2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் தேவை மக்கள் போராட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி "வேண்டும் ஜனநாயகம்" என்ற முழக்கத்துடன் மக்களின் கோரிக்கைகளை பாசிச எதிர்ப்பு மாற்றுத் திட்டத்துடன் இணைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது தமிழ்நாட்டின் பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாக உள்ளது.
ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
எத்தனை தலைவர்களை அமெரிக்கா வான்வழியாகப் படுகொலை செய்தாலும், சொந்த நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் தாங்கள் விரும்பும் ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிலைநிறுத்த முடியாது.
நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!
‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.
கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!
வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.
திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!
‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.
கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள்
கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.
பணமதிப்பு நீக்கம்: நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் ! | மீள்பதிவு
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
கரூர் படுகொலை: கவர்ச்சி அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் வாங்கிய பலி!
நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும். அந்தவகையில், விஜய் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் காசா நகரத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிகளை நோக்கி அம்மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்
ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்
முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு: தி.மு.க. அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை
இது சென்னை நகர உழைக்கும் மக்கள் மட்டும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையல்ல. லட்சக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பேரபாயம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கிறது.
பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்
தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன.
நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!
குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!
மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.























