உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !
உலகம் முழுவதும் எழுச்சிகரமாக மே தின பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன!
காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!
பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.
கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவரான பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!
போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு!
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!
அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் எங்களை பணி அமர்த்தாமல் புறக்கணிப்பதால் உயர்படிப்பு படித்த பல பார்வையற்ற பட்டதாரிகள் பேருந்துகள் மற்றும் இரயில்களில் கடலை மிடாய், பர்பி, மிட்டாய் விற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!
கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!
நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி...
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை
சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.
மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !
போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA நிறுவனம் – தொழிலாளிகள் மீதான கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!
KATERRA நிறுவனத்தின் சகிக்கமுடியாத இவ்வளவு கொடுமைகளையும் மொத்த அதிகார வர்க்கமும் வேடிக்கை பார்த்து வருவதை விட பெரிய குற்றம் வேறு என்னவாக இருக்க முடியும்?
கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!
அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.
திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!
கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர்.