தீர்க்கப்படவேண்டிய வழக்கு!
விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை
கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்
கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!
தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது
தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத
வரலாற்று சுவடு அது
தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை...
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின் பாதங்களில்
அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்!
நரமாமிசம் சுவைக்கும்
பற்களுக்கிடையில்
என்ன தேடுகிறீர்கள்
கருணையா..?
பாசிஸ்டுகளே
முகமூடிகளை கழற்றியபின்
அவர்களுக்கு ஜனநாயக சாம்பல்
பூசாதீர்கள்!
பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல..
நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்!
அதானி பற்றி...
காசாவில் இருந்து!
எங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…
குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல...
சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்...
உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும் கூடத்தான்...
பாலுக்கு ஏங்கும்
பிள்ளை கண்டு,
வடித்த கண்ணீர்
வற்றியது கடந்த காலம்;
இது,
பாலூட்டும் அன்னைகளின்
மார்புகளே வற்றும் காலம்!
இனி கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது
எங்கள் ரத்தமே!
ஆனாலும்,
வற்றாது எஞ்சியிருக்கிறது,
விடுதலை வேட்கை!
ரத்தம் வடியினும்
மண்ணில்...
நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை
ஓடவும் வைக்கும்.
நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான்...
நீங்கள் "சிகரம் தொட்டதாக" கொண்டாடுகிற "டாடாவின் சிகரம்" உழைப்பால் எட்டியது இல்லை... இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின் பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது...
வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்
விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன
கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?
வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன
பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு
உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?
நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை
ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்
துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்
மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா -
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்
குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன
மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்
காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா...
காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..
போராட்டம் ஓய்வதில்லை!
பல கனவுகளோடும்
எண்ணங்களோடும்
மருத்துவம் படிக்க வந்தேன்...
பிறகுதான் தெரிந்தது
மருத்துவ பணியில்
நீண்ட காலம்
நீடிக்க முடியாதென்று..
மக்களின் மருந்துகளை
மறுவழியில் விற்கலாமா?
எதிர்த்து கேள்வி கேட்டேன்!
மிரட்டல் வந்தது
உன்னைக் கொன்றுவிடுவோம்
பயப்படவில்லை
துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்...
கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக
இரவில் வேலைக்கு
வரச் சொல்வது..
இயந்திரத்தை மிஞ்சிய
வேலை வாங்குவது என
பழிவாங்கப்பட்டேன்
அதிகார வர்க்கத்தால்..
அந்த நாளும் வந்தது
கண்கள் விழித்து
வேலை பார்த்து
பார்வை மங்கியது,
எழுந்திருக்க முடியாத
அளவிற்கு உடல்வலி
வயிறு வலியும் கூடவே...
அரைத் தூக்கத்தில்
அறைக்குச் சென்று
தூங்கினேன்
சிறிது நேரத்தில்
வெறிபிடித்த...
போராட்டம் வெல்லட்டும்!
மருத்துவ மாணவி
பாலியல் வன்கொடுமை
செய்து கொலை..
இது செய்தி அல்ல..
நாட்டையே உலுக்கிய
அதிகார வர்க்கத்தின்
கொடூர அநீதி..
எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த
மருத்துவமனை
இன்று அஞ்சி
நடுங்கக் கூடிய
நரகத்தினைப் போன்றுள்ளது...
போராட்டம் என்னும்
அணையா நெருப்பு
மருத்துவ மாணவிகள் மனதில்
கொழுந்து விட்டெரிகிறது..
காட்டுத்தீயாய் பரவும்
மாணவர் போராட்டத்தால்
அஞ்சி நடுங்கும்
அதிகார வர்க்கம்..
கொடிய மிருகங்களை
கூண்டில் அடைக்கும் வரை
ஓயாது போராட்டம்..
நீதி கிடைக்கும் வரை
நிற்கப் போவதில்லை
போராட்டம்
நாடு எங்கும்
மருத்துவர்கள்
வேலை நிறுத்தம்..
அதிகார வர்க்கமே,
எங்களின் போராட்டம்
சிறு துளி அல்ல..
கைகளை, தடிகளை
வைத்து தடுப்பதற்கு...
பொங்கிப்...
மதத்தின் பேரால் கலவரங்களில்
மரித்து போனவர்களின்
சாம்பல்கள் சொல்லும்.,
காற்றில் கரைந்த
இந்திய சுதந்திரத்தை...!
பாலியல் சீண்டல்களால்
பாதிப்புக்கு உள்ளான
மல்யுத்த வீரர்களின்
கனவுகள் சொல்லும்.,
ஒலிம்பிக்கில் பறிபோன
இந்திய சுதந்திரத்தை...!
தகுதித் தேர்வுகளால்
கனவுகள் பறிபோன
மாணவர்களின் கடைசி மூச்சு
சொல்லும்.,
கல்வி கார்ப்பரேட்மயமான
இந்திய சுதந்திரத்தை...!
420 எல்லாம் இணைந்து
370-யை நீக்கிய போது
காஷ்மீரிகளின் உரிமைகள்
சொல்லும்.,
அம்பானிகளிடம் தாரைவார்க்கப்பட்ட
இந்திய சுதந்திரத்தை...!
பட்ஜெட்டில் அதிக நிதி
ஒதுக்கப்பெற்ற இராணுவத்தின்
துப்பாக்கி முனை சொல்லும்.,
காடுகளிலிருந்து விரட்டப்படும்
பழங்குடிகளின்
இந்திய சுதந்திரத்தை...!
மருத்துவமனையில் உறங்கும் வேளையில்
பலாத்காரம் செய்து
சிதைக்கப்பட்ட
மருத்துவரின் உடல் சொல்லும்.,
ஆணாதிக்க வெறியின்
இந்திய...
பரந்தூர் பறக்கிறது!
விமான நிலையம்
வருவதற்கு முன்பே
பரந்தூர் பறக்கிறது..
ஆந்திராவை நோக்கி!
தடுப்பதற்கு தமிழ்நாடு
முன் வரவில்லை!
இரண்டு வருட
போராட்டத்திற்கு பிறகு
இரக்கமில்லாமல் அகதியைப்
போல அகற்றப்படுகிறார்கள்!
இல்லையில்லை..
திராவிட மாடல் அரசால்
அழிக்கப்படுகிறார்கள்!
ஊடகங்கள் ஊடுருவி
கேள்வி கேட்பதற்கு பதில்
தாலாட்டு பாடுகிறது திராவிட மாடலுக்கு!
பன்னாட்டு விமான நிலையத்திற்கு
அடிக்கல் நாட்டும்
திராவிட மாடலுக்கு தெரியவில்லையா
அவர்கள் அனாதையாக்குவது
தன் நாட்டு மக்களை என்று!
விளைநிலங்கள்
விமானங்களின்
ஓடுபாதையாக
மாறுகின்றன..
திராவிட மாடல்
சேவை செய்கிறது..
கார்ப்பரேட் மாடலுக்கு!
அடிக்கொள்ளி விவசாயிக்கு..
வளர்ச்சி கார்ப்பரேட்டுக்கு..
வர்க்கப் போராட்டத்தில் மட்டுமே தீர்வு இருக்கு!
ரசியா
சமூக வலைத்தளங்களில்...
வன்முறை
இதுவும் வன்முறை தான்
வன்முறையாக ஒரு போதும் பார்க்கப்படுவதில்லை
அது உன் விருப்பம் என்று திணிக்கப்படுகிறது
சேரியில் வீடிருந்தால்
பிள்ளைக்கு கல்யாணம் ஆவதில்லை
கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வீட்டை மாற்ற வேண்டும்
கல்யாணம் கூட எளிதில் முடிந்து விடும்
ஆனால் வீடு கிடைப்பது?
அதுவும் சேரியில் இருந்து வந்தவர்களுக்கு
குதிரைக்கொம்பு
சென்னையில் எந்த பகுதியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது மாடியில் இருந்து கேட்பார்கள்
சேரியாக இருந்தால் வீடு இல்லை...
அம்பேத்கர் சிலையிலிருந்து
ஆந்திரா நோக்கி
ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்..
இது ஆறாத் துயரம்!
அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து
கண்ணீர் விட்ட தமிழினமே..
கண்ணீர் விட இன்னொரு ‘கதை’..
அதன் பெயர் பரந்தூர்!
கோரிக்கையை ஏற்காத
செவிகொடுத்து கேட்காத
தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில் பெருமை கொள்கிறோம்..
பதிமூன்று கிராம மக்களின் சொற்கள்
நெஞ்சில் தைக்கிறது பல்லாயிரம் அம்புகளாய்!
சொந்த நாட்டு மக்கள்
ஆந்திராவிற்கு அகதிகளாய்
தஞ்சம் கோர..
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே..
இது...
சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்
சங்கிகளே,
மெய்தி மக்களாகிய எங்களை
பழங்குடி அந்தஸ்தை காட்டி
இனவெறியை தூண்டிவிட்டு
குக்கி மக்களை
இரத்த வெள்ளத்தில்
மிதக்க வைத்தீர்களே!
கனிம வளங்களை களவாட
அம்பானி அதானிகளுக்கு படையல் போட
அமைதியாய் வாழ்ந்த
எங்களின் வாழ்க்கையில்
தீ வைத்தீர்களே!
நாங்களோ,
மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே
குக்கிப் பெண்களை
கூட்டுப் பலாத்காரம் செய்தோமே
அம்மணமாக்கி
வீதிகளில் இழுத்துச் சென்றோமே
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
அடித்துக் கொன்றோமே
வீடுகள், ஆலயங்களை
தீக்கிரையாக்கினோமே..
எத்தனை உயிர்கள்
பலியானது இக்கலவரத்தில்!
ஏராளமான இடங்கள்
சூறையானது இம்மாபாதகத்தில்!
மொத்த மணிப்பூரும்
பற்றி எரிந்ததே!
நீங்களோ,
கலவரத் தீயை மூட்டிவிட்டு
கள்ளமௌனம்...