privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திலீனா மணிமேகலை: COCKtail தேவதை!

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

-

vote-012

பிறகொரு நாளின் நள்ளிரவில்
கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்
குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்
தேவதையின் யோனியில்
வார்த்தைகள் வழிந்தன.

பரவசத்தின் உச்சத்தில்,
ஆயிரத்தி ஒன்றாம் முறையாய்
கட்டவிழ்த்தலின் சூட்சுமத்தை
காது மடல்களில் ஆண்டனி கிசுகிசுத்தான்.

“விந்து பீச்சட்டும்.
ஆங்கே கமிசார்களை கட்டவிழ்.
யோனி விரியட்டும்.
ஒருங்கே புரட்சியைப் புரட்டு.
மயக்கம் வரப் புணர்.
மார்க்சிய சொல்லாடல் மிக முக்கியம்.
COCKtail-ஆக கலந்து வை.
ஃபூக்கோவின் லேபிளை ஒட்டி விடு.
பிரதியின் சூட்டில்
இலக்கியம் விரைக்கும்.
மெக்கார்த்தி புன்னகைப்பான்.
மாலை விருந்திற்காக கண்ணடிப்பான்.
மீண்டும் வரலாறு முடிவுக்கு வந்திருக்கும்.

புருவத்தை சரி செய்.
புகைப்படமாக எடுத்து வை.
உன்னைச் சுற்றி
இயங்குகிறது உலகம்.
உன்னைச் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உன்னைத் தான் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.

உலகின்
அழகிய,
அழகில்லாத,
அழகாய் இருக்க முடியாத,
அழகாய் இருக்க வக்கில்லாத,
அழகாய்ப் பிறக்காத.
அழகாய்ப் பிறக்க முடியாத,
அனைத்துப் பெண்களின் விடுதலையும்,
நீ கட்டவிழ்க்கும் கவிதைகளுக்காகத்தான்
காத்துக் கிடக்கிறது என்பதை அறிவித்து விடு.
கிளாரா ஜெட்கினை விஞ்சிய
பெண் விடுதலைப் போராளியே!
என போஸ்டர் அடிக்க காசு கொடு.
மர்லின் மன்றோ பாவாடையில்
அதனை ஒட்டச் சொல்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
மிஞ்சிப் போனால்
எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
“ஏன் கொச்சை வார்த்தைகள்?”
“நீங்களா இப்படி?”

சட்டம் சட்டம்தான்,
முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
கண்டபடி பேசக் கூடாது.
கண்ணியமாக துடைத்து விட்டு,
கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.

மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
வேண்டும் போது விரிக்கலாம்.
வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
தேவதைகளின் சிறுநீர்,
கவிதை.
கம்யூனிஸ்டுகளின் கோபம்,
கொலைக் குற்றம்.

எனவே,
மார்பைக் குலுக்கு.
மயிரை பிய்த்துப் போடு.
போதை கிறக்கத்தில்
COCKtail-ஐ மட்டும் மாற்றி விடாதே…
கட்டவிழ்த்தலுக்கும்
விதிமுறைகள் உண்டு.
பாரத மாதா,
இந்து ராஷ்டிரம்,
பாபர் மசூதி
என எதையும் சேர்த்து விடாதே.
சரஸ்வதியாக சந்தில் நிறுத்தி விடுவார்கள்.”

லெனின் ஃப்ராய்டைப் புணர வேண்டும் என எழுதுவது தனிமனிதத் தாக்குதல் அல்ல, மஞ்சள் எழுத்து இல்லை, மாறாக கட்டுடைத்தல். ஆனால்,ஜெரால்டுக்கு குறியில்லை என எழுதுவது, ஃபோர்ட் போலியோ எடுத்து தன் மூஞ்சியை தானே ரசிக்கும் அற்பத்தனத்தை குறிப்பது ஆகியன தனிமனிதத் தாக்குதல்.  இத்தகைய புரிதலைக் கொண்டிருக்கும் எல்லா ஆண், பெண்  COCKtail தேவதைகள், மர்லின் மன்றோக்கள், கலகப் போராளிகளுக்கும்,அவர்களின் எழுத்துக்களில் பேரின்பமும், சிற்றின்பமும் பெற்று சிலாகிக்கும் ரசிகக் கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்.


(வினவில் நடந்த விவாதத்தையொட்டி எழுதப்பட்டது)

போராட்டம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. மிகச் சிறப்பான எதிர்வினை! தூயமணிகளும், அல்லக்கைகளும் இதற்கு என்ன கூறுவர்?

  2. கவிதை புரிந்தும் புரியாமலும்!

    உரைக்க வேண்டியவர்களுக்கு
    நிச்சயம் உரைக்கும்.

    மேல்கட்டுமானத்தில்
    காக்டெயில் தேவதைகள்
    புணர்ச்சி கவிதைகளில் கிரங்கி
    மல்லாந்து படுத்து எச்சில் துப்புகிறார்கள்.
    சிலாகித்து..
    ரசிக குஞ்சுகள் விசிலக்கிடிக்கிறார்கள்.

    கீழ்கட்டுமானத்தில்
    ஏதும் அறியாதவர்களாய்
    தன் கடமையில் பயணிக்கிறார்கள்.

  3. வினவு,

    முந்திய காலங்களில் பலரின் அற்பதனத்தை பலமுறை நிதானத்துடன் கிழித்து இருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம், கைத்தட்டி வரவேற்றிருக்கிறோம். “உலகின் முதல் அழகிய பெண் பற்றி” கொஞ்சம் உண்மையை சொல்லுங்கள் என ஒரு அறிவிப்பு செய்தாலே, “ஏவாள்’ செய்த ஊழல்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள், பிராடுகள் எல்லாம் வண்டி வண்டியாய் வந்திருக்கும். இப்பொழுது, வழக்கமாய் உள்ள நிதானம் இல்லை என குறைப்பட்டிருக்கிறோம். அவ்வளவு தான். நீதிதேவன் பட்டம் எல்லாம் ஓவர்.

  4. //“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”“ஏன் கொச்சை வார்த்தைகள்?”“நீங்களா இப்படி?”சட்டம் சட்டம்தான்,முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,கண்ணியவான்கள் வாழும் நாட்டில்கண்டபடி பேசக் கூடாது.கண்ணியமாக துடைத்து விட்டு,கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.மார்க்சியம் அவர்களுக்கு முகம்.//

    பிடித்த வரிகள்

  5. தோழகளே என்னை மன்னித்துவிடுங்கள் இந்த கேவலமான பெண்மனிக்கு நானும் ஆதரவாக சில வார்த்தைகளை பதித்துவிட்டேன்.மன்னிக்கவும்.

    • Name : kumar vasane-mail : kumar68@gmail.com
      உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாக உள்ளது. எவை குறித்தும் உங்களால் எப்படி பேச முடிகிறது தோழி? பொதுவாக பெண்ணுரிமை பேசும் பெண்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாகவே இருந்தது. நண்பர் உங்கள் தளத்தை பார்க்கும்படி சொன்னார். உண்மையில் உங்களின் நேர்மையான விமர்சனங்கள் கண்டு அதிர்ந்துதான் போனேன். இப்படியும் பேசுவார்களா என்று? முதலில் உங்களுடைய துணிச்சலுக்கு ஒரு சபாஷ். பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கு ஏன் ஆண்களைக் கண்டால் அப்படியொரு வெறுப்பு தோழி? சமீபத்தில் லீனா கவிதையை குறித்த சர்ச்சையை இணையத்தளத்தில் பார்த்திருப்பீர்கள். அவரின் கவிதை குறித்து உங்கள் கருத்து என்ன? இவர் கவிதைக்கு வினவு தளம் சரியான விமர்சனம் வைத்திருப்பதாக நான் கருதுகிறேன். இவை குறித்தும் தாங்கள் கட்டுரை எழுதவேண்டுகிறேன்.
      https://www.vinavu.com/2010/01/06/leena/http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html
      அன்புடன்குமரன்.
      ~~~~
      கருத்துக்கும், விமர்சனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது குமரன். லீனா அவர் தளத்தில் எது வேண்டுமானாலும் எழுதலாம். அது அவர் உரிமையுங்கூட. அவர் இதைத்தான் இப்படித்தான் எழுதவேண்டும் என்று தீர்மாணிக்க நாம் யார்? விருப்பம் இருப்பவர்கள் படித்துக் கொள்ளட்டும். விருப்பம் இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளட்டும். இதில் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது? 
      ஆனால், பெண்ணியம் சார்ந்து சிந்திக்கும் போது அவரின் கவிதை வரிகள் இலக்கியமாகும் போது, அவை குறித்து எதிர்விணை செய்யும்போது, அது விமர்சனமாகலாம். அப்படித்தான் வினவு தளம் விமர்சனம் வைத்திருக்கிறது.
      லீனா பாஷையில் சொல்வதென்றால், எல்லா ´ஆண்குறி´யுமா மம்மு குடித்துக் கொண்டிருக்கும்? 
      மம்மு குடிப்பதற்கு கூட்டுப்புணர்ச்சி ஆண்குறிகளுக்கும், இருபால் புணர்ச்சி குறிகளுக்கும் கிலுகிலுப்பு வரலாம். கொள்கை, புரட்சி பேசும் ´ஆண்குறி´களுக்கு கிலுகிலுப்பு வராது. எழுச்சிதான் வரும். யோனி கொழுப்புக்குள் புகுந்து கொண்டு மம்மு குடிக்கவா ஆயாசப்படும்? அல்லது ´நீ புடுங்கி போடு மயிரை´ என்று மல்லாந்துக் கொண்டு புணருமா? அல்லது லீனா சொல்வது போல், “அவரது தொடைகள் எப்பொழுதும் பரப்பியே வைத்திருக்கும் பணியைக் கண்டு, 
      “ஆகா என்னே புரட்சி நடக்குது புது யுக யோனிக்குள்” என்று புரட்சி அறிக்கை வாசிப்பார்களா?  
      வினவு என்ற ´ஆண்குறி´க்கு மிகத் துணிச்சல்´தான். 
      “ஆண் குறியின் வெறியைக் காரித்துப்பும் லீனாவை நோக்கி, “ஏன் டைரக்டர் பாரதிராஜாவுக்கும், சேரனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஆண்குறி இல்லையா? என்கிறது…
      உடனே வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார்கள், அறிவு ஜீவிகள். தனிப்பட்ட வாழ்க்கை செய்திகளை வம்புக்கிழுத்தது ஏன் என்கிறார்கள்.
      ஆந்திர கவர்னரான 83-வயது தாத்தா கட்டிலில் 3-இளம் பெண்களுடன் சல்லாபம் செய்ததை வீடியோவில் அம்பலப்படுத்திய போது, தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போனாரே! அப்போது இதே கேள்வியை இந்த அறிவு ஜீவிகள் ஏன் கேட்கவில்லை?   
      இந்த ´ஆண்குறி´களை நினைக்கும் போது பெரியார் சொன்னவை தான் நினைவுக்கு வருகிறது. 
      “பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும், எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.” -[பெரியார், 24.05.1958]
      இன்று பெண் உடல் அரசியல் குறித்த தெளிவான விவாதங்கள் இல்லை. யோனிக் கட்டுடைப்பு மட்டுமே பெண்ணியமாகவும் ஆண்குறிகளை எதிர்ப்பதே தங்கள் புரட்சியாகவும் நினைத்துக் கொண்டு அதே ´ஆண்குறி´யிஅடைக்கலமாகிறது பெண்ணியம். 
      வினவு கட்டுரை நன்றாக அலசி ஆராயப்பட்டவை. ஆனால் அதில் ஆணாதிக்கமும், கிசு கிசு பாணியிலும் இருப்பதாக சில பின்னூட்டங்கள் புலம்புகின்றன. அவர்களுக்கு சங்கதி தெரியாத வரை அவை கிசுகிசுக்கள் தான். எங்களைப் போன்ற செய்தி தெரிந்தவர்களுக்கு அது உண்மைச் செய்தி. அதைத்தான் வினவு என்ற ´ஆண்குறி´ செய்திருக்கிறது. 
      ஆனால் லீனா வினவு தளத்தை மஞ்சள் பத்திரிகைகளுக்கு இணையாக சொல்கிறார். அனைத்தும் கிசுகிசு என்று மழுப்புகிறார். தினதந்தியும், தினமலரும் பொய் செய்தி போட்டன என்கிறார். தற்போது ஜீனியன் விகடனில் 13.01.2010 மீண்டும் யோனிக் கொழுப்பை விவாதத்திற்கு வைத்திருக்கிறது. இதற்கு என்ன சொல்லப் போனார் லீனா? 
      நடிகைகளையும், அரசியல்வாதிகளையும் அவர்கள் நடத்தைக் குறித்தும் பத்திரிகைகள் அம்பலப்படுத்துவது போல், போலி இலக்கியவாதிகளின் திருட்டுத்தனத்தையும், அதில் இருக்கும் அரசியலையும் ஊடகங்கள் வெளிப்படுத்த முன்வர வேண்டும். 
      போலி பெண்ணியவாதிகளையும், உண்மையில் சமூகத்தின் நலனுக்காக போராடும் பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து விவாதிக்க வைத்து மக்கள் முன் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும். 
      சமுகத்திற்காக எழுதுவதும், பேசுவதும், போராடுவதும் ஒரு வகை பெண்ணியம் என்றால், தன் சுயஇச்சைகளையும், அணுபவங்களையும், கவிதையாக வைத்து கட்டுடைக்கிறேன் என்பதும், ´ஆண்குறி´கள் எல்லாம் வெறி பிடித்தலையும் தறுதலைக்குறிகள் என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டும், யோனிப் புரட்சிக்கு ஒட்டு மொத்த பெண்ணியத்தின் சார்பாகவும் பேசிக் கொண்டு தங்களுடைய உடலை ஆதாயமாக வைத்து காரியங்களை சாதித்துக் கொள்ள முயலும் பெண்களையும் நாம் விமர்சனத்திற்கு உட்பட்டே ஆகவேண்டும். 
      அப்போது பிழைப்புவாத அரசியல் செய்யும் இலக்கிய பெண்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து சுய விமர்சனம் செய்ய முயலலாம்.
      இங்கே இன்னொரு ஆண்குறி அழகாக தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இதையும் படித்து பாருங்கள். 
      http://ow.ly/Uz2G

      • உங்களுடை யா விமர்சனம் மிகவும் சிறப்பாக உள்ளது .பெண் கவிதாயினிகலின் தொடர்ச்சியான மட்ட ரகமான கருத்தகள் அறிவு தளங்களில் விவதிகபடுகிறது. இவர்களின் காவிதி அடகியபுது யோனி அரசியல் புரபடுகிறது .மணல்வீடு கவிதை எந்த உணர்ச்சியை க ட்டுகிறது

    • நன்றி அரை டிக்கட்
      தோழர் தமிழச்சியின் தளத்தை பார்த்தேன்சிறப்பான பதிலை தோழர் தமிழச்சி வெளியிட்டுள்ளார்
      லீனா வை படிப்பவர்கள் தோழர் தமிழச்சியை படியுங்கள் அவர் உண்மையான பெண்ணியவாதி,

      • தோழர் தமிழச்சி போன்றவர்கள் வினவுக்கு வருகை தர வேண்டும் கருத்துக்களை பதிய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்,

  6. .புரட்சிகர அமைப்புகளின் தகவல்கள் நோட்டீஸ் போடப்பட்டு மக்களிடையே விநியோகிக்கப்படுகிறது. லீனா உள்ளிட்ட நரகல்கள் தான் எழுதும் கவிதை என்ற பெயரிலான குப்பைகளை தைரியம் இருந்தால் மக்களிடையே விநியோகித்து பார்க்கட்டும், அப்புறம் தெரியும் இந்த நாய்களுக்கான “மாலையும்” “மரியாதையும்”. உலகின் ‘அழகி’ய முதல் பெண்ணின் யோக்கிதையும்.
    ஐந்து ஆண்டுக்களுக்கு முன்னால் இராக் போர் குறித்து அங்கு போராடும் மக்களை கொச்சை படுத்தி ஒரு ஆண் நாய் இப்படித்தான் வாந்தி எடுத்தது. ம.க.இ .க.தோழர்கள் அவனுடைய வீட்டுக்கே சென்று அந்த பகுதி மக்களிடம் அவன் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்கள். அவன் மனைவி உள்பட பகுதி மக்கள் அனைவரும் அவனை காரித்துப்பி கரிச்சட்டியாக்கினார்கள். லீனாவின் விசயத்திலும் அது ஒன்றே தீர்வு!

  7. சட்டம் சட்டம்தான்,
    முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
    கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
    கண்டபடி பேசக் கூடாது.
    கண்ணியமாக துடைத்து விட்டு,
    கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.

    மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
    தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
    வேண்டும் போது விரிக்கலாம்.
    வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
    தேவதைகளின் சிறுநீர்,
    கவிதை.
    கம்யூனிஸ்டுகளின் கோபம்,
    கொலைக் குற்றம்.// super..

  8. இந்த கவிதை நன்றாக உள்ளது. ஆனால் நீங்கள் இருவரும் (வினவு மற்றும் லீனா) வீண் விவாதத்தில் , ஆரோக்யமற்ற விவாதத்தில் ஈடுபட்டு திறமையை வீண் அடித்து கொண்டு இருக்கிறீர்கள்.

    • அய்யா… யாருக்கும் அவரவர் சாமியைச் சொன்னால் கோபம் வருகிறது. பிரச்சனையே அதுதான்… லீனா லெனின் மார்க்ஸ் பேரை சொல்லாமல் விட்டால் வினவு அந்தப்பக்கம் போயிருக்கவே மாட்டார்… எப்படி நபிகள் நாயகத்தை பற்றி காரட்டுன் வரைந்தால் கொலை செயவேன் என்று மதவாதிகள் சொல்கிறார்களோ… அதைப் போல வினவுக்கும் கோபம் வருகிறது… இரண்டும் ஒன்றில்லை என்று வினவு நிருபிக்கட்டும்

      • ஏம்பா நாகராசு உன் கடவுள திட்டினாத்தான் உனக்கு கோபம் வருமா உன் பொண்டாடி, ஆயி, அப்பன், புள்ள, சினேகிதன், வாத்தியார், தலைவன், இவங்களல்லாம் திட்டினா சொரணையே இல்லாம ‘ஈ’ ன்னு பல்லகாட்டுவியா? சரியான மானங்கெட்டவன்யா நீ.

        • ஏம்பா நீ புரச்சி கர இயகக்த்தில இருக்கியா…? நம்பவே முடியல…அதான் புர்ச்சி வரவே மாட்டேங்குது….

      • புர்ச்சி வர்ரது இருக்கட்டுன்னயா, உன் பொன்டாட்டிய திட்டினா உனக்கு கோவம் வருமா வராதா? அதச்சொல்லு

        • நீ புர்சிசி கர இயக்கத்தில இருக்கிய அத முதல்ல சொல்லேன்.. அப்பறம் நா பேசறன்

        • நான் எந்த எழவுல இருந்தா என்ன? என் பொன்டாட்டிய திட்டினாலோ என் ஆயி அப்பன கத்துனாலோ எனக்கு ரோசம் வரும் சன்டைக்கு போவேன். நீ மானங்கெட்ட ஆள இருக்கறதுனாலத்தான் இப்புட்டு நேரமா வியாக்கியானம் பண்ணிக்கிடக்க. உன் பொன்டாட்டி பாவன்யா, இப்படி ஒரு முதுகெலும்பில்லாத பயலுக்கு வாக்கபட்டிருக்கா பாரு!

  9. சட்டம் சட்டம்தான்,முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,கண்ணியவான்கள் வாழும் நாட்டில்கண்டபடி பேசக் கூடாது.கண்ணியமாக துடைத்து விட்டு,கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.
    மார்க்சியம் அவர்களுக்கு முகம்.தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.வேண்டும் போது விரிக்கலாம்.வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.தேவதைகளின் சிறுநீர்,கவிதை.கம்யூனிஸ்டுகளின் கோபம்,கொலைக் குற்றம் ‍- மல்லாக்க படுத்து எச்சில் துப்பும் ஜென்மங்களுக்கு சிறப்பான எதிர்வினை.
    இங்கு தேவதைகள் என்ற இடத்தில் போலிகள் என்று எழுதினாலும் கச்சிதமாகவே உள்ளது.

  10. ‘குறி’யீட்டு கவிதைகளின்’குறி’க்கோள்களை கட்டுடைத்ததில் கிழிந்த யோனிஅலறி துடித்ததுகுருதி வழிகிறதென!
    குறிகள் அறிவித்தன‌///உலகின்அழகிய,அழகில்லாத,அழகாய் இருக்க முடியாத,அழகாய் இருக்க வக்கில்லாத,அழகாய்ப் பிறக்காத.அழகாய்ப் பிறக்க முடியாத,அனைத்துப் பெண்களின் விடுதலையும்,///உன் குருதி சிவப்பின் தடத்தில் உதிக்கட்டும்.
    ஒட்டிய வயிற்றின் கீழ்மயிர்களற்ற யோனிகளும், குறிகளும்நிதமும் சாகும் இன்னாட்டில்,அவர் உழைப்பையும், வாழ்வையும்,சுரன்டி கொழுத்து,உப்பி பெருத்த யோனிகளும்,சப்பி தடித்த குறிகளும்,புரட்சிக்காய் பலியிடப்படட்டும்.
    அங்கேபெருகும் இரத்தத்தில்,தோய்த்த செங்கொடிகள்,வின் முட்டும் அந்நன்நாளில்,மெய்யுனர்ந்த‌யோனிகளும் குறிகளும் உரக்க சொல்லும்எங்கள் பாடலை எங்கள் இசையைஎங்கள் மொழியைதெரிந்தே சிதைத்தும்,எங்கள் வலியைஎங்கள் வேதனையைஎங்கள் கன்ணீரைகொண்டே பிழைத்தும்,வாழ்ந்த உங்கள் யோனிகளின் துர்நாற்றம் விலகட்டும்.கட்டுகளற்ற் சுதந்திரம் கொண்ட‌புதிய உலகின் வசந்தங்கள்வீசட்டும். 

    • ஏன்யா புலிகேசி, அவ்வளவு பயமா உனக்கு? இது இன்டர்நெட்டு காலமய்யா  1960கள் காசிருக்கரவன் சொல்றதுதான் உண்மையிங்கர நெல இப்ப இல்ல, என்ன மாதிரி அன்னாடங்காச்சி கூட நெனச்சத எழுத முடியும், செல்போனு பேச முடியும் அதனாலதான் நேபாள மக்கள் எழுச்சியில தோழர்கள் ‘உப்பி பெருத்த யோனிகளையும்,சப்பி தடித்த குறிகளையும்’ கோடிக்கணக்குல அறுத்து போட்டாங்கங்னு பங்காளிங்களால கத கட்டி விட முடியல, இன்னும் பழய பஞ்சாங்கத்த தூசி தட்டிக்கிட்டிருக்காங்க! புரியுதா?

  11. ரஷ்யாவுடன் நடந்த பனிப்போர் காலங்களில் அமெரிக்காவில் மெக்கார்த்தி என்ற ஒரு செனடரை (நம்ம நாட்டு எம்பி மாதிரி) பிடித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உருவாகி வரும் கம்யூனிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு துணைப்

    போவோரையும் பிடித்து, அதற்காக தனியாக நியமிக்கபட்டிருந்த நீதி மன்றத்தில் விசாரிக்கபட்டு தண்டிக்கப்படும் பொறுப்பை வழங்கினர்.

    ஆனால் மெக்கார்த்தி கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்கிரேன் பேர்வழி என்று சகட்டு மேனிக்கு எல்லார் மீதும் பழி போட தொடங்கினார். அதிகாரம் தலைக்கு ஏறி இன்னார் என்றில்லாமல் அணைவரையும் குற்றம் சாட்ட தொடங்கினார். உதாரணம் ‘சிவப்பாக டை’ அணிபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் எனும் அளவிற்கு அவர் அழிச்சாட்டியம் தொடர்ந்தது.http://www.thamizhstudio.com/charli_18.htm

  12. சூப்பர் செருப்படி லீனாவுக்கு
    அவன் அவன் நாய் பேய் மாதிரி தெரு தெருவா அலைஞ்சி பேசி இந்த சமூக மாற்றத்துக்கு வேலை செய்யுறான் . இந்த கொழுப்பெடுத்த கும்பல் என்னனா இப்படி கவிதைன்ற பேர்ல கருமாந்திரத்தை எழுதி அவங்களை கேவலப்படுத்தறது !

    அந்த லீனாவை, சில மாசங்களுக்கு முன் “பால் திரிந்தது” ன்னு ஒரு கதை புதிய கலாச்சாரத்துல வந்தது அதை படிக்க சொல்லுங்க !

  13. தங்கை மணிமேகலை,

    முற்போக்கு எண்ணம், போராடும் குணமும், நாம் செய்யும் செயல் ஏழைகளுக்கு உதவுமாறு அமைதல் வேண்டும்.

    முற்போக்கு பேர்வழி என்று, முச்சந்தியில் முழுதாய் களைந்து நிற்க வேண்டாம்.

  14. இதப் பாருங்க முதல்ல….

    சம்பளம் கேட்டால் அடி உதை! ’கொரில்லா’ சோபாசக்தி, லீனா அட்டூழியம்!
    ’நுண் அரசியல், தலித்தியம், விளிம்பு நிலை மக்களின் உரிமைகள், மனித உரிமைகள், பெண்ணியம்’ உள்ளிட்ட ஏராளமான ‘புரட்சிகர’ சரக்குகளின் மொத்த வணிகர்களான ’கொரில்லா’ சோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் தாங்கள் ‘எவ்வளவு ஜனநாயகமானவர்கள்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

    ’செங்கடல்’ எனும் திரைப்படத்தை லீனா தயாரித்து இயக்குகிறார். ’கொரில்லா’ சோபாசக்தி வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதியில் நடந்தது. படத்தின் ஊழியர்கள் பலருக்கு லீனாவின் தயாரிப்பு நிறுவனம் சம்பளம் தரவில்லை. பல கடை நிலை ஊழியர்களுக்கு படிப் பணம் (பேட்டா) கூட தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சில தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் படப்பதிவு சுருளை எடுத்துச் சென்றனர். இச் சம்பவத்திற்குக் காரணம் உதவி ஒளிப்பதிவாளர் தீபக்தான் எனக் கருதி, ’கொரில்லா’ சோபாசக்தி தீபக் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார். ‘மனித உரிமைக் காவலர்’ லீனா தன் சகாக்களுடன் நின்றுகொண்டு தீபக் அடிபடுவதை ரசித்திருக்கிறார்………. http://www.namthesam.com

  15. லீனா மணிமேகலை குறித்த உங்கள் முதல்க் கட்டுரையும் படித்தேன் இந்தக் கவிதையும் படித்தேன். உங்கள் பதிவு சிறப்பானது.

    வெறும் அடயாளத்தேடல்களுக்காக பெண்ணியத்தை பாவிப்பவர்களாகவே இவர்களை நான் இனம் காண்கின்றேன். பார்வையாளர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் உறுப்புகளின் பெயர்களையும் சொல்லாடல்களையும் பயன்படுத்துகின்றனர். இவைகள் கண்டிப்பாக கண்டனத்துக்குரியவை.

    பெண்ணியம் என்னும் வலைப்பதிவில் இவற்றுக்கான மறுப்பு என்னும் பெயரில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

    பெண்ணியம் வலைப்பதிவு ஜனநாயகத்தன்மை அற்றது. கருத்துச் சுதந்திரம் அற்றது. இலங்கையில் நடந்த போரை ஆண்களின் போராக அடயாளப்படுத்தும் தில்லை என்பவரின் கட்டுரைகுறித்து எனது விமர்சனத்தை எழுதியிருந்தேன். சுருக்கமாக இனவாதப்போரை எவ்வாறு ஆண்களின் போராக கருத முடியும் சந்திரிக்கா சிறிமாவோ போன்ற பெண்கள் இந்தப்போரில் பங்குவகிக்கின்றார்களே என்பதே எனது கருத்து. உடனே எனது கருத்து நீக்கப்பட்டது.

    தில்லை என்பவரும் லீனா பேன்றே யோனி குறி போன்ற செற்களை அதிகளவு கையாழ்வதும் அனைத்துப்பிரச்சனைகளையும் யோனி குறிக்குள் அடக்கி விட முற்படுவதும் அபத்தமானது.

    தனிப்பட்ட தேவைகள் அடயாளத்தேடல்கள் போன்றவைகளுக்காக இவ்வாறு கீழ்தரமாக நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது.

    அடிப்படையில் பசியால் மாண்டுபோகும் மக்களின் பிரச்சனைளை யோனி குறிப்பிரச்சனையாக இனம்காண்பது எந்தவகையில் சரியானது? ஒரு மனிதன் உணவுண்டு உடலில் தென்பிருக்கும் போதே உடலுறவை செய்யமுடியும். உணவுத்தேவையின் சமன்பாட்டிற்கான பிரச்சனையும் அதை பெறமுற்படும் புரட்ச்சிகளின் அடிப்படையும் கூட யோனியின் தேடல் சம்மந்தப்பட்டதாக எழுதுவது அருவருக்கத்தக்கது. இவை வறுமைப்பட்ட மக்களை சாகடிக்கும் பின்னணியை கொண்டது. இந்தக் குரல்கள் அதிகாரவர்க்கத்தின் என்னுமொரு வடிவமே. இந்த உலக இயக்கத்தை ஆசையின் அடிப்படையில் இனம்காணும் கண்ணதாசன் போன்ற மதவாதிகள் கருத்தை கூட கடந்து வரமுடியாத ஜென்மங்கள் தேவைகள் குறித்து சிந்திக்கும் திறனற்றவர்கள். உண்மையான பெண்ணியவதிகளுக்கு இவ்வாறன சுயநல திரிப்புவாதிகள் எதிரானவர்கள். இனம்கண்டு அப்புறப்படுத்தப்படவேண்டியவர்கள்.

  16. ஆண் குறி பெண் குறி என்று எழுதுவது பெரிய விசயமில்லை. இன்று எல்லாப் போக்கிரிகள் பெண்கள் உட்பட பயன்படுத்துவதுதான். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் இலக்கியத்தில் எழுதுவது என்பது ஒரு காலத்தின் தேவை என்றால் மட்டுமே பிரயோகம் செய்ய வேண்டும். கண்டபடி பெண் குறி அல்லது ஆண் குறியை காட்டக் கூடாது. அப்படி காட்டினால் அது ஆபாசம். கேவலம். வேசித்தனம். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சாரு நிவேதிதா இந்த விசயத்தில் சரியானவர். அவர் எங்கு எப்படி எழுத வேண்டுமோ அங்கு அப்படி எழுதுவார். கண்ட இடத்தில் அவிழ்த்துக் கொண்டு நிற்க மாட்டார். கொஞ்சம் எல்லோரும் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். லீனா மணிமேகலை கொஞ்சம் உலகம் தெரியாமல் நடந்து கொள்கிறார். அல்லது மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்குக் கூட இப்படி எழுதிப் பார்க்கலாம்.

    தனுஷ்

  17. முதல் இரண்டு கவிதைகளுக்கு வினவின் விமர்சனத்தில் சில குறைகள் இருந்தன. அது குறித்து நந்து போன்று சிலர் மணிகேகலை தரப்பு முழுவதுமாக சாயாமல் நடுநிலையாக பேசினர். ஆனால் அவர்களின் முகத்திலும் சாணியை கரைத்து ஊற்றினார் போல் செய்துவிட்டது. காக்டெயில் தேவதையின் எதிர் வினை.

  18. இந்த மாதிரி வக்கிரமெல்லாம் வினாவில் வர வேணுமா?
    முதலாவது வந்த போதே நினைச்சேன்.
    இது சாக்கடை விஷயம். அங்கே நெளிகிற புழுக்கள் அங்கேயே நெளியட்டும்.

  19. தமிழ்மணம் 2009 விருது” போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    இந்த கவிதையை, இந்த வருட போட்டிக்கு, (கவிதைகள் பிரிவு) அனுப்பவும். ’ஏகமனதாக’ தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு பெறும் என்பது உறுதி. Advance வாழ்த்துக்கள்..

  20. லீனா போன்றவர்களை
    வினவும், சமூகப் பொறுப்புள்ள சிந்தனையாளர்களும் தவிர்த்து விடலாம் என்பது என் கருத்து.

  21. leena manimegalai a great feminism lady is fraud, psycho, and narrow minded. now she shooting senkadal film based on anti tamil eelam, anti ltte, and this is a propaganda movie of srilanka, tamilnadu and indian governments. we know shoba sakthi as anti ltte activities, and he is the script and dialog writer. so understand the truth. join together to stop the anti tamil eelam movie and protest our tamil eelam freedom fighters.

  22. recently I have seen a comment on my reflection and reply poem of leena from a anony. He might not read the poem throughly. I have not mentioned about his husband or personalised in it. It is fully and wholly boomarang expressions of her writings.I n another one place she indicated about vinavupporukki like that… to whome she write like that; I don’know.But how much time it will take to say her as a ezhuththuchchirukki.But these are all not a moral for writers. so; here I am telling to my anony friend through this vinavupaalam dear friend I know tamilvanan family from my child hood.Her father also wrote some letters to me which I kept until this time.Public figures have to take this kind of criticisms.Her way of writing should be changed.I thing she might be wounded by the male class with unbearable loss , due to the outburster of writings she may be with aversion of
    communism.But she can’t overthrew it single handedly or sole mindly;No single human being is having the authority to set it aside of the whole world history by some nasty words.

    thank u vinavu. vanakkam.

Leave a Reply to சதீஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க