ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!
முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.
கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!
கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.
350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
தங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் போர்க்குணம் நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கோ இப்போராட்டம் தென்படவேயில்லை.
தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!
திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.
வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!
நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை.
தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!
எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.
கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!
வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.
ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!
அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை!
அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!
இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம்.
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச்...