பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.
“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.
உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது
சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?
தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!
பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!
அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.
குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!
இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.
தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!
பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.
2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!
1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!
ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்
முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!
வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.