G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!
ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!
முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்
இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்த நாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.
கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்
ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!
ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்த திமுக அரசு, தற்போது பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.
அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!
பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.
இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!
பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது.
நியோமேக்ஸ் மோசடி! இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாறுவீர்கள் நடுத்தர வர்க்கமே?
நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான் குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.
“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!
”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்
காஷ்மீர் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.
முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.
விருது வேண்டுமா! ‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!
நிலவுகின்ற அரசியல் சமூக காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்
உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.