விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

செய்தியாளர்களிடம் பேசிய VUPPC தலைவர் டி ஆதிநாராயணா, “நாங்கள் கிட்டத்தட்ட 650 நாட்கள் போராட்டத்தை நிறைவு செய்துள்ளோம். ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். உற்பத்தி 50% குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.” என்றார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி வட்டாரங்களின்படி, நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க அரசு முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் போராட்டங்களில் இருந்து விலகி இருக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சிபிஐ(எம்) உறுப்பினர்களும், விஎஸ்பி தனியார்மயமாக்கல் மற்றும் மாநிலம், குறிப்பாக வட ஆந்திரா தொடர்பான நிலுவையில் உள்ள பிற பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசவில்லை என்று விமர்சித்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணா கல்லூரி சாலை அருகே சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மட்டிலப்பாலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

VUPPC உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் VSP மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இரும்பு ஆலை அருகே தர்ணாவில் ஈடுபட்டனர் மற்றும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆலைக்குள் வாகனங்கள் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தினர்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க