பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.