகள் என பல நிறுவனங்கள் மண்ணைக் கவ்வியுள்ளன. இதற்கு தொழிற்சங்கங்கள் காரணமல்ல. முதலாளிகள்தான் காரணம். முதலாளித்துவமத்தின் அடிப்படை முரன்பாடுதான் இதற்கு காரணம். ஆனால், அதியமான் இதனை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்.

    பாயாசம்//

    when you could comfortably conclude that Union is ruinous to industry, with few exceptional examples.

    Why couldn’t we conclude in the same way that Capitalism is a failure with all those big realities?

    I am not interested in arguing on other things.. they are open to your imagination… 🙂

  19. //வினவு தோழரே. அதியமான் சொல்வதில் பாய்ண்ட் இல்லையா என்ன ? லட்சக்கணக்கக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, விமானம் கிளம்பியவுடன் ஆட்டோ பைலட் போட்டுவிட்டு சரக்கு சாப்பிட்டுக்கொண்டு, கிளு கிளுப்பும் கொஞ்சலும் என்று ஜாலியாக பணியாற்றும் விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ? எந்த விமானியாவது ஒரு சொட்டு வியர்வை சிந்தியதாக சொல்லமுடியுமா ? உடனே நீயும் ஏசியில் இருக்கிறாய், ஐடி துறையில் இருக்கிறாய் என்று என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம். தனியார் விமானத்துறையில் சரக்குகளை கையாள்பவர்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ சங்கம் அமைந்து அதனை வினவு வெற்றியாக எழுதியிருந்தால் குறைந்தபட்சம் புரச்சியோ புளித்த ஏப்பமோ வரும் என்று நம்பியிருந்திருக்கலாம். கருத்து சொல்ல வருபவர்களை குதறுவதை நிறுத்தாவிட்டால் மெய்யாலுமே புரச்சி வரும் நாளைக்கு கடைப்பக்கம் யாரும் வராமல்போய்விடப்போகிறார்கள்…//

    Repeatttttttttttttttttttttttttttttttttuuuuuuuuuuuu…… Super Maamu……

  20. இந்த அதியமானுக்கு தொழிலாளி யாருன்னு தெரியல முதலாளி யாருன்னு தெரியல, முதலாளித்துவமும் தெரியல, சோசலிசமும் தெரியல…. ஆனா எல்லாம் தெரிஞ்சமாதிரி ஒரே பினாத்தல். என்ன செய்ய சகவாசம் அப்படி, அரலூசு ஜெயமோகனுக்கு தெனோம் நாலு கடிதாசி எழுதினா இப்படித்தான், இன்னும் கொஞ்ச நாளுல அதியமான் பாயைப்பிரண்ட போவது உறுதி…..ஒரு 25 வருச பழைய அறிவ வச்சுகிட்டு எப்படித்தான் சமாளிக்கிறாரோ பாவம். இவர விட பாவம் இவரு கம்பேனி தொழிலாளரும் இவரு சம்சாரம் மற்றும் பசங்களும்….. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு எதையும் தாங்கும் ஆன்ம பலத்தை அளுர்வாராக், ஆமென்.
    பி.கு – டேய் முண்டம் நேர்ல வாடா போன்ற அதியமானிசத்துக்காக காத்திருக்கிறேன்

  21. இங்கே செந்தழல் இரவி என்பவர் பின்னூட்டவாதிகளை திட்டக்கூடாது என ஆலோசனை வழங்குகிறார். மொக்கை பதிவிலேயே குழாயடி சன்டை நடக்கும் நரகலான்களுக்கு மத்தியில், ஆபாச பின்னூட்ட புகழ் ஆனானி குழுமத்தின் செயல்வீரர்களெல்லாம் புரட்சியின் மீது கரிசனம் கொண்டு வினவுக்கு அறிவுரை வழங்குவது நல்லதுதான்…. இன்று தமிழ் வலையுலகிலேயே போண்டா மாமாவை விட அதிகம் திட்டுவாங்கும் பதிவர் வினவுதான், வினவை மற்றவர்கள் திட்டும் போது முக்காடு போட்டுக்கொண்டு போனவர்கள் அதியமானுக்கு வக்காலத்து வாங்குவதுதான் செம காமெடி.. சாப்பிட்டு தூங்கி கழிவது போன்ற சமூக அக்கறை கொண்ட செயல்களின் மூலம் புரட்சி செய்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரும்போது குலாக்கு கதவு திறந்தே இருக்கும் என்பதை பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்

  22. MamboNo8 என்ற போலி அய்டியில் இருந்து கேவலமாக எழுதும் நபர் யார், சென்னையில் எங்கு இருக்குறாய் என்று எமக்கு தெரியும் தான். சரக்கே இல்லாமல், வெறும் ஆபாசம் “மட்டும்” எழுதும் உம்மை நேரில் வரச் சொல்லி என்ன பிரயோசனம். இங்கு என்னுடன் உரையாட பல தோழர்கள் உள்ளனர். துஸ்டனை கண்டால் தூர‌
    விலகு என்ற பழமொழியும் அறிவேன். உம்மை போன்ற போலிகளால் தாம் தோழர்களுக்கும் அவப்பெயர் என்பதை உணரும் பக்குவம் உமக்கு என்றும் வராது.

    • //சரக்கே இல்லாமல், வெறும் ஆபாசம் “மட்டும்” எழுதும் //
      அபாண்டம், அவதூறு, அயோக்கியத்தனம்

  23. ஏன் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை வினவு அவர்களே ? வியர்வை சிந்தாதவன் எப்படி தொழிலாளியாவான் ? அதற்கு மார்க்ஸியத்தில் இருந்து பதில் அளித்துள்ள தோழர், ஐடி துறை நன்பர்களுக்கு எப்பத்தான் ரோஷம் வருமோ என்று கவலைப்படுகிறார். ஒருவர் ஒரு படி மேலே போய் மாச சம்பளம் வாங்குபவன் என்கிறார். விமானிகள் ஒரு குட்டி முதலாளிகள் என்று ஒருவர் அரற்றுகிறார். என்ன அய்யா நடக்குது ? ஜமதக்னியும் தியாகுவும் அச்சுக்கோர்ப்பவரும் ஆகிய மூவரும் மட்டுமே முழுமையாக படித்த டாஸ் காப்பிட்டல்ஸில் இருந்து எந்த உதாரணமும் காட்டமுடியலையா ?

    • செந்தழல் ரவி

      வியர்வை சிந்துபவன் மட்டும்தான் தொழிலாளி என்பதும் உடலுழைப்பு மட்டும் செய்பவன்தான் தொழிலாளி என்பது மிகவும் பாமரத்தனமான பார்வை. நோக்கியா ஆலையிலும், டைட்டான் கடிகாரத் தொழிற்சாலையிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் நுணுக்கமாக வேலை செய்யும் தொழிலாளிகள் எவரும் வியர்வை சிந்துவதில்லை. மூளை உழைப்பும் கூட தொழிலாளர்களிடம் உண்டு. மார்க்சிய மொழியில் சொன்னால் தனது உழைப்பத்தவிர இழப்பதற்கு ஏதுமற்றவன்தான் தொழிலாளி. இன்றைக்கும் தன் உழைப்பு வேலையை வைத்தே தொழிலாளிகள் தங்களது வாழ்வை தேடிக் கொள்கிறார்கள். அதில் வீடு, வாகனம், முதலியவை கூட இருக்கலாம். ஆனால் இவையனைத்தையும் தனது உழைப்பை விற்றுத்தான் அவர் பெறுகிறார். இன்றைக்கு தொழிலாளர்களிடமும் வர்க்க வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளியும், டி.வி.எஸ்ஸில் வேலை செய்யும் தொழிலாளியும் பாரிய அளவு வேறுபடுகிறார்கள். தொழிலாளிகளிடையே ஆலைத்தொழிலாளிகள், நிரந்தரத்தொழிலாளர்கள், ஒப்பந்த்த தொழிலாளர்கள், நடுத்தரவர்க்க தொழிலாளர்கள், மேட்டுக்குடி தொழிலாளர்கள் என்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இவர்களை இணைக்கும் புள்ளி அனைவரும் தமது உழைப்பு விற்றே வாழ முடியும் என்பதுதான். இந்தப்பிரிவுகளில் கீழ்நிலைகளில் இருக்கும் தொழிலாளிகளிடம் இருக்கும் வர்க்க உணர்வு கோபம் மேல்மட்ட பிரிவினரிடம் இல்லை என்பது உண்மைதான்.

      ஆனால் உலகமயத்தின் தயவில் இவர்கள் அனைவருக்கும் வேலை பாதுகாப்பு குறைந்து வருகிறது. இந்த ஆண்டு பிரான்சின் நடந்த இரண்டு பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்களில் மொத்தம் 20 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் விமானிகளும், நகரசுத்தி வேலை செய்யும் தொழிலாளிகளும், மாணவர்களும், இளைஞர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு தமது எதிர்ப்பை காட்டினர். அவர்களது கோரிக்கை நினைத்த மாத்திரத்தில் முதலாளி தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளியை வேலை நீக்கம் செய்யக் கூடாது, பணிப்பாதுகாப்பு, தனியார்மய எதிர்ப்பு, திவாலாகும் முதலாளிகளுக்கு அரசு பணம் கொடுப்பதற்கு எதிர்ப்பு, முதலியனவாகும். மேற்கத்திய நாடுகளின் தொழிலாளிகள் மிகுந்த ஊதியத்தில் ஊழல்படுத்தப்பட்ட நேற்றைய நிலை இன்று இல்லை. அவர்களும் இன்று தெருவிற்கு வந்து போராடத் துவங்கியிருக்கிறார்கள்.

      விமானிகளது வேலையை மிகவும் வறட்டுத்தனமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். மற்ற பயணங்களை விட ஆபத்து அதிகம் உள்ள பயணம் என்பதால் விமானிகள் இருமடங்கு விழிப்புடன் தமது வேலையை செய்யவேண்டும். மற்ற வேலைபோல மனதை அலைபாயவிட்டு வேலை செய்ய முடியாது. இந்நிலையில் ஜெட் ஏர்வேசின் முதலாளி கண்டபடி தனது ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவரும் வேளையியல் இந்த விமானிகள் அதை தடுக்கும் பொருட்டு சங்கம் கட்டியதும், அதற்காக நான்கு பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதும், அதை எதிர்த்து அவர்கள் போராடியதும் வரவேற்க வேண்டிய விசயங்கள். இப்படி விமானி தொட்டு, ஆலைத்தொழிலாளி வரை ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் தாராளமயத்தின் கொடுமைகளை தடுத்து நிறுத்தலாம். விமானிகள் மேட்டுக்குடி தொழிலாளிகள்தான். ஆனால் அவர்களும் வேலை செய்தால்தான் விமானி. தங்களது சொந்த அனுபவத்தில் சங்கம் தேவை என்று அவர்கள் உணர்ந்த்தும், போராடியதும் யாரும் சொல்லிக் கொடுத்து வரவில்லை. இப்படித்தான் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளைப் பற்றி தனது சொந்த அனுபவத்தில் உணர்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்குவதில்லை. முதலாளித்துவ வர்க்கம் தனது நடவடிக்கையின் மூலமே தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை மறைமுகமாக கற்றுக்கொடுக்கிறது.

      ஒரு மேட்டுக்குடி தொழிலாளிகளே இப்படி சங்கம் அமைத்து போராடும்போது இன்னும் வர்க்க உணர்வு அதிகம் உள்ள ஆலைத்தொழிலாளர்களுக்கு இந்த போராட்டம் நிச்சயம் உற்சாகத்தை கொடுக்கும். இறுதியில் பிரான்சு போல இந்தியாவிலும் எல்லா வகை தொழிலாளிகளும் சேர்ந்து போராடும் காலம் வரும்.

      • விமானிகளை பாட்டாளி வர்க்கம் என்று வகைப்படுத்த முடியுமா? அவர்களுக்கு கிடைக்கும் சமூக அந்தஸ்த்தையும் அவர்கள் உழைப்பின் தன்மையையும் கணக்கில் கொண்டால் அவ்வாறு வகைப்படுத்த முடியாதல்லவா?

        • ஆர்.கே,

          யார் தொழிலாளிகள் என்பதை கூடிய விரைவில் ஒரு தனி பதிவாக வெளியிடுகிறோம். இங்கே சுருக்கமாக சில விளக்கங்கள். நமது மார்க்சிய வரையறை படி உற்பத்தி கருவிகள் அல்லது சாதனங்கள் மீது உரிமையோ உடமையோ இல்லமல் தன் உழைப்பை மட்டும் விற்று வாழ்பவர்களையே பாட்டாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் என்கிறோம். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் மனிதனின் உழைப்பு குறைந்து கொண்டே போவதும் எந்திரங்களின் பணி அதிகரித்து வருவதும் ஒரு உண்மை. இது கஷ்டப்படும் தொழிலாளிக்காக முதலாளி செய்யும் கருணையல்ல. மாறாக குறைந்த செலவில் அதிக இலாபம் பார்ப்பதற்காகவே இந்த எந்திரமயமாக்கம். அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியும், உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியும் மற்றொரு காரணம். ஆரம்பத்தில் நீராவி ரயில் என்ஜினில் கஷ்டப்பட்டது போல இப்போதைய டீசல், புல்லட்டீன் ரயில் ஓட்டுநர்கள் கஷடப்படத் தேவையில்லை. இதனால் இவர்கள் தொழிலாளி வர்க்கம் இல்லை என்றாகி விடுவதில்லை. நவீன விசைத்தறி ஆலையில் எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையே ஒரு தொழிலாளி கூர்மையாக கவனிக்கிறார். ஆனாலும் கைத்தறி தொழிலாளி போல இவரும் தொழிலாளிதான்.

          முன்னர் சொன்ன வரையறைபடி விமானிகள் உற்பத்தி சாதனங்கள் மீது உரிமை கொண்டவர்கள் அல்ல. தமது உழைப்பை விற்றே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களது ஊதியம் அதிகம் என்பதனாலேயே அவர்கள் தொழிலாளிகள் அல்ல என்பதல்ல. ஆனால் இந்தியாவில் கீழ்நிலைத்தொழிலாளியோடு ஒப்பிடும் போது விமானிகள் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம். இருவகை தொழிலாளிகளும் மார்க்சிய வரையறையின்படி ஒரு தன்மையையே அடிப்படையாக கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒரு பெரிய காரில் கூட வரலாம். அவரும் நமது வரையறைபடி தொழிலாளிதான். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் மூலதனமும் உழைப்பும் தெளிவாக பிரிந்து இருப்பதால் அங்கே முதலாளி, தொழிலாளி பிரிவினையும் தெளிவாக இருக்கிறது. நம்மைப்போன்ற முதலாளித்துவம் நிறைவடையாத நாடுகளில் அந்த தெளிவு இருக்காது. எனவேதான் தொழிலாளிகளிடம் கூட பல படிப்பிரிவுகளை காண்கிறோம். இப்போது ஜ.டி துறையில் இருப்பவர்கள் கூட மூளை உழைப்பு தொழிலாளர்கள்தான்.முதலாளித்துவ நெருக்கடி காரணமாக அவர்கள் மீது வேலைச்சுமை அதிகரிப்பதும், சம்பளம் வீழ்ச்சியடைவதும் இப்போது நடக்கிறது. ஆனால் ஐ.டி.துறை ஊழியர்கள் தம்மை தொழிலாளிகள் என்று கருதுவதில்லை. காரல் மார்க்சின் மொழியில் சொன்னால் தொழிலாளிகள் தன்னிலை வர்க்கமாகவும் (அதாவது வர்க்க உணர்வின்றி), தனக்கான வர்க்கமாகவும் ( வர்க்க விழிப்புணர்வு கொண்ட)- class in itself, class for itself- இருக்கிறார்கள். விமானிகளையும், ஐ.டி ஊழியர்களையும் தன்னிலை உணராத வர்க்கமாக இருப்பதாக சொல்லலாம்.

          ஆனாலும் இந்திய தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளின் சம்பளத்தை குறைத்து வரும் வேளையில், பணிபாதுகாப்பு இன்றியும் இருக்கும் சூழ்நிலையில் ஜெட் விமானிகள் சிறிதாவது தங்களை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இந்த வேலைநிறுத்தமும் அவர்கள் அமைத்த சங்கமும் விளக்குகிறது.

      • வினவு – நல்ல விளக்கம்.

        ***
        இறுதியில் பிரான்சு போல இந்தியாவிலும் எல்லா வகை தொழிலாளிகளும் சேர்ந்து போராடும் காலம் வரும். *** பிரான்சில் கடைநிலை தொழிலாளி வேலை இழந்தாலும் அரசாங்கத்திடம் இருந்து வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு வருடத்திற்காவது பணம் கிடைக்கும். இங்கு சாவு தான். ஆதலால் இந்தியாவின் கடைநிலை மக்களின் வாழ்க்கை தரமும் முன்னேறிய பிறகு இவ்வாறான ஸ்டிரைக் வரலாம் :)-

      • http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1330140

        தோழர்களே:

        இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்துகள் அனுப்பவும். இந்த கட்டுரையை தமிழில் வெளியிடவும் ஆர்வம். இதை தமிழில் செய்து உங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும் சரி.

        செந்தில்

    • ரவி,

      உங்களுக்கு நான் கொடுத்த பதிலில் ஏதாவது புரியலையா?

      //டாஸ் காப்பிட்டல்ஸில் இருந்து எந்த உதாரணமும் காட்டமுடியலையா ?//

      தேவையில்லை!

      மார்க்சியம் ஒரு set of formulas and rules இல்லை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மேனுவலைப் புரட்டி Error code உடன் Match பண்ணிக் காட்டினால் தான் நம்புவீர்களா என்ன? இங்கே விமானிகள் தொழிலாளி வர்க்கமா இல்லையா என்பது மைய்யமான பிரச்சினையில்லை; இந்தப் போராட்டம் சொல்லும் சேதி என்ன என்பது தான் பிரச்சினை!

      அதியமான்,

      டாட் காம் பஸ்ட், என்ரான் தொடங்கி சத்யம் தொட்டு இப்போதைய நெருக்கடி வரைக்கும் எல்லாவற்றுக்கும் சங்கமாகத் திரண்டது தான் காரணமா?

      அதியமான், நீங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் கோணம் தவறாக இருக்கிறது. பலவிடங்களில் நடந்த விவாதங்களூடாக உங்கள் தொழில் / ஸ்தாபனம் குறித்து நீங்களே வெளியிட்ட கருத்துக்களைக் கொண்டு… உங்களை ஒரு தேசிய முதலாளி என்ற அளவில் புரிந்து வைத்திருக்கிறேன் (அது தவறாகக் கூட இருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன்) ஒரு தேசிய முதலாளிக்கு தனது மூலதனத்தின் மேல் வரும் தாக்குதல் குறித்து இருக்கும் குறைந்தபட்ச கவலை கூட எங்கும் வெளிப்பட்டதில்லை என்பது எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் தான்.

      உங்கள் விவாதங்கள் எல்லாமே ரெப்படிஷன்கள் தான் – Repeated claims. எதையாவது தவறு என்று நிறுவினால் அதே விஷயத்தை வேறு வார்த்தைகளில் சொல்லும் ஏதாவது சுட்டியுடன் வருவீர்கள்.

      • //டாட் காம் பஸ்ட், என்ரான் தொடங்கி சத்யம் தொட்டு இப்போதைய நெருக்கடி வரைக்கும் எல்லாவற்றுக்கும் சங்கமாகத் திரண்டது தான் காரணமா? // i didn’t generalise like that RK. I was talking about the bankruptices of Standard Motors, Mumbai Mills, etc which closed due to militant labour strikes in the past. it is a long history. and my arguments may look repetitive simply beause the same points and issues are debated here. and it is your opinion that my angle is wrong. and vice versa !! pls read my english posts and other tamil blogs fully for a whole some view.

      • //Standard Motors, //

        ஸ்டாண்டார்ட் மோட்டார்ஸ் திட்டமிட்டு இந்திய தரகு முதலாளிகளால் ஒழிக்கப்பட்டது(AC முத்தையா என்று நினைக்கிறேன்). அங்குள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையும், கார் உற்பத்தியில் நவீன வசதிகளை சொந்தமாக உருவாக்கியதும் வரலாறு. இது டாடா, மாருதி போன்றவற்றுக்கு போட்டியாகிவிடும் என்று திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

      • பாயாசம்,

        ஸ்டான்டர் மோட்டார்ஸ் திவலானதற்க்கு, பல காரணிகள். அவற்றில் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள், வேலை நிறுத்தங்களும் ஒன்று. ஏ.சி.முத்தையா நேர்மையில்லாதவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் கடையசியாகத்தான் நிர்வாக இயக்குனார் ஆனார் என்று நினைக்கிறேன்.
        போட்டிக‌ளை ச‌மாளிக்க‌ தொழிலாள‌ர்க‌ள் ஒத்துழைப்பு இல்லை என்ப‌தும் ஒரு கார‌ணி. நிர்வாக‌
        சீர்கேடும் ஒரு கார‌ணி. ஆனால் மாருதி நிறுவ‌ன‌ம் ஒரு அர‌சு கூட்டு நிறுவ‌ன‌ம். அதை இங்கு
        குறை சொல்ல‌ ஆதார‌ம் இல்லை.

        இன்னும் ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெய‌ர்க‌ள் நியாப‌க‌ம் இல்லை. அம்ப‌த்தூர் தொழில்பேட்டையில் 90க‌ள் வ‌ரை தொட‌ர்ந்து இது போன்ற‌ அம‌ளிதான். ப‌ந்த‌, கேரோ போன்ற‌வை அன்று போல் இன்று இல்லை என்ப‌து ஆறுத‌லான‌ விசிய‌ம். மும்பாய் ந‌க‌ரினில் இருந்த‌ ப‌ற்ப‌ல‌ நூற்பாலைக‌ள் இன்று மூட‌ப்ப‌ட்ட‌த‌ற்க்கு,
        த‌ட்டா ச‌ம‌ந் என்ப‌வ‌ர் த‌லைமையில் 80க‌ளில் ந‌ட‌ந்த‌ ஒரு நெடிய‌ தொழிலார் போராட்ட‌ம் ஒரு முக்கிய‌ கார‌ணி.
        எம‌து சொந்த‌ ஊரான க‌ரூரில் : க‌ரூர் மில்ஸ் ம‌ற்றும் செட்டிநாடு சிமென்ட் போன்ற‌ இரு நிறுவ‌ன‌ங்க‌ள‌யும் அன்று ஒரு வ‌ழி ப‌ண்ணினார்க‌ள். க‌ரூர் மில்லை இன்று இல்லை. முற்றாக‌ அழிந்து விட்ட‌து. எல்.ஜி.பி நிறுவ‌ன‌ம், பிர‌ச்ச‌னைக‌ளை ச‌மாளிக்க‌ முடியாம‌ல் கோவைக்கு சென்று விட்ட‌து. இவ‌ற்றின் மொத்த‌ விளைவு, ப‌ல‌ ஆயிர‌ம் தொழிலாள‌ர்க‌ள் வேலை இழ‌ந்த‌துதான்.

        ஒரு முன்னால் தொழிற்ச‌ங்க‌ த‌லைவ‌ர் என்னிட‌ம் முன்பு கூறிய‌து :

        “..த‌ம்பி, இந்த‌ க‌ம்யூனிஸ்ட் யூனிய‌ன் நிர்வாகிக்கு ஏதாவ‌து ஒரு பெரிய‌ தொழிற்சாலையில் முன் க‌த‌வுக‌ளை விரிய‌ திற‌ந்து இருந்தால், ம‌ன‌ம் ப‌த‌ப‌தைக்கும். அத‌ன் எதிரே உள்ள் டீக்க‌டை பெஞ்சில் அம‌ர்ந்து கொண்டு, இதை எப்ப‌டி மூட‌லாம் என்று ச‌தா “சிந்த‌னை” செய்வார். பிற‌கு ஒரு சிறு பிர‌ச்ச‌னையை பெரிதாக்கி, தொட‌ர் வேலை நிறுத்த‌ம், கேரோ என்று உருவாக்கி, லாக் அவுட் செய்ய‌ வ‌ழி செய்து, அந்த‌ தொழிற்சாலையை இழுத்து மூடி, மெயின் கேட்டை பூட்டி, பெரிய‌ பூட்டாக‌ அதில் மாட்ட‌செய்தால் தான், ம‌ன‌ம் அமைதிய‌டையும் !!” :))

        80க‌ள் வ‌ரை ந‌ட‌ந்த‌தை அறிந்த‌வ‌ர்க‌ளுக்கு நித‌ர்ச‌ன‌ங்க‌ள் புரியும். மே.வ‌ங்க‌ம், கேர‌ள‌த்தில் இன்றும் புதிய‌ முத‌லீடுக‌ள் வ‌ள‌ர‌ இவை த‌டையாக‌வே உள்ள‌ன‌.

  24. //அமெரிக்காவின் ஜெனர்ல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதற்க்கு அதன் தொழிற் சங்கமும் ஒரு முக்கிய காரணம் தான். அங்கு வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்து பாரும். ஆனால் டோயோட்டிவில் அப்படி இல்லை நிலைமை. ஒப்பிடத்தான் சொன்னேன்.// ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமென்றால் அதாவது, முதலாளிகள் லாபம் அடைய வேண்டுமென்றால், ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் – ஊழல் மயமான் ஊழியர்கள் மூலம் அந்த துறையையோ, தொழிலகத்தையோ நாசம் ஆக்கி, பொதுத்துறைக்கு எதிராக ஒரு பொதுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவது தான். அதனால்தான் இந்தியாவில் அரசு நிறுவனங்கள் ஊழல் மயமாக உள்ளன. மேலும் இந்த உக்தியை தென்னெமெரிக்காவில் தண்ணீர் விநியோகத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். குடிநீர் விநியோகம் முழுவதையும் தனியார் மயப்படுத்தியதன் விளைவு – இறுதியில் கார்டு போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை. தண்ணீர் எடுக்க எடுக்க, கார்டில் காசு குறையும். இதனை எதிர்த்து தென்னெமெரிக்க மக்கள் போராடி இதிலிருந்து மீண்டிருக்கிறாகள். ஆனால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டுமே ஒழிய அதற்காக முதலாளிகளிடம் தாரை வார்க்க கூடாது.

    மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம். ஜெனரல் மோட்டார்ஸின் திவாலானதற்கு காரணம், முதலாளிகளின் சுகபோக வாழ்க்கை மற்றும் அதன் பங்குதாரகளுடைய லாப வெறிதான்.

    http://www.usatoday.com/money/autos/2009-05-31-gm-mistakes-bankruptcy_N.htm

    இதனை பார்த்தால் தெரியும் ஜெனரல் மோட்டார்ஸின் வீழ்ச்சிக்குக் காரணம் யார் என்று ?

    மேலும், அதியமான ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், ஆகஸ்ட் 15 பதிவில் அசுரன் கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை இவர். இவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் மோசடியான – இண்டர்பிரிடேஷன் ஆதாரங்கள். ஆனால் நேரடியான ஆதாரங்களை இவர் இதுவரை தரவே இல்லை. ஆனால் அதியமான் சுட்டிக்கு சுட்டி தாவி வருகிறார்.

    இறுதியாக ஆகஸ்ட் பதிவில் நான் கேட்ட கேள்வி :

    /புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் ஆழம் பற்றிய கலிஃபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை சுட்டியை பல முறை அளித்தும் அதை பற்றி விவாதிக்காமல் இப்படி பேசுவதுதான் உமது பகுத்தறிவா ?// அசுரனுடைய பதில், இண்டர்பிரடேழன் அற்ற நேரடியான புள்ளிவிவரங்களைத் தரவும். ஆர்பிஐ இன் டேட்டா நேரடியானது. ஆனால் உமது சுட்டிகளிலுள்ள விடயங்கள் நேரடியானவை அல்ல. மோசடியான வறுமைகோடு முதலானவைகளை இது உபயோகப்படுத்துகிறது.

    அசுரன் :

    ஏனேனில் இவை விலைவாயி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி உட்பட பல்வேறு குழப்பமான விசயங்களின் மீது எழுப்பட்ட குறைபாடான கணக்கீடு.

    இதே இடத்தில் RBIயின் புள்ளிவரத்தை பாருங்கள் மிக எளிமையாக நேரடியாக மொத்த தானிய அளவை மக்கள்தொகையால் வகுத்து வந்த அளவை முன் வைக்கிறது. இது எனக்கு சரியானதாகவே படுகிறது. இது நேரடி புள்ளிவிவரம். எந்த வொரு கணக்கீட்டு அடிப்படையிலான இண்டர்பிரடேசன் அல்ல.

    • ***
      மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம் ***

      அறிவுடை நம்பி – இந்த வாக்கியத்தின் மூலம் தாங்கள் கூற விரும்பியது என்ன ?

  25. அறிவுடை நம்பி,

    ஜென்ரல் மோட்டர்ஸின் உற்பத்தி செலவு டோயோட்டவை விட மிக மிக அதிகம். காரண‌ம சம்பளம் மற்றும்
    இலவச ஹெல்த் கேர் இன் சுமைகள். அதனால் குறைந்த உற்பத்தி செலவுடை பிற நிறுவனங்களுடன் சமீப காலங்களாக போட்டி போட முடியாவில்லை. திவாலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணி. நிர்வாகிகளின் தவறுகளும் காரணிகள் தாம். எனது அமெரிக்க நண்பன் ஜி.எம் இற்க்கு பிராஜக்ட் செய்கிறவன் தான். ஜி.எம் டெக்னீசியன்கள் ஒரு நாள் செய்யும் வேலையை ஒரு வாரம் போல செய்கின்றனர். மேலும் கடுமையான் சங்க விதிகளின் படி, ஒருவரின் வேலையை, அவர் வரும் வரை வேறு யாரும் செய்ய கூடாது. இது போன்ற பல முட்டாள்தனமான விதிகள். அதன் மொத்த விளைவு, உற்பத்தி செலவு அதிகரித்து, தொடர் நஸ்டம்.

    //ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமென்றால் அதாவது, முதலாளிகள் லாபம் அடைய வேண்டுமென்றால், ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் – ஊழல் மயமான் ஊழியர்கள் மூலம் அந்த துறையையோ, தொழிலகத்தையோ நாசம் ஆக்கி, பொதுத்துறைக்கு எதிராக ஒரு பொதுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவது தான். அதனால்தான் இந்தியாவில் அரசு நிறுவனங்கள் ஊழல் மயமாக உள்ளன. மேலும் இந்த உக்தியை தென்னெமெரிக்காவில் தண்ணீர் விநியோகத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். குடிநீர் விநியோகம் முழுவதையும் தனியார் மயப்படுத்தியதன் விளைவு – இறுதியில் கார்டு போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை. தண்ணீர் எடுக்க எடுக்க, கார்டில் காசு குறையும். இதனை எதிர்த்து தென்னெமெரிக்க மக்கள் போராடி இதிலிருந்து மீண்டிருக்கிறாகள். ஆனால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டுமே ஒழிய அதற்காக முதலாளிகளிடம் தாரை வார்க்க கூடா/////

    என்ன‌ ஒரு விள‌க்க‌ம் ? :)) பொதுத்துறை ஊழல் மயமானது முதலாளிகள் செய்த சதியா ? அறிவு கொழுந்தையா நீர். இந்த அரிய விளக்கத்திற்க்கு ஆதாரம் காட்ட முடியுமா ? பொது துறை என்றாலே, ஓனர்ஷிப் இல்லாமல், பொறுப்பற்ற நிலை உருவாகும். ஓ.பி அடிப்பார்கள். ஊழல் மெல்ல உருவாகும். சோவியத் ரஸ்ஸியாவில் (எந்த முதலாளியும் இல்லாத நாடு அப்போது) பொதுத் துறை சீரழந்த வரலாறு பற்றி படித்து பாரும். உடனே திரிபுவாதிகள் என்று கதைக்க வேண்டாம். குடினீர் விநயோகத்தை தனியார் மயமாக்குவது வேறு. ஒப்பீடே தவறு. மேலும் இத்துறையை தனியார் மயமாக்க வேண்டாம் என்ற மாற்றுக் க‌ருத்து சந்தை பொருளாதார வல்லுனர்களில் உண்டு. எல்லா துறைகளையும் தனியார் மயமாக்க சொல்லவில்லை. திறந்த் போட்டி அதிகம் உள்ள துறைகளைதாம் சொல்கிறோம். போக்குவரத்து, உற்பத்தி துறை போல.

    //மேலும், அதியமான ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், ஆகஸ்ட் 15 பதிவில் அசுரன் கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை இவர். இவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் மோசடியான – இண்டர்பிரிடேஷன் ஆதாரங்கள். ஆனால் நேரடியான ஆதாரங்களை இவர் இதுவரை தரவே இல்லை. ஆனால் அதியமான் சுட்டிக்கு சுட்டி தாவி வருகிறார்.////

    என்னை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நீர் சொல்லி உணர்ந்து கொள்ளும் அளவில் தாம் உம் தோழர்களின் ‘பகுத்தறிவோ’ ? :)) சொந்த புத்தி யாருக்கு இல்லையோ ? :)) எனது மிக முக்கிய ஆதாரமான அந்த கலிபோர்னிய பல்கலை கழக ஆய்வு அறிக்கை (இன்டெர்பிரெட்டேஸன் பற்றியது) மற்றும் அமர்தியா சென் மற்றும் எஃப்.ஏ.வோ விவரங்கள் பற்றி அசுரன் இதுவரை பதிலிக்காமல் ஓடிவிட்டார்.
    அவை நேரடியான ஆதரங்கள் தாம். வாசகர்களுக்கு புரியும். ஓ.கே.

    • //எனது மிக முக்கிய ஆதாரமான அந்த கலிபோர்னிய பல்கலை கழக ஆய்வு அறிக்கை

      (இன்டெர்பிரெட்டேஸன் பற்றியது) மற்றும் அமர்தியா சென் மற்றும் எஃப்.ஏ.வோ விவரங்கள்

      பற்றி அசுரன் இதுவரை பதிலிக்காமல் ஓடிவிட்டார்.//

      எனது ஆதாரங்களை, கருத்துக்களை மிக வெளிப்படையாகவே முன் வைத்தேன். 30 பக்க

      டாகுமெண்டுக்கு லிங்க் கொடுத்து ஆதாரம் இருக்கு படிச்சுக்கோ என்று

      சோம்பேறித்தனமாக(அல்லது எஸ்கேப்பிசமாக்) சொல்லவில்லை.

      இது போல நீங்கள் கொடுத்து நான் நேரம் செலவழித்து படித்த முந்தைய உங்களது

      டாகுமெண்டுகளில் ஒன்றும் தேறவில்லை என்பதை பதிவு செய்த பிற்பாடுதான் உங்களது

      மேற்படி ஆதாரம் குறித்து எனது தயக்கத்தை வெளிப்படுத்தினேன்.

      அந்தளவுக்கு உங்களுக்கு அக்கறையும் ஆர்வமும் உள்ளது எனில் மேற்சொன்ன

      ஆதாரங்களில் என்ன உள்ளது என்பதை எளிமையாக, சாரமாக நாங்கள் தொகுத்துக் கூறுவது

      போலவே முன் வைக்கலாமே? இதையும் ஒரு கோரிக்கையாக உங்களிடம் முன் வைத்த

      பொழுது ஓடிப் போய் ஒளிந்து கொண்டீர்கள்.

      கொஞ்ச நாள் அமைதியாக அவதனிக்கலாம் என்றால் இதுதான் சாக்கு என்று புரளி

      கிளப்புகீறீர்கள்.

      அது சரி, ஏற்கனவே கொடுத்த எந்த ஆதாரங்களுக்கும் பதில் சொல்லவில்லை நீங்கள். ஆர் பி ஐயினுடைய ஆதாரமே எனக்கு ஜுஜுபி என்று எஸ்கேப் ஆனவர்தானே நீங்கள்.

      அசுரன்

  26. // நீ இப்பவே என்னா வேணுமின்னாலும் ஆடிக்கோ.. புரட்சிக்கு அப்புறம் உனக்கு குலாக்குதான்டி
    //

    தயவு செய்து புரச்சி சிஷியர்கள் உட்பட யாரும் சத்தமாக சிரித்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் .

  27. அசுரன்,

    நல்ல சமாளிக்கிறீக. அதே ஆர்.பி.அய் புள்ளிவிவரம் வறுமை அளவு 1991க்கு பின் வெகுவாக குறைந்துள்ளதை பற்றிய புள்ளிகளை நான் அளித்தேனே ! அது டுபாக்கூர் என்றீர்கள். ஆனால்
    அதே ஆர்.பி.அய் இன் பிற தகவல்களைதான் ஆதரமா நீங்க காட்டுறீக. சரி, இருக்கட்டும்,
    அந்த கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை, 30 பக்கம் எல்லாம் இல்லை. சுமார் 7 இருக்கும். படிக்க முனைந்தால் படிக்கலாம். அது இந்த டுபாக்கூர் விசியத்தை ஆராய்ந்து, பின் விஞ்ஞானபூர்வமான முடிவுகளை அளிக்கிறது. முடிந்தல் படித்துவிட்டு விவாதிக்கவும்.

    இறுதியாக, இந்த நூலை படித்து பாரும் :

    India after Independence” by Bipan Chandra and others of JNU ; they are marxist historians but realistic and candid in their assesment of post 1991 reforms and the effects. it is a highly acclaimed book. the effects of planning and the need for 1991 reforms, effects, etc are clearly brought out in the large volume. there are dozens of the other books like this, but i prescribe this as it is from a Marxist bastion JNU and the authors are left leaning historians who cannot be accused of “rightists” ; ok.

    • /நல்ல சமாளிக்கிறீக. அதே ஆர்.பி.அய் புள்ளிவிவரம் வறுமை அளவு 1991க்கு பின் வெகுவாக குறைந்துள்ளதை பற்றிய புள்ளிகளை நான் அளித்தேனே ! அது டுபாக்கூர் என்றீர்கள். ஆனால்
      அதே ஆர்.பி.அய் இன் பிற தகவல்களைதான் ஆதரமா நீங்க காட்டுறீக. சரி, இருக்கட்டும்,/

      அப்படியா… எனக்கு ஞாபகம் இல்லையே எங்கே திரும்ப கொடுங்கள்.

    • //அந்த கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை, 30 பக்கம் எல்லாம் இல்லை. சுமார் 7 இருக்கும். படிக்க முனைந்தால் படிக்கலாம். அது இந்த டுபாக்கூர் விசியத்தை ஆராய்ந்து, பின் விஞ்ஞானபூர்வமான முடிவுகளை அளிக்கிறது. முடிந்தல் படித்துவிட்டு விவாதிக்கவும்././

      அவசியமில்லை நண்பரே,

      உங்களுக்கு மிக அக்கறையாக தோன்றுகிற விசயங்களை நீங்களே தொகுத்து கொடுங்களேன். அவற்றையும் அவுட் சோர்ஸ்தான் செய்வீர்களா? மேலும், உங்களது முந்தைய சுட்டிகள் எதிலும் இதுவரை ஒரு துளி கூட தொடர்புடைய ஆதாரங்களோ அல்லது உருப்படியான புள்ளிவிவரங்களோ கொடுக்கப்படவில்லை என்பதே எனது அனுபவங்களாக இருக்கும் பொழுது ஏன் எனது நேரத்தை விரயமாக்க வேண்டும்? எனக்கு இதை விட மிக முக்கியமான வேலைகள் பல உள்ளன.

      சுட்டிகளை மட்டுமே கொடுப்பது இது வரையான உங்களது வாத முறையாக உள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. தொகுப்பாக உங்களது வாதங்களை வலுப்படுத்தும் வகையில் படித்தவற்றை முன் வையுங்கள் பிறகு பார்க்கலாம்.

      அசுரன்

      • //anyway, you can try to read that JNU book in future. also why no word about that detailed interview of Amratya Sen ?//

        Why should I bother about Amartya sen? You yourself claim that Amartya is our Favorite. Have we ever said that?

        This also one of your lies like the one on pre1980 socialism. Why should I respond to that?

        Amartya sen is neither a socialist nor a Leftist. He can be a liberal capitalist. I posted his quote on Famine and food security and his claims on failures of your so called development oriented reforms. That doesn’t mean he is our favorite. I have even quoted Manmohan to deny your arguments.

        It is your responsibility to deny your own masters words on LPG. Alas, you have never done that till date.

        Asuran

  28. தோழர் வினவு,

    ////நமது மார்க்சிய வரையறை படி உற்பத்தி கருவிகள் அல்லது சாதனங்கள் மீது உரிமையோ உடமையோ இல்லமல் தன் உழைப்பை மட்டும் விற்று வாழ்பவர்களையே பாட்டாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் என்கிறோம்/////

    அப்படியா ! அப்ப, ஒரு 25000 “முதலீட்டில்” மூன்று தையல் மிஷின்கள் வாங்கிப் போட்டு, இரண்டு
    தையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி, சொந்த தொழில் செய்யும் ஒருவர் “முதலாளி’ வர்கமா ? அவரிடம் வேலை பார்க்கும் இரண்டு தையல்காரர்கள் தாம் தொழிலாளர் வர்கமா ? எனென்றால் உற்ப‌த்தி சாத‌ன‌ங்களின் “உரிமையாள‌ர்” அந்த‌ குட்டி முத‌லாளி தானே ?

    இந்த “மேட்டுக்குடி” தொழிலாள‌ர்க‌ளான‌ விமானிக‌ளின் வீடுக‌ளில் வேலை பார்க்கும் வீட்டு வேலைக்கார‌க‌ள் எந்த‌ வ‌ர்க‌ம் ?

    ச‌ரி, செம்புர‌ட்சிக்கு அப்புற‌ம், இந்த ‘மேட்டுகுடி’ தொழிலாள‌ர் வ‌ர்க‌ தோழ‌ர்க‌ளையும், குட்டி முத‌லாளிக‌ளையும் என்ன‌ செய்வ‌தாக‌ உத்தேசம் ? இப்ப‌வே தெளிவாக‌ விள‌க்கிவிட்டால் உம‌க்கு மிக‌ புண்ணிய‌மாக‌ போகும் !! ஏன்னா, புர‌ட்சிக்கு பின், யாராவ‌து ஒரு “தோழ‌ர்” இந்த‌ இரு சார‌ரும், பூஸ்வா ம‌னோபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் தாம், அத‌னால் அவ‌ர்க‌ளை முகாம்க‌ளில் அடைத்து “திருத்த‌” வேண்டும் என்று கிள‌ப்பிவிட‌லாம். எதுக்கும் முன்னாடியே சொல்லீடீக‌னா, இவ‌ர்க‌ளும் “த‌யாரா” இருப்பாக‌..

    • அதியமான்,

      முதலாளித்துவ சித்தாந்தத்தை அடி முதல் முடி வரை நேசிக்கும் உங்களைப்போன்றவர்கள் எம்மை தோழர் என்று அழைப்பது கூச்சமாக உள்ளது. வினவு என்றே அழைக்கலாம். முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நா