11.06.2026
கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?
பாசிச மோடி அரசே பதில் சொல்!
பத்திரிகைச் செய்தி
நெல்லை மாவட்டத்தில் 30 இடங்களில் ஒன்றிய அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வறட்சி, வெள்ளம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் விவசாயம் செய்வதே அபாயகரமான தொழிலாக உள்ளது. அமெரிக்க அடிமையான மோடி கும்பல் அமெரிக்க கார்ப்பரேட் பண்ணை முதலாளிகளின் நலனுக்காக அமெரிக்க விளை பொருட்களுக்கு வரியைத் குறைத்து, இந்திய சந்தையில் இறக்குமதி செய்து விவசாயிகளின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிக் போட்டது மட்டுமல்லாமல், கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய காலத்தில் பணத்தை ஒப்படைக்காமல் விவசாயிகளின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது.
மோடி அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணத்தை வழங்கக் கோரியும், த.வெ.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் வலியுறுத்தி, வருகிற 15-ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் தனது ஆதரவினை தெரிவித்துக் கொள்வதோடு, போராடும் விவசாயிகளோடு உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





