இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்
உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.
உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!
உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய
தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!
https://youtu.be/ErGghIZk__w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்
முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.
ஹரியானா: சாக்கடைக் குழாயில் விசவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி!
ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: லாபவெறியும் அரசின் மெத்தனமும்
தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, முதலாளிகளின் லாபவெறிக்கு சாதகமாக நடந்துகொண்டு தொழிலாளர்களைக் காவு வாங்கத் துணைபோகின்றனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் அரசியல் கட்சிகள் யாவும் இத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறப்பதில்லை.
விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!
அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள். இதில் அரசின் பங்குதான் முதன்மையானது.
2026 மே நாள் துண்டறிக்கை
1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
2026 மே நாளுக்கான அறைகூவல்
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும்.
சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!
கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.
உ.பி தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!
குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வளர்ச்சியின் முழக்கங்களுக்கு இடையே புதைந்து போகும் மலக்குழி மரணங்களின் அவலக்குரல்
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.
‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.
கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!
























