காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!

தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன.